குழைந்து, நெளிந்து,
கண்கள் சுருங்கி,
அரிசிப் பற்கள் தெரிய,
தந்தையின் "என்னடா சாமி" என்ற கன்னத்து முத்தத்தில், குலுங்கி சிரித்து,
நாணம் படர்ந்த முகத்துடன் 'ங்கா' என்றவாறே தந்தையவனின் கழுத்துக்கிடையில்
முகம் புகைக்கும் மதலையின் நாணம் கூட
பேரழகு தானே!
❤️