• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rizka muneer "Rizii"

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 12, 2022
Messages
16
அவன் நாய் இருக்கும் இடம் தெரியாதளவு அவன் விழிகளை விட்டு தொலைதூரம் சென்று மறைய "ஓ சிட்" என்று தலையில் ஒற்றை கரத்தை வைத்தவன் பின் தன்நாய் தொலைந்து போக காரணமான கல் வந்து விழுந்த திசையை நோக்கி பார்வையை செலுத்தினான் ...

அங்கு தன் கைபையை பிடித்தவாறு நின்றிருந்த தேஜூவை கண்டு இவள்தான் இதற்கு மூலக்காரணி என்று புரிந்துகொண்டவன் பல்லை கடித்தவாறு வேகநடையுடன் அவளருகே சென்றான்..

"ஏய் குள்ளகத்திரிக்கா எதுக்குடி கல்லு விட்டெறிஞ்ச.." என்று அவனெகிற,

அவனின் குள்ளகத்திரிக்கா என்ற அழைப்பில் தேஜூவின் மூக்கு நுனி சிவக்க அவனுயரத்திற்கு எக்கியவாறு ஒற்றை விரல் நீட்டி "என்ன குள்ளகத்திரிக்கான்னு சொன்னன்னு வையேன் நெஸ்ட் இந்த முற எறிஞ்ச கல்ல விட ரொம்ப பெரிசான கல்லா பார்த்து உன் மண்டையிலேயே தூக்கி போடுவேன் பார்த்துக்க.." என்று மிரட்ட அவனோ அவளை ஏதோ சிறுகுழந்தை கண்ணை உருட்டி மிரட்டிவதை போல் பார்த்து வைத்தான்..

அவள் தன்புறம் நீட்டியிருந்த ஆள்காட்டி விரலை தன் ஆள்காட்டி விரலையிட்டு வலைக்க அதனால் லேசாக ஏற்பட்ட வலியால் தேஜூ "ஸ்ஆ.. டேய் என் விரல விடுடா.. வலிக்குது விடுவா மலக்குரங்கு.. " என்ற சிணுங்கலுடன் கத்தினாள்.

அவளளைபில் இன்னும் அவளிற்கு வலியை கூட்டிக் கொடுத்தவாரே "ஒழுங்கா மரியாதையா கூப்பிடு.." என்று புருவத்தை ஏற்றி இறக்கி அதட்டலாய் கூற வலி தாங்க முடியாது "ஆ ஓகே ஓகே.. என் விரல விடுங்கஅஅஅ.." என்று இழுவையாய் தன் விரலை பார்த்தவாரே கூற அது என்பது போல் பார்வை வீசி அவள் விரலை விடுவித்தான் அவன் மித்ரன் ..

தன் விரலை தன்புறம் இழுத்து உதறியவாரே "பாரு உன்னால என் விரல் எப்படி ரெட் கலர் ஆவி இருக்குன்னு.. " விரலை சுட்டிக்காட்டியவாறு அவனை முறைக்க அவள் முறைப்பை இவள் திருந்தமாட்டாள் என்பது போல் ஓர் பொருட்டாய் கருத்தில் கொள்ளாதவன் "எனக்கு என்ன பதில் சொல்ல போற? " என்று கறாராக வினவ,

ங என தேஜூ முழித்தவாரே "என்ன பதிலா? சொல்லுரத புரியுர மாதிரி சொல்லுப்பா" என்று கூறி அவனை கேள்வியாய் பார்க்க,

"உன்னால தான் என்னோட ஜிம்மி இப்போ தொலஞ்சி போச்சு.. சோ எனக்கு இப்போ என்னோட ஜிம்மி வேணும்" என்று அழுத்தமாய் கூறினான் மித்ரன்.

என்னது மம்மியா? அது யாருப்பா? அது தொலஞ்சு போனதுக்கு நான் என்ன பண்றது? என்று தேஜூ கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டே போக அதை நிறுத்தும் வகையில் அவளிற்கு புரியும் படி மித்ரனே விளக்கமாக கூறினான்..

"இங்க பாரு என்னோட டாக் நேம்தான் ஜிம்மி.. நீ கல்லு எறிஞ்சதால தான் அது பயந்து எங்கயோ ஓடிரிச்சு.. இப்போ நீதான் எனக்கு என் டாக்க கண்டு புடிச்சித்தரனும்... " அழுத்தத் திருத்தமாய் அவனுரைக்க தேஜூ முழித்தாள்..

அவளுக்கு எப்படி அது அவன் நாயென்று தெரியும்.. தெரு நாய்யாக இருக்கும் அதைதான் இவன் வருடுகிறான் கல்லெறிந்து அதை சீண்டிவிட்டால் அது அவனை கடிக்கும்.. அப்படியே அவன் அன்று பேசிய பேச்சிற்கு பழி வாங்கியதாகவுமிருக்கும் என்றல்லவா அவள் திட்டம் போட்டது,, ஆனால் அதுவோ அவள் கல்லெறிந்ததில் துண்டை காணோம் துணியை காணோம் என்றல்லவா தெறிக்க ஓடிவிட்டது..

"இங்க பாரு.. நான் ஒன்னும் வேணும்னு எல்லாம் உன் டாக் மேல கல்லு விட்டெறியல.. அது தவறுதலா நடந்து போச்சு, சோ நான் உன்கிட்ட எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியமில்ல.. நான் கிளம்புறேன்" என்று தன் கெத்தை விட்டுக் கொடுக்காது கூறியவள் மெல்ல நழுவப்பார்க்க அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவன் அவள் நகர் முன் இடைமறித்து நின்றான்..

"எப்படி எப்படி தவறுதலாவா?.. அது எப்படி தவறுதலா? " என்று ஒற்றை விரலை தாடையில் வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவன் "ஆ.. ஒரு வேல கல்லு தானாவே பறந்து வந்து என்னோட ஜிம்மி மேல விழுந்திருச்சோ.. " என்று நக்கல் தோனியில் புருவத்தை வளைத்து கூற,

தேஜூ உதட்டை சுளித்து மிடுக்காய் "ஆமா நான்தான் எறிஞ்சேன் இப்போ என்ன.. ஹான் என்ன பண்ணுவ தள்ளி போடா மலக்குரங்கு.. " என்று விட்டு அங்கிருந்து நகரப்பார்த்தவளின் நெற்றியில் ஒற்றை விரல் வைத்து தடுத்தவன்,

"உன்னால தானே என்னோட ஜிம்மி தொலைஞ்சு போச்சு அதனால நீதான் என்னோட ஜிம்மிய எனக்கு தேடி கொடுக்கனும்.. " என்க

"அது.. அதெல்லாம் என்னால முடியாது எனக்கு வேற வேல இருக்கு.. " தடுமாற்றத்துடன் மறுப்பு தெரிவிக்க மித்ரனோ ஒற்றை புருவமுயர்த்தி " அப்போ ஓகே நீ உன்னோட முக்கியமான வேலைய பாரு நான் போலீஸ்கிட்ட போய் அவங்கள கூட்டிகிட்டு உங்க வீட்டுக்கு வரேன்" என்று கூறி கையை குலுக்கி மறுபடியும் திரும்பி செல்ல முயற்சிக்க,,

தேஜூ அவன் கூற்றில் அதிர்ந்தாள்..
அவள் வெளியே நடக்கும் விடயங்களை வீடு வரை கொண்டு சென்று தன் தந்தை பெயரிற்கு கலங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை.. அது மட்டுமின்றி தன்னிடம் வம்பு செய்ததால் இவனிற்கு எதுவும் நடந்து விடுமோ என்று அஞ்சினாள்.. மொத்தத்தில் அவள் வெளியே நடக்கும் விடயங்களை வீடு வரை கொண்டு செல்ல விரும்பவில்லை..

தலையை உளுக்கிக்கொண்டு சட்டென அவன் நகராத படி முன்னே நின்று "என்ன நீ .. டாக்குக்காக எல்லாம் யாராச்சும் போலீஸ்கிட்ட போவாங்களா.. " என்று அவனை திசை திருப்ப முயற்சிக்க,

மித்ரனோ அவள் தடுத்ததில் இதழோரம் தவழ்ந்த புன்னகை அரும்பை மறைத்து " ஒனக்கு என்ன தெரியும் என் ஜிம்மிய பத்தி... அது எனக்கு எவ்ளோ இம்போர்ட்டண்ட் தெரியுமா.. என் அம்மா எனக்கா விட்டுட்டு போன ஒரே சொந்தம் அது தான்.. அவங்களோட மெமரீஸ் தான் ஜிம்மி.. அது கூட இருக்கும் போது என் அம்மா என் கூட இருக்குற போல பீல் ஆவும்.. இதெல்லாம் எதுக்கு நான் உன்கிட்ட சொல்லிகிட்டிருக்கேன் உன்னாலதான் நான் என் ஜிம்மிய தொலச்சிட்டேன் " என்று தன்னையை கடித்துக் கொண்டு முகத்தை அவளுக்கு காட்டா திருப்பிக் கொள்ள தேஜூவிற்கு தான் மனதிற்கு கஷ்டமாய் போனது,

"உன் டாக்.." என்று சொல்ல வர,

மித்ரன் இடை மறித்து "ஜிம்மி" என்றான் திருத்தி அழுத்தமாய்,,

"ஆ.. உன் ஜிம்மி அது எங்கயும் தொலஞ்சி போயிருக்காது உன் வீட்டுக்குதான் போய் சேர்ந்து இருக்கும் முதல்ல அங்க போய் செக் பண்ணி பாரு.. " என்க,

"ஒரு வேல அது என் வீட்டுக்கு போயிருக்க இல்லன்னா..? " என்று வினவி ஒற்றை புறமுயர்த்த,,

"இல்லன்னா.. நான் சேர்ஷ் பண்ண ஹெல்ப் பண்றேன்" என்று விட்டு செல்ல முயற்சிக்க சட்டென அவள் கையில் மாட்டியிருந்த பையை பிடிங்கிக் கொண்டான் மித்ரன்.

"ஏய் எதுக்கு என்னோட பேக்க பிடுங்கின.. கொடு என்கிட்ட.. " தேஜூ சீறியவாறு தன் பையை எடுக்க முயற்சிக்க அவளை தன் ஒற்றை விரலாலே நிறுத்தி விட்டான் மித்ரன்..

தன் நெற்றியில் பதிந்து தன்னை தடுத்துக் கொண்டிருந்த மித்ரனின் ஆள்காட்டி விரலைப் பார்த்து புசுபுசுவென தேஜூ மூச்சி விட அவள் கவனத்தை கலைக்கும் வகையில் அவளை நோக்கி வீசினான் அவள் பையை..

வளைந்து நெளிந்து கேஷ் புடித்தவள் அவனை எரிச்சலுடன் பார்த்தவள் அப்பொழுது தான் அவன் கையிலிருந்த தன் மொபைலை பார்த்தாள்..

மித்ரன் அவள் பையை எடுத்ததே அவள் மொபைலை எடுக்கத்தான்.. தேஜூ வாயை பிளந்தவாறு "என்னோட போன்" என்று மொபைலை அவன் கையிலிருந்து பிடுங்க அதே நேரத்தில் அவள் மொபைலிலிருந்து அவன் மொபைலிற்கு அழைப்பு சென்றிருக்க அவன் மொபைல் அலறியது..

மித்ரன் தன் பேன்ட் பாக்கட்டிலிருந்த அவன் மொபைலை எடுத்து தேஜூவை பார்த்து இதழை வளைத்துக் காட்டி விட்டு அவள் அழைப்பை துண்டித்து அவளின் மொபைல் எண்ணை பதிவு செய்து கொண்டான்..

தேஜூ அவனை முடியுமான வரை முறைக்க அவளருகே வந்தவன் "இது எதுக்குன்னா.. நீ ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு அட்ரஸ் தெரியாம மறஞ்சி போய்டன்னா என்னோட ஜிம்மிக்கு யாரு பொறுப்பு கூறுவா.. சோ அதான் சேப்(f)டிக்கு உன்னோட நம்பர்ர எடுத்துகிட்டேன்.. என்னோட ஜிம்மி மட்டும் கிடைக்கல மவளே நீதான் என்னோட ஜிம்மிய தேடி என்கிட்ட ஒப்படைக்கனும்" என்று கூறி எச்சரித்து விட்டு தன் சிகையை கோதியவாறு அங்கிருந்து அவன் செல்ல செல்லும் அவனின் முதுகை வெறித்தவாரே இயலாமையுடன் "ஓ மை முருகா.. "என்று மேலே பார்த்து சிணுங்கினாள் தேஜூ..



குளித்து முடிந்து படிக்கட்டு உடல் வெளியே தெரிய சட்டையை மேலோட்டமாய் அணிந்தவாறு சட்டை பட்டனை பூட்டாது மதியை அழைக்க பால்கனி அருகே வந்தவன் விழிகள் லேசாய் விரிந்தது.. கணக்கில் கொள்ளாது நெற்றியை தேய்த்தவன் அடுத்தநொடி
வேக எட்டுக்களுடன் அறையை விட்டு வெளியேறியிருந்தான்..

நேராக தோட்டத்தை நோக்கிச்சென்றவன் கையை கட்டி அழுத்தப்பார்வையுடன் நின்றான்...

"என்ன பண்ணிட்டிருக்க.. மரத்துல ஏறி குரங்கு வித்த காட்டுறியா.. " என்ற கம்பிரமான குரல் பின்னாலிருந்து ஒலிக்க அப்பொழுதுதான் தோட்டத்தில் கிளைகள் விட்டு நடுத்தர உயரத்தில் வளர்ந்து காணப்பட்டிருந்த மரத்தில் கடினப்பட்டு கிளைகளை பிடித்து ஏறிய மதி வீரின் குரலில்.. காலையில் உறக்கம் களைந்து எழுந்தவள் அவனணைப்புக்குள் தான் இருப்பதை பார்த்து தன்னையே காரணக்கருத்தாவாய் எண்ணி நொந்துக் கொண்டவள் அவன் உறக்கம் கலையாது பூனை போல் விலகி வந்தது நினைவை தட்ட.. ஒற்றைகரம் கொண்டு பிடிமானமாய் பிடித்திருந்த கிளையை தவற விட பிடிமானமின்றி தடுமாற்றத்துடன் கீழே விழுந்தாள்..



துடிக்கும்..
 
Top