• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளம் 8

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
15
14
3
Coimbatore
அத்தியாயம் 8.,

இருவருக்கும் மனதில் எதோ ஒன்று உழன்று கொண்டு இருக்க, கடனே என திரையை வெறித்தனர்.

ஆதவனும் அவர்களை தொல்லை செய்யாமல் அமைதியாக படம் பார்த்தான்.

படம் முடிந்து அரங்கம் முழுவதும் வெளிச்சம் பரவ, அந்த வெளிச்சத்தில் உணர்வு பெற்று இருவரும் கைகளை பிரித்துக் கொண்டு எழுந்தனர். அந்த பிரிவே நெஞ்சத்தை வெகுவாக தாக்கியது இருவருக்கும்.


"அண்ணா... நீங்க முன்னாடி நில்லுங்க, நான் பார்க்கிங் ல இருந்து கார் எடுத்துட்டு வரேன்" என ஆதவன் அவர்களுக்கான தனிமை கொடுத்து சென்று விட்டான்.

அவன் சென்று சில நொடிகளுக்கு பின், "கவி" என அவன் அழைக்க, மெதுவாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் கவித்ரா.

"நான் உனக்கு வேண்டாம் மா" என்றான் பரிவாக,

அந்த ஒரு வாத்தைக்கே கண்களில் சரசரவென நீர் கோர்த்துக் கொண்டது.

"அழாதே டா... எனக்கு என்னமோ பண்ணுது" என்றவன், "நான் உனக்கு பொருத்தமானவன் இல்லை கவி" என சொல்லும் அவனுக்கும் குரல் தழுதழுத்தது.


"ஏன்" என்றாள் கவி,

"நல்லா யோசிச்சு பாரு. உனக்கும் எனக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்கும்னு" என கசங்கிய முகத்துடன் சொன்னான் ருத்ரன்.

"அது ஒரு விஷயமே..." என அவள் சொல்லும் முன்பே,

"இந்த அரைக்கிழவனைக் கட்டிகிட்டு வெளில கூட போக முடியாது" என்றான் இதற்கு முன்னாலான அனுபவத்தில்.

"போதும்" என்றாள் அவள் தகதகத்த கண்களோடு.


"கவி" என அவன் எதோ சொல்ல வரும் முன், அவன் முன் கையை காட்டி தடுத்தவள்,

"உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை. நான் வேண்டாம் அதான, ஓகே... நான் இதோட உங்க கண் முன்னாடி வரவே மாட்டேன்" என்றவள் அவனை விட்டு தள்ளி நிற்க,

"கவி" என தலையில் கை வைத்து டென்ஷனில் அவளை அழைக்க,

"நீங்களும் என் கூட பேசாம இருக்கிறது நல்லது" என்றவள் திரும்பிக் கொள்ள,

"ஏய் பைத்தியக்காரி" என்றவன் அவளின் கைப் பற்றி இழுக்க, அவள் கோவத்தில் இலகுவாக நின்றதில் அவனின் இழுப்பில் வேகமாக அவன் மீது மோத, இருவருமாக சேர்ந்து தியேட்டர் வாசலில் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பொது இடம் என்பதால் அவசரமாக இருவரும் தங்களை சரி படுத்திக் கொண்டு எழுந்தாலும்,

கீழே விழுந்ததில் ருத்ரன் அணிந்து இருந்த மாஸ்க் கழண்டு விட, அவனைக் கண்ட மக்கள் கூட்டம். அந்த காட்சியையும் கண்டதோடு வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டு இருந்தனர்.


"இயக்குனரோடு இளம் பெண்" , "இயக்குனருக்கும் ரிப்போர்டருக்கும் காதல்" என பல வகை ஹேஷ் டேக்களுடன் இருவரும் விழுந்து எழுந்த வீடியோ பகிரப்பட்டது.


சரியாக அந்த நேரத்தில் ஆதவன் காருடன் வரவும், இருவரும் அவசரமாக அவ்விடம் விட்டு கிளம்பினர்.

செகண்ட் ஷோ என்பதால் மக்கள் கூட்டம் கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும் வீடியோ தயவு தாட்சண்யம் இன்றி புரளியாக வெளி வந்தது.

அழுகை குறையாமல் காரினுள் இருந்தாள் கவி.

"கவி எதுக்கு இப்போ அழற, அது தெரியாம நடந்தது" என ருத்ரன் சொல்ல,

"இங்க பாருங்க" என கண்ணீருடன் கோவமாக அலைப்பேசியை அவனிடம் கட்டினாள் கவித்ரா.

அந்த வீடியோவைப் பார்த்த ருத்ரன், "ஹோ ஷிட்" என தலையில் அடித்துக் கொண்டான் ருத்ரன்.

"எதுவும் இல்லை. ஜஸ்ட் ஸ்லீப் அவ்ளோதான், அதை ஏன் இவ்வளவு எமோஷனல் டைப் ல பாக்கிற" என ஆதவன் கேட்க,


"வாயை மூடு ஆது. ஒரு சினிமா ஸ்டார் கூட காஸிப் வந்தா அந்த பொண்ணோட லைஃப் பொது மக்களால் பேசப்படும். எனக்கு இப்போ என்ன பண்றதுன்னு தெரியல" என பதட்டமானான் ருத்ரன்.

தன்னால் கவி பற்றிய பேச்சு பரவுவதை விரும்பவில்லை அவன்.

"கவி அண்ணா தான் இப்படி ஃபீல் பண்றார். நீ ஏன் டி அழற. அவர் கூட உன்னை சேர்த்து வச்சு பேசுறது அசிங்கம்னு நினைக்கிறயா?" என ஆதவன் கேட்க,.

"ஷாட் அப் ஆது. என் கவலை வேற" என்றவள் கண்ணீர்த் துளிகள் வழிந்து கொண்டே இருக்க, அதைத் துடைத்தப்படியே அவனிடம் பேசினாள்.


"என்ன கவலை" என்றான் ஆதவன். அவனுக்கும் இப்போது டென்ஷன் ஆகியது.

"ஹான் உன் அண்ணனுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேனாம்" என்றாள் எரிச்சல் கலந்த குரலில்.

"வாட்" என சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்த, எதேதோ நினைவில் இருந்த ருத்ரன், டேஸ் போர்டில் மோதிக்கொள்ள,

"அர லூசு ஆது" என அவனைத் திட்டியவள், "என்னாச்சு. வலிக்குதா" என ருத்ரன் தலையை தேய்த்து விட்டாள் கவி.

அவளின் குரலில் கண்களை திறந்த ருத்ரனைப் பார்த்தவள், "ஸாரி" என தள்ளி அமர்ந்தாள்.

பின் சீட்டில் இருந்து கொண்டு அவனுக்கு அடி பட்டவுடன் எட்டி வந்து தலையை தேய்த்திருந்தாள் கவி.

"ஸாரி அண்ணா" என்ற ஆதவன்,

"நான் கொஞ்ச நேரம் காரை ஓரமா நிறுத்துறேன், நீங்க கொஞ்சம் பேசுங்க அவ கூட" என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி விட்டு, காரை பேக்கரி ஒன்றின் அருகில் நிறுத்தி இறங்கினான்.

ருத்ரனும் இறங்கிட, வெளியில் வர ஒரு மாதிரி இருக்கவும் சீட்டில் சாய்ந்து கண் மூடினாள் கவி.

முன் இருக்கையில் இருந்த ருத்ரன், பின் இருக்கையில் அவளுடன் அமர்ந்தான்.

சட்டென கண் விழித்து பார்த்து, அவனை அருகில் கண்டவுடன், அழுகை மேலும் அதிகமானது.

"கவி" என அவன் அழைக்க...

###

பேக்கரிக்கு சென்று டீ ஒன்றை சொல்லி விட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான் ஆதவன்.

"டேய் இங்கே பாரு. செம்ம சீன், பொண்ணு செம்ம ஃபிகர்... குடுத்து வச்சவன் டா அந்த டைரக்டர்" என்ற ஒருவனின் குரலில், மெதுவாக எட்டிப் பார்த்தான் ஆது.

அதே வீடியோ தான், கொஞ்சம் கொஞ்சமா ஜூம் ஏடிட் என டெக்னாலஜியில் அவர்களின் முகம், உடல் என அனைத்தும் உரசுவது போல ஸ்லோமோஷனில் எடிட் செய்யப்பட்டு இருக்க, அதைக் கண்ட ஆது அதிர்ந்து போனான்.

மேலும் மேலும் அதற்கு பாட்டு, டயலாக், வர்ணனை என இருவரின் நெருக்கம் பட்டவர்த்தனமாக அதில் காட்டி இருந்தனர். நிஜம் என்னவோ தெரியாமல் விழுந்தது தான்.. ஆனால் இந்த வீடியோக்களில் வேண்டுமென்றே பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது.


ஆத்திரமாக வந்தது அவனுக்கு. ஒண்ணுமில்லாத சிறிய விஷயத்தை இவ்வளவு பெரியதாக சித்தரித்து இருவரின் பெயருக்கும் கேடு விளைவிக்கும் பொறுப்பை திறமையாக செயலாற்றி இருந்தனர் அவர்கள்.

அதை அனைத்தும் கண்டவன், அண்ணனையும் கவியையும் நினைத்துக் கவலை கொண்டான். தனக்கே இப்படி இருக்கிறது. கவியின் நிலை. நினைத்தாலே வேதனையாகியது.


அவளுக்கு பிடித்தவன் தான் ஆயினும், பொது இடங்களில் தங்களி

ன் நெருக்கம் விமர்சிக்கபடுவதை நிச்சயம் ஏற்க மாட்டாள் என அறிந்தவன் யோசனையுடன் காரை நோக்கிச் சென்றான் ஆதவன்.