- Joined
- Aug 2, 2021
- Messages
- 80
16
“ஹேய் என்ன முதல் அட்டாக்கிலேயே பய பயந்துட்டான்.....” பீசா கார்னரில் ஹரி.எதிரே சந்தியா மௌனமாக இருந்தாள்.
“ஏய் என்ன சைலண்டாயிட்டே....கமான் நாம எதிர்பாத்தது நடக்கப்போகுது...! இது முதல் வெற்றி!” அவன் கோக்கை எடுத்து அவளது கிளாசில் ஊற்றினான்.
“என்ன சந்தியா? கோக்கையே எத்தனை மணிநேரமா பார்த்துட்டு இருப்பே?”
“இ...இல்லை ஹரி மனசு பாரமாக இருக்கறாப்போல தோணுது....” கவலையுடன் சொன்னவளை,
“அதுவா? இந்த தாலிதான் கழுத்திலே தொங்குதே...அது பாரமா இருக்கும்... இதையும் கழட்டிட்டா...ஓகே தான்....” சமாதானப்படுத்தினான் ஹரி,
சந்தியா மௌனமாக தலை குனிய,
“என்ன சந்தியா? என் சந்தோசத்தில பாதி கூட உன்கிட்டே இல்லை..” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.
“இ..இல்லை ஹரி எனக்கு பயம்மா இருக்கு?” கண்களில் கலக்கத்துடன் பார்த்தாள்.
“ஐ.ஏ.எஸ். படிக்குற பொண்ணு சொல்ற வார்த்தையா இது...?”
“இல்லைடா....ச...சந்தோஷ் கடைசியில சொன்னதை நினைச்சா...”
“என்ன?”
“என் மேலே ஒரு தூசி கூட படியமா நான் கேட்டது கிடைக்கும்...நினைச்சது நடக்கும்னு சொன்னானா? அ..அது எப்படி என்றுதான்.. புரியாம” அவள் குழப்பமாக தடுமாற,
“அது எப்படியோ! அவன் என்னவோ பண்ணிட்டு போகட்டும்.! அவன் சூசைட் பண்ணிகிட்டாலும் நாம நினைச்சது நடந்தாச்சரி...” என்றான் ஹரி அலட்சியத்தோடு,
“ஹரி..!” அதிர்வுடன் அவனை பார்த்தாள்.
“என்ன?”
“ஏ....ஏன் இப்படி பேசுறே? என்னதான் இருந்தாலும்.... அ...அவனுக்குள்ளே இருக்குறதும் ஒரு உயிர்தானே..” என்றாள் கவலையோடு,
“அதுக்காக...”
“நாம சந்தோசமா வாழணும்தான்....அதுக்காக அவன் உயிரோடு விளையாடுவது வேண்டாமே....” அவள் டேபிளின் மேல் கோலம் போட்டபடி சொல்ல, ஹரி கூர்ந்து பார்த்தான்.
“என்ன திடீரென்று அவன் மேலே உனக்கு அக்கறை?” ஒரு மாதிரி குரலில் வினவினான்.
“அக்கறை இல்லைடா! தெருவில யாராவது மயங்கி விழுந்திட்டா ஓடிப்போய் காப்பத்துறது இல்லையா ? அது போல ஒரு மனிதாபிமானம் தான்....அவன் யாராக இருந்தாலும் ஒரு பரிதாபம் அவ்வளவு தான்! நீ சூடாகாதே!” அவனை குளிர்விக்கும் விதமாக சொல்ல,
“ம்....ம்..அதுதானே பார்த்தேன்! என் சந்தியா இதயத்துக்குள்ளே என்னைத்தவிர வேறு யாரால சம்மணம் போட்டு உட்கார முடியும்?” அவன் சட்டைக்காலரை தூக்கிவிட்டான்.
“போதும்! ரொம்ப ஐஸ் வைக்காதே! இங்கே ஏசி வேற போட்டிருக்காங்க குளிருது..” கண்கள் மின்ன குறும்புடன் அவனை பார்த்தாள்.
“குளிருதா? அப்ப என் பக்கத்துல வந்து உட்காரு....” பக்கத்தில் இருந்த சீட்டைத் தடவியபடி சொல்ல,
“ஆஹா....நல்லா கனவு காணு ராஜா நான் வர்றேன்...” புன்னகைத்தாள்.
“இரு.....நாம ஹனிமூனுக்கு எங்கே போலாம்னு டிஸ்கஸ் பண்ணுவோம்..” என்றான் கிறக்கமாக அவளை பார்த்து.s
“அய்யே...ரொம்ப தூரம் போயிட்டே நீ! அலையாதேடா” அவள் சிரித்தபடி எழ,
“ம்....ம்...பாவம்டா ஹரி தலகாணியும் போட்டோவும் தான் உனக்கு லாயக்கு.....” அவன் சொல்ல மீண்டும் சிரித்தாள்.
“பில் கட்டிட்டு வாடா ராஜா...யாராவது பார்த்தாங்கன்னா...டாடிக்கு ஃபோன் போட்டு டேய் சாரங்கா உன் பொண்ணு சிரிக்குறாளடான்னு சொல்லப்போறாங்க...”
“ஏன் நீதான் பொறந்ததிலேருந்து சிரிக்குறியே..”
“ஆமா....இப்ப ஒரு பையனோடு சிரிக்குறேனே...” அவள் கண்ணடிக்க,
“ஆமா... ஆமா...அதுவும் அழகான பையனோடு....” புருவத்தை உயர்த்தியபடி அவளை பார்த்து சிரித்தான்.
“ஆமா வழியுது....தொடைச்சுக்கோ...நான் வர்றேன்....” அவள் கைகாட்டிவிட்டு போனாள்.
“டேய் சந்தோஷ்...உனக்கு தேங்ஸ் சொல்லணும்....என் அம்மாவும் நானும் மாமா குடும்பத்தோடு ஒண்ணு சேர நீ தடையா இருந்தே...இப்ப உன் விரலை வச்சே உன் கண்ணை குத்தியாச்சு...உன் இடத்துல நான் இருப்பேன்..இப்ப தலைக்கு மேலே தூக்கிவச்சுட்டு ஆடும் மாமா சாரங்கனும் அவர் குடும்பமும் உன்னை தூக்கி எறியும்... அப்ப பாரு நான் யாருன்னு..? ஒரு கல்லில் மூணு மாங்காய்டா....ஒண்ணு எனக்கு புடிக்காத என் விரோதி உன்னை துரத்துறது, அடுத்து என் குடும்பம் ஒண்ணு சேருவது.. அப்புறம் சந்தியா..” அவன் சிரித்தான் முகத்தில் தெரிந்தது வெறியா? குரோதமா?
எல்லோரும் வீடு திரும்பிவிட்டிருந்தனர். வழக்கம்போல அன்றைய பகல் எப்படி போனது என்று ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். சந்தியா தன்னறையில் படித்துக்கொண்டிருந்தாள். சந்தோஷ் இன்னும் வந்திருக்கவில்லை. நேரமோ ஆகிக்கொண்டிருந்தது. சிறியவர்கள் காத்திருந்து களைத்துப்போய் ஒருவழியாக பெற்றவர்கள் வற்புறுத்த ஸ்கூல் இருப்பதால் நேரத்துக்கு சாப்பிட்டுவிட்டு தூங்கப்போனார்கள்.
பெரியவர்ளும் சாப்பிட்டுவிட்டு கிரிக்கெட், பார்த்துக்கொண்டிருந்தனர். சராங்கன் மட்டும் சாப்பிடாமல் சந்தோஷுக்காக பார்த்துக்கொண்டிருந்தார். அவன் இல்லாமல் அவர் சாப்பிட்டதும் இல்லை தூங்கியதும் இல்லை. அவன் வந்தபின் அவனோடு கம்பெனி விபரங்களை பேசியபடி சாப்பிட்டு அவன் கையால் வெற்றிலை மடித்து வாயில் போட்டுக்கொண்டு அதன் பின் தான் தூங்கப்போவது வழக்கம். எல்லோரும் ஒன்றாக சாப்பிடுவதில் இருக்கும் ஆனந்தம் எதிலும் இல்லை என்று ஒன்றாகவே சாப்பிடுவார்கள். சிலநேரம் சந்தோஷ் வரத் தாமதம் ஆனால் இவ்வாறு சராங்கனும் அவனும் தனித்து சாப்பிடுவது வழக்கம். எத்தனை மணி நேரமானாலும் ஃபோன் செய்து சொல்லிவிடுவான். இன்று ஃபோன் கூட செய்யவில்லை.
“என்ன இந்த புள்ளை ஃபோன் போட்டு சொல்வது தானே.? நீங்க போய்த்தூங்குங்க நான அவனை பாத்துட்டு தூங்குறேன்....” - சாரங்கன் சொல்ல அரைமனதாக போனார்கள்.
“சராங்கா சந்தோஷ் செல்லுக்கு காண்டாக்ட் பண்ணீங்களா..?” விஜயராகவன் வினாவ,
“பண்ணேன்பா...ஆஃவ்லே இருக்கு...” சாரங்கன் கவலையோடு கூறினார்.
“என்னண்ணா நீங்க? அவனுக்கு முக்கியமான மீட்டிங் ஏதாவது இருக்கும்....டிஸ்டர்ப்பா இருக்கும்னு ஆவ் பண்ணி வச்சிருப்பான்....நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க...” என்றார் சக்திவேல் ஆறுதலாக,
“நீ வேற சக்தி...அவர் என்னைக்கு அவனை விட்டுட்டு சாப்பிட்டிருக்கார்....?“ – சாரதா சொல்லியவாறு வாசலை பார்க்க சந்தோஷ் அப்போதுதான் உள்ளே நுழைந்தான்.
“இதோ வந்துட்டான்...! வாப்பா வா....! உன்னால நம்மை ஒரு வழிபண்ணிட்டாரு உன் மாமா...! நீயாச்சு அவராச்சு” சாரதா மகனிடம் சொல்லிவிட்டு போனாள். மற்றவர்களும் தத்தம் அறைகளுக்கு சென்றனர்.
(பூகம்பம் ஆரம்பம்)