• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் தேடலானவளே 11

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
11
அவளின் கைகளில் அவனளித்த பரிசு மஞ்சள் கயிற்றின் நடுவில் தங்கத்தில் தாலி இருந்தது.. அதைப் பார்த்தவளின் கண்களில் சந்தோஷ கண்ணீர் வந்தது. அதை எடுத்து அவன் கைகளில் கொடுத்தாள். அதை வாங்கியவன் அவளின் கைகளை உரிமையாக பிடித்து அங்கிருந்த பூஜையறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஒரு பிள்ளையார் சிலை மட்டுமே இருந்தது.. அதன் முன்பு அவளை நிறுத்தியவன் தாலியை கைகளில் எடுத்து அவளின் கண்களை கண்டான்.. அவன் கண்களில் என்ன கண்டாளோ பெண்ணவள் அவளின் சிப்பி இமைகளை மூடிதிறந்து தலையைக் குணிந்து கொண்டாள்.

அவளிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.. "இப்பவும் நல்லா யோசிச்சிக்கோங்க இது தேவையான்னு.."

அவளோ குனிந்த தலை நிமிராமல் மௌனமாய் நின்றிருந்தாள்..

அவளின் மௌனமான பதிலில் மனம் நிறைந்தவன் அவளின் கழுத்தில் தாலி கட்டியவனின் கைகளில் கண்ணீர் துளிகள் விழுந்தது. அவனுக்கு தெரியும் அவள் விழிகளில் வழியும் கண்ணீர் துளிகளுக்கு காரணம் என்னவென்று.. அவனாலும் என்ன செய்ய முடியும்.. மனம் கவர்ந்தவளை மனையாளாய் ஏற்றும் மனம் கனத்து கொண்டு தான் இருக்கிறது அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று.

பின்பு இருவரும் கிளம்பி ரயில் நிலையத்திற்கு வந்து கொடைக்கானல் செல்லும் இரயிலில் அமர்ந்தனர். அவளுக்கு தேவையானதை பார்த்துக் கொண்டானே தவிர அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.. அவளும் கேட்கவில்லை.. அவளின் யோசனை முழுவதும் தன் குடும்பத்திற்கும் தோழிக்கும் துரோகம் செய்வதாய் மனது உறுத்தியது.

அவளின் நிலை அவனுக்கு புரிந்ததால் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். யாருமில்லாமல் தனியாய் வாழ்ந்த தனக்கே இப்படி இருக்கும் போது குடும்பமாய் வாழ்ந்தவளுக்கு எப்படி இருக்கும்.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு இறங்கினான்.. அவனை அழைக்க ஒருவரும் வரவில்லை.. அவனின் கட்டளை அது.. அவன் தான் புதிதாக வந்திருக்கும் டிசி என்று தெரிந்தால் குற்றவாளிகள் தப்பிக்கும் வழி இருப்பதாலும் அவனின் உயிருக்கும் அது ஆபத்துதென்பதாலும் அவனின் அடையாளத்தை மறைத்துதான் வந்தான்.

இருவரும் இறங்கியதும் ஒரு வண்டியை பிடித்து ஒரு வீட்டிற்கு அவளை அழைத்து சென்றான்.. அங்கு ஏற்கனவே ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர்.
இருவரையும் வாயிலிலேயே நிற்க வைத்து அந்த பெண் ஆரத்தி எடுத்தாள். மித்ராவின் மனம் நிறைந்தது.. திருமணம் ஆன நிமிடத்திலிருந்து யார் இதை செய்வார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததில் அவள் முகம் பூரிப்படைந்தது.

அவளின் மனம் அறியாதவனா அவளவன்.. அவளின் மனம் தெரிந்து அதை நடத்தியும் விட்டான். இருவரும் உள்ளே நுழைந்ததும் அந்த ஆணும் பெண்ணும் விடைபெற்றனர்.

உள்ளே சென்று வீட்டை சுற்றி பார்த்தாள் மித்ரா.. எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டு அவளுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லாமல் இருந்தது. அந்த வீடு சிறிய ஓட்டு வீடு தான்.. சுற்றிலும் வேலி போட்டு வீட்டினில் உள்ளே ஒரு சிறிய சமயலறையும் ஒரு பெட்ரூம் சிறிய ஹாலுடன் இருவர் மட்டுமே வசிக்கக்கூடிய அளவு இருந்தது. அது அவளுக்கு மிகவும் பிடித்தது.. மனம் கவர்ந்தவுடன் மனம் நிறைந்து வாழ ஆசை கொண்டாள் பெண்ணுவள்.

அவளின் ஆசையை புரிந்துகொண்டவனால் அதை முழுதாக நிறைவேற்ற அவனின் மனம் தான் முரண்டு பிடித்தது.. மூன்று நாள் இருப்பாள்.. அதன் பின்பு அவளின் வசதியை தேடி போய்விடுவாள்.. என்னதான் நல்ல பெண்ணாக இருந்தாலும் இப்படிப்பட்ட இடத்தில் அவளால் தங்க முடியாது என்பது அவனின் கணக்கு. ஆனால் அவனின் கணக்கை அவனவள் முறியடிக்க போகிறாள் என்பதை அவன் அறியவில்லை.

மனதால் ஒருவனை சுமந்துவிட்டால் அவன் இருகக்குமிடமே அவளின் சந்தோஷம் என்பதை நேத்ரன் அறியாமல் போனது அவனின் அறியாமையே...

இருவரும் அங்கு வந்து ஒரு மாதம் ஓடிப்போனது... காலையில் செல்பவன் இரவு என்னேரம் வருவான் என்பது அவளறியாதது.. இருந்தும் அவளின் தேவைகளனைத்தையும் அவள் கேட்காமலே நிறைவேற்றினான். அதில் அவள் மனம் குளிர்ந்து தான் போனது.

இக்குறைந்த நாட்களில் அவனின் மனதை வெளிப்படுத்தவில்லையே தவிர அதை செயலில் காட்டினான். அதை உணர்ந்து கொண்டவளும் அவன் சொல்லாத காதலில் நனைந்தாள். இப்படியான இவர்களின் நாட்களில் அவர்களின் நெருக்கமுமான நாளும் வந்தது.

அன்று காலையில் இருந்தே மித்ராவிற்கு காய்ச்சல் எழ முடியாமல் இருந்தது.. அவள் எழும் முன்னமே அவனும் சென்று விட்டான்.. சுடுதண்ணீர் கூட வைக்க முடியாமல் தவித்தாள்.. அவனுக்கு கால் செய்தாலும் போகவில்லை.. அந்த ஒரு மாத காலத்தில் அவள் வீட்டிலும் வாஹினிக்கும் அவள் ஹாஸ்டலில் உள்ளதாகவே நம்ப வைத்தாள்.. அதில் அவளுக்கு குற்றவுணர்வு தோன்றினாலும் அதை அவன் மனம் கவர்ந்தவனின் அருகமை வென்றது.

அன்று ஏனோ அவன் மனம் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல தவித்தது. அவன் வந்த வேலை பாதி முடிந்துவிட்டது.. குற்றவாளியை கிட்டதட்ட நெருங்கிவிட்டான். இன்று நிச்சயம் அவனை கண்டுவிடுவோம் என்ற நிலையில் ஏனோ அவன் மனம் தவித்தது.. அதிலும் அவளின் நினைவு அவனை படுத்தியது.. அவளை நினைத்து மனதிற்குள்ளாகவே சிரித்தவன்,

'யாழுமா...ஏன்டி இன்னைக்கு உன்னை ரொம்ப தேடுது.. வரேன் டி... கூடிய சீக்கிரம் என்னோட வேலை முடிஞ்சிரும்டி.. சீக்கிரம் உங்க வீட்ல சொல்லி உன்னை முழுசா என்னோட சொந்தமா மாத்திக்கனும் டி' அவளிடம் மனதால் பேசிக் கொண்டே வீட்டிற்கு சென்றான்.

அவன் சென்று வீட்டின் கதவை தட்டவும் கதவு திறக்கவே இல்லை.. அதில் பயந்தவன் தன்னிடம் உள்ள சாவியால் வீட்டை திறந்து தன்னவளைத் தேடினான். அவளோ அங்கே கண்களை கூட திறக்க முடியாமல் தரையில் குளிரில் நடுங்கியபடியே குறுகியிருந்தாள். அவளை அன்னிலையில் பார்த்தவனின் மனம் தவித்து போனது. ஓடிப்போய் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு அவளின் முகத்தை தட்டினான். அவன் ஸ்பரிசம் உணர்ந்தவளும் அவனின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

அவளின் பற்றுதலில் அவளின் நேசத்தை உணர்ந்தவன்

"யாழுமா கண்ணைத்திறடி.. குட்டிமா பாருடா உன் தரன் வந்துருக்கேன்.. ஏன்டி இப்படி.. காலையிலே சொல்லிருக்கலாமே டி" அவன் விழிகள் அவளுக்காய் கண்ணீர் சிந்தியது.

அந்த மயக்கத்திலும் அவனின் காதலை பெண்ணவள் உணர்ந்ததன் அடையாளமாய் அவளின் விழிகளில் கண்ணீர் பெருகியது. ஆனால் அவனிடம் பேச முடியாமல் அவளின் உடல்நிலை தடுமாற்றம் செய்தது. நேத்ரன் உடனடியாக யாருக்கே அழைத்து மருத்துவரை அழைத்து வரச் சொன்னான்.

அங்கிருந்த நாட்களில் அக்கம் பக்கம் யாரிடமும் அவர்கள் இருவரும் அதிகம் பேசவில்லை.. அவன் வந்திருக்கும் வேலைக்கு அது சரியில்லை என்று அவளிடம் கூறியிருந்தான்.பொதுவாக அவனின் வேலையில் அவள் தலையிட மாட்டாள்.

அவளை மடியில்தாங்கியிருந்து அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நேரம் அங்கே ஒரு ஆடவனும் மருத்துவரும் வந்தார்கள். வந்தவர் அவளுக்கு ஊசியை போட்டு விட்டு கஞ்சி மட்டும் கொடுக்க சொல்லி மாத்திரையை கொடுத்து சென்றுவிட்டார்கள் இருவரும். பழக்கமில்லாத வேலையால் வந்தது என்று மருத்துவர் கூறிவிட்டு சென்று விட்டார்.

அவர்கள் சென்றதும் அவளுக்கு கஞ்சி வைத்து அவளை குடிக்க வைத்து மாத்திரையை கொடுக்கவும் அவள் உறங்கிவிட்டாள். அதே கஞ்சியை அவனும் குடித்துவிட்டு அவளருகிலே படுத்துக்கொண்டான். தன்னால் தான் தன்னவளுக்கு இந்த நிலை என்று அவன் மனம் கனத்துப்போனது அவள் நினைவிலேயும் வேலைப்பளுவாலும் உறங்கி விட்டான்.

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு அவள் முனகும் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்து பார்த்தான். அவள் தான் குளிரில் கோழிக் குஞ்சாய் நடுங்கி கொண்டிருந்தாள். அவளின் அருகில் சென்றவன் அவளுக்கு மொத்தமான போர்வையை போர்த்தினான்... அதை மீறியும் அவளின் உடல் குளிரில் நடுங்கியது.. என்ன செய்வது என்று புரியாமல் சிறிது யோசித்தவன் அவனின் சட்டையை கழட்டி விட்டு அவளின் போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டான். அவனின் கதகதப்பில் அவன் நெஞ்சில் தன்னை மறந்து துயில் கொண்டாள் பெண்மயில்.. ஆணவனுக்கும் பெண்ணவளின் அருகாமை சிந்தையை சிதறவிட்டது என்னவே உண்மைதான். அவனும் ஆண்தானே.. உணர்ச்சியுள்ள மணியன் தானே.. தாலி கட்டிய மனைவியை மனதார நேசித்தவளை எவ்வளவு நாள்தான் ஒதுக்கி வைக்க முடியும்.


"என்ன ராபர்ட் சொல்ற.. புதுசா வந்த டிசி யாருன்னு தெரியலையா.. அவன் ஜார்ஜ் எடுத்துருப்பான் இல்லை.. அப்போ கூடமா அவன் யாருன்னு கண்டுபிடிக்க முடியலை.." என்றான் கோபத்துடன் ரஞ்சித்.

"இல்லை பாஸ்.. அவன் இன்னும் அதிகாரபூர்வமா ஜார்ஜ் எடுத்துக்கலை.. ஏன் அவன் யாருன்னு ஸ்டேஷன்ல இருக்கறவங்களுக்கே தெரியலை.. வேறுவழி இல்லாம நம்மளோட தொழில நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை.." என்றான் ராபர்ட் என்பவன்.

" ம்ம்... மெட்டீரியல் எங்க இருக்கு.. பத்திரமா இருக்குல்லை... லேட் ஆ போனாலும் எந்த பிரச்சனையும் இல்லாம போகனும் ராபர்ட்.. வா மெட்டீரியலை பாத்துட்டு வந்துடலாம்.." என்று பேசிக்கொண்டே ஒரு அறைக்குள் நுழைந்தனர்.. அதில் பத்து முதல் இருபது வரையிலான பெண் குழந்தைகள் ஒவ்வொரு பெட்டிலும் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் ஐந்து குழந்தைகள் இருந்தனர்...அவர்களின் கோலமே சொன்னது அனைவரும் சுயநினைவில் இல்லையென்று.

அந்த குழந்தைகள் முழுவதும் போதைக்கு அடிமையான நிலையில் அவர்களை வெளிநாட்டிற்கு விற்கவும் ஏற்பாடு செய்திருந்தான் ரஞ்சித்.. இவர்களில் சிலர் விபச்சாரத்திலும் சிலர் உடலுறுப்புகளை திருடி விற்றும் வருகிறான்.. இதற்கு வெளிநாட்டில் அதிகமான விலையும் அதற்கு பதிலாக அவனுக்கு அளவுக்கதிகமான போதை மருந்தும் கிடைக்கும்.

" ராபர்ட் இவங்கலாம் அடுத்த வாரம் அந்த கஸ்டமருக்கு பார்சல் பண்ணிடு.. அப்புறம் அந்த வைலட் கலர் சுடி போட்டுக்க பொண்ண என்னோட ரூம்ல கொண்டு விடு.. நைட் வேனும்.."

அவனும் அசிங்கமான சிரிப்புடன் "சரிங்க பாஸ்.." என்று இழித்தான். அவனின் முகம் அங்கிருந்த சிறு மலர்களை வக்கிரத்துடன் பார்த்தது.. அவனின் கைகள் அந்த மழலைகளில் உடலில் தீண்டக்கூடாத இடத்தில் தீண்டியது.

அந்த குழந்தைகள் அனைவரும் வசதியான வீட்டில் மலர்ந்த மலர்கள்.. கவனிக்க யாருமின்றி பணத்தின் பின்னால் போன பெற்றவர்களுக்கு பாவச்சுமையாய் மலர்ந்த பிள்ளைகள். அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி கடத்தி வந்து போதைக்கு அடிமையாக்கி அவர்களே பெற்றவர்களை பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி அடைக்கலமாய் அவனிடம் வருமாறு செய்த துரோகியவன்.

ஆதவன் மலர வழிவிட்டாள் நிலவு தேவதை. காலையில் கண்விழித்த மித்ராவிற்கு தான் ஏதோ பாறங்கல்லில் படுத்திருப்பது போலவும் அதனில் இதயம் துடிப்பது போலவும் கேட்டது.. விழி மலர்ந்து மெதுவாக யாரென்று பார்த்தாள்.. அப்பொழுது தான் தெரிந்தது அவள் தலை சாய்ந்திருந்த இடம் தன்னவனின் மார்பின் மீது என்று.. அதிர்வுடன் எழுந்தவளால் அவனின் தூக்கமும் கலைந்தது.

இருவரின் முகமும் அருகருகே இருக்க இரவு முழுவதும் பெண்ணவளின் மென்மையில் கரைந்து போனவன் அவளின் அருகாமையில் பித்தாகி தான் போனான் ஆறடி ஆண்மகன். அதிலும் அவளின் மான்போன்ற விழிகள் அவனைக் காணமுடியாமல் அலைபாயும் அழகே அவளிடம் பித்தம் கொள்ளச் செய்தது. அவள் கழுத்தில் அவன் அணிவித்த தாலி அவள் உன்னவள் என்று அவனிடம் பறைசாற்றியது. அவனின் நிலை இவ்வாறிருக்க

பெண்மகளோ அவனின் பார்வையில் அவள் முகம் அந்திவானத்திற்கு போட்டி போட்டு சிவந்தது.. அவன் மேலிருந்த எழ முடியாமல் அவனின் கைகள் அவளின் இடுப்பை பிடித்திருந்தான்.. அதில் நெளிந்தவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்‌.

அவளின் விழிகளை சந்தித்தவன் தனது கரத்தை நீட்ட பெண்ணவளும் நிமிர்ந்து அவன் கண்களை கண்டாள்.. அதிலிருந்த காதலில் தன் கரத்தை அவன் கைகளில் வைத்து தன்னை அவனிடம் முழுமையாக ஒப்படைத்தாள்.

அவனவளின் மேலிருந்த காதல் ஆணவனை அனைத்தும் மறந்து அவளுடன் உறவாட வைத்தது. தனன்னவளை இறுக்கி அணைத்து அவளின் இதழில் தன்னிதழை பொறுத்தி கதையொழுது துவங்கிவிட்டான். அவனின் கைகளில் மெழுகாக உருகி வழிந்தாள் பெண்ணவள்.. தன் மனம் கவர்ந்தவன் தன்னை தீண்டுவதில் அவள் பெண்மையை உயிர்தெழச்செய்தது. அங்கே அவர்களின் இல்லறம் நல்லறமாய் துவங்கியது.

தன் கைகளில் உருகி வழிந்தவளை தனக்குள் இறுக்கி அணைத்துக் கொண்டான் ஆணவன். அவனின் செயல்களில் அவளின் ஆடைகள் அனைத்தும் அவளிடமிருந்து விடைபெற்றன. அவளை மெது மெதுவாக ஆளத் தொடங்கினான். ஆணவனின் வேகத்தை அப்பூந்தென்றல் வலி தாங்காமல் சிணுங்கும் நேரங்களில் அவள் முகத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவளின் ஒவ்வொரு சிணுங்கலுக்கும் ஐ லவ் யூ என்று சொல்லிக்கொண்டு அவளின் பெண்மையை தனதாக்கிக் கொண்டான்.

அவர்களின் உலகத்தில் இருந்து மீண்டுவர மதியம் ஆகியது.. முதலில் பெண்ணவள் விழித்ததும் அவளின் நிலை அவளுக்கு வெட்கத்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்தது. அங்கிருந்த போர்வையை தன் மேல் எடுத்து போர்த்திக் கொண்டவள் அவளவனை திரும்ப பார்த்தாள்.. அவன் மலர்ந்த முகத்துடன் நிம்மதியுடன் உறங்கி கொண்டிருந்தான்.

அதைக் கண்டவள் முகம் வெட்கத்தை சுமந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். குளித்துவிட்டு வந்தவள் கண்ணாடியின் முன் நின்று தனது முகத்தை பார்த்தாள்.. அதில் அவளவன் செய்து வைத்த வேலை நன்றாகவே தெரிந்தது. அதில் முகம் சிவந்தவள் குங்குமத்தை விரலால் எடுத்து நெற்றியில் வைக்கப் போகும் நேரம் அவளின் கைகளை வலிமையான கைகள் பிடித்து அந்த குங்குமத்தை அவன் கைகளாலே வைத்தான் அந்த வலிமையான கரங்களுக்கு சொந்தக்காரனான அவளவன்.

இத்தனை நாளும் அவன் அவளுக்கு குங்குமம் வைத்ததில்லை.. ஏன் திருமணத்தின் போது கூட தாலி மட்டுமே கட்டினான். ஆனால் இன்று அவன் முழுமனதுடன் வைத்தான் நேத்ரன். அவளைத் திருப்பி தன்னைக் காணச் செய்தவன்,

"சாரி டி.. நான் சொன்ன வார்த்தையை நானே மீறிட்டேன்.. ஐ லவ் யூ யாழுமா.. எனக்காக இவ்வளவு தாக்குவன்னு நான் நினைக்கலைடி.. ஏன்டி என் மேல இவ்வளவு நேசம் உனக்கு.. ஆனா நா செஞ்சது தப்புன்னு சொல்ல மாட்டேன்.. எனக்குத் தெரியும்டி.. உனக்கு விருப்பமில்லைன்னா இது கண்டிப்பா நடந்துருக்காது.. அது தப்புன்னா என்னை மன்னிச்.." அவனின் வார்த்தையை முடிக்கவிடாமல் வாய்மேல் தனது கரங்களை வைத்து மூடியவள்

"அத்தான் என்னை வார்த்தை சொல்றீங்க... உங்களை நான் மன்னிக்கிற அளவுக்கு நீங்க எந்த தப்பும் செய்யலை.. நான் உங்களுக்கு சொந்தமானவ.. உங்களுக்கு சொந்தமானத தான எடுத்துக்கிட்டிங்க.. இதுல தப்பு எதுவும் இல்லை அத்தான்" என்றாள் தலையை குனிந்து கொண்டே.

அவளின் முகத்தை நிமிர்த்தியவன் தன்னை பார்க்கச் செய்து "தேங்க்யூடி.. தேங்க்யூ சோ மச்.. ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டனா.. ஐ ஆம் சாரி பேபி.. இனிமே பதமா நடந்துக்குறேன்.." அவளைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே கூறினான் மித்ராவின் தரன்.

அவன் வார்த்தைகளில் வெட்கம் கொண்ட பெண்ணவளோ அவன் மார்பிலே முகம் புதைத்தாள். அவனோ சந்தோஷத்துடன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ஆனால் அவர்களின் சந்தோஷத்திற்கும் பிரிவிற்கும் காரணமானவன் அவர்களை நெருங்கி விட்டான் என்பதை யார் அவர்களிடம் கூறுவது.
 
Top