• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அனைத்தையும் சத்ய ஸ்ரீ கூறி முடித்ததும் பேயறைந்ததைப் போல அமர்ந்திருந்தது என்னவோ நவீன் தான்.

அவள் எத்தனை தடவை அவனிடம் தப்புப் பண்ணலனு சொல்லி அழுதிருப்பாள்.. இவன் என்னவோ அற்பமாகவல்லவா அவளை பார்த்து விட்டுச் சென்றிருந்தான். ஆனால் இப்போது..!? நிசர்சனம் நெற்றிப் பொட்டில் அறைந்து அவனுக்கு உண்மையை உறைக்கச் செய்ய எப்படி ரியெக்ட் பண்ணுவதென தெரியாமல் அமர்ந்திருந்தான் நவீன்.

அவள் கூறுவது நூறு வீதம் உண்மையென்பது அவனுக்கு இன்று புரிந்தது. ஏனென்றால் அந்த வருணுடன் அவள் பழகக் காரணமே இவன் தானே.

அன்று வருண் சத்யாவிடம் பேச முயற்சிக்க அவளும் இயன்றமட்டில் தள்ளித் தள்ளிப் போய் விட்டாள். அதனை கண்டதென்னவோ நவீன் தான். பின் அவன் அவளிடம் பேசிவிட்டு சென்ற பின்னர் அவனைப் பிடித்து மிரட்டியதும் அவன் சொன்னதென்னவோ "அவளும் நானும் அண்ணன் தங்கைப் போலத் தான் பழகிறோம்..." என்பதைத் தான்.

பின் சத்யாவிடம் கேட்க அவளோ "ஜெஸ்ட் ஃப்ரெண்ட் தான். ஓவரா வழிஞ்சான். அது தான் போனாப் போகுதேனு சும்மா பேசுறேன். மத்தப்படி நத்திங்..." என கை விரித்து கூறவும் அவளின் பாதுகாப்பிற்காக வருணின் நடத்தைப் பற்றி கூறியவன் அவன் வந்து ஓவரா பேசினா அண்ணானு சொல்லிரு... என்று கூறி அவளையும் எச்சரித்து வைத்தான். அவளும் சரியென்று தலையை ஆட்டிய பின்னரே நவீனிற்கு நிம்மதியானது. அப்படி அவள் அவனுடன் பேசுவது நவீனறிந்த ஒன்றே.. ஆனால் அதில் இப்படி ஒரு சிக்கல் இருந்தது அவனுக்குத் தெரியவேயில்லை.

கலங்கிய விழிகளுடன் அவளை பார்க்க முடியாமல் "அப்போ இந்தப் பிரச்சினைக்கு காரணம் வருண் தானா..?" என்ற நவீனைப் பார்க்க பிரியப்படாத சத்யாவும் சஞ்சயிடம் "ஆமாண்ணா. அந்த நவீன் தான்ணா. அவன் என் வாழ்க்கைல ப்ளே பண்ணிருக்கான்றது எனக்கு இப்பதாண்ணா புரிது. அ..அண்ணா என்னைய நம்புறல நீ..?"

நவீன் குற்றவுணர்ச்சியில் தலை குனிய சஞ்சய் தான் "ஆமாம்மா. நான் ஏன் உன்னைய நம்பாம இருக்கப் போறேன். ஐ ட்ரஸ் யூ..." என்றவன் அவளது தலையை தடவி விட்டான்.

நவீனோ தயங்கித் தயங்கியே "ஸ்ரீ..." என்பதற்குள் சட்டென எழுந்த சத்யா "அண்ணா வாண்ணா போகலாம். நான் நடந்த உண்மையை சொல்லிட்டேன். இனி நம்புறதும் நம்பாததும் அவங்க இஷ்டம். இவ்வளவு நாளும் செய்யாத தப்புக்காக தண்டனையை அனுபவிச்சிட்டேன்.." என்றவள் இலேசாக குரல் கமற "கேட்கக் கூடாத வார்த்தையையும் கேட்டு அவங்கட கேவலமான பார்வையும் சகிச்சிட்டு இருந்துட்டேன். இனி சத்தியமா முடியாதுண்ணா. நீ வா..." என்றவள் நவீனை பார்க்காமலே சென்று விட சஞ்சயும் அவளுடன் சென்று விட்டான்.

தனித்து விடப்பட்ட நவீன் அவளது செயலில் அடிபட்டுப் போனான். அவனது மனமோ "இது எனக்குத் தேவை தான். எத்தனை தடவ அவ தப்பு செய்யலனு சொல்லி எனக்கிட்ட வந்து கெஞ்சினா. நான் தான் கேக்கலல்ல.. அப்போவே கேட்டிருந்திருக்க இந்த பிரச்சினையும் பிரிவும் இந்தளவுக்கு வளர்ந்திருக்காதுல..? அவ..அவ எவ்வளவு தவிச்சிருப்பா..." என்றெண்ணியவனுக்கு ஒற்றைக் கண்ணிலிருந்து சலேரென விழிநீர் வழிந்தது. அதனை துடைத்து விட்டு விரக்தியாய் புன்னகைத்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென புரியவில்லை.

இவனின் கலங்கிய விழிகளைப் பார்த்த ஒரு சோடிக் கண்களும் கலங்கினவோ...!?

பின் திடீரென ஆத்விக்கின் நினைவே வர எழுந்து வெளியே ஓடினான். காரையோட்டிக் கொண்டே "இவன் எங்க போய் தொலைஞ்சானோ தெரில. அங்க தான் இருப்பான் போய் பார்ப்போம்..." என வாய்விட்டே புலம்பிக் கொண்டு போய் காரை நிறுத்தியதென்னவோ பார்ரின் முன் தான்.

அங்கு வழமையாக ஆத்விக் அமரும் இடத்தை ஆராயந்தவனை வரவேற்றதோ வெற்றிடம். அதிர்ந்தவனாக எல்லா இடமும் தேடியவனுக்கு பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது. அவனது தொலைபேசிக்கு அழைப்பெடுக்க ரிங் போய்க் கொண்டிருந்ததே தவிர அவன் எடுத்தபாடில்லை. "ஓ சிட்" என ஸ்டியரிங் வீலில் குத்தியவன் அவசரமாக சூர்யாவிற்கு அழைத்திருக்க அவரிடமிருந்து பதில் வந்தது.

"அப்பா ஆத்விக் வந்தானா அங்க..?"

"ஆமாப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தான். ஏதோ டென்ஷன்ல இருக்கிறான் போல. யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு ரூம்முக்குள்ள போய்டான். என்னப்பா ஏதாச்சும் ப்ராப்ளமா..?"

"அ..அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா.."

"அம்மா கூட அவன அப்படிப் பார்த்ததுல இருந்து பொலம்பிட்டே இருக்கா. வந்து என்னனு பாரு கண்ணா..." என்றவரிடம் சரியென்றவன் அழைப்பை துண்டித்து விட்டு பெரு மூச்சு விட்டவனாக வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

...

வீட்டிற்கு வந்த சத்யா யாரையும் பாராது தனதறைக்குள் நுழைந்து கொண்டாள். வந்தவள் மனம் விட்டு அழுதாள்.

"உன்னை ஒரு தடவை சரி பார்த்துற மாட்டேனானு ஒவ்வொரு நொடியும் ஏங்கிட்டு இருந்தேன். ஆனால் இன்னைக்கு நீ மறுபடியும் என்னையப் பார்த்த பார்வையிலே செத்துட்டேன்டா. என்னைய இந்தளவுக்கு வெறுக்குறேனு இன்னைக்குத் தான் பார்த்தேன். அவ்வளவு மோசமானவளா போய்டனா நான்...?" என தன்னவனுடன் மனதிலே உரையாடியவள் பின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை அழுந்த துடைத்து விட்டு "உன்னைய விட்டு நான் தூரமா இருக்கிறது தான் உனக்கு சந்தோஷம்னா, இனி உன் முன்னுக்கு வர மாட்டேன்.." என்றவளுக்கு என்ன தடுத்தாலும் அதன் பாட்டில் விழிநீர் கன்னம் வழிந்தது.

"என் வாழ்க்கைல ஒரு தடவை சரி உன்னைய பார்க்கனும்னு ஆசைப்பட்டேன். இன்னைக்கு அது நடந்துரிச்சு.. அது போதும் எனக்கு.. இப்போ நவீன் நடந்ததை உனக்கிட்ட சொன்னாலும் நீ நம்பப் போறதில்லை. அவன் நம்பினா அது போதும்.. நம்பினல்ல நவீன்...?" என இறுதியில் தன் உயிர்த் தோழனிடமே அதையும் மனதார கேட்டு வைத்தாள்.

சஞ்சய்யோ இதனைப் பற்றி தெளிவுறாமல் பெற்றவர்களிடம் சொல்லக் கூடாது என முடிவெடுத்தான்.

...


இங்கே நவீனைக் கண்ட ப்ரனீத்தா பதறிக் கொண்டு அவனிடம் போய் "கண்ணா என்னப்பா நடந்துச்சு..? போகும் போது ரெண்டு பேரும் ஒன்னாத்தான போனிங்க. இப்போ இவன் மட்டும் தனிய வந்திருக்கான். என்னாச்சுப்பா..?" என்றார் கலங்கிப் போய்.

"அம்மா ரிலேக்ஸ்..." என்றவன் சற்றுத் தயங்கி நடந்தவற்றை அப்படியே அவர்களிடம் ஒப்புவித்தான்.

"இதாம்மா நடந்துச்சு..." என உஷ்ன மூச்சை வெளியிட்டவனிடம் "இவ்வளவு நடந்திருக்கேப்பா. ஒன்னு கூட எ..எங்களுக்கு தெரியலயே..." என்றார் சோகத்தின் மொத்த உருவமாய்.

"ம்மா..ப்பா ரெண்டு பேருக்கும் சாரி. உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு இல்லம்மா. பட் அவன் தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டான்.." என்றவன் ப்ரனீத்தாவை பாவமாக பார்த்து வைத்தான்.

"டேய் பையா. நீ சொல்றது அந்த எஸ்.டி குருப்ஸ் ஒஃப் கம்பனி ஓனர் பொண்ணு சத்ய ஸ்ரீயையா...?" என்றார் தாடியை தடவிக் கொண்டே

"ஆமாப்பா அவ தான்.." என்றதும் அவனைப் பார்த்து நகைத்த பெரியவர் "தெங்க் காட். டேய் கண்ணா..! அந்தப் பொண்ணு என் ஃப்ரெண்ட் தாமோதரன்னு சொல்லி இருக்கிறேன்ல? அவன் பொண்ணு தான். அவள தான் நம்ம ஆத்விக்கிற்கு பொண்ணு கேட்டிருந்தேன். நம்ம பையன் தான் வேண்டாம்னு சொல்லிட்டான்..." என்றார் சோகமாய்.

திடீரென நவீனிற்கு ஓர் எண்ணம் தோன்ற வாய் கொள்ளாப் புன்னகையுடன் "அப்பா நீங்க மேற்கொண்டு நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க. மீதிய நான் பார்த்துக்கிறேன்.." என்றான் துள்ளலுடன்.

ப்ரனீத்தாவோ "ஆனா கண்ணா..." என்றிழுக்க

"ம்மா ஆனாவும் இல்லை ஆவன்னாவும் இல்லை. நான் சொல்றத செய்ங்க. அவன சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு. இப்போ அந்த மாங்காவ நான் பார்த்துட்டு வரேன்..." என்றவன் கண்ணடித்து விட்டு மாடியேறி சென்று விட்டான்.

குழம்பியது என்னவோ ப்ரனீத்தாவும் சூர்யாவும் தான்.

மேலே வந்த நவீன் கண்ட காட்சியில் அப்படியே அதிர்ந்து அசையாது நின்று விட்டான்.

..

அவன் அசையாது நின்றதெல்லாம் ஓரிரு கணங்கள் தான். அதற்குள் கோபம் வரப் பெற்றவனாய் ஆத்விக்கின் அருகில் சென்றான்.

ஆத்விக்கின் அறையில் அனைத்துப் பொருட்களும் கீழே தரையில் நொருங்கிப் போய் கிடந்தன. தன் கோபத்தை கட்டுப்படுத்த வழியின்றி கைக்கு கிடைத்தவைகளை அடித்து நொறுக்கியிருந்தான் வேங்கையவன்.

அப்போது தான் நவீனும் அதனைக் கண்டிருந்தான். ஆம் ஆத்விக்கின் கையிலிருந்து சதை கிழிந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இப்போது கூட ஓர் கண்ணாடித் துண்டை கையில் வைத்து அழுத்திக் கொண்டிருக்கிறான். சுருக்கென கோபம் தலைக்கேற அவனை தன் பக்கம் திருப்பிய நவீன் விட்டிருந்தான் ஓர் அறை ஆத்விக்கின் கன்னத்தில்.

அவனோ அதிர்ந்து விழித்துப் பார்த்தவாறே இரத்தம் தோய்ந்த கையினால் கன்னத்தை தட விட, அவனது கையைத் தட்டி விட்ட நவீன் "பைத்தியமாடா நீ. முட்டாள் மாதிரி வேலை பார்த்து வச்சிருக்க. அறிவில்ல நான்சென்ஸ்..." என பொரிந்து தள்ள அவனை பரிதாபமாக விழித்து வைத்தான் ஆத்விக்.

"இதுக்காகத் தான் உன்னைய அவங்க பெத்து வளர்த்து வச்சிருக்காங்களா..? அவங்க இப்போ உன்னைய இந்த நிலைமைல பார்த்தா எவ்வளவு வொரி பண்ணுவாங்க.. ஏன்டா இப்படி..?" என்றவனுக்கும் நண்பன் கலங்குவது தாங்கமாட்டாது கண்கள் கலங்கின.

"கோவம் வந்தா இப்படித் தான் சைகோ மாதிரி பிகேவ் பண்ணுவியா.. இடியட்..." என்றவன் ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு ஆத்விக்கை இழுத்து அணைத்திருந்தான்.

"ஏன்டா நீயும் கஷ்டத்தை அனுபவிச்சுக்கிட்டு எங்களையும் கஷ்டப்படுத்துற.. " என்று அவனது முதுகை ஆதரவாக தடவி விட
"மச்சி அவ..அவ..." என குழந்தையாய் விழித்த ஆத்விக்கிடம்
"எவ..எவடா..? விட்டுத் தள்ளுடா அந்தப் பேச்சை. அவ தான் உன்னைய விட்டுட்டுப் போய்ட்டாள்ல. பின்ன ஏன்டா நீ அவளையே நெனச்சிட்டு இருக்கிற...?" என்றான் அவனை தன்னணைப்பிலிருந்து விடுவித்து விட்டு ஓரக்கண்ணால் அவனை அளந்த படி.

ஆத்விக்கின் முக சாயலில் நவீனும் மலர்ந்தான்.
"எப்படியிருந்தாலும் அவள் என்னவள்.." என்ற கர்வத்தின் சாயல் அது.

பின் அப்படியே அவனை கூட்டிச் சென்று கட்டிலில் அமர வைத்த நவீன், அவனது காயத்தை ஆராய்ந்தான். ஆழமான வெட்டுக் காயம் அது. அவனை வெறியுடன் முறைத்த நவீன் காயங்களுக்கு மருந்திட "ஸ்ஸ்ஸ்..." என ஆத்விக் முகம் சுருக்கினான். அதனை கணக்கில் எடுக்காதவன் போல நவீனும் காயத்திற்கு மருந்திட்டு முடிந்த பின்னர் அவனது கன்னத்தை ஆராய, அதில் நவீனின் கைத்தடம் பதிந்து போய் இருந்தது.அதனைப் பார்க்க அவனுக்குமே பாவமாகிப் போய் விட்டது. அன்று ஆத்விக் கூறும் போது வருண் என்ற பெயரை கவனித்திருந்தாள் இவனுக்கு இந்த நிலை வந்திருக்குமா என்று கலங்கவும் செய்தான்.

பின் எழுந்து வாஷ் ரூம் சென்று வந்தவனின் கையில் வீற்றிருந்ததோ ஈரத் துணி. அதனால் ஆத்விக்கின் கன்னத்தில் படிந்திருந்த இரத்தக் கறையை சுத்தம் செய்ய ஆத்விக்கிற்கோ இன்னும் கண்கள் கலங்கின. இப்படியொரு நண்பன் கிடைக்க தான் கொடுத்து வச்சிருக்க வேண்டுமென்றே தோன்றியது அவனுக்கு.

"இரு வரேன்.." என எழுந்து சென்ற நவீன், சிறிது நேரத்தில் சாப்பாட்டுத் தட்டுடன் மீண்டும் உள்ளே நுழைந்திருந்தான்.

ஆத்விக்கின் அருகில் அவன் கொண்டு செல்ல, அவனும் கை நீட்டி வாங்கப் போக "நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நானே ஊட்டி விடுறேன்..." என்றவன் காயத்தை அழுத்தமாக பார்த்து வைத்தான்.

"தேங்ஸ்டா மச்சி...என்ட் சாரிடா.." என்றவனுக்கு என்ன பேசுவதென புரியவில்லை.

அவன் முகம் சுணங்குவது தாங்கமாட்டாது "வாய மூடிட்டு சாப்பிட்டு..." என்றவனிடம் "வாய மூடிட்டு எப்படிடா சாப்பிடுறது.." என்றான் ஆத்விக் அப்பாவியாய்.

அவனை மூக்கு விடைக்க முறைத்த நவீன் "உனக்கு வாய்க் கொழுப்பு கூட.." என்றவன் பின்னர் நமட்டுச் சிரிப்புடன் "ஆனால் மச்சான். அன்னைக்கு சும்மா தான் சொன்னேன், ஒரு நாளைக்கு என் கையால இருக்கு..வசமா மாட்டுவேனு.. ஆனால் இப்படி மாட்டுவேனு எதிர்பார்க்கல மச்சி. என்னா ஒரு பன்ச்...." என்றவன் வாய் விட்டே சிரித்தான்.

அவனிடம் எதிர்த்து மல்லுக்கு நிற்காமல் அவனைப் பார்த்து புன்னையுடனே இருந்தான் ஆத்விக்.

அப்படியே அவனருகில் நவீன் இருந்து கொள்ள, யோசனையின் பிடியில் இருந்த ஆத்விக்கும் சற்று நேரத்தில் உறங்கி விட்டான். அவனுக்கு போர்வையை போர்த்தி விட்டு நவீன் தனதறைக்குள் தஞ்சமடைந்தான்.

இவை அனைத்தையும் சூர்யாவும் ப்ரனீத்தாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். நவீனை நினைக்கையில் அவர்களுக்கு அத்தனை சந்தோஷம்..

தொடரும்...

தீரா.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Super, Intha Naveen aetho naradhar velai parkka poran pola
 

Durka Janani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 23, 2022
Messages
60
Naveen Mari oru friend kidiakanum ellarukum
 
Top