• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
நவீன் காரோட்ட அருகில் மௌனமாக வந்து கொண்டிருந்தான் ஆத்விக். அவனது மனதிலே வலிகளின் சாயல். கண்ணோரம் கசிந்த கண்ணீரைக் கூட துடைக்க மறந்தவனாக பாதையை வெறித்தான். அவனுள் கடந்த கால நினைவுகள் வந்து இம்சித்துக் கொண்டிருந்தன. நவீனிற்கும் அதே மனநிலையே.

நவீன், சடுன் ப்ரேக் போட்டு காரை வீட்டின் முன் நிறுத்த அதில் கலைந்த ஆத்விக் அவனைப் புரியாமல் பார்த்து வைக்க, அவனது தோளைத் தொட்டு வீட்டைக் கண்காட்ட பேசாமல் முகத்தை துடைத்து விட்டு இறங்கிச் சென்றான்.

இவர்களுக்காக சூர்யாவும் ப்ரனீத்தாவும் காத்துக் கொண்டிருக்க உள்ளே நுழைந்த ஆத்விக்கிற்கு இவர்கள் கருத்திற் படவில்லை. அப்படியே படியேறி சென்று விட்டான்.

தாய், தந்தை புரியாமல் நவீனைப் பார்க்க, அவனும் பெருமூச்சுடன் நடந்தவற்றை அவர்களிடம் ஒப்புவித்தான். அதன் பின் அவனோ, சத்யாவின் வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பித்து வைக்குமாறு கூற, அவர்களும் சம்மதமாக தலையை ஆட்டி வைத்தனர்.

தனதறையில் பால்கனியில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ஆத்விக். அவனது மனமோ ஊமையாக கதறியழுதது.

"தப்புப் பண்ணிட்டேன் ஸ்ரீ. சாரிடி.. என் மேல தான் எல்லாத் தப்பும். அப்போவே நீ சொல்ல வந்தத கேட்டிருக்கனும். உன்னை நம்பாம விட்டப் பாவி தான் நான்" என்றவன் தாங்கிக் கொள்ள முடியாமல் தலையை கைகளால் தாங்கிக் கொண்டு அங்கேயிருந்த ஊஞ்சலில் அமர்ந்து விட்டான். தான் ஒரு ஆண்மகன் என்றும் பாராமல் கண்ணீர் விட்டான்.

"காதல்ல நம்பிக்கை ரொம்ப முக்கியம்ல. ஆனால் நான் உன்னை நம்பலயே கண்ணம்மா. அ..அப்போ என் காதல் பொ..பொய்யா..?" என திகைத்தவன் பின் தலையை இடம் வலம் ஆட்டியவாறு "நோ..நோ ஐ ஸ்டில் லவ் யூ சோ மச்.. என் காதல் உண்மை. ஆனால்.. ஆனால் அத நானே பொய்யாக்கிட்டேன். ப்ளீஸ்டி என்னை மன்னிச்சிரு. என் கிட்ட வந்துரு கண்ணம்மா. உன்னைய ரொம்ப அழ வச்சிட்டேன்ல..சாரி" என்று முகத்தை மூடி அழுதவனுக்கு திடீரென ஓர் எண்ணம்..

"நா..நான் இதை எப்படி மறந்தேன்? பொய் பேசினா உனக்கு திக்கும்ல.. அ..அன்னைக்கு தெளிவா தானே பேசின. அப்போ எல்லாம் உண்மைல. நான் மட்டுந்தான் பொய்ல..?" பற்களை நறநறுத்தவனாக ஓங்கி அருகில் சுவரில் குத்த, கை சதை கிழிந்து இரத்தம் கசிந்தது.

"அன்னைக்கு ட்ராஃபிக்ல வச்சு பார்க்கும் போது உன் முகத்துல சந்தோஷம் இல்லையே. அப்போ இன்னைக்கு வரை என்னைய நினைச்சு கஷ்டப்பட்டுட்டு இருக்கியா? என் உயிரை நானே வதைச்சிட்டன்ல.. ஐ எம் அ டெவில் கண்ணம்மா. சாரி" என்றவன் ஓங்கி திரும்பத் திரும்ப குத்த அப்போது தான் அங்கே வந்தான் நவீன்.

வந்தவன் இவன் செய்து கொண்டிருக்கும் காரியத்தில் திகைத்துப் போய் பின் ஓடிச் சென்று அவனைத் தடுக்கத் தடுக்க அவன் மூர்க்கத்தனமாக இன்னும் தன்னுள் இறுகிப் போனான்.

தன் பலம் கொண்ட மட்டும் அவனை இழுத்த வேகத்தில் ஆத்விக் விழப் போய் அடுத்த பக்க சுவரில் சமநிலைப் படுத்திக் கொண்டு நின்று விட்டான்.

அவனது சேர்ட் காலரை கொத்தாகப் பற்றிய நவீன் "இடியட்..இடியட்.. இப்படித் தான் நடந்துப்பியா. இன்னும் கொஞ்சம் விட்டிருந்திக்க செத்திருப்படா ஃபூல்..சிட்" என அவனை உதறித் தள்ளினான் ஆத்திரம் தாளாமல்.

ஆத்விக் அசையாமல் நின்றிருந்தான். அவனுள் இன்னும் தன் மேலே கோபம் எஞ்சியிருந்தது. அப்படியே அறையினுள் நுழைந்தவனை வெறியுடன் வெறித்தான் நவீன். பின் அவனும் அவன் பின்னே சென்று பார்க்க அங்கே ஆத்விக்கை அந்த நிலையில் பார்த்த நவீனிற்குமே கண்கள் சட்டென கலங்கி விட்டன.

இத்தனை நாட்களும் தன்னவளின் ஞாபகார்த்தமாக வைத்திருந்த ஃப்ரேமை எடுத்து இரத்தத்துடனான கையினால் தடவி விட அவனது கண்ணீர் அதில் பட்டுத் தெறித்தது.

இத்தனை நாட்களும் திடமாகத் திரிந்த தன் நண்பன் இன்று உடைந்தழுவதை பார்க்க சகிக்கவில்லை நவீனால்.

அவளது அழகிய வதனத்தை தடவி கொடுத்தவன் அப்படியே தன் உதட்டில் ஒற்றி எடுத்தான். அந்த புகைப்படத்தில் இருப்பவளுக்கும் அன்று அவன் கண்டவளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன. சற்று என்ன நன்றாகவே மெலிந்திருந்திருந்தாள். முகத்தில் அத்தனை சோகம். சஞ்சய்யுடன் சிரித்துப் பேசினாலும் மனதில் ரணங்களுடன் இத்தனை வருடங்களை கடந்து வந்தவள். அதன் வெளிப்பாடு அவளில் இருக்கத் தானே செய்தது.

நவீன் தோளைத் தொட அவனை பரிதாபமாக பார்த்தவன் "நான் அவ கிட்ட சாரி கேட்கக் கூட தகுதியில்லாதவன்ல..? அன்னைக்கு அவ்வளவு ஹார்ஸா நான் நடந்துக்க காரணம் அவள் என்னை விட்டு தூரமாகிட்டான்ற கோவம் தான் மச்சான். ஆனால் ஆனால் இன்னைக்கு வலிக்குதேடா எனக்கு.." என்றவன் தன் நெஞ்சை சுட்டிக் காட்ட "மச்சி டேய்.." என்றான் நவீன். அவனுக்கும் இவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்றிருந்தது. அவர்களின் தப்பல்லவா அனைத்தும்.

"தாங்க முடிலடா.. இ..இப்படித் தானடா என் ஸ்ரீக்கும் வலிச்சிருக்கும். செய்யாத தப்புக்கு ஃபைவ் இயர்ஸா அவளுக்கு தண்டனைய கொடுத்திருக்கிறேன்ல..?" அப்படியே மடிந்து கட்டிலில் சாய்ந்தான். நவீனிற்கும் வலித்தது.

அப்படியே கண்ணீருடன் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது எனத் தோன்ற அவனது காயத்திற்கு மருந்திட்டு அவனை ஒழுங்காக தூங்க வைத்தவன் மன வேதனையுடன் வெளியேறி இருந்தான்.

"ப்ளீஸ் ஆத்விக் இப்படிலாம் பேசாத..வலிக்குது..."

"போதும் நிறுத்து. இதுக்கு மேல என்னைய சாவடிக்காத. நான் அவன அண்ணனா தான் நெனச்சுப் பழகினேன்.. உன்னைய தான் நான் லவ் பண்ணுறேன். உன்க்கிட்ட எப்படியெல்லாம் என் லவ்வ சொல்லனும்னு நெனச்சு வச்சிருந்தேன். ச்சே இப்படி ஒரு நிலைமைல சொல்ல வச்சிட்டியே.."

நாலாபக்கமும் அவளது குரல் ஒலிக்க திடுக்கிட்டு எழுந்து கொண்டான் ஆத்விக். முகத்தை அழுந்த துடைத்து விட்டவனுக்கு சத்ய ஸ்ரீயை பார்க்க வேண்டும் போல் இருந்தது. பின் ஏதோ முடிவெடுத்தவனாய் உறங்கி விட்டான்.

...


காலையில் எழுந்து வந்த நவீன் "குட் மார்னிங் மா. ஆத்விக் எங்கே. ஜாக்கிங் போய்ட்டானா..?" என்றவனிடம் "இல்லப்பா இன்னும் அவன் கீழேயே வரல.." என்றவருக்கு மகனின் மனநிலை புரியாமல் இல்லை.

"சரி நான் பார்க்குறேன்.." என்றவன் மேலே சென்றான்.

அங்கே ஆத்விக் எழுந்து குளித்து விட்டு மீண்டும் சோஃபாவில் தலை சாய்த்து கண் மூடி இருந்தான். நவீன் வந்ததை அவன் உணர்ந்தாலும் அசையாமல் இருந்தான்.

உள்ளே வந்த ப்ரனீத்தா வாடிப் போய் இருக்கும் தன் மகனைப் பார்த்து கலங்கினார். அவனருகில் வந்தமர்ந்து அவனது தலையை தடவி விட, தாயென்றதும் அப்படியே அவர் மடியில் தலை வைத்துக் கொண்டான். அதில் ப்ரனீத்தாவிற்கு தான் அழுகை முந்திக் கொண்டு வந்தது. ஒரு வருடத்தின் பின் தன் உணர்வுகளை வெளிக்காட்டும் தன் பிள்ளையின் நிலையில் துடித்துப் போனார்.

தலையை கோதி விட்டுக் கொண்டிருந்த தாயிடம் "மாம் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.." என்றான் பீடிகையாய்.

"எனக்கு எல்லாம் தெரியும்பா. நீ எதையும் பத்தி யோசிக்காத கண்ணா.." என்றார்.

நவீன் அனைத்தையும் கூறியிருப்பான் என்று சரியாக ஊகித்தவன் எழுந்தமர்ந்தான்.

"மாம் அவளும் உங்கள மாதிரி தான். எ..எனக்கு அவள பார்க்கனும்மா. ரொம்ப தப்புப் பண்ணிட்டேன். நான் அவ கிட்ட மன்னிப்பு கேட்கனும்மா. என்னை மன்னிப்பால்ல..?" என்றவன் தாயைக் கட்டிக் கொண்டான்.

தன் குழந்தை கலங்குவது தாங்கமாட்டாது அவனுக்கு மெதுவாக ஆறுதல் கூறினார்.

அப்போது தான் உள்ளே வந்த சூர்யா "நாளைக்கு நம்ம பொண்ணு வீட்டுக்கு போகனும்.." என்றார்.

அதிர்ந்து விழித்த ஆத்விக் பின்னர் "ஓஓ நவீன்க்கா..?" என்றான்.

அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் முறைத்து வைத்த நவீன் "ஓஓ அப்படியாப்பா. அப்போ ஓகே. நாளைக்குப் போய் பேசி முடிச்சிட்டு வாங்க.." என்றான் ஓர் தோள் குலுக்கலுடன்.

தன் கவலையை ஓர் புறம் தள்ளி வைத்த ஆத்விக் "கங்ராட்ஸ் மச்சான்.." என்றதில் "ஓஓ காட். பொண்ணு எனக்கில்லடா சொங்கி. உனக்குத் தான்.." என்று குண்டைத் தூக்கி அவன் மண்டையில் போட வெகுண்டெழுந்து விட்டான் ஆத்விக்.

"வட். ஆ யூ ஃபூல்..? யார கேட்டு இதெல்லாம் முடிவு பண்ணுனிங்க..?" என்றவன் எழுந்து கொள்ள, இனியும் அங்கே ப்ரனீத்தாவும் சூர்யாவும் இருப்பார்களா என்ன? இருவரும் சத்தம் வராமல் எழுந்து செல்ல அவர்களை ஒரு மாதிரி பார்த்து வைத்த ஆத்விக் "என்னடா இவங்க..?" என பற்களை நறநறுத்தான்.

பின் இவனை முறைக்க, "மச்சி ஏன் என்னைய இவ்ளோ பாசமா பார்க்குற..? ஃபீலிங் ஷைடா.." என்றவன் அவனது கை முஷ்டி மடங்குவதில் "சரி சரி டென்ஷன் ஆகாத. பொண்ணு ஃபோடோ காட்டவா?" என்று கண்ணடித்து வினவியவனை, அடிக்க கையை ஓங்கியவனின் கை அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது நவீன் காட்டிய புகைப்படத்தால்.

ஆம், அது ஆத்விக், நவீன் மற்றும் சத்ய ஸ்ரீ காலேஜில் எடுத்துக் கொண்ட புகைப்படம். அவளை பார்த்ததும் மீண்டும் ஆஃப் ஆகி விட்டான் ஆடவன்.

நிலைமையை மாற்றும் பொருட்டு தங்களது திட்டத்தை அவனுக்கு தெரியப்படுத்த,
"மச்சி எப்டிடா அவள கம்பல் பண்ணுறது..? இதனால மறுபடியும் என்னைய வெறுப்பாள்ல..?" என்றான் உதட்டைப் பிதுக்கி.

"டேய் இப்போ மட்டும் இல்லை. எப்போவும் நம்மல மன்னிக்கவும் மாட்டா, நாம செஞ்சத மறக்கவும் மாட்டாள். பட் என்ன செய்றது? உன் லய்ஃபும் அவ லய்ஃபும் நல்லா இருக்கனும்னா, இது தான் வழி.." என்றவாறு கையை விரித்தான்.

இப்போது ஆத்விக், ஏதோ அவள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தான்.


தொடரும்...


தீரா.
 
Top