• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
ஆங்காங்கே சின்னஞ் சிறு குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருக்க அங்கே, மஞ்சள் நிற சுடிதார் அணிந்து துப்பட்டாவை வலப்பக்கம் போட்டுக் கொண்டு குழந்தை முக அழகுடன் ஒரு மாது துள்ளிக் கொண்டிருந்தாள். அவளோ தன் அழகில் கொஞ்சமும் கர்வமும் திமிருமில்லாமல் ஏனோதானோவென அந்த பிள்ளைகளுடன் பந்தடித்துக் கொண்டிருந்தாள்.
அவள் அனிதா.

அதுவோர் பக்கம் அரங்கேற, இங்கே சஞ்சய்யும் ஆத்விக்கும் வெவ்வேறு மனநிலையுடன் பொடி நடையாக அனிதா இருந்த எதிர்ப்பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

யோசனையில் வந்த சஞ்சய் சட்டென யார் மீதோ மோத திடுக்கிட்டு திரும்பியது என்னவோ அனிதா தான்.

"சா..சாரி..சாரி சார். தெரியாம இடிச்சிட்டேன்.." என்று கூறியவள் பின் தான் விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.

இந்தப் பக்கம் அதிர்ந்தது என்னவோ சஞ்சய் தான். தவறு அவனிடமிருக்க அவள் மன்னிப்புக் கேட்டதில் ஏதோ போல் இருந்தது அவனுக்கு. அவளது குரலும் மென்மையும் அந்த திடகாத்திரமான ஆண்மகனை அசைத்துப் பார்த்தது. அவளை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் ஆத்விக் வந்து தோளைத் தொட்ட பின்னரே சுயத்தையடைந்திருந்தான்.

தன் தலையிலே மானசீகமாக தட்டிக் கொண்ட சஞ்சய் ஆத்விக்கின் புறம் திரும்பி புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க
"நத்திங் மச்சான்" என்றான் ஆத்விக் நமட்டுச் சிரிப்புடன்.

சஞ்சய்யோ "மொதல்ல மச்சான்னு கூப்புடுறத நிறுத்துங்க. யாருக்கு யாரு மச்சான்..?" என்றான் எரிச்சலாய்.

அவனது பேச்சு, கோபத்திற்கு பதிலாக ஆத்விக்கிற்கு சிரிப்பையே தந்தது. "என்னை மச்சானா ஏத்துக்க தயாரில்லாத நீங்க இந்நேரம் இங்க இருந்திருக்க மாட்டிங்க.." என்றான் அர்த்தமாய். உண்மை தானே. தங்கையின் வாழ்க்கையில் மீண்டும் உயிர்ப்பைக் கொண்டு வரவே இதோ ஆத்விக் அழைத்தான் என இங்கே வந்திருக்கிறான்.

எதுவும் பேசாமல் முகத்தை திருப்பியவனிடம் "இருந்தாலும் உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மச்சான்.." என்ற ஆத்விக்கின் பேச்சில் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்ட சஞ்சய் "ஏனாம்?" என்றான் வேண்டா வெறுப்பாய்.

"ஏன்னா என் மேல எவ்வளவு தான் கோபமா இருந்தாலும் மரியாதை தந்து பேசுறீங்க பாருங்க" என்றவனிடம் ஏதோ சொல்ல சஞ்சய் வாயெடுப்பதற்குள் அனிதா அடித்த பந்து வந்து ஆத்விக்கின் காலில் பட்டது.

"இடியட்.." என திரும்பியவனைப் பார்த்து தலையில் கைவைத்து நின்றாள் அனிதா.

சஞ்சய்யோ அதனை கவனிக்காமல் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு "லிசின் ஆத்விக் தெரிஞ்சோ தெரியாமலோ என் குட்டிமா உங்கள லவ் பண்ணிட்டா.." என்று கூற வந்ததை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அனிதாவிற்கு இவர்கள் இருவரும் இப்போது பந்து வந்து மோதியதால் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர் என லாஜிக் இல்லாமல் நினைத்துக் கொண்டு ஓடி வந்தவள் ஆத்விக்கைப் பார்த்து "சாரி.." என்றதுமல்லாமல் சஞ்சய்யிடம் "சார் அவர் மேல எந்தத் தப்பும் இல்லை. நான் தான் தெரியாம அவர் மேல பந்தை வீசிட்டேன்" என்று முகத்தைச் சுருக்கியவளை ஆத்விக் "லூசா" என்ற ரீதியில் பார்த்து வைக்க, சஞ்சய்யோ அருகில் கிடைத்த அவளது முக தரிசரத்தில் சித்தம் தொலைத்து நின்றிருந்தான்.

அனிதா இருவருக்கும் நடுவில் நின்றிருக்க ஆத்விக்கோ அவளை விடுத்து சஞ்சய்யின் தோளைத் தொடப் போக, அவளோ அவனை அடித்து மிரட்ட கையை ஓங்குகிறான் என நினைத்து ஆத்விக்கின் கையை சட்டென தட்டி விட்டதுமல்லாமல் "சார்..அது தான் சாரி கேட்டேன்ல.." என்றாள்.

சம்பந்தமில்லாமல் பேசுபவளின் பேச்சில் கடுப்பான ஆத்விக் "ஹேய் போமா அங்குட்டு கடுப்படிக்காம.." என தலையிலடித்துக் கொண்டான்.

"இல்லை சார் நான் போக மாட்டேன். நான் போன பிறகு எனக்காக வாதாடுற இந்த அப்பாவி மனுஷன அடிக்கவா..?" என்ற அனிதாவை உண்மையாகவே பைத்தியம் என்றே நினைத்துக் கொண்டான் ஆத்விக்.

பின் குழம்பியவனாய் "எதே அப்பாவி மனுஷனா.. எவன்டா அவன்..?" என சுற்றும் முற்றும் தேடியவனிடம் "இதோ இவரு தான்.." என்று சஞ்சய்யைக் காட்டினாள் அவள்.

"இவனா..?" என்று அவளை ஒருமார்க்கமாக பார்த்த ஆத்விக் எட்டி அவனைப் பார்க்க அவனோ தன்னைப் பார்த்து சிரித்தவளுக்கு தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டிக் கொண்டிருந்தான்.

"இவன் என்ன டுத் பேஸ்ட் விளம்பரத்துக்கு வந்த மாதிரி பல்ல காட்டிட்டு நிற்கிறான். ஒருவேளை இவனும் லூசாகிட்டானோ..?" என மனதில் நினைத்தவன் "ஏய் சஞ்சய்" என்று உலுக்கினான். அதில் கலைந்தவனுக்கு அப்போது தான் தன்னிலை உறைத்தது. ஸ்லோமோஷனில் திரும்பி ஆத்விக்கைப் பார்க்க அவனோ இவனை முறைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அசட்டு சிரிப்பொன்றை தந்த சஞ்சய் பின் கப்பென வாயை மூடிக் கொண்டான். அதில் தலையில் அடித்துக் கொண்டான் ஆத்விக்.

அனிதாவின் பக்கம் திரும்பிய சஞ்சய் "நீங்க போங்க. நாங்க ரிலேஷன் தான். நோ ப்ராப்ளம்.." என்று அவளை அனுப்பி வைத்தான். இப்போது இளிப்பது ஆத்விக்கின் முறையாகியது.

"சஞ்சய் வட் டிட் யூ சே நவ்.. ஆர் வி ரிலேஷன்ஸ்..?" எனக் கேட்டு வைத்த ஆத்விக்கை மேலிருந்து கீழ் வரை பார்த்த சஞ்சய் "அது தான் சொன்னேனே. என் குட்டிமா தெரிஞ்சோ தெரியாமலோ உங்களை லவ் பண்ணிட்டாள். எப்படியும் உங்கள மனசுல வச்சுக்கிட்டு வேற பையன கட்டிக்கவும் மாட்டா. அதுக்காக உங்களையும் மெரி பண்ணிக்க ஒத்துக்க மாட்டாள்." என்றான் சலிப்பாய்.

தங்கையுடனான சஞ்சய்யின் ஆழமான புரிதலில் ஆத்விக் சிரித்து விட்டு பின் தங்களது திட்டத்தை அவனிடம் கூற, சஞ்சய்யோ சிறிது நேரம் யோசித்து விட்டு "பட் வன் கன்டிஷன். வீ கான்ட் ஃபோர்ஸ் கேர்.." என்றான்.

"அவ எப்படியும் ஒத்துக்குவா சஞ்சய்.." என்றான் ஆத்விக்.

"எப்படி?" என்று வினவிய சஞ்சய்யின் தோளில் கையைப் போட்டுக் கொண்டே "ஈசி...ஈசி மச்சான். என் மேல இருக்கிற கோவத்துல என்னை வெறுக்கோனும் என்றதுக்கா சரி இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாள். அதே மாதிரி நான் தான் மாப்பிள்ளைனு தெரிஞ்சாலும் என்னை மறுபடியும் விட்டுக் கொடுக்க கூடாதுனும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவா. எப்படிப் போனாலும் ஐயாக்கு ஹேப்பி தான்" என காலரை தூக்கி விட்டவனை ஒரு மாதிரி பார்த்து வைத்த சஞ்சய் "மாஸ்டர் ப்ளேனு" என்றான்.

"யா..யா.." என்றவன் மீண்டும் சஞ்சய் தட்டி விட்ட கையை தூக்கி அவனது தோளில் போட்டு விட்டு "இந்த சைக்கிள் கேப்ல அவளை நான் கரேக்ட் பண்ணப் போறேன். அதுக்கு உங்க ஹெல்ப் வேணும் மச்சானே..." என கண்ணடித்தவனின் கண்ணை நோன்டி விட்டால் என்ன என்று கூட சஞ்சய்க்குத் தோன்றியது.

"ஏன்டா டேய்.. நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையாடா..? சும்மாவே நான் என்னமோ அவளுக்கு எதிரி மாதிரி தான் வச்சு தலையில கொட்டுவா. இதுல உனக்கு வேற ஹெல் பண்ணுறனே தெரிஞ்சிச்சு சங்க கடிச்சு சாவடிச்சிருவா..." என்று அலறியவனின் இந்த உரிமையான பேச்சு ஆத்விக்கிற்கு பிடித்துப் போனது. அவனின் நிலையைக் கேட்டு அவன் வாய்விட்டு சிரிக்க சஞ்சய்யோ உர்ரென இருந்தான்.

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன் "எனக்காக தானே மச்சி. ஒத்துக்கொள்ளுங்க.." என்றான்.

சஞ்சய்யிற்கும் புரிந்தது ஆத்விக்கின் நிலை. அன்று அவன் இருந்த நிலைமையில் உண்மையை ஆராயாமல் அரைகுறையாக கேட்டு விட்டு அனைத்தையும் நம்பி விட்டான் என. அதற்கு முக்கிய காரணம் அவள் மேலிருந்த அளவுகடந்த காதல் தான் என்பதை இன்றைய ஆத்விக்கின் பேச்சில் கண்டு கொண்டான் சஞ்சய். அதனாலே அவனது திட்டத்திற்கு ஒத்துக்கொண்டான்.

அப்படியே இருவரும் பார்க்கை விட்டு வெளியேறப் போக சஞ்சய் அனிச்சையாக திரும்பி அனிதாவைத் தேடினான். அவனை ஓரக்கண்ணால் கவனித்தபடி வந்து கொண்டிருந்த ஆத்விக் மெல்ல உதட்டை விரித்து விட்டு முன்னே நடந்தான்.


தொடரும்...


தீரா.
 
Top