• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - அத்தியாயம் 23

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
110
"சொல்லுங்க... என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க?" என அழுத்தமான குரலில் கேட்டாள் அனுபல்லவி.

அதில் தன்னிலை அடைந்த பிரணவ் ஆகாஷிற்கு கண் ஜாடை காட்ட, அதனைப் புரிந்து கொண்ட ஆகாஷ், "உங்க கம்பனி புதுசா ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறதா கேள்விப்பட்டோம்... எங்க எம்.எல். கான்ஸ்ட்ரக்ஷன்ஸ் கூட இந்தியால ஃபேமஸ் என்ட் டாப் ஃபைவ்ல இருக்கு... உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்... இது எங்க எம்.டி பிரணவ் ராஜ்... இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பனிக்கு கிடைச்சா அதை பெஸ்ட்டா பண்ணி கொடுக்க முடியும்னு நினைக்கிறோம்... இந்தப் பாட்னர்ஷிப்னால எங்க கம்பனியும் அடுத்த கட்டத்துக்கு போக முடியும்..." என விளக்கினான்.

ஆகாஷ் பேசிக் கொண்டிருக்க, பிரணவ்வின் பார்வையோ அனுபல்லவியின் முகத்திலேயே நிலைத்து இருந்தது.

ஆனால் அனுபல்லவியோ அது தன்னைக் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை என்பது போல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

ஆகாஷ் விளக்கியதும் தன் இருக்கையில் கை கட்டி சாய்ந்து அமர்ந்து கொண்ட அனுபல்லவி, "ஹ்ம்ம்... பட் இந்த ப்ராஜெக்ட்டை யாருக்கு கொடுக்குறோமுங்குறதை வழமையை போலவே மீட்டிங் வெச்சி தானே முடிவு பண்ணுவோம்... அது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே... நெக்ஸ்ட் வீக் தானே அந்த மீட்டிங் இருக்கு... அப்படி இருக்கும் போது நீங்க இன்னைக்கே வந்து என்னை மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட உங்க கம்பனிக்கு கொடுக்க சொன்னா அது எந்த விதத்துல நியாயம்? நான் இதுக்கு சம்மதிப்பேன்னு நீங்க எப்படி எதிர்ப்பார்க்கலாம்?" என மிடுக்காகக் கேட்டாள்.

அனுபல்லவியின் குரலில் இருந்த அழுத்தமும் அவள் தனக்கே உரிய கம்பீரத்தில் பேசுவதும் ஆகாஷையே அடுத்த வார்த்தை பேசத் தயங்கச் செய்தது.

அர்ச்சனாவோ அனுபல்லவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கண்டு விட்டு இனிமேல் அவளால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என உற்சாகமாக காணப்பட்டாள்.

பிரணவ், "அது தானே சிறந்த பிஸ்னஸ் மேனுக்கு அழகு..." என இவ்வளவு நேரமும் இருந்த அமைதியைக் கலைத்து அதே மிடுக்குடன் கூற, ஒற்றைப் புருவம் உயர்த்தி அவனைக் கேள்வியாய் நோக்கினாள் அனுபல்லவி.

இப்போது அனுபல்லவியைப் போலவே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி சாய்ந்து அமர்ந்துகொண்ட பிரணவ், "நல்ல பிஸ்னஸ் மேனா இருக்க வெறும் அறிவு மட்டும் போதாதுன்னு நினைக்குறேன் மிஸ் பல்லவி... சாமர்த்தியமும் அவசியம்..." என்றான் இள நகையுடன்.

இருவரின் விழிகளுமே ஒரு நொடி நேருக்கு நேராய் சந்தித்தன‌.

அனுபல்லவியோ கண்களில் வெறுமையுடன் பிரணவ்வை நோக்க, பிரணவ்வோ அனுபல்லவியின் விழிகளில் எதையோ தேடி அது கிடைக்காது ஏமாந்து போனான்‌.

திடீரென கதவு திறக்கும் சத்தத்தில் இருவரும் தன்னிலை அடைந்து பார்வையை விலக்கினர்.

"அனு இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? அங்க..." என ஏதோ கூறிக் கொண்டு வந்த பிரதாப் அங்கு நின்ற மூவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

பிரணவ் அனுபல்லவியை இவ்வளவு உரிமையாக அழைக்கும் அந்த ஆடவனை யார் எனும் விதமாக நோக்க, ஆகாஷும் அர்ச்சனாவும் பிரதாப்பை அங்கு கண்டு அதிர்ந்தனர்.

அர்ச்சனா, 'அப்போ இவன் தான் அனு புருஷனா? அதான் இவனோட கான்டாக்டே கிடைக்கல போல...' என எண்ணினாள்.

ஆகாஷ் பிரதாப்பைக் கண்டு ஆத்திரத்தில் நின்றிருந்தான்.

பிரணவ் மூலம் பிரதாப் செய்த அனைத்து காரியங்களும் ஆகாஷும் அறிந்ததே.

பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா என மூவரும் வெவ்வேறு சிந்தனையில் பிரதாப்பின் மீது பார்வையைப் பதித்திருக்க, பிரதாப்போ அனுபல்லவியைக் கேள்வியாக நோக்கினான்.

தொண்டையைக் கனைத்து அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய அனுபல்லவி, "நீங்க சொன்ன விஷயத்தைப் பத்தி நான் கொஞ்சம் யோசிக்கணும்... இந்த ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்கணும்ங்குறத டிசைட் பண்ணிட்டு எதுவா இருந்தாலும் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுறோம்... இப்போ நீங்க கிளம்பலாம்..." என்றவள் அத்துடன் பேச்சு முடிந்ததாக அவ்விடம் விட்டுக் கிளம்பினாள்.

செல்லும் வழியில் குழப்பத்தில் நின்றிருந்த பிரதாப்பிடம், "நான் கார்ல வெய்ட் பண்ணுறேன்... சீக்கிரம் வந்து சேருங்க மாமா..." என்று விட்டு அனுபல்லவி வெளியேறி விட, அவள் பிரதாப்பை மாமா என் அழைத்தது காரணமே இல்லாமல் பிரணவ்வின் உள்ளத்தை வதைத்தது.

பிரணவ்வின் முன் பிரதாப்பை எதுவும் செய்ய முடியாத கோபத்தில் ஆகாஷ் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருக்க, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், "வாங்க ஆகாஷ் கிளம்பலாம்..." என்று ஆகாஷுடன் அங்கிருந்து வெளியேறினான் பிரணவ்.

அனைவரும் சென்றதும் தனியே நின்ற பிரதாப்பை நெருங்கிய அர்ச்சனா, "நீ தான் அனுவ கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என உற்சாகமாக் கேட்க, பிரதாப் ஆம் எனத் தலையசைக்கவும், "அன்னைக்கு அனுவ என் வழியில இருந்து தூக்குறேன்னு சொல்லிட்டு வெச்சிட்ட..‌. அப்புறம் கொஞ்சம் நாள்ல அனுவயும் காணோம்... உன்னயும் காணோம்... பார்த்தா நீயே அனுவ கல்யாணம் பண்ணிக்கிட்ட போல... எப்படியோ எனக்கு இருந்த பெரிய தலைவலி ஒழிஞ்சது... இனிமே பிரணவ்வ யாராலயும் என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது..." என்றாள் அர்ச்சனா கண்கள் மின்ன.

பிரதாப், "இன்னும் நீ அப்போ பிரணவ்வ கல்யாணம் பண்ணிக்கலயா?" எனக் குழப்பமாகக் கேட்டான்.

"அந்தக் கொடுமைய ஏன் கேட்குற? அனுவும் போய்ட்டா... பிரணவ்வுக்கும் பழசு எல்லாம் மறந்திடுச்சு... சரின்னு ஒரு நாடகத்த போட்டு அவன் அப்பா அம்மாவ கரெக்ட் பண்ணேன்... சீக்கிரமா அவன கல்யாணம் பண்ணி மொத்த சொத்தையும் அனுபவிக்கலாம்னு பார்த்தா இந்தப் பிரணவ் இழுத்துட்டே இருக்கான்... இந்தத் தடவ ஊருக்குப் போனதும் முதல் வேலையா கல்யாணத்த நடத்தணும்... ஆமா... இந்த அனு எப்படி இவ்வளவு பெரிய கம்பனிக்கு எம்.டி ஆனா?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

பிரதாப் ஏதோ கூற வர, அதற்குள் அனுபல்லவி அவனுக்கு அழைத்திருந்தான்.

அதனை எடுத்துப் பார்த்தவன், "நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன் அர்ச்சனா... இப்போ நான் அவசரமா போய் ஆகணும்..." என்ற பிரதாப் அர்ச்சனாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து சென்று விட்டான்.

பிரதாப் சென்றதும் தோளைக் குலுக்கிய அர்ச்சனா, "எப்படியோ இந்த அனு சேப்டர் க்ளோஸ்ட்... இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது பிரணவ்வுக்கு கிடைக்க விடாம பண்ணணும்... இல்லன்னா திரும்ப அந்த அனு எங்க லைஃப்ல இடைஞ்சலா வர சான்ஸ் இருக்கு... அதுக்கு பிரதாப் கிட்ட சொல்லி ஏதாவது பண்ணணும்..." எனத் தனக்கே கூறிக் கொண்டாள்.

கார் பின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்த அனுபல்லவி கார்க் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும் மெதுவாக விழி திறந்தாள்.

ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்த பிரதாப் அனுபல்லவியின் பக்கம் புன்னகையுடன் திரும்பி, "அனு நீ என்னை..." என ஏதோ கூற வர, அனுபல்லவி அவனை விழிகளாலேயே எரித்தாள்.

அதில் பிரதாப்பின் வாய் தன்னால் மூடிக்கொள்ள, எதுவும் பேசாது காரை இயக்கினான்.

பல வருடங்களாக தனக்குள் அடக்கி வைத்திருந்த மொத்த வலியும் பிரணவ்வை மீண்டும் கண்டதும் வெளியில் வரத் துடித்தன.

விழி மூடிப் சாய்ந்து இருந்தவளின் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தோட, நினைவுகளோ எங்கொங்கோ தறிகெட்டு ஓடின.

************************************

இங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த மூவரும் தம் அறையில் தஞ்சம் அடைந்தனர்.

பிரணவ் வந்ததுமே குளிக்கச் செல்வதாகக் கூறி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஷவரைத் திறந்து விட்டு அதன் கீழ் நின்றிருந்த பிரணவ்விற்கு ஏன் என்றே தெரியாமல் மனம் வாடியது.

பிரணவ், 'யார் அவ? இதுக்கு முன்னாடி நான் அவள பார்த்ததா கூட நினைவு இல்லயே... ஆனா ஏன் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் எனக்கு வலிக்கிறது?' என மனதில் தன்னையே கேட்டுக் கொண்டான்.

எவ்வளவு யோசித்தும் அனுபல்லவியைப் பற்றிய எந்த நினைவுமே அவனுக்கு எழவில்லை.

மாறாக தலைவலி வந்தது தான் மிச்சம்.

'ப்ச்... நான் தான் சும்மா கண்டதையும் யோசிக்கிறேன் போல... அவளுக்கும் எனக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லயே... எனக்கு அவள முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஆகாஷ் கண்டிப்பா சொல்லி இருப்பான்... ஷ்ஷ்... இனிமே எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது... வந்த வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புற வழிய பார்க்கணும்...' எனத் தன்னையே கடிந்து கொண்டான் பிரணவ்.

ஆகாஷோ பால்கனியில் நின்று சாருமதியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

"நிஜமா தான் மதி... அவ நம்ம அனுவே தான்... ஆனா மொத்தமா மாறிட்டா... என்னால நம்பவே முடியல... அவ கூட சரியா பேச கூட முடியல... முன்ன பின்ன தெரியாதவங்க போல எங்க கிட்ட நடந்துக்கிட்டா..." என ஆகாஷ் கூறவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த சாருமதி,

"ஏன் ஆகாஷ் அவ கூட பேசல? அவளுக்கு என்ன ஆச்சுன்னு கேட்க வேண்டியது தானே‌‌..." எனத் திட்டினாள்.

ஆகாஷ், "ப்ச் மதி... நான் என்ன வேணும்னா பேசல? அவ தான் என்னைப் பேசவே விடல... முன்னாடி இருந்த இனசன்ட் அனுபல்லவி இல்ல அவ... ஒரு மாதிரி... எனக்கு சொல்லத் தெரியல மதி..‌. நீயே அவள பார்த்தா ஷாக் ஆகுவ... அதுவும் இல்லாம அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... கழுத்துல தாலியோட இருந்தா..." என்கவும் ஏகத்துக்கும் அதிர்ந்தாள் சாருமதி.

சாருமதி, "எ...என்ன ஆகாஷ் சொல்றீங்க? அ...அப்போ பிரணவ் சார்?" என அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்.

"ஆமா மதி... அனுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... பாஸுக்கு தான் அனுவ சுத்தமா ஞாபகம் இல்லயே... இன்னைக்கு அனுவ பார்த்ததுக்கு அப்புறம் கூட அவர் கிட்ட எந்த ஒரு மாற்றமும் இருக்கல... அதான் அனுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சே... இனிமே பாஸுக்கு அனு பத்தி நினைவு வந்தா என்ன? வரலன்னா என்ன?" என்றான் ஆகாஷ் கசந்த புன்னகையுடன்.

சில நொடிகள் மௌனமாக இருந்த சாருமதி, "அனு யாரைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சிதா?" எனக் கேள்வியாய் நிறுத்த, "தெரியல... ஆனா அந்தப் பிரதாப் அவ கூட தான் இருந்தான்... அவனைத் தான் கல்யாணம் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்..." என்றான் கோபமாக ஆகாஷ்.

சாருமதி, "அந்தக் கேடு கெட்டவனையா அனு கல்யாணம் பண்ணி இருக்கா? அவளுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? நான் உடனே கிளம்பி ஹைதரபாத் வரேன்... அவள நேரா பார்த்து நல்லா நாலு கேட்கணும்... என்ன தைரியம் இருந்தா அவ பெஸ்ட் ஃப்ரெண்ட் என் கிட்ட கூட சொல்லாம இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருப்பா..." என ஆத்திரப்பட்டாள்.

ஆகாஷ், "வேணாம் மதி... அவ எங்க யாரு கூடவும் பேச விரும்பல... முதல்ல நான் எப்படியாவது அவ கூட பேசி எல்லாம் தெரிஞ்சிக்க பார்க்குறேன்... அப்புறம் நீ வா..." என்றவன் பிரணவ் வரும் அரவம் கேட்டு, "சரி மதி... பாஸ் வந்துட்டார்... நான் உன் கூட அப்புறம் பேசுறேன்... பாய்... லவ் யூ..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்தவனைத் தலையைத் துவட்டியபடி பிரணவ் கேள்வியாக நோக்க, "மதி கூட பேசிட்டு இருந்தேன் சார்..." எனப் பதிலளித்தான் ஆகாஷ்.

"ம்ம்ம்..." என்று விட்டு பிரணவ் தலையைத் துவட்ட, "பாஸ்... லஞ்ச் ஆர்டர் பண்ணட்டுமா?" எனக் கேட்டான் ஆகாஷ்.

மறுப்பாகத் தலையசைத்த பிரணவ், "வேணாம் ஆகாஷ்... நீங்க கீழ போய் சாப்பிட்டுட்டு வாங்க... எனக்கு எதுவும் வேணாம்... ஒரு டூ ஹவர்ஸ் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்... முக்கியமா யாரை சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்..." என்கவும் புரிந்ததாகத் தலையசைத்து விட்டு வெளியேறினான் ஆகாஷ்.

ஆகாஷ் சென்றதும் கட்டிலில் விழுந்த பிரணவ்விற்கு மீண்டும் அனுபல்லவியின் நினைவே எழ, தூக்க மாத்திரை ஒன்றைக் குடித்து விட்டு உறங்கினான்.
 
Top