• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அனைவரும் சென்று முடிய வெளியே சென்றிருந்த ஆதித்யா உள்ளே வர அவன் வரவிற்காக கீழே காத்திருந்தாள் ரதி.

அவனிடம் பேச அவளுக்குப் பயம்.. கைகளை பிசைந்து கொண்டிருந்தவளைத் தாண்டி செல்லப் போனவன் அவள் புறம் திரும்பி "ரதி என்ன சரி சொல்லனுமா...?" எனக் கேட்க தயக்கத்துடன் தலையாட்ட அவள் பக்கம் முற்றாய் திரும்பியவனைப் பார்த்து வந்த வார்த்தையும் அப்படியே வாயினுள் ஒட்டிக் கொண்டது..

கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தவன் மறுகையில் போட்டிருந்த வெள்ளி ப்ரேஸ்லெட்டை மணிக்கட்டு தாண்டி தூக்கி விட்டு கைகளை குறுக்காக கட்டி நின்றான்.

நிமிடங்கள் கடந்தாலும் அவளிடமிருந்து பதிலைத் தான் காணவில்லை.."ஐ ஹேவ் மெனி வேர்க்ஸ்..டெல் மீ சம்திங்..." அவன் என்னவோ சாதாரணமாகத் தான் சொன்னான்..

"அ...அ..சா..சார்.." என இழுத்தவளிடம்

"அண்ணானே கூப்பிடு..." என எடுத்துக் கொடுக்க இப்போது தான் புன்னகைத்தாள் அவள். அவனும் பதிலுக்கு இதழை விரிக்க

"தெ..தெங்ஸ் அண்ணா..." என்கவும் "ம்ம்..."மட்டுமே அவனிடம்.

"அத்தான் மேல கோபம் இருந்தது தான். இப்போவும் இருக்குத் தான். அதையும் மீறி இந்தக் கேள்வியும் என் மண்டைய கொடஞ்சிட்டே இருந்தது.. அதைத் தான்ணா நீங்க கேட்டிங்க.." என்கவும் அவளைத் தான் பார்த்து நின்றான்.

"என்ட் இன்னெரு தெங்க்ஸ்.. பிகோஸ் நான் வாங்க இருந்த அடில இருந்து காப்பாத்தி விட்டுடீங்க.." என சிரித்தவளைப் பார்த்து இப்போது அவன் நன்றாகவே சிரித்தான்.

இவனுக்கு இப்படியெல்லாம் சிரிக்கத் தெரியுமா என ஆச்சர்யமாக அவனை ரதி பார்த்துக் கொண்டிருக்க "என் தங்கச்சிட லைஃப் எனக்கு ரொம்ப முக்கியம். அவளுக்குத் தகுந்தவனா பார்த்து கல்யாணம் முடிச்சு வைக்க வேண்டியது என் கடமை.. அது என் ஃப்ரெண்டா இருந்தாலும் சரி... என்ட் லேட் ஆகிட்டு போய் தூங்கு..." என்றவன் இரண்டிரண்டாக படிகளைத் தாவி சென்று மறைந்தான்.

ஒரு வசனத்தில் தன் மீது அவன் வைத்துள்ள அக்கறையை காட்டிச் சென்றவனைப் பார்த்து மனதில் பெருமைபட்டுக் கொண்டாள் பெண்ணவள்.


...


குளித்து முடித்து வந்தவன் அறையினுள் பார்வையைச் செலுத்த எங்கும் அவனவள் இருக்கவில்லை..

"எங்க போய்ட்டா...?" என்றவாறு திரும்பியவனின் கண்ணில்பட்டாள் இவ்வளவு நேரமும் அவனின் தேடலுக்குரியவள்.

அவனுக்கு அவளின் பக்கவாட்டுத் தோற்றமே தெரிந்தது.

திருமணத்தன்று உடுத்தி இருந்த அதே அல்மண்ட் நிற பட்டுச் சேலையே அணிந்திருந்தாள்.

சிற்பமென பால்கனியிலிருந்த அந்த ஊஞ்சலில் காலைத் தூக்கி வைத்திருந்தவளை மெல்ல நெருங்கினான் காதலன்.

அவளவனின் வருகையை அவனின் பேர்ஃபியூம் வாசனையை வைத்தே கண்டுகொண்டாள் அவள்...

இருந்தும் திரும்பாமல் நின்றிருந்தாள்.

அவளை நெருங்கியவனுக்கு அங்கிருந்த ஏகாந்த நிலையில் ஓர் மோகம் வந்து ஒட்டிக் கொண்டது.

அவள் முன் வந்து அவன் நின்றவுடன் நிமிர்ந்து மட்டும் தான் பார்த்தாள். அவர்கள் பேசாத மொழிகளை அவர்களின் கண்கள் பேசிக் கொண்டன.

லேசாக இதழ் விரித்து சிரித்தவளை கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான் ஆதித்ய சக்கரவர்த்தி.

அப்படியே எழுந்தவள் பால்கனித் தடுப்பில் கைவைத்து நின்று கொள்ள இப்போது அவனின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

பின்னால் நின்றவாறே அவளை அணைத்தவனின் சூடான பரந்த உள்ளங்கை அவளின் வெற்றிடையில்...!!!

அங்கணம் வயிற்றை எக்கியவள் பின் இயல்பிற்கு திரும்பினாள். குனிந்து அவளின் கழுத்தடியில் வழமை போல மூக்கு நுனியால் வாசத்தை இழுந்தவன் ஆழ்ந்த முத்தமொன்றைப் பதித்திருந்தான். இப்போது அவளின் ஒரு கை அவனின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டது..

அப்படியே காதுக்குள் நாசியை நுழைத்தவன்.."வர்ஷூ யூ லுக் ஆசம்..." என இன்னொரு முத்தத்தை அவளின் கன்னத்தில் வைக்க ஆடவனின் மீசை குத்தியதில் அவளுக்கு உடல் கூச்சத்தில் சிலிர்த்தது..

கன்னக் கதப்புகள் சிவந்து தன் முன் நின்றவளைப் பார்க்க பார்க்க தெகிட்டவில்லை வேங்கைக்கு.

சட்டென அவளைத் திருப்பியவன் தன்னை வேறோடு சாய்த்த அந்த காந்த விழிகளில் இதழ் பதித்து "ஐ லவ் யூ வர்ஷூ..." என்றதும் பட்டாம்பூச்சி பறந்தது அவளது மனதில்.. ஏதோ ஓர் மாயை..!!
இத்தனை நாட்களும் இதற்காகத்தானே ஏங்கிக் கொண்டிருந்தாள். விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் விழிநீர் கோர்த்திருந்தது..

மோகக் கயிறு அவிழ பதறி அவளை விடுவித்தவன் கன்னம் தாங்கி "வர்ஷூ என்னடா..?" எனக்கேட்க அப்போதும் அதே சாயல் அவளிடம் வெளிப்பட்டது..!!

தோளைப் பிடித்து ஊஞ்சலில் அமர்த்தியவனை பாரத்திருந்தவள் அவன் நெஞ்சில் தலை வைத்தாள்.

மெதுவாக தலையை தடவி விட்டவனுக்கு அவள் குழப்பதில் இருக்கிறாள் என்பது புரிந்து போனது.

அப்படியே தன் குழந்தையாக அவளைத் தாங்கியவன் கன்னத்தை பெரு விரலால் தடவி விட்டவாறே.."வர்ஷூம்மா ஐ நோ நீ கன்பியூஸா இருக்க..." என்றாலும் அவளிடம் மௌனம் மட்டுமே..

திரும்பி அமர்ந்தவன் வாகாக அவளை தன் மார்போடு அணைத்து "என்னடா வேண்டாம்னு தொறத்தி விட்டவன் திடீர்னு வந்து காதலிக்கிறேனு சொல்லறான் அப்படினு தானே பார்க்குற.."

"உன்னை ஃபெஸ்ட் தடவை எங்கே பார்த்தேன் தெரியுமா பேபி..?" என்கவும் இல்லையென்று தலையாட்டியவளின் நெற்றியில் செல்லமாக முட்டியவன் "**ரோட்ல ட்ராஃபிக்ல சிக்கி நிற்கும் போது பஸ்ல வச்சி பார்த்தேன்.." என கூற ஆச்சர்யத்தில் எழுந்து பார்த்தாள் அவனை..

அந்த மருண்ட மான் விழிகளை விரலால் தடவி விட்டவன் "எஸ்..! அப்போ அது நீன்னு எனக்கு தெரியாது.. ஆனால் இதோ இந்த டஸ்கி வைட்..." என அவளை காதலுடன் மேய்ந்த அவனது பார்வையில் தலையைத் தொங்கப் போட்டவளை ஒற்றை விரலால் நிமிர்த்தியவன் கண்களைப் மட்டும் பார்க்க சொல்லி சைகை செய்து விட்டு "இந்த ஸ்கின் என்னை டச் பண்ணுச்சு.. பட் அது ஏதோ உன் பக்கவாட்டு தோற்றத்துல அழகாக இருக்கவும் பார்த்துட்டு போய்டேன்... அதுக்கப்பறம் இன்பேக்ட் உன்னை மறந்துட்டேன் நான். தென் அந்த மண்டபத்துல மறுபடி பார்த்தேன். அன்னைக்கிருந்த கோபத்துல உன்னை நான் சரியாக் கூட கவனிக்கைல்ல.. நான் என்ற கர்வத்துல இருந்த என்னை முதல் தடவை இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு தோற்கடிச்சிட்ட..தட்ஸ் வை அந்த நைட் கார்ஸா.. இல்லை இல்லை ரொம்பவே முரடனா நடந்துக்கிட்டேன்.." இப்போது அவனது விரல்கள் அவளை மொத்தமாக அனுபவித்துக் கொண்டிருந்தன.. அவள் ஆடவுமில்லை அசையவில்லை.

அவனைத் தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். "சா..சாரிடா..." என்றவன் அவளது இதழில் லேசாக முத்தமிட்டு விலகினான். அவன் இதுவரை யாரிடமும் சாரி கேட்டதில்லை என திக்கி வெளியே வந்த வார்த்தை பறைசாற்றியது. அங்கணம் மட்டும் அவளது விழியோரம் நீர் துளிர்த்தது..

அதனையும் செவ்வெனே துடைத்துவிட்டவன் "அதுக்குப் பிறகு நடந்தது எல்லாமே உனக்குத் தெரியும். ப்ளீஸ் ஃபொகெட் ஆல் வர்ஷூமா...அ..அதை நான் திருத்திக் கொள்வேன்.." என்றவனின் பதிலில் சிலை போல் இருந்தவளுக்கு உயிர்பெற்றதைப் போல மீண்டும் அவன் தோளில் தலையைப் புதைத்தவளின் முதுகை வருடி விட்டன அவனது கைகள். அவளது கையோ அவனது டீசேர்டை இறுக பிடித்திருந்தது. அந்த தளிர் கையில் தன்கையை வைத்தவன் "உன் மேலே கோபம் இருந்தது உண்மை தான் வர்ஷூ.. ஆனால் என்னைக்கு உன்னை அந்த வெள்ளை சுடிதார்ல அந்த ஆச்சிரமத்தில வச்சுப் பார்த்தேனோ அன்னைக்கு வந்த இங்கே..." என்றவன் நெஞ்சைத் தொட்டுக் காட்ட சிரிப்புடன் அவளது கை அவன் காட்டிய இடத்தை தடவி விட்டன.

ஆடவனுக்கே அந்த ஒற்றைத் தடவலில் மயிர்கள் சிலிர்த்து நின்றன. பின் தன்னைக் கட்டுப்படுத்தியவனாக மேலும் மேலும் அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன் "அப்போ ஏதோ ஒரு ஃபீல்.. டெபினிட்லி அது லவ் தான். ஆனால் அப்போதிருந்த மனநிலையில இந்த மரமண்டைக்கு அது புரியல.. உன் மேல கோபப்பட்டு வார்த்தையை விட்டதுக்கு ரீசன் இந்தத் தாலி உன் கழுத்துல இல்லாததைப் பார்த்து தான்..." என்றவனின் கை தான் கட்டிய தாலியை இறுக பற்றி இருந்தது..

"போகும் போது அப்படியே அங்கிள் கிட்ட பேசிட்டு இருந்தப்ப தான் நீ வெளில ஓடி வந்ததும், அப்படியே மயங்கி விழுந்ததும்...அந்த நொடி எனக்குள்ளே ஒரு அதிர்வு..!!
சத்தியமா என்னை என்னாலயே கட்டுப்படுத்திக் கொள்ள முடியல வர்ஷூ.. அவசரமா உனக்கிட்ட ஓடி வந்து என் மடில தாங்கினேன் உன்னை... அந்த ஆதித்யா புதிது.. எனக்கே நான் புதுசா தெரிஞ்சேன்..."

இந்த விடயம் அவளுக்கு புதிதல்லவா.. அவனா தன்னைத் தாங்கினான்...? கேட்கவே அவன் மீது காதல் அதிகமானது அவளுக்கு..

"தென் அங்கிள் உன்னைய ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போய்டாரு.. ஆனால் எனக்கு ஏனோ உன்னைய என் பக்கத்துல வச்சு பார்த்துக் கொள்ளனும்னு தோனிச்சு.. எனக்குள்ள என்ன இருக்கு..? நான் ஏன் அப்படி இருந்தேன்..? எனக்கு என்னதான் வேணும்..? இப்படி பல கேள்விகளுக்கு விடை காண தவிச்சேன்.. அதுக்கெல்லாம் ஒரே தீர்வு நீ என் பக்கத்துல வரனும்.. சோ உன்னை என் கம்பனிக்கு வரவச்சேன்..." என்றவனை சட்டென நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் தொக்கி நின்ற கேள்வியில் கேடி சிரிக்க, அவளோ தலையாட்டிக் கேட்க ஆம் என்றான்.

அவனது நெஞ்சில் ஓங்கி அடித்தவளின் அடி எறும்பு கடித்ததைப் போலத்தான் இருந்தது அவனுக்கு...

"ஃப்ரோடு.. அப்போ அந்த சொட்ட என்னை திடீர்னு வேலையை விட்டுத் தூக்க நீங்க தான் காரணமா...?" என அதிர்ந்து கேட்டவளின் கேள்வியில் வாய் விட்டு சிரித்தவன் "எஸ். அது இந்த ஆதித்ய தேவ் தான்..." என காலரைத் தூக்கி விட சாரமாலையாக அடித்தாள் அவன் நெஞ்சில்.

ஏதோ கொசுக்கடியைப் போல தலைக்குப் பின்னே கைகளைக் கோர்த்து வாங்கியவனை அடித்து ஓய்ந்து விட்டாள் கண்ணகி...

"ஃப்ரோடு...தடியா..போடா..." என கோபத்தில் வாய் தவறி திட்டியே விட்டாள். இப்போது அதிர்வது அவன் முறையாகிப் போனது..

"என்ன சொன்ன..என்ன சொன்ன..?" என கேட்டுக் கொண்டே முன்னேறியவனை எதிர்கொள்ள பயமாகிப் போனது அவளுக்கு. தவறுதலாக சொல்லி விட்டாளல்லவா... வாயில் விரல் நுனியை வைத்து கடித்தவாறே அவள் பயத்துடன் அவனைப் பார்க்க அவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது..

அவளது கீழ் உதட்டை இரண்டு விரல்களால் பிடித்து நசுக்கியவன் "போடான்னா சொன்ன...?" என சுள்ளென கடித்து வைத்தான்..

"ஆஆஆஆஆ.." என அலறி விடுபட்டவள் வெளியே திட்டவும் வழியில்லாமல் முழுங்கவும் வழியில்லாமல் வாய்க்குள்ளே திட்டிக் கொண்டு உதட்டை பிதுக்கி தடவி தடவிப் பார்த்தாள்.

அவளது செய்கையில் காதலும் மோகமும் போட்டி போட்டுக் கொண்டு வந்து அவனை இம்சிக்க முகத்தை அழுந்த இழுத்து இதழ்களை முழுவதுமாக சுவைத்து விட்டே விட்டான்.

அவள் ஸ்தம்பித்து நிற்க கிண்டலுக்காக மறுபடியும் குனியப் போனவனின் முடியைப் பிடித்து தள்ளியவளை "ராட்சசி விடுடி வலிக்குது..." என போலியாக முகத்தை சுழித்தவனைப் பார்த்து பாவமாகிப் போய் விட்டது அவனவளுக்கு..

"சா..சாரி ஆதி..." என மூஞ்சியை சுருக்கியவளை முறைத்தவன் "இனி, டா போட்டு பேசுவியாடி...?" எனக் கேட்க அவசரமாக இல்லையென தலையாட்டிவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் "இல்லை நீ பேசுற..." என்கவும் தலையில் அடிக்குக் கொண்டாள் வர்ஷினி.

"சும்மா சலிச்சுக்காதடி.. நீ போடானு சொல்லும் போது கிக்கா இருந்துச்சு பேபி..." என்றவன் நெஞ்சை நீவி விட சிரிப்புடனே அவனைப் பார்த்து நின்றவள் "உங்களை புரிஞ்சிக்கிடவே முடியாது..." என அவன் மேல் சரிய வாகாக அவளைப் பிடித்தவன் உச்சியில் முத்தம் வைத்து.."நீங்க புரிஞ்சிக்கவே தேவையில்லை மேடம்.. உங்களுக்காக சேர்த்து என்னை நானே புரிஞ்சிக்கிறேன்.." என்றவனுக்கு கிள்ளி விட்டாள்.

பின் தொடர்ந்தவனாக "பேபி கேளேன் ஹீரோட லவ் ஸ்டோரிய.. நம்ம குட்டீஸ்கு சொல்ல தேவைப்படும்..." என தலையாட்ட இப்போது வர்ஷினி வாய்விட்டு சிரித்தாள்...

அவளது தலையில் நங்கென கொட்டியவன் "கேளுடி மொதல்ல..." என முறைக்க சீரியஸாகி அவளும் கேட்கத் தயாரானாள்..

காயமும் நானே மருந்தும் நானே என்பது போல அவளுக்கு கொட்டிய இடத்தில் தடவி விட்டவன் அவளின் கைகளை தன் கைக்குள் பொத்தி வைத்து.." அதுக்கப்பறம் அம்மணி நம்ம ஆபிஸ் வந்திங்களா ஐயா தெனம் தெனம் ஃப்ளேட் தான்..." எனக் கூறியவனின் முகத்தில் வழிந்த பெருமையில் அம்மணிக்கு காதல் வழிந்தது..

" மறுபடியும் நீ உன் சோகக் கதையை சொல்லி அழுது மயங்கி விழுந்த பாரு.." என அவளை காயப்படுத்தாமல் கதையைத் தொடர்ந்தவன் "அன்று புரிஞ்சிக்கிட்டேன் ஐ எம் இன் லவ் வித் யூனு...ப்பாஹ் வேற மாதிரி ஃபீஸ்.. அதை விபரிக்க வார்த்தையே இல்லை வர்ஷூ..." என்றவன் மறுபடியும் முத்த யுத்தத்தை தொடர விரும்பியே அந்த யுத்தத்தில் தன்னைத் தொலைத்தாள் காரிகை..

காதலிப்பதை விட காதலிக்கப்படுவது எவ்வளவு இனிமையானது என்பதை வர்ஷினி உணர்ந்து கொண்டிருந்த நேரம் அது...

அவன் கையில் அவள் பாகாய் கரைய வேந்தனோ அவளை சிற்பமாய் செதுக்கிக் கொண்டிருந்தான்.

முத்த ஊர்வலம் கழுத்து தாண்டி சென்று கொண்டிருக்க அவளுக்குள் கரையத்துடித்தவானாக மீண்டும் அவளது காது மடலில் முத்தம் வைத்தவன் கிரக்கத்தில் சித்திரம் வரைந்தான்... உடல் கூச தகித்துக் கொண்டிருந்தவளின் இடையில் அழுத்தத்தை கூட்டியவன் "வர்ஷூ... ஐ நீட் யூ பேட்லி..." என முனங்க அவளுக்கோ வார்த்தைகள் தொண்டை தாண்டி வர மறுத்தது.

"வர்ஷூ..டெல் மீ சம்திங்..." என கிரங்கியவனுக்கு ம்ம் என சம்மதம் தந்தவளை அள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்..

தொடரும்...


தீரா.
 
Top