- Joined
- Jul 30, 2021
- Messages
- 566
பயமெனும் அரக்கன்
அந்த மருத்துவமனையில் அட்டெண்டர் ஒவ்வொருத்தர் பெயராக சொல்லி உள்ளே அனுப்பி கொண்டிருக்க, தன் பெயர் வருவதற்காக காத்திருந்தான் குமரன்...அட்டெண்டர் அவன் பெயரை அழைக்க, உள்ளே சென்றவன் தன் பரிசோதனை ரிப்போர்ட்டை மருத்துவரிடம் கொடுக்க அதை வாங்கி படித்து பார்த்தவர், மீண்டும் ஒருமுறை நன்றாக படித்து பார்த்தார்..
அவரின் செய்கையிலேயே அடிவயிறு கலங்கி கொண்டு வந்தது நம் நாயகனுக்கு.. "என்ன டாக்டர்..? எனக்கு எதும் பெரிய நோய் வந்திருக்கா..? என் ரிப்போர்ட்டையே திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்கீங்க.” கலவரமாக கேட்க,
“யெஸ் மிஸ்டர் குமரன் உங்களுக்கு கோவிட் இருக்கு..” என சொல்ல, “கோவிட்டா..?” அது எங்க இருக்கு டாக்டர்..? எனக்கு என் வீடு தான் தெரியும் டாக்டர் கோவிட் தெரியாது..” என்றவனை முறைத்து பார்த்தவர்,
“யோவ் உனக்கு கொரோனா வந்து இருக்குதுயா.. அதுவும் எழுபது சதவீதம் பாதிச்சிருக்கு.. உன்னால இது மத்தவங்களுக்கும் பரவும் சோ இனி உன்னை நீ தனிமை படுத்திக்கனும்..! இப்படியே விட்டால் உங்க உயிருக்கும் ஆபத்து ” என சொல்ல
“என்ன சொல்றிங்க டாக்டர், ரெண்டு தும்மல் தும்மினேன்,, லேசா சளி பிடிச்சு இருக்கு, இதுக்கு போய் உயிர் போகும்னு சொல்றீங்க..” என ஆச்சரியமாக கேட்டவன், “ஒருவேளை நீங்க போலி டாக்டரோ..?”என கேட்க, அவன் முறைத்த முறைப்பில் வெளியே வந்துவிட்டான்..
வீட்டிற்கு வந்ததும், லேசாக மூச்சடைப்பது போல் இருக்க, “சே வர வர சோம்பேறி ஆகிட்டு வரேன். ரெண்டு நிமிசம் நடந்ததுக்குகே இப்படி மூச்சு வாங்குது..” என்று புலம்பியபடி இருக்கையில் அமர்ந்தவனுக்கு உடம்பும் பயங்கரமாக வலி எடுக்க, கோவிட் முற்றிய நிலை பற்றி மருத்துவர் சொன்ன அறிகுறிகள் நினைவிற்கு வர, ‘அந்த டாக்டர் சொன்ன மாதிரியே எனக்கு இருக்கே..”
குமரனுக்கு பயம் வந்தது..” அப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் சாக போறேனா..? ஐயோ இந்த வயதிலேயே நான் சாகப் போறேனே! இந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட என் மேல இரக்கமே இல்லையா? வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இருக்கிற என்னோட உயிரை எடுக்க பார்க்கிறாரே! அய்யோ கடைசியா என் குடும்பத்தை கூட பார்க்கம அநியாயமா சாக போறேனே..” என புலம்பியவன் தன் செல்போனை எடுத்து குடும்பத்திற்கு அழைத்தவன்,
அந்த பக்கம் அவர்கள் எடுத்ததும், “ம்மா நான் உங்களை எல்லாம் விட்டு போக போறேன்.. நீங்க பத்திரமா இருங்க..” என மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டு பேசியவன் இறுதியில் மூச்சுவிட முடியாமல் கண்கள் சொருக அப்படியே தரையில் விழுந்தான்..
“ஆஅ அம்மா.. டேய் எருமை தூக்கத்துல உருளாதான்னு எத்தன தடவை சொல்றது..” என சத்தமாக கத்தியபடி நாயகனின் நண்பன் ஒரு உதை கொடுக்க, அதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தவனுக்கு முழிப்பு வர, தன் எதிரே நண்பன் தன்னை முறைத்து கொண்டிருப்பதை பார்த்து,
“மச்சி அப்போ நான் இன்னும் சாகலையா..?” குழப்பமாக கேட்டவாறே சுற்றும் முற்றும் பார்க்க, அது அவனும், அவனின் நண்பனும் தங்கி இருக்கும் அறை என்ப்பதை உணர்ந்து “சே அப்போ இவ்வளவு நேரம் நான் கண்டது கனவா..? சந்தோசமாக கேட்டுவிட்டு
“கடவுளே கற்பனையே இவ்வளவு பயங்கரமா இருக்கே! அப்போ நிஜமாகவே பாதிக்கப்பட்டவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க..? இனியாவது அலட்சியமா இருக்காம ஒழுங்கா சுத்தமாய் இருந்து, மாஸ்க் போட்டு, என்னென்ன அறிவுரைகள் சொல்றாங்களோ! எல்லாத்தையும் ஃபாலோ பண்ணனும். கூட்டமா எங்கேயும் நிற்கக்கூடாது.
அதே மாதிரி எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் மனசுல இருக்குற உறுதியை மட்டும் இழக்கக்கூடாது. அப்படி உறுதியா இருந்தா எந்த கொரோனா வந்தாலும் அதுல இருந்து வெளிய வந்துடலாம்.இருப்பினும் போதும் கடவுளே! இந்த கொரோனா இத்தோடு ஒளியட்டும்.. மக்கள் எல்லாரும் நிம்மதியா வழட்டும்..” என்று வேண்டியவாறே
“ஹி ஹி சாரி மச்சி.. அது கனவுல நயந்தாரா வந்தாங்களா டான்ஸ் ஆடிட்டே டூயட் பாடினேன் அதான்..”அசடுவழிய சொன்னவன் நண்ப்ன் முறைத்த முறைப்பில்.. போர்வையை தலையோடு போர்த்தி கொண்டான்..தன்னை விட்டு விலகிய தூக்கத்தை, பிடித்து இழுத்து அணைத்து கொண்டான்.
Aashmi S (ஆஷ்மி எஸ்
அந்த மருத்துவமனையில் அட்டெண்டர் ஒவ்வொருத்தர் பெயராக சொல்லி உள்ளே அனுப்பி கொண்டிருக்க, தன் பெயர் வருவதற்காக காத்திருந்தான் குமரன்...அட்டெண்டர் அவன் பெயரை அழைக்க, உள்ளே சென்றவன் தன் பரிசோதனை ரிப்போர்ட்டை மருத்துவரிடம் கொடுக்க அதை வாங்கி படித்து பார்த்தவர், மீண்டும் ஒருமுறை நன்றாக படித்து பார்த்தார்..
அவரின் செய்கையிலேயே அடிவயிறு கலங்கி கொண்டு வந்தது நம் நாயகனுக்கு.. "என்ன டாக்டர்..? எனக்கு எதும் பெரிய நோய் வந்திருக்கா..? என் ரிப்போர்ட்டையே திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்கீங்க.” கலவரமாக கேட்க,
“யெஸ் மிஸ்டர் குமரன் உங்களுக்கு கோவிட் இருக்கு..” என சொல்ல, “கோவிட்டா..?” அது எங்க இருக்கு டாக்டர்..? எனக்கு என் வீடு தான் தெரியும் டாக்டர் கோவிட் தெரியாது..” என்றவனை முறைத்து பார்த்தவர்,
“யோவ் உனக்கு கொரோனா வந்து இருக்குதுயா.. அதுவும் எழுபது சதவீதம் பாதிச்சிருக்கு.. உன்னால இது மத்தவங்களுக்கும் பரவும் சோ இனி உன்னை நீ தனிமை படுத்திக்கனும்..! இப்படியே விட்டால் உங்க உயிருக்கும் ஆபத்து ” என சொல்ல
“என்ன சொல்றிங்க டாக்டர், ரெண்டு தும்மல் தும்மினேன்,, லேசா சளி பிடிச்சு இருக்கு, இதுக்கு போய் உயிர் போகும்னு சொல்றீங்க..” என ஆச்சரியமாக கேட்டவன், “ஒருவேளை நீங்க போலி டாக்டரோ..?”என கேட்க, அவன் முறைத்த முறைப்பில் வெளியே வந்துவிட்டான்..
வீட்டிற்கு வந்ததும், லேசாக மூச்சடைப்பது போல் இருக்க, “சே வர வர சோம்பேறி ஆகிட்டு வரேன். ரெண்டு நிமிசம் நடந்ததுக்குகே இப்படி மூச்சு வாங்குது..” என்று புலம்பியபடி இருக்கையில் அமர்ந்தவனுக்கு உடம்பும் பயங்கரமாக வலி எடுக்க, கோவிட் முற்றிய நிலை பற்றி மருத்துவர் சொன்ன அறிகுறிகள் நினைவிற்கு வர, ‘அந்த டாக்டர் சொன்ன மாதிரியே எனக்கு இருக்கே..”
குமரனுக்கு பயம் வந்தது..” அப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் சாக போறேனா..? ஐயோ இந்த வயதிலேயே நான் சாகப் போறேனே! இந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட என் மேல இரக்கமே இல்லையா? வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இருக்கிற என்னோட உயிரை எடுக்க பார்க்கிறாரே! அய்யோ கடைசியா என் குடும்பத்தை கூட பார்க்கம அநியாயமா சாக போறேனே..” என புலம்பியவன் தன் செல்போனை எடுத்து குடும்பத்திற்கு அழைத்தவன்,
அந்த பக்கம் அவர்கள் எடுத்ததும், “ம்மா நான் உங்களை எல்லாம் விட்டு போக போறேன்.. நீங்க பத்திரமா இருங்க..” என மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டு பேசியவன் இறுதியில் மூச்சுவிட முடியாமல் கண்கள் சொருக அப்படியே தரையில் விழுந்தான்..
“ஆஅ அம்மா.. டேய் எருமை தூக்கத்துல உருளாதான்னு எத்தன தடவை சொல்றது..” என சத்தமாக கத்தியபடி நாயகனின் நண்பன் ஒரு உதை கொடுக்க, அதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தவனுக்கு முழிப்பு வர, தன் எதிரே நண்பன் தன்னை முறைத்து கொண்டிருப்பதை பார்த்து,
“மச்சி அப்போ நான் இன்னும் சாகலையா..?” குழப்பமாக கேட்டவாறே சுற்றும் முற்றும் பார்க்க, அது அவனும், அவனின் நண்பனும் தங்கி இருக்கும் அறை என்ப்பதை உணர்ந்து “சே அப்போ இவ்வளவு நேரம் நான் கண்டது கனவா..? சந்தோசமாக கேட்டுவிட்டு
“கடவுளே கற்பனையே இவ்வளவு பயங்கரமா இருக்கே! அப்போ நிஜமாகவே பாதிக்கப்பட்டவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க..? இனியாவது அலட்சியமா இருக்காம ஒழுங்கா சுத்தமாய் இருந்து, மாஸ்க் போட்டு, என்னென்ன அறிவுரைகள் சொல்றாங்களோ! எல்லாத்தையும் ஃபாலோ பண்ணனும். கூட்டமா எங்கேயும் நிற்கக்கூடாது.
அதே மாதிரி எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் மனசுல இருக்குற உறுதியை மட்டும் இழக்கக்கூடாது. அப்படி உறுதியா இருந்தா எந்த கொரோனா வந்தாலும் அதுல இருந்து வெளிய வந்துடலாம்.இருப்பினும் போதும் கடவுளே! இந்த கொரோனா இத்தோடு ஒளியட்டும்.. மக்கள் எல்லாரும் நிம்மதியா வழட்டும்..” என்று வேண்டியவாறே
“ஹி ஹி சாரி மச்சி.. அது கனவுல நயந்தாரா வந்தாங்களா டான்ஸ் ஆடிட்டே டூயட் பாடினேன் அதான்..”அசடுவழிய சொன்னவன் நண்ப்ன் முறைத்த முறைப்பில்.. போர்வையை தலையோடு போர்த்தி கொண்டான்..தன்னை விட்டு விலகிய தூக்கத்தை, பிடித்து இழுத்து அணைத்து கொண்டான்.
Aashmi S (ஆஷ்மி எஸ்