கோவிட்..
மாஸ்க்... மாஸ்க்.. மாஸ்க்....
" சை...என்ன பொழப்பு இது.... எப்பப்பாரு மாஸ்க்கப்போடு.... கைய கழுவுன்னு உயிர எடுக்குறாங்க... வெளிய போய் கிரிக்கெட் விளையாடித் தான் எவ்வளவு நாளாச்சு..." புலம்பிக் கொண்டிருந்த என்னை நித்திரா தேவி தழுவ ஆரம்பித்தாள்...
திடீரென்று ஒரு வெளிச்சம் என்னை சுற்றி... என் காதில், "அச்சு எழுந்துவா... நான் உனக்கு விடுதலை தரேன்... ."
என்னையறியாமல் ஒரு சக்தி எழுப்ப.... எழுந்து உட்கார்ந்தேன்.
" யாரது என்னக் கூப்பிடுறது..."
"நான் தான் கடவுள்."
"கடவுளா.. நான் சாமியெல்லாம் கும்பிடுறதில்லையே...."
" நீ கும்பிடாட்டியும் பரவாயில்லை வா வெளியில"என்று என்னை அழைத்தது அந்த சக்தி.
"மாஸ்க் போட வேணாமா?"
" வேண்டாம் வாப்பா.... உனக்குத்தான் மாஸ்க் போட பிடிக்காதே... "
" போலீஸ்காரங்க புடிச்சா இருநூறு ரூபாய் பைன் கொடுக்கணும் "
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்கூட வா..."
என்ன ஆச்சரியம்! போலீஸ்காரங்க ஏறிட்டு பார்த்தாலும் பைன் போடல ...
"சாமி நீ பெரிய ஆளுதான் பா" என்றேன்.
" அச்சு உன் ஆசை என்ன..."
" சாமி! என் பிரண்டுகளோட கிரிக்கெட் விளையாடி எவ்வளவு நாளாச்சு..."
" தாராளமா போய் விளையாடு... அங்க பாரு உன் பிரண்டுங்க இருக்காங்க..." என்று கிரவுண்ட காட்ட.."
" விளையாடிட்டு... ஹோட்டல்ல கும்பலா உட்கார்ந்து ஜாலியாக சாப்பிட்டு ,தியேட்டர் , மாலுக்குப் போயி..."
" ஆமாம் சாமி! நீ எதுக்கு இதெல்லாம் செய்ற... எனக்கு சந்தேகமா இருக்கு ...."
வீட்டுக்கு வந்து படுத்த கொஞ்ச நேரத்தில்...
"ஐய்யய்யோ டிரமுக்குள்ள போட்டு என்ன அமுக்குற மாதிரி மூச்சு திணறுது ...கண் இருட்டுது... படபடன்னு வருது... என்னன்னமோ நடக்குது."
" ஒய்ங்... ஒய்ங்... ஒய்ங்.. என்ற சத்தத்துடன் ஒரு வண்டி வந்து நிக்குது. என்ன தூக்கி அள்ளி எடுத்துக்கிட்டு எங்கயோ போறாங்க. கண்ண முழிச்சு பார்த்தா என்னைச்சுத்தி ஒரே இருட்டு... மூக்கு மேல ஒரு குழாய்... மூச்சுவிட கஷ்டமா இருக்கு.. பயந்து போயி கண்ண முழிச்சு பார்க்கிறேன்... எங்கே செவ்வாய் கிரகத்தில் இருக்கிறேன் போல... பொண்ணா,ஆணா... முழுக்க வெள்ளை டிரஸ் போட்டுக்கிட்டு மூக்குல எல்லாம் மாட்டிகிட்டு இவங்க யாரு வேற்று கிரகவாசியா????"
"நான் பேசறது உங்களுக்கு கேக்குதா?" என்றுகஷ்டப்பட்டு குரலை வரவழைச்சு கேட்க..." "உஷ்..."என்று வாயை மூடி சைகை மட்டும் செய்தது இந்த வேற்றுகிரகவாசி. நான் எங்கே இருக்கேன். செவ்வாய் கிரகத்திலா... இங்கே என்ன காத்தே கிடையாதா? ஏன் மூச்சுவிட இவ்வளவு சிரமமா இருக்கு?"
"அதற்குள் என்னை வேறு எங்கோ கொண்டு போய் மெஷினுக்குள் உள்ளே நுழைகிறார்கள்... அய்யோ என்ன ஸ்பேஸ்கிராப்ட்ல எங்கேயோ வேற கிரகத்துக்கு கூட்டிட்டு போறாங்க போலிருக்கு... எந்த கிரகத்திற்கு வேணாலும் கூட்டிட்டு போங்க, ஆனா காத்தில்லாம மூச்சு விட முடியாத கிரகம் மட்டும் வேண்டாம்."
வெள்ளை உடை வேற்றுகிரகவாசி ஏதோ குனிந்து சொல்ல... எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை.. என்னுடைய தேவை எல்லாம் மூச்சுக்காற்று மட்டும்தான்... ஏதோ ஒரு பாறாங்கல் நெஞ்சின் மேல் ஏறி உட்கார்ந்தது போல இருக்குது. லேசாக நினைவு திரும்ப....
"நான் அச்சு தானே நான் ஏன் இங்கே படுத்திருக்கிறேன்" என்று யோசித்து சுற்றும் முற்றும் பார்த்தேன்.வெள்ளை உடை அணிந்திருந்தவர் வெளியே செல்ல, கண்ணில் பட்டது அந்த போர்டு..." கொரோனா தனிமை வார்டு" எனக்கு கொரோனாவா.... சற்று நேரத்தில் நான் மூர்ச்சையடைந்தேன்..
கிரிக்கெட்,மால், தியேட்டர் எல்லாம் தலையைச் சுற்றி ஓடியது. "நானே ஊர சுத்தணும்னு... சொன்னா அந்த சாமிp தூர போகிறார்கள்... இல்லை நான் தான் அவர்களை விட்டு விலகிப் போகிறேன்... ஒரு இருண்ட நீண்ட உலகத்திற்கு...."
"விடிஞ்சு மணி பத்தாச்சு இன்னும் என்னடா தூக்கம்??" அம்மா மூஞ்சியில் ஒரு தம்ளர் தண்ணீர் தெளித்து எழுப்ப... என்னுடைய உலகமும் வெளிச்சமானது... அப்ப நான் பார்த்ததெல்லாம் கனவா...
" போர்வைய இப்படி முகத்தை மூடிகிட்டு தூங்கினா மூச்ச முட்டாது.... எந்திரிச்சு கடைக்குப் போயிட்டு வா.."
நான் எந்திரிச்சு குளிச்சு ரெடியாக..
"டேய் என்ன ஆச்சு உனக்கு... மாஸ்க் போட்டிருக்க.. சானிடைசர் கரெக்ட்டா வச்சிருக்க.."
நேற்றைய கனவு நினைவில் வந்து மிரட்ட..."நம்ம நல்லதுக்கு தானே சொல்றாங்கம்மா" என்று சொல்லிவிட்டு நல்ல பிள்ளையாய் கிளம்பினேன்.
தி.வள்ளி,
மாஸ்க்... மாஸ்க்.. மாஸ்க்....
" சை...என்ன பொழப்பு இது.... எப்பப்பாரு மாஸ்க்கப்போடு.... கைய கழுவுன்னு உயிர எடுக்குறாங்க... வெளிய போய் கிரிக்கெட் விளையாடித் தான் எவ்வளவு நாளாச்சு..." புலம்பிக் கொண்டிருந்த என்னை நித்திரா தேவி தழுவ ஆரம்பித்தாள்...
திடீரென்று ஒரு வெளிச்சம் என்னை சுற்றி... என் காதில், "அச்சு எழுந்துவா... நான் உனக்கு விடுதலை தரேன்... ."
என்னையறியாமல் ஒரு சக்தி எழுப்ப.... எழுந்து உட்கார்ந்தேன்.
" யாரது என்னக் கூப்பிடுறது..."
"நான் தான் கடவுள்."
"கடவுளா.. நான் சாமியெல்லாம் கும்பிடுறதில்லையே...."
" நீ கும்பிடாட்டியும் பரவாயில்லை வா வெளியில"என்று என்னை அழைத்தது அந்த சக்தி.
"மாஸ்க் போட வேணாமா?"
" வேண்டாம் வாப்பா.... உனக்குத்தான் மாஸ்க் போட பிடிக்காதே... "
" போலீஸ்காரங்க புடிச்சா இருநூறு ரூபாய் பைன் கொடுக்கணும் "
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்கூட வா..."
என்ன ஆச்சரியம்! போலீஸ்காரங்க ஏறிட்டு பார்த்தாலும் பைன் போடல ...
"சாமி நீ பெரிய ஆளுதான் பா" என்றேன்.
" அச்சு உன் ஆசை என்ன..."
" சாமி! என் பிரண்டுகளோட கிரிக்கெட் விளையாடி எவ்வளவு நாளாச்சு..."
" தாராளமா போய் விளையாடு... அங்க பாரு உன் பிரண்டுங்க இருக்காங்க..." என்று கிரவுண்ட காட்ட.."
" விளையாடிட்டு... ஹோட்டல்ல கும்பலா உட்கார்ந்து ஜாலியாக சாப்பிட்டு ,தியேட்டர் , மாலுக்குப் போயி..."
" ஆமாம் சாமி! நீ எதுக்கு இதெல்லாம் செய்ற... எனக்கு சந்தேகமா இருக்கு ...."
வீட்டுக்கு வந்து படுத்த கொஞ்ச நேரத்தில்...
"ஐய்யய்யோ டிரமுக்குள்ள போட்டு என்ன அமுக்குற மாதிரி மூச்சு திணறுது ...கண் இருட்டுது... படபடன்னு வருது... என்னன்னமோ நடக்குது."
" ஒய்ங்... ஒய்ங்... ஒய்ங்.. என்ற சத்தத்துடன் ஒரு வண்டி வந்து நிக்குது. என்ன தூக்கி அள்ளி எடுத்துக்கிட்டு எங்கயோ போறாங்க. கண்ண முழிச்சு பார்த்தா என்னைச்சுத்தி ஒரே இருட்டு... மூக்கு மேல ஒரு குழாய்... மூச்சுவிட கஷ்டமா இருக்கு.. பயந்து போயி கண்ண முழிச்சு பார்க்கிறேன்... எங்கே செவ்வாய் கிரகத்தில் இருக்கிறேன் போல... பொண்ணா,ஆணா... முழுக்க வெள்ளை டிரஸ் போட்டுக்கிட்டு மூக்குல எல்லாம் மாட்டிகிட்டு இவங்க யாரு வேற்று கிரகவாசியா????"
"நான் பேசறது உங்களுக்கு கேக்குதா?" என்றுகஷ்டப்பட்டு குரலை வரவழைச்சு கேட்க..." "உஷ்..."என்று வாயை மூடி சைகை மட்டும் செய்தது இந்த வேற்றுகிரகவாசி. நான் எங்கே இருக்கேன். செவ்வாய் கிரகத்திலா... இங்கே என்ன காத்தே கிடையாதா? ஏன் மூச்சுவிட இவ்வளவு சிரமமா இருக்கு?"
"அதற்குள் என்னை வேறு எங்கோ கொண்டு போய் மெஷினுக்குள் உள்ளே நுழைகிறார்கள்... அய்யோ என்ன ஸ்பேஸ்கிராப்ட்ல எங்கேயோ வேற கிரகத்துக்கு கூட்டிட்டு போறாங்க போலிருக்கு... எந்த கிரகத்திற்கு வேணாலும் கூட்டிட்டு போங்க, ஆனா காத்தில்லாம மூச்சு விட முடியாத கிரகம் மட்டும் வேண்டாம்."
வெள்ளை உடை வேற்றுகிரகவாசி ஏதோ குனிந்து சொல்ல... எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை.. என்னுடைய தேவை எல்லாம் மூச்சுக்காற்று மட்டும்தான்... ஏதோ ஒரு பாறாங்கல் நெஞ்சின் மேல் ஏறி உட்கார்ந்தது போல இருக்குது. லேசாக நினைவு திரும்ப....
"நான் அச்சு தானே நான் ஏன் இங்கே படுத்திருக்கிறேன்" என்று யோசித்து சுற்றும் முற்றும் பார்த்தேன்.வெள்ளை உடை அணிந்திருந்தவர் வெளியே செல்ல, கண்ணில் பட்டது அந்த போர்டு..." கொரோனா தனிமை வார்டு" எனக்கு கொரோனாவா.... சற்று நேரத்தில் நான் மூர்ச்சையடைந்தேன்..
கிரிக்கெட்,மால், தியேட்டர் எல்லாம் தலையைச் சுற்றி ஓடியது. "நானே ஊர சுத்தணும்னு... சொன்னா அந்த சாமிp தூர போகிறார்கள்... இல்லை நான் தான் அவர்களை விட்டு விலகிப் போகிறேன்... ஒரு இருண்ட நீண்ட உலகத்திற்கு...."
"விடிஞ்சு மணி பத்தாச்சு இன்னும் என்னடா தூக்கம்??" அம்மா மூஞ்சியில் ஒரு தம்ளர் தண்ணீர் தெளித்து எழுப்ப... என்னுடைய உலகமும் வெளிச்சமானது... அப்ப நான் பார்த்ததெல்லாம் கனவா...
" போர்வைய இப்படி முகத்தை மூடிகிட்டு தூங்கினா மூச்ச முட்டாது.... எந்திரிச்சு கடைக்குப் போயிட்டு வா.."
நான் எந்திரிச்சு குளிச்சு ரெடியாக..
"டேய் என்ன ஆச்சு உனக்கு... மாஸ்க் போட்டிருக்க.. சானிடைசர் கரெக்ட்டா வச்சிருக்க.."
நேற்றைய கனவு நினைவில் வந்து மிரட்ட..."நம்ம நல்லதுக்கு தானே சொல்றாங்கம்மா" என்று சொல்லிவிட்டு நல்ல பிள்ளையாய் கிளம்பினேன்.
தி.வள்ளி,