- Joined
- Dec 20, 2021
- Messages
- 267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...
முன்னோட்டம்.....
மும்பை ஏர்போர்ட்டில் இறங்கியவனின் கால்கள் வேக நடையில் நடக்க, அவனுடைய வேகத்தில், சிலுசிலுத்த காற்று கூட அவனருகில் வர அஞ்சி நின்றது.
வெளியே வந்தவனின் கைகள் தன்னிச்சையாக கருப்புக் கண்ணாடியை கண்களில் அணிந்தது.
நிமிர்ந்த நடையும், அகன்ற நெஞ்சுரமும், ஆறடி உயரமும், பளீரிடும் புன்னகையுமாய் நின்றவன், தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்க்க, அடுத்த நொடி அவன் மார்பை வெண்ணிறக் கரங்கள் பின்னிருந்து அணைத்துக் கொண்டது.
“ ஓ மை பேபி.... “ என்று கூறிக்கொண்டே அவளை கைகளால் வளைத்து தன் முன்னே இழுத்தான்.
ஹீல்ஸ் அணிந்த தன் பாதங்களை உயர்த்தி, அவன் இதழோடு தன் இதழைச் சேர்த்தாள் அந்த அழகி.
“ ஐ மிஸ் யூ டியர்... “ என்று கிள்ளை மொழியில் மிழற்றினாள் அந்த அழகி.
அவளின் முத்தத்திற்கு பரிசாக மோகனப் புன்னகையை சிந்தினான் அவன். ஆராவமுதன்.
கட்டுமானத் துறையில் முடிசூடா சக்கரவர்த்தி. உலகெங்கும் பல கட்டடங்களை வடிவமைத்துத் தருபவன். யாராலும் கட்டுப்படுத்த முடியாத காற்று அவன். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த அவனை வளர்த்த, அவனது தந்தை வழிப் பாட்டி தேன்மொழிக்கு மட்டுமே கட்டுப்படும் காளை அவன்.
புயல் காற்றாய் அனைவரையும் சுழற்றி அடிப்பவன், அவன் பாட்டி தேன்மொழிக்கு மட்டும் இனித்திடும் தென்றலாவான்.
அந்த அழகியை தன் கை வளைவில் வைத்துக்கொண்டு, சுற்றியிருக்கும் உலகைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் தன் நடையைத் தொடர்ந்தான்.
“ ஆரா..... “ என்றாள் வார்த்தையில் இனிமை தடவி.
“எஸ்... பேபி... “ என்றான் உணர்வுகள் அற்ற குரலில்.
“ இல்லை.... இந்த.... திருமணம்... அப்புறம்... நான்.. “ என்றாள் பயத்தில் வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திக்கித் திணறி.
சட்டெனத் தன் கருப்புக் கண்ணாடியை கழற்றி அவன் முறைத்த முறைப்பில் சர்வமும் நடுநடுங்கியது சாரா என்ற அந்த அழகிக்கு.
அடுத்த நொடி அவளை ஒரு உதறு உதறி விட்டு தன் காரில் ஏறி அமர்ந்தான்.
சாரா விழுந்த வேகத்தில் எழுந்து ஓடி வரும் முன், கார் அவள் கண்ணை விட்டு மறைந்து சென்றது.
அவனின் முன்கோபம் அறிந்தும், தான் செய்த அவசரத் தனத்தை எண்ணி மனம் நொந்தாள் சாரா.
அடுத்த நொடி அவனை வளைக்கும் அடுத்த திட்டத்திற்கு தயாரானாள், இதழில் வழிந்த ஏளனப் புன்னகையுடன்.
***********************
இரவு பத்து மணி. கோயில் நடை சாத்தும் நேரம்.
அங்கே போடப்பட்டிருந்த சிறிய கல்யாணப் பந்தலில், மணப் பலகையில் குத்துக்காலிட்டு கூரை புடவையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா.
அவள் கண்களில் துளியும் கலக்கமில்லை. எதிர்காலத்தை பற்றிய எந்த அச்சமும் இல்லை. மூழ்குபவனுக்கு கிடைத்த துடுப்புக் கட்டை போல் கிடைத்த நொடியை பற்றிக் கொள்ளவே நினைத்தாள்.
பிறை நெற்றியில் வில்லென வளைந்த புருவங்கள், அஞ்சன விழிக்கணைகளை தரை நோக்கி வீசியபடி, குவளை மலர் நிறத்தழகி நிலமகளையே உற்று நோக்கினாள்.
குனிந்திருந்த அவளது முகத்தில், வெட்கத்தின் சாயலோ, நாணத்தின் புன்னகையோ தென்படவில்லை.
உணர்ச்சிகளைத் துடைத்த அந்த முகம், சில்லிட்ட பனிக்கட்டி போல் இறுகிக் கிடந்தது.
அர்ச்சகரோ கோவிலின் வெளி வாசலைப் பார்த்தபடியே, வெளியேறத் துடித்த கொட்டாவியை அடக்கியபடி, ஹோம குண்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.
நிலவொளியில், அந்த கருப்பு நிற ஜாகுவார் அதீத வேகத்தில் கோவிலின் வாசலில் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கிய ஆராவமுதன், வேக நடையில் கோவிலுக்கு உள்ளே நுழைந்தான். ஜீன்ஸ் பேன்ட் டி-சர்ட் சகிதம் வந்தவன், மணமேடையில் அமர்ந்து, வளர்பிறை நிலவொளி சாட்சியாக சங்கமித்ராவின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான்.
சிறை எடுப்பாள்...
முன்னோட்டம்.....
மும்பை ஏர்போர்ட்டில் இறங்கியவனின் கால்கள் வேக நடையில் நடக்க, அவனுடைய வேகத்தில், சிலுசிலுத்த காற்று கூட அவனருகில் வர அஞ்சி நின்றது.
வெளியே வந்தவனின் கைகள் தன்னிச்சையாக கருப்புக் கண்ணாடியை கண்களில் அணிந்தது.
நிமிர்ந்த நடையும், அகன்ற நெஞ்சுரமும், ஆறடி உயரமும், பளீரிடும் புன்னகையுமாய் நின்றவன், தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்க்க, அடுத்த நொடி அவன் மார்பை வெண்ணிறக் கரங்கள் பின்னிருந்து அணைத்துக் கொண்டது.
“ ஓ மை பேபி.... “ என்று கூறிக்கொண்டே அவளை கைகளால் வளைத்து தன் முன்னே இழுத்தான்.
ஹீல்ஸ் அணிந்த தன் பாதங்களை உயர்த்தி, அவன் இதழோடு தன் இதழைச் சேர்த்தாள் அந்த அழகி.
“ ஐ மிஸ் யூ டியர்... “ என்று கிள்ளை மொழியில் மிழற்றினாள் அந்த அழகி.
அவளின் முத்தத்திற்கு பரிசாக மோகனப் புன்னகையை சிந்தினான் அவன். ஆராவமுதன்.
கட்டுமானத் துறையில் முடிசூடா சக்கரவர்த்தி. உலகெங்கும் பல கட்டடங்களை வடிவமைத்துத் தருபவன். யாராலும் கட்டுப்படுத்த முடியாத காற்று அவன். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த அவனை வளர்த்த, அவனது தந்தை வழிப் பாட்டி தேன்மொழிக்கு மட்டுமே கட்டுப்படும் காளை அவன்.
புயல் காற்றாய் அனைவரையும் சுழற்றி அடிப்பவன், அவன் பாட்டி தேன்மொழிக்கு மட்டும் இனித்திடும் தென்றலாவான்.
அந்த அழகியை தன் கை வளைவில் வைத்துக்கொண்டு, சுற்றியிருக்கும் உலகைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் தன் நடையைத் தொடர்ந்தான்.
“ ஆரா..... “ என்றாள் வார்த்தையில் இனிமை தடவி.
“எஸ்... பேபி... “ என்றான் உணர்வுகள் அற்ற குரலில்.
“ இல்லை.... இந்த.... திருமணம்... அப்புறம்... நான்.. “ என்றாள் பயத்தில் வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திக்கித் திணறி.
சட்டெனத் தன் கருப்புக் கண்ணாடியை கழற்றி அவன் முறைத்த முறைப்பில் சர்வமும் நடுநடுங்கியது சாரா என்ற அந்த அழகிக்கு.
அடுத்த நொடி அவளை ஒரு உதறு உதறி விட்டு தன் காரில் ஏறி அமர்ந்தான்.
சாரா விழுந்த வேகத்தில் எழுந்து ஓடி வரும் முன், கார் அவள் கண்ணை விட்டு மறைந்து சென்றது.
அவனின் முன்கோபம் அறிந்தும், தான் செய்த அவசரத் தனத்தை எண்ணி மனம் நொந்தாள் சாரா.
அடுத்த நொடி அவனை வளைக்கும் அடுத்த திட்டத்திற்கு தயாரானாள், இதழில் வழிந்த ஏளனப் புன்னகையுடன்.
***********************
இரவு பத்து மணி. கோயில் நடை சாத்தும் நேரம்.
அங்கே போடப்பட்டிருந்த சிறிய கல்யாணப் பந்தலில், மணப் பலகையில் குத்துக்காலிட்டு கூரை புடவையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா.
அவள் கண்களில் துளியும் கலக்கமில்லை. எதிர்காலத்தை பற்றிய எந்த அச்சமும் இல்லை. மூழ்குபவனுக்கு கிடைத்த துடுப்புக் கட்டை போல் கிடைத்த நொடியை பற்றிக் கொள்ளவே நினைத்தாள்.
பிறை நெற்றியில் வில்லென வளைந்த புருவங்கள், அஞ்சன விழிக்கணைகளை தரை நோக்கி வீசியபடி, குவளை மலர் நிறத்தழகி நிலமகளையே உற்று நோக்கினாள்.
குனிந்திருந்த அவளது முகத்தில், வெட்கத்தின் சாயலோ, நாணத்தின் புன்னகையோ தென்படவில்லை.
உணர்ச்சிகளைத் துடைத்த அந்த முகம், சில்லிட்ட பனிக்கட்டி போல் இறுகிக் கிடந்தது.
அர்ச்சகரோ கோவிலின் வெளி வாசலைப் பார்த்தபடியே, வெளியேறத் துடித்த கொட்டாவியை அடக்கியபடி, ஹோம குண்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.
நிலவொளியில், அந்த கருப்பு நிற ஜாகுவார் அதீத வேகத்தில் கோவிலின் வாசலில் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கிய ஆராவமுதன், வேக நடையில் கோவிலுக்கு உள்ளே நுழைந்தான். ஜீன்ஸ் பேன்ட் டி-சர்ட் சகிதம் வந்தவன், மணமேடையில் அமர்ந்து, வளர்பிறை நிலவொளி சாட்சியாக சங்கமித்ராவின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான்.
சிறை எடுப்பாள்...