- Joined
- Aug 1, 2021
- Messages
- 520
3.வைதேகி வளர்ந்தாள்!
வரமாய் ஆசியாய் ஆசை மகளாய்
அம்பிகையை பெற்றபோதும்
அறியா மூடன் ஆனான் தட்சன் !
மாதர்குல மாணிக்கத்தை
மகவாய் பார்வதியை பெற்று
சிவத்துடன் சேர்த்து சிறப்புற
வாழ்ந்தான் மலையான்!
அவ்வண்ணமே சீதையாய்
செந்தாமரை திருமகளை
பெற்று அவளை தன
இதயகமலத்தில் வைத்திருக்கும்
பத்மவாசனிடம் சேர்த்து
புவனம் புகழ்பெற்றார் ஜனகர்
இவர்கள் சக்திகளை
தன் மகவாய் பெற்றவர்கள்
புத்திரிகளை வளர்க்கும்
சுகம் தனையும் உற்றவர்கள்
பூதேவி தந்த ஸ்ரீதேவி
மிதிலை நகர் வந்த வேளை
திருமகள் பூமாலைகள்
மூன்றும் புவிபுகுந்தன,
ஊர்மிளை,மாண்டவி, ஸ்ருதகீர்த்தி
நாமம் தாங்கி
காவியத்தில் இடம் பெறவும்
ரகு குலம் தழைக்கவும்
தக்க தருணமதில்
தலைவன் தோள் சூட
காத்திருந்தன பூங்கோதைகள்!
குப்புற விழுந்து
தத்தி தவழ்ந்து
குந்தி மகிழ்ந்து
பட்டு சொக்காய் உடுத்தி
துளிர்நடை பயிலும் பருவமதில்
அரிசிப்பல் தெரிய சிரித்து
“அப்பா”என விளித்து
ஆனந்தமாய் வந்து
அவரை தழுவிக்கொள்ள
அவள் அடுத்த அடி வைக்கும்
முன்னே விழுந்திடுமோ
என விரைந்து வந்து வாரி
அணைத்திடுவார் ஜனகர்.
அவளாய் பழகட்டும்
விடுங்கள் என சுனைனை
சொல்லும் மொழிகளுக்கு
செவிமடுக்கார் தந்தை!
மார்மேலும்,தோள் மேலும்
இட்டு பக்குவமாய்
ஆசைபொங்க அன்பாய்
வளர்த்து வந்தார் ராஜரிஷி.
மைதிலியின் மழலை மொழியில்
லயித்திருப்பார்
பேதை அவள் பெதும்பை
வயது அடையும் முன்னே
அம்பிகையை வணங்கி
அறிவு புகட்டும் கடமையில்
ஆயகலைகளை கற்பிக்கும்
ஆசான் ஆனார் ஜனகர்!
வேதமும்,வேதாந்தமும்
கற்ற வித்தகர் இந்த ராஜரிஷி
தரணிக்கே நன்மை பயக்க வந்த
நாரணன் நாயகியே
தன்னிடம் வந்தடைந்தது
என்பதை உணர்ந்தவர் !
பலர் இணைந்தும் அசைக்க இயலா
சிவதனுசை தன் மகள்
அனாயாசமாய் எடுத்து
நாண் ஏற்ற கண்டவர்
இவள் அவதாரப் பிறப்பே
என அறிந்துக்கொண்டவர்.
தன் மகளாய் வளரும் போதே
தரணி வந்த திருவுருவை
எல்லா சுகங்களையும் ஈந்து
அரிய பொக்கிசமாய்
அன்புடன் வளர்க்க
சங்கல்பம் செய்து
நிறைவேற்றியவர்!
மைவிழியாள் மைதிலி !
நாளும் பொழுதும் இனிதே கழிய
பெதும்பை அவள்
தக்க துணையுடன் சேரும்
பருவம் வந்தடைந்தாள்!
சிறு பாவாடை கட்டிய மகள்
சீரிய முறையில் வளர்ந்து
சிருங்காரம் நிறைந்த பாவையாய்
அழகுப் பதுமையாய்
கருணை நிறைந்த கன்னியாய்
ஒயிலான ஓவியமாய்
சர்வ குண பூஷிதையாய்
செந்தாமரை நாயகியாய்
மன்னவன் ஒருவன்
தோள் சேரும் பூமாலையாய்
மாறும் தருணம் வந்ததென
அவள் வதனம் சொல்ல
சிவதனுசு அவள் மணாளனை
இட்டுவரும் என்றிருந்தார் .
பெண்கள் வளரும் பருவம்
விரைந்து கடந்து விடும்
ஜனகரின் குலக்கொடிகளாய்
நால்வர் வளர்ந்தனர்
சீராட்டி ,பாராட்டி
சிறப்புடன் வளர்த்தாலும் -அவை
செல்லுமிடம் சென்று படர்ந்தால்
தான் பெருமை!
சுயம்வரம் நடத்த தக்க
ஏற்ப்பாடு செய்யப்பட்டது
அரசாளும் ஆரியர்களுக்கு
அழைப்பு விடுத்தனர் !
வரமாய் ஆசியாய் ஆசை மகளாய்
அம்பிகையை பெற்றபோதும்
அறியா மூடன் ஆனான் தட்சன் !
மாதர்குல மாணிக்கத்தை
மகவாய் பார்வதியை பெற்று
சிவத்துடன் சேர்த்து சிறப்புற
வாழ்ந்தான் மலையான்!
அவ்வண்ணமே சீதையாய்
செந்தாமரை திருமகளை
பெற்று அவளை தன
இதயகமலத்தில் வைத்திருக்கும்
பத்மவாசனிடம் சேர்த்து
புவனம் புகழ்பெற்றார் ஜனகர்
இவர்கள் சக்திகளை
தன் மகவாய் பெற்றவர்கள்
புத்திரிகளை வளர்க்கும்
சுகம் தனையும் உற்றவர்கள்
பூதேவி தந்த ஸ்ரீதேவி
மிதிலை நகர் வந்த வேளை
திருமகள் பூமாலைகள்
மூன்றும் புவிபுகுந்தன,
ஊர்மிளை,மாண்டவி, ஸ்ருதகீர்த்தி
நாமம் தாங்கி
காவியத்தில் இடம் பெறவும்
ரகு குலம் தழைக்கவும்
தக்க தருணமதில்
தலைவன் தோள் சூட
காத்திருந்தன பூங்கோதைகள்!
குப்புற விழுந்து
தத்தி தவழ்ந்து
குந்தி மகிழ்ந்து
பட்டு சொக்காய் உடுத்தி
துளிர்நடை பயிலும் பருவமதில்
அரிசிப்பல் தெரிய சிரித்து
“அப்பா”என விளித்து
ஆனந்தமாய் வந்து
அவரை தழுவிக்கொள்ள
அவள் அடுத்த அடி வைக்கும்
முன்னே விழுந்திடுமோ
என விரைந்து வந்து வாரி
அணைத்திடுவார் ஜனகர்.
அவளாய் பழகட்டும்
விடுங்கள் என சுனைனை
சொல்லும் மொழிகளுக்கு
செவிமடுக்கார் தந்தை!
மார்மேலும்,தோள் மேலும்
இட்டு பக்குவமாய்
ஆசைபொங்க அன்பாய்
வளர்த்து வந்தார் ராஜரிஷி.
மைதிலியின் மழலை மொழியில்
லயித்திருப்பார்
பேதை அவள் பெதும்பை
வயது அடையும் முன்னே
அம்பிகையை வணங்கி
அறிவு புகட்டும் கடமையில்
ஆயகலைகளை கற்பிக்கும்
ஆசான் ஆனார் ஜனகர்!
வேதமும்,வேதாந்தமும்
கற்ற வித்தகர் இந்த ராஜரிஷி
தரணிக்கே நன்மை பயக்க வந்த
நாரணன் நாயகியே
தன்னிடம் வந்தடைந்தது
என்பதை உணர்ந்தவர் !
பலர் இணைந்தும் அசைக்க இயலா
சிவதனுசை தன் மகள்
அனாயாசமாய் எடுத்து
நாண் ஏற்ற கண்டவர்
இவள் அவதாரப் பிறப்பே
என அறிந்துக்கொண்டவர்.
தன் மகளாய் வளரும் போதே
தரணி வந்த திருவுருவை
எல்லா சுகங்களையும் ஈந்து
அரிய பொக்கிசமாய்
அன்புடன் வளர்க்க
சங்கல்பம் செய்து
நிறைவேற்றியவர்!
மைவிழியாள் மைதிலி !
நாளும் பொழுதும் இனிதே கழிய
பெதும்பை அவள்
தக்க துணையுடன் சேரும்
பருவம் வந்தடைந்தாள்!
சிறு பாவாடை கட்டிய மகள்
சீரிய முறையில் வளர்ந்து
சிருங்காரம் நிறைந்த பாவையாய்
அழகுப் பதுமையாய்
கருணை நிறைந்த கன்னியாய்
ஒயிலான ஓவியமாய்
சர்வ குண பூஷிதையாய்
செந்தாமரை நாயகியாய்
மன்னவன் ஒருவன்
தோள் சேரும் பூமாலையாய்
மாறும் தருணம் வந்ததென
அவள் வதனம் சொல்ல
சிவதனுசு அவள் மணாளனை
இட்டுவரும் என்றிருந்தார் .
பெண்கள் வளரும் பருவம்
விரைந்து கடந்து விடும்
ஜனகரின் குலக்கொடிகளாய்
நால்வர் வளர்ந்தனர்
சீராட்டி ,பாராட்டி
சிறப்புடன் வளர்த்தாலும் -அவை
செல்லுமிடம் சென்று படர்ந்தால்
தான் பெருமை!
சுயம்வரம் நடத்த தக்க
ஏற்ப்பாடு செய்யப்பட்டது
அரசாளும் ஆரியர்களுக்கு
அழைப்பு விடுத்தனர் !