- Joined
- Feb 28, 2022
- Messages
- 441
உலகெங்கும் உண்டு பலமொழி அவற்றில்
உவகை அளிக்கும் மொழி தமிழ்மொழி
கற்காலம் முதல் கணிணி காலம் வரை
களிப்புடன் பேசும் மொழி தமிழ் மொழி
பாமர மக்கள் முதல் பண்டிதர் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
பல்லாண்டு தொடர்ந்து வரும் தமிழ்மொழி
கிராமம் முதல் நகரம் எனத்தொடங்கி
கடல்கள் கடந்தும் கலப்பில்லாமொழி தமிழ்மொழி
சங்கத்துச் சான்றோர்கள் சங்கம் வைத்து
சந்தோஷத்துடன் வளர்த்த தமிழ்மொழி
சங்கமருவிய காலத்திலும் சற்றும்
சளைக்காது வளர்ந்தமொழி தமிழ்மொழி
பல்லவர்கள் பக்தியுடன் பரப்பிய மொழி
பல நாட்டவர்களை ஈர்த்த மொழி
சோழ நாட்டினிலும் நறுஞ்சோலையிடத்திலும் சக தோழர்கள் பரஸ்பரம் புரிந்திடும் தமிழ்மொழி
நாயக்கர் அவைதனிலே நயமுடன் தவழ்ந்தமொழி
இனிமைச் சுவையுள்ள தமிழ்மொழி
கபிலரும் பரணரும் கருத்துடன் போற்றிய தமிழ்மொழி
புகழ்பெற்ற புகழேந்தி புகழ்ந்து போற்றிய மொழி
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் களிப்புடனே
கவி புனைந்த மொழியே தமிழ்மொழி
குழந்தைகள் மழலையிலும் குமரியின் பேச்சிலும்
குளிர்மையாய் இருக்கும் மொழி
ஆடவர் நாவில் வந்திடும் அன்பு மொழி
அனைத்திலும் சிறந்த தமிழ்மொழி
பிறமொழிக் கவிஞர்களும் பிரியமுடன்
கற்கும் பெரும்மொழி தமிழ்மொழி
தசாப்தங்கள் பல கடந்த போதும்
தரணியிலே தலை நிமிர்ந்து நிற்கும் மொழி
தற்பெருமையற்ற தமிழ்மொழி
ஏழு கண்டங்களிலும் எண்ணற்ற நாடுகளிலும்
எள்ளளவும் இழப்பு ஏதுமன்றி
செழிப்புடனே வளரும் மொழி
செம்மைச் சிறப்புமிக்க செம்மொழியே
எங்கள் தமிழ்மொழி.......
உவகை அளிக்கும் மொழி தமிழ்மொழி
கற்காலம் முதல் கணிணி காலம் வரை
களிப்புடன் பேசும் மொழி தமிழ் மொழி
பாமர மக்கள் முதல் பண்டிதர் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
பல்லாண்டு தொடர்ந்து வரும் தமிழ்மொழி
கிராமம் முதல் நகரம் எனத்தொடங்கி
கடல்கள் கடந்தும் கலப்பில்லாமொழி தமிழ்மொழி
சங்கத்துச் சான்றோர்கள் சங்கம் வைத்து
சந்தோஷத்துடன் வளர்த்த தமிழ்மொழி
சங்கமருவிய காலத்திலும் சற்றும்
சளைக்காது வளர்ந்தமொழி தமிழ்மொழி
பல்லவர்கள் பக்தியுடன் பரப்பிய மொழி
பல நாட்டவர்களை ஈர்த்த மொழி
சோழ நாட்டினிலும் நறுஞ்சோலையிடத்திலும் சக தோழர்கள் பரஸ்பரம் புரிந்திடும் தமிழ்மொழி
நாயக்கர் அவைதனிலே நயமுடன் தவழ்ந்தமொழி
இனிமைச் சுவையுள்ள தமிழ்மொழி
கபிலரும் பரணரும் கருத்துடன் போற்றிய தமிழ்மொழி
புகழ்பெற்ற புகழேந்தி புகழ்ந்து போற்றிய மொழி
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் களிப்புடனே
கவி புனைந்த மொழியே தமிழ்மொழி
குழந்தைகள் மழலையிலும் குமரியின் பேச்சிலும்
குளிர்மையாய் இருக்கும் மொழி
ஆடவர் நாவில் வந்திடும் அன்பு மொழி
அனைத்திலும் சிறந்த தமிழ்மொழி
பிறமொழிக் கவிஞர்களும் பிரியமுடன்
கற்கும் பெரும்மொழி தமிழ்மொழி
தசாப்தங்கள் பல கடந்த போதும்
தரணியிலே தலை நிமிர்ந்து நிற்கும் மொழி
தற்பெருமையற்ற தமிழ்மொழி
ஏழு கண்டங்களிலும் எண்ணற்ற நாடுகளிலும்
எள்ளளவும் இழப்பு ஏதுமன்றி
செழிப்புடனே வளரும் மொழி
செம்மைச் சிறப்புமிக்க செம்மொழியே
எங்கள் தமிழ்மொழி.......