- Joined
- Aug 1, 2021
- Messages
- 520
வணக்கம் .
நான் தீபா செண்பகம். சிறுவயது முதல் புத்தக வாசிப்பு என்பதின் பயணம், இன்று இந்த வலைத்தள நாவல் உலகில் என்னை எழுத்தாளராக்கியுள்ளது. இப்படி ஒரு டிஜிட்டல் நாவல் உலகைப் பற்றி மிகவும் தாமதமாக, 2020 ன் தொடக்கத்தில் தான் அறிந்தேன். பிரதிலிபியில் வாசகியாய் இருந்த நான், எழுதிப் பார்த்தால் என்ன , என ஒரு கன்னி முயற்சியாக ஆரம்பித்தது, இருபது மாதங்களைக் கடந்து எனது எழுத்துப் பயணம் தொடர்கிறது.
கண்ணில் கண்டதையெல்லாம் கற்றவள், இன்று வலைத்தள நாவல் உலகையும் கற்று வருகிறேன்.
திருமண வாழ்வின் வெள்ளி விழாவை நோக்கிக் காத்திருக்கும் இல்லத்தரசி, ஆசிரியர் மனைவி,பதின்ம வயதைக் கடந்த பிள்ளைகளின் தாய், என்பதெல்லாம் தாண்டி இன்று எழுத்தாளர் என்ற அடைமொழியைப் பெற்று உள்ளேன்.
எனது முதல் கதை....மனதின் வார்த்தைகள் புரியாதோ , சென்ற வருடம் கிண்டிலில் பதிவேறியது , இன்று வைகை வாசகர்களுக்காக மீண்டும் இங்கு வருகிறது.
1.மனதின் வார்த்தைகள் புரியாதோ
2.தளிர் மனம் யாரைத் தேடுதோ.
3.மனச தாடி என் மணிக்குயிலே.
4.தான்வி கல்யாண வைபோகமே .
ஆகியவை எனது முடிவுற்ற தொடர்கதைகள்.
ஒரு தளத்தில் போட்டி கதையாக, ஹாசினி சந்திரா ,சிந்தா-ஜீவ நதியவள் என இரண்டும் உள்ளது.
இதை தவிர, மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே எனும் ஒரு தொடர்கதையும் மற்றொரு தளத்தில் தொடர்கிறது.
இங்கு ஒரு மீள் தொடராக...மனதின் வார்த்தைகள் புரியாதோ 80 அத்தியாயம் கொண்ட கதை பதிவிடப்படும்.
வாசக நெஞ்சங்கள் வாசித்து தங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.
நன்றி.
தீபா செண்பகம்.
நான் தீபா செண்பகம். சிறுவயது முதல் புத்தக வாசிப்பு என்பதின் பயணம், இன்று இந்த வலைத்தள நாவல் உலகில் என்னை எழுத்தாளராக்கியுள்ளது. இப்படி ஒரு டிஜிட்டல் நாவல் உலகைப் பற்றி மிகவும் தாமதமாக, 2020 ன் தொடக்கத்தில் தான் அறிந்தேன். பிரதிலிபியில் வாசகியாய் இருந்த நான், எழுதிப் பார்த்தால் என்ன , என ஒரு கன்னி முயற்சியாக ஆரம்பித்தது, இருபது மாதங்களைக் கடந்து எனது எழுத்துப் பயணம் தொடர்கிறது.
கண்ணில் கண்டதையெல்லாம் கற்றவள், இன்று வலைத்தள நாவல் உலகையும் கற்று வருகிறேன்.
திருமண வாழ்வின் வெள்ளி விழாவை நோக்கிக் காத்திருக்கும் இல்லத்தரசி, ஆசிரியர் மனைவி,பதின்ம வயதைக் கடந்த பிள்ளைகளின் தாய், என்பதெல்லாம் தாண்டி இன்று எழுத்தாளர் என்ற அடைமொழியைப் பெற்று உள்ளேன்.
எனது முதல் கதை....மனதின் வார்த்தைகள் புரியாதோ , சென்ற வருடம் கிண்டிலில் பதிவேறியது , இன்று வைகை வாசகர்களுக்காக மீண்டும் இங்கு வருகிறது.
1.மனதின் வார்த்தைகள் புரியாதோ
2.தளிர் மனம் யாரைத் தேடுதோ.
3.மனச தாடி என் மணிக்குயிலே.
4.தான்வி கல்யாண வைபோகமே .
ஆகியவை எனது முடிவுற்ற தொடர்கதைகள்.
ஒரு தளத்தில் போட்டி கதையாக, ஹாசினி சந்திரா ,சிந்தா-ஜீவ நதியவள் என இரண்டும் உள்ளது.
இதை தவிர, மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே எனும் ஒரு தொடர்கதையும் மற்றொரு தளத்தில் தொடர்கிறது.
இங்கு ஒரு மீள் தொடராக...மனதின் வார்த்தைகள் புரியாதோ 80 அத்தியாயம் கொண்ட கதை பதிவிடப்படும்.
வாசக நெஞ்சங்கள் வாசித்து தங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.
நன்றி.
தீபா செண்பகம்.