• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 20

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
20

“இப்போ நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க” என்றான் அமுதன்.

“சொல்லுங்க” என்று அமுதனை பார்த்தான் தீரன்.

நீங்க போய் நின்னவுடனே நிச்சயமா தி எவ்ளோ முடியுமோ அவ்ளோ இன்சல்ட் பண்ணுவா உங்களை. அவளும் அதுக்கு கஷ்ட படுவா. ஆனா அவளோட டார்கெட் நீங்க அவ லைஃப்ல திரும்பி வரக்கூடாது அவ்ளோதான்.”; என்றான் அமுதன்.

“ஏன்? எனக்கு ஒரு சந்தேகம், எதுக்கு உங்களை வருங்கால கணவர்னு என்கிட்ட சொன்னா? அவளுக்கு என்னை பிடிக்கலையோ?” என்றான் தீரன் மெதுவாக இதயத்துடிப்பு எகிற.

“உங்களை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எவ்ளோனா அவளோட சந்தோஷத்தைவிட வாழ்க்கையைவிட உங்களை தான் பிடிக்கும். ஏன்னா அவளுக்கு இப்போ ஹெல்த் சரி இல்ல.” என்றான் அமுதன்.

மெல்ல சிரித்தவன் உடனே “நான் கூட கேட்டேன் உனக்கு அவர்கூட சேர்ந்து வாழ ஆசை இல்லையா? ஏதோ ஒரு தடவை நடந்த தவறால இப்போவும் அவரை அந்த அளவு வெறுக்குறியா?” என்றான் அமுதன்.

“மிருதிக்கு என்னா ஆச்சு?” என்றான் பதற்றமாய்.

“இருங்க சொல்றேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? “ என்று அவன் விழிகளில் சிரிப்பு மின்ன தொடர்ந்தான்.

“ஏற்கனவே மூணு வருஷம் அவர் அனுபவிக்கிற தண்டனையே போதும். திரும்பி அவர்க்கூட வாழ போனா அவருக்கு தேவையில்லாம இன்னும் கஷ்டம் அதிகம். இப்போ போலவே முகம் கொடுத்து பேசாம இருந்துட்டா அவர் பொண்ணு கூட மட்டும் அடுத்த கட்டத்துக்கு போகணும்னு நினைக்கிறேன். அவருக்குன்னு வேற வாழக்கைய தேடிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்” என்றான் அமுதன் தன் தோழியை நினைத்து கண்கள் பனிக்க.

இந்த நிலையிலும் மிருதி தனக்காக கவலை படுவதை எண்ணி நெகிழ்ந்து போனான்.

“பிளீஸ் மிருதிக்கு என்ன ஆச்சு?" என்றான் தீரன் மீண்டும்.

“இது .. எப்படி நான் சொல்றது? நீங்க தான் மிருதிக்கிட்ட பேசி கேட்டு தெரிஞ்சிக்கணும்.” என்றான் அமுதன்.

“பிளீஸ் தீரன். அவ என் மேல ரொம்ப கோபமா இருக்கா. இப்ப போய் நான் கேட்டா சொல்லுவாளா? பிளீஸ் என்ன ஆச்சு சொல்லுங்க?” என்றான் தீரன் கெஞ்சலாய்.

“அது தீரன்..” என்று மீண்டும் அமுதன் தயங்க, “பிளீஸ் அமுதன். உங்க ஃப்ரெண்ட் தி மேல பிராமிசா கேக்குறேன் சொல்லுங்க”? என்றான் தீரன்.

“சரி சொல்றேன். அன்னைக்கு நீங்க பலமா மிருதி வயிற்றுல தாக்கினதுனால அவளுக்கு கர்பப்பைக்குள்ளையே பிளீடிங்க் அதிகமாகிடுச்கு. இது ரொம்ப றார் கேஸ்னு டாக்டர் சொல்றாங்க. பிளட் ஹீமோரேஜ் ன்னு சொல்றாங்க. எங்களுக்கு இதை பத்தி முதல்ல எதுவும் தெரியலை. மிதிஷா பிறந்தப்புறம் கூட எங்களுக்கு தெரியலை. அப்போகூட தி நல்லா தான் இருந்தா. தீடிர்ன்னு ஒரு நாள் ரொம்ப வயிறு வலிக்குது துடிச்சு போயிட்டா. அவளால நிக்க கூட முடியலை. ஹாஸ்பிட்டல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்த்தோம். இப்போ இந்த ஏழு மாசமா ரொம்ப கஷ்டபட்றா” என்றான் அமுதன்.
 
Top