"இப்போ சொல்லு என்னை என்ன பண்ண சொல்ற? உனக்கே தெரியும் நான் அவரை எவ்ளோ விரும்புறேன்னு? ஆனா, அவரோட கடந்த கால காலத்துல மதிப்பே இல்லாத ஒரு பொண்ணுக்காக என்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டாரு. அப்படிபட்டவரோட என்னால வாழ முடியாது" என்றாள் ரோஷமாக கண்ணீரை துடைத்து கொண்டு.
"நீ சொல்றது எல்லாமே புரியுது தி. ரொம்ப பெரிய தப்பு பண்ணிருக்காரு தீரன். உண்மை தான். ஆனா, இப்போ திருந்தி நீயும் திசாவும் அவர்கூட சேர்ந்து வாழணும்னு கேட்கிறது எந்த விதத்துல நியாமம் இல்லைன்னு சொல்லு. எனக்கு மட்டும் நீ குடும்பமா இருக்கணும்னு ஆசையா இருக்காதா? சரி அவர் தப்பு செஞ்சுட்டார். இன்னும் எத்தனை நாளைக்கு இல்ல எத்தனை வருசத்துக்கு அவர் மேல கோவமா இருக்க போற? எத்தனை வருசத்துக்கு தள்ளி வைக்க போற?" என்றான் அமுதன்.
"நான் எதுக்கு கோவமா இருக்கணும்? தள்ளி வைக்க போறதில்ல. எனக்கு போதும் இந்த வாழ்க்கை. தயவு செஞ்சு எனக்கு டைவஸ் மட்டும் வாங்கி கொடுத்திடு." என்றாள் மிருதி.
"சரி. டைவஸ் வாங்கி தரேன். அதுக்கு அப்புறம் நீ காலம் முழுக்க தனியா இருக்க போறியா? " என்றான் அமுதன் உள்ளடக்கிய கோபத்தோடு.
"தனியா இருக்கனோ இல்லையோ கண்டிப்பா என்னால அவர்கூட சேர்ந்து வாழ முடியாது" என்றாள் மிருதி.
இவ்வளவு மனம் நொந்து அடம் பிடிக்கும் மிருதியை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது அமுதனுக்கு.
சிறிது நேரம் யோசித்தவன்,
"சரி தி. நீ அவர்கூட சந்தோஷமா இருக்க முடியாதுன்னு சொல்றப்ப எதுக்கு கட்டாயபடுத்தனும்? அதனால கண்டிப்பா டைவஸ் வாங்கிடலாம். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்" என்றான் அமுதன் திட்டவட்டமாக.
'என்ன?' என்பது போல் பார்த்தாள் மிருதி.
"அவரை பிரிஞ்சப்புறம் நீ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கறேன்னு எனக்கு சத்தியம் பண்ணு போதும்" என்றான் மனதுக்குள் அவளின் எண்ணவோட்டங்களை அறிந்து கொண்டு.
"என்ன?" என்றாள் அதிர்ச்சியாய் மிருதி.
"நா எதுவும் தப்பா சொல்லலையே? எனக்கு நீ குடும்பமா நல்லா இருக்கணும். அவ்ளோ தான். அதுக்கு நீ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தாலும் ஓக்கே தான்" என்றான் முகத்தில் எந்தவித உணர்வும் காட்டாமல்.
அவனின் தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போல் இருந்தது மிருதிக்கு.
"உனக்கு என்ன மூளை கேட்டு போச்சா?" என்றாள் மிருதி கோவமாக.
உள்ளுக்குள் விழுந்து விழுந்து சிரித்தாலும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல்.
"அப்படி தான் வச்கிகோ. நான் சொன்னது மாதிரி நடக்கணும். இல்ல நானே நடத்திக்காட்டுவேன் பார்த்துக்க" என்று வேகமாக எழுந்து சென்றுவிட்டான் வெளியே.
எதுவும் பேசாமல் தரையிலேயே படுத்தபடி அழ தொடங்கினாள் இறுதி.
ஸ்ரீஷாவாலும் என்ன செய்வது என்று தெரியாமல், தேற்றவும் முடியாமல் அமைதியாய் இருந்தாள்.
மறுநாள் காலை,
"செல்லக்குட்டி. இன்னைக்கு அப்பாகூட ஊருக்கு போக போறீங்க நீங்க. அங்க போய் சமத்தா இருக்கணும். எந்த சேட்டையும் செய்யக்கூடாது. சரியா?" என்றாள் மிருதி கண்ணீரை மறைத்து கொண்டு.
"அம்மா நீ வரலையா?" என்றாள் குழந்தை.
"அது எனக்கு உடம்பு சரி இல்ல. டாக்டர் அங்கிள் கிட்ட போகணும். அதுவும் இல்லாம இனி நீங்க அப்பா கூட தான் இருக்க போறீங்க. " என்றாள் மிருதி.
"இல்ல நீயும் வா. நான் மட்டும் போகமாட்டேன்" என்றாள் திஷா குட்டி கண்ணீருடன்.
உள்ளே வராமல் வெளியே நின்றிருந்த அமுதனுக்கும் இது கேட்க கண்கள் கலங்கியது.
"இல்லடா கண்ணா. அம்மாவால இப்போ இல்ல இனி எப்போவும் வரமுடியாது. இனி இப்படி தான் நீ புரிஞ்சுக்க" என்று அவளின் நெற்றியில் முத்தமிட, கோபத்தில் குரல் மட்டும் வந்தது.
"ஹுக்கும்.. வளர்ந்தவங்களுக்கே எதுவும் புரிஞ்சு நடந்துக்க தெரியலை. இதுல மூணு வயசு குழந்தை புரிஞ்சு நடந்துக்கணும்னு அட்வைஸ் வேற?" என்றான் அமுதன்.
எதுவும் பேசாமல் இருந்த மிருதி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு. "சரிடா தங்கம். நேரமாகுது. போய்ட்டு வாங்க" என்றாள் கண்ணீரோடு.
திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது குழந்தை.
இதை காண சகியாமல் உள்ளே ஓடினாள் மிருதி.
"தீரன் அவ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்னா நீங்களும் அவளுக்கு துணை போன மாதிரி உடனே போகணும்னு சொல்ட்றீங்களே?" என்றான் அமுதன்.
"வேற என்னை என்ன பண்ண சொல்றிங்க அமுதன்? என்னால முடிஞ்ச அரைக்கும் இறங்கி வினதுட்டேன். அவதான் புரிஞ்சுக்க மாட்டேன்னு கண்ணை கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கா. எனக்கு இதுக்கு மேல என்ன செய்றதுன்னு புரியலை. நான் கிளம்புறேன்" என்று கிளம்பினான் தீரன்.
தீரனும் திஷாவும் சென்னைக்கு பயணமாகினர்.
அங்கிருந்து வந்துவிட்டாலும் மனம் கேட்காமல் மீண்டும் போன் செய்வான் தீரன். வழக்கம்போல் எடுக்க மாட்டாள் மிருதி.
மிருதியின் மேல் இருந்த கோபத்தால் அவளிடம் பேசாமல் இருந்தான் அமுதன். ஸ்ரீஷா மட்டும் எப்பொழுதும் போல் பேசினாள்.
நாட்கள் வேகமாய் கடந்தன.
மகளை பிரிந்த ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும் கணவனை மன்னிக்க முடியாமல் துடித்து கொண்டிருந்தாள் மிருதி.
இருந்தாலும் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று தீரனுக்கு விவாகாரத்து நோட்டீஸ் அனுப்பினாள் மிருதி.
அதை பார்த்து பதறி மீண்டும் மீண்டும் அவளுக்கு ஃபோன் செய்தான் தீரன் எடுக்க முடியாமல் தவிர்த்தாள் மிருதி.
அமுதனுக்கு இவ்விஷயத்தை தீரன் கூற மீண்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். அவன் எல்லாவற்றையும் திட்டி முடித்த பின், "பேசிட்டியா? நீ எவ்ளோ திட்டினாலும் என்னோட முடிவு இது தான்" என்று சென்றுவிட்டாள்.
அன்றிலிருந்து மிருதியை முழுவதும் ஒதுக்க ஆரம்பித்தான் அமுதன்.
மூன்று மாதங்கள் கடந்தது அவளின் முடிவில் எந்த மாற்றமும் இல்ல என்று உணர்ந்த தீரனும் ஒரு முடிவு செய்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்பினான்.
திஷா சென்ற புதிதில் அம்மா அம்மா என்று அழுகிறாள் ஸ்ரீஷா கூற, போனில் அடிக்கடி சமாதானபடுத்துவாள் மிருதி. இருந்தும் தீரனிடம் எதுவும் பேசமாட்டாள்.
மாதங்கள் கடக்க, மிருதியின் உடல்நிலையில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அடிக்கடி அவதிபட்டாள். உடனிருந்து எல்லா உதவியும் செய்தாலும் பேசமாட்டான் அமுதன்.
அவனின் மௌனம் வதைத்தாலும் மிருதி எதுவும் பேசமாட்டாள்.
ஒரு வழியாய் தீரன் மிருதி இருவருக்கும் விவாகரத்தும் கிடைத்தது.
திஷாவை தூக்கி கொண்டு வந்த தீரன், "நீ கேட்ட மாதிரி விவாகரத்து கிடைச்சிருச்சு இப்போ சந்தோஷமா? " என்றான் வெற்று சிரிப்பொன்றை உதிர்த்து.
விழிகளுக்கே எட்டாத சிரிப்பை இதழ்களில் பூசிக்கொண்டு "ரொம்ப சந்தோஷம். உங்ககிட்ட இருந்து எப்போ விடுதலை கிடைக்கும்னு இருந்தேன். கிடைச்சிருச்சு வெளியேறினாள் மிருதி.
"அம்மா" என்ற குரலில் மரமாய் நிற்க, மனம் துடிக்க திரும்பினாள்.
"அம்மா" அவளின் அருகில் நின்றிருந்தாள் திஷா.
"திஷா" என்று அவளை ஆசையாய் தூக்கி முகம் முழுவதும் முத்த மழையால் நனைத்தாள் மிருதி.
"நல்லா இருக்கியாடா?" என்றாள் கண்ணீரோடு.
"நல்லா இருக்கேன்" என்றாள் திஷா.
"அம்மா இனி நான் உன் பொண்ணு இல்லையா?" என்றது குழந்தை பாவமாய்.
"இல்லடா தங்கம். எப்பவுமே நீ என் பொண்ணு தான்." என்று அணைத்துக்கொண்டாள் மிருதி.
"என்கிட்ட எப்பவும் போல போன்ல பேசுவீயாம்மா?" என்றாள் திஷா.
"ஆமாடா தங்கம். அம்மா இருக்க வரைக்கும் எப்பவும் போல உன்கூட பேசிட்டே இருப்பேன். நீ சமத்தா இருக்கணும்." என்று திஷாவின் நெற்றியில் மூட்டினாள்.
இவர்களின் தழுவலை பார்த்து கொண்டிருந்த தீரனின் விழிகளிலும் கண்ணீர் துளிர்க்க மறைத்தபடி சுண்டி விட்டான்.
"திஷா போலாம்டா. அப்பாக்கு டைம் ஆகுது" என்றான் சற்று தூரத்தில் நின்று.
அவனின் குரலில் தன்னை இழந்தாலும் குழந்தையிடம் கூறிக்கொண்டு கிளம்பினாள் மிருதி.
அவளின் நடையில் இருந்த சோர்வை கண்டவன் வெளியில் நின்ற அமுதனிடம் குழந்தையை கொடுத்தனுப்பிவிட்டு அவளறியாமல் அவளை தொடர்ந்தான்.
"நீ சொல்றது எல்லாமே புரியுது தி. ரொம்ப பெரிய தப்பு பண்ணிருக்காரு தீரன். உண்மை தான். ஆனா, இப்போ திருந்தி நீயும் திசாவும் அவர்கூட சேர்ந்து வாழணும்னு கேட்கிறது எந்த விதத்துல நியாமம் இல்லைன்னு சொல்லு. எனக்கு மட்டும் நீ குடும்பமா இருக்கணும்னு ஆசையா இருக்காதா? சரி அவர் தப்பு செஞ்சுட்டார். இன்னும் எத்தனை நாளைக்கு இல்ல எத்தனை வருசத்துக்கு அவர் மேல கோவமா இருக்க போற? எத்தனை வருசத்துக்கு தள்ளி வைக்க போற?" என்றான் அமுதன்.
"நான் எதுக்கு கோவமா இருக்கணும்? தள்ளி வைக்க போறதில்ல. எனக்கு போதும் இந்த வாழ்க்கை. தயவு செஞ்சு எனக்கு டைவஸ் மட்டும் வாங்கி கொடுத்திடு." என்றாள் மிருதி.
"சரி. டைவஸ் வாங்கி தரேன். அதுக்கு அப்புறம் நீ காலம் முழுக்க தனியா இருக்க போறியா? " என்றான் அமுதன் உள்ளடக்கிய கோபத்தோடு.
"தனியா இருக்கனோ இல்லையோ கண்டிப்பா என்னால அவர்கூட சேர்ந்து வாழ முடியாது" என்றாள் மிருதி.
இவ்வளவு மனம் நொந்து அடம் பிடிக்கும் மிருதியை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது அமுதனுக்கு.
சிறிது நேரம் யோசித்தவன்,
"சரி தி. நீ அவர்கூட சந்தோஷமா இருக்க முடியாதுன்னு சொல்றப்ப எதுக்கு கட்டாயபடுத்தனும்? அதனால கண்டிப்பா டைவஸ் வாங்கிடலாம். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்" என்றான் அமுதன் திட்டவட்டமாக.
'என்ன?' என்பது போல் பார்த்தாள் மிருதி.
"அவரை பிரிஞ்சப்புறம் நீ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கறேன்னு எனக்கு சத்தியம் பண்ணு போதும்" என்றான் மனதுக்குள் அவளின் எண்ணவோட்டங்களை அறிந்து கொண்டு.
"என்ன?" என்றாள் அதிர்ச்சியாய் மிருதி.
"நா எதுவும் தப்பா சொல்லலையே? எனக்கு நீ குடும்பமா நல்லா இருக்கணும். அவ்ளோ தான். அதுக்கு நீ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தாலும் ஓக்கே தான்" என்றான் முகத்தில் எந்தவித உணர்வும் காட்டாமல்.
அவனின் தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போல் இருந்தது மிருதிக்கு.
"உனக்கு என்ன மூளை கேட்டு போச்சா?" என்றாள் மிருதி கோவமாக.
உள்ளுக்குள் விழுந்து விழுந்து சிரித்தாலும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல்.
"அப்படி தான் வச்கிகோ. நான் சொன்னது மாதிரி நடக்கணும். இல்ல நானே நடத்திக்காட்டுவேன் பார்த்துக்க" என்று வேகமாக எழுந்து சென்றுவிட்டான் வெளியே.
எதுவும் பேசாமல் தரையிலேயே படுத்தபடி அழ தொடங்கினாள் இறுதி.
ஸ்ரீஷாவாலும் என்ன செய்வது என்று தெரியாமல், தேற்றவும் முடியாமல் அமைதியாய் இருந்தாள்.
மறுநாள் காலை,
"செல்லக்குட்டி. இன்னைக்கு அப்பாகூட ஊருக்கு போக போறீங்க நீங்க. அங்க போய் சமத்தா இருக்கணும். எந்த சேட்டையும் செய்யக்கூடாது. சரியா?" என்றாள் மிருதி கண்ணீரை மறைத்து கொண்டு.
"அம்மா நீ வரலையா?" என்றாள் குழந்தை.
"அது எனக்கு உடம்பு சரி இல்ல. டாக்டர் அங்கிள் கிட்ட போகணும். அதுவும் இல்லாம இனி நீங்க அப்பா கூட தான் இருக்க போறீங்க. " என்றாள் மிருதி.
"இல்ல நீயும் வா. நான் மட்டும் போகமாட்டேன்" என்றாள் திஷா குட்டி கண்ணீருடன்.
உள்ளே வராமல் வெளியே நின்றிருந்த அமுதனுக்கும் இது கேட்க கண்கள் கலங்கியது.
"இல்லடா கண்ணா. அம்மாவால இப்போ இல்ல இனி எப்போவும் வரமுடியாது. இனி இப்படி தான் நீ புரிஞ்சுக்க" என்று அவளின் நெற்றியில் முத்தமிட, கோபத்தில் குரல் மட்டும் வந்தது.
"ஹுக்கும்.. வளர்ந்தவங்களுக்கே எதுவும் புரிஞ்சு நடந்துக்க தெரியலை. இதுல மூணு வயசு குழந்தை புரிஞ்சு நடந்துக்கணும்னு அட்வைஸ் வேற?" என்றான் அமுதன்.
எதுவும் பேசாமல் இருந்த மிருதி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு. "சரிடா தங்கம். நேரமாகுது. போய்ட்டு வாங்க" என்றாள் கண்ணீரோடு.
திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது குழந்தை.
இதை காண சகியாமல் உள்ளே ஓடினாள் மிருதி.
"தீரன் அவ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்னா நீங்களும் அவளுக்கு துணை போன மாதிரி உடனே போகணும்னு சொல்ட்றீங்களே?" என்றான் அமுதன்.
"வேற என்னை என்ன பண்ண சொல்றிங்க அமுதன்? என்னால முடிஞ்ச அரைக்கும் இறங்கி வினதுட்டேன். அவதான் புரிஞ்சுக்க மாட்டேன்னு கண்ணை கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கா. எனக்கு இதுக்கு மேல என்ன செய்றதுன்னு புரியலை. நான் கிளம்புறேன்" என்று கிளம்பினான் தீரன்.
தீரனும் திஷாவும் சென்னைக்கு பயணமாகினர்.
அங்கிருந்து வந்துவிட்டாலும் மனம் கேட்காமல் மீண்டும் போன் செய்வான் தீரன். வழக்கம்போல் எடுக்க மாட்டாள் மிருதி.
மிருதியின் மேல் இருந்த கோபத்தால் அவளிடம் பேசாமல் இருந்தான் அமுதன். ஸ்ரீஷா மட்டும் எப்பொழுதும் போல் பேசினாள்.
நாட்கள் வேகமாய் கடந்தன.
மகளை பிரிந்த ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும் கணவனை மன்னிக்க முடியாமல் துடித்து கொண்டிருந்தாள் மிருதி.
இருந்தாலும் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று தீரனுக்கு விவாகாரத்து நோட்டீஸ் அனுப்பினாள் மிருதி.
அதை பார்த்து பதறி மீண்டும் மீண்டும் அவளுக்கு ஃபோன் செய்தான் தீரன் எடுக்க முடியாமல் தவிர்த்தாள் மிருதி.
அமுதனுக்கு இவ்விஷயத்தை தீரன் கூற மீண்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். அவன் எல்லாவற்றையும் திட்டி முடித்த பின், "பேசிட்டியா? நீ எவ்ளோ திட்டினாலும் என்னோட முடிவு இது தான்" என்று சென்றுவிட்டாள்.
அன்றிலிருந்து மிருதியை முழுவதும் ஒதுக்க ஆரம்பித்தான் அமுதன்.
மூன்று மாதங்கள் கடந்தது அவளின் முடிவில் எந்த மாற்றமும் இல்ல என்று உணர்ந்த தீரனும் ஒரு முடிவு செய்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்பினான்.
திஷா சென்ற புதிதில் அம்மா அம்மா என்று அழுகிறாள் ஸ்ரீஷா கூற, போனில் அடிக்கடி சமாதானபடுத்துவாள் மிருதி. இருந்தும் தீரனிடம் எதுவும் பேசமாட்டாள்.
மாதங்கள் கடக்க, மிருதியின் உடல்நிலையில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அடிக்கடி அவதிபட்டாள். உடனிருந்து எல்லா உதவியும் செய்தாலும் பேசமாட்டான் அமுதன்.
அவனின் மௌனம் வதைத்தாலும் மிருதி எதுவும் பேசமாட்டாள்.
ஒரு வழியாய் தீரன் மிருதி இருவருக்கும் விவாகரத்தும் கிடைத்தது.
திஷாவை தூக்கி கொண்டு வந்த தீரன், "நீ கேட்ட மாதிரி விவாகரத்து கிடைச்சிருச்சு இப்போ சந்தோஷமா? " என்றான் வெற்று சிரிப்பொன்றை உதிர்த்து.
விழிகளுக்கே எட்டாத சிரிப்பை இதழ்களில் பூசிக்கொண்டு "ரொம்ப சந்தோஷம். உங்ககிட்ட இருந்து எப்போ விடுதலை கிடைக்கும்னு இருந்தேன். கிடைச்சிருச்சு வெளியேறினாள் மிருதி.
"அம்மா" என்ற குரலில் மரமாய் நிற்க, மனம் துடிக்க திரும்பினாள்.
"அம்மா" அவளின் அருகில் நின்றிருந்தாள் திஷா.
"திஷா" என்று அவளை ஆசையாய் தூக்கி முகம் முழுவதும் முத்த மழையால் நனைத்தாள் மிருதி.
"நல்லா இருக்கியாடா?" என்றாள் கண்ணீரோடு.
"நல்லா இருக்கேன்" என்றாள் திஷா.
"அம்மா இனி நான் உன் பொண்ணு இல்லையா?" என்றது குழந்தை பாவமாய்.
"இல்லடா தங்கம். எப்பவுமே நீ என் பொண்ணு தான்." என்று அணைத்துக்கொண்டாள் மிருதி.
"என்கிட்ட எப்பவும் போல போன்ல பேசுவீயாம்மா?" என்றாள் திஷா.
"ஆமாடா தங்கம். அம்மா இருக்க வரைக்கும் எப்பவும் போல உன்கூட பேசிட்டே இருப்பேன். நீ சமத்தா இருக்கணும்." என்று திஷாவின் நெற்றியில் மூட்டினாள்.
இவர்களின் தழுவலை பார்த்து கொண்டிருந்த தீரனின் விழிகளிலும் கண்ணீர் துளிர்க்க மறைத்தபடி சுண்டி விட்டான்.
"திஷா போலாம்டா. அப்பாக்கு டைம் ஆகுது" என்றான் சற்று தூரத்தில் நின்று.
அவனின் குரலில் தன்னை இழந்தாலும் குழந்தையிடம் கூறிக்கொண்டு கிளம்பினாள் மிருதி.
அவளின் நடையில் இருந்த சோர்வை கண்டவன் வெளியில் நின்ற அமுதனிடம் குழந்தையை கொடுத்தனுப்பிவிட்டு அவளறியாமல் அவளை தொடர்ந்தான்.