- Joined
- Jul 31, 2021
- Messages
- 90
அத்தியாயம் - 15
ஜெகன் கரத்தில், அம்பரியின் மொபைலைப் பார்க்கவும் சத்யாவின் தலைச்சுற்றல் இன்னமும் அதிகமானதே தவிரக் குறையவில்லை. கீழே கிடந்தவன், சட்டென மேலே எழுந்து அமர்ந்து, "இது.. இது அம்பரியோட மொபைல் தான?" என்று கேட்க.. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே அப்பொழுது தான் தெரிந்தது, அது அம்பரியின் போன் என்று.
எனவே அனைவரும் திகைப்புடன் திரும்பி ஜெகனையும், அவனது கையிலிருக்கும் போனையும் நோக்க, அதற்கு ஜெகனோ.. "ஆமா சத்யா சார். இதுல எங்களுக்கு நிறைய க்ளூஸ் கிடைச்சிருக்கு." எனக் கூறினான் மர்மமாக.
அதைக் கேட்டதும் இன்னமும் பதட்டமாகி.. "என்ன க்ளூஸ் சார்.. அப்படி என்ன க்ளூஸ் உங்களுக்குக் கிடைச்சிருக்கு?" என்று சத்யா மீண்டும் கேட்க, இப்படி வெளி இடத்தில் நின்று எதையும் விவாதிக்க வேண்டாம் என்று கருதிய அசோக்கோ.. "சத்யா.. இப்படிப் பப்ளிக்ல நின்னுட்டு இந்த மாதிரி முக்கியமான விஷயமெல்லாம் நாம பேசவேண்டாம்.
நாம நேரா ஸ்டேஷனுக்கே போய்டலாம்.." எனக் கூற, அது ஜெகனுக்கும் உவப்பாய் இருந்தது.
எனவே அம்பரியின் பெற்றோர் உட்பட அனைவரும் கிளம்பி, ஜெகனின் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைய, அங்குச் சென்றதும் ஜெகனோ.. "இது அம்பரியோட போன். இந்தப் போன், இந்தக் காலேஜோட சுற்றுவட்டார பகுதியில் தான் கிடைச்சுது" என்று கூறவும், சத்யா..
"அப்போ காலேஜ்ல இருந்து தான் அம்பரியை யாரோ கடத்திட்டு போயிருக்காங்கன்னு சொல்லறீங்களா? ஆனா, நான் தான் காலேஜை சுத்தி சி.சி.டி.வி கேமரா வச்சுருக்கேனே.." என்று கேள்வி கேட்டான்.
அவனை ஒரு கணம் முறைத்துப் பார்த்த ஜெகனோ.. "இங்க நான் பேசும்போது, குறுக்க யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது.." என்று கர்ஜனையாய்க் கூற, சத்யாவுக்கு உள்ளுக்குள் சுளீரென்றது.
உள்ளூர அந்த வலியுடன் அமைதி காத்தபடி அவன் இருக்க, அசோக் தான்.. "இந்தப் போன்ல ஏதோ முக்கியமான க்ளூ கிடைச்சுருக்கறதா சொன்னீங்களே சார்.. அது என்ன?" என்று ஆர்வமாய் வினவினார்.
அதற்கு அவரிடம் திரும்பிய ஜெகனோ.. "ஹ்ம்ம்.. அந்த க்ளூ என்னன்னு தான கேட்கறீங்க? சொல்லட்டுமா? இந்தப் போன்ல, அம்பரி காணாம போன அன்னைக்குக் கிட்டத்தட்ட இருபது அவுட்கோயிங் கால் போயிருக்கு. அதுவும் யாருக்கு? எல்லாம் ஒரே நம்பருக்கு.
அந்த நம்பர் யாரோடதுன்னு விசாரிச்சுப் பார்த்தா தான் தெரியுது.. அது எல்லாம் நம்ம டிடெக்ட்டிவ் சாரோடதுன்னு.." என்று எகத்தாளமாகச் சத்யாவைப் பார்த்துக் கூற, சத்யாவின் காலின் கீழ் பூமி நழுவியது.
உடனே முற்றிலும் பதட்டமாகி.. "சார்.. பொய் சொல்லாதீங்க.. அம்பரி வீட்டில இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி எனக்குப் போன் பண்ணி, காலேஜுக்குப் போறதா சொன்னதோட சரி.. அதுக்குப் பிறகு எனக்கு எந்தப் போனுமே பண்ணல." என்று அவன் கூற, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த அவனை, எழுந்து சென்று சட்டைக் காலரைப் பற்றித் தூக்கினான் ஜெகன்.
அதைக் கண்ட அனைவருக்குமே பேரதிர்ச்சி தான்.
உடனே சம்பத் மேலே எழுந்து.. "சார்.. என்ன சார் சொல்லறீங்க? உங்களுக்குச் சத்யா சார் மேல ஏற்கனவே இருக்கற வன்மத்தை வச்சுட்டு அவரை இப்படி நீங்க பழிவாங்கறது நல்லா இல்ல.." என்று எகிற.. அவனைக் கைப்பற்றி அமரவைத்தார் அசோக்.
"சம்பத் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.." என்று அவனை அடக்கிவிட்டு, ஜெகனிடம் திரும்பியவர்.. "சார்.. இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? ஒரு மனுஷன் இந்தக் கேசுக்காக எத்தனை அலைச்சல் அலைஞ்சுருக்கான்.. எவ்வளவு தவிச்சுருக்கான்னு தெரியாம, நீங்க பாட்டுக்கு அவன் மேல கண்டபடி பழிபோடறீங்க?' என்று அசோக்கும் சற்று குரலை உயர்த்தியபடி கேட்க..
ஜெகனோ.. "என்ன சார், என்னமோ அந்த ஆளு மட்டும் தான் அலைஞ்ச மாதிரி பேசறீங்க? அப்போ இந்தக் கேசுக்காக ராத்திரி பகலா உழைச்ச நானெல்லாம் உங்க யார் கண்ணுக்கும் தெரியலையா?
அதிலும் இவனே தப்பு பண்ணிட்டு, இவனே தேடுவானாம்.. அப்படிப்பட்ட ஒருத்தனை நம்புவீங்களாம்.. ஆனா ஒரு போலீஸ்காரன நீங்க நம்ப மாட்டீங்களா?" என்று பதிலுக்குத் திரும்பி எகிற, அசோக்கின் முகமோ தாழ்ந்தது.
ஆனாலும் விடாத சம்பத்தோ.. "சத்யா சாரோட நம்பர், அம்பரி போன்ல லாஸ்ட் கால் லிஸ்ட்ல இருந்தா, அவர் தான் குற்றவாளின்னு சொல்லிடுவீங்களா சார்? அம்பரி தனக்கு ஏதோ ஆபத்துன்னு தெரிஞ்சுட்டு கூட, சத்யா சாருக்கு போன் பண்ண நினச்சுருக்கலாம் இல்ல?" என்று அவன் கேட்க, அவனை ஒரு கணம் அமைதியுடன் பார்த்தான் ஜெகன்.
பிறகு சத்யாவின் சட்டையை விட்டுடவிட்டு, சம்பத்திடம் அவன் வர, சத்யாவை இன்னொரு போலீஸ் அதிகாரி வந்து பிடித்துக் கொண்டார். சத்யாவிடமிருந்து நேராகச் சம்பத்திடம் வந்த ஜெகனோ, அவனை மிக அருகே நெருங்க, தான் நிற்கும் நிலையில் இருந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்தான் சம்பத்.
அவன் அமர்ந்த பிறகும் கூட, குனிந்து அவனுக்கருகே சென்ற ஜெகன், "அவ்வளவு சப்போர்ட்டா நீ அந்தச் சத்யாவுக்கு? அம்பரிக்கு ஏதோ ஆபத்துன்னு சத்யாவுக்குப் போன் செய்திருப்பான்னு சொன்ன இல்ல?
அப்போ சத்யா எங்க இருந்தான்? பெங்களூருல, நித்யகல்யாணி மேடம் பக்கத்துல தான? ஆனா, அவனோட அந்த நம்பர், அந்தக் கால் வந்த நேரத்துல எப்படி உங்க காலஜூகிட்ட இருந்த டவரை காமிக்குது?" என்று கூற, இப்பொழுது உள்ளுக்குள் பற்றிக் கொண்ட திகிலுடன் சம்பத் சத்யாவைத் திரும்பிப் பார்க்க, சத்யாவின் தலை மெல்லத் தாழ்ந்தது.
அதைக் கண்டுகொள்ளாத ஜெகனோ, மேலும் தொடர்ந்தான்.. "அதுக்கும் மேல, அம்பரியோட போனும் அதே டவர்ல தான் கடைசியா சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு.." என்று கூறி முடிக்க, அம்பரியின் தந்தை வெகுண்டெழுந்து சென்று சத்யாவின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார்.
கூடவே அம்பரியின் தாயும் மேலே எழுந்து, சத்யாவிடம் சென்று.. "பாவி.. பாவி.. இத்தனை நாளா உன்னப் போய் நல்லவன்னு நம்பிட்டு இருந்தோமே.. சொல்லுடா.. சொல்லு.. எங்க எங்களோட பொண்ணு? நீ எல்லாம் நல்லா இருப்பியா? உன் குடும்பம் நல்லா இருக்குமா?
ஒரு பொண்ணோட வாழ்க்கையை இப்படி அழிச்சிருக்கியே நீயெல்லாம் நல்லபடியா வாழ்ந்துருவியா?
சொல்லுடா.. என் பொண்ணு எங்கன்னு சொல்லுடா.." என்று அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு அரற்ற, அங்கிருந்த மற்றவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, அவரிடமிருந்து சத்யாவைப் பிரித்தனர்.
ஆனால் இன்னமும் அசோக்கும், சம்பத்தும் அதிர்ச்சியுடன் சத்யாவைப் பார்த்துக் கொண்டிருக்க.. ஜெகனோ.. "சார்.. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. இவர்கிட்ட இருந்து உண்மையை எப்படிக் கொண்டு வரணும்னு எனக்கு நல்லாவே தெரியும்." என்று கூறி அவர்களை எல்லாம் வெளியே கிளப்பினான்.
அவர்கள் எல்லோரும் கிளம்பிய பிறகு சத்யாவிடம் வந்த ஜெகன், "எப்படியெப்படி.. சார் பெரிய டிடெக்ட்டிவ் சூரப்புலியோ.. நீயே தப்புச் செய்யலைன்னா கூட, உன்மேல நானே பழியைப் போட்டு இந்தக் கேசுல உன்ன உள்ளத் தள்ளணும்னு நினச்சுருந்தேன்.. ஹா.. ஹா.. இப்ப இப்படி வந்து என்கிட்டப் போய் மாட்டிகிட்டயே டா.. " என்று கூறிவிட்டு அவனைத் தரதரவெனச் செல்லுக்குள் இழுத்துச் சென்றான்.
அதை வெளியே நின்று பார்த்த அசோக்கின் கண்கள் அளவில்லாது விரிந்தன.
அதன் பிறகான ஒவ்வொரு நாளும் சத்யாவுக்கு நரகத்தில் உழன்றன.
அது போலவே சம்பத்துக்கும், சத்யாவின் துரோகம் அதிர்ச்சியை விளைவித்தது. நாளுக்கு நாள் அம்பரி கிடைப்பாள் என்ற எதிர்பார்ப்பு தவிடு பொடியாகியவாறே இருந்தது.
இந்நிலையில் அவர்களது இறுதியாண்டு பரிட்சையும் வர, இனியாவும், புகழியும் மனதில் வலியுடன் பரீட்சை எழுதச் சென்றனர்.
இங்கு அம்பரியின் பெற்றோர் கிட்டத்தட்ட அரையுயிராகிப் போனார்கள். ஆனால் அம்பரியைப் பற்றிய எந்தத் தகவலுமே அவர்களுக்கு வந்தபாடாய் இல்லை.
ஒவ்வொரு நாளும் சம்பத், அசோக், அம்பரியின் பெற்றோர் என அனைவருமே ஜெகனுக்குப் போன் செய்தும், அவனை நேரில் சென்று பார்த்தும் அம்பரியைப் பற்றி விசாரித்து வந்தனர்.
ஆனால் அம்பரி இருக்குமிடம் பற்றிச் சத்யா வாயே துறக்கவில்லை என்று பதில் தான் அவனிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் அவர்களுக்கான பரீட்சை எல்லாம் முடிந்து, அன்று புகழியும், இனியாவும் கல்லூரி விட்டுக் கிளம்பும் நாள் வந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளிலே மிகவும் உயிர்தோழிகளாகிவிட்ட அவர்கள், தங்களது மற்றொரு தோழியை இந்தக் கல்லூரியிலேயே தொலைத்துவிட்டுத் திரும்புவோம் என்று கனவிலும் எதிரிபார்க்கவில்லை.
அவர்கள் மூவருமாகச் சென்று சுற்றிய இடங்களையெல்லாம் கண்ணீரால் நனைத்துவிட்டு, கல்லூரியை விட்டு வெளியே வந்தார்கள் அவர்கள்.
அந்த வெளி வாயிலிலேயே சம்பத் நின்றுகொண்டிருக்க, அவனருகே ஒரு காரும் இருந்தது. அவன் கண்கள் இன்னமும் சிவந்து போய் இருந்தன.
அவனருகே பெண்கள் இருவரும் செல்லவும், அமைதியாக.. "கார்ல ஏறுங்க.." என்றான்.
இனியா அவளது ஹாஸ்டல் அறையைக் காலி செய்துவிட்டு வந்திருந்ததால், அவளது பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அவன் கார் ஏற்பாடு செய்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட பெண்கள் இருவரும் அமைதியாகக் காரில் ஏறிச் சென்றனர்.
ஆனால் அந்தக் கார் நேராகப் புகழின் வீடு நோக்கி செல்லாது, வேறு பாதையில் செல்லவும், இனியா.. "சார்.. இன்னும் புகழி அவளோட திங்ஸ் எல்லாம் எடுக்கல. நீங்க அவ ரூமுக்கு போங்க.." என்று கூறினாள்.
அதற்குச் சம்பத்தோ.. "போகலாம்.. நம்ம கூடவே அம்பரியையும் கூட்டிட்டு போகலாம்.." என்று கூற, அவன் கூறிய வார்த்தைக்கு மூளையில் உறைக்கவே சில வினாடிகள் ஆனது இருவருக்கும்.
அவன் இப்படிக் கூறியதும் ஒருங்கே அதிர்ந்த இருவரும்.. "சார்.. என்ன சொல்லறீங்க நீங்க?" என்று பதறிப்போய்க் கேட்க.. சம்பத் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியபடி.. "அம்பரி கிடைச்சுட்டாளாம்.." என்று மட்டும் கூற, அவன் கூறியதை இரண்டு பெண்களாலும் நம்பவே முடியவில்லை.
"சார்.. சார்.. என்ன சொல்லறீங்க? நீங்க சொல்லறது நிஜம் தானா? உண்மையைச் சொல்லுங்க சார்.." என்று இருவரும் மாற்றி மாற்றிக் கண்ணீருடன் கேட்க.. சம்பத்தோ.. "ஆமாம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஜெகன் போன் பண்ணினார்.
அம்பரியை கண்டுபிடிச்சுட்டாங்க.. நானும் அவளை நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்தேன்.." என்று அவன் கூற, இங்கு இரண்டு பெண்கள் கொண்ட ஆனந்தத்துக்கும் அளவே இல்லாது போனது.
"ச்சே.. அந்தச் சத்யா சார நாம எந்த அளவுக்கு நம்பினோம்.. அவருக்கெல்லாம் தூக்குத் தண்டனை தான் கிடைக்கணும்.. ச்சே.. மனுஷனா அவர்? நம்ம அபி அவர்கிட்ட எந்த அளவுக்குச் சித்திரவதை அனுபவிச்சாளோ?" என்று இருவரும் அரற்றிக் கொண்டு வர, அதே நேரத்தில் காவல் நிலையமும் வந்துவிட்டது.
கார் முழுவதுமாக நிற்கும் முன்னரே புகழியும், இனியாவும் காரிலிருந்து இருபுறமும் குதித்துக் கீழிறங்க, அவர்கள் பின்னோடே சம்பத்தும் இறங்கிப் போனான்.
இருவரும் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததும், அங்கு அவள் தாய், தந்தைக்கு மத்தியில் கையில் ஒரு குளிர்பானத்துடன் அமர்ந்திருந்தாள் அம்பரி.
முகமெல்லாம் கருத்துப் போய் உடலெல்லாம் இளைத்துப் போய், முடியெல்லாம் காய்ந்து, உதடு வறண்டு, வறண்ட உதட்டிலிருந்து சிறுது ரத்தம் கசிந்து, முகமெல்லாம் ஆங்காங்கு வீங்கி.. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தாள் அவள்.
அவளைப் பார்த்ததும் இனியாவும், புகழியும், "அபி.." என்று கத்திக்கொண்டே அவளைப் போய் இறுக்க அணைத்துக் கொள்ள, அவர்களை அணைக்கும் திராணி கூட இல்லாது மெல்ல அவர்களைச் சுற்றிக் கைகளைப் பொத்திக் கொண்டு மெளனமாகக் கண்ணீர் உகுத்தாள் அவள்.
"அபி.. நீ வந்துட்டியா டி.. ஹையோ அபி உன்ன இப்படிப் பார்க்கவ முடில டி.. என்னடி இப்படி ஆகிட்ட? முகமெல்லாம் இப்படி வீங்கிப் போய் இருக்கு.. உன்ன அந்த ஆளு அடிச்சு கொடுமைப்படுத்தினாரா டி.." என்று மற்ற இருவரும் அழுதபடியே கேட்க.. அம்பரியால் அவர்களிடம் பேச கூட முடியவில்லை.
அவளது நிலையை உணர்ந்த இருவரும்.. "நீ ஒரு நிமிஷம் இரு.. நாங்க போய் அந்த ஆள நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டுட்டு வரோம்.." என்று கூறிவிட்டு, சத்யாவை வைத்திருக்கும் சிறைக்குச் செல்ல, அங்கு முகத்தில் வழிந்தோடும் ரத்தத்துடன் அமர்ந்திருந்தது.. வேறு யாருமல்ல.. அசோக் தான்.
அப்பொழுது அவன் கன்னத்தில் ஒரு கரம் இடிபோல இறங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கரத்திற்க்கு சொந்தக்காரன்.. சந்தேகத்திற்கு இடமின்றிச் சத்யாவே தான்.
என்னடா இது கதையே மாறுதே.. என்று புகழியும், இனியாவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க.. மீண்டும் ஒருமுறை அஷோக்கின் கன்னத்தில், கரத்தை இறக்கப் போன சத்யாவின் கரத்தை தடுத்து நிறுத்தினான் ஜெகன்.
"போதும் சத்யா.. இதுக்குமேல அடிச்சா செத்துருவான்.." என்று கூற.. "இவனெல்லாம் சாகறது தான் சரி.." என்றுவிட்டு, மீண்டும் அடிக்கப் போனான் சத்யா.
"எப்பா டிடெக்ட்டிவ்.. நீ பாட்டுக்கு அடிச்ச கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்ப.. ஆனா, லாக் அப் டெத்துன்னு என் மேல தான விசாரணைக் கமிஷன் வைப்பாங்க.." என்று கூறிவிட்டு பார்க்க.. வெளியே புகழியும், இனியாவும் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றிருப்பது தெரிந்தது.
உடனே அவர்களைச் சுட்டிய ஜெகன்.. "அங்க பாரு மணப்பெண் தோழிகள்.. எவ்வளவு ஷாக்கா நிக்கறாங்க பாரு.. சீக்கிரம் போய் உண்மையைச் சொல்லு.. இல்லைனா அவங்களும் சம்பத் மாதிரி அதிர்ச்சில மயங்கி விழுந்துடப் போறாங்க" என்று கூற, அவர்களைப் பார்த்து புன்னகையுடன் வெளியே வந்தான் சத்யா.
"என்னம்மா.. ரெண்டு பேருக்கும் பயங்கர ஷாக்கா?" என்று அவன் கேட்க.. அவனை விழி விரித்து நோக்கிய இருவரும்.. "ஆம்" என்பதாய் தலையசைக்க.. "ஹ்ம்ம் இருக்கத் தான செய்யும்?
சரி.. முழுக்கதையும் தெரியணுமா?" என்று மேலும் கேட்டான் அவன். இன்னமும் அதிர்ச்சி விலகாத பார்வையுடனே அவர்கள் இன்னமும் தலையை அசைக்க.. ஒரு சிறு புன்னகையுடன் கூறத் துவங்கினான் கதையை.
"எனக்கு இந்த அசோக் மேல ஆரம்பத்துலையே சந்தேகம் இருந்துச்சு. அதாவது.. நித்யகல்யாணி ஆன்ட்டிக்கு ஆக்சிடென்ட் ஆனதுல இருந்தே எனக்கு அவர் மேல சந்தேகம்.
நித்யகல்யாணி ஆன்ட்டிக்கு போன் அனுப்பி, புருஷன் சென்டிமென்ட்டை வச்சு, யாரோ மாதிரி பேசி, அவங்களைத் தனியா வரச் சொல்லி, அவங்களை லாரி ஏத்தி கொல்லப் பார்த்தது எல்லாம் இந்த அசோக் தான்.." என்று கூற, இரு பெண்களின் விழியும் ஏகத்துக்கும் விரிந்தது.
"இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இன்னும் இருக்கு விஷயம்." என்று கூறிய சத்யா.. "நித்யகல்யாணி ஆன்ட்டியை கொடுமை செய்ததுக்காக அவர் ஜெயில்ல இருந்தப்போ, இன்னும் அதிகமா ரவுடிங்க கூடக் கனெக்க்ஷன் ஆகிடுச்சு.
அந்த ரவுடிங்க எல்லாரையும் வச்சு இங்க ஒரு டிராமா ஏற்பாடு பண்ணினான். அது தான் அந்த ஷங்கர்.. புகழியைக் காதலிக்கறதா சொல்லி பின்னடியே சுத்தி டார்ச்சர் பண்ணினது.
இதுல புகழி, ஷங்கரோட காதல ஏத்துக்கிட்டு இருந்தா, அந்த விஷயம் ரொம்ப அசிங்கமா வெளில பரப்பப்பட்டு.. இந்தக் காலேஜ் பொண்ணுங்களே இப்படித் தான். இங்க காலேஜ் நடக்கல.. வேற தொழில் நடக்குதுன்னு கதை கட்டலாம்னு பிளான் பண்ணியிருக்காங்க. அதிலும் புகழி, நல்லா படிக்கற பொண்ணு.. அவளுக்கு இப்போ யூனிவர்சிட்டி ராங்க்கே கிடைக்கும். அப்படிப்பட்ட பொண்ணு மேலயே பழி போட்டாத் தான், இந்தக் காலேஜோட வளர்ச்சியைத் தடுக்க முடியும்ன்னு திட்டம் போட்டிருக்காங்க.
ஆனா புகழி, ஷங்கரை மதிக்கவே இல்ல. ஆனாலும், ஷங்கருக்கு புகழி மேல உண்மையாவே காதல் வந்துருச்சு. அதனால தான் அவன் விடாம புகழி பின்னாடியே சுத்தினது.
இப்போ ஷங்கரை வச்சு போட்ட பிளான் சொதப்பினதும்.. வெறியான அசோக்.. அந்தச் சமயத்துல பெங்களூருல இருந்த ஆன்ட்டிகிட்ட சின்னக் கேம் ப்ளே பண்ணி.. அவங்களையே கொல்லப் பார்த்திருக்கான்.
அந்த முயற்சியில ஆன்ட்டி தப்பிச்சுட்டாங்க. ஆனா, தன் புருஷனுக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு பயப்பட ஆரம்பிச்சாங்க. அவங்களோட அந்தப் பாசத்தை உபயோகப்படுத்த நினச்ச அசோக்.. அவருக்குத் தெரிஞ்ச ரவுடிங்க மூலமா நம்ம அம்பரிய கடத்தியிருக்காங்க.
ஏன்னா, அம்பரிக்கும்.. எனக்கும் இருக்கற நேசம் இவங்களுக்கும் தெரிஞ்சிருக்கு. இங்க அம்பரி விஷயத்துல என்ன வீக் ஆக்கணும்னு நினச்சுருக்காங்க அவங்க.
அதனால நான் இங்க ஓடி வர, அங்க பெங்களூருல ஆன்ட்டிகிட்ட திருந்தின புருஷனா வேஷம் போட்டிருக்கார் இந்த அசோக்.
ஏற்கனவே உடலும் பலவீனமா இருந்த ஆன்ட்டிக்கு இந்த ஆளோட வேஷத்தை புரிஞ்சுக்க முடியல. அதனால அவரை எனக்குத் துணையா இங்க அனுப்பிருக்காங்க. இங்க வந்து எனக்கு உதவி செய்யற மாதிரி, என்னோட எல்லாச் செயல்பாடுகளையும் இந்த ஆள் நோட் பண்ணிட்டே இருந்திருக்காரு.
இதெல்லாம் எதுக்காகன்னா.. ஆண்ட்டிக்கு இந்தக் காலேஜை நிர்வாகம் பண்ண முடியல.. அப்படின்னு பேர் கிளப்பி விட்டு, ஆண்ட்டி கிட்ட இருந்து இந்தக் காலேஜை பிடுங்கத் தான் இத்தனை ஆட்டமும்.
இதுல எனக்கு அவர்மேல ஏற்கனவே இருந்த சந்தேகம் இன்னும் அதிகமாச்சு. அதிலும் ரொம்ப நல்லவர் மாதிரி அவர் உருகி உருகிப் பேசவும் எனக்கு இவர் தான் இத்தனைக்கும் காரணம்னு உறுதியே ஆகிடுச்சு..” எனக் கூறி அவன் நிறுத்த, அப்பொழுது அங்கு வந்த ஜெகனோ, சத்யாவுக்கு அருகே இன்னுமொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி..
"இதுல இத டிடெக்ட்டிவ் மேல எனக்கு ஏற்கனவே வெறுப்பு.. சத்யா கூடவே அசோக்கும் இருந்ததால, அவரோட டீமை வேற யாராவது மேனேஜ் பண்ணனும்.
அதனால சத்யா ஒரு நாள் என்ன நேரடியா சந்திக்க வந்தார். வந்தவர்.. என்கிட்ட அவரைப் பத்தி எல்லாத்தையும் விளக்கமா பேசி.. தன்னோட தொழில் மேல் அவருக்கு இருந்த காதலைப் பற்றியும் பேச.. அதுவரைக்கும் இவரை விரோதியா பார்த்துட்டு இருந்த நான்.. பயங்கரமா இம்ப்ரெஸ் ஆகி.. அவரோட விசிறியாகிட்டேன்.
அதனால, நாங்க ஒரு ட்ராமா பண்ணினோம். அதாவது.. நான் வேணும்னே சத்யாவை இந்தக் கேசுல சிக்க வைக்கற மாதிரியும், அம்பரிய கண்டுபிடிக்கறதுல எனக்கு ஆர்வமும் இல்லாத மாதிரியும் ஒரு நாடகம் போட்டோம்.
அதுல அசோக்கோட சேர்த்து நீங்க எல்லாரும் நம்பிட்டீங்க. இப்போ அசோக்.. அம்பரியை வெளில கொண்டு வருவார்ன்னு நினைச்சோம். ஆனா, அவர் அப்படிச் செய்யல. அம்பரியை வெளிநாட்டுக்கு கடத்த சொல்லி, அவரோட ரவுடி ப்ரண்டுங்க கிட்ட ஒப்படைச்சுட்டார்.
இது எங்களுக்குக் கடைசி நிமிஷத்துல தான் தெரிஞ்சு, நாங்க அதுவரைக்கும் சேர்த்த ஆதாரத்தை எல்லாம் திரட்டிட்டு அங்க போய் நின்னா.. சார் துளி கூடப் பயமே இல்லாம எங்களையே கொல்லப் பார்க்கறாரு.
கடைசியா.. அவருக்கும், அவரோட நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டிய ட்ரீட்மெண்ட் எல்லாம் கொடுத்து.. இதோ இப்படி இங்க கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருக்கோம்.." என்று கூறி முடிக்க.. இனியாவும், புகழியும் அசந்தே போனார்கள்.
"ச்சே.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கு.. நாங்க உங்களப் போய்த் தப்பா நினச்சுட்டமே சார்.." என அவர்கள் வருந்த.. அதற்குச் சத்யாவோ... "இத்தனை நடந்ததுக்கை அப்பறமும் நீங்க என்ன நம்பியிருந்தா தான் ஆச்சர்யமே.." என்று கூறி சிரித்தான்.
அப்பொழுது அங்கு அம்பரியும் வர, விரைந்து அவளிடம் சென்ற சத்யாவோ.. அவளைத் தோளோடு அணைத்து, "உங்களோட பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சுடுச்சா ஜெகன்? நான் அம்பரியை கூட்டிட்டு போகலாமா?" எனக் கேட்க.. அதற்குத் தலையைச் சொறிந்து கொண்ட ஜெகனோ, வேறெங்கோ பார்வையைப் பதித்தபடி..
"என்னோட பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சுடுச்சு.. ஆனா, நீங்க தான் அவங்க அப்பா, அம்மாகிட்ட பார்மாலிட்டிக்கு கூட எதுவும் கேட்காம இபப்டி நின்னுட்டு இருக்கீங்க.." என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற, அப்பொழுது தான் இப்படி அம்பரியை அணைத்துக் கொண்டிருப்பது சத்யாவிற்கு உறைக்க, சட்டென்று கையை விளக்கிவிட்டு, அம்பரியின் பெற்றோரைப் பார்த்தால்.. அவர்களோ விழிகளில் தேங்கிய வியப்புடன் சத்யாவையும், அம்பரியையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்து இன்னமும் சுற்றி இருந்தவர்கள் சிரிக்க.. சற்று அவர்கள் அருகே வந்த சத்யாவோ.. "உங்க பொண்ணு.. நீலாம்பரியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுப்பீங்களா?" என்று கேட்க, அவன் இப்பொழுதும் நீலாம்பரி என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தோர் எல்லோரும் வாய்விட்டு சிரிக்க, "என்னது நீலாம்பரியா?" என்று அவ்வளவு நேரம் பேசாதிருந்த அம்பரி, இப்பொழுது சத்தமாய்க் கேட்டு சத்யாவின் தலையிலேயே கொட்டு ஒன்று வைக்க.. அந்தக் காவல் நிலையமே.. ரணகளத்திலும் கலகலப்பானது.
சுபம்.
ஜெகன் கரத்தில், அம்பரியின் மொபைலைப் பார்க்கவும் சத்யாவின் தலைச்சுற்றல் இன்னமும் அதிகமானதே தவிரக் குறையவில்லை. கீழே கிடந்தவன், சட்டென மேலே எழுந்து அமர்ந்து, "இது.. இது அம்பரியோட மொபைல் தான?" என்று கேட்க.. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே அப்பொழுது தான் தெரிந்தது, அது அம்பரியின் போன் என்று.
எனவே அனைவரும் திகைப்புடன் திரும்பி ஜெகனையும், அவனது கையிலிருக்கும் போனையும் நோக்க, அதற்கு ஜெகனோ.. "ஆமா சத்யா சார். இதுல எங்களுக்கு நிறைய க்ளூஸ் கிடைச்சிருக்கு." எனக் கூறினான் மர்மமாக.
அதைக் கேட்டதும் இன்னமும் பதட்டமாகி.. "என்ன க்ளூஸ் சார்.. அப்படி என்ன க்ளூஸ் உங்களுக்குக் கிடைச்சிருக்கு?" என்று சத்யா மீண்டும் கேட்க, இப்படி வெளி இடத்தில் நின்று எதையும் விவாதிக்க வேண்டாம் என்று கருதிய அசோக்கோ.. "சத்யா.. இப்படிப் பப்ளிக்ல நின்னுட்டு இந்த மாதிரி முக்கியமான விஷயமெல்லாம் நாம பேசவேண்டாம்.
நாம நேரா ஸ்டேஷனுக்கே போய்டலாம்.." எனக் கூற, அது ஜெகனுக்கும் உவப்பாய் இருந்தது.
எனவே அம்பரியின் பெற்றோர் உட்பட அனைவரும் கிளம்பி, ஜெகனின் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைய, அங்குச் சென்றதும் ஜெகனோ.. "இது அம்பரியோட போன். இந்தப் போன், இந்தக் காலேஜோட சுற்றுவட்டார பகுதியில் தான் கிடைச்சுது" என்று கூறவும், சத்யா..
"அப்போ காலேஜ்ல இருந்து தான் அம்பரியை யாரோ கடத்திட்டு போயிருக்காங்கன்னு சொல்லறீங்களா? ஆனா, நான் தான் காலேஜை சுத்தி சி.சி.டி.வி கேமரா வச்சுருக்கேனே.." என்று கேள்வி கேட்டான்.
அவனை ஒரு கணம் முறைத்துப் பார்த்த ஜெகனோ.. "இங்க நான் பேசும்போது, குறுக்க யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது.." என்று கர்ஜனையாய்க் கூற, சத்யாவுக்கு உள்ளுக்குள் சுளீரென்றது.
உள்ளூர அந்த வலியுடன் அமைதி காத்தபடி அவன் இருக்க, அசோக் தான்.. "இந்தப் போன்ல ஏதோ முக்கியமான க்ளூ கிடைச்சுருக்கறதா சொன்னீங்களே சார்.. அது என்ன?" என்று ஆர்வமாய் வினவினார்.
அதற்கு அவரிடம் திரும்பிய ஜெகனோ.. "ஹ்ம்ம்.. அந்த க்ளூ என்னன்னு தான கேட்கறீங்க? சொல்லட்டுமா? இந்தப் போன்ல, அம்பரி காணாம போன அன்னைக்குக் கிட்டத்தட்ட இருபது அவுட்கோயிங் கால் போயிருக்கு. அதுவும் யாருக்கு? எல்லாம் ஒரே நம்பருக்கு.
அந்த நம்பர் யாரோடதுன்னு விசாரிச்சுப் பார்த்தா தான் தெரியுது.. அது எல்லாம் நம்ம டிடெக்ட்டிவ் சாரோடதுன்னு.." என்று எகத்தாளமாகச் சத்யாவைப் பார்த்துக் கூற, சத்யாவின் காலின் கீழ் பூமி நழுவியது.
உடனே முற்றிலும் பதட்டமாகி.. "சார்.. பொய் சொல்லாதீங்க.. அம்பரி வீட்டில இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி எனக்குப் போன் பண்ணி, காலேஜுக்குப் போறதா சொன்னதோட சரி.. அதுக்குப் பிறகு எனக்கு எந்தப் போனுமே பண்ணல." என்று அவன் கூற, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த அவனை, எழுந்து சென்று சட்டைக் காலரைப் பற்றித் தூக்கினான் ஜெகன்.
அதைக் கண்ட அனைவருக்குமே பேரதிர்ச்சி தான்.
உடனே சம்பத் மேலே எழுந்து.. "சார்.. என்ன சார் சொல்லறீங்க? உங்களுக்குச் சத்யா சார் மேல ஏற்கனவே இருக்கற வன்மத்தை வச்சுட்டு அவரை இப்படி நீங்க பழிவாங்கறது நல்லா இல்ல.." என்று எகிற.. அவனைக் கைப்பற்றி அமரவைத்தார் அசோக்.
"சம்பத் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.." என்று அவனை அடக்கிவிட்டு, ஜெகனிடம் திரும்பியவர்.. "சார்.. இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? ஒரு மனுஷன் இந்தக் கேசுக்காக எத்தனை அலைச்சல் அலைஞ்சுருக்கான்.. எவ்வளவு தவிச்சுருக்கான்னு தெரியாம, நீங்க பாட்டுக்கு அவன் மேல கண்டபடி பழிபோடறீங்க?' என்று அசோக்கும் சற்று குரலை உயர்த்தியபடி கேட்க..
ஜெகனோ.. "என்ன சார், என்னமோ அந்த ஆளு மட்டும் தான் அலைஞ்ச மாதிரி பேசறீங்க? அப்போ இந்தக் கேசுக்காக ராத்திரி பகலா உழைச்ச நானெல்லாம் உங்க யார் கண்ணுக்கும் தெரியலையா?
அதிலும் இவனே தப்பு பண்ணிட்டு, இவனே தேடுவானாம்.. அப்படிப்பட்ட ஒருத்தனை நம்புவீங்களாம்.. ஆனா ஒரு போலீஸ்காரன நீங்க நம்ப மாட்டீங்களா?" என்று பதிலுக்குத் திரும்பி எகிற, அசோக்கின் முகமோ தாழ்ந்தது.
ஆனாலும் விடாத சம்பத்தோ.. "சத்யா சாரோட நம்பர், அம்பரி போன்ல லாஸ்ட் கால் லிஸ்ட்ல இருந்தா, அவர் தான் குற்றவாளின்னு சொல்லிடுவீங்களா சார்? அம்பரி தனக்கு ஏதோ ஆபத்துன்னு தெரிஞ்சுட்டு கூட, சத்யா சாருக்கு போன் பண்ண நினச்சுருக்கலாம் இல்ல?" என்று அவன் கேட்க, அவனை ஒரு கணம் அமைதியுடன் பார்த்தான் ஜெகன்.
பிறகு சத்யாவின் சட்டையை விட்டுடவிட்டு, சம்பத்திடம் அவன் வர, சத்யாவை இன்னொரு போலீஸ் அதிகாரி வந்து பிடித்துக் கொண்டார். சத்யாவிடமிருந்து நேராகச் சம்பத்திடம் வந்த ஜெகனோ, அவனை மிக அருகே நெருங்க, தான் நிற்கும் நிலையில் இருந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்தான் சம்பத்.
அவன் அமர்ந்த பிறகும் கூட, குனிந்து அவனுக்கருகே சென்ற ஜெகன், "அவ்வளவு சப்போர்ட்டா நீ அந்தச் சத்யாவுக்கு? அம்பரிக்கு ஏதோ ஆபத்துன்னு சத்யாவுக்குப் போன் செய்திருப்பான்னு சொன்ன இல்ல?
அப்போ சத்யா எங்க இருந்தான்? பெங்களூருல, நித்யகல்யாணி மேடம் பக்கத்துல தான? ஆனா, அவனோட அந்த நம்பர், அந்தக் கால் வந்த நேரத்துல எப்படி உங்க காலஜூகிட்ட இருந்த டவரை காமிக்குது?" என்று கூற, இப்பொழுது உள்ளுக்குள் பற்றிக் கொண்ட திகிலுடன் சம்பத் சத்யாவைத் திரும்பிப் பார்க்க, சத்யாவின் தலை மெல்லத் தாழ்ந்தது.
அதைக் கண்டுகொள்ளாத ஜெகனோ, மேலும் தொடர்ந்தான்.. "அதுக்கும் மேல, அம்பரியோட போனும் அதே டவர்ல தான் கடைசியா சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு.." என்று கூறி முடிக்க, அம்பரியின் தந்தை வெகுண்டெழுந்து சென்று சத்யாவின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார்.
கூடவே அம்பரியின் தாயும் மேலே எழுந்து, சத்யாவிடம் சென்று.. "பாவி.. பாவி.. இத்தனை நாளா உன்னப் போய் நல்லவன்னு நம்பிட்டு இருந்தோமே.. சொல்லுடா.. சொல்லு.. எங்க எங்களோட பொண்ணு? நீ எல்லாம் நல்லா இருப்பியா? உன் குடும்பம் நல்லா இருக்குமா?
ஒரு பொண்ணோட வாழ்க்கையை இப்படி அழிச்சிருக்கியே நீயெல்லாம் நல்லபடியா வாழ்ந்துருவியா?
சொல்லுடா.. என் பொண்ணு எங்கன்னு சொல்லுடா.." என்று அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு அரற்ற, அங்கிருந்த மற்றவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, அவரிடமிருந்து சத்யாவைப் பிரித்தனர்.
ஆனால் இன்னமும் அசோக்கும், சம்பத்தும் அதிர்ச்சியுடன் சத்யாவைப் பார்த்துக் கொண்டிருக்க.. ஜெகனோ.. "சார்.. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. இவர்கிட்ட இருந்து உண்மையை எப்படிக் கொண்டு வரணும்னு எனக்கு நல்லாவே தெரியும்." என்று கூறி அவர்களை எல்லாம் வெளியே கிளப்பினான்.
அவர்கள் எல்லோரும் கிளம்பிய பிறகு சத்யாவிடம் வந்த ஜெகன், "எப்படியெப்படி.. சார் பெரிய டிடெக்ட்டிவ் சூரப்புலியோ.. நீயே தப்புச் செய்யலைன்னா கூட, உன்மேல நானே பழியைப் போட்டு இந்தக் கேசுல உன்ன உள்ளத் தள்ளணும்னு நினச்சுருந்தேன்.. ஹா.. ஹா.. இப்ப இப்படி வந்து என்கிட்டப் போய் மாட்டிகிட்டயே டா.. " என்று கூறிவிட்டு அவனைத் தரதரவெனச் செல்லுக்குள் இழுத்துச் சென்றான்.
அதை வெளியே நின்று பார்த்த அசோக்கின் கண்கள் அளவில்லாது விரிந்தன.
அதன் பிறகான ஒவ்வொரு நாளும் சத்யாவுக்கு நரகத்தில் உழன்றன.
அது போலவே சம்பத்துக்கும், சத்யாவின் துரோகம் அதிர்ச்சியை விளைவித்தது. நாளுக்கு நாள் அம்பரி கிடைப்பாள் என்ற எதிர்பார்ப்பு தவிடு பொடியாகியவாறே இருந்தது.
இந்நிலையில் அவர்களது இறுதியாண்டு பரிட்சையும் வர, இனியாவும், புகழியும் மனதில் வலியுடன் பரீட்சை எழுதச் சென்றனர்.
இங்கு அம்பரியின் பெற்றோர் கிட்டத்தட்ட அரையுயிராகிப் போனார்கள். ஆனால் அம்பரியைப் பற்றிய எந்தத் தகவலுமே அவர்களுக்கு வந்தபாடாய் இல்லை.
ஒவ்வொரு நாளும் சம்பத், அசோக், அம்பரியின் பெற்றோர் என அனைவருமே ஜெகனுக்குப் போன் செய்தும், அவனை நேரில் சென்று பார்த்தும் அம்பரியைப் பற்றி விசாரித்து வந்தனர்.
ஆனால் அம்பரி இருக்குமிடம் பற்றிச் சத்யா வாயே துறக்கவில்லை என்று பதில் தான் அவனிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் அவர்களுக்கான பரீட்சை எல்லாம் முடிந்து, அன்று புகழியும், இனியாவும் கல்லூரி விட்டுக் கிளம்பும் நாள் வந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளிலே மிகவும் உயிர்தோழிகளாகிவிட்ட அவர்கள், தங்களது மற்றொரு தோழியை இந்தக் கல்லூரியிலேயே தொலைத்துவிட்டுத் திரும்புவோம் என்று கனவிலும் எதிரிபார்க்கவில்லை.
அவர்கள் மூவருமாகச் சென்று சுற்றிய இடங்களையெல்லாம் கண்ணீரால் நனைத்துவிட்டு, கல்லூரியை விட்டு வெளியே வந்தார்கள் அவர்கள்.
அந்த வெளி வாயிலிலேயே சம்பத் நின்றுகொண்டிருக்க, அவனருகே ஒரு காரும் இருந்தது. அவன் கண்கள் இன்னமும் சிவந்து போய் இருந்தன.
அவனருகே பெண்கள் இருவரும் செல்லவும், அமைதியாக.. "கார்ல ஏறுங்க.." என்றான்.
இனியா அவளது ஹாஸ்டல் அறையைக் காலி செய்துவிட்டு வந்திருந்ததால், அவளது பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அவன் கார் ஏற்பாடு செய்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட பெண்கள் இருவரும் அமைதியாகக் காரில் ஏறிச் சென்றனர்.
ஆனால் அந்தக் கார் நேராகப் புகழின் வீடு நோக்கி செல்லாது, வேறு பாதையில் செல்லவும், இனியா.. "சார்.. இன்னும் புகழி அவளோட திங்ஸ் எல்லாம் எடுக்கல. நீங்க அவ ரூமுக்கு போங்க.." என்று கூறினாள்.
அதற்குச் சம்பத்தோ.. "போகலாம்.. நம்ம கூடவே அம்பரியையும் கூட்டிட்டு போகலாம்.." என்று கூற, அவன் கூறிய வார்த்தைக்கு மூளையில் உறைக்கவே சில வினாடிகள் ஆனது இருவருக்கும்.
அவன் இப்படிக் கூறியதும் ஒருங்கே அதிர்ந்த இருவரும்.. "சார்.. என்ன சொல்லறீங்க நீங்க?" என்று பதறிப்போய்க் கேட்க.. சம்பத் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியபடி.. "அம்பரி கிடைச்சுட்டாளாம்.." என்று மட்டும் கூற, அவன் கூறியதை இரண்டு பெண்களாலும் நம்பவே முடியவில்லை.
"சார்.. சார்.. என்ன சொல்லறீங்க? நீங்க சொல்லறது நிஜம் தானா? உண்மையைச் சொல்லுங்க சார்.." என்று இருவரும் மாற்றி மாற்றிக் கண்ணீருடன் கேட்க.. சம்பத்தோ.. "ஆமாம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஜெகன் போன் பண்ணினார்.
அம்பரியை கண்டுபிடிச்சுட்டாங்க.. நானும் அவளை நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்தேன்.." என்று அவன் கூற, இங்கு இரண்டு பெண்கள் கொண்ட ஆனந்தத்துக்கும் அளவே இல்லாது போனது.
"ச்சே.. அந்தச் சத்யா சார நாம எந்த அளவுக்கு நம்பினோம்.. அவருக்கெல்லாம் தூக்குத் தண்டனை தான் கிடைக்கணும்.. ச்சே.. மனுஷனா அவர்? நம்ம அபி அவர்கிட்ட எந்த அளவுக்குச் சித்திரவதை அனுபவிச்சாளோ?" என்று இருவரும் அரற்றிக் கொண்டு வர, அதே நேரத்தில் காவல் நிலையமும் வந்துவிட்டது.
கார் முழுவதுமாக நிற்கும் முன்னரே புகழியும், இனியாவும் காரிலிருந்து இருபுறமும் குதித்துக் கீழிறங்க, அவர்கள் பின்னோடே சம்பத்தும் இறங்கிப் போனான்.
இருவரும் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததும், அங்கு அவள் தாய், தந்தைக்கு மத்தியில் கையில் ஒரு குளிர்பானத்துடன் அமர்ந்திருந்தாள் அம்பரி.
முகமெல்லாம் கருத்துப் போய் உடலெல்லாம் இளைத்துப் போய், முடியெல்லாம் காய்ந்து, உதடு வறண்டு, வறண்ட உதட்டிலிருந்து சிறுது ரத்தம் கசிந்து, முகமெல்லாம் ஆங்காங்கு வீங்கி.. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தாள் அவள்.
அவளைப் பார்த்ததும் இனியாவும், புகழியும், "அபி.." என்று கத்திக்கொண்டே அவளைப் போய் இறுக்க அணைத்துக் கொள்ள, அவர்களை அணைக்கும் திராணி கூட இல்லாது மெல்ல அவர்களைச் சுற்றிக் கைகளைப் பொத்திக் கொண்டு மெளனமாகக் கண்ணீர் உகுத்தாள் அவள்.
"அபி.. நீ வந்துட்டியா டி.. ஹையோ அபி உன்ன இப்படிப் பார்க்கவ முடில டி.. என்னடி இப்படி ஆகிட்ட? முகமெல்லாம் இப்படி வீங்கிப் போய் இருக்கு.. உன்ன அந்த ஆளு அடிச்சு கொடுமைப்படுத்தினாரா டி.." என்று மற்ற இருவரும் அழுதபடியே கேட்க.. அம்பரியால் அவர்களிடம் பேச கூட முடியவில்லை.
அவளது நிலையை உணர்ந்த இருவரும்.. "நீ ஒரு நிமிஷம் இரு.. நாங்க போய் அந்த ஆள நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டுட்டு வரோம்.." என்று கூறிவிட்டு, சத்யாவை வைத்திருக்கும் சிறைக்குச் செல்ல, அங்கு முகத்தில் வழிந்தோடும் ரத்தத்துடன் அமர்ந்திருந்தது.. வேறு யாருமல்ல.. அசோக் தான்.
அப்பொழுது அவன் கன்னத்தில் ஒரு கரம் இடிபோல இறங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கரத்திற்க்கு சொந்தக்காரன்.. சந்தேகத்திற்கு இடமின்றிச் சத்யாவே தான்.
என்னடா இது கதையே மாறுதே.. என்று புகழியும், இனியாவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க.. மீண்டும் ஒருமுறை அஷோக்கின் கன்னத்தில், கரத்தை இறக்கப் போன சத்யாவின் கரத்தை தடுத்து நிறுத்தினான் ஜெகன்.
"போதும் சத்யா.. இதுக்குமேல அடிச்சா செத்துருவான்.." என்று கூற.. "இவனெல்லாம் சாகறது தான் சரி.." என்றுவிட்டு, மீண்டும் அடிக்கப் போனான் சத்யா.
"எப்பா டிடெக்ட்டிவ்.. நீ பாட்டுக்கு அடிச்ச கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்ப.. ஆனா, லாக் அப் டெத்துன்னு என் மேல தான விசாரணைக் கமிஷன் வைப்பாங்க.." என்று கூறிவிட்டு பார்க்க.. வெளியே புகழியும், இனியாவும் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றிருப்பது தெரிந்தது.
உடனே அவர்களைச் சுட்டிய ஜெகன்.. "அங்க பாரு மணப்பெண் தோழிகள்.. எவ்வளவு ஷாக்கா நிக்கறாங்க பாரு.. சீக்கிரம் போய் உண்மையைச் சொல்லு.. இல்லைனா அவங்களும் சம்பத் மாதிரி அதிர்ச்சில மயங்கி விழுந்துடப் போறாங்க" என்று கூற, அவர்களைப் பார்த்து புன்னகையுடன் வெளியே வந்தான் சத்யா.
"என்னம்மா.. ரெண்டு பேருக்கும் பயங்கர ஷாக்கா?" என்று அவன் கேட்க.. அவனை விழி விரித்து நோக்கிய இருவரும்.. "ஆம்" என்பதாய் தலையசைக்க.. "ஹ்ம்ம் இருக்கத் தான செய்யும்?
சரி.. முழுக்கதையும் தெரியணுமா?" என்று மேலும் கேட்டான் அவன். இன்னமும் அதிர்ச்சி விலகாத பார்வையுடனே அவர்கள் இன்னமும் தலையை அசைக்க.. ஒரு சிறு புன்னகையுடன் கூறத் துவங்கினான் கதையை.
"எனக்கு இந்த அசோக் மேல ஆரம்பத்துலையே சந்தேகம் இருந்துச்சு. அதாவது.. நித்யகல்யாணி ஆன்ட்டிக்கு ஆக்சிடென்ட் ஆனதுல இருந்தே எனக்கு அவர் மேல சந்தேகம்.
நித்யகல்யாணி ஆன்ட்டிக்கு போன் அனுப்பி, புருஷன் சென்டிமென்ட்டை வச்சு, யாரோ மாதிரி பேசி, அவங்களைத் தனியா வரச் சொல்லி, அவங்களை லாரி ஏத்தி கொல்லப் பார்த்தது எல்லாம் இந்த அசோக் தான்.." என்று கூற, இரு பெண்களின் விழியும் ஏகத்துக்கும் விரிந்தது.
"இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இன்னும் இருக்கு விஷயம்." என்று கூறிய சத்யா.. "நித்யகல்யாணி ஆன்ட்டியை கொடுமை செய்ததுக்காக அவர் ஜெயில்ல இருந்தப்போ, இன்னும் அதிகமா ரவுடிங்க கூடக் கனெக்க்ஷன் ஆகிடுச்சு.
அந்த ரவுடிங்க எல்லாரையும் வச்சு இங்க ஒரு டிராமா ஏற்பாடு பண்ணினான். அது தான் அந்த ஷங்கர்.. புகழியைக் காதலிக்கறதா சொல்லி பின்னடியே சுத்தி டார்ச்சர் பண்ணினது.
இதுல புகழி, ஷங்கரோட காதல ஏத்துக்கிட்டு இருந்தா, அந்த விஷயம் ரொம்ப அசிங்கமா வெளில பரப்பப்பட்டு.. இந்தக் காலேஜ் பொண்ணுங்களே இப்படித் தான். இங்க காலேஜ் நடக்கல.. வேற தொழில் நடக்குதுன்னு கதை கட்டலாம்னு பிளான் பண்ணியிருக்காங்க. அதிலும் புகழி, நல்லா படிக்கற பொண்ணு.. அவளுக்கு இப்போ யூனிவர்சிட்டி ராங்க்கே கிடைக்கும். அப்படிப்பட்ட பொண்ணு மேலயே பழி போட்டாத் தான், இந்தக் காலேஜோட வளர்ச்சியைத் தடுக்க முடியும்ன்னு திட்டம் போட்டிருக்காங்க.
ஆனா புகழி, ஷங்கரை மதிக்கவே இல்ல. ஆனாலும், ஷங்கருக்கு புகழி மேல உண்மையாவே காதல் வந்துருச்சு. அதனால தான் அவன் விடாம புகழி பின்னாடியே சுத்தினது.
இப்போ ஷங்கரை வச்சு போட்ட பிளான் சொதப்பினதும்.. வெறியான அசோக்.. அந்தச் சமயத்துல பெங்களூருல இருந்த ஆன்ட்டிகிட்ட சின்னக் கேம் ப்ளே பண்ணி.. அவங்களையே கொல்லப் பார்த்திருக்கான்.
அந்த முயற்சியில ஆன்ட்டி தப்பிச்சுட்டாங்க. ஆனா, தன் புருஷனுக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு பயப்பட ஆரம்பிச்சாங்க. அவங்களோட அந்தப் பாசத்தை உபயோகப்படுத்த நினச்ச அசோக்.. அவருக்குத் தெரிஞ்ச ரவுடிங்க மூலமா நம்ம அம்பரிய கடத்தியிருக்காங்க.
ஏன்னா, அம்பரிக்கும்.. எனக்கும் இருக்கற நேசம் இவங்களுக்கும் தெரிஞ்சிருக்கு. இங்க அம்பரி விஷயத்துல என்ன வீக் ஆக்கணும்னு நினச்சுருக்காங்க அவங்க.
அதனால நான் இங்க ஓடி வர, அங்க பெங்களூருல ஆன்ட்டிகிட்ட திருந்தின புருஷனா வேஷம் போட்டிருக்கார் இந்த அசோக்.
ஏற்கனவே உடலும் பலவீனமா இருந்த ஆன்ட்டிக்கு இந்த ஆளோட வேஷத்தை புரிஞ்சுக்க முடியல. அதனால அவரை எனக்குத் துணையா இங்க அனுப்பிருக்காங்க. இங்க வந்து எனக்கு உதவி செய்யற மாதிரி, என்னோட எல்லாச் செயல்பாடுகளையும் இந்த ஆள் நோட் பண்ணிட்டே இருந்திருக்காரு.
இதெல்லாம் எதுக்காகன்னா.. ஆண்ட்டிக்கு இந்தக் காலேஜை நிர்வாகம் பண்ண முடியல.. அப்படின்னு பேர் கிளப்பி விட்டு, ஆண்ட்டி கிட்ட இருந்து இந்தக் காலேஜை பிடுங்கத் தான் இத்தனை ஆட்டமும்.
இதுல எனக்கு அவர்மேல ஏற்கனவே இருந்த சந்தேகம் இன்னும் அதிகமாச்சு. அதிலும் ரொம்ப நல்லவர் மாதிரி அவர் உருகி உருகிப் பேசவும் எனக்கு இவர் தான் இத்தனைக்கும் காரணம்னு உறுதியே ஆகிடுச்சு..” எனக் கூறி அவன் நிறுத்த, அப்பொழுது அங்கு வந்த ஜெகனோ, சத்யாவுக்கு அருகே இன்னுமொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி..
"இதுல இத டிடெக்ட்டிவ் மேல எனக்கு ஏற்கனவே வெறுப்பு.. சத்யா கூடவே அசோக்கும் இருந்ததால, அவரோட டீமை வேற யாராவது மேனேஜ் பண்ணனும்.
அதனால சத்யா ஒரு நாள் என்ன நேரடியா சந்திக்க வந்தார். வந்தவர்.. என்கிட்ட அவரைப் பத்தி எல்லாத்தையும் விளக்கமா பேசி.. தன்னோட தொழில் மேல் அவருக்கு இருந்த காதலைப் பற்றியும் பேச.. அதுவரைக்கும் இவரை விரோதியா பார்த்துட்டு இருந்த நான்.. பயங்கரமா இம்ப்ரெஸ் ஆகி.. அவரோட விசிறியாகிட்டேன்.
அதனால, நாங்க ஒரு ட்ராமா பண்ணினோம். அதாவது.. நான் வேணும்னே சத்யாவை இந்தக் கேசுல சிக்க வைக்கற மாதிரியும், அம்பரிய கண்டுபிடிக்கறதுல எனக்கு ஆர்வமும் இல்லாத மாதிரியும் ஒரு நாடகம் போட்டோம்.
அதுல அசோக்கோட சேர்த்து நீங்க எல்லாரும் நம்பிட்டீங்க. இப்போ அசோக்.. அம்பரியை வெளில கொண்டு வருவார்ன்னு நினைச்சோம். ஆனா, அவர் அப்படிச் செய்யல. அம்பரியை வெளிநாட்டுக்கு கடத்த சொல்லி, அவரோட ரவுடி ப்ரண்டுங்க கிட்ட ஒப்படைச்சுட்டார்.
இது எங்களுக்குக் கடைசி நிமிஷத்துல தான் தெரிஞ்சு, நாங்க அதுவரைக்கும் சேர்த்த ஆதாரத்தை எல்லாம் திரட்டிட்டு அங்க போய் நின்னா.. சார் துளி கூடப் பயமே இல்லாம எங்களையே கொல்லப் பார்க்கறாரு.
கடைசியா.. அவருக்கும், அவரோட நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டிய ட்ரீட்மெண்ட் எல்லாம் கொடுத்து.. இதோ இப்படி இங்க கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருக்கோம்.." என்று கூறி முடிக்க.. இனியாவும், புகழியும் அசந்தே போனார்கள்.
"ச்சே.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கு.. நாங்க உங்களப் போய்த் தப்பா நினச்சுட்டமே சார்.." என அவர்கள் வருந்த.. அதற்குச் சத்யாவோ... "இத்தனை நடந்ததுக்கை அப்பறமும் நீங்க என்ன நம்பியிருந்தா தான் ஆச்சர்யமே.." என்று கூறி சிரித்தான்.
அப்பொழுது அங்கு அம்பரியும் வர, விரைந்து அவளிடம் சென்ற சத்யாவோ.. அவளைத் தோளோடு அணைத்து, "உங்களோட பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சுடுச்சா ஜெகன்? நான் அம்பரியை கூட்டிட்டு போகலாமா?" எனக் கேட்க.. அதற்குத் தலையைச் சொறிந்து கொண்ட ஜெகனோ, வேறெங்கோ பார்வையைப் பதித்தபடி..
"என்னோட பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சுடுச்சு.. ஆனா, நீங்க தான் அவங்க அப்பா, அம்மாகிட்ட பார்மாலிட்டிக்கு கூட எதுவும் கேட்காம இபப்டி நின்னுட்டு இருக்கீங்க.." என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற, அப்பொழுது தான் இப்படி அம்பரியை அணைத்துக் கொண்டிருப்பது சத்யாவிற்கு உறைக்க, சட்டென்று கையை விளக்கிவிட்டு, அம்பரியின் பெற்றோரைப் பார்த்தால்.. அவர்களோ விழிகளில் தேங்கிய வியப்புடன் சத்யாவையும், அம்பரியையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்து இன்னமும் சுற்றி இருந்தவர்கள் சிரிக்க.. சற்று அவர்கள் அருகே வந்த சத்யாவோ.. "உங்க பொண்ணு.. நீலாம்பரியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுப்பீங்களா?" என்று கேட்க, அவன் இப்பொழுதும் நீலாம்பரி என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தோர் எல்லோரும் வாய்விட்டு சிரிக்க, "என்னது நீலாம்பரியா?" என்று அவ்வளவு நேரம் பேசாதிருந்த அம்பரி, இப்பொழுது சத்தமாய்க் கேட்டு சத்யாவின் தலையிலேயே கொட்டு ஒன்று வைக்க.. அந்தக் காவல் நிலையமே.. ரணகளத்திலும் கலகலப்பானது.
சுபம்.