பகுதி – 11
சுபாங்கியின் மனநிலையை அறிந்ததில் இருந்து பிரபாவதிக்கு ஏதோ கைக்கட்டு அவிழ்ந்தாற் போல இருந்தது...அதுவரை சிறியவர்களின் வாழ்வை சீர்ப்படுத்த எந்த வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தவர் இப்போது என்ன வழியில் அவர்களை சேர்த்து வைக்கலாம் என தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்..அதன் முதல்ப் படியாக சுபாங்கியை தனாவின் அறைக்கு அனுப்ப திட்டம் தீட்டினார்....
இந்த ஒரு மாத காலமாக சுபாங்கி கீழேயும் அவன் மேலேயுமாகத்தான் அவர்கள் நாட்கள் நகர்ந்துள்ளது...ஒருவரை ஒருவர் பார்க்கும் சந்தர்ப்பமே குறைவு....அப்படி இருக்கையில் எங்கிருந்து அவர்களுக்கிடையில் ஈர்ப்பு வருவது...இதுவே அருகில் இருந்தால்....எப்படியும் ஏதோ ஒரு தருணத்தில் இவள் நம் மனைவி என்ற உணர்வு அவனுக்கு வராமலா போகும்.......
தனது திட்டத்தை நிறைவேற்ற அன்றைய காலை உணவு நேரத்தை தெரிவு செய்தார் பிரபாவதி...
தனா உன்னிடம் சற்றுப் பேச வேண்டும்பா...
தோசையை பிய்த்து சட்னியில் தோய்த்துக்கொண்டிருந்த தனஞ்சயன் தாயை நிமிர்ந்து பார்த்தான்.
என்னம்மா ஏதாவது முக்கியமான விடயமா??
ம்ம் ..ஆமா தனா....ஆனால் ...இங்கே பேச முடியாது. சாப்பிட்டு முடித்தவுடன் என் அறைக்கு வா..... சுபிம்மா நீயும் தான்.
சரி அத்தை...
வழக்கத்துக்கு விரோதமாக ஓர் இறுகிய குரலில் உத்தரவிட்டுச் செல்லும் தாயின் முதுகை குழப்பத்துடன் பார்த்தவன் பின் பார்வையை சுபியிடம் திருப்பி உனக்கு ஏதாவது தெரியுமா?? என்பது போல் பார்த்தான்...
ஆமாம்....இவர் நயன பாசை புரிந்து பதில் கொடுப்பதற்காகத் தானே அவள் பிறப்பெடுத்திருக்கிறாள்....போடா டேய்.....
அவன் பார்வையை கருத்தில் எடுக்காது சுபாங்கி தன் உணவில் மிகவும் கவனமாயிருக்கவும்.... லேசான முறைப்புடன் “திமிர்டி” என்று முனுமுனுத்தவன்.......
தன் உணவை விரைந்து முடித்துவிட்டு அவளிடம் ..”.சீக்கிரம் வா” ....என்ற ஒரு அதட்டலுடன் தாயின் அறைக்குள் நுழைந்தான்.
தன் அறையில் ஈசி சாரில் சாய்ந்து கண்களை மூடியிருந்த பிரபாவதி மகனின் காலடி ஓசை கேட்டதும் கண்விழித்து “வாப்பா” என்றழைத்தார்....
என்னம்மா ?? என்ன முக்கியமாய்ப் பேச வேண்டும்..?
தனா நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?? நீ என்ன செய்தாலும் நான் எதுவுமே கேட்கமாட்டேன் என்றா....??
தாயின் கேள்வியின் அர்த்தம் புரியாமல் புருவம் சுளித்தவன் ....புரியவில்லை... ?? என்றான் ஒற்றைச் சொல்லாக...
அவனின் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் .....”இதோ பாரப்பா இந்த ஊரில் நம்ம குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. நம் வீட்டு விடயங்கள் வெளியில் அலசப்படுவதை நான் அனுமதிக்க முடியாது” என்றார் பிரபாவதி அழுத்தமான குரலில்
தனஞ்சயனின் முகத்தில் சட்டென ஒரு அதிர்வு தெரிந்தது. விழிகள் லேசாக இடுங்க “அம்மா முதலில் புரியும்படி பேசுங்கள்??” என்ற அவன் குரலில் இப்போது ஒரு சிறு பதட்டம் ஓடியது.....
அவன் அன்னைக்கு இத்தனை நாட்களாக எந்த விடயம் தெரிந்துவிடக்கூடாது என்று மூடி மறைத்தானோ அது தெரிந்துவிட்டதா?? ஆனால் எப்படி..?? அதற்கு வாய்ப்பே இல்லையே !! மனதில் பல கேள்விகள் ஓட அன்னையின் பதிலுக்காக அவன் பதட்டத்துடன் காத்திருந்தால்...அவன் அன்னை வேறு சொன்னார்....
நேற்று நம் வீட்டுக்கு வந்த மூலைத்தெரு லஷ்மி கேட்கிறாள். உன் மகனும் மருமகளும் காதல் திருமணம் என்று கேள்விப்பட்டேன்...ஆனால் உன் மருமகள் வந்தநாள் தொட்டு உன்கூட கீழேயே தான் தூங்குதாமே...?? என்ன விடயம் என்று... இதற்கு நான் என்ன பதிலைக் கூறுவது தனா..??? என்றார் லேசான அழுத்தத்துடன்...
முதலில் தாயின் பேச்சு புரியாது சிறு புருவச் சுழிப்புடன் தூங்குவது......??? என்று இழுத்த தனாவிற்கு சட்டென விஷயம் விளங்க முதலில் அவன் முகத்தில் விஷயம் இவ்வளவு தானா எனும்படியான ஓர் நிம்மதியின் சாயலே ஓடி மறைந்தது.. ஒரு பெருமூச்சை சத்தமின்றி வெளியேற்றியவன் முகம் மறுகணமே ஏதோ சிந்தனையில் கோபத்தில் கறுக்க...
நம் உள்வீட்டு விடயம் எப்படிம்மா வெளியே போனது....முதலில் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு கண்டித்து வைக்க வேண்டும்....என்றான் கடுமையான குரலில்...
சுபாங்கியின் மனநிலையை அறிந்ததில் இருந்து பிரபாவதிக்கு ஏதோ கைக்கட்டு அவிழ்ந்தாற் போல இருந்தது...அதுவரை சிறியவர்களின் வாழ்வை சீர்ப்படுத்த எந்த வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தவர் இப்போது என்ன வழியில் அவர்களை சேர்த்து வைக்கலாம் என தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்..அதன் முதல்ப் படியாக சுபாங்கியை தனாவின் அறைக்கு அனுப்ப திட்டம் தீட்டினார்....
இந்த ஒரு மாத காலமாக சுபாங்கி கீழேயும் அவன் மேலேயுமாகத்தான் அவர்கள் நாட்கள் நகர்ந்துள்ளது...ஒருவரை ஒருவர் பார்க்கும் சந்தர்ப்பமே குறைவு....அப்படி இருக்கையில் எங்கிருந்து அவர்களுக்கிடையில் ஈர்ப்பு வருவது...இதுவே அருகில் இருந்தால்....எப்படியும் ஏதோ ஒரு தருணத்தில் இவள் நம் மனைவி என்ற உணர்வு அவனுக்கு வராமலா போகும்.......
தனது திட்டத்தை நிறைவேற்ற அன்றைய காலை உணவு நேரத்தை தெரிவு செய்தார் பிரபாவதி...
தனா உன்னிடம் சற்றுப் பேச வேண்டும்பா...
தோசையை பிய்த்து சட்னியில் தோய்த்துக்கொண்டிருந்த தனஞ்சயன் தாயை நிமிர்ந்து பார்த்தான்.
என்னம்மா ஏதாவது முக்கியமான விடயமா??
ம்ம் ..ஆமா தனா....ஆனால் ...இங்கே பேச முடியாது. சாப்பிட்டு முடித்தவுடன் என் அறைக்கு வா..... சுபிம்மா நீயும் தான்.
சரி அத்தை...
வழக்கத்துக்கு விரோதமாக ஓர் இறுகிய குரலில் உத்தரவிட்டுச் செல்லும் தாயின் முதுகை குழப்பத்துடன் பார்த்தவன் பின் பார்வையை சுபியிடம் திருப்பி உனக்கு ஏதாவது தெரியுமா?? என்பது போல் பார்த்தான்...
ஆமாம்....இவர் நயன பாசை புரிந்து பதில் கொடுப்பதற்காகத் தானே அவள் பிறப்பெடுத்திருக்கிறாள்....போடா டேய்.....
அவன் பார்வையை கருத்தில் எடுக்காது சுபாங்கி தன் உணவில் மிகவும் கவனமாயிருக்கவும்.... லேசான முறைப்புடன் “திமிர்டி” என்று முனுமுனுத்தவன்.......
தன் உணவை விரைந்து முடித்துவிட்டு அவளிடம் ..”.சீக்கிரம் வா” ....என்ற ஒரு அதட்டலுடன் தாயின் அறைக்குள் நுழைந்தான்.
தன் அறையில் ஈசி சாரில் சாய்ந்து கண்களை மூடியிருந்த பிரபாவதி மகனின் காலடி ஓசை கேட்டதும் கண்விழித்து “வாப்பா” என்றழைத்தார்....
என்னம்மா ?? என்ன முக்கியமாய்ப் பேச வேண்டும்..?
தனா நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?? நீ என்ன செய்தாலும் நான் எதுவுமே கேட்கமாட்டேன் என்றா....??
தாயின் கேள்வியின் அர்த்தம் புரியாமல் புருவம் சுளித்தவன் ....புரியவில்லை... ?? என்றான் ஒற்றைச் சொல்லாக...
அவனின் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் .....”இதோ பாரப்பா இந்த ஊரில் நம்ம குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. நம் வீட்டு விடயங்கள் வெளியில் அலசப்படுவதை நான் அனுமதிக்க முடியாது” என்றார் பிரபாவதி அழுத்தமான குரலில்
தனஞ்சயனின் முகத்தில் சட்டென ஒரு அதிர்வு தெரிந்தது. விழிகள் லேசாக இடுங்க “அம்மா முதலில் புரியும்படி பேசுங்கள்??” என்ற அவன் குரலில் இப்போது ஒரு சிறு பதட்டம் ஓடியது.....
அவன் அன்னைக்கு இத்தனை நாட்களாக எந்த விடயம் தெரிந்துவிடக்கூடாது என்று மூடி மறைத்தானோ அது தெரிந்துவிட்டதா?? ஆனால் எப்படி..?? அதற்கு வாய்ப்பே இல்லையே !! மனதில் பல கேள்விகள் ஓட அன்னையின் பதிலுக்காக அவன் பதட்டத்துடன் காத்திருந்தால்...அவன் அன்னை வேறு சொன்னார்....
நேற்று நம் வீட்டுக்கு வந்த மூலைத்தெரு லஷ்மி கேட்கிறாள். உன் மகனும் மருமகளும் காதல் திருமணம் என்று கேள்விப்பட்டேன்...ஆனால் உன் மருமகள் வந்தநாள் தொட்டு உன்கூட கீழேயே தான் தூங்குதாமே...?? என்ன விடயம் என்று... இதற்கு நான் என்ன பதிலைக் கூறுவது தனா..??? என்றார் லேசான அழுத்தத்துடன்...
முதலில் தாயின் பேச்சு புரியாது சிறு புருவச் சுழிப்புடன் தூங்குவது......??? என்று இழுத்த தனாவிற்கு சட்டென விஷயம் விளங்க முதலில் அவன் முகத்தில் விஷயம் இவ்வளவு தானா எனும்படியான ஓர் நிம்மதியின் சாயலே ஓடி மறைந்தது.. ஒரு பெருமூச்சை சத்தமின்றி வெளியேற்றியவன் முகம் மறுகணமே ஏதோ சிந்தனையில் கோபத்தில் கறுக்க...
நம் உள்வீட்டு விடயம் எப்படிம்மா வெளியே போனது....முதலில் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு கண்டித்து வைக்க வேண்டும்....என்றான் கடுமையான குரலில்...