- Joined
- Aug 1, 2021
- Messages
- 72
இதழ்:-13
மெல்லிய தென்றல் தோட்டத்து மலர்கள் மீது தவழ்ந்து வந்து உடல் தழுவ தென்றலின் தாலாட்டில் மதிமயங்கி தலையசைத்த மலர்களை ரசித்தபடி கையில் ஒரு நாவலுடன் அமர்ந்திருந்தாள் பூவினி.அவள் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டிருந்தது. அவள் மீது அன்பை பொழியும் உறவுகளின் மத்தியில் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தாலும் மனதின் ஓரம் ஒரு உறுத்தல்.
இதுவரை நிலவனை அவள் காண நேரவில்லை. காண நேரவில்லை என்பதைவிட அந்தச் சந்திப்பை அவன் தவிர்த்துக்கொண்டிருந்தான்.இவள் வந்த அன்று ஏதோ முக்கியவேலை என்று வரமுடியாது என்றவன்.மறுநாளே தொழில் விடயமாக வெளியூர் கிளம்பிவிட்டான்.அவர்கள் இருவருக்குமான கண்ணாமூச்சியாட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.ஆட்டத்தை முடிக்க இருவருமே முயலவில்லை.
காலில் ஏதோ மிருதுவாக உரசவும் குனிந்து பார்த்தாள்.புஜ்ஜி தான் தனது வாலினால் அவள் கால்களை தடவிக்கொண்டு இருந்தது.புன்னகையுடன் அதை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.அதுவும் அவளுடன் ஒட்டிக்கொண்டு அவள் மடியில் படுத்துக்கொண்டது.
பூவினிக்கு ஆச்சரியமாக இருந்தது முன்பு தன்னைக்கண்டாலே தலைதெறிக்க ஓடும் இந்த புஜ்ஜி இப்போது இப்படி மாறிவிட்டதே. மெல்ல அதன் பட்டுடலை வருடியபடியே என்னுடைய இந்த பிரிவு உன்னிடம் கூட மாற்றத்தை கொடுத்துவிட்டதே புஜ்ஜிக்கண்ணா.ஆனால் ஒருத்தன் மட்டும் மாறவே இல்லையடா. அவன் திமிர் குறையவே இல்லை.என எண்ணியவளுக்கு முன்னொருசமயம் இந்த புஜ்ஜியை துரத்திக்கொண்டு தான் அவனின் அறைக்குள் நுழைந்ததும் அங்கு நடந்ததும் நினைவு வந்தது.அவள் இதழ்களில் அவளையுமறியாமல் குட்டி முறுவல் பூத்தது.
புஜ்ஜியைக் கூட மயக்கிவிட்டாய் போல?? யாரை மயக்கி கைக்குள் போட்டாலும் உன் ஆசை ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.
பின்னால் இருந்து ஒரு குரல் கடுமையாக ஒலித்தது.இந்தக்குரல் ............இந்தக்குரல். சட்டென திரும்பினாள் பூவினி.
நிலவனே தான் !!!!!!!!!. ஒரு கையை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்தபடி உதடுகளை வளைத்து படு அலட்சியமாக அவளைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.நான்கு வருடங்கள் நீண்ட நெடிய நான்காண்டுகள் கழித்து அவனைப்பார்க்கிறாள்.
நான்காண்டுகளுக்கு சற்று அதிக முதிர்ச்சி தெரிந்தது அவனிடம்.ஆனாலும் அந்த முதிர்ச்சி கூட அவனின் கம்பீரத்தை அதிகரித்திருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.முகத்தில் அசாத்திய கடினம்.அவனின் திமிரையும் பிடிவாதத்தையும் உணர்த்துவது போல இறுகியிருந்தன உதடுகளும் தாடையும்.அவளையே வெறித்திருந்த கண்களில் எந்த உணர்வுமே இல்லை.உதடுகளுக்கு மேல கருத்தடர்ந்திருந்த மீசை அவனின் கம்பீரத்தை இன்னும் அதிகப்படுத்தியது.முன்பு அவன் மீசை வைத்திருக்கவில்லை. அவள் கூட கேலி செய்திருக்கிறாள்.
ஏன் அத்தான் உங்களுக்கு மீசை வளரவே வளராதா??
ஏன்டி... அதனால் உனக்கென்ன பிரச்சனை.???
மீசை இல்லாமல் உங்க முகத்தைப் பார்க்க களிமண் பொம்மை போலவே இருக்குத்தான் மொழு மொழுன்னு.
ஹே ..என் முகம் தானே அது எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை.
ஆமா ஆமா உங்களுக்கேன் கவலை.தினமும் ஒருதடவையோ இருதடவையோ தான் அந்த கொடுமை உங்களுக்கு மற்ற நேரம் எல்லாம் அந்த கொடுமையை அனுபவிப்பது நாங்கள் தானே.
என்ன கொடுமை????
.அது தான் உங்கள் முகத்தை பார்க்கும் கொடுமை.
அடிங்க்க்க....... இந்த முகத்தை பார்த்து எத்தனை பெண்கள் என்னை சைட் அடிக்கிறாங்க தெரியுமா?? இதில் நான் மீசை வேறு வைத்தால் அவ்ளோ தான் அப்புறம் என் பின்னால் ஒரு கியூவே நிற்கும்.
பார்ரா ......ஏன் அத்தான் அந்த பெண்களுக்கெல்லாம் கண்ணில் கோளாறா என்ன.??
சட்டென முறுவலித்தவன் உனக்கு பொறாமைடி என்று அவள் தலையில் தட்டிவிட்டு சென்றதும் நினைவு வந்தது.அவன் கூறியது சரிதான்.அழுத்தமான உதடுகளுக்கு மேல் கறுத்து அடர்ந்திருந்த மீசை அவன் கவர்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்திக் காட்டுவது உண்மைதான்.தோள்கள் அகன்று......
அவனையே விழி அகற்றாமல் பார்த்திருந்த பூவினி அவனின் ஒரு வேக மூச்சில் சட்டென மீண்டாள். தன் எதிரே முறைத்துக்கொண்டு நிற்கும் அவனைப் பார்த்த போது தான் அவன் கூறியது மனதில் பட்டு கருத்தில் பதிந்தது.அதுவரை தன்னை மறந்து அவனை பார்த்துக்கொண்டே நின்றுவிட்டதற்காக தன் மீதே கோபம் கொண்டவள் அதை அவன் மீது திருப்பி
சற்று நிமிர்ந்து அவன் கண்களைப்பார்த்து புரியவில்லை??? என்றாள் ஒற்றைச் சொல்லாக.
நிமிர்ந்து நோக்கிய அவள் விழிகளில் இருந்து தன் பார்வையை விலக்கியபடி குரலில் கடுமையுடன் என்ன புரியவில்லை?? என்றான்.
யாரை மயக்கினேன் என்று புரியவில்லை???
ஹ்ம்ம் அது தான் இந்த குடும்பத்தையே மயக்கி வைத்திருக்கிறாயே. நாலு வருடம் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீ ஜாலியாக படிக்கிறேன் என்ற பெயரில் ஊர் சுற்றிவிட்டு வந்தாலும் நீ வந்தவுடன் ஏதோ இளவரசி போல உன்னை கொண்டாடுகிறார்களே. தூக்கி தலையில் வைக்காதது ஒன்று தான் குறை. போதாதற்கு நான் வேறு உன்னை அவர்கள் போலவே கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நீ வந்து ஒரு வாரம் ஆகியும் நான் உன்னை சந்தித்து பேசவில்லையாம் அம்மா தொடங்கி தமிழ் வரையும் என்னை முறைக்கிறார்கள்.
இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நீ என்ன பெரிய இவளா?? நான் எதற்கடி உன்னை வந்து பார்க்கவேண்டும்.அது தான் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போனாயில்லையா?? அப்படியே ஒரேயடியாக அங்கேயே இருப்பது தானே எதற்கு மறுபடியும் இங்கே வந்து என் உயிரை வாங்குகிறாய்.
பொறுத்து பொறுத்து பார்த்த பூவினிக்கு பொறுமை பறக்கவே
எல்லோரும் உங்களைப் போல இருக்க முடியுமா என்ன???.அவர்கள் பாசத்திற்கு அர்த்தம் தெரிந்தவர்கள்.இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அவர்கள் என் மீது பாசம் வைப்பதால் உங்களுக்கென்ன பிரச்சனை???
வைக்கட்டும் தாராளமாக வைக்கட்டும்.ஏன் உன்னை தலையில் தூக்கி வைத்துக்கூட கொண்டாடட்டும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.ஆனால் என்னிடம் இருந்து நீ அதை எதிர்பார்க்காதே.
ஹ்ம்ம் ..உங்களிடம் இருந்து பாசத்தை இன்னும் எதிர்பார்ப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.அத்தோடு உங்கள் பாசத்திற்காக ஏங்குவதற்கு நான் ஒன்றும் பழைய வினியும் அல்ல.என்றாள் கடுப்புடன்.
நல்லது.என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது தான் உனக்கு நல்லது.என்று அலட்சியமாக பதில் கொடுத்தவன்.
ஆ ..அப்புறம் நான் உன்னை சந்தித்து நலம் விசாரித்துவிட்டேன் என்று அனைவரிடமும் சொல்லிவிடு.முக்கியமாக தமிழிடம்.என்று உத்தரவிடும் குரலில் கூறிவிட்டு செல்ல திரும்பியவன் நின்று அவள் முகத்தைப் பார்த்து நமக்கிடையேயான எதையும் யாரிடமும் சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். என்றான்.
இவன் பாசையில் இதற்கு பெயர்தான் நலம் விசாரிப்பதுபோல.ஹ்ம்ம்ம்
இந்தளவுக்காவது இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி என்றவள் தொடர்ந்து ஒன்றுமட்டும் சொல்கிறேன் கேளுங்கள்.என்னைப் பிடிக்காதவர்களை எனக்கும் பிடிக்காது. இங்கு யாரும் உங்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்கவில்லை.அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். என்றாள் அழுத்தத்துடன்.
அதுவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களில் சட்டென ஏதோ ஒரு உணர்வு தோன்றி மறைய எதுவும் பேசாது தோளைக்குலுக்கிவிட்டு தன் வழக்கமான வேகநடையுடன் திரும்பிச் சென்றான். செல்லும் அவனையே வெறித்துக்கொண்டு நின்ற பூவினியின் விழிகளில் இருந்து ஒருதுளி நீர்முத்து உருண்டு விழ தாங்க முடியாத வலியுடன் விழிகளை இறுக மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள்.
இத்தனை வருடம் அவள் கற்றுக்கொண்ட மனோதிடம் அவன் எதிரில் கண்ணீர் விடாது தைரியமாக பேச உதவியது.அவன் அகன்ற மறுநொடி கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளம் கரையுடைத்தது.
ஏன்??? ஏன் ?? எனக்கு மட்டும் ஏன் இப்படி?? நான் வந்து அவன் உயிரை எடுக்கிறேனாம். ஹ்ம்ம்..... அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் உயிரை அறுக்கிறதே அது எப்படி அவனுக்கு புரியாமல் போனது?? என்னதான் அவளின் தன்மானம் என்னை வெறுப்பவன் எனக்கும் வேண்டாம் என்று கூறினாலும் அவள் அடிநெஞ்சம் அவன் வேண்டும் வேண்டும் என்று ஊமையாய் கதறுகிறதே.
மெல்லிய தென்றல் தோட்டத்து மலர்கள் மீது தவழ்ந்து வந்து உடல் தழுவ தென்றலின் தாலாட்டில் மதிமயங்கி தலையசைத்த மலர்களை ரசித்தபடி கையில் ஒரு நாவலுடன் அமர்ந்திருந்தாள் பூவினி.அவள் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டிருந்தது. அவள் மீது அன்பை பொழியும் உறவுகளின் மத்தியில் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தாலும் மனதின் ஓரம் ஒரு உறுத்தல்.
இதுவரை நிலவனை அவள் காண நேரவில்லை. காண நேரவில்லை என்பதைவிட அந்தச் சந்திப்பை அவன் தவிர்த்துக்கொண்டிருந்தான்.இவள் வந்த அன்று ஏதோ முக்கியவேலை என்று வரமுடியாது என்றவன்.மறுநாளே தொழில் விடயமாக வெளியூர் கிளம்பிவிட்டான்.அவர்கள் இருவருக்குமான கண்ணாமூச்சியாட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.ஆட்டத்தை முடிக்க இருவருமே முயலவில்லை.
காலில் ஏதோ மிருதுவாக உரசவும் குனிந்து பார்த்தாள்.புஜ்ஜி தான் தனது வாலினால் அவள் கால்களை தடவிக்கொண்டு இருந்தது.புன்னகையுடன் அதை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.அதுவும் அவளுடன் ஒட்டிக்கொண்டு அவள் மடியில் படுத்துக்கொண்டது.
பூவினிக்கு ஆச்சரியமாக இருந்தது முன்பு தன்னைக்கண்டாலே தலைதெறிக்க ஓடும் இந்த புஜ்ஜி இப்போது இப்படி மாறிவிட்டதே. மெல்ல அதன் பட்டுடலை வருடியபடியே என்னுடைய இந்த பிரிவு உன்னிடம் கூட மாற்றத்தை கொடுத்துவிட்டதே புஜ்ஜிக்கண்ணா.ஆனால் ஒருத்தன் மட்டும் மாறவே இல்லையடா. அவன் திமிர் குறையவே இல்லை.என எண்ணியவளுக்கு முன்னொருசமயம் இந்த புஜ்ஜியை துரத்திக்கொண்டு தான் அவனின் அறைக்குள் நுழைந்ததும் அங்கு நடந்ததும் நினைவு வந்தது.அவள் இதழ்களில் அவளையுமறியாமல் குட்டி முறுவல் பூத்தது.
புஜ்ஜியைக் கூட மயக்கிவிட்டாய் போல?? யாரை மயக்கி கைக்குள் போட்டாலும் உன் ஆசை ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.
பின்னால் இருந்து ஒரு குரல் கடுமையாக ஒலித்தது.இந்தக்குரல் ............இந்தக்குரல். சட்டென திரும்பினாள் பூவினி.
நிலவனே தான் !!!!!!!!!. ஒரு கையை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்தபடி உதடுகளை வளைத்து படு அலட்சியமாக அவளைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.நான்கு வருடங்கள் நீண்ட நெடிய நான்காண்டுகள் கழித்து அவனைப்பார்க்கிறாள்.
நான்காண்டுகளுக்கு சற்று அதிக முதிர்ச்சி தெரிந்தது அவனிடம்.ஆனாலும் அந்த முதிர்ச்சி கூட அவனின் கம்பீரத்தை அதிகரித்திருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.முகத்தில் அசாத்திய கடினம்.அவனின் திமிரையும் பிடிவாதத்தையும் உணர்த்துவது போல இறுகியிருந்தன உதடுகளும் தாடையும்.அவளையே வெறித்திருந்த கண்களில் எந்த உணர்வுமே இல்லை.உதடுகளுக்கு மேல கருத்தடர்ந்திருந்த மீசை அவனின் கம்பீரத்தை இன்னும் அதிகப்படுத்தியது.முன்பு அவன் மீசை வைத்திருக்கவில்லை. அவள் கூட கேலி செய்திருக்கிறாள்.
ஏன் அத்தான் உங்களுக்கு மீசை வளரவே வளராதா??
ஏன்டி... அதனால் உனக்கென்ன பிரச்சனை.???
மீசை இல்லாமல் உங்க முகத்தைப் பார்க்க களிமண் பொம்மை போலவே இருக்குத்தான் மொழு மொழுன்னு.
ஹே ..என் முகம் தானே அது எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை.
ஆமா ஆமா உங்களுக்கேன் கவலை.தினமும் ஒருதடவையோ இருதடவையோ தான் அந்த கொடுமை உங்களுக்கு மற்ற நேரம் எல்லாம் அந்த கொடுமையை அனுபவிப்பது நாங்கள் தானே.
என்ன கொடுமை????
.அது தான் உங்கள் முகத்தை பார்க்கும் கொடுமை.
அடிங்க்க்க....... இந்த முகத்தை பார்த்து எத்தனை பெண்கள் என்னை சைட் அடிக்கிறாங்க தெரியுமா?? இதில் நான் மீசை வேறு வைத்தால் அவ்ளோ தான் அப்புறம் என் பின்னால் ஒரு கியூவே நிற்கும்.
பார்ரா ......ஏன் அத்தான் அந்த பெண்களுக்கெல்லாம் கண்ணில் கோளாறா என்ன.??
சட்டென முறுவலித்தவன் உனக்கு பொறாமைடி என்று அவள் தலையில் தட்டிவிட்டு சென்றதும் நினைவு வந்தது.அவன் கூறியது சரிதான்.அழுத்தமான உதடுகளுக்கு மேல் கறுத்து அடர்ந்திருந்த மீசை அவன் கவர்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்திக் காட்டுவது உண்மைதான்.தோள்கள் அகன்று......
அவனையே விழி அகற்றாமல் பார்த்திருந்த பூவினி அவனின் ஒரு வேக மூச்சில் சட்டென மீண்டாள். தன் எதிரே முறைத்துக்கொண்டு நிற்கும் அவனைப் பார்த்த போது தான் அவன் கூறியது மனதில் பட்டு கருத்தில் பதிந்தது.அதுவரை தன்னை மறந்து அவனை பார்த்துக்கொண்டே நின்றுவிட்டதற்காக தன் மீதே கோபம் கொண்டவள் அதை அவன் மீது திருப்பி
சற்று நிமிர்ந்து அவன் கண்களைப்பார்த்து புரியவில்லை??? என்றாள் ஒற்றைச் சொல்லாக.
நிமிர்ந்து நோக்கிய அவள் விழிகளில் இருந்து தன் பார்வையை விலக்கியபடி குரலில் கடுமையுடன் என்ன புரியவில்லை?? என்றான்.
யாரை மயக்கினேன் என்று புரியவில்லை???
ஹ்ம்ம் அது தான் இந்த குடும்பத்தையே மயக்கி வைத்திருக்கிறாயே. நாலு வருடம் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீ ஜாலியாக படிக்கிறேன் என்ற பெயரில் ஊர் சுற்றிவிட்டு வந்தாலும் நீ வந்தவுடன் ஏதோ இளவரசி போல உன்னை கொண்டாடுகிறார்களே. தூக்கி தலையில் வைக்காதது ஒன்று தான் குறை. போதாதற்கு நான் வேறு உன்னை அவர்கள் போலவே கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நீ வந்து ஒரு வாரம் ஆகியும் நான் உன்னை சந்தித்து பேசவில்லையாம் அம்மா தொடங்கி தமிழ் வரையும் என்னை முறைக்கிறார்கள்.
இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நீ என்ன பெரிய இவளா?? நான் எதற்கடி உன்னை வந்து பார்க்கவேண்டும்.அது தான் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போனாயில்லையா?? அப்படியே ஒரேயடியாக அங்கேயே இருப்பது தானே எதற்கு மறுபடியும் இங்கே வந்து என் உயிரை வாங்குகிறாய்.
பொறுத்து பொறுத்து பார்த்த பூவினிக்கு பொறுமை பறக்கவே
எல்லோரும் உங்களைப் போல இருக்க முடியுமா என்ன???.அவர்கள் பாசத்திற்கு அர்த்தம் தெரிந்தவர்கள்.இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அவர்கள் என் மீது பாசம் வைப்பதால் உங்களுக்கென்ன பிரச்சனை???
வைக்கட்டும் தாராளமாக வைக்கட்டும்.ஏன் உன்னை தலையில் தூக்கி வைத்துக்கூட கொண்டாடட்டும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.ஆனால் என்னிடம் இருந்து நீ அதை எதிர்பார்க்காதே.
ஹ்ம்ம் ..உங்களிடம் இருந்து பாசத்தை இன்னும் எதிர்பார்ப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.அத்தோடு உங்கள் பாசத்திற்காக ஏங்குவதற்கு நான் ஒன்றும் பழைய வினியும் அல்ல.என்றாள் கடுப்புடன்.
நல்லது.என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது தான் உனக்கு நல்லது.என்று அலட்சியமாக பதில் கொடுத்தவன்.
ஆ ..அப்புறம் நான் உன்னை சந்தித்து நலம் விசாரித்துவிட்டேன் என்று அனைவரிடமும் சொல்லிவிடு.முக்கியமாக தமிழிடம்.என்று உத்தரவிடும் குரலில் கூறிவிட்டு செல்ல திரும்பியவன் நின்று அவள் முகத்தைப் பார்த்து நமக்கிடையேயான எதையும் யாரிடமும் சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். என்றான்.
இவன் பாசையில் இதற்கு பெயர்தான் நலம் விசாரிப்பதுபோல.ஹ்ம்ம்ம்
இந்தளவுக்காவது இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி என்றவள் தொடர்ந்து ஒன்றுமட்டும் சொல்கிறேன் கேளுங்கள்.என்னைப் பிடிக்காதவர்களை எனக்கும் பிடிக்காது. இங்கு யாரும் உங்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்கவில்லை.அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். என்றாள் அழுத்தத்துடன்.
அதுவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களில் சட்டென ஏதோ ஒரு உணர்வு தோன்றி மறைய எதுவும் பேசாது தோளைக்குலுக்கிவிட்டு தன் வழக்கமான வேகநடையுடன் திரும்பிச் சென்றான். செல்லும் அவனையே வெறித்துக்கொண்டு நின்ற பூவினியின் விழிகளில் இருந்து ஒருதுளி நீர்முத்து உருண்டு விழ தாங்க முடியாத வலியுடன் விழிகளை இறுக மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள்.
இத்தனை வருடம் அவள் கற்றுக்கொண்ட மனோதிடம் அவன் எதிரில் கண்ணீர் விடாது தைரியமாக பேச உதவியது.அவன் அகன்ற மறுநொடி கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளம் கரையுடைத்தது.
ஏன்??? ஏன் ?? எனக்கு மட்டும் ஏன் இப்படி?? நான் வந்து அவன் உயிரை எடுக்கிறேனாம். ஹ்ம்ம்..... அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் உயிரை அறுக்கிறதே அது எப்படி அவனுக்கு புரியாமல் போனது?? என்னதான் அவளின் தன்மானம் என்னை வெறுப்பவன் எனக்கும் வேண்டாம் என்று கூறினாலும் அவள் அடிநெஞ்சம் அவன் வேண்டும் வேண்டும் என்று ஊமையாய் கதறுகிறதே.