- Joined
- Aug 1, 2021
- Messages
- 72
இதழ்:- 6
என்ன தான் பூவினி நிலவனை உயிராய் நேசித்தாலும் தன்னுடைய காதலை ஒருபோதும் அவனிடம் வெளிப்படுத்த விரும்பியதில்லை.ஏனெனில் அவளுக்கு தெரியும் நிலவன் அதை விரும்ப மாட்டான் என்று.அவனுக்கு அவளை பிடித்திருந்தாலும்
கூட படிக்கும் வயதில் காதல் என்பதை அவன் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டான் என்று அவனைப் பற்றி நன்கு தெரிந்த பூவினிக்கு புரிந்திருந்தது.அதனால் தன் மனதை மறைத்து படிப்பின் மீது கவனத்தை செலுத்தினாள்.
ஆனால் என்னதான் காதலை வெளிப்படுத்தக் கூடாது என்று உறுதியாய் முடிவெடுத்தாலும் அவனைக் காணும் தருணங்களில் அவள் மனம் அலைபாய்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
அவனை நேரில் கண்டாலே இவள் விழிகள் காந்தத்தை கண்ட இரும்புத்துண்டாய் அவன் மேலேயே போய் ஒட்டிக்
கொள்வதையும் தடுக்க முடியவில்லை.
அன்றும் அப்படித்தான் நிலவன் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தனர். நிவேதன் சுவேதன் தமிழ் மற்றும் செந்தூரன் நால்வரும் கரம்போர்ட் இல் மூழ்கி இருக்க. இவளும் தாரிணியும் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்தனர். பூவினியின் உடல் தான் அங்கிருந்ததே தவிர அவள் மனமும் சிந்தனையும் ஒருவனை சுற்றியே வலம் வர அவள் கருவண்டு விழிகள் இரண்டும் திரையைப் பார்க்காமல் வீட்டை சுற்றியே அலைந்து கொண்டு இருந்தது.
இந்த தடிமாடு எங்கே போய்விட்டது???
வந்தது முதலே அவள் பார்வை நிலவனைத் தான் தேடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் அவனைத்தான் காணவே இல்லை.
எங்கே சென்றிருப்பான்??? பொதுவாக யாரும் இந்த நாளில் வெளியே செல்வது இல்லை.குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றுகூடி மகிழ தானே இந்த நாள்.
இவன் எங்கே போய்விட்டான்.அத்தையிடம் கேட்கலாமா??என்றால் ..அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று சங்கடமாக இருந்தது.
இதே முன்பு என்றால் அவள் சற்றும் தயங்காமல் சாந்தாவிடம் சென்று அத்தான் எங்கே அத்தை??? என்று கேட்டிருப்பாள்.
ஆனால் இப்போது அவர் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம் வந்தது.அவர் எதுவும் நினைக்கப் போவதில்லை தான்.ஆனால் பூவினியின் நெஞ்சுக்குள் தான் காதல் வந்துவிட்டதே.அதனால் தயக்கமும் சேர்ந்தே வந்துவிட்டது.
எதுவும் பண்ண முடியாது யாரிடமும் கேட்க முடியாது விழிகளால் துழாவி அவள் சலித்த போது வாசலில் நிலவனின் பைக் சத்தம் கேட்டது.அது கேட்டவுடன் பூவினியின் முகம் பூரண சந்திரனாய் ஜொலிக்க விழிகள் இரண்டும் வாசல் நோக்கி பாய்ந்தது.
பைக்கில் வேகமாய் வந்ததால் முன்னுச்சி முடிகள் பறக்க வெயிலில் சென்று வந்ததால் சற்று வேர்த்து நெற்றியோரத்தில் வியர்வை முத்துக்கள் மினுமினுக்க ஒருகையால் போட்டிருந்த டிசெர்ட் கொலர் ஐ இழுத்து விட்டவாறு வந்தவனை இமைக்காது நோக்கிக்கொண்டிருந்தாள் பூவினி. அவள் நெஞ்சம் அவனின் கம்பீரத்தில் தடுமாறியது.
நிலவனை ரசிப்பதிலேயே தன் கவனத்தை செலுத்தியிருந்தவள் தன் அருகில் அமர்ந்து தன் செய்கைகளையே ஒருவித ஆச்சரியத்துடன் நோக்கிகொண்டிருந்த தாரணியை கவனிக்க தவறிவிட்டாள்.
உள்ளே நுழைந்த நிலவனின் பார்வையும் ஒரு நொடி வீட்டை அலசி பூவினியிடம் வந்து நிலைத்தது.அவளைப் பார்த்து முறுவலித்தவன். என்ன இரண்டு பேரும் தனியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.?? என்றவன் அவள் பதில் சொல்லும் முன் இரு போய் முகம் கழுவி உடை மாற்றி விட்டு வருகிறேன் எனச் சொல்லி விட்டு வேகமாக மாடியேறி மறைந்தான்.அவன் மறைந்ததும் தான் பார்வையை திருப்பியவள் அப்போது தான் தன்னையே ஒரு குறும்புச் சிரிப்புடன் பார்த்தபடி இருந்த தாரணியை கண்டாள். ஒருகணம் திடுக்கிட்டாலும் சமாளித்துக்கொண்டு தொலைக்காட்சியில் பார்வையை பதித்தாள் பூவினி.
அவள் மனம் மட்டும் புலம்பியது.இவள் எமகாதகி ஆச்சே எதையாவது கண்டுபிடித்திருப்பாளா??? நான் வேறு ஏதோ காணாததை கண்டது போல அவனையே ஆவென்று பார்த்துக்கொண்டிருந்து விட்டேனே. இந்த குரங்கு பக்கத்தில் இருப்பதை எப்படி மறந்தேன் ?? ச்சே... இவள் பார்த்திருப்பாளா??? அவள் மனதின் கேள்விக்கு தாரணி பாட்டிலேயே பதில் கொடுத்தாள்.
அவள்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் __ சுடச்சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் _ இருவிழி ...........
என்று பாடவும் பூவினிக்கு திக் என்றது.இருந்தாலும் சமாளித்துக்கொண்டு
ஏய் ... சும்மா கத்தாத கழுதை தேடி வந்துடப் போகுது.
ஹ ஹ..நாம பாடுற பாட்டுக்கு கழுதை வராது கண்ணம்மா ஒரு உண்மை வேணும்னா வரும்.என்ன நான் சொல்றது.??
ஏய் ..என்ன உளர்ற??
நான் ஒண்ணும் உளறலப்பா.
அப்போ வாயை மூடிட்டு இரு.
அது என்னவோ தெரியல வினிக்கா எனக்கு பாட்டுப்பாடனும் போல ஆசை ஆசையா இருக்கு.என்று குறும்பாக கண்ணைச் சிமிட்டினாள்.
பூவினி முறைக்கவும் எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்த பாட்டை எடுத்து விட்டாள் தாரணி.
கண்டுபிடித்தேன் கண்டுபிடித்தேன்
காதல் நோயைக் கண்டுபிடித்தேன்............
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
காதல் முகம் கண்டு கொண்டேன்..............
ஒரு பூ எழுதும் கவிதை ........
தாரிணியின் வாயில் சினிமாப் பாடல்கள் அனைத்தும் படாத பாடுபட்டன.
பூவினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.தாரணி தன்னை கண்டு விட்டாள் என்று அவளுக்கு புரிந்து விட்டது.இதற்கு மேல் அவளை அதட்டி அடக்க முடியாது என்று புரிந்து சட்டென தணிந்து போனாள் பூவினி.
தாரணியின் கையை இறுக பற்றி அழுத்தி தரு என்றாள் கெஞ்சுதலாக.
பூவினியின் முகத்தைப் பார்த்த தாரணிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு பீறிட்டது.கல கலவென சிரித்தவள்.பெரியவர்கள் திரும்பி பார்க்கவும் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கினாள்.
என்ன தான் பூவினி நிலவனை உயிராய் நேசித்தாலும் தன்னுடைய காதலை ஒருபோதும் அவனிடம் வெளிப்படுத்த விரும்பியதில்லை.ஏனெனில் அவளுக்கு தெரியும் நிலவன் அதை விரும்ப மாட்டான் என்று.அவனுக்கு அவளை பிடித்திருந்தாலும்
கூட படிக்கும் வயதில் காதல் என்பதை அவன் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டான் என்று அவனைப் பற்றி நன்கு தெரிந்த பூவினிக்கு புரிந்திருந்தது.அதனால் தன் மனதை மறைத்து படிப்பின் மீது கவனத்தை செலுத்தினாள்.
ஆனால் என்னதான் காதலை வெளிப்படுத்தக் கூடாது என்று உறுதியாய் முடிவெடுத்தாலும் அவனைக் காணும் தருணங்களில் அவள் மனம் அலைபாய்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
அவனை நேரில் கண்டாலே இவள் விழிகள் காந்தத்தை கண்ட இரும்புத்துண்டாய் அவன் மேலேயே போய் ஒட்டிக்
கொள்வதையும் தடுக்க முடியவில்லை.
அன்றும் அப்படித்தான் நிலவன் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தனர். நிவேதன் சுவேதன் தமிழ் மற்றும் செந்தூரன் நால்வரும் கரம்போர்ட் இல் மூழ்கி இருக்க. இவளும் தாரிணியும் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்தனர். பூவினியின் உடல் தான் அங்கிருந்ததே தவிர அவள் மனமும் சிந்தனையும் ஒருவனை சுற்றியே வலம் வர அவள் கருவண்டு விழிகள் இரண்டும் திரையைப் பார்க்காமல் வீட்டை சுற்றியே அலைந்து கொண்டு இருந்தது.
இந்த தடிமாடு எங்கே போய்விட்டது???
வந்தது முதலே அவள் பார்வை நிலவனைத் தான் தேடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் அவனைத்தான் காணவே இல்லை.
எங்கே சென்றிருப்பான்??? பொதுவாக யாரும் இந்த நாளில் வெளியே செல்வது இல்லை.குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றுகூடி மகிழ தானே இந்த நாள்.
இவன் எங்கே போய்விட்டான்.அத்தையிடம் கேட்கலாமா??என்றால் ..அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று சங்கடமாக இருந்தது.
இதே முன்பு என்றால் அவள் சற்றும் தயங்காமல் சாந்தாவிடம் சென்று அத்தான் எங்கே அத்தை??? என்று கேட்டிருப்பாள்.
ஆனால் இப்போது அவர் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம் வந்தது.அவர் எதுவும் நினைக்கப் போவதில்லை தான்.ஆனால் பூவினியின் நெஞ்சுக்குள் தான் காதல் வந்துவிட்டதே.அதனால் தயக்கமும் சேர்ந்தே வந்துவிட்டது.
எதுவும் பண்ண முடியாது யாரிடமும் கேட்க முடியாது விழிகளால் துழாவி அவள் சலித்த போது வாசலில் நிலவனின் பைக் சத்தம் கேட்டது.அது கேட்டவுடன் பூவினியின் முகம் பூரண சந்திரனாய் ஜொலிக்க விழிகள் இரண்டும் வாசல் நோக்கி பாய்ந்தது.
பைக்கில் வேகமாய் வந்ததால் முன்னுச்சி முடிகள் பறக்க வெயிலில் சென்று வந்ததால் சற்று வேர்த்து நெற்றியோரத்தில் வியர்வை முத்துக்கள் மினுமினுக்க ஒருகையால் போட்டிருந்த டிசெர்ட் கொலர் ஐ இழுத்து விட்டவாறு வந்தவனை இமைக்காது நோக்கிக்கொண்டிருந்தாள் பூவினி. அவள் நெஞ்சம் அவனின் கம்பீரத்தில் தடுமாறியது.
நிலவனை ரசிப்பதிலேயே தன் கவனத்தை செலுத்தியிருந்தவள் தன் அருகில் அமர்ந்து தன் செய்கைகளையே ஒருவித ஆச்சரியத்துடன் நோக்கிகொண்டிருந்த தாரணியை கவனிக்க தவறிவிட்டாள்.
உள்ளே நுழைந்த நிலவனின் பார்வையும் ஒரு நொடி வீட்டை அலசி பூவினியிடம் வந்து நிலைத்தது.அவளைப் பார்த்து முறுவலித்தவன். என்ன இரண்டு பேரும் தனியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.?? என்றவன் அவள் பதில் சொல்லும் முன் இரு போய் முகம் கழுவி உடை மாற்றி விட்டு வருகிறேன் எனச் சொல்லி விட்டு வேகமாக மாடியேறி மறைந்தான்.அவன் மறைந்ததும் தான் பார்வையை திருப்பியவள் அப்போது தான் தன்னையே ஒரு குறும்புச் சிரிப்புடன் பார்த்தபடி இருந்த தாரணியை கண்டாள். ஒருகணம் திடுக்கிட்டாலும் சமாளித்துக்கொண்டு தொலைக்காட்சியில் பார்வையை பதித்தாள் பூவினி.
அவள் மனம் மட்டும் புலம்பியது.இவள் எமகாதகி ஆச்சே எதையாவது கண்டுபிடித்திருப்பாளா??? நான் வேறு ஏதோ காணாததை கண்டது போல அவனையே ஆவென்று பார்த்துக்கொண்டிருந்து விட்டேனே. இந்த குரங்கு பக்கத்தில் இருப்பதை எப்படி மறந்தேன் ?? ச்சே... இவள் பார்த்திருப்பாளா??? அவள் மனதின் கேள்விக்கு தாரணி பாட்டிலேயே பதில் கொடுத்தாள்.
அவள்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் __ சுடச்சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் _ இருவிழி ...........
என்று பாடவும் பூவினிக்கு திக் என்றது.இருந்தாலும் சமாளித்துக்கொண்டு
ஏய் ... சும்மா கத்தாத கழுதை தேடி வந்துடப் போகுது.
ஹ ஹ..நாம பாடுற பாட்டுக்கு கழுதை வராது கண்ணம்மா ஒரு உண்மை வேணும்னா வரும்.என்ன நான் சொல்றது.??
ஏய் ..என்ன உளர்ற??
நான் ஒண்ணும் உளறலப்பா.
அப்போ வாயை மூடிட்டு இரு.
அது என்னவோ தெரியல வினிக்கா எனக்கு பாட்டுப்பாடனும் போல ஆசை ஆசையா இருக்கு.என்று குறும்பாக கண்ணைச் சிமிட்டினாள்.
பூவினி முறைக்கவும் எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்த பாட்டை எடுத்து விட்டாள் தாரணி.
கண்டுபிடித்தேன் கண்டுபிடித்தேன்
காதல் நோயைக் கண்டுபிடித்தேன்............
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
காதல் முகம் கண்டு கொண்டேன்..............
ஒரு பூ எழுதும் கவிதை ........
தாரிணியின் வாயில் சினிமாப் பாடல்கள் அனைத்தும் படாத பாடுபட்டன.
பூவினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.தாரணி தன்னை கண்டு விட்டாள் என்று அவளுக்கு புரிந்து விட்டது.இதற்கு மேல் அவளை அதட்டி அடக்க முடியாது என்று புரிந்து சட்டென தணிந்து போனாள் பூவினி.
தாரணியின் கையை இறுக பற்றி அழுத்தி தரு என்றாள் கெஞ்சுதலாக.
பூவினியின் முகத்தைப் பார்த்த தாரணிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு பீறிட்டது.கல கலவென சிரித்தவள்.பெரியவர்கள் திரும்பி பார்க்கவும் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கினாள்.