பகுதி _ 6
அந்த வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி உள்ளே நுழைந்த பரணியின் மனதை வாட வைத்தது.
அம்மா அவர் அறையில் சுருண்டு படுத்திருந்தார். அப்பா இன்னும் வந்திருக்கவில்லைப் போலும்.
ஹ்ம்ம்.. இல்லாவிட்டால் அவன் வீடு இப்படியா இருக்கும்.காலேஜ் விட்டு வீட்டிற்கு வரும் போதே மனதினுள் ஒரு புத்துணர்வு வந்துவிடுமே.
அவன் வீட்டினுள் நுழையும் போதே அம்மா டிபன் தயாரித்து டேபிளில் வைத்துவிட்டு ஹால் சோபாவிலோ அல்லது வெளியே வாசலிலோ அமர்ந்து அவனுக்காக காத்திருப்பார்.
அவனது இரு அக்காக்களும் சில நேரங்களில் ஒன்றாக வீட்டில் இருப்பார்கள். அப்படி இருந்தால் கரம் விளையாடியபடியோ அல்லது ஹாலில் அமர்ந்து அம்மாவுடன் டிவி பார்த்தபடி அரட்டை அடித்தபடியோ இருப்பார்கள்.
அவனைக் கண்டதும் அவன் சுபி அக்கா டேய்... பப்பு குட்டி வந்துட்டியா? போய் பிரெஷ் ஆகிட்டு வா. நான் டிபன் எடுத்துட்டு வாறேன் என்று போவாள். உடனே இந்த விபு குரங்கு
ஹேய்ய்...சுக்கு நீ இவனை பப்புக்குட்டி பப்புக்குட்டி என்று கொஞ்சும் போது எனக்கு நம்ம பக்கத்து வீட்டு உஷா பப்பிக்குட்டி என்று அவள் நாயைக் கொஞ்சுவது போலவே தோன்றுகிறதுடி என்பாள்.
ஏய் ... கொழுப்புத்தானே உனக்கு. என்னை சுக்கு மிளகு என்று அசிங்கப்படுத்துவது போதாதென்று அவன் செல்லப் பேரையும் கிண்டல் செய்கிறாயா??
நீங்க என்னை குட்டி என்று கொஞ்சுவதில் இந்த குரங்குக்கு கடுப்பு சுபிக்கா என்று விபுவின் தலையில் தட்டுவான் பரணி.
பின்னே யுராசிக் வேர்ல்ட்ல வாற நியூ வெர்ஷன் டைனோசர் போல இருக்குற உன்னை போய் குட்டி என்று கொஞ்சினால் கடுப்பாகாதா??
ஹே போடி.. நான் எப்படி இருந்தாலும் என் சுபிக்காக்கு நான் குட்டி தான் இல்ல சுபிக்கா... என்று தமக்கையின் தோளில் செல்லமாக தலையை சாய்த்துக்கொள்வான்.
டேய்... எருமை எருமை...காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறடா. கொஞ்சமாவது அந்த மச்சுவர்ட் ஓட நடந்துக்கோ... இப்படியே அக்காகிட்ட செல்லம் கொஞ்சிக்கிட்டே பாப்பா போல இருந்தின்னா ஒரு பிகர் கூட உன்ன சைட் அடிக்க மாட்டாங்க சொல்லிட்டேன்.
ஹேய்..நீ எங்க இருந்து எங்க போற?? நாங்கல்லாம் அந்தந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக்குவோமாக்கும். என் காலேஜ்ல ஐயாவுக்கு எத்தன பான்ஸ் இருக்காங்க தெரியுமா?? என்று சட்டைக் காலரை கெத்தாக உயர்த்திவிட்டுக்கொள்வான்.
அடப்பாவி.... ஏய் சுக்கு பாத்தியாடி இவன.இவனப் போய் குட்டி குட்டின்னு கொஞ்சுறியே இது உனக்கே அடுக்குமா?? ஹ்ம்ம்... என்னை போல அப்பாவிகளுக்கு காலமே இல்லப்பா... என்று சத்தமாய் சலித்துக்கொள்வாள்.
ஹா... ஹா...சுபிக்கா இவள் அப்பாவியாம். இத நம்ம ரிஷி அத்தான் கிட்ட சொல்ல சொல்லுங்க அப்படியே நம்புவாங்க.
டேய்.. நீ ஏண்டா இப்போ அந்த புள்ளபூச்சி பேர இழுக்கிற??
ஹ்ம்ம்... உன்ர அப்பாவித்தனம் எந்த ரேஞ்சுக்கு போகும்னு பாவம் அவருக்கு தானே தெரியும்....
ஏய்..சுக்கு ..வேணாம் இவன வாயை மூடிட்டு இருக்க சொல்லு..இல்லைனா ..அப்புறம்..... என்று அவள் மிரட்டலாய் இழுக்கவும் முகம் லேசாக சிவக்க சுபாங்கி சும்மா இரு பப்பு என்று தம்பியை அடக்குவாள்.
அக்கா..... அது என்ன எப்போ பார்த்தாலும் ரிஷித்தான் பேர எடுத்து இவள் எதாச்சும் சொன்னா மட்டும் உடனே ஆப் ஆகிடுறீங்க??? ஏதாச்சும் மேட்டர் எனக்கு தெரியாம ஓடிட்டு இருக்கா?? ஹ்ம்ம்... இருந்தா எனக்கும் சொல்லுங்க பா.
ஆனா ஒண்ணு சரோத்தைக்கும் அப்பாக்கும் அப்படி ஒரு ஐடியா இருக்குன்னு தெரியும். அத்தான் அடிக்கடி இங்க வாறதும் உங்க கூட பேசி பழகத்தானோ என்னவோ???? ஆனா அதுக்கு தான் இந்த குரங்கு அவர விடவே விடாதே.ஒன்று ரிஷித்தான்....பாட்மிண்டன் விளையாடலாமா?? என்று கூப்பிட்டு அவர் மண்டையை உடைக்கும் அல்லது நானே போட்ட காபி என்று கூறி அவர் சட்டையிலேயே காபி கப்பை கவிழ்க்கும் ...ஏதோ ஒரு குரங்குச் சேஷ்டை செய்து அவரை வந்த அடுத்த அரை மணி நேரத்திலேயே துரத்தி விட்டுவிடுமே...
பரணி கிண்டலாக சொல்ல சரிப்பா ....நான் இனி உன் அத்தானை துரத்தவே இல்லை. அவர் சுக்கு கூட நன்றாக பேசிப் பழகட்டும் நான் குறுக்கிடவே மாட்டேன் பா ...என்று கூறி விபு தமக்கையைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரிக்க....
முகத்தில் லேசான சிவப்புடன் ..ஸ்ஸ்ஸ்... போதும்..போதும்... விபு வா டிபன் எடுத்துட்டு வரலாம். பப்பு நீ போய் சீக்கிரம் பிரெஷ் பண்ணிட்டு வா. இன்னைக்கு அம்மா உனக்கு பிடிச்ச டோனட்ஸ் பண்ணியிருக்காங்க என்று பரணியை அனுப்பி விட்டு தங்கையை இழுத்துக் கொண்டு போவாள்.
கிட்செனில் காபி தயாரித்தபடியே அம்மா இவர்கள் சம்பாசணையைக் கேட்டு சிரித்தபடியிருந்ததும் நினைவுக்கு வந்தது.
அம்மா அப்பா இரண்டு பேருமே மிகவும் அண்டர்ஸ்டான்டிங். பிள்ளைகளின் பேச்சில் அனாவசியமாக மூக்கை நுழைக்க மாட்டார்கள். அதே நேரம் அவர்கள் கண்காணிப்பும் பிள்ளைகள் மேல் இருக்கும்.அவர்கள் வரம்பு மீறி பேசி விட முடியாது.ஆனால் அவர்கள் சில நகைச்சுவைப் பேச்சினை கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியான குடும்பம் அவர்களது. ச்சே... சுபி மேல் அவன் எவ்வளவு பாசம் வைத்திருந்தான். அவன் அக்காவா இப்படி ஒரு செயலைச் செய்தாள்.அவனால் இன்னும் நம்பத்தான் முடியவில்லை.ஹ்ம்ம்....அதுவும் அந்த......அவன்...அவரை... ஹ்ம்ம்..... அவர் கண்ணில் தன் பெண்கள் பட்டுவிடக் கூடாது என்று தானே அப்பா...இங்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தார்.அவர் ஆள் சரியில்லை என்று அப்பா சொல்லி இருக்கிறார் தானே??? அப்படி இருந்தும் சுபிக்கா எப்படி இப்படி ஒரு செயலைச் செய்தாள்.
ஹ்ம்ம்.. ஒரு பெரு மூச்சு விட்டபடியே தலையைக் கோதியபடி மேலே சென்று பிரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்தான். எதிரே விபு வந்து கொண்டிருந்தாள்.
அந்த வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி உள்ளே நுழைந்த பரணியின் மனதை வாட வைத்தது.
அம்மா அவர் அறையில் சுருண்டு படுத்திருந்தார். அப்பா இன்னும் வந்திருக்கவில்லைப் போலும்.
ஹ்ம்ம்.. இல்லாவிட்டால் அவன் வீடு இப்படியா இருக்கும்.காலேஜ் விட்டு வீட்டிற்கு வரும் போதே மனதினுள் ஒரு புத்துணர்வு வந்துவிடுமே.
அவன் வீட்டினுள் நுழையும் போதே அம்மா டிபன் தயாரித்து டேபிளில் வைத்துவிட்டு ஹால் சோபாவிலோ அல்லது வெளியே வாசலிலோ அமர்ந்து அவனுக்காக காத்திருப்பார்.
அவனது இரு அக்காக்களும் சில நேரங்களில் ஒன்றாக வீட்டில் இருப்பார்கள். அப்படி இருந்தால் கரம் விளையாடியபடியோ அல்லது ஹாலில் அமர்ந்து அம்மாவுடன் டிவி பார்த்தபடி அரட்டை அடித்தபடியோ இருப்பார்கள்.
அவனைக் கண்டதும் அவன் சுபி அக்கா டேய்... பப்பு குட்டி வந்துட்டியா? போய் பிரெஷ் ஆகிட்டு வா. நான் டிபன் எடுத்துட்டு வாறேன் என்று போவாள். உடனே இந்த விபு குரங்கு
ஹேய்ய்...சுக்கு நீ இவனை பப்புக்குட்டி பப்புக்குட்டி என்று கொஞ்சும் போது எனக்கு நம்ம பக்கத்து வீட்டு உஷா பப்பிக்குட்டி என்று அவள் நாயைக் கொஞ்சுவது போலவே தோன்றுகிறதுடி என்பாள்.
ஏய் ... கொழுப்புத்தானே உனக்கு. என்னை சுக்கு மிளகு என்று அசிங்கப்படுத்துவது போதாதென்று அவன் செல்லப் பேரையும் கிண்டல் செய்கிறாயா??
நீங்க என்னை குட்டி என்று கொஞ்சுவதில் இந்த குரங்குக்கு கடுப்பு சுபிக்கா என்று விபுவின் தலையில் தட்டுவான் பரணி.
பின்னே யுராசிக் வேர்ல்ட்ல வாற நியூ வெர்ஷன் டைனோசர் போல இருக்குற உன்னை போய் குட்டி என்று கொஞ்சினால் கடுப்பாகாதா??
ஹே போடி.. நான் எப்படி இருந்தாலும் என் சுபிக்காக்கு நான் குட்டி தான் இல்ல சுபிக்கா... என்று தமக்கையின் தோளில் செல்லமாக தலையை சாய்த்துக்கொள்வான்.
டேய்... எருமை எருமை...காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறடா. கொஞ்சமாவது அந்த மச்சுவர்ட் ஓட நடந்துக்கோ... இப்படியே அக்காகிட்ட செல்லம் கொஞ்சிக்கிட்டே பாப்பா போல இருந்தின்னா ஒரு பிகர் கூட உன்ன சைட் அடிக்க மாட்டாங்க சொல்லிட்டேன்.
ஹேய்..நீ எங்க இருந்து எங்க போற?? நாங்கல்லாம் அந்தந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக்குவோமாக்கும். என் காலேஜ்ல ஐயாவுக்கு எத்தன பான்ஸ் இருக்காங்க தெரியுமா?? என்று சட்டைக் காலரை கெத்தாக உயர்த்திவிட்டுக்கொள்வான்.
அடப்பாவி.... ஏய் சுக்கு பாத்தியாடி இவன.இவனப் போய் குட்டி குட்டின்னு கொஞ்சுறியே இது உனக்கே அடுக்குமா?? ஹ்ம்ம்... என்னை போல அப்பாவிகளுக்கு காலமே இல்லப்பா... என்று சத்தமாய் சலித்துக்கொள்வாள்.
ஹா... ஹா...சுபிக்கா இவள் அப்பாவியாம். இத நம்ம ரிஷி அத்தான் கிட்ட சொல்ல சொல்லுங்க அப்படியே நம்புவாங்க.
டேய்.. நீ ஏண்டா இப்போ அந்த புள்ளபூச்சி பேர இழுக்கிற??
ஹ்ம்ம்... உன்ர அப்பாவித்தனம் எந்த ரேஞ்சுக்கு போகும்னு பாவம் அவருக்கு தானே தெரியும்....
ஏய்..சுக்கு ..வேணாம் இவன வாயை மூடிட்டு இருக்க சொல்லு..இல்லைனா ..அப்புறம்..... என்று அவள் மிரட்டலாய் இழுக்கவும் முகம் லேசாக சிவக்க சுபாங்கி சும்மா இரு பப்பு என்று தம்பியை அடக்குவாள்.
அக்கா..... அது என்ன எப்போ பார்த்தாலும் ரிஷித்தான் பேர எடுத்து இவள் எதாச்சும் சொன்னா மட்டும் உடனே ஆப் ஆகிடுறீங்க??? ஏதாச்சும் மேட்டர் எனக்கு தெரியாம ஓடிட்டு இருக்கா?? ஹ்ம்ம்... இருந்தா எனக்கும் சொல்லுங்க பா.
ஆனா ஒண்ணு சரோத்தைக்கும் அப்பாக்கும் அப்படி ஒரு ஐடியா இருக்குன்னு தெரியும். அத்தான் அடிக்கடி இங்க வாறதும் உங்க கூட பேசி பழகத்தானோ என்னவோ???? ஆனா அதுக்கு தான் இந்த குரங்கு அவர விடவே விடாதே.ஒன்று ரிஷித்தான்....பாட்மிண்டன் விளையாடலாமா?? என்று கூப்பிட்டு அவர் மண்டையை உடைக்கும் அல்லது நானே போட்ட காபி என்று கூறி அவர் சட்டையிலேயே காபி கப்பை கவிழ்க்கும் ...ஏதோ ஒரு குரங்குச் சேஷ்டை செய்து அவரை வந்த அடுத்த அரை மணி நேரத்திலேயே துரத்தி விட்டுவிடுமே...
பரணி கிண்டலாக சொல்ல சரிப்பா ....நான் இனி உன் அத்தானை துரத்தவே இல்லை. அவர் சுக்கு கூட நன்றாக பேசிப் பழகட்டும் நான் குறுக்கிடவே மாட்டேன் பா ...என்று கூறி விபு தமக்கையைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரிக்க....
முகத்தில் லேசான சிவப்புடன் ..ஸ்ஸ்ஸ்... போதும்..போதும்... விபு வா டிபன் எடுத்துட்டு வரலாம். பப்பு நீ போய் சீக்கிரம் பிரெஷ் பண்ணிட்டு வா. இன்னைக்கு அம்மா உனக்கு பிடிச்ச டோனட்ஸ் பண்ணியிருக்காங்க என்று பரணியை அனுப்பி விட்டு தங்கையை இழுத்துக் கொண்டு போவாள்.
கிட்செனில் காபி தயாரித்தபடியே அம்மா இவர்கள் சம்பாசணையைக் கேட்டு சிரித்தபடியிருந்ததும் நினைவுக்கு வந்தது.
அம்மா அப்பா இரண்டு பேருமே மிகவும் அண்டர்ஸ்டான்டிங். பிள்ளைகளின் பேச்சில் அனாவசியமாக மூக்கை நுழைக்க மாட்டார்கள். அதே நேரம் அவர்கள் கண்காணிப்பும் பிள்ளைகள் மேல் இருக்கும்.அவர்கள் வரம்பு மீறி பேசி விட முடியாது.ஆனால் அவர்கள் சில நகைச்சுவைப் பேச்சினை கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியான குடும்பம் அவர்களது. ச்சே... சுபி மேல் அவன் எவ்வளவு பாசம் வைத்திருந்தான். அவன் அக்காவா இப்படி ஒரு செயலைச் செய்தாள்.அவனால் இன்னும் நம்பத்தான் முடியவில்லை.ஹ்ம்ம்....அதுவும் அந்த......அவன்...அவரை... ஹ்ம்ம்..... அவர் கண்ணில் தன் பெண்கள் பட்டுவிடக் கூடாது என்று தானே அப்பா...இங்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தார்.அவர் ஆள் சரியில்லை என்று அப்பா சொல்லி இருக்கிறார் தானே??? அப்படி இருந்தும் சுபிக்கா எப்படி இப்படி ஒரு செயலைச் செய்தாள்.
ஹ்ம்ம்.. ஒரு பெரு மூச்சு விட்டபடியே தலையைக் கோதியபடி மேலே சென்று பிரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்தான். எதிரே விபு வந்து கொண்டிருந்தாள்.