- Joined
- Aug 1, 2021
- Messages
- 72
பகுதி _ 7
அந்த வாரம் தனாவின் தோப்பு வேலைகள் முடிந்துவிட சுபியின் தோட்ட வேலைகளுக்கு ஆட்களும் வந்தார்கள்.
தனா கூடுதலாகவே ஆட்களை அனுப்பி இருக்க அவள் குறைந்தது ஒருவாரமாவது எடுக்கும் என எதிர்பார்த்த வேலை இரண்டே நாட்களில் முடிந்தது.
புற்கள் , களைகள் எல்லாம் புடுங்கப்பட்டு அதிகப்படியாய் வளர்ந்து நின்ற செடிகள் குரோட்டன்ஸ் எல்லாம் ஒரு ஒழுங்கில் வெட்டப்பட்ட தோட்டம் அழகாக தலை வாரிய இளம் பெண் போல் ஜொலித்தது. தலையில் சில பல பூக்களுடன் .....
அன்று ஞாயிற்றுக் கிழமை ஆதலால் பூவிழியும் கடம்பனும் கூடவே சுற்ற தோட்டக்காரரின் உதவியுடன் தோட்டத்தின் ஒரு பக்கமாக கொத்தி சாரி நீர்விட்டு பதப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் முனியனிடம் சொல்லி வாங்கி வந்திருந்த கத்தரி வெண்டி என்று காய்கறிச் செடிகளின் விதைகளைத் தூவி கிளறி விட்டாள். பின் அவற்றின் மேல் சிறிது நீர் தெளித்தவள். ஒரு திருப்தியான முறுவலோடு கைகளைத்துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்தவள் தோட்டத்தின் மத்தியில் இருந்த ரோஜாச் சாடிகளில் ஒன்று வரிசை மாறி இருப்பதைக் கண்டு அதை மாற்றி வைக்க சொல்லலாம் என முனியனைத் தேடினாள்.தேடிச் சுழன்ற அவள் விழிகளில்
அங்கிருந்த மாமரத்தின் கீழ் சாய்ந்து ஓய்வெடுத்த முனியன் தென்பட்டார். அவர் முகத்தில் களைப்பு அப்பட்டமாக தெரிந்தது. சம்பளம் வாங்கும் ஒரே காரணத்திற்காக அவர்களும் சக மனிதன் தான் என்று எண்ணாமல் அவர்களின் களைப்பினைப் பொருட்படுத்தாமல் வேலை வாங்குவது என்ன நியாயம்??
சுபியின் இதழ்களில் ஓர் கனிந்த புன்னகை மலர அவரை தொல்லை செய்யாமல் தானே அந்த வரிசையை மாற்றி வைக்க எண்ணி சாடியைத் தூக்கினாள்.சற்று பெரிய அளவுள்ள சாடி தான். முழுதும் மண் நிரப்பி உள்ளே ஒரு ரோஜாச் செடி வேறு இருந்தது.
சுபிக்கா இது ரொம்ப பாரம் அக்கா. நீங்க தூக்க மாட்டீங்க.இருங்க முனியன் தாத்தாவ எழுப்புறேன்..... என்று பூவிழி சொல்ல
இல்ல பூவிழி அவர் பாவம் ரொம்ப களைச்சுப் போய் இருக்கார்.விடு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும்...
ஹ்ம்ம்... அப்போ இத யாரு மாற்றி வைக்கிறது??
ஹேய்ய்...அக்காவோட பவர பத்தி என்ன நினைச்ச... பாரு இத நான் தூக்கி காட்டுறேனா இல்லையான்னு... என்று விளையாட்டாய் அந்த சிறுமியிடம் பேசியவாறு மூச்சை பிடித்து அதைத் தூக்கியவள் சிரமத்துடன் இரண்டடி எடுத்து வைக்கவும்
ஏய்.... அறிவில்லையா உனக்கு என்று தனாவின் அதட்டல் மிக அருகில் கேட்க அதை எதிர்பாராததால் அதிர்ந்தவளின் பிடி நழுவ அந்த பூச்சாடி அவள் காலில் விழுந்து காலைப் பதம் பார்த்தது.
அம்மா ..... என்று அலறியபடி அவள் கீழே அமர்ந்து காலினை அழுத்திப் பிடித்தாள்.அவள் விரல்களிடையே குருதி துளித்துளியாய் உருண்டு கீழே வழிந்தது.
அக்கா .... என்று கடம்பனும் பூவிழியும் அதிர ஏய் கடம்பா ஓடிப்போய் தண்ணி எடுத்துட்டு வா.. என்று கடம்பனை விரட்டிய தனா அவள் அருகில் கீழே மண்டியிட்டு அமர்ந்து அவள் காலைப் பார்க்க முயன்றான்.அவள் அதற்கு அனுமதிக்காமல் கரங்களால் இறுகப் பொத்தியபடி தலைகுனிந்து வேதனையில் முனக
ஏய்... கையை எடு.... காயம் பெருசான்னு பார்க்கணும்.. பெருசா இருந்தா தையல் போடணும் என்று அதட்டியவன் அவள் கையை வலுக்கட்டாயமாக விலக்கி பார்த்தான். அவள் கால் முழுதும் குருதியில் தோய்ந்திருந்தது. கடம்பன் கொண்டு வந்திருந்த நீரால் அவள் காலைக் கழுவினான். கழுவ கழுவ குருதி பெருகியது.
அதற்குள் பூவிழி ஓடிச் சென்று தகவல் சொன்னதில் பிரபாவதியும் வந்திருக்க
அம்மா காயம் கொஞ்சம் பெருசு .... தையல் போடணும் போல இருக்கு. நா இவள கூட்டிட்டு நம்ம டாக்டர் வீடு வரைக்கும் போயிட்டு வாறன். முகில்கிட்ட சொல்லிடுங்க என்றவன்
அவள் கரத்தைப் பற்றி எழுப்பினான்.
பாத்துடா சுபிம்மா என்று பிரபாவதி அவள் மறுபுறம் பிடிக்க அத்தையின் தோளை அழுத்திப் பிடித்து எழுந்தவள் மெதுவாக மறுபுறம் பற்றியிருந்த தனாவின் கையை விலக்கினாள். தனஞ்சயன் எதையும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் பிரபாவதியின் தோளைப் பிடித்தபடி மெல்ல அடியெடுத்து வைத்தவளின் முகத்தில் தெரிந்த வேதனையையும் ஒவ்வொரு அடிக்கும் காலில் பெருக்கெடுத்த குருதியையும் கண்டவன் அடுத்த கணம் எதையும் சிந்திக்காமல் விலகுங்கம்மா என்றவன் சட்டென அவளை கைகளில் தாங்கினான்.
அதை எதிர்பாராமல் திகைத்த சுபாங்கி இல்லை நானே வருவேன் என தடுமாறியபடி முணுமுணுக்கவும் வாயை மூடிட்டு இருடி.... என்று உறுமியவன் வேகமாக விரைந்தான். வேறு வழியின்றி பிடிப்புக்காக அலைந்த சுபியின் கைகள் அவன் தோளில் பதிந்தன. அந்தக் கணம் உடல் சிலிர்க்க வேதனையையும் மீறி சுபியின் கலங்கிய விழிகள் அவன் முகம் பார்க்க அவன் முகத்தில் அவள் எதிர்பார்த்த எந்த உணர்வும் இல்லை. இவனுக்கு அந்த நினைவே இல்லையா?? இதே போல் அவன் தோளைக் கட்டியபடி அவள் அவனில் பாதுகாப்பு தேடிய அந்த தருணம்!!!!!!
இத்தனை வருடங்களாய் அதை நெஞ்சில் சுமந்து அதனுடனே வாழ்வது அவள் மட்டும் தானா?? விழிகளை இறுக மூடியவளின் விழியோரம் வழிந்த கண்ணீர் அவன் மார்பைச் சுட்டது.
ரொம்ப வலிக்குதா?? அழாதே இதோ டாக்டரிடம் போய்விடலாம். அவர் தையலும் போட்டு கூடவே வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசியும் போடுவார். எல்லாம் சரியாகிவிடும்.
ஏதோ குழந்தையை சமாதானப் படுத்துவது போல் கூறிக்கொண்டே அவளை காரினுள் இருந்தினான்.
அவன் பேச்சில் கோபம் சுர்ரென்று ஏற நான் ஒன்றும் அழவில்லை என்று சீறியவள் கண்களை அழுந்த தேய்த்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
அந்த வாரம் தனாவின் தோப்பு வேலைகள் முடிந்துவிட சுபியின் தோட்ட வேலைகளுக்கு ஆட்களும் வந்தார்கள்.
தனா கூடுதலாகவே ஆட்களை அனுப்பி இருக்க அவள் குறைந்தது ஒருவாரமாவது எடுக்கும் என எதிர்பார்த்த வேலை இரண்டே நாட்களில் முடிந்தது.
புற்கள் , களைகள் எல்லாம் புடுங்கப்பட்டு அதிகப்படியாய் வளர்ந்து நின்ற செடிகள் குரோட்டன்ஸ் எல்லாம் ஒரு ஒழுங்கில் வெட்டப்பட்ட தோட்டம் அழகாக தலை வாரிய இளம் பெண் போல் ஜொலித்தது. தலையில் சில பல பூக்களுடன் .....
அன்று ஞாயிற்றுக் கிழமை ஆதலால் பூவிழியும் கடம்பனும் கூடவே சுற்ற தோட்டக்காரரின் உதவியுடன் தோட்டத்தின் ஒரு பக்கமாக கொத்தி சாரி நீர்விட்டு பதப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் முனியனிடம் சொல்லி வாங்கி வந்திருந்த கத்தரி வெண்டி என்று காய்கறிச் செடிகளின் விதைகளைத் தூவி கிளறி விட்டாள். பின் அவற்றின் மேல் சிறிது நீர் தெளித்தவள். ஒரு திருப்தியான முறுவலோடு கைகளைத்துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்தவள் தோட்டத்தின் மத்தியில் இருந்த ரோஜாச் சாடிகளில் ஒன்று வரிசை மாறி இருப்பதைக் கண்டு அதை மாற்றி வைக்க சொல்லலாம் என முனியனைத் தேடினாள்.தேடிச் சுழன்ற அவள் விழிகளில்
அங்கிருந்த மாமரத்தின் கீழ் சாய்ந்து ஓய்வெடுத்த முனியன் தென்பட்டார். அவர் முகத்தில் களைப்பு அப்பட்டமாக தெரிந்தது. சம்பளம் வாங்கும் ஒரே காரணத்திற்காக அவர்களும் சக மனிதன் தான் என்று எண்ணாமல் அவர்களின் களைப்பினைப் பொருட்படுத்தாமல் வேலை வாங்குவது என்ன நியாயம்??
சுபியின் இதழ்களில் ஓர் கனிந்த புன்னகை மலர அவரை தொல்லை செய்யாமல் தானே அந்த வரிசையை மாற்றி வைக்க எண்ணி சாடியைத் தூக்கினாள்.சற்று பெரிய அளவுள்ள சாடி தான். முழுதும் மண் நிரப்பி உள்ளே ஒரு ரோஜாச் செடி வேறு இருந்தது.
சுபிக்கா இது ரொம்ப பாரம் அக்கா. நீங்க தூக்க மாட்டீங்க.இருங்க முனியன் தாத்தாவ எழுப்புறேன்..... என்று பூவிழி சொல்ல
இல்ல பூவிழி அவர் பாவம் ரொம்ப களைச்சுப் போய் இருக்கார்.விடு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும்...
ஹ்ம்ம்... அப்போ இத யாரு மாற்றி வைக்கிறது??
ஹேய்ய்...அக்காவோட பவர பத்தி என்ன நினைச்ச... பாரு இத நான் தூக்கி காட்டுறேனா இல்லையான்னு... என்று விளையாட்டாய் அந்த சிறுமியிடம் பேசியவாறு மூச்சை பிடித்து அதைத் தூக்கியவள் சிரமத்துடன் இரண்டடி எடுத்து வைக்கவும்
ஏய்.... அறிவில்லையா உனக்கு என்று தனாவின் அதட்டல் மிக அருகில் கேட்க அதை எதிர்பாராததால் அதிர்ந்தவளின் பிடி நழுவ அந்த பூச்சாடி அவள் காலில் விழுந்து காலைப் பதம் பார்த்தது.
அம்மா ..... என்று அலறியபடி அவள் கீழே அமர்ந்து காலினை அழுத்திப் பிடித்தாள்.அவள் விரல்களிடையே குருதி துளித்துளியாய் உருண்டு கீழே வழிந்தது.
அக்கா .... என்று கடம்பனும் பூவிழியும் அதிர ஏய் கடம்பா ஓடிப்போய் தண்ணி எடுத்துட்டு வா.. என்று கடம்பனை விரட்டிய தனா அவள் அருகில் கீழே மண்டியிட்டு அமர்ந்து அவள் காலைப் பார்க்க முயன்றான்.அவள் அதற்கு அனுமதிக்காமல் கரங்களால் இறுகப் பொத்தியபடி தலைகுனிந்து வேதனையில் முனக
ஏய்... கையை எடு.... காயம் பெருசான்னு பார்க்கணும்.. பெருசா இருந்தா தையல் போடணும் என்று அதட்டியவன் அவள் கையை வலுக்கட்டாயமாக விலக்கி பார்த்தான். அவள் கால் முழுதும் குருதியில் தோய்ந்திருந்தது. கடம்பன் கொண்டு வந்திருந்த நீரால் அவள் காலைக் கழுவினான். கழுவ கழுவ குருதி பெருகியது.
அதற்குள் பூவிழி ஓடிச் சென்று தகவல் சொன்னதில் பிரபாவதியும் வந்திருக்க
அம்மா காயம் கொஞ்சம் பெருசு .... தையல் போடணும் போல இருக்கு. நா இவள கூட்டிட்டு நம்ம டாக்டர் வீடு வரைக்கும் போயிட்டு வாறன். முகில்கிட்ட சொல்லிடுங்க என்றவன்
அவள் கரத்தைப் பற்றி எழுப்பினான்.
பாத்துடா சுபிம்மா என்று பிரபாவதி அவள் மறுபுறம் பிடிக்க அத்தையின் தோளை அழுத்திப் பிடித்து எழுந்தவள் மெதுவாக மறுபுறம் பற்றியிருந்த தனாவின் கையை விலக்கினாள். தனஞ்சயன் எதையும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் பிரபாவதியின் தோளைப் பிடித்தபடி மெல்ல அடியெடுத்து வைத்தவளின் முகத்தில் தெரிந்த வேதனையையும் ஒவ்வொரு அடிக்கும் காலில் பெருக்கெடுத்த குருதியையும் கண்டவன் அடுத்த கணம் எதையும் சிந்திக்காமல் விலகுங்கம்மா என்றவன் சட்டென அவளை கைகளில் தாங்கினான்.
அதை எதிர்பாராமல் திகைத்த சுபாங்கி இல்லை நானே வருவேன் என தடுமாறியபடி முணுமுணுக்கவும் வாயை மூடிட்டு இருடி.... என்று உறுமியவன் வேகமாக விரைந்தான். வேறு வழியின்றி பிடிப்புக்காக அலைந்த சுபியின் கைகள் அவன் தோளில் பதிந்தன. அந்தக் கணம் உடல் சிலிர்க்க வேதனையையும் மீறி சுபியின் கலங்கிய விழிகள் அவன் முகம் பார்க்க அவன் முகத்தில் அவள் எதிர்பார்த்த எந்த உணர்வும் இல்லை. இவனுக்கு அந்த நினைவே இல்லையா?? இதே போல் அவன் தோளைக் கட்டியபடி அவள் அவனில் பாதுகாப்பு தேடிய அந்த தருணம்!!!!!!
இத்தனை வருடங்களாய் அதை நெஞ்சில் சுமந்து அதனுடனே வாழ்வது அவள் மட்டும் தானா?? விழிகளை இறுக மூடியவளின் விழியோரம் வழிந்த கண்ணீர் அவன் மார்பைச் சுட்டது.
ரொம்ப வலிக்குதா?? அழாதே இதோ டாக்டரிடம் போய்விடலாம். அவர் தையலும் போட்டு கூடவே வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசியும் போடுவார். எல்லாம் சரியாகிவிடும்.
ஏதோ குழந்தையை சமாதானப் படுத்துவது போல் கூறிக்கொண்டே அவளை காரினுள் இருந்தினான்.
அவன் பேச்சில் கோபம் சுர்ரென்று ஏற நான் ஒன்றும் அழவில்லை என்று சீறியவள் கண்களை அழுந்த தேய்த்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.