- Joined
- Aug 1, 2021
- Messages
- 72
பகுதி _ 8
பூம்பொழில்
பெயருக்கு ஏற்றாற்போல் பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொட்டிக் கிடக்கும் அழகிய கிராமம். அது தான் அவர்கள் பூர்வீகம்.....
தர்மராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினாலும் ஒவ்வொரு வருடமும் அவர் தாயின் திதியின் போது மட்டும் குடும்பத்துடன் ஒரு வாரம் அங்கு வந்து தங்கி தாயின் சமாதியில் ஐயரைக் கூப்பிட்டு படையல் படைத்து செய்ய வேண்டிய சாங்கியங்களைச் செய்துவிட்டுப் போவது வழக்கம்.
வருடத்தில் ஒரு முறை வந்து தங்குவதற்காகவே அவர்கள் பூர்வீக வீட்டை சுத்தம் செய்து பராமரிக்க ஒரு வயதான பெண்மணியையும் ஏற்பாடு செய்திருந்தார்.
ஒவ்வொரு வருடமும் தங்கள் கிராமத்திற்கு செல்வது என்றால் சுபிக்கு அவ்வளவு பிடிக்கும். மலர்க்கொடி, வள்ளி, தேன்மொழி என்று அவளுக்கு அங்கு சில தோழிகளும் இருந்தனர். கிராமத்தில் தங்கியிருக்கும் அந்த ஒரு வாரமும் தோழிகளுடன் சேர்ந்து அந்த கிராமத்தையே ஒரு கலக்கு கலக்கி விடுவாள்.
பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் யாரு?? நம்ம தர்மா பொண்ணா?? என்று ஆசையுடன் கன்னம் தடவி கதைகேட்க அந்த கிராமத்தில் அவள் தன்னை ஒரு தேவதையாய்.. உணர்வாள். நகரத்து சாயம் படிந்த அவள் ஆடை அணிமணிகளை அவள் கிராமத்து தோழிகள் வாய்பிளந்து பார்க்கும் போது மிகவும் பெருமையாய் இருக்கும்.
பூம்பொழிலின் கலப்படமற்ற சுத்தமான காற்றும் வயல்வெளியும் அங்கு ஓடும் சிறு ஆறும் ஆடு மாடுகளும் என்று அவளுக்கு பூம்பொழிலை மிகவும் பிடிக்கும். அதுவும் அவர்கள் குல தெய்வம் கோவிலை அண்டியுள்ள பரந்த வயல்வெளி அவளின் மிகப்பிரியமான இடம்.
அவர்கள் குல தெய்வம் வைரவர். முன்னால் பரந்து விரிந்த வயல் வெளியும் அதன் அருகே ஒரு மொட்டைக் கிணறும் இருக்க அதன் கரையினிலே சிறு பாறை மேட்டில் அவர்கள் குல தெய்வம் குடி கொண்டிருந்தார்.
அந்த மொட்டைக் கிணறு சிலபல உயிர்களைப் பலிவாங்கியிருக்க அந்தப் பக்கமே விளையாடப் போக கூடாது என்று சிறுவர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த பசிய வயல்வெளியும் அதுவும் குறிப்பாக இவர்கள் செல்லும் அந்த தருணத்தில் கதிர் தள்ளி தலை சாய்த்து நிற்கும் நெற்கதிர்களும் சுபாங்கிக்கு மிகவும் பிடிக்கும். அந்த வயல்வெளியில் ஓடி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு. அதனால் அங்கு விளையாட வர மறுக்கும் தோழிகளையும் வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போவாள்.
அந்த குல தெய்வம் கோவிலில் தான் அவள் பிரபாவதியை சில தடவைகள் கண்டிருக்கிறாள். இவளைக்கண்டு கனிவுடன் புன்னகைக்கும் அவரை அவளுக்கு அப்போது யாரென்றே தெரியாது.அந்த ஊரின் பெரிய வீட்டுப் பெண்மணி என்ற அளவிலேயே அவளுக்கு அவரை தெரிந்திருந்தது.
அந்த ஊர் முழுதும் வட்டமடிக்கும் அவளுக்கு அந்த கிராமத்தின் பெரிய வீட்டை தெரியும். பசிய மரக்கூடல்களின் நடுவே கம்பீரமாய் நிற்கும் அந்த பங்களாவை அவள் பல முறை தூரத்தில் நின்று ரசித்திருக்கிறாள். எனவே அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்மணி என்ற பிரமிப்புடனே அவள் பிரபாவதியை நோக்குவாள்.
ஒரு தடவை தந்தையிடம் “ அந்த பெரிய வீடு யாருதுப்பா?? பெரிய தோட்டத்துக்கு நடுவில சந்தன நிறத்துல.... ரொம்ப அழகுப்பா... குட்டி அரண்மனை போல.... இந்த ஊருல எல்லாரையும் உங்களுக்கு தெரியும்.. எல்லாரும் உங்க கூட பாசமா பேசுறாங்க.... அந்த பெரிய வீட்டுக்காரங்களும் உங்களுக்கு பழக்கமாப்பா?? அப்படின்னா ப்ளீஸ் அந்த வீட்ட உள்ள போய் பார்க்கலாமா?? அவங்க கிட்ட கேட்டு பர்மிஷன் வாங்கி தாறீங்களாப்பா???
தந்தையின் முக மாறுதலை சற்றும் கவனிக்காமல் கண்களில் ஆர்வப் பளபளப்புடன் பேசிய சுபாங்கி பேச்சை முடித்த மறு நொடி தந்தையிடமிருந்து முதுகில் நாலு அறைகளை வாங்கினாள்.
இதுக்கு மேல அந்த வீடு இருக்குற திசைப்பக்கம் கூட நீ திரும்பக்கூடாது.அப்படி அந்தப் பக்கம் போனேன்னு கேள்விப்பட்டேன் உன் காலை ஓடைச்சுடுவேன்.. ராஸ்கல்.... அந்த வீட்ட இவ போய்ப் பார்க்க போறாளாம்....ஹ்ம்ம்....என்று உறுமியவர் மனைவியிடம் திரும்பி
என்னடி புள்ள வளர்த்து வைச்சிருக்கே...... என்று பாய்ந்தார். சிவகாமி சுபாங்கியை தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அமைதியாய் இருக்கவும்... அவளுக்கு புரியுற மாதிரி சொல்லி வை. இனி இவ அந்த வீட்டுப் பக்கம் விளையாடுறேன்னு போனா நீ தொலைஞ்ச..... என்று ஒரு விரல் உயர்த்தி கர்ஜித்து விட்டுச் சென்றார்.
அந்த சம்பவம் சுபாங்கியின் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்டது.அதுவரை அவள் தந்தை அவள் மீது அவ்வளவு தூரம் ஒரு நாளும் கோபம் கொண்டதில்லை. முதல் தடவை கைநீட்டி அடிக்கும் அளவிற்கு கோபம் கொண்டிருக்கிறார்.
அன்று இரவு படுக்கையிலும் விசித்துக்கொண்டிருந்த சுபாங்கி தன்னை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்திய தாயின் கரத்தை இறுகப் பற்றியபடி அப்பா ஏன்மா அவ்ளோ கோபப்பட்டார் என வினவினாள்....
ஒரு கணம் திணறிய சிவகாமி பின்..அது....அது.. எங்க சுபி நல்ல பொண்ணு தானே!!! அவ இப்படி அடுத்தவங்க வீட்டுக்குள்ள போய் பார்க்கணும் என்று ஆசைப்பட்டா.... அது தப்புடா..... என் பொண்ணு இப்படி தப்பு பண்ணுறதா என்று அது தான்டா அப்பாவுக்கு ரொம்ப கோபம் .. என்று சமாளித்தார்.. அப்போது சிறு பெண்ணான சுபிக்கும் அந்த சமாதானம் போதுமானதாய் இருக்க.
மறுநாள் காலையே தந்தை முன் சென்று அப்பா.... சுபி இனி தப்பு பண்ண மாட்டா....இனி இப்படி அடுத்தவங்க வீட்ட உள்ள போய் பார்க்கணும்னுலாம் ஆசைப்பட மாட்டா ..... என்று தந்தைக்கு சமாதானம் சொன்னாள்.
அந்த சமாதானத்தில் அவர் கோபம் எல்லாம் பறந்து போய் விட அவளை மடியில் இருத்தி என் பொண்ணு தங்கம் டா....சாரி டா அப்பா நேத்து என் தங்கத்தை அடிச்சுட்டேன் என்று மன்னிப்பு கேட்டவர் ... இனி அந்தப்பக்கம் எல்லாம் விளையாட போகாதே என்ன.... என வினவவும் போக மாட்டேன்பா என்று உறுதியளித்தாள் குட்டிப் பெண் சுபி.
தந்தையிடம் சொன்னது போலவே அதன் பிறகு நடந்தும் கொண்டாள்.
ஆண்டுகளின் அதிவேக ஓட்டத்தில் சுபாங்கி பெரிய பெண்ணாகிவிட அதற்கு அடுத்த வருடம் ஊருக்கு கிளம்பும் போது சுபாங்கியை கூட அழைத்துச் செல்ல தர்மராஜ் சற்றுத் தயங்கினார்.
ஆனால் குழந்தை போல் குதித்துக்கொண்டு கிளம்பிய மகளின் ஆர்வத்தைப் பார்த்து மனம் கனிந்துவிட அந்த ஆர்வத்தைக் குலைக்க மனமின்றி அழைத்துப் போனார்.
பூம்பொழில்
பெயருக்கு ஏற்றாற்போல் பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொட்டிக் கிடக்கும் அழகிய கிராமம். அது தான் அவர்கள் பூர்வீகம்.....
தர்மராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினாலும் ஒவ்வொரு வருடமும் அவர் தாயின் திதியின் போது மட்டும் குடும்பத்துடன் ஒரு வாரம் அங்கு வந்து தங்கி தாயின் சமாதியில் ஐயரைக் கூப்பிட்டு படையல் படைத்து செய்ய வேண்டிய சாங்கியங்களைச் செய்துவிட்டுப் போவது வழக்கம்.
வருடத்தில் ஒரு முறை வந்து தங்குவதற்காகவே அவர்கள் பூர்வீக வீட்டை சுத்தம் செய்து பராமரிக்க ஒரு வயதான பெண்மணியையும் ஏற்பாடு செய்திருந்தார்.
ஒவ்வொரு வருடமும் தங்கள் கிராமத்திற்கு செல்வது என்றால் சுபிக்கு அவ்வளவு பிடிக்கும். மலர்க்கொடி, வள்ளி, தேன்மொழி என்று அவளுக்கு அங்கு சில தோழிகளும் இருந்தனர். கிராமத்தில் தங்கியிருக்கும் அந்த ஒரு வாரமும் தோழிகளுடன் சேர்ந்து அந்த கிராமத்தையே ஒரு கலக்கு கலக்கி விடுவாள்.
பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் யாரு?? நம்ம தர்மா பொண்ணா?? என்று ஆசையுடன் கன்னம் தடவி கதைகேட்க அந்த கிராமத்தில் அவள் தன்னை ஒரு தேவதையாய்.. உணர்வாள். நகரத்து சாயம் படிந்த அவள் ஆடை அணிமணிகளை அவள் கிராமத்து தோழிகள் வாய்பிளந்து பார்க்கும் போது மிகவும் பெருமையாய் இருக்கும்.
பூம்பொழிலின் கலப்படமற்ற சுத்தமான காற்றும் வயல்வெளியும் அங்கு ஓடும் சிறு ஆறும் ஆடு மாடுகளும் என்று அவளுக்கு பூம்பொழிலை மிகவும் பிடிக்கும். அதுவும் அவர்கள் குல தெய்வம் கோவிலை அண்டியுள்ள பரந்த வயல்வெளி அவளின் மிகப்பிரியமான இடம்.
அவர்கள் குல தெய்வம் வைரவர். முன்னால் பரந்து விரிந்த வயல் வெளியும் அதன் அருகே ஒரு மொட்டைக் கிணறும் இருக்க அதன் கரையினிலே சிறு பாறை மேட்டில் அவர்கள் குல தெய்வம் குடி கொண்டிருந்தார்.
அந்த மொட்டைக் கிணறு சிலபல உயிர்களைப் பலிவாங்கியிருக்க அந்தப் பக்கமே விளையாடப் போக கூடாது என்று சிறுவர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த பசிய வயல்வெளியும் அதுவும் குறிப்பாக இவர்கள் செல்லும் அந்த தருணத்தில் கதிர் தள்ளி தலை சாய்த்து நிற்கும் நெற்கதிர்களும் சுபாங்கிக்கு மிகவும் பிடிக்கும். அந்த வயல்வெளியில் ஓடி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு. அதனால் அங்கு விளையாட வர மறுக்கும் தோழிகளையும் வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போவாள்.
அந்த குல தெய்வம் கோவிலில் தான் அவள் பிரபாவதியை சில தடவைகள் கண்டிருக்கிறாள். இவளைக்கண்டு கனிவுடன் புன்னகைக்கும் அவரை அவளுக்கு அப்போது யாரென்றே தெரியாது.அந்த ஊரின் பெரிய வீட்டுப் பெண்மணி என்ற அளவிலேயே அவளுக்கு அவரை தெரிந்திருந்தது.
அந்த ஊர் முழுதும் வட்டமடிக்கும் அவளுக்கு அந்த கிராமத்தின் பெரிய வீட்டை தெரியும். பசிய மரக்கூடல்களின் நடுவே கம்பீரமாய் நிற்கும் அந்த பங்களாவை அவள் பல முறை தூரத்தில் நின்று ரசித்திருக்கிறாள். எனவே அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்மணி என்ற பிரமிப்புடனே அவள் பிரபாவதியை நோக்குவாள்.
ஒரு தடவை தந்தையிடம் “ அந்த பெரிய வீடு யாருதுப்பா?? பெரிய தோட்டத்துக்கு நடுவில சந்தன நிறத்துல.... ரொம்ப அழகுப்பா... குட்டி அரண்மனை போல.... இந்த ஊருல எல்லாரையும் உங்களுக்கு தெரியும்.. எல்லாரும் உங்க கூட பாசமா பேசுறாங்க.... அந்த பெரிய வீட்டுக்காரங்களும் உங்களுக்கு பழக்கமாப்பா?? அப்படின்னா ப்ளீஸ் அந்த வீட்ட உள்ள போய் பார்க்கலாமா?? அவங்க கிட்ட கேட்டு பர்மிஷன் வாங்கி தாறீங்களாப்பா???
தந்தையின் முக மாறுதலை சற்றும் கவனிக்காமல் கண்களில் ஆர்வப் பளபளப்புடன் பேசிய சுபாங்கி பேச்சை முடித்த மறு நொடி தந்தையிடமிருந்து முதுகில் நாலு அறைகளை வாங்கினாள்.
இதுக்கு மேல அந்த வீடு இருக்குற திசைப்பக்கம் கூட நீ திரும்பக்கூடாது.அப்படி அந்தப் பக்கம் போனேன்னு கேள்விப்பட்டேன் உன் காலை ஓடைச்சுடுவேன்.. ராஸ்கல்.... அந்த வீட்ட இவ போய்ப் பார்க்க போறாளாம்....ஹ்ம்ம்....என்று உறுமியவர் மனைவியிடம் திரும்பி
என்னடி புள்ள வளர்த்து வைச்சிருக்கே...... என்று பாய்ந்தார். சிவகாமி சுபாங்கியை தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அமைதியாய் இருக்கவும்... அவளுக்கு புரியுற மாதிரி சொல்லி வை. இனி இவ அந்த வீட்டுப் பக்கம் விளையாடுறேன்னு போனா நீ தொலைஞ்ச..... என்று ஒரு விரல் உயர்த்தி கர்ஜித்து விட்டுச் சென்றார்.
அந்த சம்பவம் சுபாங்கியின் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்டது.அதுவரை அவள் தந்தை அவள் மீது அவ்வளவு தூரம் ஒரு நாளும் கோபம் கொண்டதில்லை. முதல் தடவை கைநீட்டி அடிக்கும் அளவிற்கு கோபம் கொண்டிருக்கிறார்.
அன்று இரவு படுக்கையிலும் விசித்துக்கொண்டிருந்த சுபாங்கி தன்னை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்திய தாயின் கரத்தை இறுகப் பற்றியபடி அப்பா ஏன்மா அவ்ளோ கோபப்பட்டார் என வினவினாள்....
ஒரு கணம் திணறிய சிவகாமி பின்..அது....அது.. எங்க சுபி நல்ல பொண்ணு தானே!!! அவ இப்படி அடுத்தவங்க வீட்டுக்குள்ள போய் பார்க்கணும் என்று ஆசைப்பட்டா.... அது தப்புடா..... என் பொண்ணு இப்படி தப்பு பண்ணுறதா என்று அது தான்டா அப்பாவுக்கு ரொம்ப கோபம் .. என்று சமாளித்தார்.. அப்போது சிறு பெண்ணான சுபிக்கும் அந்த சமாதானம் போதுமானதாய் இருக்க.
மறுநாள் காலையே தந்தை முன் சென்று அப்பா.... சுபி இனி தப்பு பண்ண மாட்டா....இனி இப்படி அடுத்தவங்க வீட்ட உள்ள போய் பார்க்கணும்னுலாம் ஆசைப்பட மாட்டா ..... என்று தந்தைக்கு சமாதானம் சொன்னாள்.
அந்த சமாதானத்தில் அவர் கோபம் எல்லாம் பறந்து போய் விட அவளை மடியில் இருத்தி என் பொண்ணு தங்கம் டா....சாரி டா அப்பா நேத்து என் தங்கத்தை அடிச்சுட்டேன் என்று மன்னிப்பு கேட்டவர் ... இனி அந்தப்பக்கம் எல்லாம் விளையாட போகாதே என்ன.... என வினவவும் போக மாட்டேன்பா என்று உறுதியளித்தாள் குட்டிப் பெண் சுபி.
தந்தையிடம் சொன்னது போலவே அதன் பிறகு நடந்தும் கொண்டாள்.
ஆண்டுகளின் அதிவேக ஓட்டத்தில் சுபாங்கி பெரிய பெண்ணாகிவிட அதற்கு அடுத்த வருடம் ஊருக்கு கிளம்பும் போது சுபாங்கியை கூட அழைத்துச் செல்ல தர்மராஜ் சற்றுத் தயங்கினார்.
ஆனால் குழந்தை போல் குதித்துக்கொண்டு கிளம்பிய மகளின் ஆர்வத்தைப் பார்த்து மனம் கனிந்துவிட அந்த ஆர்வத்தைக் குலைக்க மனமின்றி அழைத்துப் போனார்.