- Joined
- Aug 1, 2021
- Messages
- 231
இந்தர் கூறியது போல் மிர்லா விரட்டியப் பின் தான் அவள் அறையைவிட்டு வெளியேறி இருந்தான் அவன். அப்போதும் அறை வாயிலில் நின்று,
"சுண்டு..... ஆன்டி தான் டேப்லட் போட்டுட்டு தூங்குறாங்கல்ல... நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகட்டா?" என்று வினவினான்.
"நோ..." என்றிட, வாடிய முகத்துடன் திரும்பி நடந்தவன், இரண்டு எட்டு வைத்துவிட்டு திரும்பி வந்து,
"அப்போ நீயாவது வெளிய வாயேன் டி" என்றிட, "எனக்கு தூக்கம் வருது" என்று மறுத்தாள்.
"தூங்காம இருக்குறதுக்கு என்கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு... வா உனக்கு சொல்லித் தரேன்..." என்று அவள் கை பிடித்து இழுத்திட, அதனை எதிர்பார்த்திடாதவள், அவன் இழுப்புக்கு இரண்டடி முன்னாடி நகர்ந்து பின் தன் கையை உதறிக்கொண்டு,
"ஒரு ஐடியாவும் வேண்டாம்... இடத்தை காலி பண்ணு" என்றாள்.
அவளை முறைத்தபடி "ரொம்பத் தான் டி" என்று முறுக்கிக் கொண்டு உணவு மேசை இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவனை எப்படியோ போ என்று விட்டுச்செல்ல மனம் இல்லாமல், "உப்பேன் தூங்கப் போகலேயா!!?" என்று வினவினாள்.
"தூக்கம் வரும்போது போய் படுத்துப்பேன்... நீ போ..." என்று ஏனோதானோவென்று பதிலுரைத்தான்.
"3 o'clock ஆகிடுச்சு... இன்னும் இப்படியே எவ்ளோ நேரம் இருப்ப? போ போயி தூங்கு..."
"ஒரு டென் மினிட்ஸ் இருந்துட்டு போரேன்..." என்றிட, அவளும் அங்கிருந்து நகர்ந்தாள். சரியாக பத்து நிமிடம் கழித்து வந்து எட்டிப்பார்த்தாள். அவன் அதே இடத்தில் தன் திறன்பேசியை பார்த்தவாறு தான் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் காத்திருந்து பார்த்தாள். அவன் அசைவது போலவே தெரியவில்லை.
அவ்வபோது அவன் இதழ்களில் வந்து செல்லும் சிரிப்பைக் கண்டவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை. 'அப்படி என்னத்தை பாத்து பாத்து சிரிச்சிட்டு இருக்கான்!' என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரிக்க, பூனை நடையிட்டு அவன் அருகே சென்றாள்.
அவனை நெருங்குவதற்கு முன்பே அவளது நெருக்கத்தை உணர்ந்தவன், அவள் புறம் திரும்பாமலேயே "இன்னும் தூங்கலேயா?" என்றிட,
"நான் வந்ததை எப்படி கண்டுபிடிச்சே!" என்று சற்று ஆச்சரியமாகவே கேட்டாள்.
அவள் புறம் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவாறு "தெரியலே..." என்றிட,
"போட்ட்ட்டாங்ங்ங்க.... என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காகவாச்சும் உள்ளுக்குள்ள சில்லுனு இருந்துச்சு... மனசுக்கு நெருக்கமானவங்க நம்ம பக்கத்துல வரும்போது மனசு நமக்கு சொல்லும்... உன் வாசத்தை என்னால உணர முடியும்... அப்படி இப்படினு ஏதாவது பொய் சொல்ல வேண்டி தானே!!!" என்று ஏக்கம் பாதி கோபம் பாதியாக வினவினாள்.
"ம்ம்ம்... உள்ளுக்குள்ள ஜில்லுனு இருக்குறது, பட்டாம்பூச்சி பறக்குறது, வயித்துக்குள்ள கிச்சுகிச்சு மூட்டுறது அந்த வயசெல்லாம் எப்பவோ தாண்டி வந்தாச்சு... இப்போ நீ சொன்ன ரெண்டாவது ரீஸனா இல்லே மூனாவது ரீஸனானு கொஞ்சம் சந்தேகமா இருக்கு..." என்றவன் அருகில் வந்தவளை இடையோடு சேர்த்து அணைத்து
"மூனாவது ரீஸனா இருக்க வாய்ப்பில்லே... ஏன்னா நான் இன்னும் உன் வாசனைய சரியாக் கூட உணரலேயே...." என்று அவள் இடையில் முகம் புதைத்து தன் காந்தையின் மனம் நுகர்ந்திட பெண்ணவள் சொக்கி நின்றாள். தன் கடகியின் இடையில் இதழ் பதித்திட மென்மேலும் கிரங்கி நின்றவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
"தூக்கம் வரலேயா?" என்றவனின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள், அவன் மடியில் அமர்ந்திருப்பதை ரசித்தபடி,
"நீ தூங்கிட்டியானு பாக்க வந்தேன்!!! இன்னும் தூங்காம என்ன பண்ற?"
தன் திறன்பேசியை அவள் முன் திருப்பிக் காண்பித்தான். அதில் அவர்கள் திருமணத்தின் போது எடுத்த புகைபடங்கள் இருக்க, அவளும் அதில் மூழ்கினாள்.
அனைத்து புகைப்படத்திலும் இருவரின் முகமும் யாருக்கோ என்னவோ நடக்கிறது என்பது போல் தான் இருந்தது. "சுண்டு உன்கிட்ட நெறையா பேசனும். கொஞ்சம் தனியா பேசலாமா?" என்றிட,
அவனை நம்பாத பார்வை பார்த்ததோடு, "நீ.... தனியா கூட்டிட்டு போயி.......... பேசுவே!!!" என்று அவள் இழுத்த தோரணையில்,
"சத்தியமா பேச தான்டி கூப்பிடுறேன். உனக்கு பிடிக்கலேனா உன் பக்கத்துல கூட உக்காரமாட்டேன்..." என்று அவசரமாக உரைத்தான்.
அவளோ இன்னும் தன் இடையை வளைத்துப் பிடித்திருந்த அவன் கைகளைப் பார்த்தபடி, "பாத்தா அப்படி தெரியவிலேயே!!!"
அவளை எழுப்பி நிறுத்தி வைத்து "இப்போ ஓகே வா?" என்றிட, "ம்ம்ம்... ஆனா தனியா எங்கே போயி பேசுறது?" என்றாள்.
இருக்கையில் இருந்து எழுந்துகொண்டு "வா..." என்று அவள் கரம் பிடித்து மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றான். மறவாமல் தன் திறன்பேசியையும் எடுத்துக் கொண்டான்.
அந்த இல்லத்தின் கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், முதல் தளத்தில் இவர்களும் வசிக்கின்றனர். மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டி தவிற வேற எதுவும் இல்லை. 'மாடியில் சுற்றிலும் வெட்டவெளி... அங்கே எப்படி!!! எங்கிருந்து பார்த்தாலும் இருவரும் தெரியத்தான் செய்வோம்... பின்னே எப்படி அது தனிமையில் சேர்த்தி!!! அதற்கு வீட்டுக்குள்ளேயே அமர்ந்து பேசிடலாமே!!!' என்று யோசித்தபட அவனுடன் சென்றாள்.
மொட்டை மாடிக்கு வந்தவுடன் இந்தர் நேர் எதிர்பக்க சுவரை எட்டிப்பார்த்தவன் இடப்பக்கமாக சற்று நகர்ந்து நின்று, "சுண்டு இங்கே வா" என்று அழைத்திட, திருதிருவென முழித்துக் கொண்டு அவன் அருகே சென்றாள்.
தன் அருகே வந்தவளை கையில் ஏந்தி திட்டில் அமரவைத்து கால்களை மறுபக்கம் போடும்படி கூறினான். அவள் பத்திரமாக அமர்ந்தவுடன் தாவி குதித்து மறுபக்கம் இருக்கும் சன்செட்டில் இறங்கி அவளையும் இறக்கிவிட, இருவரும் அங்கே அமர்ந்து கொண்டனர்.
எதிர்பக்கம் அடுத்தவீட்டு சுவர் இருக்க, எங்கிருந்து பார்த்தாலும் இருவரும் அமர்ந்திருப்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
"எப்படி நம்ம லொக்கேஷன்?" என்றவனிடம், ஒற்றை கண் சிமிட்டி சூப்பர் என கை காண்பித்தாள்.
"என்னை எப்படி உன்னால ஏத்துக்க முடிஞ்சது? இது சந்தேகம்னு சொல்றதை விட பெரிய ஆச்சரியம் தான் எனக்கு... என் மேல கோபம் இல்லேயா? இல்ல கோபத்தை காண்பிக்கிற அளவுக்கு என்னை உரிமையா நினைக்கலேயா?"
குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அவன் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக்கொண்டு அவன் புஜத்தில் தலைவைத்து, "கோபம் அப்போ இருந்தது. இப்போ இல்லே"
"அதான் எப்படி!!! அது தானே எனக்கு ஆச்சரியமா இருக்கு... இன்னும் உன் அப்பா, அம்மா, யோகன் யார்கிட்டேயும் பேசாத நீ என்னை எப்படி ஏத்துக்கிட்ட?"
"உன் அண்ணன் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லேனு சொல்லவும், நான் என் அம்மாகிட்ட பேசினேன்... அதுக்கு அவங்க
'நாங்கல்லாம் லவ் மேரேஜ்-ஆ பண்ணிக்கிட்டோம்... எனக்கும் உன் அப்பாவுக்கும் பதினாலு வர்ஷ வயசு வித்தியாசம். சின்ன சின்ன சண்டகள் வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து இருபத்தி அஞ்சு வர்ஷமா சந்தோஷமா நிம்மதியா தான் இருக்கோம்... யோகனும் கல்யாணம் ஆனாதும் உன்னை நல்லா பார்த்துப்பார்...' அப்படினு சொன்னாங்க...
இப்போ இருக்குற தெளிவு அப்போ இல்லே... அம்மாவும், அப்பாவும் சொல்லும்போது சரியாத் தான் இருக்கும்னு நெனச்சு உன் அண்ணனை நம்பி மணமேடை வந்தேன். அவர் மேடைல சிடுசிடுனு உக்காந்திருக்கும் போதே ஏதோ அபசகுணமா நடக்கப் போகுதுனு தோனுச்சி. நெனச்ச மாதிரி கல்யாணத்தை நிறுத்திட்டார்.
அதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தனால பெரிய ஏமாற்றமா தெரியலே... ஆனால் அதுக்கப்பறம் அப்பா உங்களை கல்யாணம் செய்துக்க சொன்னப்ப தான் அடுத்த அடியானு பயம் வந்தது. அப்பவும் கூட, அம்மா அப்பா இப்ப மூனாவதா யோகன் எல்லாரும் என் நலம் விரும்பிகள், எனக்கு எந்த கெடுதலும் நடக்கவிடமாட்டாங்கனு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அப்பாவுக்காக மட்டும் தான் உங்களை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சேன். மணமேடைல வந்து உக்காந்த போது உங்க பேர் உப்பிலிநாதன் அப்படிங்கிறதைத் தவிர வேற எதுவும் தெரியாது.
ஆனால் நீ மறுநாளே என்னை தனியா விட்டுட்டு போகவும், பலபல ஏச்சு பேச்சுகள். கல்யாணத்தை நிறுத்தின உன் அண்ணா மேல கோபம், மொதோவே சொல்லியும் என் அம்மா அதை காதுல வாங்கிக்கலேனு அவங்க மேல கோபம், மேடை வரை வந்து கல்யாணம் நின்னுடுச்சுன்றதுக்காக அப்பவே பிடிவாதமா உன்னை கட்டிவெச்ச என் அப்பா மேல கோபம்.
உனக்கும் நம்ம கல்யாணம் பெரிய ஷாக் தானே!!!. என்னைப் போலத் தானே நீயும் பலிஆடு மாதிரி மாட்டிக்கிட்டே...
"சுண்டு..... ஆன்டி தான் டேப்லட் போட்டுட்டு தூங்குறாங்கல்ல... நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகட்டா?" என்று வினவினான்.
"நோ..." என்றிட, வாடிய முகத்துடன் திரும்பி நடந்தவன், இரண்டு எட்டு வைத்துவிட்டு திரும்பி வந்து,
"அப்போ நீயாவது வெளிய வாயேன் டி" என்றிட, "எனக்கு தூக்கம் வருது" என்று மறுத்தாள்.
"தூங்காம இருக்குறதுக்கு என்கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு... வா உனக்கு சொல்லித் தரேன்..." என்று அவள் கை பிடித்து இழுத்திட, அதனை எதிர்பார்த்திடாதவள், அவன் இழுப்புக்கு இரண்டடி முன்னாடி நகர்ந்து பின் தன் கையை உதறிக்கொண்டு,
"ஒரு ஐடியாவும் வேண்டாம்... இடத்தை காலி பண்ணு" என்றாள்.
அவளை முறைத்தபடி "ரொம்பத் தான் டி" என்று முறுக்கிக் கொண்டு உணவு மேசை இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவனை எப்படியோ போ என்று விட்டுச்செல்ல மனம் இல்லாமல், "உப்பேன் தூங்கப் போகலேயா!!?" என்று வினவினாள்.
"தூக்கம் வரும்போது போய் படுத்துப்பேன்... நீ போ..." என்று ஏனோதானோவென்று பதிலுரைத்தான்.
"3 o'clock ஆகிடுச்சு... இன்னும் இப்படியே எவ்ளோ நேரம் இருப்ப? போ போயி தூங்கு..."
"ஒரு டென் மினிட்ஸ் இருந்துட்டு போரேன்..." என்றிட, அவளும் அங்கிருந்து நகர்ந்தாள். சரியாக பத்து நிமிடம் கழித்து வந்து எட்டிப்பார்த்தாள். அவன் அதே இடத்தில் தன் திறன்பேசியை பார்த்தவாறு தான் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் காத்திருந்து பார்த்தாள். அவன் அசைவது போலவே தெரியவில்லை.
அவ்வபோது அவன் இதழ்களில் வந்து செல்லும் சிரிப்பைக் கண்டவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை. 'அப்படி என்னத்தை பாத்து பாத்து சிரிச்சிட்டு இருக்கான்!' என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரிக்க, பூனை நடையிட்டு அவன் அருகே சென்றாள்.
அவனை நெருங்குவதற்கு முன்பே அவளது நெருக்கத்தை உணர்ந்தவன், அவள் புறம் திரும்பாமலேயே "இன்னும் தூங்கலேயா?" என்றிட,
"நான் வந்ததை எப்படி கண்டுபிடிச்சே!" என்று சற்று ஆச்சரியமாகவே கேட்டாள்.
அவள் புறம் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவாறு "தெரியலே..." என்றிட,
"போட்ட்ட்டாங்ங்ங்க.... என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காகவாச்சும் உள்ளுக்குள்ள சில்லுனு இருந்துச்சு... மனசுக்கு நெருக்கமானவங்க நம்ம பக்கத்துல வரும்போது மனசு நமக்கு சொல்லும்... உன் வாசத்தை என்னால உணர முடியும்... அப்படி இப்படினு ஏதாவது பொய் சொல்ல வேண்டி தானே!!!" என்று ஏக்கம் பாதி கோபம் பாதியாக வினவினாள்.
"ம்ம்ம்... உள்ளுக்குள்ள ஜில்லுனு இருக்குறது, பட்டாம்பூச்சி பறக்குறது, வயித்துக்குள்ள கிச்சுகிச்சு மூட்டுறது அந்த வயசெல்லாம் எப்பவோ தாண்டி வந்தாச்சு... இப்போ நீ சொன்ன ரெண்டாவது ரீஸனா இல்லே மூனாவது ரீஸனானு கொஞ்சம் சந்தேகமா இருக்கு..." என்றவன் அருகில் வந்தவளை இடையோடு சேர்த்து அணைத்து
"மூனாவது ரீஸனா இருக்க வாய்ப்பில்லே... ஏன்னா நான் இன்னும் உன் வாசனைய சரியாக் கூட உணரலேயே...." என்று அவள் இடையில் முகம் புதைத்து தன் காந்தையின் மனம் நுகர்ந்திட பெண்ணவள் சொக்கி நின்றாள். தன் கடகியின் இடையில் இதழ் பதித்திட மென்மேலும் கிரங்கி நின்றவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
"தூக்கம் வரலேயா?" என்றவனின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள், அவன் மடியில் அமர்ந்திருப்பதை ரசித்தபடி,
"நீ தூங்கிட்டியானு பாக்க வந்தேன்!!! இன்னும் தூங்காம என்ன பண்ற?"
தன் திறன்பேசியை அவள் முன் திருப்பிக் காண்பித்தான். அதில் அவர்கள் திருமணத்தின் போது எடுத்த புகைபடங்கள் இருக்க, அவளும் அதில் மூழ்கினாள்.
அனைத்து புகைப்படத்திலும் இருவரின் முகமும் யாருக்கோ என்னவோ நடக்கிறது என்பது போல் தான் இருந்தது. "சுண்டு உன்கிட்ட நெறையா பேசனும். கொஞ்சம் தனியா பேசலாமா?" என்றிட,
அவனை நம்பாத பார்வை பார்த்ததோடு, "நீ.... தனியா கூட்டிட்டு போயி.......... பேசுவே!!!" என்று அவள் இழுத்த தோரணையில்,
"சத்தியமா பேச தான்டி கூப்பிடுறேன். உனக்கு பிடிக்கலேனா உன் பக்கத்துல கூட உக்காரமாட்டேன்..." என்று அவசரமாக உரைத்தான்.
அவளோ இன்னும் தன் இடையை வளைத்துப் பிடித்திருந்த அவன் கைகளைப் பார்த்தபடி, "பாத்தா அப்படி தெரியவிலேயே!!!"
அவளை எழுப்பி நிறுத்தி வைத்து "இப்போ ஓகே வா?" என்றிட, "ம்ம்ம்... ஆனா தனியா எங்கே போயி பேசுறது?" என்றாள்.
இருக்கையில் இருந்து எழுந்துகொண்டு "வா..." என்று அவள் கரம் பிடித்து மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றான். மறவாமல் தன் திறன்பேசியையும் எடுத்துக் கொண்டான்.
அந்த இல்லத்தின் கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், முதல் தளத்தில் இவர்களும் வசிக்கின்றனர். மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டி தவிற வேற எதுவும் இல்லை. 'மாடியில் சுற்றிலும் வெட்டவெளி... அங்கே எப்படி!!! எங்கிருந்து பார்த்தாலும் இருவரும் தெரியத்தான் செய்வோம்... பின்னே எப்படி அது தனிமையில் சேர்த்தி!!! அதற்கு வீட்டுக்குள்ளேயே அமர்ந்து பேசிடலாமே!!!' என்று யோசித்தபட அவனுடன் சென்றாள்.
மொட்டை மாடிக்கு வந்தவுடன் இந்தர் நேர் எதிர்பக்க சுவரை எட்டிப்பார்த்தவன் இடப்பக்கமாக சற்று நகர்ந்து நின்று, "சுண்டு இங்கே வா" என்று அழைத்திட, திருதிருவென முழித்துக் கொண்டு அவன் அருகே சென்றாள்.
தன் அருகே வந்தவளை கையில் ஏந்தி திட்டில் அமரவைத்து கால்களை மறுபக்கம் போடும்படி கூறினான். அவள் பத்திரமாக அமர்ந்தவுடன் தாவி குதித்து மறுபக்கம் இருக்கும் சன்செட்டில் இறங்கி அவளையும் இறக்கிவிட, இருவரும் அங்கே அமர்ந்து கொண்டனர்.
எதிர்பக்கம் அடுத்தவீட்டு சுவர் இருக்க, எங்கிருந்து பார்த்தாலும் இருவரும் அமர்ந்திருப்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
"எப்படி நம்ம லொக்கேஷன்?" என்றவனிடம், ஒற்றை கண் சிமிட்டி சூப்பர் என கை காண்பித்தாள்.
"என்னை எப்படி உன்னால ஏத்துக்க முடிஞ்சது? இது சந்தேகம்னு சொல்றதை விட பெரிய ஆச்சரியம் தான் எனக்கு... என் மேல கோபம் இல்லேயா? இல்ல கோபத்தை காண்பிக்கிற அளவுக்கு என்னை உரிமையா நினைக்கலேயா?"
குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அவன் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக்கொண்டு அவன் புஜத்தில் தலைவைத்து, "கோபம் அப்போ இருந்தது. இப்போ இல்லே"
"அதான் எப்படி!!! அது தானே எனக்கு ஆச்சரியமா இருக்கு... இன்னும் உன் அப்பா, அம்மா, யோகன் யார்கிட்டேயும் பேசாத நீ என்னை எப்படி ஏத்துக்கிட்ட?"
"உன் அண்ணன் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லேனு சொல்லவும், நான் என் அம்மாகிட்ட பேசினேன்... அதுக்கு அவங்க
'நாங்கல்லாம் லவ் மேரேஜ்-ஆ பண்ணிக்கிட்டோம்... எனக்கும் உன் அப்பாவுக்கும் பதினாலு வர்ஷ வயசு வித்தியாசம். சின்ன சின்ன சண்டகள் வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து இருபத்தி அஞ்சு வர்ஷமா சந்தோஷமா நிம்மதியா தான் இருக்கோம்... யோகனும் கல்யாணம் ஆனாதும் உன்னை நல்லா பார்த்துப்பார்...' அப்படினு சொன்னாங்க...
இப்போ இருக்குற தெளிவு அப்போ இல்லே... அம்மாவும், அப்பாவும் சொல்லும்போது சரியாத் தான் இருக்கும்னு நெனச்சு உன் அண்ணனை நம்பி மணமேடை வந்தேன். அவர் மேடைல சிடுசிடுனு உக்காந்திருக்கும் போதே ஏதோ அபசகுணமா நடக்கப் போகுதுனு தோனுச்சி. நெனச்ச மாதிரி கல்யாணத்தை நிறுத்திட்டார்.
அதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தனால பெரிய ஏமாற்றமா தெரியலே... ஆனால் அதுக்கப்பறம் அப்பா உங்களை கல்யாணம் செய்துக்க சொன்னப்ப தான் அடுத்த அடியானு பயம் வந்தது. அப்பவும் கூட, அம்மா அப்பா இப்ப மூனாவதா யோகன் எல்லாரும் என் நலம் விரும்பிகள், எனக்கு எந்த கெடுதலும் நடக்கவிடமாட்டாங்கனு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அப்பாவுக்காக மட்டும் தான் உங்களை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சேன். மணமேடைல வந்து உக்காந்த போது உங்க பேர் உப்பிலிநாதன் அப்படிங்கிறதைத் தவிர வேற எதுவும் தெரியாது.
ஆனால் நீ மறுநாளே என்னை தனியா விட்டுட்டு போகவும், பலபல ஏச்சு பேச்சுகள். கல்யாணத்தை நிறுத்தின உன் அண்ணா மேல கோபம், மொதோவே சொல்லியும் என் அம்மா அதை காதுல வாங்கிக்கலேனு அவங்க மேல கோபம், மேடை வரை வந்து கல்யாணம் நின்னுடுச்சுன்றதுக்காக அப்பவே பிடிவாதமா உன்னை கட்டிவெச்ச என் அப்பா மேல கோபம்.
உனக்கும் நம்ம கல்யாணம் பெரிய ஷாக் தானே!!!. என்னைப் போலத் தானே நீயும் பலிஆடு மாதிரி மாட்டிக்கிட்டே...
-தொடரும்