ஒரு பெண்ணின்....
அழகான சிரிப்பிற்கு பின்னே
பல அர்த்தமுள்ள
வலிகளும்,வேதனைகளும்
அடையாளமற்றுச் சிதைந்து
கிடக்கும்...!
ஆம்...வேதனைகள் சிதைந்து
கிடக்கும்..!!
எல்லா கதவுகளையும்
அடைத்துக்கொண்டு...
இருட்டறையில் கேவியழும்
அவளின் மனதை ஒற்றைப் பூதம்
மட்டுமே அறிந்திருக்கக்கூடும்...!!
வேண்டாமென மறுத்து,
நீங்கள் தூக்கியெறியும்
அவளின்...
சுயமரியாதையும்...
தன்னம்பிக்கையும் தான்...
மாபெரும் தூண்கள் அவளுக்கு..!!
நீங்கள் சொல்வதைப் போலவே
அவள் "உதவாக்காரி" தான்...
அதனால் தான் அவள்
உதவிக்கரம் நீட்டாவிடில்
உங்களுக்கு அந்த நாள்
முற்றுப்பெற மறுத்து நிற்கிறது...!!
எளிதில் மறுதலித்துவிடும்
அவளின் உணர்வு உங்களுக்கு
வேண்டுமானால் ...
ஒன்றுமில்லாமல் போகலாம்..!
பின்னொரு நாளில் அதில்
அவளே வைரம் பதித்து
தன்னை தானே அலங்கரித்து
கொள்வாள்...!
அதீத அழகுடன் ஒளிரும்
அவளை பார்க்க ஆயிரம் உறவுகள்
வந்து நின்றாலும்...
அவளின் ஒற்றைப்பூதம் மட்டுமே
அவளை முழுவதும்
அறிந்திருக்கக் கூடும்...!!
-©Saranya writes
அழகான சிரிப்பிற்கு பின்னே
பல அர்த்தமுள்ள
வலிகளும்,வேதனைகளும்
அடையாளமற்றுச் சிதைந்து
கிடக்கும்...!
ஆம்...வேதனைகள் சிதைந்து
கிடக்கும்..!!
எல்லா கதவுகளையும்
அடைத்துக்கொண்டு...
இருட்டறையில் கேவியழும்
அவளின் மனதை ஒற்றைப் பூதம்
மட்டுமே அறிந்திருக்கக்கூடும்...!!
வேண்டாமென மறுத்து,
நீங்கள் தூக்கியெறியும்
அவளின்...
சுயமரியாதையும்...
தன்னம்பிக்கையும் தான்...
மாபெரும் தூண்கள் அவளுக்கு..!!
நீங்கள் சொல்வதைப் போலவே
அவள் "உதவாக்காரி" தான்...
அதனால் தான் அவள்
உதவிக்கரம் நீட்டாவிடில்
உங்களுக்கு அந்த நாள்
முற்றுப்பெற மறுத்து நிற்கிறது...!!
எளிதில் மறுதலித்துவிடும்
அவளின் உணர்வு உங்களுக்கு
வேண்டுமானால் ...
ஒன்றுமில்லாமல் போகலாம்..!
பின்னொரு நாளில் அதில்
அவளே வைரம் பதித்து
தன்னை தானே அலங்கரித்து
கொள்வாள்...!
அதீத அழகுடன் ஒளிரும்
அவளை பார்க்க ஆயிரம் உறவுகள்
வந்து நின்றாலும்...
அவளின் ஒற்றைப்பூதம் மட்டுமே
அவளை முழுவதும்
அறிந்திருக்கக் கூடும்...!!
-©Saranya writes