- Joined
- Aug 2, 2021
- Messages
- 145
அத்தியாயம் =11
“ஏய் ராமாயி அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...இங்க பாரு ரசம் கேட்கிறாங்க....சீக்கிரம் வா என்பதற்குள் அக்கோ இந்த இலைக்கு பாயாசம் கொண்டுவாங்க என ஒருவர் அழைக்க ,ஏனுங்க வடை தீர்ந்து போய்டுச்சுங்க என ஒருவன் வந்து நிற்க ,ஏண்டா இதை கேட்கணுமா....அதான் மாவு இருந்தா வாழத்தாரு ஒன்னு அறுத்து பச்சிபோட்ருடா இத சொல்லனுமா” என ஒருவர் அதற்கு தகுமானம் சொல்லி கொண்டிருக்க, இப்படி பரபரப்பாக அங்கு அனைவரும் ஓடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது “ஐயா மூகூர்த்தகால் நடறதுக்கு குச்சி வெட்டனுமா...அருமைக்காரர் வந்து இருக்கார் உங்களை கூப்பிட்டாங்க” என ஒருவன் வந்து நிற்க...
“இருப்பா வரேன்.....மாமன் வீட்டு விருந்து முடிஞ்சதுக்கு பிறகு போகலாம்......ஏதாவது குத்தம் குறை இருந்தா மாப்பிள்ளைக்கு யாரு தகுமானம் சொல்றது “ என சொல்லிவிட்டு அங்கும் இங்கும் மேற்பார்வை இட்டு கொண்டு இருந்தார் நடராஜ் ஐயா.
இந்த கிராமத்தில் திருமணம் என்பது மூன்று நாள் நடக்கும் முதல் நாள் தாய் மாமன் விருந்து.இரண்டாம் நாள் மாப்பிள்ளை பெண் வீட்டு அழைப்பு,நிச்சியம்,இணைசீர்,முகூர்த்தகால் நடுதல் எல்லாம் நடக்கும்..மூன்றாம் நாள் அதிகாலை திருமணம் நாடக்கும்..எப்போதும் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தாய்மாமன் விருந்து போடப்படும்.இதில் நெருங்கிய சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர் .ஊர்காரர்கள் அனைவரும் கலந்து கொள்வர்.....இந்த விருந்தின் போதுதான் பெண்ணிற்கு மெட்டியும்,திருமண வளையல்,மற்றும் கொலுசு மேலும் தாய்மாமன் எடுத்து கொடுக்கும் புடவைதான் அன்று மணப்பெண் உடுத்த வேண்டும்.அந்த விருந்துதான் இப்போது பூரணி வீட்டில் நடந்து கொண்டு இருந்தது.இந்த விருந்தில் குறை வந்தால் மாணிக்கத்திற்கு யார் பதில் சொல்வது என நினைத்தே அவர் நடக்கும் விருந்தை மேற்பார்வை இட்டு கொண்டு இருந்தார்.ஏனெனில் அந்த பொறுப்பை அவரிடம் தான் கொடுத்து இருந்தார் மணியம்மை. தங்கள் வீட்டு மாப்பிள்ளையே தன் பிள்ளைக்கு திருமணம் முடித்து சம்பந்தி ஆனாலும் பெண்ணை கொடுத்தவர்கள் அப்போதும் மாப்பிள்ளை மனம் வாடாமல் எல்லாம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.இது அந்த ஊரின் வழக்கம்.
அதற்குள் அங்கு மாணிக்கம் வர “என்ன மாணிக்கம் எல்லாம் திருப்தியா இருக்கா” என அவர் கேட்கவும்
“ஐயா நான் தான் எல்லாமே உங்க பொறுப்புல விட்டுட்டேன்....நீங்க இல்லனா இந்த கல்யாணமே நடந்து இருக்காது......நீங்க பார்த்து எதுவேனாலும் செய்ங்க” என அமைதியாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அதற்குள் அங்கு வந்த மணியம்மை “ஐயா நாளைக்கு பொண்ணு அழைப்பு எத்தனை மணிக்குன்னு கேட்டு சொல்றிங்களா.... நல்ல நேரம் சொன்னாதான் நம்மளும் மாப்பிள்ளை அழைப்புக்கு வண்டி அனுப்ப முடியும் “ என கேட்கவும்
“அதுகென்ன அம்மணி.....இப்போ கேட்டு சொல்லிடறேன் என்றவர் மாப்பிள்ளை சொன்ன மாதிரி கண்ணாலத்தை வச்சிருந்தா நமக்கு இவ்ளோ அலைச்சல் இல்லை....உன் பொண்ணு எங்க கேட்கிறா.....இங்கதான் வைக்கணும்னு அடம் பிடிக்கிறா.....சரி விடு.....இது அவளோட கண்ணாலம் அவளுக்கு பிடிச்ச மாதிரியே நடக்கட்டும் என்றவர் மாப்பிள்ளையும் மூணு நாளுக்குள்ள கண்ணாலத்தை முடிச்சு ஆகணும்னு சொல்லிட்டாப்டி......ரெண்டு பெரும் பிடிவாதம் தான் என சிரித்து கொண்டே சொன்னவர் அப்புறம் அம்மணி இதுக்கு முன்னாடி அவங்க பேசி இருந்தத எல்லாம் மறந்திடுங்க.....இப்போ நமக்கு கண்ணாலம் நடக்கணும் அது மட்டும் தான் முக்கியம் ” என அவர் மெதுவாகவும் அழுத்தமாகவும் சொல்ல
மணியம்மையோ “ஐயா இப்போ நடக்கிறதை நான் எதிர்பார்க்கவே இல்லைங்க.....நான் கும்பிடற ஆத்தா முத்துமாரிதான் இதெல்லாம் நடத்திட்டு இருக்கா.....இனி இதுக்குமேல ஒரு தடங்களும் வராம நான் பார்த்துக்கிறேனுங்க” என அவரும் உறுதியுடன் சொன்னார்..
அவரின் பேச்சை கேட்டதும் சிரித்து கொண்டே “மாணிக்கத்துக்கு ஏத்த பொண்டாட்டி தான் நீ என்றவர் சரி அம்மணி இன்னிக்கே கண்ணால பொண்ண நல்லா சாப்பிட சொல்லிடு ...நாளைக்கு காலையில இருந்து விரதம் இருக்கணும். நிச்சியதார்த்தம் முடிஞ்சு தான் சாப்பிடனும் ...அதை தெளிவா சொல்லிடு என்றவர் அப்புறம் முதல்ல நீயும் மாணிக்கமும் போய் சாப்பிடுங்க.....எல்லா வேலையும் நான் பார்த்துகிறேன் என்றவர் டேய் நாவிதன் எங்க போனான்.......சீர்க்கு என்ன வேணும்னு எல்லாம் எழுதி வாங்குங்க என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.
மறுநாள் மாலை “பூரணி என்ன பண்ணிக்கிட்டு இருக்க....இன்னுமா அலங்காரம் முடியலை என கேட்டுகொண்டே அங்கு வந்த மணியம்மை அவருடன் மூன்று பெண்கள் உடன் வர நேராக பூரணியிடம் சென்றவர் இங்க பாரு பூரணி இவங்க மாப்பிள்ளை வீட்டு பங்காளி வீடு...இவங்க தான் உன்னை திருமண மண்டபத்திற்கு அழச்சிட்டு வருவாங்க” என சொல்லவும்
பூரணியோ அவர்கள் யார் என்றே தெரியாமல் திரு திருவென்று முழிக்க
அவளின் பயத்தை கண்டு கொண்ட மணியம்மை “கவலைபடாத நம்ம சரோஜாக்கா ,பாரியும் கூட வருவாங்க” என சொன்னதும் அவள் முகத்தில் சற்று நிம்மதி வர சரி என்று தலை ஆட்டினாள்.
அதற்குள் “அம்மா கார் வந்திடுசுங்க ......மாப்பிள்ளைக்கு கண்ணாலத்துக்கு எடுத்த துணிமணி எல்லாம் மறக்காம எடுத்திட்டு வர சொன்னாருங்க ஐயா”என்றபடி ஒருவன் வர
“அதெல்லாம் எடுத்துகிட்டேன்......அப்புறம் மாப்பிள்ளை அழைப்புக்கு வேஷ்டி விரிக்கிறதுக்கு ஆளுங்க வந்தாச்சா ....இன்னைக்கு ஆத்துக்கு வெளுக்க போகவேண்டாம் நேரமே வந்திடுன்னு சொல்லிருந்தேன் ...வந்திட்டாளா” என மணியம்மை கேட்டதும்
“அவங்க எல்லாம் முன்னாடியே மண்டபத்துக்கு வந்திட்டாங்க ......ஓரம்பரை எல்லாம் வர ஆரம்பிச்சுட்டங்க...வரவேற்புல உங்களை காணோம்னு கேட்கிறாங்களாம் ...... ஐயா சீக்கிரம் கிளம்பி வர சொன்னாருங்க” என அவன் சொன்னதும்
“அதுக்குள்ள எல்லாரும் வந்துட்டங்காளா என்ற படி வேகமாக கிளம்பி காரில் ஏறியாவர் பாரி அக்காவை பார்த்து பத்திரமா அழச்சிட்டு வாங்க”என சொல்லிவிட்டு உள்ளே அமர்ந்தார்.
இங்கு பூரணியின் அறையில் “இங்கபாரு பூரணி எங்க ஊர்ல எல்லாம் இப்படி உம்ம்னு இருந்தா சரிபட்டு வராது....வாய் இருக்கிற பொண்ணுதான் பொழைக்கும்னு சொல்வாங்க.....நீ என்னடானா நாங்க வந்ததில இருந்து பேசாமையே இருக்க.....இப்படி இருந்தா அப்புறம் எங்க பையனோட நிலைமை என்னாவறது” என மாப்பிளை வீட்டாரின் உறவினர் பெண்களில் ஒருத்தி கிண்டலாக கேட்க
மற்றவரோ “அக்கா இப்ப இருக்க புள்ளைங்க எல்லாம் விவரம்...பேசவேண்டிய நேரத்துல பேசி புருஷனை கைக்குள்ள போட்டுக்குவாங்க ...நம்மளை மாதிரி கிடையாது’ என சொல்லி சிறிக்க
அதற்குள் அருகில் இருந்தவர் “நீ சொன்னா சரியாதான் இருக்கும்டி ......உன் மாமியாரும் இதை தான் அடிக்கடி சொல்வாங்க “என அதற்கு கிண்டலாவே பதிலடி கொடுக்க
உடனே அருகில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்க ஆனால் பூரணி முகத்திலோ பயத்தின் ரேகை மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது.அவர்களின் பேச்சு அவள் மனதில் புயலை கிளப்பி விட்டு இருந்தது.
“நேரமாச்சு...நேரமாச்சு சீக்கிரம் வாங்க” என சத்தம் கேட்க அனைவரும் கிளம்பி வெளியே வந்தவர்கள் அருகில் இருக்கும் பிள்ளயார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காரில் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
மண்டபத்தின் வாயிலில் கார் நிற்க ...அதற்குள் மண்டபத்திற்குள் இருந்து நாதஸ்வர பார்ட்டிகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண்ணை அழைக்க வெளியே வந்து நின்றனர்.
காரில் இருந்து இறங்கியதும் மத்தளங்கள் முழங்க அனைவரும் அவளை அன்புடன் அழைக்க மண்டபத்தை பார்த்த பூரணியோ ஒரு நிமிடம் அசையாது சிலை போல் நின்றாள்.திருமணம் என்பது ஒவ்வோருவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு.அது இப்போது அவள் கண் முன்னே நடந்து கொண்டு இருக்க மனமோ பல நினைவுகளில் தவித்து கொண்டு இருந்தது.
அதற்குள் அருகில் இருந்த “பாரி ...வாவ் ரொம்ப அழகா அலங்கரிச்சு இருக்காங்க என்றவள் ......பொள்ளாச்சி முறையில அழகான தோரணங்களுடன் மணபந்தல் முன்புறம் வீற்று இருக்க நடைபாதை முழுவதும் கம்பளம் விரித்து பூக்களால் தூவபட்டிருக்க,வழி நெடுகிலும் பூக்களின் அலங்காரமும் அதன் மனமும் அனைவரையும் ஈர்க்க ,திருமண மண்டபம் போல் இல்லாமல் ஒரு அரண்மனை போல் காட்சி அளித்தது அந்த இடம். “பூரணி மச்சான்கிட்ட இத நான் எதிர்பார்க்கவே இல்லை....இதுக்குதான் மண்டப அலங்காரத்தை நான் தான் செய்வேன்னு சொன்னாரா .......மூணு நாளைகுல்ல எப்படி இப்படி பண்ணிருக்காரு....கல்யாண மண்டபம் மாதிரியே இல்ல......ஏதோ பேலஸுக்குல நுழையற மாதிரி இருக்கு என அதிசியத்து சிலாகித்தவள்.....மச்சான் கலக்கிட்டாரு என பாராட்ட”..பூரணியோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
கூட வந்த பெண்களோ “இங்க பாருங்களேன்...... அவசர கண்ணாலம் ஆச்சே எப்டி இருக்குமோனு பார்த்தா தாலி கட்றதுக்கு முன்னாடியே இவன் இப்படி செலவு பண்றானே...தாலி கட்டிட்டா என்ன பண்ணுவானோ” என பூரணியை பார்த்துகொண்டே பொறாமையில் பேசியவர்கள் “ம்ம்ம் அதுக்கும் மச்சம் வேணும்......எத கண்டு மயங்கி இப்படி பண்றானோ” என வயிற்று எரிச்சலில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் அவர்கள் பேச பூரணிக்கோ கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.
அதற்குள் அவளை இரு பெண்கள் கையைபிடித்து மண்டபத்திற்குள் அழைத்து செல்ல அவற்றை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தவன் மனதில் சந்தோசமும் வருத்தமும்கலந்த கலவையான உணர்வு வந்து சென்றது.
பின்னர் உறவினர்கள் வந்த உடன் நிச்சயதார்த்த பத்திரிக்கை படிக்க வேண்டும் என சொல்லவும் மாப்பிள்ளை பெண் வீட்டாரின் சார்பில் பங்காளிகள் ,மாமன்மச்சான் முறைமார்கள் அனைவரும் மணவறை முன் அமர்ந்தனர்.ஊரின் பொது மனிதரும் வயதில் பெரியவருமான நடராஜ் ஐயா நடுவில் அமர்ந்து இருந்தார்.
“ஏய் ராமாயி அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...இங்க பாரு ரசம் கேட்கிறாங்க....சீக்கிரம் வா என்பதற்குள் அக்கோ இந்த இலைக்கு பாயாசம் கொண்டுவாங்க என ஒருவர் அழைக்க ,ஏனுங்க வடை தீர்ந்து போய்டுச்சுங்க என ஒருவன் வந்து நிற்க ,ஏண்டா இதை கேட்கணுமா....அதான் மாவு இருந்தா வாழத்தாரு ஒன்னு அறுத்து பச்சிபோட்ருடா இத சொல்லனுமா” என ஒருவர் அதற்கு தகுமானம் சொல்லி கொண்டிருக்க, இப்படி பரபரப்பாக அங்கு அனைவரும் ஓடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது “ஐயா மூகூர்த்தகால் நடறதுக்கு குச்சி வெட்டனுமா...அருமைக்காரர் வந்து இருக்கார் உங்களை கூப்பிட்டாங்க” என ஒருவன் வந்து நிற்க...
“இருப்பா வரேன்.....மாமன் வீட்டு விருந்து முடிஞ்சதுக்கு பிறகு போகலாம்......ஏதாவது குத்தம் குறை இருந்தா மாப்பிள்ளைக்கு யாரு தகுமானம் சொல்றது “ என சொல்லிவிட்டு அங்கும் இங்கும் மேற்பார்வை இட்டு கொண்டு இருந்தார் நடராஜ் ஐயா.
இந்த கிராமத்தில் திருமணம் என்பது மூன்று நாள் நடக்கும் முதல் நாள் தாய் மாமன் விருந்து.இரண்டாம் நாள் மாப்பிள்ளை பெண் வீட்டு அழைப்பு,நிச்சியம்,இணைசீர்,முகூர்த்தகால் நடுதல் எல்லாம் நடக்கும்..மூன்றாம் நாள் அதிகாலை திருமணம் நாடக்கும்..எப்போதும் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தாய்மாமன் விருந்து போடப்படும்.இதில் நெருங்கிய சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர் .ஊர்காரர்கள் அனைவரும் கலந்து கொள்வர்.....இந்த விருந்தின் போதுதான் பெண்ணிற்கு மெட்டியும்,திருமண வளையல்,மற்றும் கொலுசு மேலும் தாய்மாமன் எடுத்து கொடுக்கும் புடவைதான் அன்று மணப்பெண் உடுத்த வேண்டும்.அந்த விருந்துதான் இப்போது பூரணி வீட்டில் நடந்து கொண்டு இருந்தது.இந்த விருந்தில் குறை வந்தால் மாணிக்கத்திற்கு யார் பதில் சொல்வது என நினைத்தே அவர் நடக்கும் விருந்தை மேற்பார்வை இட்டு கொண்டு இருந்தார்.ஏனெனில் அந்த பொறுப்பை அவரிடம் தான் கொடுத்து இருந்தார் மணியம்மை. தங்கள் வீட்டு மாப்பிள்ளையே தன் பிள்ளைக்கு திருமணம் முடித்து சம்பந்தி ஆனாலும் பெண்ணை கொடுத்தவர்கள் அப்போதும் மாப்பிள்ளை மனம் வாடாமல் எல்லாம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.இது அந்த ஊரின் வழக்கம்.
அதற்குள் அங்கு மாணிக்கம் வர “என்ன மாணிக்கம் எல்லாம் திருப்தியா இருக்கா” என அவர் கேட்கவும்
“ஐயா நான் தான் எல்லாமே உங்க பொறுப்புல விட்டுட்டேன்....நீங்க இல்லனா இந்த கல்யாணமே நடந்து இருக்காது......நீங்க பார்த்து எதுவேனாலும் செய்ங்க” என அமைதியாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அதற்குள் அங்கு வந்த மணியம்மை “ஐயா நாளைக்கு பொண்ணு அழைப்பு எத்தனை மணிக்குன்னு கேட்டு சொல்றிங்களா.... நல்ல நேரம் சொன்னாதான் நம்மளும் மாப்பிள்ளை அழைப்புக்கு வண்டி அனுப்ப முடியும் “ என கேட்கவும்
“அதுகென்ன அம்மணி.....இப்போ கேட்டு சொல்லிடறேன் என்றவர் மாப்பிள்ளை சொன்ன மாதிரி கண்ணாலத்தை வச்சிருந்தா நமக்கு இவ்ளோ அலைச்சல் இல்லை....உன் பொண்ணு எங்க கேட்கிறா.....இங்கதான் வைக்கணும்னு அடம் பிடிக்கிறா.....சரி விடு.....இது அவளோட கண்ணாலம் அவளுக்கு பிடிச்ச மாதிரியே நடக்கட்டும் என்றவர் மாப்பிள்ளையும் மூணு நாளுக்குள்ள கண்ணாலத்தை முடிச்சு ஆகணும்னு சொல்லிட்டாப்டி......ரெண்டு பெரும் பிடிவாதம் தான் என சிரித்து கொண்டே சொன்னவர் அப்புறம் அம்மணி இதுக்கு முன்னாடி அவங்க பேசி இருந்தத எல்லாம் மறந்திடுங்க.....இப்போ நமக்கு கண்ணாலம் நடக்கணும் அது மட்டும் தான் முக்கியம் ” என அவர் மெதுவாகவும் அழுத்தமாகவும் சொல்ல
மணியம்மையோ “ஐயா இப்போ நடக்கிறதை நான் எதிர்பார்க்கவே இல்லைங்க.....நான் கும்பிடற ஆத்தா முத்துமாரிதான் இதெல்லாம் நடத்திட்டு இருக்கா.....இனி இதுக்குமேல ஒரு தடங்களும் வராம நான் பார்த்துக்கிறேனுங்க” என அவரும் உறுதியுடன் சொன்னார்..
அவரின் பேச்சை கேட்டதும் சிரித்து கொண்டே “மாணிக்கத்துக்கு ஏத்த பொண்டாட்டி தான் நீ என்றவர் சரி அம்மணி இன்னிக்கே கண்ணால பொண்ண நல்லா சாப்பிட சொல்லிடு ...நாளைக்கு காலையில இருந்து விரதம் இருக்கணும். நிச்சியதார்த்தம் முடிஞ்சு தான் சாப்பிடனும் ...அதை தெளிவா சொல்லிடு என்றவர் அப்புறம் முதல்ல நீயும் மாணிக்கமும் போய் சாப்பிடுங்க.....எல்லா வேலையும் நான் பார்த்துகிறேன் என்றவர் டேய் நாவிதன் எங்க போனான்.......சீர்க்கு என்ன வேணும்னு எல்லாம் எழுதி வாங்குங்க என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.
மறுநாள் மாலை “பூரணி என்ன பண்ணிக்கிட்டு இருக்க....இன்னுமா அலங்காரம் முடியலை என கேட்டுகொண்டே அங்கு வந்த மணியம்மை அவருடன் மூன்று பெண்கள் உடன் வர நேராக பூரணியிடம் சென்றவர் இங்க பாரு பூரணி இவங்க மாப்பிள்ளை வீட்டு பங்காளி வீடு...இவங்க தான் உன்னை திருமண மண்டபத்திற்கு அழச்சிட்டு வருவாங்க” என சொல்லவும்
பூரணியோ அவர்கள் யார் என்றே தெரியாமல் திரு திருவென்று முழிக்க
அவளின் பயத்தை கண்டு கொண்ட மணியம்மை “கவலைபடாத நம்ம சரோஜாக்கா ,பாரியும் கூட வருவாங்க” என சொன்னதும் அவள் முகத்தில் சற்று நிம்மதி வர சரி என்று தலை ஆட்டினாள்.
அதற்குள் “அம்மா கார் வந்திடுசுங்க ......மாப்பிள்ளைக்கு கண்ணாலத்துக்கு எடுத்த துணிமணி எல்லாம் மறக்காம எடுத்திட்டு வர சொன்னாருங்க ஐயா”என்றபடி ஒருவன் வர
“அதெல்லாம் எடுத்துகிட்டேன்......அப்புறம் மாப்பிள்ளை அழைப்புக்கு வேஷ்டி விரிக்கிறதுக்கு ஆளுங்க வந்தாச்சா ....இன்னைக்கு ஆத்துக்கு வெளுக்க போகவேண்டாம் நேரமே வந்திடுன்னு சொல்லிருந்தேன் ...வந்திட்டாளா” என மணியம்மை கேட்டதும்
“அவங்க எல்லாம் முன்னாடியே மண்டபத்துக்கு வந்திட்டாங்க ......ஓரம்பரை எல்லாம் வர ஆரம்பிச்சுட்டங்க...வரவேற்புல உங்களை காணோம்னு கேட்கிறாங்களாம் ...... ஐயா சீக்கிரம் கிளம்பி வர சொன்னாருங்க” என அவன் சொன்னதும்
“அதுக்குள்ள எல்லாரும் வந்துட்டங்காளா என்ற படி வேகமாக கிளம்பி காரில் ஏறியாவர் பாரி அக்காவை பார்த்து பத்திரமா அழச்சிட்டு வாங்க”என சொல்லிவிட்டு உள்ளே அமர்ந்தார்.
இங்கு பூரணியின் அறையில் “இங்கபாரு பூரணி எங்க ஊர்ல எல்லாம் இப்படி உம்ம்னு இருந்தா சரிபட்டு வராது....வாய் இருக்கிற பொண்ணுதான் பொழைக்கும்னு சொல்வாங்க.....நீ என்னடானா நாங்க வந்ததில இருந்து பேசாமையே இருக்க.....இப்படி இருந்தா அப்புறம் எங்க பையனோட நிலைமை என்னாவறது” என மாப்பிளை வீட்டாரின் உறவினர் பெண்களில் ஒருத்தி கிண்டலாக கேட்க
மற்றவரோ “அக்கா இப்ப இருக்க புள்ளைங்க எல்லாம் விவரம்...பேசவேண்டிய நேரத்துல பேசி புருஷனை கைக்குள்ள போட்டுக்குவாங்க ...நம்மளை மாதிரி கிடையாது’ என சொல்லி சிறிக்க
அதற்குள் அருகில் இருந்தவர் “நீ சொன்னா சரியாதான் இருக்கும்டி ......உன் மாமியாரும் இதை தான் அடிக்கடி சொல்வாங்க “என அதற்கு கிண்டலாவே பதிலடி கொடுக்க
உடனே அருகில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்க ஆனால் பூரணி முகத்திலோ பயத்தின் ரேகை மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது.அவர்களின் பேச்சு அவள் மனதில் புயலை கிளப்பி விட்டு இருந்தது.
“நேரமாச்சு...நேரமாச்சு சீக்கிரம் வாங்க” என சத்தம் கேட்க அனைவரும் கிளம்பி வெளியே வந்தவர்கள் அருகில் இருக்கும் பிள்ளயார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காரில் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
மண்டபத்தின் வாயிலில் கார் நிற்க ...அதற்குள் மண்டபத்திற்குள் இருந்து நாதஸ்வர பார்ட்டிகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண்ணை அழைக்க வெளியே வந்து நின்றனர்.
காரில் இருந்து இறங்கியதும் மத்தளங்கள் முழங்க அனைவரும் அவளை அன்புடன் அழைக்க மண்டபத்தை பார்த்த பூரணியோ ஒரு நிமிடம் அசையாது சிலை போல் நின்றாள்.திருமணம் என்பது ஒவ்வோருவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு.அது இப்போது அவள் கண் முன்னே நடந்து கொண்டு இருக்க மனமோ பல நினைவுகளில் தவித்து கொண்டு இருந்தது.
அதற்குள் அருகில் இருந்த “பாரி ...வாவ் ரொம்ப அழகா அலங்கரிச்சு இருக்காங்க என்றவள் ......பொள்ளாச்சி முறையில அழகான தோரணங்களுடன் மணபந்தல் முன்புறம் வீற்று இருக்க நடைபாதை முழுவதும் கம்பளம் விரித்து பூக்களால் தூவபட்டிருக்க,வழி நெடுகிலும் பூக்களின் அலங்காரமும் அதன் மனமும் அனைவரையும் ஈர்க்க ,திருமண மண்டபம் போல் இல்லாமல் ஒரு அரண்மனை போல் காட்சி அளித்தது அந்த இடம். “பூரணி மச்சான்கிட்ட இத நான் எதிர்பார்க்கவே இல்லை....இதுக்குதான் மண்டப அலங்காரத்தை நான் தான் செய்வேன்னு சொன்னாரா .......மூணு நாளைகுல்ல எப்படி இப்படி பண்ணிருக்காரு....கல்யாண மண்டபம் மாதிரியே இல்ல......ஏதோ பேலஸுக்குல நுழையற மாதிரி இருக்கு என அதிசியத்து சிலாகித்தவள்.....மச்சான் கலக்கிட்டாரு என பாராட்ட”..பூரணியோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
கூட வந்த பெண்களோ “இங்க பாருங்களேன்...... அவசர கண்ணாலம் ஆச்சே எப்டி இருக்குமோனு பார்த்தா தாலி கட்றதுக்கு முன்னாடியே இவன் இப்படி செலவு பண்றானே...தாலி கட்டிட்டா என்ன பண்ணுவானோ” என பூரணியை பார்த்துகொண்டே பொறாமையில் பேசியவர்கள் “ம்ம்ம் அதுக்கும் மச்சம் வேணும்......எத கண்டு மயங்கி இப்படி பண்றானோ” என வயிற்று எரிச்சலில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் அவர்கள் பேச பூரணிக்கோ கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.
அதற்குள் அவளை இரு பெண்கள் கையைபிடித்து மண்டபத்திற்குள் அழைத்து செல்ல அவற்றை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தவன் மனதில் சந்தோசமும் வருத்தமும்கலந்த கலவையான உணர்வு வந்து சென்றது.
பின்னர் உறவினர்கள் வந்த உடன் நிச்சயதார்த்த பத்திரிக்கை படிக்க வேண்டும் என சொல்லவும் மாப்பிள்ளை பெண் வீட்டாரின் சார்பில் பங்காளிகள் ,மாமன்மச்சான் முறைமார்கள் அனைவரும் மணவறை முன் அமர்ந்தனர்.ஊரின் பொது மனிதரும் வயதில் பெரியவருமான நடராஜ் ஐயா நடுவில் அமர்ந்து இருந்தார்.