- Joined
- Aug 2, 2021
- Messages
- 145
அத்தியாயம் -12
திருமணம் முடிந்ததும் புகழின் வீட்டிற்குச் செல்ல மணமக்கள் தயாராகி வந்தனர். தன் வீட்டில் தன்னுடனே வளைய வளைய வந்தவள், முதல் மகளாக பிறந்ததால் செல்லமாக சீரும் சிறப்புமாக வளர்ந்தவள், இன்று அவரை விட்டுப் பிரிந்து செல்கிறாள். இதுவரை எந்த ஊருக்கும் சென்று அவள் தனியாக தங்கியது இல்லை. பார்வைக்கு பதுவுசாக தெரிந்தாலும் கோபம் என்று வந்து விட்டால் அவளை கட்டுப்படுத்த யாராலும் முடியாது... அவள் போக்கிலே சென்றுதான் அவளை சமாதானப்படுத்த முடியும். இவை எல்லாம் மனதிற்குள் ஓட புகழைப்பற்றி நன்கு தெரிந்தாலும் திருமண வாழக்கையில் யார் எப்படி என்பதை யாரும் அறிய முடியாது. திருமணம் நடந்த சூழ்நிலை வேறு மணியம்மையின் பயத்தை மேலும் அதிகரிக்க ஒரு வித கலக்கத்துடனே நின்று கொண்டு இருந்தார் அவர்..
மணமக்கள் இருவரும் மாணிக்கம் மணியம்மையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவர்களை மனமார வாழ்த்தியவர்கள் மணியம்மை பூரணியின் கைகளைப் பிடித்து அவள் தலையை மென்மையாக வருடியவர் ... “பூரணிம்மா பார்த்து நடந்துக்கோ” என சொல்லும் முன்பே அவர் கண்களில் கண்ணீர் வர அதை பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் சேர்ந்து கேவலுடன் வெளிவர தாயின் தோளில் சாய்ந்து தேம்பித்தேம்பி அவள் அழ அதை கண்டதும் மாணிக்கத்தின் மனம் சற்று அதிர்ந்து போனது .
தான் செய்தது தவறோ என அவர் ஒரு நிமிடம் யோசிக்க அதற்குள் அங்கு வந்த நடராஜ் ஐயா “என்னப்பா நேரமாச்சு கிளம்பலாமா” என கேட்கவும் மாணிக்கம் ஏதும் பேசாமல் தலைஅசைக்க, பூரணியோ கண்களில் ஏக்கத்துடன் அவர்களை விட்டு பிரிந்து காரில் புகழுடன் ஏறினாள்.
“நாங்க எல்லாம் உன்கூட தான் ஊருக்கு வரோம் பூரணி நீ அழுகாத ” என பாரி அவள் அருகில் வந்து சொல்லவும் அவள் கைகளை இறுக்கமாகப் பற்றி கொண்ட பூரணி“நீயும் என் கூட கார்ல வா பாரி” என சொல்லும்போதே அவள் குரல் நடுங்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த புகழும் “நீயும் கூட வா பாரி” என சொல்லவும் பாரியும் அவர்களுடன் சேர்ந்து காரில் அமர்ந்தாள்..
கார் ஓலயபாலயத்தை நோக்கிச் செல்ல பின்னால் உறவினர்கள் எல்லாம் செல்ல திடீரென்று மாணிக்கம் வண்டியை நிறுத்தியவர்” நீ மட்டும் அவங்க கூட போயிட்டு வா மணியம்மை” என சொல்லிவிட்டு அவர் வெள்ளியம்பாளையத்தை நோக்கி தனது வண்டியை திருப்பினார். பூரணியின் வாடிய முகமும் அவளது அழுகையும் அவரது மனதை பிசைய, அவர் தவறு செய்யவில்லை என்றாலும் தனது மகளின் ஆசையை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்ற குற்ற மனப்பான்மை அவரை இம்சிக்க, மேலும் எந்த திருமணத்திற்காக சொந்த மச்சினனிடம் வருத்தம் வந்ததோ இன்று அவர் குடும்பத்திற்கே தனது மகளை கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என எண்ணியவரின் மனம் வருந்த திருமணத்திற்கு முன் இதை பற்றி நன்கு யோசித்து வேறு வழி இல்லாமல் எடுத்த முடிவுதான் இது என்றாலும் ஏனோ இப்போது அவரது சுய கௌரவம் தடுக்க அங்கு செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்.
பத்து நாட்களுக்கு முன் புகழ் அவரது மருமகன் என யாராவது பேசி இருந்தால் அவர்களின் நிலைமை அதோ கதி தான்....... ஆனால் இன்றோ அதே குடும்பத்தில் தனது மகளை மருமகளாக அனுப்பிவைத்திருக்கிறார்மாணிக்கம்...... நினைத்து பார்க்கும்போதே அவருக்கே ஆயாசமாக இருக்க என்னஎன்னவெல்லாம் நடந்துவிட்டது.... அன்று அவர்கள் பேசிய பேச்சிற்கு இதைத் தவிர சிறந்த பதிலடி வேறு இல்லை...... என்ன மாதிரியான வார்த்தை பேசிவிட்டார் மாமா என நினைக்கும்போதே மாணிக்கத்தின் உடல் சிலிர்த்து அடங்கியது. அந்த நினைவுகள் அவர் கண் முன்னே ஓடியது.
மனைவி, மகளின் சிரித்த முகம் அவர் மனதிற்கும்ஒரு நம்பிக்கையை கொடுக்க அவரும் உற்சாகத்துடன் தான் மறுநாள் காலை நடராஜ்ஐயாவுடன் தமக்கையின் வீட்டிற்கு சென்றார் மாணிக்கம்.
அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்காத கோமதியோ ஆச்சரியத்துடன் “தம்பி.. வா வா” என்றவர் உடன் வந்திருக்கும் நடராஜ் ஐயாவையும் வரவேற்றார்.
சிறிது நேர நல விசாரிப்புக்கு பின்னர் “என்ன தம்பி ஏதாவது சோலியா இந்த பக்கம் வந்தியா” என கேட்கவும்
“இல்லக்கா மாமவ பார்த்து பேசலாம்னு வந்தேன்’” என்றார் மாணிக்கம்.
“மாமாகிட்ட பேசணுமா.... என்ன பேசணும் தம்பி” என இழுத்த கோமதி “எதை பத்தி தம்பி... கண்ணாலத்தை பத்தியா” என கேட்கும்போதே அவர் குரல் உள்ளே செல்ல
“ஆமாக்கா உங்க பேச்சை எல்லாம் நம்பி தான் நான் மாமாகிட்ட பேசாம இருந்திட்டேன்... அதான் இப்போ பேசலாம்னு வந்தேன்” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
“அடஅட வா மாணிக்கம்...... என்ன இந்த நேரத்துல இந்த பக்கம் என கேட்டுக் கொண்டேஅங்கு வந்த கோமதியின் கணவர் நேத்து ஊருக்கு வந்தப்பக் கூட வரேன்னு சமாச்சாரம் ஒன்னும் சொல்லலை” என்றபடி சோபாவில் அமர்ந்தார்.
“இல்லை மாமா அது வந்து” என மாணிக்கம் இழுக்க
அதற்குள் அருகில் இருக்கும் நடராஜ் ஐயா “அது வந்துங்க ஒரு முக்கியமான விஷயமா உங்களை பார்த்துப் பேசிட்டு போலாம்னு தான் வந்தோம்” என பெரியமனிதராக பேச்சை ஆரம்பித்தார்.
என்கிட்டே என்ன பேசணும் என புரியாமல் கோமதியின் கணவர் இருவரையும் பார்க்க
பெரியவர் மாணிக்கத்தை பார்க்க அவரோ அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தார். பூரணியின் முகத்தை பார்த்ததும் எப்படியாவது மாமாவிடம் பேசி பூரணி அழகன் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற முடிவோடுதான் கிளம்பி வந்தார் மாணிக்கம்.. ஆனால் இப்போது அதை பேச நினைக்கையில் அவரது மனமோ ஊருக்கு நியாயம் சொல்பவராக இருந்துகொண்டு பலர் உன் பேச்சை கேட்க காத்திருக்க ஆனால் நீயோ இங்கு இன்னொருவரிடம் உதவி வேண்டி வந்திருப்பது உனக்கே கேவலமாக இல்லை என அவரை கேள்வி கேட்க.... பரம்பரை பரம்பரையாக பெரிய மனிதராக எதற்கும் தலை வணங்காமல் நின்ற மாணிக்கம் இன்று பெண்ணிற்காக அக்கா கணவர் முன் இப்படி வந்து பேசவேண்டுமா என்ற பரம்பரை கௌரவம் தடுக்க..... எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரின் முகத்தை பார்த்தே அவரது மனநிலைமையை புரிந்து கொண்ட அந்த பெரியவர்.... “அது வந்துங்க நம்ம அரசிக்கு கண்ணாலம் பேசி முடிச்சிருக்கிறதா மாணிக்கம் சொல்லுச்சுங்க என ஆரம்பித்து சிறிது நேரம் அதை பற்றி பேசிவிட்டு அப்புறம் இன்னொரு விஷயம்ங்க .....நீங்க எதோ பொண்ணு கொடுத்து பொண்ணு கட்டறதா கேள்விப்பட்டோம் ....... நம்ம சொந்தத்துல பொண்ணு இருக்கும்போது எதுக்கு அசல்ல போய் பொண்ணு கட்டணும்...... நமக்குள்ளே இருந்திட்டா ஒன்னுகுள்ள ஒண்ணா போய்டும்லங்க” என அவர் மெதுவாக பூரணி பேச்சை ஆரம்பித்தார்.
மாணிக்கம்கூட பெரியவர் இப்படி சொல்வார் என எதிர்பார்க்கவில்லை. இது இரண்டு போரையும் பாதிக்காமல் பேசுவது போல் இருந்தது. அதனால் மாணிக்கமும் நிமிர்ந்து அமர்ந்து ஆமாம் என்பது போல் தலை அசைத்து கொண்டு இருந்தார்.
திருமணம் முடிந்ததும் புகழின் வீட்டிற்குச் செல்ல மணமக்கள் தயாராகி வந்தனர். தன் வீட்டில் தன்னுடனே வளைய வளைய வந்தவள், முதல் மகளாக பிறந்ததால் செல்லமாக சீரும் சிறப்புமாக வளர்ந்தவள், இன்று அவரை விட்டுப் பிரிந்து செல்கிறாள். இதுவரை எந்த ஊருக்கும் சென்று அவள் தனியாக தங்கியது இல்லை. பார்வைக்கு பதுவுசாக தெரிந்தாலும் கோபம் என்று வந்து விட்டால் அவளை கட்டுப்படுத்த யாராலும் முடியாது... அவள் போக்கிலே சென்றுதான் அவளை சமாதானப்படுத்த முடியும். இவை எல்லாம் மனதிற்குள் ஓட புகழைப்பற்றி நன்கு தெரிந்தாலும் திருமண வாழக்கையில் யார் எப்படி என்பதை யாரும் அறிய முடியாது. திருமணம் நடந்த சூழ்நிலை வேறு மணியம்மையின் பயத்தை மேலும் அதிகரிக்க ஒரு வித கலக்கத்துடனே நின்று கொண்டு இருந்தார் அவர்..
மணமக்கள் இருவரும் மாணிக்கம் மணியம்மையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவர்களை மனமார வாழ்த்தியவர்கள் மணியம்மை பூரணியின் கைகளைப் பிடித்து அவள் தலையை மென்மையாக வருடியவர் ... “பூரணிம்மா பார்த்து நடந்துக்கோ” என சொல்லும் முன்பே அவர் கண்களில் கண்ணீர் வர அதை பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் சேர்ந்து கேவலுடன் வெளிவர தாயின் தோளில் சாய்ந்து தேம்பித்தேம்பி அவள் அழ அதை கண்டதும் மாணிக்கத்தின் மனம் சற்று அதிர்ந்து போனது .
தான் செய்தது தவறோ என அவர் ஒரு நிமிடம் யோசிக்க அதற்குள் அங்கு வந்த நடராஜ் ஐயா “என்னப்பா நேரமாச்சு கிளம்பலாமா” என கேட்கவும் மாணிக்கம் ஏதும் பேசாமல் தலைஅசைக்க, பூரணியோ கண்களில் ஏக்கத்துடன் அவர்களை விட்டு பிரிந்து காரில் புகழுடன் ஏறினாள்.
“நாங்க எல்லாம் உன்கூட தான் ஊருக்கு வரோம் பூரணி நீ அழுகாத ” என பாரி அவள் அருகில் வந்து சொல்லவும் அவள் கைகளை இறுக்கமாகப் பற்றி கொண்ட பூரணி“நீயும் என் கூட கார்ல வா பாரி” என சொல்லும்போதே அவள் குரல் நடுங்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த புகழும் “நீயும் கூட வா பாரி” என சொல்லவும் பாரியும் அவர்களுடன் சேர்ந்து காரில் அமர்ந்தாள்..
கார் ஓலயபாலயத்தை நோக்கிச் செல்ல பின்னால் உறவினர்கள் எல்லாம் செல்ல திடீரென்று மாணிக்கம் வண்டியை நிறுத்தியவர்” நீ மட்டும் அவங்க கூட போயிட்டு வா மணியம்மை” என சொல்லிவிட்டு அவர் வெள்ளியம்பாளையத்தை நோக்கி தனது வண்டியை திருப்பினார். பூரணியின் வாடிய முகமும் அவளது அழுகையும் அவரது மனதை பிசைய, அவர் தவறு செய்யவில்லை என்றாலும் தனது மகளின் ஆசையை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்ற குற்ற மனப்பான்மை அவரை இம்சிக்க, மேலும் எந்த திருமணத்திற்காக சொந்த மச்சினனிடம் வருத்தம் வந்ததோ இன்று அவர் குடும்பத்திற்கே தனது மகளை கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என எண்ணியவரின் மனம் வருந்த திருமணத்திற்கு முன் இதை பற்றி நன்கு யோசித்து வேறு வழி இல்லாமல் எடுத்த முடிவுதான் இது என்றாலும் ஏனோ இப்போது அவரது சுய கௌரவம் தடுக்க அங்கு செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்.
பத்து நாட்களுக்கு முன் புகழ் அவரது மருமகன் என யாராவது பேசி இருந்தால் அவர்களின் நிலைமை அதோ கதி தான்....... ஆனால் இன்றோ அதே குடும்பத்தில் தனது மகளை மருமகளாக அனுப்பிவைத்திருக்கிறார்மாணிக்கம்...... நினைத்து பார்க்கும்போதே அவருக்கே ஆயாசமாக இருக்க என்னஎன்னவெல்லாம் நடந்துவிட்டது.... அன்று அவர்கள் பேசிய பேச்சிற்கு இதைத் தவிர சிறந்த பதிலடி வேறு இல்லை...... என்ன மாதிரியான வார்த்தை பேசிவிட்டார் மாமா என நினைக்கும்போதே மாணிக்கத்தின் உடல் சிலிர்த்து அடங்கியது. அந்த நினைவுகள் அவர் கண் முன்னே ஓடியது.
மனைவி, மகளின் சிரித்த முகம் அவர் மனதிற்கும்ஒரு நம்பிக்கையை கொடுக்க அவரும் உற்சாகத்துடன் தான் மறுநாள் காலை நடராஜ்ஐயாவுடன் தமக்கையின் வீட்டிற்கு சென்றார் மாணிக்கம்.
அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்காத கோமதியோ ஆச்சரியத்துடன் “தம்பி.. வா வா” என்றவர் உடன் வந்திருக்கும் நடராஜ் ஐயாவையும் வரவேற்றார்.
சிறிது நேர நல விசாரிப்புக்கு பின்னர் “என்ன தம்பி ஏதாவது சோலியா இந்த பக்கம் வந்தியா” என கேட்கவும்
“இல்லக்கா மாமவ பார்த்து பேசலாம்னு வந்தேன்’” என்றார் மாணிக்கம்.
“மாமாகிட்ட பேசணுமா.... என்ன பேசணும் தம்பி” என இழுத்த கோமதி “எதை பத்தி தம்பி... கண்ணாலத்தை பத்தியா” என கேட்கும்போதே அவர் குரல் உள்ளே செல்ல
“ஆமாக்கா உங்க பேச்சை எல்லாம் நம்பி தான் நான் மாமாகிட்ட பேசாம இருந்திட்டேன்... அதான் இப்போ பேசலாம்னு வந்தேன்” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
“அடஅட வா மாணிக்கம்...... என்ன இந்த நேரத்துல இந்த பக்கம் என கேட்டுக் கொண்டேஅங்கு வந்த கோமதியின் கணவர் நேத்து ஊருக்கு வந்தப்பக் கூட வரேன்னு சமாச்சாரம் ஒன்னும் சொல்லலை” என்றபடி சோபாவில் அமர்ந்தார்.
“இல்லை மாமா அது வந்து” என மாணிக்கம் இழுக்க
அதற்குள் அருகில் இருக்கும் நடராஜ் ஐயா “அது வந்துங்க ஒரு முக்கியமான விஷயமா உங்களை பார்த்துப் பேசிட்டு போலாம்னு தான் வந்தோம்” என பெரியமனிதராக பேச்சை ஆரம்பித்தார்.
என்கிட்டே என்ன பேசணும் என புரியாமல் கோமதியின் கணவர் இருவரையும் பார்க்க
பெரியவர் மாணிக்கத்தை பார்க்க அவரோ அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தார். பூரணியின் முகத்தை பார்த்ததும் எப்படியாவது மாமாவிடம் பேசி பூரணி அழகன் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற முடிவோடுதான் கிளம்பி வந்தார் மாணிக்கம்.. ஆனால் இப்போது அதை பேச நினைக்கையில் அவரது மனமோ ஊருக்கு நியாயம் சொல்பவராக இருந்துகொண்டு பலர் உன் பேச்சை கேட்க காத்திருக்க ஆனால் நீயோ இங்கு இன்னொருவரிடம் உதவி வேண்டி வந்திருப்பது உனக்கே கேவலமாக இல்லை என அவரை கேள்வி கேட்க.... பரம்பரை பரம்பரையாக பெரிய மனிதராக எதற்கும் தலை வணங்காமல் நின்ற மாணிக்கம் இன்று பெண்ணிற்காக அக்கா கணவர் முன் இப்படி வந்து பேசவேண்டுமா என்ற பரம்பரை கௌரவம் தடுக்க..... எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரின் முகத்தை பார்த்தே அவரது மனநிலைமையை புரிந்து கொண்ட அந்த பெரியவர்.... “அது வந்துங்க நம்ம அரசிக்கு கண்ணாலம் பேசி முடிச்சிருக்கிறதா மாணிக்கம் சொல்லுச்சுங்க என ஆரம்பித்து சிறிது நேரம் அதை பற்றி பேசிவிட்டு அப்புறம் இன்னொரு விஷயம்ங்க .....நீங்க எதோ பொண்ணு கொடுத்து பொண்ணு கட்டறதா கேள்விப்பட்டோம் ....... நம்ம சொந்தத்துல பொண்ணு இருக்கும்போது எதுக்கு அசல்ல போய் பொண்ணு கட்டணும்...... நமக்குள்ளே இருந்திட்டா ஒன்னுகுள்ள ஒண்ணா போய்டும்லங்க” என அவர் மெதுவாக பூரணி பேச்சை ஆரம்பித்தார்.
மாணிக்கம்கூட பெரியவர் இப்படி சொல்வார் என எதிர்பார்க்கவில்லை. இது இரண்டு போரையும் பாதிக்காமல் பேசுவது போல் இருந்தது. அதனால் மாணிக்கமும் நிமிர்ந்து அமர்ந்து ஆமாம் என்பது போல் தலை அசைத்து கொண்டு இருந்தார்.