- Joined
- Aug 2, 2021
- Messages
- 145
அத்தியாயம் – 15
பார்வைக்கும்,யோசனைக்கும் சுலபமாக இருக்கும் சில நிகழ்வுகள் அது செயல்வடிவம் பெறும்போது தான் அதன் சிரமங்கள் நமக்கு புரியும். நினைத்ததை முடித்து விட வேண்டும் என்ற ஒரு கோணத்தில் மட்டும் யோசித்து அவன் சாதித்துவிட்டான்......தாலி கழுத்தில் ஏறிவிட்டால் தன் வழிக்கு வந்து தானே ஆகவேண்டும் என்ற இறுமாப்பில் அவன் இருக்க ,அழிக்க முடியாத சில நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு கடமைக்காக இவனோடு வாழ்வதில் அர்த்தம் இல்லை என அவள் அறிவுக்கு தாமதமாக புரிய அதே சமயத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம் அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட இதில் இருந்து தான் எப்படி வெளியே வருவது என்ற மன ஓட்டத்தில் அவள் இருக்க இப்படி வேறு வேறு எண்ணத்தில் பயணம் செய்யும் இரண்டு மனங்கள் ஒன்றாக சந்திக்கும்போது அங்கு மௌனம் மட்டுமே மொழியாக இருக்கும்.
இங்கும் அதே தான் நடந்து கொண்டு இருந்தது. முதல் இரவு அறைக்குள் புகழ் உள்ளே வரவும் அவள் கட்டிலில் கண்ணீருடன் கைகளை கூப்பி ஏதோ சொல்லி கொண்டு இருப்பதை பார்த்தவன் முதல் முறையாக தான் செய்த காரியத்தை நினைத்து அவன் மனம் அதிர்ந்தது..எப்போதும் சந்தோசமும் கண்களில் ஒரு துள்ளலுடனும் அவள் முகத்தை பார்த்து இருந்தவன் இப்போது அவை எல்லாம் மறைந்து வாடிய முகமும்,கண்ணீர் நிரம்பிய கண்களுமாக அவனாலே அவளை அப்படி பார்க்க முடியவில்லை.அவன் நினைவுகள் அந்த அழகான நாட்களை நோக்கி இழுத்து சென்றது.
சிறுவயதில் இருந்தே எப்போதும் துறுதுறுப்பாகவும் சற்று துடிப்புடன் இருப்பாள் பூரணி. மணியம்மைக்கு திருமணம் ஆகி வெகுநாட்களுக்கு பின்தான் பூரணி பிறந்தாள். புகழும் அவனது தந்தையும் மட்டுமே பிறந்த குழந்தையை பார்க்க சென்று இருந்தனர்.பேச்சியம்மாள் உடனான திருமணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தில் மாணிக்கமும் அவரின் தாயும் புகழ் வீட்டாரிடம் பேசமாட்டார்கள்.
அதனால் குழந்தையை பார்க்க டவுன் ஆஸ்பத்திரிக்கு சென்றவர்கள் உள்ளே மணியம்மையின் மாமியார் இருக்க புகழின் தந்தை வெளியே நின்று கொண்டு புகழை மட்டும் உள்ளே அனுப்பினார். அப்போது புகழுக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.கிராமத்தில் பேருந்து ஏறியதில் இருந்து இறங்கும் வரை “என்னப்பா விடியலிலே டவுனுக்கு கிளம்பிட்ட” என கேட்பவர்களுக்கு எல்லாம் “தங்கச்சிக்கு குழந்தை பிறந்திருக்கு” என புகழின் தந்தை மகிழ்ச்சியுடன் சொல்லவும் “ஓ புகழுக்கு பொண்டாட்டி வந்துட்டாளா” என கிராமத்து மனிதர்களான அவர்கள் கேலியாக பேச....... அவனுக்கு புரியவில்லை என்றாலும் பொண்டாட்டி என்ற வார்த்தை அவனுக்குள் வெட்கத்தை கொடுக்க அவன் நாணி கோண அவர்களோ அதற்கும் கேலி பேச அதே நினைப்போடு உள்ளே நுழைந்தவன் அப்போது குழந்தை அழுகும் சத்தம் கேட்கவும் தயங்கி தயங்கி அத்தையின் அருகில் வந்தான். அவனை கண்டதும் மாணிக்கத்தின் தாய் “வந்துட்டானுக சொந்தம் கொண்டாடிகிட்டு” என முனகியவாறு முகத்தை நொடிக்க ,மணியம்மையோ“புகழுஊஊ வாடா வா” என பிரசவத்தின் களைப்பிலும் அவள் முகத்தில் சந்தோசம் நிறைந்து இருக்க அவனை பாசத்தோடு அழைத்தவர் அருகில் அவரது மாமியார் முறைக்கவும் ...அந்த நேரம் பார்த்து ஒரு நர்ஸ் “டாக்டர் உங்களை கூப்பிட்றாங்க” என அவரது மாமியாரை அழைத்து கொண்டு சென்று விட மணியம்மையின் முகத்தில் நிம்மதி பரவியது.
மெதுவாக எழுந்து அமர்ந்த மணியம்மை “புகழு நீ எப்படி வந்த.......யார் வந்து இருக்கா?” என கண்கள் தமயனை தேட அவர் கேட்கவும்
“அப்பாகூட வந்தேன் அத்தை...வெளியே இருக்காங்க...என்னைமட்டும் போய் பார்த்திட்டு வான்னு சொன்னாங்க” என அவன் சொல்லவும் மணியம்மையின் முகம் வாடிவிட்டது.தெய்வமே வந்து முன்னாள் நின்றாலும் தான் பெற்ற பிள்ளையை தன் வீட்டினர் முதலில் பார்க்க வேண்டும் என்று தான் எந்த பொண்ணும் ஆசைபடுவாள். அதுவும் தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்து ஆளாக்கிய தனது தமையன் குழந்தையை பார்க்காமல் வெளியே நிற்பது அவள் மனதை வேதனை படுத்தியது.
அதற்குள் “அத்தை பாப்பாவ நான் பார்க்கட்டுமா” என அவன் கேட்கவும் “வாடா தங்கம்...உனக்கு இல்லாத உரிமையா” என அருகில் அவனை அமரவைத்து பிறந்து சில மணி நேரங்களே ஆன தொட்டிலில் இருக்கும் குழந்தை எடுத்து அவன் கையில் கொடுத்தார் மணியம்மை.
“இன்னும் அவங்க அப்பாகூட குழந்தையை தொட்டு தூக்கலைடா....முகத்தை மட்டும் பார்த்திட்டு போன் பேச போய்ட்டார். நீ தான் முதல்ல என் பொண்ண கையில தொட்டு தூக்கி இருக்க “என சொல்லவும் முகத்தில் பெருமிதத்தோடு குனிந்து அந்த குழந்தையின் முகத்தை பார்த்தவன் மொட்டு போன்ற பெரிய கண்களுடன் லேசாக சிரித்தபடி விரல்கள் அசைத்தபடி அவன் கைகளில் பூங்குவியலாய் நிறைந்து இருந்தாள் அவனது இதயராணி.
அவன் கண்களை இமைக்காமல் அவளை ரசித்து கொண்டி இருக்க சில வினாடிகள் அமைதியாக இருந்தவள் பின்பு பிஞ்சு விரல்களை அசைத்தபடி அழுதபடி நெளிய
“என்ன அத்தை அழுகுறா “ என அவன் பயப்படவும்
மணியம்மியோ “குட்டிம்மா எதுக்கு அழுகிற ..... உன்ற மச்சான் வந்து இருக்கார் பாரு......புகழ் மச்சான் வந்து இருக்கான் பாருடா.....அவன் தான் உன்னை கையில வச்சிருக்கான் பாரு “ என கொஞ்சலாக சொல்லவும் அந்த பிஞ்சு மலர் அழுகையை நிறுத்தி மூடிய இமைகளை சற்று விரிக்க
“டேய்ய்ய்ய்ய் புகழு இவ்ளோ நேரம் நாங்க கூப்பிட்டோம்...கண்ணே திறக்கலை இப்ப பாரேன் உன் பேர் சொன்ன உடனே கண்ணை திறக்காறா...இப்பவே இவளுக்கு எல்லாம் தெரியுது பாரேன் “ என அவர் ஆச்சரியப்பட அப்போது அந்த நொடி புகழின் மனதில் தோன்றிய கர்வம் இப்பவும் அவன் முகத்தில் அந்த கர்வம் வந்து போனது.
அதற்கு பின்பு புகழின் தந்தை உள்ளே வந்து குழந்தையை பார்த்து விசாரித்துவிட்டு பேச்சியம்மாவிற்கும் பிரசவ நேரம் என்பதால் வர முடியவில்லை என சொல்லிவிட்டு புகழ் கையில் ஒரு தங்கசெயினை கொடுத்து பூரணியின் கழுத்தில் போட சொன்னார் . அதை இப்போது நினைக்கும்போதே நெஞ்சம் இனிக்க “அப்பவே நீ எனக்கு பொண்டாட்டி ஆகிட்டடி” என முனகியவன் மீண்டும் அந்த நினைவுகள் அவனை இழுக்க அதில் மூழ்கினான்.
அதற்கு பின் பாண்டி பிறந்தான்.ஆனால் மாணிக்கம் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.பூர்ணிமா என பெயர் வைத்த போது தகவல் மட்டுமே வந்தது.அதற்கு பின்பு அவளை அதிகம் பார்க்க முடியவில்லை.
பின்னர் பள்ளியில் தான் அவளை பார்க்க முடிந்தது.அதுவும் பாண்டி வகுப்பில் அவள் இருந்ததால் அவளை பற்றி விபரங்கள் அவனுக்கு உடனுக்குடன் வந்து விடும்.. பள்ளிக்கு வந்தால் ஒரு பெரிய கும்பலை சேர்த்துக்கொண்டு மற்ற மாணவர்களை வம்பு இழுப்பதும், வீட்டுபாடம் எழுதாமல் வெளியில் நிற்பதும்,வாத்தியாரின் வண்டியில் காற்று பிடுங்கி விடுவதும் என அவளது ஜகதல பிரதாபங்களை பாண்டி ஒன்று விடாமல் புகழிடம் ஒப்பித்து விடுவான்.அப்போது தான் புகழ் அவனுக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பான். அதனால் பள்ளியில் பூரணியிடம் நட்புடன் இருந்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் அவளை பற்றி தன் அண்ணனிடம் போட்டு கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து வந்தான் பாண்டி அதற்காகவே படிப்பைவிட அவளை கவனிப்பதிலே அவன் குறியாக இருந்தான்.புகழ் அப்போது டவுன் பள்ளிகூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்.
சில நேரங்களில் பள்ளியில் செய்யும் தப்புகளுக்கு வீட்டில் மணியம்மையிடம் நன்றாக அடிவாங்குவாள் பூரணி.
“ ஏண்டி மணி எந்த கருப்பு ஆடு போட்டு கொடுத்திச்சுனு தெரியலியே என்றவள் ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்தே சாந்தி மணி இருவரும் அவளின் நெருங்கிய தோழிகள். “பள்ளிகூடத்துல நடக்கிறது வீட்டுக்கு எப்படி தெரியுது” என அவள் கேட்கவும் “எனக்கும் தெரியலை பூரணி....நீ நேத்து கணக்கு டீச்சர்கிட்ட வீட்டுபாடம் செய்யாம அடிவாங்கினது சாயந்திரத்துக்குள்ள எப்படி உங்க அம்மாவுக்கு தெரிஞ்சது. இதுல ஏதோ சதி இருக்கு கண்டுபிடிக்கணும்” என கண்களை உருட்டி சாந்தி சொல்ல “ஆமாம் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்” என மணியும் ஒத்து ஊத இப்படியாக இரண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று பெரியமனுசிகளும் யோசித்து கொண்டு இருந்தனர்.
இப்படியாக நாட்கள் ஓடின..... ஒரு நாள் தோழிகள் மூவரும் சாலையில் ஓடிபிடித்து விளையாடியபடி வர எதிரில் புகழ் அவன் நண்பன் செல்வத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான்.
அப்போது செல்வம் “பங்காளி அங்க பாரு உன் அத்தமக ரத்தினம்ஊரையே அளந்துகிட்டு நடந்து வருது” என சொல்லவும் புகழ் திரும்பி பார்க்க அங்கு பூரணி தோழிகளுடன் அடித்து பேசி விளையாண்டுகொன்டே வந்து கொண்டு இருந்தாள்.
“ஏன் பங்காளி உம அத்தை மகளுக்கு வாய் ரப்பர்லையா பண்ணிருக்கு.....நிறுத்தாம சலசலன்னு பேசிகிட்டே இருக்காளே ..வாயே வலிக்காதா” என சொல்லவும் புகழோ அவனை திரும்பி ஒரு முறை முறைத்தவன் பின்னர் வேகமாக முன்னே சென்று அவள் முன் நின்றான்.
திடீரென எதிரில் சைக்கிள் வந்து நிற்கவும் “ஏய்ய்ய்ய்யி” என கத்தி கொண்டே நிமிர்ந்த பூரணி ..புகழை பார்த்ததும் கோபத்துடன் “ஆளு வரது கண்ணனுக்கு தெரியலை...மேலேயே கொண்டு வந்து விட்ரிங்க” என வேகமாக கேட்டாள்.
அந்த சிறுவயதில் அவளது விடலைதனமான கோபமும்,ரோஷமும் அவனை ஈர்க்க...அவள் தலை ஆட்டி ஆட்டி பேசும்போது அதற்கு ஏற்றார் போல் நடனம் ஆடிய அவளது காதில் தோலாக்கும் , இரட்டை ஜடையும் அவனது மனதை கொள்ளை கொள்ள “ம்ம்ம்ம் ஏண்டி பூசணிக்காய் மாதிரி இருந்துகிட்டு ரோட்ல நடந்து போக சொன்னா நீ உருண்டு போய்கிட்டு இருக்க.....அப்புறம் எங்க சைக்கிள் எப்படி போகும்...உன் மேலதான் போகும்” என அவன் நக்கலாக சொன்னான்.
“இங்க பாருங்க மச்சான் இந்த கேலிபேச்சு எல்லாம் என்கிட்டே வேண்டாம்.எங்க அப்பத்தா உங்ககிட்ட பேசகூடாதுன்னு சொல்லி இருக்கு.....வம்பிளுக்காம வழிய விடுங்க” என பெரிய மனுசி போல் பேசவும்
“ம்ம்ம் அந்த கிழவிக்கும் வேற வேலை இல்லை.....ஏண்டி பூசணி அது சொன்னா நீ என்கிட்டே பேசமாட்டியா” என அவன் கோபமாக கேட்டான்.
“இங்க பாருங்க என் பேரு பூசணி இல்லை பூரணி” என அவள் ரோசமாக சொல்ல
அவனோ “அப்படியா யாரு என்ன சொன்னாலும் நீ எனக்கு பூசணிதான் .. அதும் குண்டு பூசணிதான்” என வாயை உப்பலாக வைத்து கொண்டு அவன் மீண்டும் மீண்டும் சொல்ல
“போடா கருவாயா” என அவள் வேகமாக சொன்னதும்
“என்னடி சொன்ன என்ன போடாவா என அதட்டிகொன்டே அவன் அருகில் வர பூரணியோ ஆமாண்டா அப்படிதான் சொல்வேன்...நீ மட்டும் என்னை பூசணி சொல்ற” என எதிர்த்து நின்று பதில் பேச
“ஏய் நான் உன் மச்சாண்டி...நான் அப்படிதான் சொல்வேன்” என அவன் உரிமையோடு சொன்னதும்
“நீ ஒன்னும் எனக்கு மச்சான் இல்லை..........அழகன் மச்சான் தான் எனக்கு மச்சானாம்... எங்க அப்பத்தா சொல்லுச்சு....நீங்க எல்லாம் கெட்டவங்க.....அவங்க தான் நல்லவங்கனு ...உன்னை எனக்கு பிடிக்கலை போடா என சொல்லிவிட்டு வாங்கடி போலாம்” என தோழிகளை இழுத்து கொண்டு வேகமாக ஓடிவிட்டாள் பூரணி.
எட்டு வயது பெண் சிறுபிள்ளைதனமாக சொல்லியது அவன் மனதில் வேர்போல் பதிந்து விட்டது. அவள் சொன்னதை கேட்டதும் புகழின் முகம் சுருங்கி விட்டது. வாடா போலாம் என இறுகிய முகத்துடன் செல்வத்தை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான் .
பார்வைக்கும்,யோசனைக்கும் சுலபமாக இருக்கும் சில நிகழ்வுகள் அது செயல்வடிவம் பெறும்போது தான் அதன் சிரமங்கள் நமக்கு புரியும். நினைத்ததை முடித்து விட வேண்டும் என்ற ஒரு கோணத்தில் மட்டும் யோசித்து அவன் சாதித்துவிட்டான்......தாலி கழுத்தில் ஏறிவிட்டால் தன் வழிக்கு வந்து தானே ஆகவேண்டும் என்ற இறுமாப்பில் அவன் இருக்க ,அழிக்க முடியாத சில நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு கடமைக்காக இவனோடு வாழ்வதில் அர்த்தம் இல்லை என அவள் அறிவுக்கு தாமதமாக புரிய அதே சமயத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம் அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட இதில் இருந்து தான் எப்படி வெளியே வருவது என்ற மன ஓட்டத்தில் அவள் இருக்க இப்படி வேறு வேறு எண்ணத்தில் பயணம் செய்யும் இரண்டு மனங்கள் ஒன்றாக சந்திக்கும்போது அங்கு மௌனம் மட்டுமே மொழியாக இருக்கும்.
இங்கும் அதே தான் நடந்து கொண்டு இருந்தது. முதல் இரவு அறைக்குள் புகழ் உள்ளே வரவும் அவள் கட்டிலில் கண்ணீருடன் கைகளை கூப்பி ஏதோ சொல்லி கொண்டு இருப்பதை பார்த்தவன் முதல் முறையாக தான் செய்த காரியத்தை நினைத்து அவன் மனம் அதிர்ந்தது..எப்போதும் சந்தோசமும் கண்களில் ஒரு துள்ளலுடனும் அவள் முகத்தை பார்த்து இருந்தவன் இப்போது அவை எல்லாம் மறைந்து வாடிய முகமும்,கண்ணீர் நிரம்பிய கண்களுமாக அவனாலே அவளை அப்படி பார்க்க முடியவில்லை.அவன் நினைவுகள் அந்த அழகான நாட்களை நோக்கி இழுத்து சென்றது.
சிறுவயதில் இருந்தே எப்போதும் துறுதுறுப்பாகவும் சற்று துடிப்புடன் இருப்பாள் பூரணி. மணியம்மைக்கு திருமணம் ஆகி வெகுநாட்களுக்கு பின்தான் பூரணி பிறந்தாள். புகழும் அவனது தந்தையும் மட்டுமே பிறந்த குழந்தையை பார்க்க சென்று இருந்தனர்.பேச்சியம்மாள் உடனான திருமணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தில் மாணிக்கமும் அவரின் தாயும் புகழ் வீட்டாரிடம் பேசமாட்டார்கள்.
அதனால் குழந்தையை பார்க்க டவுன் ஆஸ்பத்திரிக்கு சென்றவர்கள் உள்ளே மணியம்மையின் மாமியார் இருக்க புகழின் தந்தை வெளியே நின்று கொண்டு புகழை மட்டும் உள்ளே அனுப்பினார். அப்போது புகழுக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.கிராமத்தில் பேருந்து ஏறியதில் இருந்து இறங்கும் வரை “என்னப்பா விடியலிலே டவுனுக்கு கிளம்பிட்ட” என கேட்பவர்களுக்கு எல்லாம் “தங்கச்சிக்கு குழந்தை பிறந்திருக்கு” என புகழின் தந்தை மகிழ்ச்சியுடன் சொல்லவும் “ஓ புகழுக்கு பொண்டாட்டி வந்துட்டாளா” என கிராமத்து மனிதர்களான அவர்கள் கேலியாக பேச....... அவனுக்கு புரியவில்லை என்றாலும் பொண்டாட்டி என்ற வார்த்தை அவனுக்குள் வெட்கத்தை கொடுக்க அவன் நாணி கோண அவர்களோ அதற்கும் கேலி பேச அதே நினைப்போடு உள்ளே நுழைந்தவன் அப்போது குழந்தை அழுகும் சத்தம் கேட்கவும் தயங்கி தயங்கி அத்தையின் அருகில் வந்தான். அவனை கண்டதும் மாணிக்கத்தின் தாய் “வந்துட்டானுக சொந்தம் கொண்டாடிகிட்டு” என முனகியவாறு முகத்தை நொடிக்க ,மணியம்மையோ“புகழுஊஊ வாடா வா” என பிரசவத்தின் களைப்பிலும் அவள் முகத்தில் சந்தோசம் நிறைந்து இருக்க அவனை பாசத்தோடு அழைத்தவர் அருகில் அவரது மாமியார் முறைக்கவும் ...அந்த நேரம் பார்த்து ஒரு நர்ஸ் “டாக்டர் உங்களை கூப்பிட்றாங்க” என அவரது மாமியாரை அழைத்து கொண்டு சென்று விட மணியம்மையின் முகத்தில் நிம்மதி பரவியது.
மெதுவாக எழுந்து அமர்ந்த மணியம்மை “புகழு நீ எப்படி வந்த.......யார் வந்து இருக்கா?” என கண்கள் தமயனை தேட அவர் கேட்கவும்
“அப்பாகூட வந்தேன் அத்தை...வெளியே இருக்காங்க...என்னைமட்டும் போய் பார்த்திட்டு வான்னு சொன்னாங்க” என அவன் சொல்லவும் மணியம்மையின் முகம் வாடிவிட்டது.தெய்வமே வந்து முன்னாள் நின்றாலும் தான் பெற்ற பிள்ளையை தன் வீட்டினர் முதலில் பார்க்க வேண்டும் என்று தான் எந்த பொண்ணும் ஆசைபடுவாள். அதுவும் தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்து ஆளாக்கிய தனது தமையன் குழந்தையை பார்க்காமல் வெளியே நிற்பது அவள் மனதை வேதனை படுத்தியது.
அதற்குள் “அத்தை பாப்பாவ நான் பார்க்கட்டுமா” என அவன் கேட்கவும் “வாடா தங்கம்...உனக்கு இல்லாத உரிமையா” என அருகில் அவனை அமரவைத்து பிறந்து சில மணி நேரங்களே ஆன தொட்டிலில் இருக்கும் குழந்தை எடுத்து அவன் கையில் கொடுத்தார் மணியம்மை.
“இன்னும் அவங்க அப்பாகூட குழந்தையை தொட்டு தூக்கலைடா....முகத்தை மட்டும் பார்த்திட்டு போன் பேச போய்ட்டார். நீ தான் முதல்ல என் பொண்ண கையில தொட்டு தூக்கி இருக்க “என சொல்லவும் முகத்தில் பெருமிதத்தோடு குனிந்து அந்த குழந்தையின் முகத்தை பார்த்தவன் மொட்டு போன்ற பெரிய கண்களுடன் லேசாக சிரித்தபடி விரல்கள் அசைத்தபடி அவன் கைகளில் பூங்குவியலாய் நிறைந்து இருந்தாள் அவனது இதயராணி.
அவன் கண்களை இமைக்காமல் அவளை ரசித்து கொண்டி இருக்க சில வினாடிகள் அமைதியாக இருந்தவள் பின்பு பிஞ்சு விரல்களை அசைத்தபடி அழுதபடி நெளிய
“என்ன அத்தை அழுகுறா “ என அவன் பயப்படவும்
மணியம்மியோ “குட்டிம்மா எதுக்கு அழுகிற ..... உன்ற மச்சான் வந்து இருக்கார் பாரு......புகழ் மச்சான் வந்து இருக்கான் பாருடா.....அவன் தான் உன்னை கையில வச்சிருக்கான் பாரு “ என கொஞ்சலாக சொல்லவும் அந்த பிஞ்சு மலர் அழுகையை நிறுத்தி மூடிய இமைகளை சற்று விரிக்க
“டேய்ய்ய்ய்ய் புகழு இவ்ளோ நேரம் நாங்க கூப்பிட்டோம்...கண்ணே திறக்கலை இப்ப பாரேன் உன் பேர் சொன்ன உடனே கண்ணை திறக்காறா...இப்பவே இவளுக்கு எல்லாம் தெரியுது பாரேன் “ என அவர் ஆச்சரியப்பட அப்போது அந்த நொடி புகழின் மனதில் தோன்றிய கர்வம் இப்பவும் அவன் முகத்தில் அந்த கர்வம் வந்து போனது.
அதற்கு பின்பு புகழின் தந்தை உள்ளே வந்து குழந்தையை பார்த்து விசாரித்துவிட்டு பேச்சியம்மாவிற்கும் பிரசவ நேரம் என்பதால் வர முடியவில்லை என சொல்லிவிட்டு புகழ் கையில் ஒரு தங்கசெயினை கொடுத்து பூரணியின் கழுத்தில் போட சொன்னார் . அதை இப்போது நினைக்கும்போதே நெஞ்சம் இனிக்க “அப்பவே நீ எனக்கு பொண்டாட்டி ஆகிட்டடி” என முனகியவன் மீண்டும் அந்த நினைவுகள் அவனை இழுக்க அதில் மூழ்கினான்.
அதற்கு பின் பாண்டி பிறந்தான்.ஆனால் மாணிக்கம் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.பூர்ணிமா என பெயர் வைத்த போது தகவல் மட்டுமே வந்தது.அதற்கு பின்பு அவளை அதிகம் பார்க்க முடியவில்லை.
பின்னர் பள்ளியில் தான் அவளை பார்க்க முடிந்தது.அதுவும் பாண்டி வகுப்பில் அவள் இருந்ததால் அவளை பற்றி விபரங்கள் அவனுக்கு உடனுக்குடன் வந்து விடும்.. பள்ளிக்கு வந்தால் ஒரு பெரிய கும்பலை சேர்த்துக்கொண்டு மற்ற மாணவர்களை வம்பு இழுப்பதும், வீட்டுபாடம் எழுதாமல் வெளியில் நிற்பதும்,வாத்தியாரின் வண்டியில் காற்று பிடுங்கி விடுவதும் என அவளது ஜகதல பிரதாபங்களை பாண்டி ஒன்று விடாமல் புகழிடம் ஒப்பித்து விடுவான்.அப்போது தான் புகழ் அவனுக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பான். அதனால் பள்ளியில் பூரணியிடம் நட்புடன் இருந்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் அவளை பற்றி தன் அண்ணனிடம் போட்டு கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து வந்தான் பாண்டி அதற்காகவே படிப்பைவிட அவளை கவனிப்பதிலே அவன் குறியாக இருந்தான்.புகழ் அப்போது டவுன் பள்ளிகூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்.
சில நேரங்களில் பள்ளியில் செய்யும் தப்புகளுக்கு வீட்டில் மணியம்மையிடம் நன்றாக அடிவாங்குவாள் பூரணி.
“ ஏண்டி மணி எந்த கருப்பு ஆடு போட்டு கொடுத்திச்சுனு தெரியலியே என்றவள் ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்தே சாந்தி மணி இருவரும் அவளின் நெருங்கிய தோழிகள். “பள்ளிகூடத்துல நடக்கிறது வீட்டுக்கு எப்படி தெரியுது” என அவள் கேட்கவும் “எனக்கும் தெரியலை பூரணி....நீ நேத்து கணக்கு டீச்சர்கிட்ட வீட்டுபாடம் செய்யாம அடிவாங்கினது சாயந்திரத்துக்குள்ள எப்படி உங்க அம்மாவுக்கு தெரிஞ்சது. இதுல ஏதோ சதி இருக்கு கண்டுபிடிக்கணும்” என கண்களை உருட்டி சாந்தி சொல்ல “ஆமாம் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்” என மணியும் ஒத்து ஊத இப்படியாக இரண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று பெரியமனுசிகளும் யோசித்து கொண்டு இருந்தனர்.
இப்படியாக நாட்கள் ஓடின..... ஒரு நாள் தோழிகள் மூவரும் சாலையில் ஓடிபிடித்து விளையாடியபடி வர எதிரில் புகழ் அவன் நண்பன் செல்வத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான்.
அப்போது செல்வம் “பங்காளி அங்க பாரு உன் அத்தமக ரத்தினம்ஊரையே அளந்துகிட்டு நடந்து வருது” என சொல்லவும் புகழ் திரும்பி பார்க்க அங்கு பூரணி தோழிகளுடன் அடித்து பேசி விளையாண்டுகொன்டே வந்து கொண்டு இருந்தாள்.
“ஏன் பங்காளி உம அத்தை மகளுக்கு வாய் ரப்பர்லையா பண்ணிருக்கு.....நிறுத்தாம சலசலன்னு பேசிகிட்டே இருக்காளே ..வாயே வலிக்காதா” என சொல்லவும் புகழோ அவனை திரும்பி ஒரு முறை முறைத்தவன் பின்னர் வேகமாக முன்னே சென்று அவள் முன் நின்றான்.
திடீரென எதிரில் சைக்கிள் வந்து நிற்கவும் “ஏய்ய்ய்ய்யி” என கத்தி கொண்டே நிமிர்ந்த பூரணி ..புகழை பார்த்ததும் கோபத்துடன் “ஆளு வரது கண்ணனுக்கு தெரியலை...மேலேயே கொண்டு வந்து விட்ரிங்க” என வேகமாக கேட்டாள்.
அந்த சிறுவயதில் அவளது விடலைதனமான கோபமும்,ரோஷமும் அவனை ஈர்க்க...அவள் தலை ஆட்டி ஆட்டி பேசும்போது அதற்கு ஏற்றார் போல் நடனம் ஆடிய அவளது காதில் தோலாக்கும் , இரட்டை ஜடையும் அவனது மனதை கொள்ளை கொள்ள “ம்ம்ம்ம் ஏண்டி பூசணிக்காய் மாதிரி இருந்துகிட்டு ரோட்ல நடந்து போக சொன்னா நீ உருண்டு போய்கிட்டு இருக்க.....அப்புறம் எங்க சைக்கிள் எப்படி போகும்...உன் மேலதான் போகும்” என அவன் நக்கலாக சொன்னான்.
“இங்க பாருங்க மச்சான் இந்த கேலிபேச்சு எல்லாம் என்கிட்டே வேண்டாம்.எங்க அப்பத்தா உங்ககிட்ட பேசகூடாதுன்னு சொல்லி இருக்கு.....வம்பிளுக்காம வழிய விடுங்க” என பெரிய மனுசி போல் பேசவும்
“ம்ம்ம் அந்த கிழவிக்கும் வேற வேலை இல்லை.....ஏண்டி பூசணி அது சொன்னா நீ என்கிட்டே பேசமாட்டியா” என அவன் கோபமாக கேட்டான்.
“இங்க பாருங்க என் பேரு பூசணி இல்லை பூரணி” என அவள் ரோசமாக சொல்ல
அவனோ “அப்படியா யாரு என்ன சொன்னாலும் நீ எனக்கு பூசணிதான் .. அதும் குண்டு பூசணிதான்” என வாயை உப்பலாக வைத்து கொண்டு அவன் மீண்டும் மீண்டும் சொல்ல
“போடா கருவாயா” என அவள் வேகமாக சொன்னதும்
“என்னடி சொன்ன என்ன போடாவா என அதட்டிகொன்டே அவன் அருகில் வர பூரணியோ ஆமாண்டா அப்படிதான் சொல்வேன்...நீ மட்டும் என்னை பூசணி சொல்ற” என எதிர்த்து நின்று பதில் பேச
“ஏய் நான் உன் மச்சாண்டி...நான் அப்படிதான் சொல்வேன்” என அவன் உரிமையோடு சொன்னதும்
“நீ ஒன்னும் எனக்கு மச்சான் இல்லை..........அழகன் மச்சான் தான் எனக்கு மச்சானாம்... எங்க அப்பத்தா சொல்லுச்சு....நீங்க எல்லாம் கெட்டவங்க.....அவங்க தான் நல்லவங்கனு ...உன்னை எனக்கு பிடிக்கலை போடா என சொல்லிவிட்டு வாங்கடி போலாம்” என தோழிகளை இழுத்து கொண்டு வேகமாக ஓடிவிட்டாள் பூரணி.
எட்டு வயது பெண் சிறுபிள்ளைதனமாக சொல்லியது அவன் மனதில் வேர்போல் பதிந்து விட்டது. அவள் சொன்னதை கேட்டதும் புகழின் முகம் சுருங்கி விட்டது. வாடா போலாம் என இறுகிய முகத்துடன் செல்வத்தை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான் .