• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம்-26


வாழ்க்கை என்னும் படகில் நம்பிக்கை என்னும் துடுப்பை கொண்டே பயணம் செய்யமுடியும்.இதில் தடுமாற்றம் வரும்போது வாழ்க்கைநெறி தடம் மாறிபோய்விடும். திருமணம் என்னும் பந்தத்தில் நம்பிக்கை என்னும் அச்சாணியை கொண்டுதான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த முடியும்.இங்கு பூரணிக்கு சக்கரத்தின் அச்சாணியே ஆட்டம் காண துவண்டு போய் நின்றாள்.

இதை அறியாமல் மீண்டும் மணமேடையில் இருந்து மணியம்மை அவர்களை அழைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி அசையாமல் நின்று கொண்டு இருந்தனர். அப்போது மணமேடையில் இருந்து இறங்கி புகழிடம் வந்த அழகன் “வாங்க அண்ணா ஒரு போட்டோ எடுத்துக்கலாம்” என கையை பிடித்து அழைத்தான். ஆனால் புகழ் நகராமல் பூரணியே பார்த்துகொண்டிருக்க பூரணி பக்கம் திரும்பிய அழகன் “பூரணி ..பூரணி” என இருமுறை அழைத்தும் அவள் பதில் பேசாமல் நிற்கவும் அவள் அருகில் சென்று “பூரணி..பூரணி” என சத்தமாக அழைக்க ம்ம்ம் என்ன என்றபடி சுய நினைவிற்கு வந்தவள் எதிரில் கழுத்தில் மாலையோடு அழகனை பார்த்ததும் இதுவரை ஏற்பட்ட அதிர்ச்சி எல்லாம் வெடித்து அழுகையாக மாற கண்களில் நீர் அருவில் போல கொட்ட அழகனின் கைகளை பிடித்து கொண்டு “மச்சான்...மச்சான் நான் வந்து” என தேம்பலும் அழுகையுமாக அவள் தடுமாற

உடனே “என்னாச்சு பூரணி...ஏன் அழற “ என அழகன் பதறவும்

அதற்குள் அருகில் இருந்தவர்கள் அவர்களை திரும்பி பார்க்க

அதுவரை பூரணி பார்த்த அதிர்ச்சியில் நின்ற புகழ் ..... அழகன் பூரணியிடம் பேசவும் சற்று சுதாரித்து வேகமாக பூரணியின் அருகில் வந்து அவள் கைகளை பற்றியவன் “வா பூரணி போகலாம்” என இழுக்கவும்

அழகனோ “கொஞ்சம் பொறுங்க...அவ என்னமோ சொல்ல வரா” என புகழை தடுக்கவும்

“அதெல்லாம் ஒன்றுமில்லை அழகன்...நீங்க உங்க வேலையை பாருங்க..நீ வா பூரணி” என அவனை நகர்த்திவிட்டு அவளை இழுத்துக்கொண்டு வேகமாக வெளியே நடந்தான்.

பூரணியோ “விடுங்க என்னை..விடுங்க” என அவன் கைகளை அவனிடம் இருந்து விடுவிக்க போராடிக்கொண்டே அவன் பின்னே செல்ல

அதற்குள் அங்கு வந்த மணியம்மை புகழ் பூரணியை இழுத்து செல்வதையும் அழகனோ அவர்கள் செல்லும் திசையே பார்த்து கொண்டிருப்பதையும் பார்த்தவர் ஏதோ நடந்திருகிறது என உள்ளுணர்வு சொல்ல வேகமாக அவர்களை நோக்கி சென்றார். அப்போது மாணிக்கமோ திருமண சடங்கில் நின்று கொண்டு இருந்தார்.

அதற்குள் அழகன் அவரிடம் வந்து “எண்ணத்தை ஏன் புகழ் அண்ணா இப்படி பண்றாங்க....பூரணி என்கிட்டே ஏதோ சொல்ல வந்தா...சொல்ல விடாம இழுத்திட்டு போறாங்க” என கேட்கவும்

மணியம்மையோ “அடகடவுளே இந்த புள்ளைக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு.....கண்ணாலத்துல வந்து என்ன காரியம் பண்ணிருக்கா” என மனதிற்குள் புலம்பியவர் “அது தெரியலை தம்பி ...நான் என்னனு பார்கிறேன்...நீங்க மணமேடைக்கு போங்க” என்றவாறு புகழ் சென்ற திசை நோக்கி சென்றார் அவர்.

அதற்குள் புகழ் பூரணியை மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வந்தவன் “பூரணி நீ என்ன காரியம் பண்ற.....எதா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்... முதல்ல இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்றதா நிறுத்தரியா” என அவன் கோபமாக கேட்கவும் அவளோ அவன் கைகளில் இருந்து வேகமாக தன் கைகளை பிரித்தவள் அவனிடம் இருந்து தள்ளி சென்று அவனை முறைக்க அதற்குள் அங்கு வந்த மணியம்மை “ஏய் பூரணி என்னடி இது.......உனக்கு என்னாச்சு ...நல்லாதானே இருந்தே” என கேட்டுகொண்டே அவள் அருகில் வரவும்

பூரணியோ பதில் சொல்லாமல் கண்களை மூடி மூச்சை இருமுறை இழுத்து விட்டவள் பின்னர் “அம்மா எனக்கு தலை வலிக்குது...நம்ம வீட்டிற்கு போகணும் வாங்க” என்றாள்.

“ என்னடி உளற.........இப்போ எங்கடி போறது...கண்ணாலம் முடிஞ்சு நேரா நம்ம வீட்டுக்கு போகலாம்..... நல்லாதான பேசிட்டு இருந்த......அதுக்குள்ள என்ன வந்திச்சு....சரி சரி இப்போவேனா உனக்கு மாத்திரை வாங்கியாற சொல்றேன்போட்டுக்கோ....முகூர்த்தம் முடிஞ்சா உடனே கிளம்பிடலாம்.” என அவர் சொல்லவும்

“அம்மாஆஆஆஅ!!!!! என பல்லை கடித்தவள் “இப்போ நான் வீட்டுக்கு போகணும் ...நீங்க வரீங்களா இல்லயா” என கேட்கவும்

அவள் முகத்தில் தெரிந்த கோபம்,புகழின் அமைதி இவை எல்லாம் கவனித்த மணியம்மை “சரி இரு உன்ற அப்பாகிட்ட சொல்லிட்டு வந்திடறேன்” என அவர் உள்ளே செல்ல திரும்ப

“அதெல்லாம் போன் பண்ணி சொல்லிடலாம்......இப்போ நீங்க வரீங்களா நான் போகட்டுமா” என கேட்டுகொண்டே அவள் முன்னே நடக்க

“இருடி நானும் வரேன் என்றவர் புகழு நீயும் வாப்பா” என அவனையும் அழைத்தார்.

பூரணியோ திரும்பி தன் தாயை முறைத்தவள் “நான் உன்னை மட்டும் தான் கூப்பிட்டேன்” என அவள் சொல்ல மணியம்மையோ குழப்பத்துடன் புகழை திரும்பி பார்க்க அவனோ “நீங்க போங்க அத்தை...நான் மாமாவுக்கு தகவல் சொல்லிட்டு வந்திடறேன்” என சொல்லி கொண்டு இருப்பதற்குள் அவர்களின் காரில் ஏறிவிட்டாள் பூரணி.

மணியம்மையும் வேகமாக சென்று ஏறிக்கொள்ள கார் வெள்ளியம்பாலயம் நோக்கி சென்றது.இங்கு புகழ் நடராஜ் ஐயாவிடம் பூரணிக்கு தலைவலி அதனால் வீட்டிற்கு சென்றுவிட்டு காலையில் வருவதாக மாமாவிடம் சொல்லிவிடுங்கள் என தகவல் சொல்லிவிட்டு அவர்களை காரில் பின் தொடர்ந்தான்.

காரில் மணியம்மையின் மடியில் அவள் படுத்து கொள்ள அதை பார்த்ததும் பதபதைத்த தாயின் மனம் “பூரணி கண்ணு என்னடா பண்ணுது...நல்லா தான இருந்த......உனக்கும் உன்ற மச்சானுக்கும் ஏதாவது பிரச்சனயா......சந்தோஷமாதான பேசிட்டு போன ...அதுக்குள்ள என்ன நடந்திச்சு” என கேள்வி மேல் கேள்வி கேட்க பூரணியோ வாய் திறக்க வில்லை.அதற்குள் வீடு வந்துவிட இவர்கள் இறங்குவதற்குள் புகழும் வந்து சேர்ந்தான்.பூரணி வேகமாக வீட்டிற்குள் செல்ல முயல

“கொஞ்சம் நில்லு பூரணி...கண்ணாலம் முடிஞ்சு இப்பதான் பிறந்த வீட்டுக்கு வர ....தனியா உள்ள வராத மச்சான் கூட சேர்ந்து வா” என மணியம்மை அதட்டவும்

அவளோ திரும்பி அவரை முறைத்தவள் “நான் செத்தாக்கூட உனக்கு உன்ற மருமகன்தான் முக்கியம் இல்லம்மா “ என அவள் கோபமாக வார்த்தைகளை கொட்ட

பூரணிஈஈஈ!!!!!!! என ஒரே நேரத்தில் புகழ், மணியம்மை இருவரும் கத்தவும் அதற்குள் புகழ் “அத்தை அவளே முடியலைன்னு சொல்றா ...விடுங்க போய் ஓய்வு எடுக்கட்டும்....நான் என்ன இந்த வீட்டுக்கு புதுசா.....பழைய ஆள் தான” என்றான். அதற்குள் பூரணி வீட்டிற்குள் சென்று இருந்தாள்.

மணியம்மையோ புகழிடம் வந்தவர் “தப்பா எடுத்துக்காத புகழு........... அவளை பத்தி உனக்கும் தெரியும் தான...... அவங்க அப்பா செல்லம் கொடுத்து ரொம்ப கெடுத்து வச்சிருக்காரு இன்னும் பொறுப்பு இல்லாம சின்னபுள்ள தனமாவே நடந்துகிறா....ஆனா சொன்னா புரிஞ்சுக்குவா புகழு” என அவர் யார் பக்கம் பேசுவது என் புரியாமல் மகளை திட்டுவது போல் பரிஞ்சு பேச

“இருக்கட்டும் அத்தை.....அவ எப்படி இருக்காளோ அப்படியே இருக்கட்டும்....நீங்க ஏன் இதுக்கு போய் கவலைபட்ரிங்க.....நான் இருக்கேன்ல பார்த்துகிறேன்......நீங்க போய் படுங்க” என்றான் அவன்.. சரி என்று நகர்ந்தவர் பின்னர் நின்று “புகழுஊஉ” என இழுத்தபடி அவன் முகத்தை அவர் பார்க்க அவனோ “பெருசா ஏதும் பிரச்சனை இல்லை அத்தை.....சும்மா சின்ன சண்டை அவ்ளோதான்.....எல்லாம் நான் பார்த்துகிறேன்....நீங்க நிம்மதியா போய் தூங்குங்க” என சொல்லவும் அவன் மீது கொண்ட நம்பிக்கையில் மணியம்மையும் வேறு ஏதும் கேட்கவில்லை.

பிறகு இருவரும் வீட்டிற்குள் சென்றவர்கள் “உனக்கு சாப்பிட ஏதாவது செய்யட்டுமா புகழு” என அவர் கேட்கவும்

“இல்லத்தை ஏதும் வேண்டாம் என்றவன் பூரணி ரூம் எது?” என கேட்க

அவரோ “அந்த கடைசி அறைதான்....லைட் கூட போடாம படுத்திட்டா பாரு” என புலம்பவும்

அவன் சிரித்து கொண்டே “நான் பார்த்துகிறேனுங்க அத்தை நீங்க போய் படுங்க” என்றபடி அறையை நோக்கி நடந்தான்.

கதவு திறந்து இருக்க உள்ளே நுழைந்து தாளிடவும் சத்தம் கேட்டு வேகமாக எழுந்தவள் அங்கு புகழை பார்த்ததும் “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க....முதல்ல வெளியே போங்க” என்றாள்.

அவனோ லைட்டை போட்டுவிட்டு “என் பொண்டாட்டி அறைக்குள்ள நான் வராம யாரு வருவா” என கேட்க

“யாருக்கு யார் பொண்டாட்டி.....வேண்டாம் என் கோபத்தை கிளராதீங்க...முதல் இங்க இருந்து வெளிய போங்க..... என் முன்னாடி நிக்காதீங்க” என சொல்லும்போதே ஆத்திரமும் அழுகையும் வர அப்படியே கட்டிலில் அமர்ந்தவள் முழங்கால்களை கட்டிக்கொண்டு குலுங்கி அழ

அப்போது அவள் தலையை ஆதரவாக தடவி கொடுத்தவன் “ஏன் பூரணி இப்படி பண்ற...என்ன நடந்திச்சுன்னு முழுசா கேட்காம வார்த்தைய கொட்ற”....என அவன் சொல்லவும்

உடனே அவள் நிமிர்ந்து “அப்போ நான் காதால் கேட்டது எல்லாம் பொய்யா மச்சான்” என கேட்டவள் பின்னர் வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து அவனை கட்டிலில் அமரவைத்து அவன் கால்களுக்கு அடியில் அரைமண்டியில் அமர்ந்தவள் “சொல்லுங்க மச்சான்...நீ கேட்டது எல்லாம் பொய்...அப்படி ஏதும் நடக்கலை பூரணி ......நடராஜ் தாத்தாகிட்ட அப்புறம் பொண்ணோட அப்பாகிட்ட எல்லாம் நான் பேசவே இல்லை அப்டின்னு சொல்லுங்க மச்சான்...அதெல்லாம் பொய்னு சொல்லுங்க” என அழுதுகொண்டே அவன் பதிலை எதிர்பார்த்து அவன் முகம் பார்த்தவள் அவள் கண்களில் அது பெய் என்று சொல்லுங்கள் என் கெஞ்சுவது போல் இருக்க புகழோ அவள் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.

“மச்சான் சொல்லுங்க நீங்க அப்படி செஞ்சிருக்க மாட்டீங்க...உங்கனால அப்படி எல்லாம் செய்ய முடியாது.....எனக்கு தெரியும் மச்சான்....நான் கஷ்ட்பட்ரமாதிரி உங்கனால எப்பவும் நடந்துக்க முடியாது அதுனால இதெல்லாம் கட்டுகதைனு சொல்லுங்க” என அவள் மீண்டும் கேட்கவும்

அவனோ நிமர்ந்து அவளை பார்த்தவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் “இங்க பாரு குட்டிம்மா உன் மச்சான் மேல உனக்கு நம்பிக்கை இருக்குள்ள...நான் உனக்கு நல்லது தான் செய்வேன்னு நீ நம்பறதான...அப்டினா நான் எது செஞ்சாலும் நம்ம நல்லாதுக்குதான செய்வேன்” என அவன் ஒவொவொரு வார்த்தையாக அழுத்தமாக சொல்ல

அவளோ “அதை விடுங்க மச்சான்......நான் காதால கேட்டது பொய்னு சொல்லுங்க மச்சான்......பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க சொல்லி நீங்க தான் சொன்னீங்களா ...நீங்க சொல்லி தான் தாத்தா என்னை உங்களுக்கு கேட்டாரா ? அப்புறம் அவங்க எல்லாம் என்னை கேவலமா பேசினது என அந்த வார்த்தைகளை சொல்லும்போதே அவள் முகம் ஆத்திரத்தில் துடிக்க அதெல்லாம் இல்லதான” என கேட்கும்போதே அவள் மனதின் வலி முகத்தில் தெரிய

அதை பார்த்ததும் அவன் மனம் துடித்து போக “உன்னை கண்ணாலம் பண்ணறதுக்கு எனக்கு வேற வழி தெரியலை பூரணி...அதுனால நான் இப்படி பண்ணினேன்...ஆனா ” என அவன் சொல்லி முடிக்கும் முன் பளார்!!!!!!!!! என்ற சத்தம் கேட்க பூரணியின் விரல்கள் புகழின் கன்னத்தில் இருந்தது.அவன் கட்டிலில் அமர்ந்திருந்தால் அவள் கீழே அமர்ந்திருந்தவள் எழுந்து ஆத்திரத்தில் அவனை அறைந்தவள் முகம் கோபத்தில் சிவந்து அக்னிகுண்டமாக ஜொலிக்க ஆத்திரத்தில் உதடுகள் துடிக்க, நரம்புகள் புடைக்க அவனது சட்டை காலரை பிடித்தவள் “என்னடா சொன்ன......அப்போ அழகன் மச்சானோட என்னோட கண்ணாலம் நின்னு போனதுக்கு நீதான் காரணமமா.....அப்புறம் ஊர்ல எல்லாம் என்னை கேவலமா பேசினதுக்கும் நீதான் காரணமா...ஆக என் மனசில ஆறாத ரணத்தை ஏற்படுத்தினது நீதானா என கர்ஜித்தபடி காளி அவதாரமாக அவன் முன்னே அவள் நிற்க அதை பார்த்ததும் ஆடிபோனான் புகழ்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
கோபம் வந்தாள் படபடவென பேசுவாள்......மற்றபடி பெரிதாக ஏதும் இருக்காது.சிறுபிள்ளை போல அவளது செய்கைகளை பார்த்து பழக்கபட்டவன் இப்போதோ அவளது இந்த கோபமும் ஆங்காரமும் அவனது மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது.பூரணி என்ற அவனது அழகு தேவதை இப்போதோ அவன் உயிரை காவு வாங்கும் அரக்கி போல் நின்று கொண்டு இருந்தாள்.

உடனே “அப்படி சொல்லாத பூரணி......எனக்கு வேற வழியில்லாம அப்படி செஞ்சிட்டேன் என அவன் வேகமாக அதை மறுத்தவன் ........இங்க பாரு பூரணி கொஞ்சம் நான் சொல்றத கேளு...என் நிலமையில இருந்து யோசிச்சு பாரு.”நீ என்னை எத்தனை அடிவேனாலும் அடிச்சுக்கோ...திட்டிக்கோ ஆனா என் பக்கம் இருக்க நியாத்தையும் கேளு பூரணி” என அவன் மீண்டும் மன்றாட

அவளோ “என்ன கேட்க சொல்றிங்க மச்சான்...உங்களை நான் கும்பிடற சாமிக்கு மேல நம்பினனே........இப்படி மோசம் பண்ணீட்டீங்களே...எல்லாம் முடிஞ்சு போச்சு.....” என சொல்லிகொண்டே அந்த அறையின் ஒரு மூலையில் சென்று அப்படியே கண் மூடி அமர்ந்தாள்.உதடுகளோ “இப்படி பண்ணிட்டீங்கலே.....உங்களோ நம்பினனே” என சொல்லிகொண்டே இருந்தன..

அதை கேட்க கேட்க புகழோ மனதளவில் நொறுங்கி போனான்.பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்தான்.ஆனால் பூரணி இந்த அளவு உடைந்து போவாள் என்று அவன் நினைக்க வில்லை. அதற்குள் அவள் தன்னை புரிந்து கொள்வாள் என் நினைத்து இருந்தான். ஆனால் அவளது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தின் வேதனயும் ,கண்களில் தெரிந்த வலியும் அவனை நிலைகுலைய வைத்தது. சில நிமிடங்களில் அவள் முகத்தில் கண்ணீரை ஒரு கை துடைக்கவும் கண்களை திறந்தவள் அதில் தெரிந்த உக்கிரத்தில் புகழ் இரண்டு அடி பின்வாங்கினான்..”வேண்டாம் பூரணி என்னை அப்படி பார்க்காத ...... என்னால தாங்க முடியலடி ....எந்த தப்பான எண்ணத்தோடவும் நான் அப்படி செய்யலை” என கெஞ்சினான்.

அவளோ “வேற எந்த எண்ணம் மச்சான்.....எனக்கும் அழகன் மாமாவுக்கு கண்ணாலம் பேசி இருக்காங்கனு தெரிஞ்சும் நீங்க போய் பொண்ணு வீட்ல இந்த மாதிரி பேசி இருக்கீங்கனா அப்போ என்ன அர்த்தம்.....எனக்கு நடக்கிற கண்ணாலத்தை நிறுத்தனும்...நான் அவமான பட்டு நிக்கணும்...அசிங்கப்பட்டு நிக்கணும்...அப்போ நீங்க எனக்கு வந்து வாழக்கை பிச்சை போடுவிங்க...ஊர்ல உங்களை எல்லாரும் நல்லவன்னு சொல்வாங்க...அதுக்குதான ஆசைபட்டீங்க”......என அவள் வார்தைகளை அனலாக கொட்டினாள்.

“வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாத பூரணி......நான் அப்படி எல்லாம் நினச்சு ஏதும் செய்யலடி........எல்லாமே நம்ம கல்யாணம் நடக்னும்னு நினைச்சு செஞ்சது தான்” என அவன் மீண்டும் சொல்ல

“பொய் சொல்லாதீங்க மச்சான்...எங்க அப்பாவ பழிவாங்க...என்னை பழிவாங்க நீங்க நினைசீங்க...நீங்க என்னை நேசிக்கல...என் உடம்புதான் உங்களுக்கு தேவைப்பட்டது அதான் இந்த மாதிரி பண்ணிருக்கீங்க” என அவள் கோபத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேச

பூரணிஈஈ!!!!!!!! கர்ஜித்தவன் “இங்க பாரு என அவள் முகத்தை நிமிர்த்தியவன் என் முகத்தை பாரு .... என்ன வார்த்தைடி சொல்லிட்ட......எப்படி பூரணி இப்படி சொல்ல உனக்கு மனசு வந்தது.........உண்மைய சொல்லுடி.....என்னோட காதல்ல நீ களங்கத்தை பார்த்தியா...சொல்லு பூரணி..சொல்லு.....என்னை திட்றதா நினச்சு என் நேசத்தை அசிங்கபடுத்தாத பூரணி” என வலியோடு சொல்ல

“தப்பு செஞ்சிட்டு அதை நியாயபடுத்தாதீங்க மச்சான்......நீங்க ஒரு அயோக்கியன்....நம்பிக்கை துரோகி ...உங்களை என்னால மன்னிக்கவே முடியாது மச்சான்” என அவள் சொல்லும்போதே ஆத்திரத்தில் நரம்புகள் துடிக்க

“தப்பு தப்ப தப்புனு சொல்றியே அப்படி என்னடி தப்பு செஞ்சேன் நானு” என அவள் தோள்களை பிடித்து உலுக்கியவன்...உன் மேல ஆசைபட்ட்டது தப்பா?.... உன்னையே உசிரா நினைச்சுட்டு இருந்தனே அது தப்பா ?இல்லை உனக்காக எங்க அம்மா தம்பி எல்லாரையும் ஏமாத்தி உன்னை கண்ணாலம் பண்ணது தப்பா....எதுடி தப்புங்கிற” என கேட்டான்.

அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க

உடனே அவளின் மீது இருந்த பிடியை தளர்த்தியவன் கொஞ்சம் அமைதியாக “நான் சொல்றத நம்புடி.....இங்க பாரு பூரணி நான் அன்னைக்கு மல்லிகை தோட்டத்துல சொன்னது அத்தனையும் உண்மை......சின்ன வயசில இருந்தே நீ தான் என் பொண்டாட்டின்னு நினைச்சே வளர்ந்திட்டேண்டி...உனக்கு தெரியுமா...இதுவரைக்கும் வேற எந்த பொண்ணையும் நான் நினைச்சு கூட பார்த்தது இல்லை. எனக்கு எல்லாமே நீ தான்.....எனக்குன்னு எது வாங்கினாலும் உனக்கும் சேர்த்து தான் வாங்குவேன்........வீட்ல வடக்கால இருக்க அறையை திறந்து பாரு...அதுல எல்லாம் இருக்கும். நீ வேற நான் வேறனு நான் பிரிச்சு பார்த்ததே இல்லடி....... படிக்கிற வயசில மமட்டிய எடுத்தது எதுக்காக.......எங்க அம்மாவுக்காக அப்டினாலும் உனக்காகவும் சேர்த்து தான்டி.......உன் மேல நான் உசிரே வச்சிருந்தேன்..... உனக்கும் என்மேல அன்பு இருக்கும்னு நினச்சேன் பூரணி. ஆனா அது இல்லைன்னு உன் சடங்கு அப்போ தெரிஞ்சுகிட்டேன். நானும் மாற முயற்சி பண்ணேன்....என்னோட மனச என்னால மாத்திக்க முடியலை பூரணி.....உன்னை பார்க்கிறதுக்காகவே அடிகடி உங்க ஊருக்கு வருவேன் தெரியுமா?அப்டிதான் நீ கள்ளு குடிச்சுட்டு இருக்கும்போது ,மல்லிகைபூ பறிக்கும்போது எல்லாம் என்கிட்டே மாட்டின......உங்க அப்பத்தா திட்னதுல இருந்து உங்க அப்பாவ விட சொத்து அதிகம் சேர்த்திட்டு உன்னை வந்து பொண்ணு கேட்கனும்னு நினச்சேன்.நேரம் காலம் பார்க்காம கடுமையா உழைச்சேன்.... அந்த நேரத்துல தான் அழகனுக்கும் உனக்கும் கல்யாண பேச்சு இருக்குனு எனக்கு தகவல் வந்துச்சு” என சொல்லி நிறுத்தியவன்

அவளிடம் இருந்து விலகி கட்டிலின் அருகே அமர்ந்தவன் “நீ இப்போ வலிக்குதுன்னு சொல்ரில அதைவிட பல மடங்கு அப்போ எனக்கு வலிச்சுதுடி.என் மனசுக்குள்ள பொண்டாட்டியா நான் உன் கூட வாழ்ந்திட்டு இருக்கேன்...ஆனா நீ வேற யாருக்கோ நிஜமான பொண்டாட்டியா போகபோற.......நினைக்கும்போதே செத்திடலாம்னு தோனுச்சு தெரியுமா என சொல்லும்போதே அவன் வேதனையின் வலி குரலில் தெரிய அப்பவும் நான் மனசுவிட்டு யார்கிட்டையும் சொல்லலை. ஒரு பத்து நாள் இருந்து பார்த்தேன் பூரணி என்னால முடியலை......நான் வாழனமுனா நீ வேணும்...இல்ல நான் சாகனும் இது மட்டுமே என் மனசு சொல்லுச்சு.நீ இல்லாத வாழ்க்கை நினைச்சே பார்க்க முடியலை பூரணி.இந்த குழப்பத்துல இருந்தப்பதான் ராசு சித்தப்பா இப்போ அழகன் கண்ணாலம் பண்ற பொண்ணுக்கு என்னோட ஜாதகத்தை கொடுக்கிறதா சொன்னாரு.அப்பத்தான் எனக்கு இந்த எண்ணமே வந்திச்சு.ஒரு பக்கம் நான் செய்யறது தப்புன்னு தெரிஞ்சாலும் எனக்கு நீ வேணும்.... வேற வழி தெரியலை.அதனால துணிஞ்சு இறங்கிட்டேன்.ஆனா அழகனோட அப்பா உங்க அப்பாவ இப்படி அவ்மானபடுத்துவாருனு நான் நினைக்கலை.சரி கண்ணாலம் நின்றுச்சு...எப்படியும் மறுபடியும் மறு கல்யாணம் பேச ஒரு வருஷம் ஆகும் அதுக்குள்ள நம்ம தயராகிக்கலாம்னு நினச்சிட்டு இருந்தப்ப நடராஜ் அய்யா குறுக்க வந்திட்டார். அப்புறம் செல்வத்தை வச்சு பேசி அவரை சரி பண்ணேன்.....மாணிக்கம் கண்டிப்பா உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டாருனு அவர் தான் உறுதியா சொன்னாரு.........நானும் யோசிச்சேன்.........இதை விட்டா இனி உன்னை கண்ணாலம் பன்றது சிரமம் அப்டின்னு நினைச்சுதான் அப்படி செஞ்சேன்” என சொல்லி அவள் முகம் பார்க்க

அவளோ “அதாவது என்னை பத்தி கேவலமா,மோசமா பேச நீங்களே ஆள் ஏற்பாடு செஞ்சிங்க” என அவள் ஆத்திரத்துடன் கேட்க

“அது தப்புன்னு தெரியும் பூரணி... அது கடைசி முயற்சி தான் பூரணி......நீயே யோசிச்சு பாரு இவ்ளோ பிரச்சனை நடந்தப்பவும் மாமா வேற மாப்பிள்ளை தான் யோசிச்சாரே தவிர என்னை பத்தி நினைக்கவே இல்லே..... ஏன் அத்தை கூட என்னை நினைக்கலை.........அப்டினா என் மேல அவருக்கு எவ்ளோ கோபம் இருந்திருக்கணும்...அந்த சமயத்தில நான் வந்து பொண்ணு கேட்டா அவரு கொடுப்பாரா.....கண்டிப்பா சம்மதிக்க மாட்டார். ரோஷப்பட்டு வேற பக்கம் ஏற்பாடு செஞ்சிடுவாரு..... அதான் தப்புன்னு தெரிஞ்சும் இந்த முடிவு எடுத்தேன்...... இப்படி செஞ்சா அவர் டென்சன் ஆகிடுவாரு...... அவருக்கு கௌரவம் ரொம்ப முக்கியம்.....அதனால சரின்னு சொல்லிடுவாருனு எனக்கும் தெரியும்......அப்பவும் உனக்கு சம்மதாம்னு கேட்டுதான் நான் முடிவு பண்ணேன்....அதனால தான் ஒரு வாரத்தில கல்யாணத்தை வச்சேன்......” என நடந்ததை அவன் விளக்கமாக சொல்ல அவளோ ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“என்ன பூரணி இப்போ உன்ற மச்சான் பக்கம் இருக்க நியாயம் உனக்கு புரியுதா? இதுல எங்க வீட்ல வேற எனக்கு எவ்ளோ எதிர்ப்பு தெரியுமா? பாண்டியும் அம்மாவும் ஒத்துக்கவே இல்லை....அப்புறம் ராசு சித்தபாவ வச்சு அம்மாவை சரிகட்டி பாண்டியை நானே செலவு பண்ணி கேவா அனுப்பி வச்சு எல்லா பக்கமும் சமாளிச்சேண்டி....இதெல்லாம் எதுக்காக.....உனக்காக மட்டும் தாண்டி......உன்மேல வச்சிருக்க காதலுக்காக மட்டும் தாண்டி” என அவன் உணர்ச்சி ததும்ப சொல்ல அவளோ முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவனை பார்த்து கொண்டி இருந்தாள்.

“பார்த்தியா உன்னால இப்ப ஏதும் முடியலை...எனக்கு தெரியும் பூரணி...நீ என்னை புரிஞ்சுக்குவேணு......சரி விடு....எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு......என் மனசுக்குள்ள அழுத்திக்கிட்டு இருந்த பாரமும் நான் இறக்கி வச்சுட்டேன்...என ஆசுவாசபெருமூச்சுவிட்டவன் என்ன பூரணி எதுவுமே பேசமாட்டேன்கிற” என சாதரணமாக கேட்கவும்

“நான் அழகன் மச்சானை காதலிச்சிருந்தா நீங்க என்ன பண்ணிருந்திருப்பீங்க” என அவனை ஆழ்ந்து நோக்கியவாறு அடுத்த குண்டை போட

பூரணிஈஈஈஈ!!!!!!!!! என அவன் அதிர

“சொல்லுங்க மச்சான்......நீங்க என்னை நேசிச்சேன் நேசிச்சேன்னு சொன்னீங்களே ...அந்த மாதிரி நான் அழகன் மச்சானை நேசிச்சிருந்தா இப்போ நீங்க செஞ்ச காரியத்துக்கு அர்த்தம் என்னனு தெரியுமா ?” என கேள்வியுடன் அவனை பார்க்க

அவன் முகத்தில் இருந்த சிறு சந்தோஷமும் மறைந்து முக இருள வேகமாக எழுந்து அருகில் வந்தவன் “இப்படி எல்லாம் பேசாத பூரணி...நீ ..நீ வந்து அழகனை நேசிக்கவே இல்லை......என்னை ஏமாத்த நீ அப்டி சொல்ற..நீ தான் அப்போ சொன்னீல .....அவர் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாரு ... அதனால நானும் சரின்னு சொல்லிட்டேன்னு” என அவன் படபடவென பேசவும்

“சமாளிக்காதிங்க மச்சான்......நான் அழகன் மச்சானை விரும்பி இருந்தா நீங்க செஞ்சிருக்க காரியத்தோட விளைவு என்னனு நினச்சு பார்த்தீங்களா”?......உங்களை என்னால மன்னிக்கவே முடியாது மச்சான்” என அவள் உறுதியாக சொன்னாள்.

“இல்லை பூரணி நீ அழகனை விரும்பலை...விரும்பி இருந்தா என்னை கண்ணாலம் பண்றதுக்கு நீ ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்ட” என அவனும் வேகமாக சொன்னான்.

“எங்க மச்சான் நீங்க தான் யாரையும் யோசிக்கவே விடலையே......நீங்க நினைச்சுது நடக்கணும்னு தானே எல்லாம் செஞ்சிங்க....இப்போ நான் சொல்றேன் நான் அழகன் மச்சானை விரும்பினேன்” என அவள் ஆத்திரத்துடன் சொல்ல

அவனோ அவளை தீர்க்கமாக பார்த்தவன் “எனக்கு பூரணி வேணும்.....அவ எப்படி இருந்தாலும் பரவாயில்லை.....என்கிட்டே வந்ததுக்கு அப்புறம் அவளை என்னவளா மாத்த என்னால முடியும்....என் காதலுக்கு அந்த சக்தி இருக்கு” என அவன் அழுத்தமாக சொன்னான்.

அவளோ அவனை கேவேலமான ஒரு பார்வை பார்த்தவள் “திமிரு...ஆணவம்” என அடிதொண்டையில் சொல்ல

அவனோ “இல்லடி என் காதல் மேல நான் வச்சிருக்க நம்பிக்கை.....அது என் உசிரோட கலந்தது.....என்னை ஏமாத்தாது” என கர்வத்தோடு சொன்னவன் பின்னர் “என்னை நீ தப்பானவனா பார்க்காத பூரணி.....என் பக்கம் இருக்க நியாயத்தையும் பாரு...என் உசிரே நீதாண்டி ... என் நிலைமை உனக்கு புரியலையா என ஏக்கமாக கேட்க

அவளோ “யாரு நீங்க என்னை.......” என அலட்சிய பார்வை பார்த்தவள் நானும் உங்களை நம்பினேன் மச்சான்......ரொம்ப நல்லவர்...இளகின மனசு...எனக்காக உசிரையும் கொடுப்பிங்கனு...... ஆனா எப்போ என்னை பத்தியே கேவலமா பேச நீங்க ஆள் தயார் பண்ணிங்கன்னு தெரிஞ்சுதோ அப்பவே உங்க பூரணி மனசளவுல செத்திட்டா மச்சான்.......இந்த பூரணி பொணம் தான்.....” .....என்றவாறு அப்படியே சுவற்றில் சாய

வேகமாக அவள் அருகில் வந்து அவள் கைகளை பிடித்தவன் “ஐயோ அப்படி எல்லாம் சொல்லாத பூரணி..... என்னை மன்னிச்சுடு பூரணி...எனக்கு அந்த நேரத்தில வேற வழி தெரியாம தான் அப்படி” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கண்களை திறந்து அவனை பார்த்தவள்

“உங்க நிலைமை,உங்க காதல் அப்டின்னு மட்டும் பார்த்து இருக்கீங்களா .....என் நிலைமையை யோசிச்சிங்களா”... நான் என்ன தப்பு செஞ்சேன் மச்சான்..... கவலை இல்லாம சுத்திட்டு இருந்தேன்........அழகன் மச்சானும் வந்து கண்ணாலம் பண்றேன்னு சொல்லிட்டு கண்டுக்காம போயிட்டாரு.....அவங்க அப்பா எங்க அப்பாவ அவமானபடுத்தி அனுப்பிட்டாறு....இதுவே எனக்கு பெரிய தண்டனை...இதுல நான் துடிச்சிட்டு இருகிறப்ப நீங்க ஏற்பாடு செஞ்ச ஆட்களும் என்னை கேவலமா பேசினப்ப ஐயோ அந்த சமயத்துல நான் பட்ட வேதனை” என சொல்லும்போதே அவள் உடல் நடுங்க வேகமாக அவன் கைகளை உதறியவள் “நீங்க முதல்ல இங்க இருந்து போங்க...உங்க முகத்தை பார்க்கவே பிடிக்களை....நீங்க ஒரு கேவலமான மனுஷன்.....ஏன் மச்சான் நான் பொண்ணா இருக்கிறதால தான இப்படி தரகுறைவா பேசவச்சு உங்க காரியத்தை சாதிச்சுகிட்டிங்க...என்னை உண்மையா நேசிச்சவரா இருந்தா கண்டிப்பா இந்த காரியத்தை பண்ணிருக்க மாட்டாங்க.....உங்களுக்கு ஆணவம் ,பிடிவாதம்,திமிரு நீங்க நினைச்சுது நடக்கணும்...அதுக்காக என்ன வேணாலும் செய்விங்க” என அவள் கோபத்தில் பேசிகொண்டே செல்ல

“அப்படி சொல்லாத பூரணி.....நான் செஞ்சது இந்த அளவுக்கு உன்னை பாதிக்கும்னு நினைக்கலை....எப்படியும் நீ என் பொண்டாட்டி ஆகிடுவ.....எனக்குதான் நடந்தது தெரியுமே அதனால எந்த பாதிப்பும் வராதுன்னு நினைச்சேன்” என அவன் தான் நினைத்ததை சொல்லவும்

“உங்களை மட்டுமே வச்சு யோச்சிருக்கீங்க......என்னை ஒரு மனுசியா கூட நினைக்கலை என்றவள் போதும் மச்சான் இனியும் இத பத்தி பேச வேண்டாம்.....நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சு.....என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்றவாறு அவனிடம் இருந்து அவள் விலகி செல்ல

“எங்க போற பூரணி...நீ இங்க படு” என அவன் சொல்லவும் அவனை திரும்பி முறைத்தவள் “இது என் வீடு” என அழுத்தமாக சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

புகழோ என்ன செய்வது என் தெரியாமல் குழம்பி போய் அமர்ந்திருந்தான்.

மறுநாள் காலை கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தவன் கட்டிலின் அருகே அமர்ந்தபடி கண் அயர்ந்தது தெரிய ...எப்போ தூங்கினோம்...பூரணி வந்தாளா என நினைத்தபடியே கதவை திறந்தவன் எதிரில் மணியம்மை நிற்க “என்ன புகழு நல்லா தூக்கமா சரி சரி சீக்கிரம் குளிச்சிட்டு வாப்பா ...கண்ணாலத்துக்கு நேரமாச்சு” என சொல்லிவிட்டு நகர்ந்தார்.

“அத்தை பூரணி” என அவன் இழுக்க

“அவளுக்கு ரொம்ப முடியலைனு என்கூட வந்து படுத்துகிட்டா.....இனிதான் அவளை எழுப்பனும்” என சொல்லியபடி தனது அறையை நோக்கி சென்றார்.

.புகழு கிளம்பி நிற்க தானும் தயராகி அங்கு வந்த மணியம்மை ...”புகழு பூரணி எழுந்தரிக்கவே மாட்டேன்கிறா... என்ன பண்ணலாம்” என கேட்கவும்

இதோ என ஒரு அடி எடுத்து வைத்தவன் “வேண்டாம் புகழு.....அவள் இப்போ உன் பழைய பூரணி கிடையாது.....காளி அவதாரத்துல இருக்கிரா.....நீ உள்ள போய் அத்தை முன்னாடி ஏதாவது உளறுனா அப்புறம் உன் நிலைமை அவ்ளோதான்” என அவன் மனம் எச்சரிக்கை செய்ய

“சரி விடுங்க அத்தை ...நம்ம போகலாம் ...அவ தூங்கட்டும்” என்றான் அவன்..

“இவ எப்பவும் இப்படிதான்” என புலம்பிகொண்டே “இரு வீட்டு கதவையாவது சாத்திட்டு படுக்க சொல்றேன்” என்றபடி உள்ளே சென்றவர சில வினாடிகளில் பூரணி தள்ளாடியபடியே அரை தூக்கத்தில் எழுந்து வர

“வீட்டை நல்லா சாத்தி தொறப்பு போட்டுக்கோ பூரணி “ என்றபடி அவள் பின்னே வந்த மணியம்மை இரண்டு படி கீழே இறங்க அம்மாஆஆஆ என அழைத்தபடி பூரணி சரிந்து விழவும் சரியாக இருந்தது.

பூரணி ஈ!!!! என கத்தியபடி மணியம்மை அவளை தாங்கி பிடித்தவர் புகலூஊஉ என கத்தவும் காரின் அருகில் நின்று இருந்தவன் திரும்பபி பார்க்க அங்கு மணியம்மையின் மடியில் பூரணி கிடந்தாள்.

பூரணிஈ என்றபடி அருகில் சென்றவன் அவரிடம் இருந்து தனது மனைவியை இழுத்து தன் மடியில் கிடத்தியவன் “ பூரணி..பூரணி ...கண்ணை திற ...கண்ணை திறந்து பாருடி” என அவள் கன்னங்களை தட்டவும் பாதி கண் விழிக்க மீண்டும் மூடிகொண்டாள்.


அதற்குள் அவர்கள் வீட்டிற்கு பால் கொண்டுவரும் ஒரு பெரிய அம்மா அங்கு வர

வாசலில் இவர்களை பார்த்ததும் “என்னாச்சு மணியம்மை” என பதட்டத்துடன் கேட்க

“தெரியலை பெரியத்தை......திடிர்னு மயங்கி விழுந்திட்டா” என சொல்லவும் அவர் நாடி பிடித்து பார்த்தவர் பின்னர் “எல்லாம் நல்ல சேதி தான் மணியம்மை.....உன் மக உண்டாகி இருக்கா...சீக்கிரம் பேரனோ பேத்தியோ பெத்து கொடுக்க போறா” என்றார்.

ஒரு நிமிடம் மணியம்மையும் புகழுக்கும் எதுவும் புரியவில்லை.....பின்னர் மணியம்மை தான் சுதாரித்து “ எண்ணத்தை சொல்றிங்க நெசம்தானுங்காலா” என அவள் மீண்டும் கேட்க

“இது என்னடி வம்பா இருக்கு....உன்ற மாமியாருக்கு பிரசவம் பார்த்ததே நான் தான்...முகத்தை பார்த்தே கரு எத்தனை மாசம்னு சொல்லிடுவேன்..எனக்கு தெரியாதா” என சொல்லவும்

“மன்னிச்சுக்குங்க அத்தை .... திடிர்னு மயங்கி விழுந்ததால கேட்டேன்......எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிய நல்ல சேதி சொல்லி இருக்கீங்க இருங்க இனிப்பு எடுத்திட்டு வரேன்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றார் மணியம்மை.

புகழுக்கோ மனதில் இருந்த வலிகள் எல்லாம் பறந்து போக தன் மனைவியை கண்களாலே அள்ளி தழுவியவன் “நீயே ஒரு பாப்பா ...உனக்கு குழந்தையாடி என மனதில் செல்லம் கொஞ்சியவன் அவளை தன் நெஞ்சோடு இருக்க அணைக்க

அதற்குள் அந்த பெரியம்மா புகழை பார்த்து “தம்பி புள்ள ரொம்ப ரொம்ப சோகையா இருக்கு ...நல்லா சத்தான ஆகாரமா கொடுங்க” என சொல்லவும்

சரிங்க என தலை ஆட்டியவன் அதற்குள் அவள் சற்று திரும்பவும் மெதுவாக அமரவைத்தான்.

.அதற்குள் அங்கு வந்த மணியம்மை அவருக்கு இனிப்பை கொடுத்துவிட்டு பூரணியை உள்ளே அழைத்து சென்றவர் அவளை படுக்க வைத்து விட்டு அவள் குடிப்பதற்கு பால் எடுத்து வர சென்றார்.

பால் குடித்ததும் அவள் கொஞ்சம் கண் முழிக்க அவள் முகத்தை கைகளால் வழித்து திருஷ்டி கழித்தவர் “என் வயத்துல பால வார்த்த பூரணி என்றவர் என் தங்கமே” என அவளை கொஞ்ச

அவளோ புரியாமல் அவரை பார்க்கவும்

“நீ உண்டாகி இருக்க பூரணி” என மணியம்மை சந்தோசத்துடன் சொல்லவும் பூரணியோ என்னதூஊஉ என அதிர்ச்சியுடன் புகழை பார்க்க அவனும் அவளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான்.

இதை புகழ் எதிர்பார்த்து இருந்தான்.முதலில் தான் அப்பாவாக போகிறோம் என்ற சந்தோசம் வந்தாலும் இப்போது இருக்கும் மனநிலையில் அவனால் பூரணியை பற்றி எதுவும் கணிக்க முடியவில்லை.அதனால் அமைதியாக இருந்தான்.

ஆனால் மணியம்மையோ மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.இரவு தன் மகளின் முகத்தை பார்த்தவர் மனம் கலங்கி போக என்ன தான் புகழ் தான் பார்த்து கொள்கிறேன் என சொன்னாலும் ஏனோ அவர் பயந்து கொண்டே இருந்தார்.திருமணத்தில் பூரணி செய்த குளறுபடி அவரை மேலும் குழப்பி இருந்தது.இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்னையோ என அவர் நினைவுகள் அலைபாய்ந்து கொண்டிருக்க அனைத்திற்கும் முற்று புள்ளி வைத்தார் போல் அவள் உண்டாகி இருக்கிறாள் என கேட்டதும் அவர் மனம் நிம்மதி அடைந்தது.

அப்போது வீட்டின் அலைபேசி அழைக்க மணியம்மை அங்கிருந்து நகர்ந்ததும் பூரணியோ தடுமாறியபடி எழுந்து அமர முயற்சி செய்யவும்

புகழ் வேகமாக அவள் அருகில் வந்து உதவ அவளோ வெடுகென்று அவன் கைகளை தட்டிவிட்டவள் “நீங்க என்னை தொடாதீங்க.....எனக்கு உடம்பு எல்லாம் தக தகன்னு எரியுது” என எரிச்சாலாக சொல்லவும்

புகழோ அவளையே பார்க்க

“நீங்க நினைச்சுது சாதிச்சிட்டிங்க.....இப்போ புள்ள வேற .....எல்லா பொம்பளைங்களும் புள்ள உண்டானா ரொம்ப சந்தோஷ படுவாங்க ...ஆனா எனக்கு அந்த கொடுப்பினை இல்லை.....ஒரு நம்பிக்கை துரோகியோட புள்ளை என் வயத்துலனு நினைக்கும்போதே அருவருப்பா இருக்கு” என வார்த்தைகளை நெருப்பாக கொட்ட புகழோ ஏதும் பேசாமல் தன் கைகளை இறுக்க மடக்கி கொண்டு கண் மூடி அமைதியாக நின்றான்.

.
கையில் சாப்பாட்டு தட்டோடு மீண்டும் வந்த மணியம்மை அவள் முன் வைத்தவர் “நீ சாப்பிடு பூரணி...நான் உங்க அப்பாகிட்ட இந்த சந்தோஷமான விஷியத்தை சொல்லிட்டு வந்திடறேன் என்றவர் கொஞ்சம் பார்த்துக்கோ புகழு” என்றபடி நகர பூரணியோ சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள்.

“என் மேல இருக்கிற கோபத்தை ஏன் சாப்பாட்டுல காட்ற .... ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்க சாப்பிடு” என அவன் சொல்ல

“என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காதீங்க.....அதை எல்லாம் நம்பி ஏமாந்தது பழைய பூரணி...அவ செத்திட்டா....இப்போ இருக்கிறது உங்களை பத்தி தெளிவா தெரிஞ்ச பூரணி” என அவள் சொல்லவும்

புகழின் கோபம் எல்லை மீறி செல்ல “என்னடி இப்போ என்னடி ..ஆமாம் நான் உன்னை கல்யாணம் பண்ண சில தப்புகளை பண்ணேன்.அது எல்லாத்துக்கும் ஒரே காரணம் நீ தான்...... உன்னை விரும்பினேன்..........நீ எனக்கு மட்டும் தான் பொண்டாட்டியா இருக்கணும்.... நீ என்னை மட்டுமே நேசிக்கனும்னு நினச்சேன்.... என்னை பொருத்தவரைக்கும் நான் செஞ்சது சரி....... காதல்ல நியாயம் அநியாயம்னு ஏதும் இல்லை..... அவங்க அவங்க யோசிக்கிறது தான் நியாயம்.......நீ புரிஞ்சுக்காம பேசறதுக்கு எல்லாம் நான் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது......என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.....அது கண்டிப்பா என்னை உனக்கு புரிய வைக்கும்” என அழுத்தமாக ஒவொவொரு வார்த்தையாக அவன் சொல்ல

ஏகனவே பசி மற்றும் மயக்கத்தின் பிடியில் இருந்தவள் இப்போது புகழின் அடாவடி பேச்சு அவளின் ஆத்திரத்தை உசுப்பிவிட “ஓ இவ பொம்பளை தான...அதுவும் இப்போ புள்ள உண்டாகி இருக்கா...இந்த நேரத்துல வேற வழி இல்லைய்னு நினைச்சுதான இவ்ளோ ஆணவமா பேசறிங்க.....நான் இப்போ சொல்றேன்..... இனி நீங்க யாரோ நான் யாரோ நான் உங்க கூடவாழ மாட்டேன்......இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...முதல்ல நீங்க இங்கிருந்து கிளம்புங்க...என் முகத்துக்கு முன்ன நிக்காதீங்க...இனி என்னை தேடி இங்க வந்தீங்க அப்புறம் என் பொணத்தை தான் பார்ப்பீங்க” அவன் முகத்தை பார்த்து ஆத்திரத்துடன் சொல்ல அவளின் முகம் அவளின் வெறுப்பின் அளவை காட்டவும் ஏதும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான் புகழ்.

அவன் வெளியே வரவும் மணியம்மை எதிரில் வந்தவர் “எங்க புகழு நீ கண்ணாலத்துக்கு போறியா” என கேட்கவும்...அவனோ “ம்ம்ம்ம்” என தலை அசைத்தவன் வேகமாக வண்டியை எடுத்துகொண்டு சென்றுவிட்டான்.

.
காதல் என்று வந்துவிட்டால்
அங்கு வேதங்களும் நெறிகளும்
வீரியம் இழந்து போகின்றன..!!!!
நேசம் வைத்ததற்காக தன்னை
வருத்தி அவளை அடைகிறான் அவன்.
அவளோ கரம்பிடித்த காரணத்தால் மட்டுமே
அவன் மீது காதல் கொண்டு இருக்கிறாள்.
விருட்சமாய் வளர்ந்த காதல்
விளைவுகளை பற்றி யோசிக்காது.
விதையாய் இருக்கும் நேசமோ
இடர்பாட்டில் முட்டி தவிக்கின்றது.
இது புரியாமல் காதல் வேள்வியில்
அவசர கோலமாய் நேச மலரை
மலர சொன்னால்அது எவ்விதம் நடக்கும்?
காதலில் இது சாத்தியம் என்கிறான் அவன்.
நம்பிக்கையே காதல் என்கிறாள் அவள்.
களங்கமில்லா பால்நிலவு என் நேசம்
என்கிறான் அவன்.
அந்த நிறைமதிக்கும் தேய்பிறையாய்
என் மீதான களங்கம் என்கிறாள் அவள்.
வாள் கொண்டு போரிட்டால் வீரம் வெளிப்படும் .

இந்த சொற்போரிலோ நியாயம் கிடைக்குமா??????????????
 

LAmmu

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 6, 2021
Messages
13
Nice
 
Top