- Joined
- Aug 2, 2021
- Messages
- 145
அத்தியாயம் -28
பூரணியோ அப்படியே சிலை போல் நிற்க அதற்குள் மணியம்மை திரும்பி “வாப்பா” என வரவேற்றவர் அவனின் மனைவியையும் “வாம்மா” என சொல்லவும் பரண் மேல் இருந்து பாரி “வாங்க மச்சான்” என வரவேற்க பூரணியோ ஏதும் பேசாமல் நின்று கொண்டு இருந்தாள்.
அதற்குள் மணியம்மை “பூரணி நீ குளிச்சிட்டு வா போ” என சொல்லவும்
அழகனின் மனைவியோ பூரணியையே பார்த்து கொண்டிருக்க
உடனே மணியம்மை “அது வந்தும்மா....ராத்திரி எல்லாம் வாந்தி எடுத்திட்டே இருந்தா...... தூக்கமே இல்லை.... இப்பதான் தூங்கி எழுந்தா ...நீங்க வரதே அவளுக்கு தெரியாது ...அதான்” என அழகனின் மனைவியை பார்த்து சொன்னவர் “பூரணி நீ உள்ள போ” என அவளை அனுப்பிவிட்டு இவர்களை கூடத்திற்கு அழைத்து சென்றார்.
அறைக்குள் சென்ற பூரணி வெளியே வரவே இல்லை.....களைப்பாக இருக்கிறது என சொல்லி அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள்.அழகனின் மனைவி வந்து அவளிடம் பொதுப்படையாக சிறிது நேரம் பேச அதற்குள் அவளுக்கு இரண்டு முறை வாந்தி வர பின்னர் அவளும் சென்றுவிட்டாள்.
அழகனை பார்த்தபிறகு நினைவுகள் எங்கெங்கோ செல்ல சுருண்டு படுத்துவிட்டாள்.அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் “பாரி திறந்து தாண்டி இருக்கு.....அப்புறம் எனக்கு கொஞ்சம் வெந்தண்ணீ எடுத்திட்டு வா” என சொல்லிவிட்டு திரும்பி படுத்து கொண்டாள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு திறக்க “கொண்டு வந்திட்டியா” என கேட்டபடி எழுந்தவள் அங்கு அழகனை பார்த்ததும்.. அதிர்ந்து அப்படியே அமர்ந்திருக்க
“ஏன் பூரணி நான் தண்ணீ கொண்டு வந்தா நீ குடிக்க மாட்டியா?” என அவள் முகத்தை பார்த்தவாறு கேட்கவும்
அவளோ சட்டென்று தலை குனிந்தவள் “அப்படி எல்லாம் இல்லைங்க மச்சான்” என வாய்க்குள் முனக
“என் மேல ரொம்ப கோபமா இருக்கியா...என் முகத்தை பார்த்து பேசகூட உனக்கு பிடிகலையில்ல “ என அவன் நேரிடியாக விஷயத்திற்கு வந்தான்.
உடனே அவள் “உங்க மேல எனக்கு என்ன கோபம்.....அப்படி எல்லாம் ஏதும் இல்லை” என சொல்லும்போதே அவள் குரலில் பிசிறு தட்ட
“இப்போ நான் என்ன சொன்னாலும் அது முடிஞ்சு போன விஷயத்துக்கு பூசி மொலுகிற மாதிரி இருக்கும்.....அதனால நான் அதை பத்தி ஏதும் பேசலை பூரணி” என அவன் சொல்லவும்
அவளோ சட்டேன்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அந்த கண்களில் தெரிந்த உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.இப்போது அவன் தலை குனிந்தான்.
சிறிது நேரம் அமைதி நிலவ “ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என அவள் பேச்சை ஆரம்பிக்கவும்
“எங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன் பூரணி.....இதுல என்னோட தப்பும் இருக்கு...அவர்கிட்ட நான் விபரம் சொல்லிட்டு ஊருக்கு போயிருந்திருக்கணும்.....அப்புறம் உன்கூட போன்ல நான் பேசி இருந்திருக்கணும் இந்த இரண்டும்” என அவன் பேசும்போதே “அப்புறங்க மச்சான் அரசி எல்லாம் நல்லா இருக்கங்களா? வெளிநாட்டுல இருந்து எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க” என சிரித்துகொன்டே பேச்சை மாற்றவும்
அதை எதிர்பார்க்காத அழகன் பதில் சொல்லாமல் சிறிது நேரம் அவளையே உற்று நோக்கியவன் “நீ ரொம்ப மாறிட்ட பூரணி” என்றான்.
அவளோ “ உண்மைதானுங்க மச்சான்.......எல்லாரும் மாறும்போது நானும் மாறித்தானே ஆகணும்......காலத்தோட பள்ளிகூடத்துல இப்போ நானும் மாணவியா சேர்ந்திட்டேன்....படிப்பு தான் ஒழுங்கா படிக்கலை......காலம் சொல்லிகொடுக்கிற இந்த வாழ்க்கை பாடத்தையாவது இனி ஒழுங்கா படிக்கலாம்னு முடிவு பண்ணிடேனுங்க மச்சான்...அதான்...எப்படியும் இதுல பாஸ் பண்ணிருவேன்னு நினைக்கிறேன்” என அவள் உறுதியாக சொல்ல
அந்த வார்த்தைகளில் உள்ள உறுதி அவன் உள்ளத்தை தாக்க ஆனாலும் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என உணர்ந்தவன் “நீ கவலைபடாத பூரணி...இப்பவே நீ பாதி பாஸ் பண்ணிட்ட பூரணி..... நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப உன்ற மாமியார் உன்னை பத்தி எவ்ளோ பெருமையா சொன்னாங்க தெரியுமா என்றவன் அந்த நினைவுகள் நிழல் போல் வர.........திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பூரணியிடம் மன்னிப்பு கேட்கவே புகழ் வீட்டிற்கு வந்தான் அழகன். உள்ளே நுழைந்ததும் அங்கு யாருக்கும் அவனை தெரியாததால் தானே அறிமுகபடுத்தி கொள்ள உடனே பேச்சி “ஓ பூரணி அத்தை கோமதி பையனா நீ” என்றவர் உள்ள வாப்பா என வரவேற்றார். பின்னர் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா என்றவர் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன்ல அதான்பா அடையாளம் தெரியலை” என சொல்லவும்
“பரவாயில்லைங்க பெரியம்மா......எனக்கும் புகழ் அண்ணாவை தான் தெரியும்... மத்தபடி உங்களை எல்லாம் இப்பதான் பார்க்கிறேன் என்றவன் கல்யாண பத்திரிகை வச்சிட்டு போலாம்னு வந்தேன் என்றவன் புகழ் அண்ணா இல்லைங்களா” என வாய் கேட்க கண்களோ வீட்டை நோட்டமிட்டது.
“அடடா தம்பி வயலுக்கு போயிருக்குபா....இனி பொழுது சாயதான் வரும்....பூரணியும் இப்பதான் சாப்பாடு எடுத்திட்டு போச்சு...... என வருதபட்டவர் இருப்பா என்ற சின்ன மவன் வந்த உடனே கூட்டிட்டு வர சொல்றேன்”என்றார்.
பின்னர் “அட இங்க பாரு நான்பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்.....சாப்பாட்டு நேரத்துக்கு வந்திருக்க மருமக இன்னைக்கு மீன் குழம்பும் நண்டு வறுவலும் செஞ்சிருக்கா கொஞ்சம் சாப்பிடுப்பா” என அன்புடன் உபசரிக்கவும்
“இல்லைங்க பெரியம்மா...வரும்போது தான் மாமா வீட்டுல சாப்பிட்டு வந்தேன்....கல்யாண பத்திரிக்கை கொடுத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றான் .
“அதனால என்ன தம்பி வீட்டுக்கு வந்திட்டு சாப்பிடாம போனா எப்படி தம்பி இருங்க இலை அறுத்திட்டு வரேன்” என வேகமாக அவர் வெளியே செல்ல மறுக்க மனம் இல்லாமல் சாப்பிட அமர்ந்தான் அழகன்.உணவின் ருசி பூரணியின் நினைவை அதிக படுத்த ஏனோ மனம் லேசாக வலித்து.
“சாப்பாடு ரொம்ப நல்ல இருக்கு........பூரணி இந்த அளவுக்கு சமையல் வேலை எல்லாம் செய்யுதா” என அவன் ஆச்சிரியத்துடன் கேட்க
“என்னப்பா இப்படி சொல்லிட்ட...அதெல்லாம் நல்லா செய்வா..ஆரம்பத்துல கொஞ்சம் பிடிவாதம் குறும்பு தனம் இருந்தாலும் இப்போ எல்லாம் புரிஞ்சு நடந்துகிறா தம்பி......... பாவம் சின்ன பொண்ணுதானே..... திடீர்னு கண்ணாலாம் நடந்திடுச்சு... அதும் என்ன பண்ணும்....... சூட்டிகையான பொண்ணு......நாங்க குணமும் பண்பும் பொண்ணுகிட்ட இருந்தா போதும்னு நினைச்சோம்.............மத்தவங்க மாதிரி பணமும் பவுசும் படிப்பும் முக்கியம்னு நாங்க நினைக்கலை.......நாங்க நினச்ச மாதிரியே அமஞ்சிடுச்சு........பலாபழத்துல இருக்க சுவையோட அருமை மேல் இருக்க முள்ளை பார்த்து எடை போட கூடாது இல்லை...... என்ன தம்பி நான் சொல்றது சரிதானுங்களே” என சந்தடி சாக்கில் வார்த்தைகளால் அவனுக்கு சவுக்கடி கொடுக்க
“அம்மா அது வந்து...உங்களுக்கு” என அழகன் தயங்கும்போதே “எனக்கு எல்லாம் தெரியும் தம்பி........மகாலக்ஷ்மி எங்க வீட்டுக்கு வரணும்னு இருக்கும்போது அது யாரால மாத்த முடியும்” என அவர் அழுத்தமாக சொல்ல அதுவரை அழகன் நினைத்திருந்த எண்ணங்கள் எல்லாம் பொடிபொடியானது.
அப்போது பாண்டி வர அவனும் பூரணியை பற்றி பெருமையாக சொல்ல அழகனோ வேறு எதுவும் பேசவில்லை..”.எனக்கு நேரமாகிவிட்டது நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
நடந்தை சொன்னவன் “இப்போ உன்கிட்ட உண்மைய சொல்றேன் பூரணி. உன்னோட கண்ணாலம் விபரம் தெரிஞ்சதும் உடனே எங்க அப்பாகிட்ட கேட்டேன். உனக்கு உன் தங்கை வேணுமா? இல்லை அந்த பூரணி வேணுமா? நீயே முடிவு பண்ணிகன்னு சொல்லிட்டார்.எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுனே தெரியலை.....இங்க மாமாகிட்ட பேசறதுக்கும் பயம்.....உடனே கிளம்பி வந்து என் பொண்ணை கண்ணாலம் பண்ணுனு சொன்னாருனா அது எப்படி என்னால முடியும்......இங்க என் தங்கையும் எனக்கு முக்கியம்.சரி கொஞ்ச நாள் பொறுத்து இருப்போம்...யாரோ ஒருத்தர் இரங்கி வருவாங்கன்னு அமைதியா இருந்தேன்” என அவன் சொல்லவும்
பூரணியோ அவனை பார்த்த பார்வையில் அக்னி சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தது.
“புரியுது பூரணி....உன்னோட நிலமை எனக்கு புரியுது...ஆனா என் நிலமையில இருந்து யோசனை பண்ணி பாரு...... எனக்கு யாரு பக்கம் பேசறதுனே தெரியலை........அப்புறம் உனக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சுனு சொன்னாங்க......ரொம்பவே கஷ்டமா இருந்திச்சு...எனக்காக நீ வெயிட் பண்ணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு.....அப்புறம் ஊருக்கு வந்தப்பதான் நடந்தது எல்லாம் சொன்னாங்க.....எங்க அப்பாமேலதான் தப்புன்னு புரிஞ்சுது....மாமாகிட்ட வந்து மன்னிப்பு கேட்டேன்.....அப்புறம் உன்னை தேடி உங்க வீட்டுக்கு வந்தேன்...அங்கு உன் புகுந்த வீட்ல உன்னை பத்தி சொன்னதை கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.எங்க வீட்டுக்கு நீ வந்திருந்தாகூட இந்த அளவுக்கு உன்னை எங்க அம்மா பெருமையா சொல்வாங்களானு எனக்கு தெரியாது.ஆனா உன் புகுந்தவீடே உன்னை மகாலட்சுமியா பார்க்கிறத நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.என்மனசில இருந்த சின்ன உறுத்தலும் மறைஞ்சிருச்சு....நீ கண்டிப்பா சந்தோஷமா இருப்பகிற நம்பிக்கையிலதான் நான் அங்கிருந்து வந்தேன்” என சொல்லி முடித்தவன் “ஆனா அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீ என்னை பார்த்த உடனே அழுதுகிட்டு ஏதோ சொல்ல வந்த...அதுக்குள்ள புகழ் அண்ணா உன்னை கூட்டிட்டு போயிட்டார்.......என்ன பூரணி...என்ன நடந்திச்சு........உனக்கும் அண்ணாவுக்கும் இடையில ஏதாவது பிரச்சனயா?எனக்கு அப்போ இருந்து மனசு உலட்டலாவே இருக்கு...சொல்லு பூரணி...என்ன நடந்திச்சு” என அவன் கேட்கவும்
அவளோ அவனை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்க்க அந்த பார்வையே உன் பிரச்சனை வரும்போதே ஓடி ஒளிந்து கொண்டகோழை நீ...இப்போ என் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வரீயா என்று கேட்பது போல் இருக்க அவள் பார்வையின் வேகத்தை தாங்க முடியாமல் தலை குனிந்தான் அழகன். பின்னர் அவள் “எங்க குடும்ப விஷயத்தில் மூணாவது மனுஷங்க தலையிடறத நான் விரும்பலைங்க மச்சான்” என சொல்லிவிட்டுஅருகில் இருக்கும் படுக்கையை சரி பண்ண அழகனோ உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் அதிர்ந்து போய் நின்றான்.
பூரணிக்கு ஏதோ பிரச்சனை.....உதவலாம் என்ற நோக்கத்தோடுதான் அவன் வந்தான்.ஆனால் நீ மூன்றாவது மனிதன்...உன் வேலையை நீ பார் என அவள் முகத்தில் அடித்தாற்போல் சொல்லவும் எதுவும் பேசாமல் அறையைவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியேறும் வரை அமைதியாக இருந்த பூரணி அவன் சென்றதும் கதவை தாளிட்டு விட்டு அருகில் இருக்கும் புத்தகங்களை,தலயணையை எடுத்து ஆத்திரம் தீரும்வரை அதை சுக்குநூறாக கிளித்தவள் மீண்டும் கதவு தட்டபடும் சத்தம் கேட்டுதான் சுய நினைவிற்கு வந்தாள். உள்ளே வந்த பாரி அவளது அறையின் கோலத்தை பார்த்து “என்னக்கா இது” என அதிர...”அவளோ நீ அம்மாகிட்ட சொல்லிடாத......நான் பார்த்துகிறேன்.....எனக்கு ஒரு டீ கொண்டுவா” என்றவள் பின்னர் தானே அதை சுத்தம் செய்தாள்.
இரவு அனைவரும் சென்றபின் தன் அறைக்கு உறங்க வந்தவள் ஏனோ அன்று என்றுமில்லாத அளவிற்கு புகழின் நினைவு அவளுக்கு வந்தது.அழகனின் பேச்சும் அதற்கு ஒரு காரணம்.தன் மீது கொண்ட காதலுக்காக புகழ் எந்த காரியத்தையும் செய்ய துணிந்தான்.அதே அழகனோ காலத்தின் மீது பழியை போட்டு நமக்கு எது கிடைக்கிறதோ அதை ஏற்றுகொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறான்.அதாவது சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக இருந்தால் மட்டுமே அவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருப்பான்.ஆனால் புகழோ எந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றிகொண்டான்.நீ அவனை வெறுக்கிற...அவன் காதலை சந்தேகபடர என அவள் மனம் அவளை சாட
நான் அவரை வெறுக்கலை....ஆனா அவனோட காதலைதான் என்னால ஏத்துக்க முடியலை......இப்பவும் அழகனை ஒரு நிமிஷத்துல மூணாவது மனுசன்னு சொன்ன என்னால எந்த காலத்திலயும் புகழ் மச்சானை அப்படி சொல்ல முடியாது. ஆனா நம்பிக்கை துரோகத்துல வந்த காதலை எப்படி ஏத்துக்க முடியும் என அவள் மீண்டும் முரண்டு பிடிக்க வாதத்திற்கு மருந்து உண்டு... பிடிவாதத்திற்கு மருந்து இல்லை. என்னமோ செய் உன்னை திருத்த முடியாது என சொல்லிவிட்டு மனம் அமைதியடைய அவளோ யோசனையுடனே கண்மூடினாள்.
ஒருவாரம் செல்ல ஒருநாள் பூரணி கோவிலுக்கு கிளம்ப உடன் பாரியும் வந்து இருந்தாள். இருவரும் சாமி கும்பிட்டு வெளியே வந்தவர்கள் திடீரென “அக்கா உனக்கும் புகழ் மச்சானுக்கும் ஏதும் சண்டையா?” என பாரி கேட்க
குழப்பமாக அவளை பார்த்த பூரணி “ஏண்டி...அதெல்லாம் ஏதும் இல்லை...யாரு சொன்னா” என கோபமாக கேட்க
“இல்லக்கா நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப மச்சான் அடிக்கு ஒருமுறை பூரணி..பூரணினு கூப்பிட்டுகிட்டே இருப்பாரு...இப்போ எப்படி ஒரு மாசமா வந்து பார்க்காமகூட இருக்காரு....அதான் கேட்கிறேன்” என்றாள்.
“அதெல்லாம் ஏதும் இல்லை....நல்லாத்தான் இருக்கோம்.....ஆமா நீ சாமிகிட்ட என்ன வேண்டுன....நல்ல மார்க் எடுக்கணும்னா” என அவள் சிரித்து கொண்டே பேச்சை மாற்றினாள் பூரணி.
உடனே பாரியோ “நம்ம நினைச்சது எல்லாம் எங்கக்கா நடக்குது” என சலிப்புடன் சொல்லவும்
“என்னடி இது கவிதை எழுதற,தத்துவம் பேசற... நானும் கேட்கனும்னு நினச்சேன்...நீ குளிக்க போறேன்னு எஸ்கேப் ஆகிட்ட...என்னடி விஷயம்... உண்மையா சொல்லு” என அவள் கேட்கவும்
இப்போது பாரி தடுமாற பூரணியோ அவளை துருவி கேட்கவும் “அக்கா உங்க வீட்டுக்கு வந்திட்டு திரும்ப வந்தேன்ல...அப்போ பஸ்ல எனக்கு தெரிஞ்ச ரெண்டு பொண்ணுங்களை பார்த்தேன்” என சொல்லி நிறுத்தவும்
“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்” என எரிச்சலாக கேட்டாள்பூரணி.......
அப்போ அப்போ” என அவள் இழுக்கவும்
“என்னடி அப்போ அப்போன்னு...விஷயத்துக்கு வா” என பூரணி முறைக்க
“நான் உள்ள போய் எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட உட்கார்ந்தனா... அப்போ அவ பக்கத்துல இருக்க பொண்ணு அங்க பாருடி அந்த பாண்டி பையன் இங்கும் வந்திட்டான்னு சொன்னா” என சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க
“ஓ எந்த பாண்டி என சாதரணமாக கேட்டவள் பின்னர் எனதூஊஊ நம்ம லொடுக்கு பாண்டியா” என அதிரவும்
மச்சானை அப்படி எல்லாம் சொல்லாதக்கா” என அவள் முறைக்க
“இது என்னடி இது...அவன சொன்னா நீ ஏன் இந்த திருப்பு திருப்பற என்றவள் சரி சொல்லு சொல்லு அப்புறம்” என கதை கேட்கும் ஆவலில் அவளும் கேட்க
“அதுக்குள்ள பஸ் கிளம்பிடுச்சுக்கா......அப்போ அவங்க அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டாங்க...நான் தலைஆட்டினேன்.....உடனே பக்கத்துல இருந்த பொண்ணு “இங்க பாருங்க அவர்கிட்ட சொல்லிவைங்க........என்னோட தோழிய ரொம்ப தொல்லை பண்றார்......எங்க போனாலும் பின்னாடியே வரார்......இதெல்லாம் சரியில்லை.....அப்புறம் நாங்க ஏதாவது செஞ்சோம்னா அசிங்கமா போய்டும்ன்னு சொல்லுச்சுங்க...எனக்கு ஒன்னும் புரியலை...என்ன பன்றாருன்னு கேட்டேன்....அவரு பொன்மலரை லவ் பண்றாராம்...ரொம்ப டார்ச்சர் கொடுக்கிறார்னு அந்த பொண்ணு பொரிஞ்சு தள்ளிடுச்சு” என சோகமாக சொல்லி முடித்தவள் .
“அப்படியா அட பக்கி இந்த ரண்டு கால் பூனை இந்த வேலை எல்லாம் செய்யுதா......அமுக்கநாட்ட இருந்திட்டு என்ன வேலை பண்ணிருக்கான் பாரு...எத்தன முறை பிரியாணி செஞ்சு கொடுத்திருப்பேன்.....என்கிட்டே சொல்லவே இல்ல பாரு” என பூரணி அதற்கு மேல் பொரிந்து தள்ள பாரியோ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
பேசி முடித்துவிட்டு தங்கையை பார்த்தவள் “ஏண்டி பொண்ணு எப்படி ரொம்ப படிச்ச பொண்ணோ...என்னை விட அழகா இருப்பாளோ” என பெண்களுக்கே உரிய பொறமை குணம் சற்று தலைதூக்க அவள் கேள்வி கேட்க பாரியோ பற்களை கடித்தவாரே அது ரொம்ப முக்கியம் என அவளை முறைத்தாள்.
“ஏண்டி முறைக்கிற......சரி சரி உனக்கு அந்த பொண்ண எப்படி தெரியும்....” என கேட்கவும்
“இங்க நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வந்து இருக்குதுக்கா.....அதுவும் பன்னிரண்டாவது தான் படிக்குது.....பஸ்ல பார்த்தா பேசும்.......அம்மாவுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும்” என அவள் சொல்லவும்
“என்னடி சொல்ற...நம்ம தோட்டத்துக்கு வேளைக்கு வந்து இருக்குனா” என பூரணி இழுக்க
“ஆமாக்கா ஏழ்மையான குடும்பம்தான்...ஆனா நல்லா படிக்கும்” என்றாள்.
பூரணியோ அப்படியே சிலை போல் நிற்க அதற்குள் மணியம்மை திரும்பி “வாப்பா” என வரவேற்றவர் அவனின் மனைவியையும் “வாம்மா” என சொல்லவும் பரண் மேல் இருந்து பாரி “வாங்க மச்சான்” என வரவேற்க பூரணியோ ஏதும் பேசாமல் நின்று கொண்டு இருந்தாள்.
அதற்குள் மணியம்மை “பூரணி நீ குளிச்சிட்டு வா போ” என சொல்லவும்
அழகனின் மனைவியோ பூரணியையே பார்த்து கொண்டிருக்க
உடனே மணியம்மை “அது வந்தும்மா....ராத்திரி எல்லாம் வாந்தி எடுத்திட்டே இருந்தா...... தூக்கமே இல்லை.... இப்பதான் தூங்கி எழுந்தா ...நீங்க வரதே அவளுக்கு தெரியாது ...அதான்” என அழகனின் மனைவியை பார்த்து சொன்னவர் “பூரணி நீ உள்ள போ” என அவளை அனுப்பிவிட்டு இவர்களை கூடத்திற்கு அழைத்து சென்றார்.
அறைக்குள் சென்ற பூரணி வெளியே வரவே இல்லை.....களைப்பாக இருக்கிறது என சொல்லி அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள்.அழகனின் மனைவி வந்து அவளிடம் பொதுப்படையாக சிறிது நேரம் பேச அதற்குள் அவளுக்கு இரண்டு முறை வாந்தி வர பின்னர் அவளும் சென்றுவிட்டாள்.
அழகனை பார்த்தபிறகு நினைவுகள் எங்கெங்கோ செல்ல சுருண்டு படுத்துவிட்டாள்.அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் “பாரி திறந்து தாண்டி இருக்கு.....அப்புறம் எனக்கு கொஞ்சம் வெந்தண்ணீ எடுத்திட்டு வா” என சொல்லிவிட்டு திரும்பி படுத்து கொண்டாள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு திறக்க “கொண்டு வந்திட்டியா” என கேட்டபடி எழுந்தவள் அங்கு அழகனை பார்த்ததும்.. அதிர்ந்து அப்படியே அமர்ந்திருக்க
“ஏன் பூரணி நான் தண்ணீ கொண்டு வந்தா நீ குடிக்க மாட்டியா?” என அவள் முகத்தை பார்த்தவாறு கேட்கவும்
அவளோ சட்டென்று தலை குனிந்தவள் “அப்படி எல்லாம் இல்லைங்க மச்சான்” என வாய்க்குள் முனக
“என் மேல ரொம்ப கோபமா இருக்கியா...என் முகத்தை பார்த்து பேசகூட உனக்கு பிடிகலையில்ல “ என அவன் நேரிடியாக விஷயத்திற்கு வந்தான்.
உடனே அவள் “உங்க மேல எனக்கு என்ன கோபம்.....அப்படி எல்லாம் ஏதும் இல்லை” என சொல்லும்போதே அவள் குரலில் பிசிறு தட்ட
“இப்போ நான் என்ன சொன்னாலும் அது முடிஞ்சு போன விஷயத்துக்கு பூசி மொலுகிற மாதிரி இருக்கும்.....அதனால நான் அதை பத்தி ஏதும் பேசலை பூரணி” என அவன் சொல்லவும்
அவளோ சட்டேன்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அந்த கண்களில் தெரிந்த உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.இப்போது அவன் தலை குனிந்தான்.
சிறிது நேரம் அமைதி நிலவ “ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என அவள் பேச்சை ஆரம்பிக்கவும்
“எங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன் பூரணி.....இதுல என்னோட தப்பும் இருக்கு...அவர்கிட்ட நான் விபரம் சொல்லிட்டு ஊருக்கு போயிருந்திருக்கணும்.....அப்புறம் உன்கூட போன்ல நான் பேசி இருந்திருக்கணும் இந்த இரண்டும்” என அவன் பேசும்போதே “அப்புறங்க மச்சான் அரசி எல்லாம் நல்லா இருக்கங்களா? வெளிநாட்டுல இருந்து எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க” என சிரித்துகொன்டே பேச்சை மாற்றவும்
அதை எதிர்பார்க்காத அழகன் பதில் சொல்லாமல் சிறிது நேரம் அவளையே உற்று நோக்கியவன் “நீ ரொம்ப மாறிட்ட பூரணி” என்றான்.
அவளோ “ உண்மைதானுங்க மச்சான்.......எல்லாரும் மாறும்போது நானும் மாறித்தானே ஆகணும்......காலத்தோட பள்ளிகூடத்துல இப்போ நானும் மாணவியா சேர்ந்திட்டேன்....படிப்பு தான் ஒழுங்கா படிக்கலை......காலம் சொல்லிகொடுக்கிற இந்த வாழ்க்கை பாடத்தையாவது இனி ஒழுங்கா படிக்கலாம்னு முடிவு பண்ணிடேனுங்க மச்சான்...அதான்...எப்படியும் இதுல பாஸ் பண்ணிருவேன்னு நினைக்கிறேன்” என அவள் உறுதியாக சொல்ல
அந்த வார்த்தைகளில் உள்ள உறுதி அவன் உள்ளத்தை தாக்க ஆனாலும் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என உணர்ந்தவன் “நீ கவலைபடாத பூரணி...இப்பவே நீ பாதி பாஸ் பண்ணிட்ட பூரணி..... நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப உன்ற மாமியார் உன்னை பத்தி எவ்ளோ பெருமையா சொன்னாங்க தெரியுமா என்றவன் அந்த நினைவுகள் நிழல் போல் வர.........திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பூரணியிடம் மன்னிப்பு கேட்கவே புகழ் வீட்டிற்கு வந்தான் அழகன். உள்ளே நுழைந்ததும் அங்கு யாருக்கும் அவனை தெரியாததால் தானே அறிமுகபடுத்தி கொள்ள உடனே பேச்சி “ஓ பூரணி அத்தை கோமதி பையனா நீ” என்றவர் உள்ள வாப்பா என வரவேற்றார். பின்னர் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா என்றவர் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன்ல அதான்பா அடையாளம் தெரியலை” என சொல்லவும்
“பரவாயில்லைங்க பெரியம்மா......எனக்கும் புகழ் அண்ணாவை தான் தெரியும்... மத்தபடி உங்களை எல்லாம் இப்பதான் பார்க்கிறேன் என்றவன் கல்யாண பத்திரிகை வச்சிட்டு போலாம்னு வந்தேன் என்றவன் புகழ் அண்ணா இல்லைங்களா” என வாய் கேட்க கண்களோ வீட்டை நோட்டமிட்டது.
“அடடா தம்பி வயலுக்கு போயிருக்குபா....இனி பொழுது சாயதான் வரும்....பூரணியும் இப்பதான் சாப்பாடு எடுத்திட்டு போச்சு...... என வருதபட்டவர் இருப்பா என்ற சின்ன மவன் வந்த உடனே கூட்டிட்டு வர சொல்றேன்”என்றார்.
பின்னர் “அட இங்க பாரு நான்பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்.....சாப்பாட்டு நேரத்துக்கு வந்திருக்க மருமக இன்னைக்கு மீன் குழம்பும் நண்டு வறுவலும் செஞ்சிருக்கா கொஞ்சம் சாப்பிடுப்பா” என அன்புடன் உபசரிக்கவும்
“இல்லைங்க பெரியம்மா...வரும்போது தான் மாமா வீட்டுல சாப்பிட்டு வந்தேன்....கல்யாண பத்திரிக்கை கொடுத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றான் .
“அதனால என்ன தம்பி வீட்டுக்கு வந்திட்டு சாப்பிடாம போனா எப்படி தம்பி இருங்க இலை அறுத்திட்டு வரேன்” என வேகமாக அவர் வெளியே செல்ல மறுக்க மனம் இல்லாமல் சாப்பிட அமர்ந்தான் அழகன்.உணவின் ருசி பூரணியின் நினைவை அதிக படுத்த ஏனோ மனம் லேசாக வலித்து.
“சாப்பாடு ரொம்ப நல்ல இருக்கு........பூரணி இந்த அளவுக்கு சமையல் வேலை எல்லாம் செய்யுதா” என அவன் ஆச்சிரியத்துடன் கேட்க
“என்னப்பா இப்படி சொல்லிட்ட...அதெல்லாம் நல்லா செய்வா..ஆரம்பத்துல கொஞ்சம் பிடிவாதம் குறும்பு தனம் இருந்தாலும் இப்போ எல்லாம் புரிஞ்சு நடந்துகிறா தம்பி......... பாவம் சின்ன பொண்ணுதானே..... திடீர்னு கண்ணாலாம் நடந்திடுச்சு... அதும் என்ன பண்ணும்....... சூட்டிகையான பொண்ணு......நாங்க குணமும் பண்பும் பொண்ணுகிட்ட இருந்தா போதும்னு நினைச்சோம்.............மத்தவங்க மாதிரி பணமும் பவுசும் படிப்பும் முக்கியம்னு நாங்க நினைக்கலை.......நாங்க நினச்ச மாதிரியே அமஞ்சிடுச்சு........பலாபழத்துல இருக்க சுவையோட அருமை மேல் இருக்க முள்ளை பார்த்து எடை போட கூடாது இல்லை...... என்ன தம்பி நான் சொல்றது சரிதானுங்களே” என சந்தடி சாக்கில் வார்த்தைகளால் அவனுக்கு சவுக்கடி கொடுக்க
“அம்மா அது வந்து...உங்களுக்கு” என அழகன் தயங்கும்போதே “எனக்கு எல்லாம் தெரியும் தம்பி........மகாலக்ஷ்மி எங்க வீட்டுக்கு வரணும்னு இருக்கும்போது அது யாரால மாத்த முடியும்” என அவர் அழுத்தமாக சொல்ல அதுவரை அழகன் நினைத்திருந்த எண்ணங்கள் எல்லாம் பொடிபொடியானது.
அப்போது பாண்டி வர அவனும் பூரணியை பற்றி பெருமையாக சொல்ல அழகனோ வேறு எதுவும் பேசவில்லை..”.எனக்கு நேரமாகிவிட்டது நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
நடந்தை சொன்னவன் “இப்போ உன்கிட்ட உண்மைய சொல்றேன் பூரணி. உன்னோட கண்ணாலம் விபரம் தெரிஞ்சதும் உடனே எங்க அப்பாகிட்ட கேட்டேன். உனக்கு உன் தங்கை வேணுமா? இல்லை அந்த பூரணி வேணுமா? நீயே முடிவு பண்ணிகன்னு சொல்லிட்டார்.எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுனே தெரியலை.....இங்க மாமாகிட்ட பேசறதுக்கும் பயம்.....உடனே கிளம்பி வந்து என் பொண்ணை கண்ணாலம் பண்ணுனு சொன்னாருனா அது எப்படி என்னால முடியும்......இங்க என் தங்கையும் எனக்கு முக்கியம்.சரி கொஞ்ச நாள் பொறுத்து இருப்போம்...யாரோ ஒருத்தர் இரங்கி வருவாங்கன்னு அமைதியா இருந்தேன்” என அவன் சொல்லவும்
பூரணியோ அவனை பார்த்த பார்வையில் அக்னி சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தது.
“புரியுது பூரணி....உன்னோட நிலமை எனக்கு புரியுது...ஆனா என் நிலமையில இருந்து யோசனை பண்ணி பாரு...... எனக்கு யாரு பக்கம் பேசறதுனே தெரியலை........அப்புறம் உனக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சுனு சொன்னாங்க......ரொம்பவே கஷ்டமா இருந்திச்சு...எனக்காக நீ வெயிட் பண்ணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு.....அப்புறம் ஊருக்கு வந்தப்பதான் நடந்தது எல்லாம் சொன்னாங்க.....எங்க அப்பாமேலதான் தப்புன்னு புரிஞ்சுது....மாமாகிட்ட வந்து மன்னிப்பு கேட்டேன்.....அப்புறம் உன்னை தேடி உங்க வீட்டுக்கு வந்தேன்...அங்கு உன் புகுந்த வீட்ல உன்னை பத்தி சொன்னதை கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.எங்க வீட்டுக்கு நீ வந்திருந்தாகூட இந்த அளவுக்கு உன்னை எங்க அம்மா பெருமையா சொல்வாங்களானு எனக்கு தெரியாது.ஆனா உன் புகுந்தவீடே உன்னை மகாலட்சுமியா பார்க்கிறத நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.என்மனசில இருந்த சின்ன உறுத்தலும் மறைஞ்சிருச்சு....நீ கண்டிப்பா சந்தோஷமா இருப்பகிற நம்பிக்கையிலதான் நான் அங்கிருந்து வந்தேன்” என சொல்லி முடித்தவன் “ஆனா அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீ என்னை பார்த்த உடனே அழுதுகிட்டு ஏதோ சொல்ல வந்த...அதுக்குள்ள புகழ் அண்ணா உன்னை கூட்டிட்டு போயிட்டார்.......என்ன பூரணி...என்ன நடந்திச்சு........உனக்கும் அண்ணாவுக்கும் இடையில ஏதாவது பிரச்சனயா?எனக்கு அப்போ இருந்து மனசு உலட்டலாவே இருக்கு...சொல்லு பூரணி...என்ன நடந்திச்சு” என அவன் கேட்கவும்
அவளோ அவனை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்க்க அந்த பார்வையே உன் பிரச்சனை வரும்போதே ஓடி ஒளிந்து கொண்டகோழை நீ...இப்போ என் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வரீயா என்று கேட்பது போல் இருக்க அவள் பார்வையின் வேகத்தை தாங்க முடியாமல் தலை குனிந்தான் அழகன். பின்னர் அவள் “எங்க குடும்ப விஷயத்தில் மூணாவது மனுஷங்க தலையிடறத நான் விரும்பலைங்க மச்சான்” என சொல்லிவிட்டுஅருகில் இருக்கும் படுக்கையை சரி பண்ண அழகனோ உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் அதிர்ந்து போய் நின்றான்.
பூரணிக்கு ஏதோ பிரச்சனை.....உதவலாம் என்ற நோக்கத்தோடுதான் அவன் வந்தான்.ஆனால் நீ மூன்றாவது மனிதன்...உன் வேலையை நீ பார் என அவள் முகத்தில் அடித்தாற்போல் சொல்லவும் எதுவும் பேசாமல் அறையைவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியேறும் வரை அமைதியாக இருந்த பூரணி அவன் சென்றதும் கதவை தாளிட்டு விட்டு அருகில் இருக்கும் புத்தகங்களை,தலயணையை எடுத்து ஆத்திரம் தீரும்வரை அதை சுக்குநூறாக கிளித்தவள் மீண்டும் கதவு தட்டபடும் சத்தம் கேட்டுதான் சுய நினைவிற்கு வந்தாள். உள்ளே வந்த பாரி அவளது அறையின் கோலத்தை பார்த்து “என்னக்கா இது” என அதிர...”அவளோ நீ அம்மாகிட்ட சொல்லிடாத......நான் பார்த்துகிறேன்.....எனக்கு ஒரு டீ கொண்டுவா” என்றவள் பின்னர் தானே அதை சுத்தம் செய்தாள்.
இரவு அனைவரும் சென்றபின் தன் அறைக்கு உறங்க வந்தவள் ஏனோ அன்று என்றுமில்லாத அளவிற்கு புகழின் நினைவு அவளுக்கு வந்தது.அழகனின் பேச்சும் அதற்கு ஒரு காரணம்.தன் மீது கொண்ட காதலுக்காக புகழ் எந்த காரியத்தையும் செய்ய துணிந்தான்.அதே அழகனோ காலத்தின் மீது பழியை போட்டு நமக்கு எது கிடைக்கிறதோ அதை ஏற்றுகொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறான்.அதாவது சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக இருந்தால் மட்டுமே அவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருப்பான்.ஆனால் புகழோ எந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றிகொண்டான்.நீ அவனை வெறுக்கிற...அவன் காதலை சந்தேகபடர என அவள் மனம் அவளை சாட
நான் அவரை வெறுக்கலை....ஆனா அவனோட காதலைதான் என்னால ஏத்துக்க முடியலை......இப்பவும் அழகனை ஒரு நிமிஷத்துல மூணாவது மனுசன்னு சொன்ன என்னால எந்த காலத்திலயும் புகழ் மச்சானை அப்படி சொல்ல முடியாது. ஆனா நம்பிக்கை துரோகத்துல வந்த காதலை எப்படி ஏத்துக்க முடியும் என அவள் மீண்டும் முரண்டு பிடிக்க வாதத்திற்கு மருந்து உண்டு... பிடிவாதத்திற்கு மருந்து இல்லை. என்னமோ செய் உன்னை திருத்த முடியாது என சொல்லிவிட்டு மனம் அமைதியடைய அவளோ யோசனையுடனே கண்மூடினாள்.
ஒருவாரம் செல்ல ஒருநாள் பூரணி கோவிலுக்கு கிளம்ப உடன் பாரியும் வந்து இருந்தாள். இருவரும் சாமி கும்பிட்டு வெளியே வந்தவர்கள் திடீரென “அக்கா உனக்கும் புகழ் மச்சானுக்கும் ஏதும் சண்டையா?” என பாரி கேட்க
குழப்பமாக அவளை பார்த்த பூரணி “ஏண்டி...அதெல்லாம் ஏதும் இல்லை...யாரு சொன்னா” என கோபமாக கேட்க
“இல்லக்கா நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப மச்சான் அடிக்கு ஒருமுறை பூரணி..பூரணினு கூப்பிட்டுகிட்டே இருப்பாரு...இப்போ எப்படி ஒரு மாசமா வந்து பார்க்காமகூட இருக்காரு....அதான் கேட்கிறேன்” என்றாள்.
“அதெல்லாம் ஏதும் இல்லை....நல்லாத்தான் இருக்கோம்.....ஆமா நீ சாமிகிட்ட என்ன வேண்டுன....நல்ல மார்க் எடுக்கணும்னா” என அவள் சிரித்து கொண்டே பேச்சை மாற்றினாள் பூரணி.
உடனே பாரியோ “நம்ம நினைச்சது எல்லாம் எங்கக்கா நடக்குது” என சலிப்புடன் சொல்லவும்
“என்னடி இது கவிதை எழுதற,தத்துவம் பேசற... நானும் கேட்கனும்னு நினச்சேன்...நீ குளிக்க போறேன்னு எஸ்கேப் ஆகிட்ட...என்னடி விஷயம்... உண்மையா சொல்லு” என அவள் கேட்கவும்
இப்போது பாரி தடுமாற பூரணியோ அவளை துருவி கேட்கவும் “அக்கா உங்க வீட்டுக்கு வந்திட்டு திரும்ப வந்தேன்ல...அப்போ பஸ்ல எனக்கு தெரிஞ்ச ரெண்டு பொண்ணுங்களை பார்த்தேன்” என சொல்லி நிறுத்தவும்
“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்” என எரிச்சலாக கேட்டாள்பூரணி.......
அப்போ அப்போ” என அவள் இழுக்கவும்
“என்னடி அப்போ அப்போன்னு...விஷயத்துக்கு வா” என பூரணி முறைக்க
“நான் உள்ள போய் எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட உட்கார்ந்தனா... அப்போ அவ பக்கத்துல இருக்க பொண்ணு அங்க பாருடி அந்த பாண்டி பையன் இங்கும் வந்திட்டான்னு சொன்னா” என சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க
“ஓ எந்த பாண்டி என சாதரணமாக கேட்டவள் பின்னர் எனதூஊஊ நம்ம லொடுக்கு பாண்டியா” என அதிரவும்
மச்சானை அப்படி எல்லாம் சொல்லாதக்கா” என அவள் முறைக்க
“இது என்னடி இது...அவன சொன்னா நீ ஏன் இந்த திருப்பு திருப்பற என்றவள் சரி சொல்லு சொல்லு அப்புறம்” என கதை கேட்கும் ஆவலில் அவளும் கேட்க
“அதுக்குள்ள பஸ் கிளம்பிடுச்சுக்கா......அப்போ அவங்க அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டாங்க...நான் தலைஆட்டினேன்.....உடனே பக்கத்துல இருந்த பொண்ணு “இங்க பாருங்க அவர்கிட்ட சொல்லிவைங்க........என்னோட தோழிய ரொம்ப தொல்லை பண்றார்......எங்க போனாலும் பின்னாடியே வரார்......இதெல்லாம் சரியில்லை.....அப்புறம் நாங்க ஏதாவது செஞ்சோம்னா அசிங்கமா போய்டும்ன்னு சொல்லுச்சுங்க...எனக்கு ஒன்னும் புரியலை...என்ன பன்றாருன்னு கேட்டேன்....அவரு பொன்மலரை லவ் பண்றாராம்...ரொம்ப டார்ச்சர் கொடுக்கிறார்னு அந்த பொண்ணு பொரிஞ்சு தள்ளிடுச்சு” என சோகமாக சொல்லி முடித்தவள் .
“அப்படியா அட பக்கி இந்த ரண்டு கால் பூனை இந்த வேலை எல்லாம் செய்யுதா......அமுக்கநாட்ட இருந்திட்டு என்ன வேலை பண்ணிருக்கான் பாரு...எத்தன முறை பிரியாணி செஞ்சு கொடுத்திருப்பேன்.....என்கிட்டே சொல்லவே இல்ல பாரு” என பூரணி அதற்கு மேல் பொரிந்து தள்ள பாரியோ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
பேசி முடித்துவிட்டு தங்கையை பார்த்தவள் “ஏண்டி பொண்ணு எப்படி ரொம்ப படிச்ச பொண்ணோ...என்னை விட அழகா இருப்பாளோ” என பெண்களுக்கே உரிய பொறமை குணம் சற்று தலைதூக்க அவள் கேள்வி கேட்க பாரியோ பற்களை கடித்தவாரே அது ரொம்ப முக்கியம் என அவளை முறைத்தாள்.
“ஏண்டி முறைக்கிற......சரி சரி உனக்கு அந்த பொண்ண எப்படி தெரியும்....” என கேட்கவும்
“இங்க நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வந்து இருக்குதுக்கா.....அதுவும் பன்னிரண்டாவது தான் படிக்குது.....பஸ்ல பார்த்தா பேசும்.......அம்மாவுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும்” என அவள் சொல்லவும்
“என்னடி சொல்ற...நம்ம தோட்டத்துக்கு வேளைக்கு வந்து இருக்குனா” என பூரணி இழுக்க
“ஆமாக்கா ஏழ்மையான குடும்பம்தான்...ஆனா நல்லா படிக்கும்” என்றாள்.