- Joined
- Jul 31, 2021
- Messages
- 90
வணக்கம் சினேகங்களே.. நான் விபா விஷா.. உங்களுள் சிலருக்கு தெரிந்தும், பலருக்கு தெரியப்படாமலும் இருக்கும் ஒரு தளிர் நடை பயிலும் எழுத்தாளர்.
சிறு வயதில் இருந்தே வாசிப்பின் மீது பேராவல் எனக்கு. தமிழ் பாடத்தில் வரும் செய்யுள் பகுதிகளைக் கூட, பரீட்சைக்கு மட்டுமல்லாததாய்.. அதன் இனிமைக்காகவே திரும்பத் திரும்பப் படித்தவள்.
அப்படியான என் வாசிப்புப் பயணத்தில்.. வாசிப்புக்கான என் தேடல் வந்து நின்றது என்னவோ எழுத்தின் மீது. அது வரை பிறர் எழுத்தையே வாசித்துக் கொண்டிருந்த நான்.. ஒரு கட்டத்தில் என் எழுத்தையும் பிறர் வாசிக்கவேண்டும் என்னும் ஆசை கொண்டேன். அதன் முயற்சியாய் நான் எழுதியது தான் "ஆழியின் காதலி" என்னும் கடல் சாகசப் பயணத்தை அடிப்படையாய்க் கொண்ட எனது முதல் நாவல்.
அதன் பிறகு, "நீரினை தேடிடும் வேரென நான், விடாது தொடரும் என் விதியே, காதலாய்த் தூறுதே வான் மேகம்" என்று வரிசையை எழுதிக் கொண்டிருந்த என் எழுத்துப் பணியில் ஒரு மெயில் கல்லாய்.. கடந்த புத்தகக் கண்காட்சியில் எனது "காக்க.. காக்க" என்னும் நாவல் அச்சுப் புத்தகமாய் வெளிவந்தது. அந்த மகிழ்வு தீரும் முன்னரே, இணை பிரபஞ்சத்தை சம்மந்தப்படுத்தி நான் எழுதிய "ஏகனே! அனேகனே!!" என்னும் நாவல், கூடிய விரைவில் அச்சுப் புத்தகமாய் வரவிருக்கிறது.
அதையும் தாண்டி, இப்பொழுது "உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில், மற்றும் மாயோனின் வேங்குழல் நானாகிடவோ?" என்னும் மூன்று கதைகள் தொடராக வெவ்வேறு தளத்தில் வெளியாகின்றன.
அதற்கும் மேல், நமது வைகைக்கு மட்டிலுமாக ஒரு புதிய கதை "தீராதோ என் தேடல்" என்னும் நாவல் வாரம் மூன்று அத்தியாயங்கள் வெளியாகின்றன.
மற்றபடி.. நான் பழகுவதற்கு இனிமையானவள். என் நிறைகளுடன், குறைகளையும் இதமாய் கூறினால்.. எனக்கு மிகவும் பிடித்தவராகிவிடுவீர்கள் நீங்கள்.
எனவே.. இந்த "தீராதோ என் தேடல்?" கதைக்கான உங்களது விமர்சனங்களையும் என்னுடன் தயங்காது பகிர கேட்டுக்கொள்கிறேன்.
எந்நாளும் இனிய நாள் தான்.. பொன்னான நம் மனதினால்!
என்றும் நட்புடன்,
விபா விஷா.
சிறு வயதில் இருந்தே வாசிப்பின் மீது பேராவல் எனக்கு. தமிழ் பாடத்தில் வரும் செய்யுள் பகுதிகளைக் கூட, பரீட்சைக்கு மட்டுமல்லாததாய்.. அதன் இனிமைக்காகவே திரும்பத் திரும்பப் படித்தவள்.
அப்படியான என் வாசிப்புப் பயணத்தில்.. வாசிப்புக்கான என் தேடல் வந்து நின்றது என்னவோ எழுத்தின் மீது. அது வரை பிறர் எழுத்தையே வாசித்துக் கொண்டிருந்த நான்.. ஒரு கட்டத்தில் என் எழுத்தையும் பிறர் வாசிக்கவேண்டும் என்னும் ஆசை கொண்டேன். அதன் முயற்சியாய் நான் எழுதியது தான் "ஆழியின் காதலி" என்னும் கடல் சாகசப் பயணத்தை அடிப்படையாய்க் கொண்ட எனது முதல் நாவல்.
அதன் பிறகு, "நீரினை தேடிடும் வேரென நான், விடாது தொடரும் என் விதியே, காதலாய்த் தூறுதே வான் மேகம்" என்று வரிசையை எழுதிக் கொண்டிருந்த என் எழுத்துப் பணியில் ஒரு மெயில் கல்லாய்.. கடந்த புத்தகக் கண்காட்சியில் எனது "காக்க.. காக்க" என்னும் நாவல் அச்சுப் புத்தகமாய் வெளிவந்தது. அந்த மகிழ்வு தீரும் முன்னரே, இணை பிரபஞ்சத்தை சம்மந்தப்படுத்தி நான் எழுதிய "ஏகனே! அனேகனே!!" என்னும் நாவல், கூடிய விரைவில் அச்சுப் புத்தகமாய் வரவிருக்கிறது.
அதையும் தாண்டி, இப்பொழுது "உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில், மற்றும் மாயோனின் வேங்குழல் நானாகிடவோ?" என்னும் மூன்று கதைகள் தொடராக வெவ்வேறு தளத்தில் வெளியாகின்றன.
அதற்கும் மேல், நமது வைகைக்கு மட்டிலுமாக ஒரு புதிய கதை "தீராதோ என் தேடல்" என்னும் நாவல் வாரம் மூன்று அத்தியாயங்கள் வெளியாகின்றன.
மற்றபடி.. நான் பழகுவதற்கு இனிமையானவள். என் நிறைகளுடன், குறைகளையும் இதமாய் கூறினால்.. எனக்கு மிகவும் பிடித்தவராகிவிடுவீர்கள் நீங்கள்.
எனவே.. இந்த "தீராதோ என் தேடல்?" கதைக்கான உங்களது விமர்சனங்களையும் என்னுடன் தயங்காது பகிர கேட்டுக்கொள்கிறேன்.
எந்நாளும் இனிய நாள் தான்.. பொன்னான நம் மனதினால்!
என்றும் நட்புடன்,
விபா விஷா.