- Joined
- Feb 28, 2022
- Messages
- 448
மலர் : 15
வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான் சதீஷ்….கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் கண்ணில் பட்டாள் பவி அதன் பிறகே அவனுக்கு பவியின் ஞாபகம் வந்தது..
"ஐயோ பவியை மறந்து போயிட்டமே.. நல்லா லேட்டாயிடுச்சி… என்ன சாப்டாளோ தெரியாது" என்ற நினைத்தவாறு பவியின் அருகில் வந்து அமர்ந்தான்.
"பவி சாரி… வேலையில மறந்து போயிட்டன்… இரு சாப்பாடு செய்து தர்றன்" என்றவன் சமையலறைக்குச் சென்றவன் அதிர்ச்சியடைந்தான்..
காரணம் நம்ம பவியின் உபயம் தான்..
" என்னாச்சி பவி? " என்று மீண்டும் பவியின் அருகில் வந்திருந்து கேட்டான்.
"என்னை திட்டிடாதீங்க"
"திட்ட எல்லாம் மாட்டேன் சொல்லு"
" சரி என்ற பவி நடந்ததை சொன்னாள். "
தூங்கி எழுந்த பவிக்கு நல்ல பசி.. சாப்பிட எதுவும் இல்லை… சரி நம்மளே பண்ணலாம் என்று சமையலறைக்கு வந்தவள் கோதுமை மாவை தேடினாள். அதுவோ மேலே இருக்க எட்டி எடுப்போம்னு எடுக்க அது மூடி திறந்து கொட்டி விட்டது பவியின் தலையில்….சமையலறை முழுவதும் மாவாக இருந்து… அதை விட்டு வெளியே வந்த பவி குளித்து விட்டு வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள்..
பவி சொல்லி முடித்து விட்டு சதீஷின் முகத்தைப் பார்த்தாள்… அவன் எதுவும் பேசாத அவளைப் பார்த்தான். ஒருவேளை அடிப்பாரோ… என்று நினைத்தபடி பார்த்தாள்.
"அதெல்லாம் விடு பவி பரவாயில்லை… உனக்கு சாப்பிட என்ன பண்ணி தரட்டும்?"
"என் மேல கோபம் இல்லையா?"
"எதுக்கு கோபப்படணும்?"
"இல்லை நான் சமையலறையை சுத்தம் பண்ணலனு"
"அதில்ல என்ன இருக்கு பவி… விடு நான் கிளீன் பண்ணிட்டு உனக்கு பூரி சுட்டுத் தர்றேன்.. கொஞ்சம் இரு குளிச்சிட்டு வர்றன் " என்றவன் வேகமாக குளித்து விட்டு வந்து சமையலறைக்குச் சென்றான்…
அவன் பின்னாடியே வந்தாள் பவி.. அவளைப் பார்த்த சதீஷ்
" நீ போய் டீவி பாரு நான் பூரி சுட்டுட்டு கூப்பிடுறன்"
" இல்லை நான் இங்கையே இருக்கிறன்"
" சரி இரு "
" என்னை மன்னிச்சிடுங்க "
" அதை விடு பவி…. எதுக்கு திரும்ப திரும்ப மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு இருக்க?"
"எனக்கு ஒரு மாதிரி இருக்கு"
"இதெல்லாம் பெரிய விசயமே இல்லை பவி.. Leave it பவி"
"ம்"
" சரி நீ இரு நான் பூரி சுடுறன்"
" நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா? "
" நீயே பசியோட இருக்க… நீ இரு நான் பண்றன்" என்றவன் வேலையை செய்ய அதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பவி….
………………………………………………..
கிரண் வீடு……………..
பவியும் கிரணும் வீட்டுக்கு செல்ல அங்கே தரணி, விஜி, வேதா, கணபதி எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர்… இவர்கள் வந்ததும் விஜி" ரெண்டு பேரும் போய் பிரஸ்ஸாகிட்டு வாங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேணும்"
"சரி அம்மா"
"சரி ஆன்டி"
சிறிது நேரத்தில் இருவரும் வந்தனர். அவர்களுக்கு வேதா குடிப்பதற்கு காப்பி கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தனர்.
"கிரண் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கிறம்… நீ என்ன சொல்ற? "
" எதுக்கு மா இப்போ? "
" எல்லாம் காலாகாலத்துல நடக்கணும்ல கிரண்"
"அதுவந்து அப்பா"
"என்ன கிரண்?"
"அம்மா அப்பா இன்னைக்கு நானே இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தன்"
"என்ன விசயம்? "
" அதுவந்து நானும் பிருந்தாவும் லவ் பண்றம் " என்றான்.
" என்னது லவ்வா? "
" ஏன்மா நான் லவ் பண்ணக்கூடாதா? "
"நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா என்ன பண்ணுவ? "
"நீங்க என்னோட விருப்பத்திற்கு எதிராக எதுவும் சொல்ல மாட்டீங்கனு தெரியும்."
"நான் உனக்கு வேற பொண்ணு பார்த்திருக்கிறன்… "
" அம்மா பிருந்தாவை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டன். "
" பிருந்தா நீ என்ன சொல்ற? "
" ஆமா ஆன்டி நான் கிரணை ரொம்ப லவ் பண்றன்… எங்களை பிரிச்சிடாதீங்க ஆன்டி பிளீஸ் "
"அதெப்பிடி பிருந்தா உனக்கு என் பையனை கல்யாணம் பண்ணி வைக்க முடியும்? "
" ஏன் ஆன்டி? " என்று அழும் நிலைக்குச் சென்றாள் பிருந்தா…
" அம்மா அவளே அழ வைக்காதீங்க.. பிருந்தா உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். "
" விஜி விளையாடினது போதும்"
" சரிங்க பிருந்தா கிரண் நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றது எங்களுக்கு தெரிய வர்றதுக்கு முன்னாடியே நாங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்து சம்மந்திக்கிட்ட பேசினம்… அப்போதான் அவங்க சொன்னாங்க நீங்க லவ் பண்றதா… எங்ககிட்ட சொல்லாம மறைச்சதுக்காகதான் சும்மா விளையாடினேன்.. "
" ஐயோ அம்மா நான் பயந்திட்டன்… நாங்களே இன்னைக்கு எங்களோட விசயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தம்"
" நம்பிட்டேன்… பிருந்தா ஹாப்பியா? "
" ரொம்ப ஆன்டி"
" இன்னும் எதுக்கும்மா ஆன்டினு சொல்ற? அழகா அத்தை னு சொல்லு"
" சரி அத்தை"
" கிரண்.. உன்னோட வாழ்க்கை இப்பிடியே போயிடுமோனு ரொம்ப பயந்திட்டே இருந்தன்பா.. நல்ல வேளை பிருந்தா வந்தா… சரி டீம் எல்லாம் ஓகேவா எப்போ project work ஸ்டார்ட் பண்றீங்க? "
" நாளைக்கு அப்பா… "
" கவனமா பண்ணுங்க.. இனிமேல் அந்த வீராவுக்கு தோல்வியேதான் கிடைக்கணும்"
" கண்டிப்பா அப்பா"
" மாமா நாம ஒரு வேலை பண்ணணும் "
" என்ன வேலை? "
" அந்த வீரா கொஞ்ச நாளைக்கு கம்பனிக்கு போகலனா அவனோட சைட்ல இருக்கிற பார்ட்னர்ஸை நம்ம பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வந்திடலாம்"
" நல்ல யோசனை சொன்ன பிருந்தா…அதுக்கு என்ன பண்ணணும்னு நான் சொல்றன்"
" சரி அத்தை"
" சரி வாங்க போய் சாப்பிடலாம்"
" ம்" என்றவர்கள் சாப்பிடச் சென்றனர்…
…………………………………………………..
வீரா சாப்பாட்டை அவனது அறைக்கு கொண்டு வரச் சொன்னதால் சித்து ஒரு தட்டை எடுத்து சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குள் சென்றாள்…
" சாப்பாடு"
" அங்க மேசையில வை"
" சரி" என்றவள் சாப்பாட்டை வைத்துவிட்டுச் செல்ல,
"ஏய் நில்லு.. சாப்பாட்டை நீ வச்சிட்டு போனா யாரு பரிமாறுவா? வந்து பரிமாறு"
"சரி" என்ற சித்து வீரா சாப்பிடுவதற்கு சாப்பாட்டை பரிமாறினாள். சாப்பிட்ட பின் தட்டுக்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போனவளை..
" ஏய் உன்னை யாரு போக சொன்ன?"
"சாப்பிட்டீங்க அதுதான்"
" இந்த பியர்ரை கிலாஸ்ல ஊத்திக் கொடு"
" நீங்க குடிப்பீங்களா? "
" ஆமா… இது என்னோட விருப்பம்..சொல்றதை செய்"
"இல்லை இது வேணாமே"
"ஏய் என்ன சத்தம் வருது… நான் சொல்றதை நீ கேளு… தேவையில்லாமல் பேசாத"
"அதுக்கில்லை… இத குடிச்சி குடிச்சி உங்களோட உடம்புக்குத்தான் கேடுங்க"
" எனக்கு என்ன நடந்தா உனக்கு என்ன? நீ நான் என்ன சொல்றன்னோ அதை செய்"
" இதுவே உங்களோட அம்மா உயிரோட இருந்து சொன்னா கேட்பீங்கதானே… நீங்க இப்பிடி குடிச்சிட்டு இருக்கிறதை பார்க்கும் போது அவங்களுக்கு எப்பிடி இருக்கும்? இப்பிடி ஒரு குடிகாரனை பெத்துட்டமோனு கவலப்படமாட்டாங்க"
" ஏய் "என்றவன் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்தான்..
" உன்னை கொன்றுவன் என்னோட அம்மா என்னை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டாங்க.. உனக்கு என்னடி தெரியும் என்னப் பற்றி… நான் என்னோட அம்மாகூட எப்பிடி இருந்தன் தெரியுமா? நான் ஏன் குடிக்கிறன்னு தெரியுமா? எதுவுமே தெரியாம பேச வந்திட்டா போடி…"
"சொ… ன்…னா…ல்…தா…னே ….தெ…ரி…யு….ம்.."
" உங்கிட்ட எதுக்கு நான் சொல்லனும்" என்றவன் மேலும் அவள் கழுத்தை இறுக்க…
" சரி இன்னைக்கு நம்மளோட உயிரு போயிடும் " என நினைத்த சித்து நடுங்கி விட்டாள்… அவளால் மூச்செடுக்க முடியவில்லை… கண்கள் மேல் நோக்கி செல்ல அவளைது கையால் அவனது கையில் அடித்தாள். அதன் பின்னே அவளைப் பார்த்த வீரா தனது கையை அவளது கழுத்திலிருந்து எடுக்க
"க்கும்….. க்கும்" என்று இருமினாள்…
" இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. இனிமேல் என்னோட அம்மாவை பற்றி ஏதாச்சும் பேசின உயிரோட விடவே மாட்டன்.. என் கண்ணு முன்னாடி நிற்காத" என்றவன் பியர் பாட்டிலை போட்டு உடைத்தான். அதில் பயந்த சித்து விட்டால் போதும் என்றும் ஓடிவிட்டாள்…
தனது அறைக்கு வந்து தண்ணீர் குடித்த பின்னரே அவளுக்கு உயிர் வந்தது...
"இவரை எப்பிடி மாத்துறது? ரொம்ப கஷ்டம் போலேயே.... இதுக்கு என்ன பண்ணலாம்? நாளைக்கு சதீஷ் அண்ணாக்கிட்டயே உதவி கேக்கலாம்... அவருதான் ஏதாச்சும் பண்ணுவாரு" என்று முடிவெடுத்தாள்.
இங்கே அறையில் அடுத்த பியர் பாட்டிலை குடிப்பதற்கு எடுத்த வீராவுக்கு சித்து கேட்டது ஞாபகம் வர அதைக் குடிக்க முடியாமல் எடுத்த இடத்திலையே வைத்து விட்டு சென்று படுக்கையில் விழுந்தான்….
"என்ன வீரா அந்த பொண்ணு சொன்னதுக்காக குடிக்காம படுத்திட்ட"
"நீ யாரு?"
"நான் யாரா? நான்தான் உன்னோட மனசாட்சி"
"மனசாட்சியா நீ எதுக்கு இப்போ வந்த?"
"உங்கிட்ட சில விசயம் கேட்கலாம்னு வந்தன்"
"என்ன கேக்கணும்?"
"நீ அந்த பொண்ணை கொடுமைப்படுத்தத் தானே கடத்திட்டு வந்த?"
"ஆமா"
" ஆனால் நீ கொடுமைப்படுத்தலையே"
" ஏன் நான் கொடுமைப்படுத்தல.. நான் பண்ணிட்டு இருக்கேன்"
"இதை என்ன நம்ப சொல்றியா? உன்னால அவளை கொடுமைப்படுத்த முடியலை... அதுதான் உண்மை"
" இல்லை... நான் அவளை கொடுமைப்படுத்துவன் "
"உன்னால முடியாது"
"இல்லை என்னால முடியும்" என்று லயன் மனசாட்சியுடன் சண்டை போடும் போது சித்து கத்தும் சத்தம் கேட்டது... உடனே அவளது அறைக்குச் சென்றான்..
அங்கே சித்து…..
"அப்பா... அப்பா.... அப்பா... எங்கிட்ட வந்திடுங்க அப்பா.... ஐயோ நெருப்பு... நெருப்பு...யாராவது வாங்க" என்று அழுதுகொண்டிருந்தாள்..
வீரா அவள் அருகில் சென்று பார்த்தாள் அங்கே சித்து தூக்கத்தில் ஏதையோ சொல்லி அழுதாள்...
“அவளருகில் இருந்த வீரா மெதுவாக அவளை எழுப்ப முயன்றான்.. ஆனால் அவள் எழும்பாமல் அழுது கொண்டிருந்தாள்… திடீரென பயந்து அழுது கொண்டிருந்தவள் செயலில் வீரா அதிர்ச்சியடைந்தான்…
வீரா ஏன் அதிர்ச்சி அடைந்தான்????
மலரும் …………………………………
வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான் சதீஷ்….கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் கண்ணில் பட்டாள் பவி அதன் பிறகே அவனுக்கு பவியின் ஞாபகம் வந்தது..
"ஐயோ பவியை மறந்து போயிட்டமே.. நல்லா லேட்டாயிடுச்சி… என்ன சாப்டாளோ தெரியாது" என்ற நினைத்தவாறு பவியின் அருகில் வந்து அமர்ந்தான்.
"பவி சாரி… வேலையில மறந்து போயிட்டன்… இரு சாப்பாடு செய்து தர்றன்" என்றவன் சமையலறைக்குச் சென்றவன் அதிர்ச்சியடைந்தான்..
காரணம் நம்ம பவியின் உபயம் தான்..
" என்னாச்சி பவி? " என்று மீண்டும் பவியின் அருகில் வந்திருந்து கேட்டான்.
"என்னை திட்டிடாதீங்க"
"திட்ட எல்லாம் மாட்டேன் சொல்லு"
" சரி என்ற பவி நடந்ததை சொன்னாள். "
தூங்கி எழுந்த பவிக்கு நல்ல பசி.. சாப்பிட எதுவும் இல்லை… சரி நம்மளே பண்ணலாம் என்று சமையலறைக்கு வந்தவள் கோதுமை மாவை தேடினாள். அதுவோ மேலே இருக்க எட்டி எடுப்போம்னு எடுக்க அது மூடி திறந்து கொட்டி விட்டது பவியின் தலையில்….சமையலறை முழுவதும் மாவாக இருந்து… அதை விட்டு வெளியே வந்த பவி குளித்து விட்டு வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள்..
பவி சொல்லி முடித்து விட்டு சதீஷின் முகத்தைப் பார்த்தாள்… அவன் எதுவும் பேசாத அவளைப் பார்த்தான். ஒருவேளை அடிப்பாரோ… என்று நினைத்தபடி பார்த்தாள்.
"அதெல்லாம் விடு பவி பரவாயில்லை… உனக்கு சாப்பிட என்ன பண்ணி தரட்டும்?"
"என் மேல கோபம் இல்லையா?"
"எதுக்கு கோபப்படணும்?"
"இல்லை நான் சமையலறையை சுத்தம் பண்ணலனு"
"அதில்ல என்ன இருக்கு பவி… விடு நான் கிளீன் பண்ணிட்டு உனக்கு பூரி சுட்டுத் தர்றேன்.. கொஞ்சம் இரு குளிச்சிட்டு வர்றன் " என்றவன் வேகமாக குளித்து விட்டு வந்து சமையலறைக்குச் சென்றான்…
அவன் பின்னாடியே வந்தாள் பவி.. அவளைப் பார்த்த சதீஷ்
" நீ போய் டீவி பாரு நான் பூரி சுட்டுட்டு கூப்பிடுறன்"
" இல்லை நான் இங்கையே இருக்கிறன்"
" சரி இரு "
" என்னை மன்னிச்சிடுங்க "
" அதை விடு பவி…. எதுக்கு திரும்ப திரும்ப மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு இருக்க?"
"எனக்கு ஒரு மாதிரி இருக்கு"
"இதெல்லாம் பெரிய விசயமே இல்லை பவி.. Leave it பவி"
"ம்"
" சரி நீ இரு நான் பூரி சுடுறன்"
" நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா? "
" நீயே பசியோட இருக்க… நீ இரு நான் பண்றன்" என்றவன் வேலையை செய்ய அதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பவி….
………………………………………………..
கிரண் வீடு……………..
பவியும் கிரணும் வீட்டுக்கு செல்ல அங்கே தரணி, விஜி, வேதா, கணபதி எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர்… இவர்கள் வந்ததும் விஜி" ரெண்டு பேரும் போய் பிரஸ்ஸாகிட்டு வாங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேணும்"
"சரி அம்மா"
"சரி ஆன்டி"
சிறிது நேரத்தில் இருவரும் வந்தனர். அவர்களுக்கு வேதா குடிப்பதற்கு காப்பி கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தனர்.
"கிரண் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கிறம்… நீ என்ன சொல்ற? "
" எதுக்கு மா இப்போ? "
" எல்லாம் காலாகாலத்துல நடக்கணும்ல கிரண்"
"அதுவந்து அப்பா"
"என்ன கிரண்?"
"அம்மா அப்பா இன்னைக்கு நானே இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தன்"
"என்ன விசயம்? "
" அதுவந்து நானும் பிருந்தாவும் லவ் பண்றம் " என்றான்.
" என்னது லவ்வா? "
" ஏன்மா நான் லவ் பண்ணக்கூடாதா? "
"நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா என்ன பண்ணுவ? "
"நீங்க என்னோட விருப்பத்திற்கு எதிராக எதுவும் சொல்ல மாட்டீங்கனு தெரியும்."
"நான் உனக்கு வேற பொண்ணு பார்த்திருக்கிறன்… "
" அம்மா பிருந்தாவை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டன். "
" பிருந்தா நீ என்ன சொல்ற? "
" ஆமா ஆன்டி நான் கிரணை ரொம்ப லவ் பண்றன்… எங்களை பிரிச்சிடாதீங்க ஆன்டி பிளீஸ் "
"அதெப்பிடி பிருந்தா உனக்கு என் பையனை கல்யாணம் பண்ணி வைக்க முடியும்? "
" ஏன் ஆன்டி? " என்று அழும் நிலைக்குச் சென்றாள் பிருந்தா…
" அம்மா அவளே அழ வைக்காதீங்க.. பிருந்தா உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். "
" விஜி விளையாடினது போதும்"
" சரிங்க பிருந்தா கிரண் நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றது எங்களுக்கு தெரிய வர்றதுக்கு முன்னாடியே நாங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்து சம்மந்திக்கிட்ட பேசினம்… அப்போதான் அவங்க சொன்னாங்க நீங்க லவ் பண்றதா… எங்ககிட்ட சொல்லாம மறைச்சதுக்காகதான் சும்மா விளையாடினேன்.. "
" ஐயோ அம்மா நான் பயந்திட்டன்… நாங்களே இன்னைக்கு எங்களோட விசயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தம்"
" நம்பிட்டேன்… பிருந்தா ஹாப்பியா? "
" ரொம்ப ஆன்டி"
" இன்னும் எதுக்கும்மா ஆன்டினு சொல்ற? அழகா அத்தை னு சொல்லு"
" சரி அத்தை"
" கிரண்.. உன்னோட வாழ்க்கை இப்பிடியே போயிடுமோனு ரொம்ப பயந்திட்டே இருந்தன்பா.. நல்ல வேளை பிருந்தா வந்தா… சரி டீம் எல்லாம் ஓகேவா எப்போ project work ஸ்டார்ட் பண்றீங்க? "
" நாளைக்கு அப்பா… "
" கவனமா பண்ணுங்க.. இனிமேல் அந்த வீராவுக்கு தோல்வியேதான் கிடைக்கணும்"
" கண்டிப்பா அப்பா"
" மாமா நாம ஒரு வேலை பண்ணணும் "
" என்ன வேலை? "
" அந்த வீரா கொஞ்ச நாளைக்கு கம்பனிக்கு போகலனா அவனோட சைட்ல இருக்கிற பார்ட்னர்ஸை நம்ம பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வந்திடலாம்"
" நல்ல யோசனை சொன்ன பிருந்தா…அதுக்கு என்ன பண்ணணும்னு நான் சொல்றன்"
" சரி அத்தை"
" சரி வாங்க போய் சாப்பிடலாம்"
" ம்" என்றவர்கள் சாப்பிடச் சென்றனர்…
…………………………………………………..
வீரா சாப்பாட்டை அவனது அறைக்கு கொண்டு வரச் சொன்னதால் சித்து ஒரு தட்டை எடுத்து சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குள் சென்றாள்…
" சாப்பாடு"
" அங்க மேசையில வை"
" சரி" என்றவள் சாப்பாட்டை வைத்துவிட்டுச் செல்ல,
"ஏய் நில்லு.. சாப்பாட்டை நீ வச்சிட்டு போனா யாரு பரிமாறுவா? வந்து பரிமாறு"
"சரி" என்ற சித்து வீரா சாப்பிடுவதற்கு சாப்பாட்டை பரிமாறினாள். சாப்பிட்ட பின் தட்டுக்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போனவளை..
" ஏய் உன்னை யாரு போக சொன்ன?"
"சாப்பிட்டீங்க அதுதான்"
" இந்த பியர்ரை கிலாஸ்ல ஊத்திக் கொடு"
" நீங்க குடிப்பீங்களா? "
" ஆமா… இது என்னோட விருப்பம்..சொல்றதை செய்"
"இல்லை இது வேணாமே"
"ஏய் என்ன சத்தம் வருது… நான் சொல்றதை நீ கேளு… தேவையில்லாமல் பேசாத"
"அதுக்கில்லை… இத குடிச்சி குடிச்சி உங்களோட உடம்புக்குத்தான் கேடுங்க"
" எனக்கு என்ன நடந்தா உனக்கு என்ன? நீ நான் என்ன சொல்றன்னோ அதை செய்"
" இதுவே உங்களோட அம்மா உயிரோட இருந்து சொன்னா கேட்பீங்கதானே… நீங்க இப்பிடி குடிச்சிட்டு இருக்கிறதை பார்க்கும் போது அவங்களுக்கு எப்பிடி இருக்கும்? இப்பிடி ஒரு குடிகாரனை பெத்துட்டமோனு கவலப்படமாட்டாங்க"
" ஏய் "என்றவன் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்தான்..
" உன்னை கொன்றுவன் என்னோட அம்மா என்னை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டாங்க.. உனக்கு என்னடி தெரியும் என்னப் பற்றி… நான் என்னோட அம்மாகூட எப்பிடி இருந்தன் தெரியுமா? நான் ஏன் குடிக்கிறன்னு தெரியுமா? எதுவுமே தெரியாம பேச வந்திட்டா போடி…"
"சொ… ன்…னா…ல்…தா…னே ….தெ…ரி…யு….ம்.."
" உங்கிட்ட எதுக்கு நான் சொல்லனும்" என்றவன் மேலும் அவள் கழுத்தை இறுக்க…
" சரி இன்னைக்கு நம்மளோட உயிரு போயிடும் " என நினைத்த சித்து நடுங்கி விட்டாள்… அவளால் மூச்செடுக்க முடியவில்லை… கண்கள் மேல் நோக்கி செல்ல அவளைது கையால் அவனது கையில் அடித்தாள். அதன் பின்னே அவளைப் பார்த்த வீரா தனது கையை அவளது கழுத்திலிருந்து எடுக்க
"க்கும்….. க்கும்" என்று இருமினாள்…
" இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. இனிமேல் என்னோட அம்மாவை பற்றி ஏதாச்சும் பேசின உயிரோட விடவே மாட்டன்.. என் கண்ணு முன்னாடி நிற்காத" என்றவன் பியர் பாட்டிலை போட்டு உடைத்தான். அதில் பயந்த சித்து விட்டால் போதும் என்றும் ஓடிவிட்டாள்…
தனது அறைக்கு வந்து தண்ணீர் குடித்த பின்னரே அவளுக்கு உயிர் வந்தது...
"இவரை எப்பிடி மாத்துறது? ரொம்ப கஷ்டம் போலேயே.... இதுக்கு என்ன பண்ணலாம்? நாளைக்கு சதீஷ் அண்ணாக்கிட்டயே உதவி கேக்கலாம்... அவருதான் ஏதாச்சும் பண்ணுவாரு" என்று முடிவெடுத்தாள்.
இங்கே அறையில் அடுத்த பியர் பாட்டிலை குடிப்பதற்கு எடுத்த வீராவுக்கு சித்து கேட்டது ஞாபகம் வர அதைக் குடிக்க முடியாமல் எடுத்த இடத்திலையே வைத்து விட்டு சென்று படுக்கையில் விழுந்தான்….
"என்ன வீரா அந்த பொண்ணு சொன்னதுக்காக குடிக்காம படுத்திட்ட"
"நீ யாரு?"
"நான் யாரா? நான்தான் உன்னோட மனசாட்சி"
"மனசாட்சியா நீ எதுக்கு இப்போ வந்த?"
"உங்கிட்ட சில விசயம் கேட்கலாம்னு வந்தன்"
"என்ன கேக்கணும்?"
"நீ அந்த பொண்ணை கொடுமைப்படுத்தத் தானே கடத்திட்டு வந்த?"
"ஆமா"
" ஆனால் நீ கொடுமைப்படுத்தலையே"
" ஏன் நான் கொடுமைப்படுத்தல.. நான் பண்ணிட்டு இருக்கேன்"
"இதை என்ன நம்ப சொல்றியா? உன்னால அவளை கொடுமைப்படுத்த முடியலை... அதுதான் உண்மை"
" இல்லை... நான் அவளை கொடுமைப்படுத்துவன் "
"உன்னால முடியாது"
"இல்லை என்னால முடியும்" என்று லயன் மனசாட்சியுடன் சண்டை போடும் போது சித்து கத்தும் சத்தம் கேட்டது... உடனே அவளது அறைக்குச் சென்றான்..
அங்கே சித்து…..
"அப்பா... அப்பா.... அப்பா... எங்கிட்ட வந்திடுங்க அப்பா.... ஐயோ நெருப்பு... நெருப்பு...யாராவது வாங்க" என்று அழுதுகொண்டிருந்தாள்..
வீரா அவள் அருகில் சென்று பார்த்தாள் அங்கே சித்து தூக்கத்தில் ஏதையோ சொல்லி அழுதாள்...
“அவளருகில் இருந்த வீரா மெதுவாக அவளை எழுப்ப முயன்றான்.. ஆனால் அவள் எழும்பாமல் அழுது கொண்டிருந்தாள்… திடீரென பயந்து அழுது கொண்டிருந்தவள் செயலில் வீரா அதிர்ச்சியடைந்தான்…
வீரா ஏன் அதிர்ச்சி அடைந்தான்????
மலரும் …………………………………