- Joined
- Feb 28, 2022
- Messages
- 441
மலர் : 16
சித்து தூக்கத்தில் அழுது கொண்டு இருக்க அவளருகில் வந்த வீரா அவளை எழுப்ப முயன்றான்.. ஆனால் சித்துவோ எழும்பாமல் அழுது கொண்டு இருந்தவள் திடீரென வீராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு "அப்பாவை காப்பாத்துங்க…. அப்பா…. அப்பா.." என்று அழுதாள்..
கணபதியை காப்பாற்ற சொல்லி என்னிடமே சொல்றியா என நினைத்தவன் அவள் கைகளை உதறினான்… அவனுக்கு கோபம் வந்தது…
"ஏய் எழுந்திரு" என்று அவளை போட்டு உலுக்க எழுந்தாள் சித்து.. அவனை தனது அறையில் பார்த்தவள் பயந்து பெட்சீட்டை இழுத்து தன்னை மூடிக் கொண்டாள்.. அவளது செயலில் கோபம் தலைக்கேற " என்னடி என்னைப் பார்த்தா உனக்கு பொறுக்கி மாதிரி தெரியுதா? உன்னோட அப்பன்தான் பொறுக்கி" என்றான்..
" இங்க பாருங்க என்ன என்ன வேணாலும் சொல்லுங்க.. ஆனால் என்னோட அப்பாவை பற்றி மட்டும் பேசாதீங்க எனக்கு கோபம் வரும்".
"என்ன பெருசா கோபம் வரும்.. நியாயமா கோபப்பட வேண்டியது நான்தான்.. இப்போ எதுக்கு என்னை பார்த்து பெட்சீட்டை எடுத்து உன்னை மூடின? "
" அது திடீரென உங்களை இங்க பார்த்தும்… "
" என்ன உன்கிட்ட தப்பா நடந்துக்க வந்துருக்கன்னு நினைச்சியா? "
" நீங்க ஏன் இப்போ இங்க வந்தீங்க? "
"இது என்னோட வீடு நான் எங்க வேணாலும் வருவன்… உனக்கு உன்னோட அப்பானா ரொம்ப பிடிக்குமா? "
" ஆமா என்னோட அப்பாவை ரொம்ப பிடிக்கும்… " அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே அவனுக்கு அதெப்படி அந்த கணபதியை இவள் பிடிக்கும்னு சொல்லலாம்னு கோபத்தில் அவளை இழுத்து அவள் இதழில் முத்தமிட்டு அவளது பேச்சை நிறுத்தினான். சித்துவுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் இவர் எப்பிடி முத்தம் கொடுக்கலாம் என்று அவனை தள்ளி விட முயன்றாள்.. சிங்கத்தின் முன் சிட்டுக் குருவியால் என்ன பண்ண முடியும்? வீரா கோபத்தில் அவள் இதழ்களை கடித்தான்..சித்து வலியில் ஆ.. என்றாள்.. அதன் பின்னரே அவளை விட்டான்.. அவள் கண்கள் கலங்கியிருந்தன…
"இன்னொரு தடவை என் முன்னாடி அப்பா… அப்பான்னு சொல்லிட்டு இருந்த கொன்றுவன்.." என்றவன் அங்கிருந்து தனது அறைக்குச் சென்றான்..
சித்து தான் இப்போ ஏன் இவரு இப்பிடி பண்ணினாருனு தெரியாம உட்கார்ந்து இருந்தாள்…
"அப்பா நீங்க மட்டும் என்கூட இருந்திருந்தால் இப்பிடி எல்லாம் நடக்குமா? ஏன்பா என்னை விட்டுட்டு போனீங்க? " என்று தன்னை தனியே விட்டுச் சென்ற தந்தையை நினைத்து அழுதாள்….
……………………………………………
சமையலறையில் சதீஷ் பூரி சுட்டுக் கொடுக்க அதை சாப்பிட்டபடி இருந்த பவிக்கு சித்துவின் ஞாபகம் வந்தது.. அக்கா எப்பிடி கஸ்ரப்படுறாளோ??? இந்த அம்மா அப்பா கூட பிருந்தாக்கா பேச்சை கேட்டுட்டு நடக்கிறாங்களே.. இவங்ககூட என்னை தேடலையே… அந்த கிரண் அவ்வளவு முக்கியமா போயிட்டான்ல… சித்துக்கா என்கூட இருந்தா என்னை நிச்சயம் வெளியே போக விட்டிருக்க மாட்டா… என்னை தேடியாச்சும் பார்ப்பா… என்று நினைத்தவள் கண்கள் குளமாகின…
"இன்னும் ஒரு பூரி தரட்டுமா?" என்று கேட்டவாறு அவள் பக்கம் திரும்பிய சதீஷ் அவள் அழுவதைப் பார்த்து "பவி என்னாச்சிமா? எதுக்கு அழுற?"
"சதீஷ்" என்றவள் அவனது மார்பில் சாய்ந்து கொண்டு அழுதாள்.. சதீஷ்க்கு என்ன செய்வது தெரியாமல் நின்றான். அவளது அழுகை அதிகமாக மெதுவாக அவளது தலையை வருடிக் கொடுத்தான்…
"என்னாச்சி பவிமாக்கு?"
"சதீஷ் வீட்டு ஞாபகம் வந்திச்சி… வீட்ல யாரும் என்னை தேடலையே… அவ்வளவுக்கு வேண்டாத ஆளா போயிட்டானா நான்? நான் சரியான முடிவுதானே எடுத்தன்.. இவங்க சித்து அக்காவை அந்த வீரா சார்கிட்ட மாட்டி விட்டது எவ்வளவு பெரிய தப்பு? பாவம் சித்துக்கா… என்னால கூட அவளை காப்பாத்த முடியலையே….
அம்மாகூட எனக்கு ஆதரவா பேசலை சதீஷ்….அந்த கிரணுக்காக என்னை வெளியே போக சொல்லிட்டாங்க" என்று குழந்தை போல அழுதாள்…
" இங்க பாரு பவிமா எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்… உனக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லு நான் கூட்டிட்டு போறேன்… "
" இல்லை என்னை தேடாத அவங்ககிட்ட நான் போக மாட்டன்.. எனக்கு சித்துக்காவை பார்க்கணும் போல இருக்கு.. எனக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்கு சதீஷ் "
" பவி சித்துவை பார்க்க நான் ஏற்பாடு பண்றன் சரியா? "
" நெஜமா? "
" நெஜமா நான் ஏற்பாடு பண்றன்… ஆனால் நீ உனக்குன்னு யாரும் இல்லைனு பீல் பண்ணாத… நான் உன் கூடவே இருக்கிறன் சரியா? "
" சரி " என்றவள் அவனிடமிருந்து பிரிந்தாள்..
தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
" என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது பவி… நான் தப்பா ஏதும் எடுத்துக்கல"
" தாங்க்ஸ் சதீஷ் "
" தாங்க்ஸ் சொன்னா அடிவிழும் போ போய் தூங்குங்கு"
" சரி குட் நைட் "என்ற பவி தனது அறைக்குச் சென்றாள்.
சதீஷ் பவியை எப்பிடி சித்துவை மீட் பண்ண வைக்கலாம்னு யோசித்தவாறே சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தான்…..
…………………………………………………….
"என்னங்க"
"என்ன வேதா"
" நம்ம பிருந்தாவுக்கு நல்ல இடத்தில வாழ்க்கை அமைஞ்சது சந்தோசமா இருக்குங்க…"
"ஆமா வேதா ஒரே பையன்… இருக்கிற சொத்து எல்லாம் நம்ம பொண்ணுக்கு தானே"
"சரியா சொன்னீங்க… இனிமேல் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை…"
"உண்மைதான் வேதா"
"நம்ம பவிதான் கோவிச்சுகிட்டு போயிட்டா… எங்க இருக்கிறாளோ தெரியாது"
" அவ அவளோட பிரண்ட்ஸ் வீட்ல இருப்பா… நாளைக்கு பிருந்தாகிட்ட சொல்லி அவளை கூட்டிட்டு வரச் சொல்லுவம்… "
" சரிங்க… நம்ம பிருந்தா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்"
" எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலப்படாம தூங்கு"
" சரிங்க"
……………………………………………..
"குட் மார்னிங் சதீஷ் "
" குட் மார்னிங் பவி"
" என்ன இன்னைக்கு நேரத்திற்கு எழும்பிட்ட? "
" அதுவா காலேஜ்ல நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு… அதுக்கு அட்மிஷன் எடுக்க இன்னைக்கு போகணும்… அதனால்தான்… "
" ஆ.. சரி நீ எந்த காலேஜ்?"
" நான் பாரதி லேடிஸ் காலேஜ்… எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? "
"என்ன பவி பண்ணும்? "
" என்னை காலேஜ்க்கு கூட்டிட்டு போக முடியுமா? அட்மிஷன் வாங்கினதும் இங்க விட்டுட்டு அப்புறம் உங்களால போக முடியுமா? பிளீஸ் ஏன்னு தெரியலை ரொம்ப பயமா இருக்கு"
" பவிமா எதுக்கும் பயப்படாத சரியா? வா நானே காலேஜ்க்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் வேலைக்கு போறன்… போ போய் ரெடியாகு"
" சரி… ரொம்ப தாங்க்ஸ் சதீஷ் "
" இன்னொரு தடவை தாங்க்ஸ் சொன்ன அடிவாங்குவ… இந்தா காப்பி இதை குடிச்சிட்டு அப்புறம் போய் குளி"
" சரி " என்றவள் காப்பியை குடித்துவிட்டு ரெடியாக செல்ல சதீஷ் காலை உணவையும் மதிய உணவையும் செய்துவிட்டு ரெடியாக சென்றான்..
……………………………………………………
காலையில் சித்து எழுந்து குளித்து விட்டு சமையலறையில் காப்பி போட்டுக் கொண்டு வீராவிடம் எடுத்துச் செல்ல பயமாக இருந்தது…
"இரவு இவரு எதுக்காக நம்ம இருந்த அறைக்கு வரணும்? ஏதாச்சும் கேட்க வந்தாரா? ஆனால் நிச்சயமா தப்பு பண்ண வரலை…" என்று யோசித்தாள்.
வீரா உடற்பயிற்சி அறையிலிருந்து "ஏய் காப்பி எங்க?" என்று கேட்க வேகமாக போட்ட காப்பியை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
"ஒரு காப்பி போட இவ்வளவு நேரமா? "
" மௌனம்"
" கொண்டு வா" என்று காப்பியை வாங்கினான்…
……………………………………………………..
கிரண் வீட்டில் எல்லோரும் காப்பி குடித்துக் கொண்டு இருந்தனர்…
" அப்பா வீரா நேற்று போன் பண்ணாணா?"
"இல்லை பிருந்தா.. ஏன் கேக்கிற?"
"இல்லை அவன் அவளை கடத்தினதில் இருந்து டெய்லி போன் பண்ணுவான்.. நேற்று ஏன் எடுக்கல…ஒருவேளை நம்ம மேல சந்தேகம் வந்திருக்குமா?"
"அதெப்பிடி சந்தேகம் வரும்?"
"அப்பா அவளோட உண்மையான அப்பா இப்பிடி இருக்க மாட்டாங்க அவன்கிட்ட கெஞ்சிட்டு இருப்பாங்க… நாம அவன் பேசினால்தான் பேசுறம்.. அதனால ஒண்ணு பண்ணுங்க நீங்க இப்போ அவனுக்கு போன் போட்டு சித்துவை விட்டுட சொல்லுங்க"
" ஆமா சம்பந்தி பிருந்தா சொல்றது சரிதான் நீங்க போன் பண்ணுங்க"
" சரி" என்றவர் வீராவுக்கு போன் பண்ணினார்…
அதே நேரத்தில் வீரா சித்துவின் காப்பியை வாங்கினான்…
யாரு காலையிலேயே போன் என்று நினைத்தவன் போனை எடுத்துப் பார்க்க கணபதி தான் அழைத்திருந்தார்.. அவரது பெயரைப் பார்த்ததும் வீராவுக்கு கோபம் வந்தது…
" ஹலோ "
" சேர் என் பொண்ணை விட்டுடுங்க சேர்"
"அப்பிடி எல்லாம் விட முடியாது"
"சேர் என்மேல இருக்கிற கோபத்தை என் பொண்ணு மேல காட்டிடாதீங்க சேர்… அவளால சின்ன அடியைக் கூட தாங்கிக்க முடியாது….. அவளை பூ மாதிரி வளர்த்திருக்கிறன் சேர்…. என் பொண்ணை விட்டுடுங்க சேர்"
"என்ன சொன்ன உன் பொண்ணால சின்ன அடியைக்கூட தாங்கிக்க முடியாதா? உன் பொண்ணை நான் பண்ணப்போற சித்திரவதையில அழப்போறா நீ லைன்லயே இருந்து அத கேட்டு ரசி… போனை கட் பண்ண உன் பொண்ணை கொலை பண்ணிடுவன்" என்றவன் கோபத்தில் கையிலிருந்த சூடான காப்பியை சித்து முகத்தில் ஊற்ற சித்து" ஐயோ அம்மா எரியுதே… " என்று அழுதாள்… அவளால் அதை தாங்கிக்க முடியவில்லை… துடித்துப் போனாள்… அவனை ஒரு பார்வை பார்த்தாள்..
" கேட்டியா உன் பொண்ணோட கதறலை… இப்போ நீயும் அங்க இருந்து கதறு" என்றவன் போனை கட் பண்ணிவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அவனது அறைக்கு ரெடியாக சென்றான்…
அவன் சென்றதும் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு தனது அறைக்குச் சென்று தனது நிலையை நினைத்து ஒரு மூச்சு அழுதாள்…. பின் முகத்தை கழுவி விட்டு வந்து காலை உணவை செய்தாள்….
அறைக்குச் சென்ற வீராவுக்கு அவளது பார்வை ஏதோ செய்தது…அவளை பற்றிய தகவல் முதலில் கிடைக்கட்டும் அப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவெடுக்கலாம்" என்று நினைத்தவன் ரெடியாகினான்..
…………………………………………………
" அப்பா என்ன பண்றானோ தெரியலை…நல்லா மாட்டிட்டா அவ"
" ஆமா மா ஐயோ அம்மானு கதறுறா "
"அம்மா அந்த வீராவை கொஞ்ச நாளைக்கு கம்பனிப் பக்கமே வரவிடக் கூடாது.. அதற்கு என்ன பண்ணலாம்? "
" அதுதான் யோசிக்கிறன் கிரண்.. என்ன பண்றதுனு புரியலை…எது பண்ணாலும் அவன் தப்பிச்சிடுறான்… "
" அத்தை பேசாம அவனை accident பண்ணிட்டா"
" அவனை இப்போ accident பண்ணா நம்ம மேல சந்தேகம் வரும்ல"
" இல்லை அத்தை நிச்சயமா வராது… அவங்க கம்பனில இருந்து விலகி வந்தவங்க மேல வீரா கோர்ட்ல கேஸ் போட்டிருக்கிறான்… நம்ம இப்போ இந்ந accidenta பண்ணா எல்லோருக்கும் அவங்க மேலதான் சந்தேகம் வரும்"
" சரியா சொன்ன பிருந்தா.. இப்பிடியே பண்ணிடலாம் விஜி"
" ஆனால் மாமா நம்மளோட ஆளுங்க வேணாம்… வேற ஆளுங்களை வரச் சொல்லி செய்திடுவம் "
" சரி பிருந்தா அப்பிடியே பண்ணிடு"
" சரி மாமா"
" பிருந்தா "
" சொல்லுங்க அம்மா"
" உனக்கு கல்யாணம் நடக்க போகுது இந்த நேரத்தில பவியும் நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும் "
" அவ கிரணை அவமானப்படுத்தி இருக்கிறா அம்மா"
" அவ சின்னப் பொண்ணு பிருந்தா… "
" சின்னப் பொண்ணு என்ன பேச்சு பேசினா? "
" சரி நீயாவது பொறுத்துப் போடி… அவ உன்னோட தங்கச்சி பிருந்தா.. அவளுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கிறா"
" பிருந்தா அதுதான் அம்மா இவ்வளவு சொல்றாங்கல "
" சரி அத்தை.. அம்மா நீங்களே போய் கூட்டிட்டு வாங்க"
" அவ எங்க இருக்குறானு தெரியலை பிருந்தா"
" என்னம்மா சொல்றீங்க? அவகூட நீங்க பேசலையா? "
" இல்லை பிருந்தா… அவ கோபத்தில போனை வச்சிட்டு போயிட்டா எங்க இருக்கிறா? என்ன பண்றான்னே தெரியலை"
" என்ன சம்பந்தி இதை முதல்லையே சொல்லியிருக்கலாம்ல… கிரண் நீ பிருந்தா கூட போ… போய் பவியோட பிரண்ட்ஸ் வீட்ல அவ இருக்கிறாளானு பாருங்க"
" சரி அம்மா… பிருந்தா வா போகலாம்"
" சரி.. அம்மா நான் போய் பார்த்திட்டு போன் பண்றன்"
" சரிமா"
……………………………………………………..
சதீஷ் வீராவிடம் போன் பண்ணி ஒன் ஹவர் பர்மிஷன் கேட்டுட்டு பவியை அழைத்துக் கொண்டு காலேஜ்க்கு வந்தான்..
" பவி நீ உள்ள போய் அட்மிஷன் வாங்கிட்டு வா நான் இங்கையே வெயிட் பண்றன்… "
" நீங்களும் உள்ள வரலாம்ல சதீஷ் "
"இல்லை பவி… உன் பிரண்ட்ஸ் உன்னோட என்னைப் பார்த்து நான் யாருனு கேட்டா என்ன சொல்றது? உன்னை அவங்க தப்பா நினைச்சிட்டா அது நம்ம ரெண்டு பேருக்கும் சங்கடம்.. நான் இங்கையே இருக்கிறன் நீ போய் வாங்கிட்டு வா"
" சரி" என்றவள் principal அறைக்குச் சென்று அட்மிஷன் வாங்கினாள்.. பின் அவளது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர்களது டிபார்ட்மெண்ட் ஹெட் அனைவரையும் மெயின் ஹால்க்கு வரச் சொன்னார். எல்லோரும் சென்றதும்,
" ஹாய் students உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் … இந்த தடவை நீங்க ட்ரைனிங் போறதுக்கு the famous லயன் குரூப் ஆஃப் கம்பனிக்கிட்ட" என்றதைக் கேட்ட பவிக்கு சந்தோசமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது…
"ஆனால் இங்க ட்ரைனிங் பண்ண முப்பது பேரை நாங்க அனுப்பபுவோம்… அங்க கம்பனியில இன்டர்வியூ வைத்து எத்தனை பேரு அங்க ட்ரைனிங் பண்ணலாம்னு செலக்ட் பண்ணுவாங்க…. உங்களோட எக்ஸாம் முடிய நீங்க இன்டர்வியூ போகணும்… உங்களோட ட்ரைனிங்க நல்லபடியா செய்தால் அங்கேயே வேலையும் கிடைக்க வாய்ப்பு இருக்கு… சோ எல்லோரும் கட்டாயம் இன்டர்வியூ ல கலந்துக்குங்க.. இப்போ நீங்க போகலாம்… good luck for all"
மீட்டிங் முடிந்ததும் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு சதீஷூடம் வந்தாள் பவி… சதீஷ் போனை பார்த்துக் கொண்டு இருக்க அவனது தோளில் தட்டினாள் பவி..
"என்ன பவி முகம் ஒரு மாதிரி இருக்கு?"
"சதீஷ் ஒரு bad news and good news"
"என்ன அது?"
"அதை வீட்டுக்கு போய் சொல்றன்… வா போகலாம்" என்றவள் திடீரென அவனை அணைத்து அவனது நெஞ்சில் சாய்ந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டாள்.
"பவி என்ன பண்ற?"
"பிளீஸ் சதீஷ்" என்றாள். சதீஷ் எதுவும் சொல்லவில்லை… அப்போதுதான் அவர்களை கடந்து சென்ற பிருந்தாவையும் கிரணையும் பார்த்தான்… ஆனால் அவர்கள் இவர்களை காணவில்லை…
அவர்கள் சென்றதும் மெல்ல தலையை திருப்பி பார்த்தாள் பவி…
"சதீஷ் அங்க போறாங்களே அதுதான் என் அக்கா… அவ பக்கத்தில போறது கிரண்…"
சதீஷ் அவர்களை தெரியாத மாதிரி "ஆ இவங்க தான் உன்னோட அக்காவா? இவங்க எதுக்கு இங்க வந்திருக்கிறாங்க? ஒரு வேளை உன்னைத் தேடி வந்திருக்கிறார்களோ?"
"அவளாவது என்னைத் தேடி வர்றதாவது… ஏதாவது வேலையா வந்திருப்பா.. முதல்ல நாம இங்க இருந்து போகலாம் வா" என்று சதீஷை அவசரப்படுத்தினாள்..
"சரி சரி போகலாம் " என்றவன் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்…
………………………………………………..
சித்துவுக்கு முகம் கழுவி விட்டு வந்தும் எரிச்சல் சரியாகவில்லை… அந்த எரிச்சலை தாங்கிக்க முடியாமல் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது…
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமைத்த உணவை எடுத்து வந்து மேசையில வைக்க வீராவும் கீழே வந்து கதிரையில் அமர அவனுக்கு சாப்பாட்டை கண்ணீரை துடைத்தபடி பரிமாறினாள்…
அதைப் பார்த்த வீராவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது… எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு கைகளை கழுவிக் கொண்டு ஹாலில் சதீஷ்க்காக காத்திருந்தான்… அவன் அங்கே இருந்தாலும் அவனது பார்வை சமையலறையில் இருக்கும் சித்து மீதே இருந்தது….
அவளைப் பார்த்தபடி இருந்தவன் எழுந்து சமையலறைக்கு சென்றான்.. அவன் வருவதை உணராத சித்து முகத்தை சேலையால் துடைத்தபடி நின்றிருந்தாள்…
அவள் அருகில் வந்த வீரா செய்த செயலால் சித்து அதிர்ச்சி அடைந்தாள்….
சித்து ஏன் அதிர்ச்சி அடைந்தாள்????
மலரும் ………………………………
சித்து தூக்கத்தில் அழுது கொண்டு இருக்க அவளருகில் வந்த வீரா அவளை எழுப்ப முயன்றான்.. ஆனால் சித்துவோ எழும்பாமல் அழுது கொண்டு இருந்தவள் திடீரென வீராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு "அப்பாவை காப்பாத்துங்க…. அப்பா…. அப்பா.." என்று அழுதாள்..
கணபதியை காப்பாற்ற சொல்லி என்னிடமே சொல்றியா என நினைத்தவன் அவள் கைகளை உதறினான்… அவனுக்கு கோபம் வந்தது…
"ஏய் எழுந்திரு" என்று அவளை போட்டு உலுக்க எழுந்தாள் சித்து.. அவனை தனது அறையில் பார்த்தவள் பயந்து பெட்சீட்டை இழுத்து தன்னை மூடிக் கொண்டாள்.. அவளது செயலில் கோபம் தலைக்கேற " என்னடி என்னைப் பார்த்தா உனக்கு பொறுக்கி மாதிரி தெரியுதா? உன்னோட அப்பன்தான் பொறுக்கி" என்றான்..
" இங்க பாருங்க என்ன என்ன வேணாலும் சொல்லுங்க.. ஆனால் என்னோட அப்பாவை பற்றி மட்டும் பேசாதீங்க எனக்கு கோபம் வரும்".
"என்ன பெருசா கோபம் வரும்.. நியாயமா கோபப்பட வேண்டியது நான்தான்.. இப்போ எதுக்கு என்னை பார்த்து பெட்சீட்டை எடுத்து உன்னை மூடின? "
" அது திடீரென உங்களை இங்க பார்த்தும்… "
" என்ன உன்கிட்ட தப்பா நடந்துக்க வந்துருக்கன்னு நினைச்சியா? "
" நீங்க ஏன் இப்போ இங்க வந்தீங்க? "
"இது என்னோட வீடு நான் எங்க வேணாலும் வருவன்… உனக்கு உன்னோட அப்பானா ரொம்ப பிடிக்குமா? "
" ஆமா என்னோட அப்பாவை ரொம்ப பிடிக்கும்… " அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே அவனுக்கு அதெப்படி அந்த கணபதியை இவள் பிடிக்கும்னு சொல்லலாம்னு கோபத்தில் அவளை இழுத்து அவள் இதழில் முத்தமிட்டு அவளது பேச்சை நிறுத்தினான். சித்துவுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் இவர் எப்பிடி முத்தம் கொடுக்கலாம் என்று அவனை தள்ளி விட முயன்றாள்.. சிங்கத்தின் முன் சிட்டுக் குருவியால் என்ன பண்ண முடியும்? வீரா கோபத்தில் அவள் இதழ்களை கடித்தான்..சித்து வலியில் ஆ.. என்றாள்.. அதன் பின்னரே அவளை விட்டான்.. அவள் கண்கள் கலங்கியிருந்தன…
"இன்னொரு தடவை என் முன்னாடி அப்பா… அப்பான்னு சொல்லிட்டு இருந்த கொன்றுவன்.." என்றவன் அங்கிருந்து தனது அறைக்குச் சென்றான்..
சித்து தான் இப்போ ஏன் இவரு இப்பிடி பண்ணினாருனு தெரியாம உட்கார்ந்து இருந்தாள்…
"அப்பா நீங்க மட்டும் என்கூட இருந்திருந்தால் இப்பிடி எல்லாம் நடக்குமா? ஏன்பா என்னை விட்டுட்டு போனீங்க? " என்று தன்னை தனியே விட்டுச் சென்ற தந்தையை நினைத்து அழுதாள்….
……………………………………………
சமையலறையில் சதீஷ் பூரி சுட்டுக் கொடுக்க அதை சாப்பிட்டபடி இருந்த பவிக்கு சித்துவின் ஞாபகம் வந்தது.. அக்கா எப்பிடி கஸ்ரப்படுறாளோ??? இந்த அம்மா அப்பா கூட பிருந்தாக்கா பேச்சை கேட்டுட்டு நடக்கிறாங்களே.. இவங்ககூட என்னை தேடலையே… அந்த கிரண் அவ்வளவு முக்கியமா போயிட்டான்ல… சித்துக்கா என்கூட இருந்தா என்னை நிச்சயம் வெளியே போக விட்டிருக்க மாட்டா… என்னை தேடியாச்சும் பார்ப்பா… என்று நினைத்தவள் கண்கள் குளமாகின…
"இன்னும் ஒரு பூரி தரட்டுமா?" என்று கேட்டவாறு அவள் பக்கம் திரும்பிய சதீஷ் அவள் அழுவதைப் பார்த்து "பவி என்னாச்சிமா? எதுக்கு அழுற?"
"சதீஷ்" என்றவள் அவனது மார்பில் சாய்ந்து கொண்டு அழுதாள்.. சதீஷ்க்கு என்ன செய்வது தெரியாமல் நின்றான். அவளது அழுகை அதிகமாக மெதுவாக அவளது தலையை வருடிக் கொடுத்தான்…
"என்னாச்சி பவிமாக்கு?"
"சதீஷ் வீட்டு ஞாபகம் வந்திச்சி… வீட்ல யாரும் என்னை தேடலையே… அவ்வளவுக்கு வேண்டாத ஆளா போயிட்டானா நான்? நான் சரியான முடிவுதானே எடுத்தன்.. இவங்க சித்து அக்காவை அந்த வீரா சார்கிட்ட மாட்டி விட்டது எவ்வளவு பெரிய தப்பு? பாவம் சித்துக்கா… என்னால கூட அவளை காப்பாத்த முடியலையே….
அம்மாகூட எனக்கு ஆதரவா பேசலை சதீஷ்….அந்த கிரணுக்காக என்னை வெளியே போக சொல்லிட்டாங்க" என்று குழந்தை போல அழுதாள்…
" இங்க பாரு பவிமா எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்… உனக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லு நான் கூட்டிட்டு போறேன்… "
" இல்லை என்னை தேடாத அவங்ககிட்ட நான் போக மாட்டன்.. எனக்கு சித்துக்காவை பார்க்கணும் போல இருக்கு.. எனக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்கு சதீஷ் "
" பவி சித்துவை பார்க்க நான் ஏற்பாடு பண்றன் சரியா? "
" நெஜமா? "
" நெஜமா நான் ஏற்பாடு பண்றன்… ஆனால் நீ உனக்குன்னு யாரும் இல்லைனு பீல் பண்ணாத… நான் உன் கூடவே இருக்கிறன் சரியா? "
" சரி " என்றவள் அவனிடமிருந்து பிரிந்தாள்..
தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
" என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது பவி… நான் தப்பா ஏதும் எடுத்துக்கல"
" தாங்க்ஸ் சதீஷ் "
" தாங்க்ஸ் சொன்னா அடிவிழும் போ போய் தூங்குங்கு"
" சரி குட் நைட் "என்ற பவி தனது அறைக்குச் சென்றாள்.
சதீஷ் பவியை எப்பிடி சித்துவை மீட் பண்ண வைக்கலாம்னு யோசித்தவாறே சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தான்…..
…………………………………………………….
"என்னங்க"
"என்ன வேதா"
" நம்ம பிருந்தாவுக்கு நல்ல இடத்தில வாழ்க்கை அமைஞ்சது சந்தோசமா இருக்குங்க…"
"ஆமா வேதா ஒரே பையன்… இருக்கிற சொத்து எல்லாம் நம்ம பொண்ணுக்கு தானே"
"சரியா சொன்னீங்க… இனிமேல் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை…"
"உண்மைதான் வேதா"
"நம்ம பவிதான் கோவிச்சுகிட்டு போயிட்டா… எங்க இருக்கிறாளோ தெரியாது"
" அவ அவளோட பிரண்ட்ஸ் வீட்ல இருப்பா… நாளைக்கு பிருந்தாகிட்ட சொல்லி அவளை கூட்டிட்டு வரச் சொல்லுவம்… "
" சரிங்க… நம்ம பிருந்தா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்"
" எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலப்படாம தூங்கு"
" சரிங்க"
……………………………………………..
"குட் மார்னிங் சதீஷ் "
" குட் மார்னிங் பவி"
" என்ன இன்னைக்கு நேரத்திற்கு எழும்பிட்ட? "
" அதுவா காலேஜ்ல நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு… அதுக்கு அட்மிஷன் எடுக்க இன்னைக்கு போகணும்… அதனால்தான்… "
" ஆ.. சரி நீ எந்த காலேஜ்?"
" நான் பாரதி லேடிஸ் காலேஜ்… எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? "
"என்ன பவி பண்ணும்? "
" என்னை காலேஜ்க்கு கூட்டிட்டு போக முடியுமா? அட்மிஷன் வாங்கினதும் இங்க விட்டுட்டு அப்புறம் உங்களால போக முடியுமா? பிளீஸ் ஏன்னு தெரியலை ரொம்ப பயமா இருக்கு"
" பவிமா எதுக்கும் பயப்படாத சரியா? வா நானே காலேஜ்க்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் வேலைக்கு போறன்… போ போய் ரெடியாகு"
" சரி… ரொம்ப தாங்க்ஸ் சதீஷ் "
" இன்னொரு தடவை தாங்க்ஸ் சொன்ன அடிவாங்குவ… இந்தா காப்பி இதை குடிச்சிட்டு அப்புறம் போய் குளி"
" சரி " என்றவள் காப்பியை குடித்துவிட்டு ரெடியாக செல்ல சதீஷ் காலை உணவையும் மதிய உணவையும் செய்துவிட்டு ரெடியாக சென்றான்..
……………………………………………………
காலையில் சித்து எழுந்து குளித்து விட்டு சமையலறையில் காப்பி போட்டுக் கொண்டு வீராவிடம் எடுத்துச் செல்ல பயமாக இருந்தது…
"இரவு இவரு எதுக்காக நம்ம இருந்த அறைக்கு வரணும்? ஏதாச்சும் கேட்க வந்தாரா? ஆனால் நிச்சயமா தப்பு பண்ண வரலை…" என்று யோசித்தாள்.
வீரா உடற்பயிற்சி அறையிலிருந்து "ஏய் காப்பி எங்க?" என்று கேட்க வேகமாக போட்ட காப்பியை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
"ஒரு காப்பி போட இவ்வளவு நேரமா? "
" மௌனம்"
" கொண்டு வா" என்று காப்பியை வாங்கினான்…
……………………………………………………..
கிரண் வீட்டில் எல்லோரும் காப்பி குடித்துக் கொண்டு இருந்தனர்…
" அப்பா வீரா நேற்று போன் பண்ணாணா?"
"இல்லை பிருந்தா.. ஏன் கேக்கிற?"
"இல்லை அவன் அவளை கடத்தினதில் இருந்து டெய்லி போன் பண்ணுவான்.. நேற்று ஏன் எடுக்கல…ஒருவேளை நம்ம மேல சந்தேகம் வந்திருக்குமா?"
"அதெப்பிடி சந்தேகம் வரும்?"
"அப்பா அவளோட உண்மையான அப்பா இப்பிடி இருக்க மாட்டாங்க அவன்கிட்ட கெஞ்சிட்டு இருப்பாங்க… நாம அவன் பேசினால்தான் பேசுறம்.. அதனால ஒண்ணு பண்ணுங்க நீங்க இப்போ அவனுக்கு போன் போட்டு சித்துவை விட்டுட சொல்லுங்க"
" ஆமா சம்பந்தி பிருந்தா சொல்றது சரிதான் நீங்க போன் பண்ணுங்க"
" சரி" என்றவர் வீராவுக்கு போன் பண்ணினார்…
அதே நேரத்தில் வீரா சித்துவின் காப்பியை வாங்கினான்…
யாரு காலையிலேயே போன் என்று நினைத்தவன் போனை எடுத்துப் பார்க்க கணபதி தான் அழைத்திருந்தார்.. அவரது பெயரைப் பார்த்ததும் வீராவுக்கு கோபம் வந்தது…
" ஹலோ "
" சேர் என் பொண்ணை விட்டுடுங்க சேர்"
"அப்பிடி எல்லாம் விட முடியாது"
"சேர் என்மேல இருக்கிற கோபத்தை என் பொண்ணு மேல காட்டிடாதீங்க சேர்… அவளால சின்ன அடியைக் கூட தாங்கிக்க முடியாது….. அவளை பூ மாதிரி வளர்த்திருக்கிறன் சேர்…. என் பொண்ணை விட்டுடுங்க சேர்"
"என்ன சொன்ன உன் பொண்ணால சின்ன அடியைக்கூட தாங்கிக்க முடியாதா? உன் பொண்ணை நான் பண்ணப்போற சித்திரவதையில அழப்போறா நீ லைன்லயே இருந்து அத கேட்டு ரசி… போனை கட் பண்ண உன் பொண்ணை கொலை பண்ணிடுவன்" என்றவன் கோபத்தில் கையிலிருந்த சூடான காப்பியை சித்து முகத்தில் ஊற்ற சித்து" ஐயோ அம்மா எரியுதே… " என்று அழுதாள்… அவளால் அதை தாங்கிக்க முடியவில்லை… துடித்துப் போனாள்… அவனை ஒரு பார்வை பார்த்தாள்..
" கேட்டியா உன் பொண்ணோட கதறலை… இப்போ நீயும் அங்க இருந்து கதறு" என்றவன் போனை கட் பண்ணிவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அவனது அறைக்கு ரெடியாக சென்றான்…
அவன் சென்றதும் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு தனது அறைக்குச் சென்று தனது நிலையை நினைத்து ஒரு மூச்சு அழுதாள்…. பின் முகத்தை கழுவி விட்டு வந்து காலை உணவை செய்தாள்….
அறைக்குச் சென்ற வீராவுக்கு அவளது பார்வை ஏதோ செய்தது…அவளை பற்றிய தகவல் முதலில் கிடைக்கட்டும் அப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவெடுக்கலாம்" என்று நினைத்தவன் ரெடியாகினான்..
…………………………………………………
" அப்பா என்ன பண்றானோ தெரியலை…நல்லா மாட்டிட்டா அவ"
" ஆமா மா ஐயோ அம்மானு கதறுறா "
"அம்மா அந்த வீராவை கொஞ்ச நாளைக்கு கம்பனிப் பக்கமே வரவிடக் கூடாது.. அதற்கு என்ன பண்ணலாம்? "
" அதுதான் யோசிக்கிறன் கிரண்.. என்ன பண்றதுனு புரியலை…எது பண்ணாலும் அவன் தப்பிச்சிடுறான்… "
" அத்தை பேசாம அவனை accident பண்ணிட்டா"
" அவனை இப்போ accident பண்ணா நம்ம மேல சந்தேகம் வரும்ல"
" இல்லை அத்தை நிச்சயமா வராது… அவங்க கம்பனில இருந்து விலகி வந்தவங்க மேல வீரா கோர்ட்ல கேஸ் போட்டிருக்கிறான்… நம்ம இப்போ இந்ந accidenta பண்ணா எல்லோருக்கும் அவங்க மேலதான் சந்தேகம் வரும்"
" சரியா சொன்ன பிருந்தா.. இப்பிடியே பண்ணிடலாம் விஜி"
" ஆனால் மாமா நம்மளோட ஆளுங்க வேணாம்… வேற ஆளுங்களை வரச் சொல்லி செய்திடுவம் "
" சரி பிருந்தா அப்பிடியே பண்ணிடு"
" சரி மாமா"
" பிருந்தா "
" சொல்லுங்க அம்மா"
" உனக்கு கல்யாணம் நடக்க போகுது இந்த நேரத்தில பவியும் நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும் "
" அவ கிரணை அவமானப்படுத்தி இருக்கிறா அம்மா"
" அவ சின்னப் பொண்ணு பிருந்தா… "
" சின்னப் பொண்ணு என்ன பேச்சு பேசினா? "
" சரி நீயாவது பொறுத்துப் போடி… அவ உன்னோட தங்கச்சி பிருந்தா.. அவளுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கிறா"
" பிருந்தா அதுதான் அம்மா இவ்வளவு சொல்றாங்கல "
" சரி அத்தை.. அம்மா நீங்களே போய் கூட்டிட்டு வாங்க"
" அவ எங்க இருக்குறானு தெரியலை பிருந்தா"
" என்னம்மா சொல்றீங்க? அவகூட நீங்க பேசலையா? "
" இல்லை பிருந்தா… அவ கோபத்தில போனை வச்சிட்டு போயிட்டா எங்க இருக்கிறா? என்ன பண்றான்னே தெரியலை"
" என்ன சம்பந்தி இதை முதல்லையே சொல்லியிருக்கலாம்ல… கிரண் நீ பிருந்தா கூட போ… போய் பவியோட பிரண்ட்ஸ் வீட்ல அவ இருக்கிறாளானு பாருங்க"
" சரி அம்மா… பிருந்தா வா போகலாம்"
" சரி.. அம்மா நான் போய் பார்த்திட்டு போன் பண்றன்"
" சரிமா"
……………………………………………………..
சதீஷ் வீராவிடம் போன் பண்ணி ஒன் ஹவர் பர்மிஷன் கேட்டுட்டு பவியை அழைத்துக் கொண்டு காலேஜ்க்கு வந்தான்..
" பவி நீ உள்ள போய் அட்மிஷன் வாங்கிட்டு வா நான் இங்கையே வெயிட் பண்றன்… "
" நீங்களும் உள்ள வரலாம்ல சதீஷ் "
"இல்லை பவி… உன் பிரண்ட்ஸ் உன்னோட என்னைப் பார்த்து நான் யாருனு கேட்டா என்ன சொல்றது? உன்னை அவங்க தப்பா நினைச்சிட்டா அது நம்ம ரெண்டு பேருக்கும் சங்கடம்.. நான் இங்கையே இருக்கிறன் நீ போய் வாங்கிட்டு வா"
" சரி" என்றவள் principal அறைக்குச் சென்று அட்மிஷன் வாங்கினாள்.. பின் அவளது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர்களது டிபார்ட்மெண்ட் ஹெட் அனைவரையும் மெயின் ஹால்க்கு வரச் சொன்னார். எல்லோரும் சென்றதும்,
" ஹாய் students உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் … இந்த தடவை நீங்க ட்ரைனிங் போறதுக்கு the famous லயன் குரூப் ஆஃப் கம்பனிக்கிட்ட" என்றதைக் கேட்ட பவிக்கு சந்தோசமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது…
"ஆனால் இங்க ட்ரைனிங் பண்ண முப்பது பேரை நாங்க அனுப்பபுவோம்… அங்க கம்பனியில இன்டர்வியூ வைத்து எத்தனை பேரு அங்க ட்ரைனிங் பண்ணலாம்னு செலக்ட் பண்ணுவாங்க…. உங்களோட எக்ஸாம் முடிய நீங்க இன்டர்வியூ போகணும்… உங்களோட ட்ரைனிங்க நல்லபடியா செய்தால் அங்கேயே வேலையும் கிடைக்க வாய்ப்பு இருக்கு… சோ எல்லோரும் கட்டாயம் இன்டர்வியூ ல கலந்துக்குங்க.. இப்போ நீங்க போகலாம்… good luck for all"
மீட்டிங் முடிந்ததும் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு சதீஷூடம் வந்தாள் பவி… சதீஷ் போனை பார்த்துக் கொண்டு இருக்க அவனது தோளில் தட்டினாள் பவி..
"என்ன பவி முகம் ஒரு மாதிரி இருக்கு?"
"சதீஷ் ஒரு bad news and good news"
"என்ன அது?"
"அதை வீட்டுக்கு போய் சொல்றன்… வா போகலாம்" என்றவள் திடீரென அவனை அணைத்து அவனது நெஞ்சில் சாய்ந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டாள்.
"பவி என்ன பண்ற?"
"பிளீஸ் சதீஷ்" என்றாள். சதீஷ் எதுவும் சொல்லவில்லை… அப்போதுதான் அவர்களை கடந்து சென்ற பிருந்தாவையும் கிரணையும் பார்த்தான்… ஆனால் அவர்கள் இவர்களை காணவில்லை…
அவர்கள் சென்றதும் மெல்ல தலையை திருப்பி பார்த்தாள் பவி…
"சதீஷ் அங்க போறாங்களே அதுதான் என் அக்கா… அவ பக்கத்தில போறது கிரண்…"
சதீஷ் அவர்களை தெரியாத மாதிரி "ஆ இவங்க தான் உன்னோட அக்காவா? இவங்க எதுக்கு இங்க வந்திருக்கிறாங்க? ஒரு வேளை உன்னைத் தேடி வந்திருக்கிறார்களோ?"
"அவளாவது என்னைத் தேடி வர்றதாவது… ஏதாவது வேலையா வந்திருப்பா.. முதல்ல நாம இங்க இருந்து போகலாம் வா" என்று சதீஷை அவசரப்படுத்தினாள்..
"சரி சரி போகலாம் " என்றவன் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்…
………………………………………………..
சித்துவுக்கு முகம் கழுவி விட்டு வந்தும் எரிச்சல் சரியாகவில்லை… அந்த எரிச்சலை தாங்கிக்க முடியாமல் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது…
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமைத்த உணவை எடுத்து வந்து மேசையில வைக்க வீராவும் கீழே வந்து கதிரையில் அமர அவனுக்கு சாப்பாட்டை கண்ணீரை துடைத்தபடி பரிமாறினாள்…
அதைப் பார்த்த வீராவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது… எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு கைகளை கழுவிக் கொண்டு ஹாலில் சதீஷ்க்காக காத்திருந்தான்… அவன் அங்கே இருந்தாலும் அவனது பார்வை சமையலறையில் இருக்கும் சித்து மீதே இருந்தது….
அவளைப் பார்த்தபடி இருந்தவன் எழுந்து சமையலறைக்கு சென்றான்.. அவன் வருவதை உணராத சித்து முகத்தை சேலையால் துடைத்தபடி நின்றிருந்தாள்…
அவள் அருகில் வந்த வீரா செய்த செயலால் சித்து அதிர்ச்சி அடைந்தாள்….
சித்து ஏன் அதிர்ச்சி அடைந்தாள்????
மலரும் ………………………………