• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

1 மனைவியின் காதலன்

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
1 காதலன்

கிருஷ்ணன் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்ஸில் குறுகிய காலத்தில் வளர்ந்துவரும் தொழில் அதிபர். அப்பா ஆரம்பித்த தொழிலாக இருந்தாலும் தனக்கான தனி பெயரை தொழில் சாம்பிராஜயத்தில் பொறித்திருந்தான்.

கடுமையான முகம் கொண்டவன், அதற்க்காக அனைவரிடமும் எரிந்து விழும் ரகம் இல்லை அவன்.

அவனது பார்வையின் ஒரு முறைப்பு போதும் அவனின் கீழிருக்கும் வேலையாட்களை மிரட்ட.

“இன்று அனுப்ப வேண்டிய லோட் அனுப்பியாச்சா?”

“வண்டியில் ஏத்திட்டு இருக்காங்க சார்”

அவனது வேகத்துக்கு நடக்க முடியாமல், ஐந்தடியில் அவனுக்கு இணையாக ஓடித்தான் வர முடிந்தது, அவனது அசிஸ்டன்ட் அனுவால்.

அவளுக்கு வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற நிலை இல்லாவிட்டாலும், அனுவின் தந்தை கண்டிப்பானவர். பெண் பிள்ளையை தன் காலில் நின்றால் தான் சமூகம் மதிக்கும், அவளுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனை உடையவர்.

தன் நண்பனின் மகனிடம் தொழில் நிர்வாகம் கத்துக்க அனுப்பிவிட்டு மனைவியுடன் கோயில் குளம் என்று சுத்தப்போயாச்சி.

அனு பேய்யிங் கெஷ்டாக கிருஷ்ணா வீட்டின் மேல் தளத்தில்தான் தனியாக சமைத்து துவைத்து தனக்கான வேலையை கற்றுக்கொள்கிறாள்.

இவளை தனியாக வைத்தது அனைத்தும் அனு அப்பாவின் மாஸ்டர் பிளானில் அடங்கும்.

மனைவி செல்லம் கொடுத்து கெடுத்த தன் பெண்ணை திருத்தவே இந்த முயற்சி. பார்ப்போம் இருவரில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று வேலைக்கு சேர்ப்பதை பற்றி அனுவின் தந்தை சொல்லும்போது, ‘அவனை படுத்தும் பாட்டில் என்னை விரட்டிவிடுவான்’ என்று நினைத்தவளின் நிலை தலை கீழாக மாறப்போவது அவளுக்கு தெரியவும்யில்லை.

அனு யாருக்கும் பயப்பட மாட்டாள், வாய் ஜாஸ்சி, ஆனால் கிருஷ்ணாவிடம் அடங்கி போவாள் அவனது உருவம் அத்தகையது.

பார்க்க பயில்வான் போல இருப்பவனை முதலில் பார்த்தவள், ‘ஒரு அடி கூட நம்மால் தாங்க முடியாது. அடங்கி போக வேண்டியது தான்’ என்று முதல் சந்திப்பிலேயே முடிவு எடுத்துவிட்டாள்.

கிருஷ்ணா பத்து நிமிசத்தில் வேலை முடிக்க சொன்னால் 9.59 க்கு வேலை முடித்துவிடுவாள், அவ்வளவு பயம்.

அனுக்கு மட்டுமில்லை அங்கு வேலைசெய்யும் ஆட்கள் தொடங்கி உறவினர்கள் வரை, இவனை நெருங்கவும் குரல் உயர்த்தி பேசவும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிப்பார்கள்.

அப்படிப்பட்டவன், ஊரே இவனை பார்த்து பத்து அடி தள்ளி நிற்க்கும், இவனை ஆட்டி வைப்பவள் ராதா ஒருவளே. அத்தை பெத்த ரத்தினம்

அவனது தந்தை மீது பயபக்தி கொண்டவன். அவர் கோடு போட்டால் தாண்டமாட்டான், அவ்வளவு மரியாதை கலந்த பயம்.

இருவரும் சிறுவயதில் அடித்து விளையாடும் போது கிருஷ்ணன் ராதாவை கீழே தள்ளிவிட.

அடங்காத ராட்சசி அந்த வயதிலேயை அவனின் தந்தை முன் விசும்பி அழுது அனுதாபத்தை பெற்றவள்.

“மாமா… கிருஷ்ணா அடிச்சி… அடிச்சி... ரத்தம் வந்து...” அவளது அடிப்பட்ட கையையும் காலையும் மாமாவிடம் காட்டி.

“அச்சோ ! என் தங்க கட்டிக்கு வலிக்குதா”

ராதா ரட்டை ஜடையில் தலையை அசைத்து “ஆமா… கிருஷ்ணா அடி மாமா” மாமாவை கிருஷ்ணாக்கு எதிராக திருப்பும் வேலையை அன்றே துடங்கிவிட்டாள்.

பேச தெரியாத வயதிலேயே அவனது உச்சி மண்டையில் ஏறி உட்கார்ந்தாள், மாமாவின் உதவியோடு.

“இங்க பாரு கிருஷ்ணா. இந்த பாப்பா உன்ட எது கோட்டாலும் கொடுத்திடனும். இவ கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும், நான் செத்ததுக்கு அப்புறம் என் ஆத்மா கூட சாந்தி அடையாது” அன்று ஆரம்பித்தது இவளின் அட்டகாசம்.

மாமா பேரை சொல்லி சொல்லி அவளுக்கு வேண்டிய காரியங்களை சாதித்து விடுவாள்.

கிருஷ்ணாவின் அப்பா ரகுவரன், பெயருக்கு ஏற்ப டெரர் பீஸ்தான், பெற்ற மகன் அவரிடம் பேசவே அனுமதி வாங்கவேண்டும். ஆனால் ராதாக்கு அப்படி இல்லை, ”மாமா…” இந்த ஒரு வார்த்தை போதும் கோடிகணக்கில் டீலிங் போய்ட்டிருந்தாலும், கூப்பிட்ட குரலுக்கு பாதியில் எழுந்து ஓடிவந்திடுவார்.

கிருஷ்ணாக்கு ராதா மேல் கோபம் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டான், காட்டினால் ரகுவரனின் பெல்ட்தான் பேசும்.

அவள் கேட்டாள் என்பதற்காக அவன் செய்யாத காரியமில்லை. சிறுவயதில் பொம்மையை விட்டுக் கொடுப்பதில் தொடங்கி ஸ்கூல் படிக்கும் வரை சாதாரணமாக தான் அவனது சுதந்திரத்தை பறிப்பாள்.

ஒரு முழு நேர சேவகனாகவே தன்னுடன் வைத்திருந்தாள்.

கல்லூரி முடிக்கும் போது அவள் பள்ளி இறுதி கட்டத்தில் இருந்தாள்.

“மாமா…ஆஆஆஆ, மாமா…ஆஆஆ”

இந்த சத்தம் கிருஷ்ணாவுக்கு அபாய ஒலி ஆகும்.

‘ஐயோ இவளா! கிருஷ்ணா காது கேட்காதது போல ஓடிடு’வாசலை நோக்கி விறைந்து போனான்.

“என்ன எஸ்கேப் ஆகலாம்’ன்னு பார்க்குறையா.. மாமாட்ட மாட்டிவிடட்டா” அவன் முன் அவனைவிட வேகமாக வந்து நின்றாள்.

'கிருஷ்ணா விடமாட்டா போலயே'

“என்ன சொல்லு” வேண்டா வெறுப்பாக கேட்டான்.

“என்ன மிரட்டரது போல கேட்கற? சிரிச்சிட்டே என்ன’ன்னு கேளு பார்ப்போம்”

“ஈஈஈஈ… மகாராணிக்கு என்ன வேணும் சொல்லுங்க” வராத சிரிப்பை வரவைத்து கிருஷ்ணன் சிரிக்க. பார்க்க அவ்வளவு கொடுறமாக இருந்தது அவனது முகம்.

“ப்பா.. பயங்கரமா இருக்கு தயவு செய்து இனி சிரிக்காத”

‘சேட்டை அதிகமா ஆகிடுச்சி சீக்கிரம் காலேஜ் முடி உனக்கு கல்யாணம் பண்ணி எப்போ இந்த வீட்டைவிட்டு துரத்தரனோ, அப்போதான் எனக்கு சுதந்திரம் கிடைக்கும்’ அப்படி நினைத்த அவனுக்கு தெரிய வாய்பில்லை.. இவனது சுதந்திரம் எப்போதும் கிடைக்க போவதில்லை என்று.

“சரக்கு எனக்கு அடிக்க ஆசையாக இருக்கு வாங்கிட்டு வா…”என்று கேட்டாள்.

“அடிப்பாவி!!!! இன்னும் ஸ்கூல்கூட முடிக்கலை அதுக்குள்ள”

“ஸ்கூல் முடிக்கலைனா என்ன அதான் 18 வயசு முடிஞ்சிடுச்சி இல்ல”

“நல்ல விவரம் தான்”

“சரி போய் வாங்கிட்டுவா ஒரே டைம் டேஸ்ட் செஞ்சிட்டு விட்டுடுவேன்”

“இரு அப்பாகிட்ட சொல்லுறேன்” கிருஷ்ணா அப்பா பக்கம் போக கால் எடுத்துவைக்க.

“சரி மாமாக்கிட்ட தானே சரி தாராலமா போய் சொல்லு அதுக்கு முன்னாடி இதை பார்த்துட்டு போ”

ஒரு வீடியோ ஓடியது.

கிருஷ்ணாவும் அவன் கூட படிக்கும் ஒரு பெண்ணும் பார்க்கில் உட்கார்ந்து பேசுவது போல.

கிருஷ்ணா வேகமாக போனை பிடிங்கி டெலிட் செய்தவன்.

“இப்போ என்ன செய்யுவ..” என்றவன் வீர நடையுடன் ரகுவரனின் அறையை நோக்கி போனவனை தடுத்தது. மீண்டும் அந்த வீடியோவின் சத்தம்.

“ஹாலோ பாஸ் நீ இப்படி எதாவது செய்வன்னு தெரியும்யும் அதான்… என் பிரண்ட் அனுக்கிட்ட ஒரு காப்பி கொடுத்துவச்சிருக்கேன். மகனே என்கிட்ட உன்னால எஸ்கேப் ஆக முடியாது புரியுதா”

‘அது புள்ளபூச்சி கணக்கா இருந்தது, இவ கூட சேர்ந்து அந்த பிள்ளையையும் கெடுத்துவச்சிருக்கா. எதாவது பிளான் செய்து இரண்டு பேரையும் வேறுவேறு காலேஜில் சேர்க்கனும்’

“என்ன சத்தத்தை காணோம்”

“ஏய் உனக்கு எப்படி இது கிடச்சது, வெறும் பிரண்ட் தான் நீ நினைக்கற போல இல்லை”

“ஓ… ஃபிரண்ட் கிளாஸ்ல பேசுறது, எதுக்கு பார்க்குக்கு போனும்”

“அவ சப்ஜக்டில் டவுட் கேட்டா அதான்”

“நீ சொல்லுறது சரிதான் மாமா, ஆனா பாரு மாமா அத சொன்னா நம்புவாரா?”

அவனுக்கு தெரியும் கண்டிப்பா நம்பமாட்டார்.

“ராதா இப்படி செய்யாத நான் பாவம்”

“அப்போ நான் சொன்னதை செய், கூட சைட்டிஸ் மறந்துடாத பெப்பர் சிக்கன், டாஸ்மார்க் பக்கத்துல இருக்கிற அக்காகிட்ட வாங்கு, அங்க தான் டேஸ்ட் நல்லா இருக்கும்’ன்னு சொன்னாங்க”

கிருஷ்ணா வசமாக மாட்டிக்கிட்டான் அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை.

“சரி போய் தொலையிறேன் சும்மா டேஸ்ட் தான் பண்ணனும் புரியுதா”

“சரி.. சீக்காரம் போ எனக்கு ஆர்வத்தை அடக்க முடியலை”

‘என்னைக்காவது படிக்கறதுல இந்த ஆர்வத்தை காட்டி இருப்பாளா?’

“போதும் மனதில் தாளித்தது, முதலில் கிளம்பி போய் வாங்கிட்டு வா”

கிருஷ்ணாவுக்கும்.. முதலில் தயக்கமாக இருந்தாலும் அவள் சொன்ன பெப்பர் சிக்கனை ருசி பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. மற்ற விஷயங்கள் வேண்டா வெறுப்பாக செய்தாலும் இந்த டீலிங் கிருஷ்ணாக்கு பிடித்தது.

டாஸ்மார்க்குக்கு முன் போய் நின்றவனுக்கு சுற்றிலும் அவனை பார்ப்பது போல இருந்தது. சங்கடமாக நெலிய, முகத்தில் கர்ச்சிப்பை கட்டியவன் கம்பி கட்டிய இடத்தில் நின்றவன்.

“தம்பி என்னவேணும்” கிருஷ்ணாக்கு என்ன கேட்பது என்று கூட தெரியவில்லை.

“என்ன தம்பி புதுசா“ கிருஷ்ணா எல்லா பக்கமும் தலையை ஆட்டினான்.

“இந்தா இது குடி” என்று ஒரு பீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அந்த கடைகாரர்.

அந்த அப்பாவி குழந்தைக்கு அதன் பெயர் கூட தெரியவில்லை. அந்தோ பாவம் என்ற நிலையில் வாங்கி வந்தவன் மூக்கில் பெப்பர் சிக்கன் மனம் அடைத்தது.

‘இதை இன்று சாப்பிட்டால் பிறவி பலனை அடைந்துவிடலாம்‘ அவள் சொன்னதை எல்லாம் வாங்கிவிட்டு ஒரு தெரு தள்ளி வந்ததும் தான் மூச்சே வந்தது அவனுக்கு.

ஒழிந்து ஒழிந்து வாங்கி வந்ததோடு பின்வாசலில் பதுங்கி வந்தவனை வசமாக மாட்டிவிட்டாள் ராதா.

பெரிய கம்போடு அப்பா நின்றிருக்க, ‘கிருஷ்ணா இவளை நம்பி போனதுக்கு, உனக்கு இதும் வேணும் இன்னும் வேணும்’ அந்த நேரத்தில் வீட்டைவிட்டு ஓடி விடலாமா என்று எல்லாம் நினைத்தான் கிருஷ்ணன்.

எவ்வளவு வேகமாக ஓடினாலும் துரத்தி வந்து அடிப்பார் என்று தெரியும் அவனுக்கு.. இருந்தது ஒரே பிளான், அதையும் விட்டுட்டான்.

ரகுவரனிடமிருந்து இரண்டு அடி விழும்வரை பெருமையாக இருந்த ராதா.

“ஐயோ மாமா.. கிருஷ்ணா பாவம், ஏதோ தெரியாம செஞ்சிட்டான் இனி செய்யமாட்டான் விடுங்க” ஏதோ கிருஷ்ணாவை ரச்சிக்க வந்த கடவுள் போல கோர்வையாக வசனம் பேசி மாமாவின் கையிலிருந்த கம்பை பிடுங்கினாள்.

ரகுவரனால் கிருஷ்ணா இப்படி செய்வான் என்று ஏற்றுக்கொள்ளவே முடியலை. கம்பு போனால் என்ன கையில் நாலு சாத்து சாத்தினார்.
வலி தாங்காமல் எழுந்து அமர்ந்தவனுக்கு அது கனவு என மூலைக்கு உறைக்கவே சில நிமிடம் பிடித்தது.

“ச்சே.. வாங்கன அடி ஏதோ ஒருநாள் தான் ஆனா அடிக்கடி கனவு வேற வந்து உயிரை வாங்குது. காலையிலையே தலைவலி பிடிச்சிக்கிச்சி சூடா காபி குடித்தால் தான் சரியா போகும்”

காலையில் தன் கையால், சுடச்சுட காப்பி போட்டு குடித்தவன் முன் வந்து நின்ற ராதா, ஒரு வாரம் முன் அவன் கையால் தாலி கட்டி வந்த அருமை மனைவி.

அவன் கையிலிருந்த நியூஸ் பேப்பரை, பிடிங்கி தூர எறிந்தாள்.

‘காலையிலையே ஆரம்பிச்சிட்டா பிசாசு வேலையை’ கிருஷ்ணாவால் மனதில் மட்டும் தான் நினைக்க முடிந்தது. வாயில் சொல்லி காலையிலேயே இவளிடம் வசை பாட்டை வாங்க விருப்பமில்லை.

சலிப்பாக நின்றிருப்பவளை பார்க்க.

“மாமா…”

கிருஷ்ணா இதயத்தில் ஒரு வெடி சத்தம் கேட்டது, ‘எதே! மாமா வா! அப்படி கூப்பிடும் ரகம் இல்லையே இவ!!!’

“டேய் கூப்பிட்டது காதுக்கு கேட்கலையா?”

“அதானே பார்த்தேன், இவளாவது மாமா’ன்னு கூப்பிட்டா மழை பிச்சிக்கும்” இந்த முறை வாய்விட்டே புலம்ப.

“நீ சொன்னதை கேட்டு உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டேனில்ல”

“அதுக்கு இப்போ என்ன செய்யலாம்” அலட்சியமாக பதில் தான் வந்தது அவனிடமிருந்து.

“அதுவா… எனக்கு ஒரு ஆசை இருக்கு நிறைவேற்றனும்”

‘ஐயோ! ஆசையா எதாவது வில்லங்கமாயில்ல கேட்பா’

“சொல்லித் தொலையும்…”

“எனக்கு லவ் பிரேக் அப் ஆச்சில்ல”

“அதான் ஊருக்கே தெரியுமே, மேல சொல்லு”

“எனக்கு நிறைவேறாத ஆசை இருக்கு, உன் கூட வாழனும்னா, அதை நீ செய்யனும்”

கிருஷ்ணாவோ பொறுமையாக டீயை குடித்துக்கொண்டே “மேல சொல்லு” என்றான்.

“எனக்கு அவன் கூட டைம் ஸ்பென்ட் செய்யனும்” மனதில் கோப மழை கொழுந்துவிட்டு எறிந்தாலும், தன்னை அடக்கிக்கொண்டு.

“எவன் கூட”

“அதான் என் எக்ஸ் கூட”

“வீட்டுக்கு வர சொல்லு.. ஒரு நாள் உட்கார வச்சி பேசு யார் வேண்டாம்னு சொன்னது”

“எது ஒரு நாளா! எனக்கு ஒரு மாசத்துக்கு அவன் கூட இருக்கணும்”

“இவளை…" பல்லை கொறித்தவன்.

மனதில் பேக்கிரவுன்ட் சாங் ஓடியது கிருஷ்ணாவுக்கு.

சட்டை கிழிந்திருந்தா வச்சி தெச்சி முடிச்சிடலாம்… நெஞ்சு கிழிஞ்சிருக்கு எங்க முறையிடலாம்..

“எந்த புருஷனுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது டா" தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

“மாமா இப்படி உட்காராத, காமெடியா இருக்கு, தப்பா எல்லாம் எண்ணமில்ல மாமா, நான் உனக்கு தான் கவலை படாதே”

“இதுக்கு மேல கவலை பட என்ன இருக்கு, ஒரு தாலி டோட்டல் லைப் காலி…”

“ராதா என்னை கோபப்படுத்தாத போ” என்றவன் தயாராகி அலுவலகத்துக்கு வந்தவன் ராதாமீது இருந்த மொத்த கோபத்தையும் பார்ப்பவர் அனைவரிடமும் காட்டிக்கொண்டிருந்தான்.

மாலை வந்தவன் முன் வந்து நின்ற ராதா.

“மாமா…ஆஆஆஆ” அவள் தெடங்கும் போதே அவளை கைநீட்டி தடுத்தவன்.

“ஏதோ பண்ணி தொலை என் உயிரை வாங்காத”

ராதா அவனது போனை நைசாக உருவியவள் தனது அறைக்குள் புகுந்துகொண்டாள்.
 
Top