• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20 மனைவியின்...காதலன்!

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
20…காதலன்!


“இந்த கிருஷ்ணாக்கு அறிவே இல்லை, கண்ட கண்ட நாய் வந்து என்னென்ன கேக்குதுங்க. சிங்கம் மாதிரி நிற்க்காம, பிசாசு அவங்க கேட்குறதுக்கு பதில் சொல்லிட்டு இருக்கான்” மெல்லிய குரலில் கிருஷ்ணாவை திட்டிட்டு இருந்தாள்.

கூட்டத்தில் ஒருவர்,

“டாய் அந்த பெண்ணை பிடிச்சி இருக்கா?”

அந்த மாப்பிள்ளையும் மேலும் கீழும் பார்த்தவன்.

“பொண்ணு சுமாராதான் இருக்கு, அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம், என்ன கலர்தான் கொஞ்சம் கம்மியா, இதுல கண்ணாடி வேற போட்டு இருக்கு” ராதாக்கு கோபம் வந்தாலும் சபை முன் கூனி குறுகி நின்றாள்.

ஏதேதோ எண்ணங்கள் ஓடியது ராதாக்கு, ‘ஒரு வேலை கண்ணாக்கு என் அப்பியரன்ஸ் பிடிக்கலையா? ஆமா... இல்லை‘ தனக்கு தானே பைத்தியம் போல நினைத்துக் கொண்டு இருந்தாள்.

கண்ணனுடன் பழக தொடங்கும் போது கண்ணாடி போடவில்லை கலரும் அதிகமா இருந்தது. ஒரு வேலை அதால என்னை விட்டுட்டு போயிட்டானா... மனம் எனும் சாத்தான் அவளை ஆட்டிப் படைத்தது.

அவளது மனம் ஒரு பக்கம் பயணம் செய்து கொண்டு இருக்க.

கிருஷ்ணாவின் பீப்பியை ஏத்தி கொண்டு இருந்தனர் வந்திருந்த குடும்பத்தினர்.

“பொண்ணு மூஞ்சி ஏன் வாடி போய் இருக்கு, எதாவது லவ் மேட்டர்னா முன்னாடியே சொல்லிடு மா, நாங்க கவுரவமான குடும்பம். சபையில் வந்து எதாவது நடந்ததுனா, நாங்க சும்மா இருக்க மாட்டோம்” மாப்பிள்ளையின் அம்மா.

“நீங்க வளர்த்த பொண்ணு’ன்னு சாதாரணமா எல்லாம் கல்யாணம் நடத்த கூடாது... சீர் எல்லாம் பிரமாண்டமா செய்யனும்” அதிகாரமாக சொன்னார் மாப்பிள்ளையின் அப்பா.

‘என்ன இவனுங்க கல்யாணம் ஏதோ நிச்சியம் செய்த அளவுக்கு பேசுராங்க’ கிருஷ்ணா அனைவரையும் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

“சரிங்க நாங்க அப்பாகிட்ட சொல்லி சேதி அனுப்புறோம்” அவர்களை வெளியே அனுப்புவதிலேயே கிருஷ்ணா குறியாக இருந்தான், அவர்கள் பேச்சி அவனுக்கு சுத்தமா பிடிக்கவில்லை.

“அப்புறம் இன்னொரு விஷயம்... மாப்பிள்ளை துவங்கும் போதே கிருஷ்ணா.

“சரிங்க கிளம்புங்க... நாங்க சொல்லி அனுப்பறோம்” விட்டா பேசிட்டே இருப்பானுங்க போல மனதில் வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரித்த முகமாக சொல்ல.

“என்ன வெளியே அனும்புவதில் குறியாக இருக்கிங்க? மரியாதை தெரியாத குடும்பம் போல” கூட்டத்தில் ஒரு தலை சொல்ல.

அடக்கி வைத்திருந்த கிருஷ்ணா பொங்கி எழுந்தான்.

“அதான் தெரியுமில்ல முன்னவே குடும்பத்துக்கு மரியாதை தெரியாதுன்னு, அப்போ எதுக்கு இப்படி தயாராகி வாசப் படி ஏறி வந்திங்க”

பக்கம் இருந்த பிரோக்கரை கிருஷ்ணா முறைக்க.

அவரோ, “அம்மா அமைதியா இருங்க எதுக்கு தேவை இல்லாதது பேசிட்டு இருக்கிங்க”

“எதுங்க தேவை இல்லாதது, மரியாதை தெரியாத குடும்பத்தில் மாட்ட வச்சிட்டு நீ போயிடுவ, என் பையன் வாழ்க்கை பாலாகி இருக்கும் நல்ல வேலை தப்பிச்சோம்” மாப்பிள்ளை அம்மா சிலாகிக்க.

“ஓனான் மாதிரி பையனை பெத்துட்டு தங்க புள்ளையாம்ல… தங்க புள்ளையா, திமிரு பிடிச்ச குடும்பம். காசுனா வாயை பிளந்துகிட்டு வந்துட்டு, அதிகாரம் வேற வெளியே போங்கடா கேடி பசங்களா”

“யாரை பாத்து ஓனான் சொல்லுற” இந்த முறை மாப்பிள்ளை எகிறிக் கொண்டு வந்தவன் கிருஷ்ணா சட்டையை பிடிக்க.

“யாரு வீட்டுக்கு வந்து யார் சட்டையை பிடிக்கிற” ஓங்கி ஒரு அறை விட்டவன்.

அந்த கிறுக்கு ஓனான் கீழே விழுந்தான்.

“ஏய் பிரோக்கர் இவன் எங்கே வேலை செய்யறான்னு சொன்ன?”

“***** கம்பெனியில் மேனேஜர்” என்று புரோக்கர் சொல்ல.

“ஏன்டா பரதேசி நாயே மேனேஜர் வேலையில் இருக்க உனக்கு இவ்வளவு திமிரா, என் கீழ நூறுக்கணக்கான மேனேஜர் இருக்காங்க. என் முன்னாடி நிக்க கூட உனக்கு தகுதி இல்லை சட்டைய பிடிக்கிறியா, எங்க வீட்டு பெண்ணை குறை சொல்ல உனக்கு எவ்வளவு திமிர் இருக்கு பரதேசி பயலே”

கோபமாக யாருக்கோ போன் போட்டு, “மச்சான்... ஒருத்தன உன் கம்பனியில் இருந்து தூக்கனும்”

அந்த புறம், “நீ பேரை சொல்லுடா”

“டேய் உன் பெயர் என்ன”

“சார் அப்படி எதும் செஞ்சிடாதிங்க அந்த வேலையை நம்பிதான் நான் இருக்கேன்” அந்த ஓனான் மாப்பிள்ளை கிருஷ்ணா காலில் விழ.

“டேய் உன் பேரை சொல்லு”

“சார்…“ தயங்கிக் கொண்டே கோபி என்றான்.

“கோபியாம் மச்சான்”

“சார் விட்டுடுங்க சார்” கிருஷ்ணா காலில் சரண்டர் ஆனான் அந்த ஓனான் மாப்பிள்ளை.

“சரி மச்சான் அவன் காலுல விழுந்துட்டான், விட்டுடு ஆனா ஒரு ஹெல்ப்”

“சொல்லுடா… டி பிரமோட் செஞ்சிடு அவனை”

“சரி டா... இப்போவே மாத்திட்டேன் அவன் வேலையை”

“தேங்க் யூ டா”

“பாய் டா, நான் கூப்பிடுறேன்”

கிருஷ்ணாவின் ஆளுமையை பார்த்த அனைவரும் அதிர்ந்து இருந்தது உண்மைதான்.

அந்த ஓனானின் அம்மா மனதில் தோன்றும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் ராதாவை பார்த்து திட்டிக் கொண்டு இருந்தார்.

அவர் மனதில் திட்டுவது அனைத்தும் ராதா காதுக்கு அசிங்கமாக கேட்பது போல ஒரு உணர்வு ஏற்ப்பட்டது.

ஓனான் மாப்பிள்ளையின் கால்கள் அதிர்ந்தது.

‘ஐயோ... எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த போஸ்டிங்க்கு வந்தேன் எல்லாம் போச்சி’ மனதில் வெதும்பினான்.

“என்ன இப்படி எல்லாம் செஞ்சா நாங்க பயந்திடுவோமா, இந்த வேலை இல்லைனா இன்னொரு வேலை. என் பையன் திறமைக்கு பெரிய பெரிய கம்பெனியில் இருந்து எல்லாம் வேலை கிடைக்கும்” அவனது அம்மா ஆரம்பிக்க.

“அம்மா வாயை மூடு இருக்க வேலையும் போய்ட போகுது” தன் அன்னையை அடக்கியவன்.

“சார் அவங்க சொன்னதை எதும் மனசில் நினச்சிக்காதிங்க” பம்பியவன்.

“சார் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த வேலைக்கு பிரமோசன் இப்போ தான் கிடைச்சது, என் பியூச்சர் இதில் தான் இருக்கு, கொஞ்சம் எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க சார்”

“சரி பார்க்கலாம்... அதுக்கு முன்னாடி ஏதோ எங்க ராதா பத்தி சொன்னிங்களே அது என்ன?”

“சார் சாரி சார், மாப்பிள்ளை கெத்தை காட்ட சொன்னேன், அவங்க அழகாதான் இருக்காங்க சார்”

“அது இன்னொரு முறை எதாவது பெண்ணை அவளது உருவத்தை பத்தி பேசியது தெரிந்தது மகனே, பைத்தியமா தெருத்தெருவா சுத்த விட்டுடுவேண்”

“சரிங்க சார்”

கூட்டத்தில் ஒரு கல்லூரி படிக்கும் மாப்பிள்ளை அம்மாவிடம் ஒரு வீடியோவை காட்ட.

“ஏன்டா பெருசா பேசிட்டு இருக்க... இந்த வீடியோவை பாரு, ஏவனையோ லவ் செஞ்சி சீரழிஞ்சவளை ஏமாத்தி கட்ட பார்த்துட்டு திமிரை பாரு, ச்சி எல்லோரும் வாங்க போலாம். இந்த வீட்டில் ஒரு நிமிசம் இருந்தாலும் இவங்க புத்தி நமக்கு ஒட்டிக்கும்”

“அம்மா வாயை வச்சி அமைதியா இரு, உயிரை வாங்கிட்டு திரும்ப வேலை கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா”

“டேய் வேலை இல்லைனா பரவாயில்லை, இருக்குற சொத்தை வித்து தின்னு வாடா பெரிய வேலையாம் வேலை”

கிருஷ்ணா ஆத்திரத்தில் நண்பனுக்கு அழைத்து, “அந்த பரதேசி பையன்... இனி எந்த வேலைக்கும் போக முடியாத அளவுக்கு செஞ்சி விடு”

“சரி டா”

அங்கு மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்த புரோக்கரை கிருஷ்ணா லெப்ட் அன்ட் ரைட் வாங்கினான்.

“ஏன்டா உனக்கு நல்ல குடும்பமே கிடைக்கலையா, போய் நல்ல குடும்பமா நல்லா விசாரித்து இன்னும் ஒரு நாள்ல எனக்கு லிஸ்ட் வேணும்”

“சரிங்க சார்”

ராதா இங்கு நடக்கும் வியாபாரத்தையும், அதனால் ஏற்ப்பட்ட அசிங்கத்தையும் பார்த்தவள். அமைதியாக கண்ணாடி முன் உட்கார்ந்து தன் முகத்தை உத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘நான் நல்லா இல்லையா? என் கண்ணில் பிரச்சனை வந்தா கண்ணாடி தானே போடனும் அதுக்கு எதுக்கு எதுக்கு பெருசா பேசுறாங்க. கலர் தான் முக்கியமா, பஞ்சத்துக்கு அடிபட்டது போல தான் இருக்கேனா, நல்லா தானே சாப்பிடுறேன். வெயிட் எப்படி குறைந்தது’ மனதில் ஆயிரம் கேள்விகள் அங்கு நடந்தது அனைத்தும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது ராதாவுக்கு.

‘என்ன வாழ்க்கை இது... நான் முதலிலேயே சொன்னேன் காதல் வேண்டாம் நண்பர்களாக இருந்து இருக்கலாம், நான் சந்தோஷமா இருந்து இருப்பேன். எனக்கு தேவைப்படுவது எனக்கு எப்போதும் கிடைக்க கூடாதுன்னு என் தலையில் எழுதி வச்சிட்டானே அந்த கடவுள்’

இடிந்து அமர்ந்திருக்கு ராதாவின் அருகில் வந்து நின்றான்.

“சொல்ல குட்டி...”

“கிருஷ்ணா... நான் அழகா இல்லையா, கருப்பா இருக்கனா? என்னை எல்லாம் யாருக்கும் பிடிக்காதா”

“உனக்கு என்னடா தங்கம், இவன் இல்லைனா என்ன உனக்கு ராஜகுமாரன் வருவான்”

“மாமா பார்க்கனும்”

“இரு வர சொல்லுறேன்” போன் போட அவரே... “இன்னும் ஆறு மாசம் நகர முடியாது டா சீக்கிரம் வந்துடுறேன்”

“சரி பா... ராதா கிட்ட பேசுங்க அவ உங்களை மிஸ் செய்யுறா?”

“அவகிட்ட கொடு”

“மாமாட்ட பேசு… உன் சோகம் எல்லாம் பறந்து போய்டும்”

“மாமா எப்போ வருவ உன்னை பார்க்கனும்” அழுகையோடு சொல்ல.

“இப்பவே பார்க்கலாம் தங்கம், வீடியோ கால் வா”

“போ நேர்ல வா மாமா”

“இரண்டு பேரும் என்னை துரத்தி விட்டுட்டு இப்போ நான் நல்லா மாட்டிக்கிட்டேன், எப்படி வரது சொல்லு”

“அது எல்லாம் எனக்கு தெரியாது நீ வா” ராதா ஒப்பாரி வைக்க.

“வீடியோ கால் வாடா தங்கம்”

“சொல்லுங்க...” தன் முகத்தை காட்டாமல் சொல்ல.

நடந்த அனைத்தையும் சொல்ல வாய் எடுக்கும் போது.

“ராதா வேண்டாம் அப்பா ஃபீல் செய்வாங்க” மெல்லிய குரலில் சொல்ல.

“சரி கிருஷ்ணா”

“என்ன பண்றிங்க அமைதியா இருக்கிங்க”

“அது எல்லாம் ஒன்னுமில்லை மாமா, மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்தாங்க, இந்த கிருஷ்ணாவை என்னான்னு கேளுங்க”

‘அதானே பார்த்தேன், என்ன இன்னும் வேலையை காட்டலைன்னு’

“அப்பா 25 வயசு ஆகுது, இன்னும் வீட்டுலை வச்சிட்டு இருக்க முடியாது”

“சரி பா நல்ல பையனா பாத்து முடிச்சிடு”

“சரி பா”

"நான் சொல்லுறது எல்லாம் ஒருத்தரும் கேட்கும் நிலையில் இல்லையில்ல”


“இனி கேட்கமாட்டோம் நாங்க சொல்லுறது கேளு” கிருஷ்ணாவும் ரகுவரன் மாமாவும் ஒரு போல சொல்ல.

“என்னவோ செஞ்சி தொலைங்க” இருவரும் சிரித்துக்கொணாடே போனை வைத்துவிட.

ராதா கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க.

“ராதா அவன் சொன்ன போல எல்லாம் இல்லைடா, வீட்டில் இருந்தா எல்லா பொண்ணும் இப்படி தான் பியூட்டி கேர் செய்ய மாட்டாங்க”

“பொய் செல்லாத மாமா அந்த பையன் சொன்னது உண்மை தான்”

“இரு அடுத்து நல்ல மாப்பிள்ளை பார்த்து அவன் வாயால உன்னை ஏஞ்சல்ன்னு சொல்ல வைக்கிறேன்”

“சொன்னா தானே” ராதா அடிக்கடி கண்ணாடியை பார்ப்பதை விடுவதாக இல்லை, கிருஷ்ணாவும் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க.

பார்த்து விட்டு போவார்கள் பதில் ஏதும் வராது.. இப்படியே கணக்கில்லாமல் மாப்பிள்ளை இந்த சில மாதத்தில் வந்து போனார்கள்.

ராதாவும் சளித்துக்கொண்டு வந்து நிர்ப்பாள்.

“ஏய் புரோக்கறே என்ன ஒருத்தன் கூட திரும்ப வர மாட்டங்குறாங்க என்ன விஷயம்”

“அது வந்து தம்பி...” அவர் தயங்கி நிற்க.

“நேரா சொல்லுங்க என்னான்னு அந்த வீடியோ மேட்டரா பிரச்சனை”

“அது இல்லை தம்பி உங்களையும் நம்ம பாப்பாவையும் வச்சி சேர்த்து” கிருஷ்ணா கண்கள் ரத்த சிவப்பாக மாறியது.
 
Top