• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25+ காதல் அதிகாரம்.

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
இன்னும் நம்பமுடியவில்லை...
எல்லாம் சட்டென நடந்து
முடிந்துவிட்டிருந்தது...!!
அவளை நான் பார்த்தது....
அவளிடம் பழகியது...
என் காதலை சொல்லியது..
அனைத்துமே..!!

காதலும் சரி...
வாழ்க்கையும் சரி...
குருட்டு சர்வாதிகாரியாகத் தான்
நடந்து கொள்கிறது...!!

எதையெல்லாம் வெறுத்தேனோ...
அதையெல்லாம் ....
மனதார நேசித்தேன்..!
அவள் என் வாழ்வில் பிரவேசித்தபிறகு..!!

எதையெல்லாம் வேண்டாமென
ஒதுக்கினேனோ....
அதையெல்லாம்....
அணு அணுவாக ரசித்தேன்..!
அவளிடம் என் காதலை சொல்ல
நினைத்த பிறகு..!!

விரும்பாத ஒரு வாழ்வே...
நான் விரும்பும்படியாய்
வந்தது...
அவள் வந்த பிறகு...!!
வெறுத்த ஒரு வாழ்வை ...
அழகாக ரசிக்க வைத்தவள்..!
என்னை வேண்டாமென...
இல்லை...
என் காதலை மறுத்தபோது
என்னையும் நான் கொஞ்சம்
வெறுக்க ஆரம்பித்திருந்தேன்..!!

அப்படி எதை நான் தவறாக
சொல்லிவிட்டேன்..
என்று இந்த நொடிவரை
தெரியவில்லை...
உங்களுக்காவது தெரியுமா?

நான் காதலில் எதையும் விஷேஷமாக
செய்யவில்லை...!
காதலித்தவளை விஷேஷமாக வைத்துக்கொண்டேன்..!
அவ்வளவே உங்களுக்கும் எனக்குமான
வேறுபாடு...!!

முதல் சந்திப்பில்....
பாலை வனத்தில்
திடீரென அடைமழை பெய்தால்
எப்படியிருக்கும்??
அப்படியொரு உணர்வை எனக்குள்
பரப்பினாள்..!!

இறுதிச்சந்திப்பில்....
பாத வெடிப்பில் இருக்கும் ஒருவன்
வெறும் காலுடன் ...
உச்சி வெயிலில்...
தார்ச்சாலையில் நடந்தால்
எப்படியிருக்கும்??
அதுபோன்ற இனம்புரியாத வலியை
உணர வைத்தாள்..!!

ஆசைப்பட்டேன்...
அவளின் பொலிவிழந்த நாட்களை
புதுப்பித்துப்பார்க்க....
அவள் படித்துப்பார்க்க காத்திருக்கும்
புத்தகத்தை கொடுக்க....
அவளுக்கு பிடித்தமான மலர்கொத்தை
மனதார நீட்ட...
அவளின் தனிமைக்கு சில வண்ணசாயம் பூசிப்பார்க்க...
அவளின் மூடிய இதழுக்கு வேலை வைக்கும்விதமாய் சிரித்து பார்க்க...

இறுதியாய்...
யாரும் அறியாவண்ணம்
அவளின் இமைத்திரையை
கிழித்துவிழும் கண்ணீரை தாங்கிட....
இப்படியனைத்திற்கும் ஆசைப்பட்டு
காத்திருந்தேன்..!!

வேண்டாமென மறுக்கப்படும்...
காதலில் தான்..
வரலாற்றின் ரகசியமும்...
வாழ்வின் சுவாரஸ்யமும்...
அடங்கியுள்ளது போலும்..!!
அது அப்படியே இருக்கட்டும்
கண்ணம்மா...!

என்றேனும்...
யாரேனும்...
அதை உடைத்துப் பார்க்க நேரிடும்..!
அப்பொழுது உடைவது ...
காகித எழுத்துகள் மட்டுமல்ல...!
காணாமல் போன...
என் ஆன்மாவும் தான்..!!
"எல்லா காதலும் வெற்றியில்
முடிவதில்லை-நிதர்சனம்"
- எல்லா புகழும் இறைவனுக்கே!
சரண்யா