• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

27 மனைவியின் காதலன்!

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
27


தான் அவள் வாழ்க்கையில் இல்லை என்றால் அவள் சந்தோஷமாக இருக்கனும் என்று தானே பிரிந்து போனேன். எதையும் இயல்பாக எடுத்துக்கொள்வது போலவே இதையும் எடுத்துக் கொள்வாள் என்று தானே விட்டுட்டு போனேன். இன்று இருக்கும் மனநிலை அவனுக்கு அப்போது இருக்கவே இல்லை. பதறிய போது எடுத்த முடிவு இப்போது தவறாக முடிந்திருந்தது.

வாழ்க்கை முடிந்து போன நிலையில் தான் இருந்தான், அவனுக்கு குழந்தை என்றால் கொள்ளை பிரியம், அதும் தன்னை போல அமைதியான குழந்தை எல்லாம் பிடிக்காது ராதையை போல சேட்டை செய்யும் குழந்தைதான் பிடிக்கும் அவனுக்கு.

திருமணம் பற்றி எண்ணம் வரும்போது எல்லாம் "கடவுளே நீ என்ன செய்வியோ என்று தெரியாது. எனக்கு ராதை போல ஒரு குழந்தை கொடுத்துடு புரியுதா" என்று அவன் நினைக்காத நாளில்லை. பல வருடமாக வளர்த்து வந்த ஆசைகள் ஒரே நாளில் உடைந்ததை நினைத்து, அவனுக்கு தாங்கிக் கொள்ள முடியாத நிலை, அந்த நேரத்தில் அவசரமாக முடிவு எடுத்தான், தவறை இன்றுதான் உணர்ந்தான் மாதவன்.

அவள் கொடுத்த மோதிரத்தை அப்பவே கையில் அணிந்து கொண்டான், அவள் என் வாழ்வில் இல்லாவிட்டாலும் அவள் நினைவாக இறுதி மூச்சி வரை பார்த்துக்கொண்டு சாக நினைத்தான்.

அதனை ஆசையாக வருடி விட்டவனுக்கு மனம் முழுவதும் ரணம்தான் மிஞ்சி இருந்தது.

"மாதவன் என்ன ஆச்சி?"

"தப்பு செய்ததை காலம் கடந்து இன்று தான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா"

"ம்ம்ம்ம்... நீங்க நினைப்பது போல அவள் ரொம்ப ஸ்போட்டிவ் ஆன பொண்ணு தான், ஆனால் அது உங்க விஷயத்தில் இல்லை மாதவன்"

"ம்ம்ம் இப்போ தான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா, ஆனா இனி எனக்கு மன்னிப்பும் இல்லை. அவள் வாழ்வில் நண்பன் என்ற இடமும் இருக்க போவதில்லை என்று புரிந்தது"

"உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு தான் சொன்னா, ஆனா என்னால இனியும் மறைக்க முடியலை மாதவன்"

"மென்டலி ரொம்ப டவன் ஆகிட்டா, நீங்க போயிட்ட அப்புறம்‍, அவ அவளாவே இல்லை, பார்க்க ரொம்ப சாதாரணமாகதான் இருந்தா நானும் அதை நம்பி வேலைக்கு போய்ட்டேன். பைத்தியம் பிடித்து போல மொட்டை மாடியில் வெயிலில் நிற்பது, ஜன்னலில் கையை குத்திப்பது என நிறைய செஞ்சிட்டு இருந்து இருப்பா போல, அவள் நடையும் கையில் இருந்த காயத்தை வைத்து ஏதோ செஞ்சி இருப்பான்னு யூகிக்கதான் என்னால முடிந்தது.

இரவு அவள் தூங்கிய அப்புறம் போய் காலை பார்த்ததும் தான் என் முட்டாள் தனம் புரிந்தது, அவளை நம்பி தனியா விட்டு இருக்க கூடாதுன்னு அப்போதான் புரிந்தது.

காலில் ஒரு இடம் கூட இல்லாமல் சூடு கொப்பிளங்கள், இந்த காலை வைத்து எத்தனை நாள் நல்லா நடந்து இருந்து இருப்பா என்று ஆச்சரியமாக இருந்தது காலுக்கு மறுந்து போட்டு விடும் போது ராதா எழுந்துட்டா.

"கிருஷ்ணா காலை விடு என்ன செஞ்சிட்டு இருக்க"

"நீ செஞ்சி வைத்த பைத்தியக்கார வேலைக்கு சேவை செஞ்சிட்டு இருக்கேன்" என்று அவள் மீது எரிந்து விழுந்தான்.

"கிருஷ்ணா சாரி"

"நீ பேசாதடி என்னென்ன இன்னும் செஞ்சி வச்சி இருக்க"

"வேற எதும் செய்யலை கிருஷ்ணா"

அவள் காலில் மருந்திட்டுக் கொண்டே அவளை முறைக்க.

ராதா தனது கையை திருப்பி அவன் புறம் நீட்ட, கிருஷ்ணா அதிர்ந்தான்.

"என்ன இது ராதா... எப்படி ஆச்சி"

"ஜன்னலில் குத்திகிட்டேன்" என்னால கோபத்தை கட்டுபடுத்தவே முடியலை.

"ஏன் டி இப்படி செய்யுற, இப்படி ரத்தம் சிந்ததான் நான் இப்படி பாடு பாடுபட்டு வளர்த்தோமா?"

"சரி... இத அந்த ரகுவரனுக்கு சொல்லுறேன், அப்போ தெரியும் பாசம் கொடுத்து எப்படி கொடுத்து வச்சி இருக்காங்கன்னு தெரியட்டும்" கிருஷ்ணா கைக்கு மருந்து போட்டுவிட்டு முடித்ததும் கையோடு ரகுவரனுக்கு போனை போட.

அவன் கையில் இருந்து பிடுங்கிய ராதா, வழக்கம் போல கிண்டல் கேலியோடு பேசி முடித்து கட் செய்து கிருஷ்ணாவிடம் போனை கொடுக்க.

"எதுக்கு டி போனை கட் செய்த உன்னை வச்சிட்டு நான் என்ன செய்யுறது"

"சாரி இனி செய்ய மாட்டேன்" அவளது வார்த்தை சிறிது திக்கியது.

"வாய்க்கு என்னா ஆச்சி" என்று கிருஷ்ணா கேட்டான்.

"இல்லையே ஒன்னுமில்லையே" வலியை பொறுத்துக் கொண்டு ராதா சாதாரணமாக பேச.

"வாயை திறடி" அவளது கன்னத்தை பிடித்து அழுத்த.

"ஆஆஆஆ...." ராதா அலறிவிட்டாள்.

"வாய்க்கு என்ன ஆச்சி முதல்ல திற"

ராதா அழுத்தமாக வாயை மூடிக்கொள்ள.

கிருஷ்ணா அவளது வாயை அழுத்தி பிடித்து வாயை பார்க்க.

வாய் முழுவதும் வெந்து போய் இருந்தது.

"ஆஆஆஆஆஆ... எரியுது" ராதா அலறி விட்டாள்.

"என்னாச்சி இது எப்படி, ஆச்சி" கிருஷ்ணா முதல் முறையாக கடுமையாக மிரட்டலோடு கேட்கவும் மிரண்டாள் பாவை.

"சூடு பஞ்சியை எண்ணையில் முக்கி வாயில் போட்டுட்டேன்" ராதா திருட்டு முழியோடு சொல்ல, கிருஷ்ணா விட்ட அறையில் உதடு கிழிந்து ரத்தம் பீறிட்டது.

"அறிவு இருக்கா இல்லையா டி என்ன செஞ்சி வச்சிருக்க முதல்ல வா டாகடர்கிட்ட போலாம்"

"இல்லை மருந்து இருக்கு டா"

"நீ என்ன பெரிய டாக்டரா... எழு டி" நாயை இழுத்து போவது போல இழுத்தான், வாசல் வரை வந்ததும்.

"டிரஸ் மாத்தனும் கிருஷ்ணா"

"சீக்கரம்" எரிந்து விழுந்தான் கிருஷ்ணா.

டாக்டரிடம் போய்விட்டு... கிளம்பி வழி முழுவதும் ராதா தலையில் கொட்டிக்கொண்டே வந்தான் அவனது ஆத்திரத்தை குறைக்க.

ராதாவை வீட்டுக்கு அழைத்து வந்தவன்... வாய்க்கு வந்த மிருகம் பொருட்கள் பெயரை உபயோகித்து, எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டினான்.

ராதா வீட்டுக்கு வந்ததும் காலுக்கு மருந்து போட்டு படுக்க வைத்தான்.

"வாய்க்கு மருந்து போட்டுக்கோ" கிருஷ்ணா சொல்ல.

"கை வலிக்குது கிருஷ்ணா நீயே போட்டுவிடு" குறும்போடு கேட்டாள்.

"ச்சி உன் வாயில் எல்லாம் போட முடியாது எச்சை போடி"

"போட்டு தான் ஆகனும் நீ" ராதா பிடிவாதமாக படுத்திருக்க காலுக்கும் கைக்கும் மருந்து போட்டு விட்டவன் வாய்க்கு போட்டுவிட வந்தான்.

"சும்மா சொன்னேன் கிருஷ்ணா கொடு நானே போட்டுக்கிறேன்" என்றாள்.

"வேணா வாயை தான் நகம் வைத்து கீரிக்கிட்டா இன்னும் பிரச்சனை ஆகிடும்" கிருஷ்ணா வாயை திறந்து போட்டுவிட.

அவனது முகத்தில் ஒரு அறுவெறுப்பும் இல்லை.

"கிருஷ்ணா... ஆஆஆஆ"

'இப்போ எதுக்கு அபாய ஒளி ஒளிக்குது, ஒரு வேலை... காரமா எதாவது கேட்பாளோ? இன்னும் பத்து நாளைக்கு கஞ்சி மட்டும் கொடுத்து இவளை காயப்போட்டா தான் சரி வரும்' என்று நினைந்தவன்.

"சிக்கன் மட்டன் எதும் கிடைக்காது, தூங்கு கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி எடுத்து வரேன்"

"அது இல்லை... மாமா"

"வேற என்ன?" மருந்து எல்லாம் அதன் இடத்தில் வைத்துவிட்டான்.

"சரி ரெஸ்ட் எடு தூக்கம் வரும் ஊசி போட்டதால"

"கிருஷ்ணா தூங்கும் வரை பக்கத்திலேயே இரு"

"சரி நீ படுத்துக்கோ" இப்படியே ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கிருஷ்ணாவின் பதற்றத்தை பார்த்தவர், அதற்க்கு அப்புறம் இது போல எந்த முட்டாள் தனமும் செய்யவில்லை.

கிருஷ்ணா ராதாவின் சோகமான நாட்களை கண்ணாவை பிரிந்து அவள் பட்ட கஷ்டத்தை சொல்லி முடித்து ஒரு பெரு மூச்சி விட்டான்.

"ஏன் மாதவா இந்த காதல் செய்பவர்கள் இப்படி முட்டாளா ஆகிடுறாங்க, அவங்க வீரம் எல்லாம் எங்கே ஒளிந்து கொள்கிறதோ தெரியவில்லை"

"அது உண்மைதான் கிருஷ்ணா வாங்க கிளம்பலாம்"

"நேரம் போனதே தெரியலை இன்னும் சில இடங்களுக்கு போக நினைத்தாள் அவள் ஆனா இப்படி ஆகிடுச்சி, சரி விடுங்க" என இருவரும் வீட்டை நோக்கி போக.

அங்கு கிளம்ப தயாராக இருந்தார்கள்.

மாதவனுக்கு ராதாவும் அனுவும் பெட்டியோடு இருப்பதை பார்த்து மனம் சுனங்கியது நாளை போக விருக்கும் வத்தல்மலை டிரிப்பும் போயிடுச்சி.

அனைவரும் நிதானமாக சாப்பிட்டு முடித்து.

"கிருஷ்ணா அன்னைக்கு வாங்கி வைத்த டிரஸ் போட்டுக்கலாமா, நாளைக்கு போட்டு போலாம் நினைத்தேன் அதான் முடியலையே"

நான்கு பேரும் ஒரே போல டிரஸ் போட்டுக் கொண்டு வர மாதவனின் அம்மா நால்வருக்கும் சுத்தி போட்டார்.

கடைசியாக நால் வரையும் நிற்க வைத்து தாரகை ஒரு போட்டோ எடுக்க… அதன் பிறகு செல்பியில் தூள் பறந்தது.

மூவரும் மாதவன் குடும்பத்தில் இருந்து விடைபெறும் போது.

"மாதவன் பாய்... தேங்க் யூ பார் யுவர் டைம்" அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் டாடா சொல்லிவட்டு காரில் மூவறும் ஏற வண்டி சிறிது தூரம் சொன்று திரும்பி வந்தது.

மாதவனுக்கு மனதில் அவ்வளவு சந்தோஷம், ராதை தன்னிடம் வர போகிறாள் என்று.

"கிருஷ்ணா... போகட்டா" முதலில் மறுப்பு தெரிவித்தவன்.

"போ..." என்றதும் தான் தனது பையை எடுத்துக்கொண்டு மாதவனை நோக்கி ஓடி வந்தாள்.

எல்லை இல்லாத மகிழ்ச்சயில் குதூகளித்தான் மாதவன்.

"இனி இவள் என் ராதை" என்று முணுமுணுத்தான்.
 
Top