• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
நான்கு மாதம் கழித்து ஒருவழியாக ஆதியும் ரித்திகாவும் சேர்ந்து அர்ஜுனை கண்டுபிடித்தனர்... உள்ளே சென்று ஆதி அர்ஜுனை கட்டியணைத்தான். ஆனால் அர்ஜுன், என்னை சுத்தி இருக்குற பிரிண்ட்ஸ்னு நினைச்சிட்டான், ஆட்டு தோல் போர்த்தி இருந்த மிருகம் என்று... ரித்தி உன்ன, அம்மாவை எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டேன்... சாரி அர்ஜுன்.. இத என்ட சொல்லி இருந்தா கேட்டு இருப்பேன்ல என்றான்... உனக்கா தெரியும்னு நினச்சேன், ஆதி எங்க டா என் பொண்ணு... பொண்ணு இல்ல ரெண்டு பையன் என்றான் ஆதி...

அர்ஜுன் புரியாமல் விழிக்க அப்போதுதான் சாரா நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டு இருந்தாள்... தாராவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு.

அர்ஜுன் ப்ரொபோஸ் செய்த அன்று, மிகுந்த மகிழ்ச்சியில் இருவரும் ஒன்று சேர்ந்து நினைவில் வர... அர்ஜுனுக்கு கொஞ்சம் சங்கடமாக போனது... அவர்கள் திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு நடந்தமையால் யாருக்கும் சந்தேகம் வந்து, சாராவை ஏதும் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று, மனது கொஞ்சம் தெளிவு பெற்றது.

அர்ஜுன் சாராவை தாங்கி பிடித்து நடந்து வந்தான்... சாரா அவன் புறம் திரும்பக்கூட இல்லை.

ஆதி ரித்திகாவை பார்க்க, அவள் இதுவரை ஆதி இடம் முன்பு போலவே ஒரு வார்த்தை கூட பேசவில்லை...

கிட்டத்தட்ட பத்து மணிநேரப் பயணம் செய்ததால் மற்றவர்களை விட சாரா சோர்ந்து காணப்பட்டாள். அதை பார்த்த அர்ஜுனுக்கு பொறுக்குமா என்ன.... கேரட் எடுத்து ஜூஸ் போட்டவன் சாராவிடம் நீட்ட, அவள் வாங்க மறுத்தாள்...

"ப்ளீஸ்..." என்றான்.

சாரா அவனை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல்... தாராவிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்...

அஜூ ரெண்டு தம்பி எனக்கு என்றாள்... இரண்டு விரல்களை காமித்து... அர்ஜுனுக்கு சாராவை அணைக்கவேண்டும் என்று பரபரத்த கைகளை அடக்கியவன்... ரித்தி ஆதியை பார்த்தாள்... அதை புரிந்து கொண்ட ஆதி எந்திரிக்க... ஆதி எனக்கு கால் வலிக்குது என்ற அடுத்த நொடி, சாராவின் கால்கள் அருகில் அமர்ந்து பிடித்துவிட ஆரம்பித்தான்..

"ஆதி என்ன பண்ற எந்திரி நான் பாத்துக்கிறேன்" என்றான்.

"என் பிரிண்டு டா அவளுக்கு நான் இதகூட செய்யாம யார் செய்வா" என்றான்.

அர்ஜுன் இவர்களின் நட்பில் நெகிழ்ந்துதான் போனான். ஏக்கமாக கூட வந்த அர்ஜுனுக்கு... இதுபோலத்தான ஆதிக்கும் இருந்து இருக்கும் என்னோட கோபத்தால் முழுதாக இரண்டு வருடம் இவர்களை பிரித்து விட்டேனே என்று மனம் வருந்தி எந்திரித்து சென்றான்... அதை பார்த்த ரித்தி அர்ஜுனை பின்தொடர்ந்து "என்னாச்சி அர்ஜுன்" என்றாள்.

"சாரி ரித்தி என்னால தான நீங்க பிரிஞ்சீங்க" என்றான் குற்ற உணர்வில்.

இல்ல அர்ஜுன் அவனோட வார்த்தையால பிரிஞ்சோம் என்றாள் ரித்தி புதிதாக.

ஆதி ரித்திகா சிறுவயதில் இருந்தே இணைபிரியாத நண்பர்கள்... ஆதிக்கு ரித்தியை பிடிக்க காரணம் கொழுகொழு கன்னங்களோடு ஆதி ஆதி என்று ஆதி பின்னாடி சுற்றி திரிவாள். ஆதி ஒருவயது ரித்தியை விட பெரியவன்.

வாரத்திற்கு ஏழு சண்டையை இழுப்பாள்... ஆதிக்காக அவனை ஒன்றும் சொல்லக்கூடாது ஸ்கூல்ல யாரும், வாய் பேசாது, ரித்திகா கைதான் பேசும்.

ஆதிக்கு எப்போது எல்லாம் ரித்தியை பார்க்கணும் தோணுதோ அப்போ எல்லாம், ரித்தி வகுப்பு பக்கம் போய் ஒரு ஹாய் சொல்லி கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு வருவான்...

இவன் செய்வதே ஓவர் ஆனால் ரித்திகா அவனையே மிஞ்சியவள்... அவனது வகுப்பில் போய் அமர்ந்து கொள்வாள்... ஒருநாள் ஆதி அருகில் அமர்ந்து இருந்த பையனிடம் ஒரே சண்டை... என்ன என்று விசாரிக்கும் போதுதான் தெரிந்தது... ரித்திகா அடிக்கடி இங்கு வந்து அமர்ந்து கொள்வதாக... அந்த பயனுக்கு இடம் கொடுக்காமல் ரித்திகா அமர்ந்து இருக்கிறாள்... அந்த பயனுக்கு கோபம் வந்து அவளை கீழே தள்ளிவிட ஆதிக்கு கோவம் வந்து சட்டையை கிழித்துக்கொண்டு சண்டை போட்டு உள்ளனர் என்று.

மூவரின் பெற்றோரையும் வரவைத்து ஒரே ரகளை... ரித்திகா மற்றும் ஆதியின் பெற்றோர் அடிவாங்கின பயனுக்கு மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டு சமாதானமாக சென்றுவிட்டனர்.

இதுபோல அடிக்கடி நடப்பதால்... இருவரும் பெற்றோரிடமும், பள்ளி முதல்வர் அழைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

வீட்ல போய் பாத்துக்கோங்க ரெண்டு பேரும்... இனி மாத்தி மாத்தி யார் கிளாஸ்க்கும் போகக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டார்.

ஆதி கொஞ்சம் புரிந்து கொள்பவன் அவளை பார்க்க செல்லவில்லை... ரித்திகா அடுத்த நாளே இரண்டு முறை சென்று வந்துவிட்டாள்... ஸ்கூல் சென்ற ஒருமணி நேரத்திற்குள்.

ரித்திகா இல்லாததை அறிந்த அவளது மிஸ்... தேடிக்கொண்டு வர, அவள் ஒரு மரத்தடியில் சோகமாக அமர்ந்து இருந்தாள்.

"என்னாச்சி பாப்பாக்கு" என்று அவளது அருகில் சென்று அமர்ந்த மிஸ் ஐ பார்த்து.

"ஆதிக்கு என்னை பிடிக்கல மிஸ்.." என்றாள் சோகமாக.

"ஆதிக்கு உன்ன மட்டும்தான் பிடிக்கும் அதனால்தான் உனக்காக சண்டைலாம் போட்டான் நேத்து" என்றார் சமாதானம் படுத்த.

"மிஸ் அது நேத்து இன்னைக்கு இல்ல, அவனை பாக்க கிளாஸ் போனேனா அவன் என்னை திரும்பி கூட பாக்கல" என்றாள் கண்ணீரை தேக்கிவைத்துக்கொண்டு.

"இந்த டே முடிய இன்னும் எவ்ளோ டைம் இருக்கு... ஆதி வருவான்" என்று ஆறுதல் படுத்தி அவளை கிளாஸ்க்கு அழைத்து சென்றார்.

நாள் முழுவதும் ஆதி வருவான் என்று காத்து இருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஈவினிங் ஸ்கூல் முடிந்ததும்... ரித்தியை அழைத்து செல்ல வந்தவனுக்கு ரித்தி கிடைக்கவில்லை... வீட்டின் அருகில் தான் ஸ்கூல்... வழக்கமாக இருக்கும் இடத்தில் ரித்தி இல்லை.. ஸ்கூல் முழுவதும் தேடி சென்றவனுக்கு ரித்தி கிடைக்காமல்... வீட்டிற்கு வேகமாக சென்று.. "ரித்தி பாப்பாவ யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, வாங்க தேடலாம் என்று அழைத்து சென்று தேட ஆரம்பித்தான்... ஆதி தந்தையுடன்.

ரித்தி வீட்டிற்கு அழைப்பு விடுக்க... அண்ணா அவ ஸ்கூல் விட்டதும் ஒடனே வந்துட்டா... "

"சரி மா பாப்பா என்ன பண்றா".

என்னனு தெரில வந்ததும் போய் படுத்துக்கிட்டா ஸ்னாக்ஸ் கூட சாப்பிடாம".

"சரிமா வீட்டுக்கு வரோம்" என்று போன் வைத்துவிட்டார்.

"டேய் அவ வீட்ல இருக்கலாம், என்னடா இம்சை பண்ற" என்று ஆதியை கடிந்துவிட்டு ரித்திகா வீட்டை நோக்கி சென்றார்.

ஆதி வண்டியில் இருந்து இறங்கிய மறுநொடி ரித்திகாவை தேடி சென்றான்.

ஆத்தை என்று கத்திக்கொண்டு ஓடிவந்தான்...

"என்னாச்சி டா... பாப்பாக்கு ஏதோ ஆச்சி" என்றான்.

அனைவரும் போய் பார்க்க, ரித்திகாக்கு பிட்ஸ் வந்துடுச்சி.... வலி முழுவதும் ரித்திகா கையை விடாமல் பிடித்து இருந்தான்.

டாக்டர் பரிசோதனை செய்து விட்டு "ஒன்னும் இல்ல பாப்பாக்கு கொஞ்சம் ஓவர் பிவெர் ஏதோ நினைச்சி நினைச்சி இப்படி ஆயிடுச்சி என்னனு பாருங்க... டேப்லெட் பிவெர்க்கு கொடுத்து இருக்கேன்."

வீட்டுக்கு வந்ததும் சாப்பிட வைத்து தூங்கி எந்திரிச்சி பின்பு... ஆதி அருகில் இருந்ததை பார்த்து... அத்தையை கட்டிக்கொண்டாள்,

"ரித்தி இப்போ ஓகேவா... இல்ல டாக்டர் ட போலாமா" என்றான் ஆதி பெரியமனித தோரணையில்.

"ஆத்தை i hate him போக சொல்லுங்க" என்று அழுக தொடங்கினாள்.

அவன் ஒருநாள் செய்ததற்கு ஒருவாரம் ஆதியிடம் பேசாமல் ஏதோ சோகத்தோடு இருந்தாள்.
ஸ்கூல்க்கு ரெடி செய்துவிட நான் போகமாட்டேன் என்று வீடு முழுவதும் அம்மாவும் மகளும் ஓடி திரிந்துகொண்டு இருந்தார்கள்... அத்தையை பார்த்தவுடனே... "அத்த நான் ஸ்கூல்க்கு போல" என்றாள் முடிவாக.

"என்னாச்சி தங்கத்துக்கு ஆதி பாரு ரெடி ஆயிட்டான்... நீயும் ரெடி ஆகு" என்றார்.

"நான் வேற ஸ்கூலுக்கு போறேன்"

"என் ஸ்கூல் பிடிக்கலையா" என்ற கேள்விக்கு பதிலை கேட்டு அதிர்ந்தனர் அனைவரும்.

"ஆதி போற ஸ்கூல்க்கு நான் போகமாட்டேன்... போன எனக்கு ஒடம்பு சரி இல்லாம போய்டும்" என்றாள்.

"அப்படி எல்லாம் இல்லடா தங்கம்.." என்று ஆறுதல் படுத்த அவள் கேட்கவே இல்லை.

"அவன் என்ன பாக்க வரலைனா எனக்கு திரும்ப ஒடம்பு சரி இல்லாம போய்டும்... அவனுக்கு அவங்க பிரிண்ட்ஸ் தான் முக்கியம்... என்ன பாக்கவே வரல.... அவன் என்ன பாக்க வருவான்னு ஈவினிங் வர பார்த்துடே இருந்தேன் தெரியுமா" என்றாள் அழுகையுடன் அத்தையை அணைத்துக்கொண்டு.

"சரி இனி ஆதி பாக்க வருவான், ஓகே வா.. இப்போ ஸ்கூல் போறயா?" என்றாள் மீரா.

"அவன் வரமாட்டான்.." என்றாள் ரித்திகா சோகமாக.

ஆதி மீராவின் காதில் ஏதோ சொன்னவுடன்... "அப்பா டா போய் சொல்லு அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே" என்றாள் மீரா.

ஆதி எப்படியோ அப்பாவிடம் சம்தம்வாங்கி வலுக்கட்டாயமாக ரித்தியை இழுத்துக்கொண்டு போனான்.

பிரின்சிபால் முன்னாடி ரித்தியை கூட்டிச்சென்றவன்... நானும் இனி ரித்திகா கிளாஸ்க்கு போய்டுறேன்....

இவனது பேச்சை கேட்ட முதல்வருக்கு என்ன செய்வது என்பது போல இருவரது பெற்றோரையும் மாற்றி மாற்றி பார்த்தார்.

ஆதி பெற்றோர்... சரி என்பது போல தலையை ஆட்ட... ரித்திகா பெற்றோர் தயங்கியவகிரு ஆதி பெற்றோரை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

முதல்வர் ஆதி ரித்திகாவை ஒருதரம் பார்த்து ஆழ்ந்த மூச்சை விட்டு.... ஆதியை ரித்தி கிளாஸ்க்கு அனுப்பமுடியாது.... என்று சிறிது இடைவேளை விட்டு ஏதோ பேச துவங்கும் முன்பு,

ஆதிக்கு கோபம் வந்தது... சார் நான் இல்லனா ரித்திக்கு பீவர் வந்துடும் இனி எப்பவும் அவ கூடத்தான் இருப்பேன், என்றான் முடிவாக.

"ஆதி சட் அப், நான் இன்னும் பேசி முடிக்கல" என்றார்.

என்ன என்பது போல, அனைவரும் அவரை பார்க்க... ரித்தி சூப்பரா படிக்கறதால அவளை ஆதி கிளாஸ்க்கு அனுப்பிடலாம், பட் எக்ஸாம் முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு அது முடியட்டும்" என்றார்.

அனைவரும் சந்தோசமாக வீட்டுக்கு சென்றார்கள்... அதன் பிறகு ஒன்றாக ஸ்கூல் முடித்து கல்லூரிக்கு செல்லும் காலத்தில், ஆதிக்கு வேண்டாத சவகாசத்தால் ரித்தி தனித்து விடப்பட்டாள்.... ஆதியிடம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவர்களை பற்றி... ஏன் என்றால் ஆதியிடம் அவனது நண்பர்கள் நடித்துக்கொண்டு இருந்தார்கள்.

கல்லூரியிலும் ஒரே வகுப்பு இருந்தாலும் ரித்திகா தனிமையில் இருந்தாள்... சிறு வயதில் கொழுகொழு வென்று இருந்தவள்... ஆதிக்கு பிடிக்கும் என்று உடம்பை குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை..

அவனுடைய நண்பர்கள் அவளது உருவத்தை கலாய்க்க.... கூட சேர்ந்து ஆதியும் சிரித்தது, அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சிறுவயது போல ஆதி கூடத்தான் இருப்பேன், என்று அடம் பிடிக்கவும் இல்லை ரித்திகா... என்னதான் எல்லாத்தையும் மறைத்தாலும் அவளால் அவனை மறக்க முடியவில்லை.... அவனுக்கு தெரியாமல் சிறுவயதில் இருந்து ஆதியை காதலித்து வந்தாள்... ஆதி நல்ல நிலைக்கு வரும் வரை சொல்லக்கூடாது என்றவளுக்கு தெரியவில்லை சொல்லாமலே அவளது காதல் மண்ணில் புதைந்துவிடும் என்று.

28

அர்ஜுன் அவனது மேற்படிப்பை முடித்துவிட்டு... டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்க ஏற்பாடு செய்துகொண்டு இருந்தான்... வெயிட் லாஸ் ஈசி ஆகும் வகையான நடன பள்ளியில், அதற்காக சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தான்.

ரித்திகா பெற்றோர் மற்றும் அர்ஜுன் அப்பா மூவரும் ஒரு விபத்தில் தவறிட்டாங்க. ரித்திகாவை காப்பாற்றிவிட்டு மூவரும் இறந்துவிட்டார்கள்... அப்போது இருந்து ரித்திகா அர்ஜுன் வீட்டில்தான் இருக்கிறாள். அதனால் தான் அவள் சோகமாக இருக்கிறாள் என்று அனைவரும் நினைக்க... அந்த சோகம் போக ஆதியை நாடினால், அவனும் தந்தை இல்லாமல் சோகத்தில் வாடிக்கொண்டுதான் இருந்தான்... ஆதி தன்னை தேற்றிக்கொண்டு சிறிது காலத்தில் வெளியே வந்துவிட்டான்... ரித்திமா முயற்சி செய்து தோற்றாள்... ஆதி துணை தேவைப்பட்டது அவளுக்கு, ஆனால் அது கிடைக்காமல் போகவும் அந்த சோகம் இவளிடம் நிரந்தரமாக தங்கிவிட்டது.

ரித்திகாவின் சோக முகத்தை பார்த்து விசாரிக்க, அவளும் சொல்லிவிட்டாள். கல்லுாரியில் நடந்ததை... "ஆறு மாசத்துல நார்மல் ஆகிடலாம்... டான்ஸ் ஸ்விம்மிங் ரெகுலரா செஞ்சா" என்றான் அர்ஜுன்... வேண்டா வெறுப்பாகத்தான் ஆரம்பித்தாள் ரித்தி... அதன் பிறகு அவளுக்கு மிகவும் பிடித்து செய்ய ஆரம்பித்தாள்... நேரம் போவதே தெரியாமல் அவளது கல்லுாரி நாட்கள் முடிந்தது.... ஆதி தேர்ச்சி பெற்ற அலுவலகத்திலேயே இவளுக்கும் வேலை கிடைத்தது... அவன் பேசா விட்டாலும், பார்த்துக்கொண்டாவது இருக்கலாம் என்றது அவளது காதல் மனம்.

அவனது நண்பர்களும் அதே அலுவலகத்தில்தான் இருந்தார்கள்... ஆதியின் திறமையால் அவன் பதவி உயர்ந்துகொண்டு இருந்தது... அதில் பொறாமை கொண்ட அவனது நண்பர் வட்டாரம் அவனது பேரை கெடுக்க சமையம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்... அவனது வட்டத்தில் ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள். அந்த ஐவரும் கேடி ஆதியை தவிர... ஆதியின் உதவி அவர்களுக்கு தேவை எல்லா விதத்திலும், அதனால் அனைத்தும் ஆதியிடம் மறைத்து வெளிவேஷம் போட்டுகொண்டு இருந்தார்கள்.

ஆதிக்கு பாராட்டுவிழா ஒன்று ஏற்பாடு செய்தது, அந்த ஐந்து நயவஞ்சக கூட்டம்... அது தெரியாமல் ஆதி குதூகலமாக சுற்றி திரிந்தான்... என்னதான் பழக்கவழக்கம் மாறினாலும் ஆதி தண்ணி அடிக்கமாட்டான்... ஆரஞ்சு ஜூஸ் தாண்டி என்றும் சென்றதில்லை.

"மச்சான் சக்ஸஸ் அந்த பவுடர் கலந்துட்டேன்.... நியூ வா சேர்ந்த அந்த பெண்ணையும் அவனையும் ஒரே அறையில் வைத்து அடைத்தால் போதும்... அந்த பவுடர் பொண்ணு பக்கம் இருந்தா எக்கச்சக்கமா போதை ஏறி எல்லாம் முடிஞ்சிடும், அப்புறம் அவன் வெளிய தலைகாட்ட முடியாது" என்று சொல்லி அந்த ஐவரும் கைதட்டி ஆர்பரித்துக்கொண்டு இருந்ததை ரித்திகா கேட்டுவிட்டாள்.

என்ன செய்வது என்று ஒன்னும் புரியல அவளுக்கு, அர்ஜுன் ஊர்ல இல்ல, வீட்ல சொல்லவும் முடியாது என்று யோசித்தவள்... ஆதிக்கு அருகில் சென்று அமர்ந்தாள் எப்படியாவது அவனிடம் பேச்சுக்கொடுத்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம் என்று நினைத்து கொண்டு இருந்தாள்.

சிறப்பான தருணம் சொல்ல நினைத்ததை.. சொல்ல ஆரம்பித்தாள். "ஆதி ஐ லவ் யு"என்றாள்.

"ஐ டூ லவ் யு டீ, உனக்கு சொல்ல இவளோ வருஷம் ஆச்சா... இடியட் என்றான் காதலோடு.

"போதையில் பேசுறயா" என்றாள் ரித்தி.

"இல்லை ஜூஸ் கூட இன்னும் ஸ்டார்ட் செய்ல" என்றான் இப்போதுதான் அவனின் நண்பர்கள் வந்தார்கள்... அவனுக்கு ஜூஸ் கொடுக்கப்பட்டது... ஆதியை தடுக்க நினைத்தவளுக்கு.

ஆதி அவளுக்கும் கொஞ்சம் வற்புறுத்தி குடிக்கவைத்துவிட்டான்... மீதியை அவன் குடித்துவிட்டான், சொல்லவருவதற்குள் நிமிடத்தில் நடந்துவிட்டது...

சிறிது சிறிதாக போதை ஏற... ரித்தியால் பேச கூட முடியவில்லை... இதுதான் சமயம் என்று இருவரையும் ஒரு அறையில் கொண்டுபோய்ட்டு விட்டுவிட்டு அனைவரையும் கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்கள்...

இருவரையும் காணோம் என்று தேடி வந்தவர்களுக்கு.... ரித்திகா சற்று முன்புதான் எழுந்து அவளது ஆடைகளை அணிந்துகொண்டு நடக்க முடியாமல் வந்து கதவை திறந்தாள்.... ரித்திகாவை மீரா அடிபின்னி எடுத்துட்டார்... வெளியே சத்தம் கேட்டு ஓடிவந்த ஆதி அன்னையை பார்த்து அதிர்ந்தான்... மீரா அவளை அடிப்பது தாங்கிக்கொள்ள முடியாமல்... "அம்மா நாங்க லவ் பன்றோம் கல்யாணம் பண்ணிக்குவோம் அவளை அடிக்காதீங்க" என்றான்.

லவ் பண்ண என்ன வேணும் நாலும் பண்ணுவீங்க... ஒழுங்கா வளக்கலன்னு என்னதான் டா நாலு பேரு பேசுவாங்க என்றார்.

அந்த சமையம் பார்த்து ஆதி நண்பர்கள் வந்து... "என்ன மச்சான் இப்படி ஆயிடுச்சி இந்த ரித்திகா நேத்து உன் ஜூஸ்ல ஏதோ கலந்தா அப்போவே நினச்சேன்" என்று மொத்த பழியையும் ரித்திகா மீது போட்டான்.

ஆதிக்கு கோவம் எல்லையை மீறி "நீயெல்லாம் ஒரு பொண்ணா..." என்று கண்டபடி திட்டிக்கொண்டு இருக்க...

ரித்தி அவனவே பார்த்துக்கொண்டு இருந்தாள்... மீரா இருவரின் கையை பிடித்து இழுக்குக்கொண்டு வீட்டுக்கு சென்று இருவரையும் தயாராக சொல்ல... ரித்திகா அமைதியாக இருந்தாள்... மீரா இவளை தயார் செய்து அர்ஜுனை வரவைத்து இருவருக்கும் கோவிலில் எளிமையாக திருமணம் நடந்தது.... வீட்டுக்கு வந்ததும் ஆதி ரித்திகாவை நம்பாமல் நண்பர்கள் சொன்னதை பிடித்துக்கொண்டு நின்றான்.... கோவத்தில் அவன் ரித்திகாவை அடிக்க... அர்ஜுன் ஆதியை சரமாரியாக அடித்தான்... எவனோ சொன்னான்னு நம்ம ரித்தியை இவளோ கேவலமா பேசுற, நீ எல்லாம் ஒரு மனுஷனே இல்ல... வீட்ட விட்டு வெளியே போடா என்றான்... "எவளோ ஒருத்திக்காக என்ன போக சொல்றிங்க இல்ல" என்று கோவமாக வெளியேறினான்.

ரித்திகாவால் எவளோ ஒருத்தி என்று சொல்லியதையும், செய்யாததை யாரோ சொன்னதை நம்பி என்னை நம்பாத ஆதியை வெறுத்தாள் ரித்திகா.

இவை அனைத்தும் பின்னாடி இருந்து கேட்டுக்கொண்டு இருந்தான் ஆதி. ரித்திகாவின் துடிப்பை அவனாலும் உணர முடிந்தது... பல வருடம் கழித்து நான்கு மாதத்துக்கு முன்னால் அவனது நண்பர்களை சந்தித்தான்... அப்போதுதான் சரக்கு அடித்துவிட்டு அவனது நண்பர்கள் ஒளறியதை கேட்டவன், துடிதுடித்து விட்டான்... அண்ணன் ரித்திகா என்று அனைவரையும் எதிர்த்து தவறாக பேசியதை எண்ணி மனதால் செத்துவிட்டான் என்று சொல்லலாம்... ஒரு முடிவு எடுத்தவன்... அந்த ஐவரின் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டினான்... எங்கு சென்றாலும் இவர்களுக்கு வேலைகிடைக்காதது போல செய்தான் ஆதி... மனது அப்போதும் ஆறாதவன்.... போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து இவர்களை அலையவிட்டான்... அண்ணனின் வாழ்க்கையும் கெடுத்துவிட்டேனே.... சாராவும் அவளது குழந்தையும் அர்ஜுனிடம் இருந்து பிரித்துவிட்டோமே என்று இன்னும் குற்ற உணர்ச்சில் சிக்கி தவித்தான்.... அர்ஜுனின் தேடுதல் வேட்டைக்கு இன்றுதான் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.

ஆதி வரவும் ரித்திகா சாராவிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.
 
Top