5வயது மலர் சமத்து குழந்தை ! பள்ளி முடிந்தபின் அருகில் இருந்த காப்பகத்தில் அவளை பள்ளியின் ஆயா கொண்டு விட்டுவிடுவாள். அங்கே வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகள் இருந்தனர்! அவர்களுடன் விளையாடிக் கொண்டே தாயின் வரவை எதிர்பார்த்தபடி இருப்பாள்!
அன்றும் மகளை அழைக்க வந்து கொண்டிருந்தாள் மயூரி! சிக்னலில், எதிர் சாரியில் அவனை பார்த்துவிட்டாள்! இந்த ஊரில் அவன் எப்படி வந்தான்? யோசனை ஒருபுறம் ஓடியது! நல்லவேளையாக அவன் இவளை பார்க்கவில்லை! பாதியாக இளைத்திருந்தான்! பணக்கார பெண்ணை கட்டிக்கொண்டவனின் நிலையா இது? அவள் எண்ணும் போதே பச்சை விழ, வாகனத்தை கிளப்பிக் கொண்டு நகர்ந்துவிட்டாள்!
ஆனால் மனம் தான் அவனிடம் போய் நின்றது! ஆயினும் மனதை மகளிடம் திருப்பி, வண்டியை செலுத்தினாள் மயூரி!
மகளின் நினைவில் உதட்டில் புன்னகை தோன்ற, அவளுக்கு வேறு சிந்தனை எழவில்லை! மறுநாள் விடுமுறை என்பதால் சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்! வழியில் மகளுக்குப் பிடித்த பலகாரம் வாங்கிக்கொண்டு, மகள் இருந்த காப்பகத்தின் சாலையில் திரும்பும் போது அது நிகழ்ந்தது!
எதிரே வேகமாக வந்த கார், கடைசி வினாடியில் கவனித்த மயூரியும் செய்வதறியாது திகைத்துப்போனாள்! கார் அவளை தாக்கிவிட்டது!
அது பிரதான சாலை அல்ல நிழல்வழிக்சாலை தான்! ஆயினும் மாலை நேரம் என்பதால் போக்குவரத்து சற்று அதிகமாகவே இருந்தது!
மயூரி தலையில் அடிப்பட்டு சரிய, கூட்டம் கூட ஆரம்பிக்க, காரின் பின் சீட்டில் இருந்து இறங்கினான் அந்த உயரமானவன்! தாடியும்,கண்களில் குளிர் கண்ணாடியும் கூட அவனுக்கு ஒரு தனி கம்பீரத்தை கொடுத்தது!
டிரைவர் பதற்றமாக மயூரியை நோக்கி செல்ல," முத்து, நீ தண்ணீரை எடுத்துக் கொண்டு வா, சீக்கிரம்" என்று உத்தரவிட்டவாறே மயூரியை வேகமாக நெருங்கினான்!
அவளை புரட்டிப் பார்த்தவனின் முகம் யோசனையாய் சுருங்கி மீண்டது! அதற்குள் தண்ணீர் வர , அதை அவளது முகத்தில் தெளித்தான், லேசாக கண் விழித்தவள், " மலர் , மலர் என் மகள்" என்றவாறே மயங்கிப்போனாள்!
முத்துவிடம் சொல்லி அவளது பொருட்களை சேகரித்தவன், அவளது வண்டியை பழுது பார்க்க எடுத்து செல்ல பணித்துவிட்டு,
சட்டென்று அவளை தூக்கி காரின் பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு, ஒட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தான் ரிஷி!
மருத்துவமனையை அடையும்போதே மயூரியின் கைப்பேசி ஒலித்தது!
அதை எடுத்துப் பேசினான்," ஹலோ நீங்க யார்?
" இது மலர் அம்மா நம்பர்தானுங்களே?"
"ஆமா, சொல்லுங்க, என்ன விஷயம்?"
" வழக்கமாக இந்த நேரத்துக்கு மயூரி பொண்ணு வந்துவிடும் சார்! ஆனால் இன்னிக்கு காணோமேனு தான் போன் செய்தேன், பாப்பாவும் வாசலையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கு! அவங்ககிட்ட போனை கொடுக்கிறீங்களா?"
" உங்க காப்பகம் எங்கே இருக்கு என்று விலாசம் சொல்லுங்க, மயூரிக்கு அடிபட்டு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு வந்துருக்கோம்! அதனால நானே வந்து பாப்பாவை அழைச்சுக்கிறேன்!" என்றவன் விலாசத்தை குறித்துக் கொண்டு, மருத்துவமனை விதிமுறைகளை முடித்துவிட்டு, பரிசோதனை முடியும் வரை சற்று நேரம் அங்கேயே காத்திருந்தான்!
மருத்துவர் வந்து "அவங்களுக்கு உயிருக்கு பெரிதாக ஆபத்து இல்லை, அடிபட்ட இடத்தில் தையலா போட்டிருக்கிறது, தலையில் அடிபட்டிருக்கிறதால் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும், மற்றபடி பிரச்சினை இல்லை! அவங்க சரியாக சாப்பிடாத காரணத்தால், சற்று பலவீனமாக இருப்பதால் ட்ரிபஸ் போட்டிருக்கிறது! முடிந்ததும் அழைத்து போய்விடலாம்" என்றுவிட்டு நகர்ந்தார்!
செவிலியரிடம் சொல்லிவிட்டு, மலரை அழைத்துவரக் கிளம்பினான் ரிஷி!
குழந்தைகள் பராமரிப்பு இல்லம்!
ரிஷி அங்கே சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதும், அந்த பெண்மணியின் முகத்தில் ஒரு மரியாதை வந்திருந்தது! மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, மயூரி அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தான்!
மலரிடம், "இந்த அங்கிள் கூட போ மலர், அம்மாக்கிட்டே கூட்டிட்டுப் போவார்" என்று அந்த அம்மாள் சொன்னபோது அந்த குழந்தை அவனை விழிவிரிய பார்த்துவிட்டு, காதோரம் தன் சின்ன கரத்தை வைத்து, ரகசியக் குரலில், " அம்மா வந்து கூப்பிடாம யார் கூப்பிட்டாலும் போக்கூடாதுன்னு சொன்னாங்களே ஆன்ட்டி ? இவர்கூட போனா அம்மா திட்ட மாட்டாங்களா?" என்றது ரிஷிக்கும் கேட்டது!
புன்னகையுடன் குழந்தையை மெச்சுதலாகப் பார்த்திருந்தான்!
"அம்மா தான் கண்ணு, இவரை அனுப்பி கூட்டிட்டு வரச் சொன்னாங்களாம்! அப்படி இல்லைன்னா ஆன்ட்டி உன்னை அவர்கூட அனுப்புவேனா?" என்று அதே ரகசியக்குரலில் பேசினார் அந்த பெண்மணி!
"உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா பாப்பாவை கூட்டிட்டு என்கூட வர முடியுமா மேடம்? நானே திரும்ப கொண்டு வந்து ட்ராப் பண்ணிடுறேன்! என்றான்!
" மற்ற குழந்தை போல இவள் கிடையாது! சீக்கிரமாக அவள் உறுதியில் இருந்து மாற மாட்டாள்!அதனால நான் இவளோடுவர்றேன் சார்!" என்று அந்த பெண்மணி குழந்தையின் பையை எடுத்துக் கொண்டு அவனோடு காரில் ஏறினாள், மலரை தூக்கிக் கொண்டு போய் முன் இருக்கையில் அமர்த்தி,பெல்ட் போட்டு விட்டான்! ரிஷிக்குள் இன்னதென்று சொல்ல தெரியாத உணர்வு உண்டாயிற்று !
மருத்துவமனைக்கு வந்தபோது மயூரி கண் விழித்து இருந்தாள்! ட்ரிப்ஸ் முடியும் தருவாயில் இருந்தது! அவளிடம் குழந்தையை காட்டிவிட்டு, அங்கே இருந்த கான்ட்டீனுக்கு மலரை அழைத்துப் போய் அவள் விரும்பிய உணவை வாங்கிக் கொடுத்து அவள் சாப்பிடுவதை ரசனையோடு பார்த்திருந்தவனுக்கு, அதை படம்பிடிக்கும் யோசனை உண்டாக, தன் போனில் பதிவு செய்து கொண்டான்!
காப்பகத்தின் பெண்மணி மயூரியிகம் பேசிவிட்டு, விடைப்பெற்றுக் கொள்ள, இருசக்கர வாகனத்துடன் சென்றிருந்த முத்து திரும்பியிருந்ததால், அவனுடன் அவரை அனுப்பி வைத்தான் ரிஷி!
அதன் பிறகு, "மயூரி, என் டிரைவரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது! அதற்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்! உங்கள் வண்டியை சரி பார்த்தாகிவிட்டது! இந்த ட்ரிப்ஸ் முடிந்ததும் உங்களை வீட்டில் சேர்ப்பது என் பொறுப்பு! நீங்க வீணாக மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க"!
ரிஷியைப் பார்த்த மயூரிக்கு எங்கோ அவனை பார்த்த ஞாபகம்! ஆனால் எங்கே என்று நினைவு வரவில்லை!
மகளை அவன் தூக்கி வைத்திருந்தது ஏதோ மனதுக்குள் கலவரத்தை உண்டாக்கியது! யாரிடமும் போகாத மகள் இன்று இத்தனை நெருக்கமாக ஒரு அந்நியனின் கழுத்தை கட்டிக்கொண்டிருக்கிறாளே? எண்ணம் ஒருபுறமிருக்க , அவனது பேச்சுக்கு, அவசரமாக பதில் சொன்னாள்!
"இல்லை, அதெல்லாம் வேண்டாம்! நாங்கள் என் வண்டியிலேயே போய்விடுவோம்! விபத்து நேர்ந்ததும் விட்டுப் போகாமல் இந்த அளவுக்கு உதவி செய்ததே பெரிய விஷயம் ! ரொம்ப நன்றி!"
பதில் சொல்லாது தலையை மட்டுமாக அசைத்துவிட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டான்! ரிஷிக்கு புரிந்தது தனியாக குழந்தையுடன் வாழும் பெண், ஒருவனின் காரில் சென்று இறங்கினால் அக்கம்பக்கம் பேச்சு எழும் என்று அவள் தயங்குகிறாள் என்று! ஆனால் அதற்காக அவளை தனியே போகவிடுவதும் சரியில்லையே!
காப்பகத்தின் பெண்மணி சொன்னதை வைத்துப் பார்த்தால், அவள் இந்த ஊருக்கு கணவனை இழந்தவளாகத்தான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது! இந்த காலத்தில் விதவைகள் ஒரு சின்ன ஸ்டிக்கர் பொட்டாவது வைக்கத்தான் செய்கிறார்கள்! இவளானால், பொட்டு இல்லை, அழுந்த வாரிய தலையில் கொண்டை போட்டு, கண்ணில் பழைய காலத்து மாடல் கண்ணாடி அணிந்து என்று அவளது தோற்றத்தில் கொஞ்சமும் அக்கறையற்றவளாக இருக்கிறாள்!
யார் செய்து வைத்த கொடுமை இது? ஒருவேளை மாமியாராக இருக்குமோ?
" சார் அவங்களுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சிருச்சு, போறதுக்கு முன்னாடி டாக்டரை பார்த்துவிட்டு போங்க!" என்ற செவிலியரின் குரலில் கலைந்து நிமிர்ந்தவன், அப்போதுதான் மலர் அவன் தோளில் சாய்ந்தவாறே உறங்கிவிட்டிருந்ததை கவனித்தான், சின்ன முறுவலுடன், அவளை வாகாக தோளில் படுக்க வைத்தபடியே, உள்ளே சென்று மயூரியையும் அழைத்துக் கொண்டு மருத்துவரை பார்க்க சென்றான்!
மயூரிக்கு உடம்பில் அங்காங்கே வலி இருந்தது! ஏனோ மனதும் பலவீனமாகிவிட்ட உணர்வு! அதனாலேயே மலரை அவள் தூக்கிக் கொள்ள முனையவில்லை!
ரிஷி , மயூரியையும், மலரையும் இறக்கிவிட்டு, அவளது பொருட்களையும் கொடுத்து அனுப்பினான்! அவர்கள் பின்னோடு வந்த முத்து அவளது வண்டியை கொணர்ந்து நிறுத்திவிட்டு சாவியை மயூரியிடம் கொடுத்தவன், காரில் ஓட்டுனர் இருக்கையில் ஏறிக் கொண்டு வண்டியை கிளப்பினான்!
மயூரிக்கு சோர்வாக இருந்தது! ஆயினும் உடை மாற்றிவிட்டு, ரிஷி வாங்கிக் கொடுத்திருந்த இரவு உணவை தானும் உண்டு மகளுக்கும் கொடுத்துவிட்டு படுத்தவளுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை!
மயூரி பெருமூச்சுடன் புரண்டு படுத்தாள்! மாலையில் வழியில் பார்த்த அவனது நினைவு வந்தது! அவன் சங்கர்! கடைசியாக அவனை பார்த்து ஐந்து வருடங்களாகிவிட்டது! இத்தனை ஆண்டுகளில் அவனை அவள் நினைக்கவில்லை என்பதை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்தாள்! அப்படி என்றால் அவனை அவள் விரும்பவில்லையா? இல்லை என்றது மனது!
சங்கர் ஒரு காலத்தில் அவளை காதலித்தவன்! ஆம் அவளுக்கு அவனிடம் பெரிதாக குறை காண முடியவில்லை! ஆகவே அவன் சொன்ன காதலுக்கு சம்மதம் சொன்னாள்! அவள் யாருமற்றவள்!
அவளது பின்புலம் பற்றி அவன் ஆராயாமல் திருமணம் செய்துகொள்ள கேட்டவன்! அப்போது அவளுக்கும் கணவன் குழந்தை, குடும்பம் என்று வாழும் ஆசை உண்டாகியிருந்தது! ஆளும் பார்க்க நன்றாக இருந்தான்! யாரோ ஒருவனுக்கு மனைவியாகத்தான் போகிறாள்! அந்த ஒருத்தன் அவள் அறிந்தவனாக இருப்பதில் கூடுதல் நன்மைதானே என்று நினைத்தாள்! அத்தோடு,இருவர் சம்பாதித்தால் கடன்கள் சீக்கிரமாக தீர்ந்து, இருவரும் நல்லதொரு குடும்ப வாழ்வை வாழலாம் என்று அவன் உருவேற்றியிருந்தான்! அதனால் அவள் சிந்திக்கவில்லை! ஆனால்..!
ஆறு வருடங்களுக்கு முன்பு
மயூரியும், மான்சியும் ஆதரவற்றவர் இல்லத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள்! மான்சி , மயூரியைவிட இரண்டு மூத்தவள்! ஆனாலும் பயந்த சுபாவம் கொண்டவள்! படிப்பை முடித்ததும் பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது! மயூரிக்கும் வேறு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது! ஆகவே இருவருமாக பெண்கள் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கிக் கொண்டு வேலைக்கு சென்று வந்தனர்! ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்றது அவர்களது வாழ்க்கை!
மயூரியுடன், சங்கர் என்பவன் வேலை செய்தான்! அவளை விட ஏழு வருட சீனியர்! நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்! அவனுக்கு இரண்டு சகோதரிகள் ! இருவருக்கும் திருமணம் ஆகியிருந்தது! ஆனால் அதற்காக வாங்கிய கடன்கள் அவன் மீதுதான் இருந்தது! சொந்தமாக வீடு இருந்தது! அப்பா இல்லை ! அம்மா மட்டும்தான்! வாங்கும் சம்பளம் கடனை அடைக்கவும், அன்றாட செலவுக்கே சரியாக இருந்தது! இதில் சேமிப்பு என்பது பெருங்கனவாகிப் போனது!
மயூரியிடம் அவன் நல்லவிதமாக பழகினான்! தன்னைப் பற்றி எல்லாமும் சொன்னான்! மயூரிக்கு அப்போது உலகம் எப்படி என்று தெரியாது! குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதும் அவள் பார்த்து வளரவில்லை! அவன் தன் குடும்ப விஷயங்களை பேசும்போது, அவனது கஷ்டத்தை போக்க வேண்டும் என்று தோன்றும்! ஆனால் எப்படி என்பது தான் அவளுக்கு புரியவில்லை! மயூரியின் சம்பளம் அவள் ஒருத்திக்கு தாராளம்தான், விடுதிக்கு கட்டும் பணம் போக அத்தியாவசிய செலவுகள் போக, கையிருப்பு அதிகமாகவே இருந்தது! ஆடம்பர செலவு செய்யும் வழக்கம் இல்லாததும் ஒரு காரணம்! இல்லத்தின் தலைவி, அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பியது அவளுக்கு நினைவில் இருந்தது! பணம் இல்லாமல் இந்த உலகில் வாழமுடியாது! கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்யாமல், எதிர்காலத்திற்கு என்று சேமிக்க பழகணும்" என்றிருந்தார்!
அதற்காகவே வங்கிக் கணக்கில் அவள் சேமிக்க ஆரம்பித்திருந்தாள்!
சில மாதங்கள் பிரச்சினை ஏதும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக சென்றது! மான்சியும் மகிழ்ச்சியாக வளைய வந்தாள்! அவளிடம் தெரிந்த உற்சாகம் மயூரிக்கு சந்தோஷமாக இருந்தது! ஒரு நாள் அதற்கான காரணம் தெரிந்தது! அது மான்சி காதலிக்கிறாள் என்பது! அது சற்று அதிர்ச்சி என்றால், அடுத்த அதிர்ச்சி அவன் அவளது கம்பெனியின் முதலாளி என்பதுதான்! ஏனோ மயூரிக்கு பயமாக இருந்தது! உண்மையில் அவள் அப்போது பயந்திருக்க வேண்டியது சங்கரைப் பற்றித்தான் என்பதை உணராமல், தோழிக்காக கவலையுற்றாள்!
அந்த நிலையில் தான், திடுமென ஒரு நாள் சங்கர், கைமாத்தாக பணம் கேட்டான்! அடுத்த மாத சம்பளம் வாங்கியதும் கொடுப்பதாக சொன்னான்!
மயூரியும் கொடுத்தாள்! சொன்னது போல அடுத்த மாதம் சங்கர் திருப்பிக் கொடுத்துவிட்டான்! இரண்டு மாதங்கள் கழித்து தாயின் உடல் நலம் சரியில்லை கையில் வைத்திய செலவுக்கு பணமில்லை என்று ஒரு தொகையை வாங்கிச் சென்றான்!
அடுத்த மாதம் அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டான்!
அப்போதுதான் அவன் காதல் சொல்லி திருமணம் செய்து கொள்ள கேட்டது! மயூரிக்கு அவனிடம் பெரிதாக குறை தெரியவில்லை!
ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவன் பணம் கேட்பதும் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுமாக இருந்தான்! ஆனால் அதை கவனிக்க முடியாமல், மான்சியிடம் தெரிந்த மாற்றங்கள் கலவரப்படுத்தியது!
"மானு, என்னாச்சு ? ஏன் டல்லாக இருக்கிறே?"
"ஒன்னுமில்லை, மயூ, எனக்கு ஏதோ செய்யுது! நான் சாகப்போகிறேனா? நெஞ்செல்லாம், பிசையுது!" கண்ணீர் வழிய சொன்னவளை அணைத்துக் கொண்டாள்!
"சே,சே, அப்படி ஒன்றும் ஆகாது மானு! வா டாக்டரிடம் காட்டலாம்! முதலில் ஏதாவது சாப்பிடு! ராத்திரியும் நீ ஏதும் சாப்பிடவில்லை!"
என்று சமாதானம் செய்துவிட்டு, தட்டில் சாதம் குழம்பு போட்டு, பிசைந்து எடுத்து வந்து ஊட்ட தொடங்கினாள்! இரண்டு வாய் சாதம் உள்ளே போனதும் , குட்டியூண்டு குளியலறைக்கு ஓடினாள் மான்சி!
மயூரிக்கு ஏதோ புரிவது போல இருந்தது! பதற்றத்துடன், தோழியின் பின்னே சென்று அவளுக்கு உதவினாள்! அவளை அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தாள்!
"மானு, என்ன காரியம் பண்ணி வச்சிருக்கிறே? என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்!
" என்.. என்ன மயூ? நான் என்ன செய்தேன்?"
" ஒரு பொண்ணு எதை இழக்கக்கூடாதோ அதை இழந்துட்டு வந்து நிற்கிறியேடி? இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா, என்னாகும்னு யோசிச்சியா?" என்று படபடத்தாள்!
மான்சியின் விழிகள் விரிந்தது! " நீ .. நீ என்ன சொல்றே மயூ? அப்போ நான் சாகமாட்டேனா? எனக்குள்ள பாப்பா இருக்குதா? " என்றாள் குதூகலமாக!
மயூரி அவளை ஓங்கி அறைந்தாள்! உனக்கு புரியுதா இல்லையா மான்சி? இது முறைப்படி திருமணமாகி வந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்டி! ஆனால் இது தப்புடி! நீ எப்படி ? " கண்கள் கலங்க, மயூரி கேட்க,
" இதோ பார், மயூ, நீ பயப்படறாப்ல ஏதும் ஆகிடலை! என்னோட கேசவ் ரொம்ப நல்லவர்! அன்றைக்கு நாங்க டேட்டிங் போயிருந்தோமே அப்போது மழையில் நனைந்து விட்டோம்! உனக்குத்தான் தெரியுமே எனக்கு மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்று! அன்று மாற்றுத் துணியும் கையில் இல்லை! எனக்கு குளிர் தாங்கமுடியவில்லை! அப்போது வேறு வழியில்லாமல் அந்த சம்பவம் நடந்து விட்டது! கேசவ் எனக்கு அவர் செயினை என் கழுத்தில் போட்டார்! அவரோட பெற்றொர்கிட்டே பேசி, உடனே திருமணத்திற்கு சம்மதம் வாங்கிறதா சொன்னார்! அதன்படி அவங்க வீட்டில் அவர் பேசினாராம், வீட்டில் ஒத்துக் கொண்டார்கள்! ஆனால் அதற்குள்ளாக அவருக்கு வெளிநாட்டு கான்ட்ராக்ட் கிடைத்துவிட்டதால் உடனடியாக போக வேண்டிய நிலை! ஒரு மாதத்தில் வந்து விடுவதாக தெரிவித்து சென்றார்! ஆனால் அங்கே எதிர்பாராதவிதமாக வேற வேலைகளும் சேர்ந்துட்டதால் வர கொஞ்சம் லேட்டாகுதுன்னு சொன்னார்! அவர் வந்ததும் எங்க கல்யாணம் நடக்கும் மயூ! இப்ப அங்கே ராத்திரி நேரம் ! இன்னிக்கு ராத்திரி நான் விஷயத்தை சொன்னதும், உடனே கிளம்பி வந்துடுவார் பாரேன்!" சிறு குழந்தையாக அவள் சொல்ல சொல்ல, அவளை பரிதாபமாக பார்த்தாள் மயூரி!
மான்சி ஏமாந்து விட்டதை கூட உணரவில்லையே ? அந்த மனுஷனுக்கு, ஒரு அப்பாவி பெண்ணை எப்படி ஏமாற்ற மனசு வந்ததோ ? மயூரி அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யாமல் குடிப்பதற்கு கொடுத்து படுக்க வைத்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள்!
ஆனால் அவள் மனம் முழுதும் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தது!
இந்த விபரம் விடுதியில் தெரிந்தால், தொடர்ந்து அங்கே தங்குவது என்பது முடியாத காரியம்! என்ன செய்வது ? தோழியை நிர்க்கதியாக விட்டுவிட அவளுக்கு மனம் இல்லை! நூற்றில் ஒரு வாய்ப்பாக அந்த கேசவ் வந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை! அவனிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்! அவன் வருவானா?
அன்று இரவு மான்சி அவனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவனது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது! அதற்காக மான்சி மனம் தளர்ந்து விடவில்லை! தொடர்ந்து ஒரு வாரம் அவளது உடல் உபாதைகளை கூட பொருட்படுத்தாமல் அவனை தொடர்பு கொள்ள முயன்றாள்! மறுபடியும் அதே பதில் கிடைக்கவும், அவள் சோர்ந்து போனாள்! கண்ணீரும் கம்பலையுமாக அவள் அதஅறைக்குள்ளே அடைந்து கிடந்தாள்!
தன் கைப்பேசியிலும் தொடர்பு கொண்டு பார்த்தாள்! அதே பதில் தான் !
கடைசி முயற்சியாக," மானு, அவர் வீடு எங்கே இருக்கு தெரியுமா? விசிட்டிங் கார்டு ஏதும் கொடுத்திருக்கிறாரா ? அல்லது உன் கம்பெனியில் முக்கியமான நபர் இருப்பார்களே அவர்கள்கிட்டே, அவரைப் பற்றி விசாரிக்கலாமா?"
மான்சியிடம் எதற்குமே பதில் இல்லை! " ஆபீஸ்ல, நான் யார்கூடவும் அதிகமா பேச மாட்டேன்! எனக்கு வேலை கேசவ்கிட்டே தான்!"
" அவர் போட்டோ இருக்கா? அவர்கூட நீ எடுத்துக்கிட்டது?"
" இருக்கு, மயூ! எல்லாம் என் போன்ல இருக்கு!"
"அப்படின்னா, ஒன்னு செய்யலாம் மானு! அவர் கம்பெனியில் கேட்டா, வீட்டு விலாசம் கிடைக்கும்! அங்கே போய் இப்படின்னு விஷயத்தை சொல்லுவோம்!" என்றாள்!
" ம்ஹூம்! வேண்டாம் மயூ! கேசவ்வை நான் நம்பாது போல ஆகிடும்!"
" அப்போ இந்த குழந்தையை என்ன செய்யப் போறே?" தீவிரமான முகத்துடன் கேட்டாள் மயூரி!
" இதென்ன அபத்தமான கேள்வி? பெத்துக்கத்தான் போறேன்!
" மானு, அது சாத்தியமில்லை, பேசாம இதை அழிச்சிடு! நமக்கு வேற வழியில்லை! "
" மயூரி....!" அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்!
" இது, முறையான குழந்தை இல்லை மானு! நீயும் , நான் சொல்வதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறாய்! பிறகென்ன செய்வது மானு?"
" எனக்கு நம்பிக்கை இருக்கு கேசவ் வந்துடுவார் மயூ! அதனால இந்த பேபி எனக்கு கட்டாயம் வேணும்! " கெஞ்சலுடன் மயூரியின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள் மான்சி!
" சரி, சரி அழாதே நான் ஏதாவது செய்கிறேன்! என்ற மயூரிக்கு அவர்களது இல்லத்தின் தலைவி தான் நினைவுக்கு வந்தார்!
தலைவிக்கும் அதிர்ச்சி தான்! அதே சமயம் அந்த இல்லத்தில் மான்சியை வைத்துக்கொள்ள முடியாது என்றார்! அதுவே மற்ற பிள்ளைகளுக்கு உதாரணமாகிவிடும் என்று காரணமும் சொன்னார்! ஆகவே, மான்சியை மதுரையில் இருந்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்!
மான்சி, பேச்சற்றுப் போனாள்! பிரம்மை பிடித்தார்போல கிடந்தாள்!
மயூரிக்கு வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருந்ததால் அவள் கோயம்புத்தூரில் தொடர்ந்து தங்கியிருந்தாள்!
அன்றும் மகளை அழைக்க வந்து கொண்டிருந்தாள் மயூரி! சிக்னலில், எதிர் சாரியில் அவனை பார்த்துவிட்டாள்! இந்த ஊரில் அவன் எப்படி வந்தான்? யோசனை ஒருபுறம் ஓடியது! நல்லவேளையாக அவன் இவளை பார்க்கவில்லை! பாதியாக இளைத்திருந்தான்! பணக்கார பெண்ணை கட்டிக்கொண்டவனின் நிலையா இது? அவள் எண்ணும் போதே பச்சை விழ, வாகனத்தை கிளப்பிக் கொண்டு நகர்ந்துவிட்டாள்!
ஆனால் மனம் தான் அவனிடம் போய் நின்றது! ஆயினும் மனதை மகளிடம் திருப்பி, வண்டியை செலுத்தினாள் மயூரி!
மகளின் நினைவில் உதட்டில் புன்னகை தோன்ற, அவளுக்கு வேறு சிந்தனை எழவில்லை! மறுநாள் விடுமுறை என்பதால் சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்! வழியில் மகளுக்குப் பிடித்த பலகாரம் வாங்கிக்கொண்டு, மகள் இருந்த காப்பகத்தின் சாலையில் திரும்பும் போது அது நிகழ்ந்தது!
எதிரே வேகமாக வந்த கார், கடைசி வினாடியில் கவனித்த மயூரியும் செய்வதறியாது திகைத்துப்போனாள்! கார் அவளை தாக்கிவிட்டது!
அது பிரதான சாலை அல்ல நிழல்வழிக்சாலை தான்! ஆயினும் மாலை நேரம் என்பதால் போக்குவரத்து சற்று அதிகமாகவே இருந்தது!
மயூரி தலையில் அடிப்பட்டு சரிய, கூட்டம் கூட ஆரம்பிக்க, காரின் பின் சீட்டில் இருந்து இறங்கினான் அந்த உயரமானவன்! தாடியும்,கண்களில் குளிர் கண்ணாடியும் கூட அவனுக்கு ஒரு தனி கம்பீரத்தை கொடுத்தது!
டிரைவர் பதற்றமாக மயூரியை நோக்கி செல்ல," முத்து, நீ தண்ணீரை எடுத்துக் கொண்டு வா, சீக்கிரம்" என்று உத்தரவிட்டவாறே மயூரியை வேகமாக நெருங்கினான்!
அவளை புரட்டிப் பார்த்தவனின் முகம் யோசனையாய் சுருங்கி மீண்டது! அதற்குள் தண்ணீர் வர , அதை அவளது முகத்தில் தெளித்தான், லேசாக கண் விழித்தவள், " மலர் , மலர் என் மகள்" என்றவாறே மயங்கிப்போனாள்!
முத்துவிடம் சொல்லி அவளது பொருட்களை சேகரித்தவன், அவளது வண்டியை பழுது பார்க்க எடுத்து செல்ல பணித்துவிட்டு,
சட்டென்று அவளை தூக்கி காரின் பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு, ஒட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தான் ரிஷி!
மருத்துவமனையை அடையும்போதே மயூரியின் கைப்பேசி ஒலித்தது!
அதை எடுத்துப் பேசினான்," ஹலோ நீங்க யார்?
" இது மலர் அம்மா நம்பர்தானுங்களே?"
"ஆமா, சொல்லுங்க, என்ன விஷயம்?"
" வழக்கமாக இந்த நேரத்துக்கு மயூரி பொண்ணு வந்துவிடும் சார்! ஆனால் இன்னிக்கு காணோமேனு தான் போன் செய்தேன், பாப்பாவும் வாசலையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கு! அவங்ககிட்ட போனை கொடுக்கிறீங்களா?"
" உங்க காப்பகம் எங்கே இருக்கு என்று விலாசம் சொல்லுங்க, மயூரிக்கு அடிபட்டு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு வந்துருக்கோம்! அதனால நானே வந்து பாப்பாவை அழைச்சுக்கிறேன்!" என்றவன் விலாசத்தை குறித்துக் கொண்டு, மருத்துவமனை விதிமுறைகளை முடித்துவிட்டு, பரிசோதனை முடியும் வரை சற்று நேரம் அங்கேயே காத்திருந்தான்!
மருத்துவர் வந்து "அவங்களுக்கு உயிருக்கு பெரிதாக ஆபத்து இல்லை, அடிபட்ட இடத்தில் தையலா போட்டிருக்கிறது, தலையில் அடிபட்டிருக்கிறதால் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும், மற்றபடி பிரச்சினை இல்லை! அவங்க சரியாக சாப்பிடாத காரணத்தால், சற்று பலவீனமாக இருப்பதால் ட்ரிபஸ் போட்டிருக்கிறது! முடிந்ததும் அழைத்து போய்விடலாம்" என்றுவிட்டு நகர்ந்தார்!
செவிலியரிடம் சொல்லிவிட்டு, மலரை அழைத்துவரக் கிளம்பினான் ரிஷி!
குழந்தைகள் பராமரிப்பு இல்லம்!
ரிஷி அங்கே சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதும், அந்த பெண்மணியின் முகத்தில் ஒரு மரியாதை வந்திருந்தது! மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, மயூரி அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தான்!
மலரிடம், "இந்த அங்கிள் கூட போ மலர், அம்மாக்கிட்டே கூட்டிட்டுப் போவார்" என்று அந்த அம்மாள் சொன்னபோது அந்த குழந்தை அவனை விழிவிரிய பார்த்துவிட்டு, காதோரம் தன் சின்ன கரத்தை வைத்து, ரகசியக் குரலில், " அம்மா வந்து கூப்பிடாம யார் கூப்பிட்டாலும் போக்கூடாதுன்னு சொன்னாங்களே ஆன்ட்டி ? இவர்கூட போனா அம்மா திட்ட மாட்டாங்களா?" என்றது ரிஷிக்கும் கேட்டது!
புன்னகையுடன் குழந்தையை மெச்சுதலாகப் பார்த்திருந்தான்!
"அம்மா தான் கண்ணு, இவரை அனுப்பி கூட்டிட்டு வரச் சொன்னாங்களாம்! அப்படி இல்லைன்னா ஆன்ட்டி உன்னை அவர்கூட அனுப்புவேனா?" என்று அதே ரகசியக்குரலில் பேசினார் அந்த பெண்மணி!
"உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா பாப்பாவை கூட்டிட்டு என்கூட வர முடியுமா மேடம்? நானே திரும்ப கொண்டு வந்து ட்ராப் பண்ணிடுறேன்! என்றான்!
" மற்ற குழந்தை போல இவள் கிடையாது! சீக்கிரமாக அவள் உறுதியில் இருந்து மாற மாட்டாள்!அதனால நான் இவளோடுவர்றேன் சார்!" என்று அந்த பெண்மணி குழந்தையின் பையை எடுத்துக் கொண்டு அவனோடு காரில் ஏறினாள், மலரை தூக்கிக் கொண்டு போய் முன் இருக்கையில் அமர்த்தி,பெல்ட் போட்டு விட்டான்! ரிஷிக்குள் இன்னதென்று சொல்ல தெரியாத உணர்வு உண்டாயிற்று !
மருத்துவமனைக்கு வந்தபோது மயூரி கண் விழித்து இருந்தாள்! ட்ரிப்ஸ் முடியும் தருவாயில் இருந்தது! அவளிடம் குழந்தையை காட்டிவிட்டு, அங்கே இருந்த கான்ட்டீனுக்கு மலரை அழைத்துப் போய் அவள் விரும்பிய உணவை வாங்கிக் கொடுத்து அவள் சாப்பிடுவதை ரசனையோடு பார்த்திருந்தவனுக்கு, அதை படம்பிடிக்கும் யோசனை உண்டாக, தன் போனில் பதிவு செய்து கொண்டான்!
காப்பகத்தின் பெண்மணி மயூரியிகம் பேசிவிட்டு, விடைப்பெற்றுக் கொள்ள, இருசக்கர வாகனத்துடன் சென்றிருந்த முத்து திரும்பியிருந்ததால், அவனுடன் அவரை அனுப்பி வைத்தான் ரிஷி!
அதன் பிறகு, "மயூரி, என் டிரைவரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது! அதற்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்! உங்கள் வண்டியை சரி பார்த்தாகிவிட்டது! இந்த ட்ரிப்ஸ் முடிந்ததும் உங்களை வீட்டில் சேர்ப்பது என் பொறுப்பு! நீங்க வீணாக மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க"!
ரிஷியைப் பார்த்த மயூரிக்கு எங்கோ அவனை பார்த்த ஞாபகம்! ஆனால் எங்கே என்று நினைவு வரவில்லை!
மகளை அவன் தூக்கி வைத்திருந்தது ஏதோ மனதுக்குள் கலவரத்தை உண்டாக்கியது! யாரிடமும் போகாத மகள் இன்று இத்தனை நெருக்கமாக ஒரு அந்நியனின் கழுத்தை கட்டிக்கொண்டிருக்கிறாளே? எண்ணம் ஒருபுறமிருக்க , அவனது பேச்சுக்கு, அவசரமாக பதில் சொன்னாள்!
"இல்லை, அதெல்லாம் வேண்டாம்! நாங்கள் என் வண்டியிலேயே போய்விடுவோம்! விபத்து நேர்ந்ததும் விட்டுப் போகாமல் இந்த அளவுக்கு உதவி செய்ததே பெரிய விஷயம் ! ரொம்ப நன்றி!"
பதில் சொல்லாது தலையை மட்டுமாக அசைத்துவிட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டான்! ரிஷிக்கு புரிந்தது தனியாக குழந்தையுடன் வாழும் பெண், ஒருவனின் காரில் சென்று இறங்கினால் அக்கம்பக்கம் பேச்சு எழும் என்று அவள் தயங்குகிறாள் என்று! ஆனால் அதற்காக அவளை தனியே போகவிடுவதும் சரியில்லையே!
காப்பகத்தின் பெண்மணி சொன்னதை வைத்துப் பார்த்தால், அவள் இந்த ஊருக்கு கணவனை இழந்தவளாகத்தான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது! இந்த காலத்தில் விதவைகள் ஒரு சின்ன ஸ்டிக்கர் பொட்டாவது வைக்கத்தான் செய்கிறார்கள்! இவளானால், பொட்டு இல்லை, அழுந்த வாரிய தலையில் கொண்டை போட்டு, கண்ணில் பழைய காலத்து மாடல் கண்ணாடி அணிந்து என்று அவளது தோற்றத்தில் கொஞ்சமும் அக்கறையற்றவளாக இருக்கிறாள்!
யார் செய்து வைத்த கொடுமை இது? ஒருவேளை மாமியாராக இருக்குமோ?
" சார் அவங்களுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சிருச்சு, போறதுக்கு முன்னாடி டாக்டரை பார்த்துவிட்டு போங்க!" என்ற செவிலியரின் குரலில் கலைந்து நிமிர்ந்தவன், அப்போதுதான் மலர் அவன் தோளில் சாய்ந்தவாறே உறங்கிவிட்டிருந்ததை கவனித்தான், சின்ன முறுவலுடன், அவளை வாகாக தோளில் படுக்க வைத்தபடியே, உள்ளே சென்று மயூரியையும் அழைத்துக் கொண்டு மருத்துவரை பார்க்க சென்றான்!
மயூரிக்கு உடம்பில் அங்காங்கே வலி இருந்தது! ஏனோ மனதும் பலவீனமாகிவிட்ட உணர்வு! அதனாலேயே மலரை அவள் தூக்கிக் கொள்ள முனையவில்லை!
ரிஷி , மயூரியையும், மலரையும் இறக்கிவிட்டு, அவளது பொருட்களையும் கொடுத்து அனுப்பினான்! அவர்கள் பின்னோடு வந்த முத்து அவளது வண்டியை கொணர்ந்து நிறுத்திவிட்டு சாவியை மயூரியிடம் கொடுத்தவன், காரில் ஓட்டுனர் இருக்கையில் ஏறிக் கொண்டு வண்டியை கிளப்பினான்!
மயூரிக்கு சோர்வாக இருந்தது! ஆயினும் உடை மாற்றிவிட்டு, ரிஷி வாங்கிக் கொடுத்திருந்த இரவு உணவை தானும் உண்டு மகளுக்கும் கொடுத்துவிட்டு படுத்தவளுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை!
மயூரி பெருமூச்சுடன் புரண்டு படுத்தாள்! மாலையில் வழியில் பார்த்த அவனது நினைவு வந்தது! அவன் சங்கர்! கடைசியாக அவனை பார்த்து ஐந்து வருடங்களாகிவிட்டது! இத்தனை ஆண்டுகளில் அவனை அவள் நினைக்கவில்லை என்பதை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்தாள்! அப்படி என்றால் அவனை அவள் விரும்பவில்லையா? இல்லை என்றது மனது!
சங்கர் ஒரு காலத்தில் அவளை காதலித்தவன்! ஆம் அவளுக்கு அவனிடம் பெரிதாக குறை காண முடியவில்லை! ஆகவே அவன் சொன்ன காதலுக்கு சம்மதம் சொன்னாள்! அவள் யாருமற்றவள்!
அவளது பின்புலம் பற்றி அவன் ஆராயாமல் திருமணம் செய்துகொள்ள கேட்டவன்! அப்போது அவளுக்கும் கணவன் குழந்தை, குடும்பம் என்று வாழும் ஆசை உண்டாகியிருந்தது! ஆளும் பார்க்க நன்றாக இருந்தான்! யாரோ ஒருவனுக்கு மனைவியாகத்தான் போகிறாள்! அந்த ஒருத்தன் அவள் அறிந்தவனாக இருப்பதில் கூடுதல் நன்மைதானே என்று நினைத்தாள்! அத்தோடு,இருவர் சம்பாதித்தால் கடன்கள் சீக்கிரமாக தீர்ந்து, இருவரும் நல்லதொரு குடும்ப வாழ்வை வாழலாம் என்று அவன் உருவேற்றியிருந்தான்! அதனால் அவள் சிந்திக்கவில்லை! ஆனால்..!
ஆறு வருடங்களுக்கு முன்பு
மயூரியும், மான்சியும் ஆதரவற்றவர் இல்லத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள்! மான்சி , மயூரியைவிட இரண்டு மூத்தவள்! ஆனாலும் பயந்த சுபாவம் கொண்டவள்! படிப்பை முடித்ததும் பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது! மயூரிக்கும் வேறு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது! ஆகவே இருவருமாக பெண்கள் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கிக் கொண்டு வேலைக்கு சென்று வந்தனர்! ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்றது அவர்களது வாழ்க்கை!
மயூரியுடன், சங்கர் என்பவன் வேலை செய்தான்! அவளை விட ஏழு வருட சீனியர்! நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்! அவனுக்கு இரண்டு சகோதரிகள் ! இருவருக்கும் திருமணம் ஆகியிருந்தது! ஆனால் அதற்காக வாங்கிய கடன்கள் அவன் மீதுதான் இருந்தது! சொந்தமாக வீடு இருந்தது! அப்பா இல்லை ! அம்மா மட்டும்தான்! வாங்கும் சம்பளம் கடனை அடைக்கவும், அன்றாட செலவுக்கே சரியாக இருந்தது! இதில் சேமிப்பு என்பது பெருங்கனவாகிப் போனது!
மயூரியிடம் அவன் நல்லவிதமாக பழகினான்! தன்னைப் பற்றி எல்லாமும் சொன்னான்! மயூரிக்கு அப்போது உலகம் எப்படி என்று தெரியாது! குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதும் அவள் பார்த்து வளரவில்லை! அவன் தன் குடும்ப விஷயங்களை பேசும்போது, அவனது கஷ்டத்தை போக்க வேண்டும் என்று தோன்றும்! ஆனால் எப்படி என்பது தான் அவளுக்கு புரியவில்லை! மயூரியின் சம்பளம் அவள் ஒருத்திக்கு தாராளம்தான், விடுதிக்கு கட்டும் பணம் போக அத்தியாவசிய செலவுகள் போக, கையிருப்பு அதிகமாகவே இருந்தது! ஆடம்பர செலவு செய்யும் வழக்கம் இல்லாததும் ஒரு காரணம்! இல்லத்தின் தலைவி, அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பியது அவளுக்கு நினைவில் இருந்தது! பணம் இல்லாமல் இந்த உலகில் வாழமுடியாது! கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்யாமல், எதிர்காலத்திற்கு என்று சேமிக்க பழகணும்" என்றிருந்தார்!
அதற்காகவே வங்கிக் கணக்கில் அவள் சேமிக்க ஆரம்பித்திருந்தாள்!
சில மாதங்கள் பிரச்சினை ஏதும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக சென்றது! மான்சியும் மகிழ்ச்சியாக வளைய வந்தாள்! அவளிடம் தெரிந்த உற்சாகம் மயூரிக்கு சந்தோஷமாக இருந்தது! ஒரு நாள் அதற்கான காரணம் தெரிந்தது! அது மான்சி காதலிக்கிறாள் என்பது! அது சற்று அதிர்ச்சி என்றால், அடுத்த அதிர்ச்சி அவன் அவளது கம்பெனியின் முதலாளி என்பதுதான்! ஏனோ மயூரிக்கு பயமாக இருந்தது! உண்மையில் அவள் அப்போது பயந்திருக்க வேண்டியது சங்கரைப் பற்றித்தான் என்பதை உணராமல், தோழிக்காக கவலையுற்றாள்!
அந்த நிலையில் தான், திடுமென ஒரு நாள் சங்கர், கைமாத்தாக பணம் கேட்டான்! அடுத்த மாத சம்பளம் வாங்கியதும் கொடுப்பதாக சொன்னான்!
மயூரியும் கொடுத்தாள்! சொன்னது போல அடுத்த மாதம் சங்கர் திருப்பிக் கொடுத்துவிட்டான்! இரண்டு மாதங்கள் கழித்து தாயின் உடல் நலம் சரியில்லை கையில் வைத்திய செலவுக்கு பணமில்லை என்று ஒரு தொகையை வாங்கிச் சென்றான்!
அடுத்த மாதம் அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டான்!
அப்போதுதான் அவன் காதல் சொல்லி திருமணம் செய்து கொள்ள கேட்டது! மயூரிக்கு அவனிடம் பெரிதாக குறை தெரியவில்லை!
ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவன் பணம் கேட்பதும் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுமாக இருந்தான்! ஆனால் அதை கவனிக்க முடியாமல், மான்சியிடம் தெரிந்த மாற்றங்கள் கலவரப்படுத்தியது!
"மானு, என்னாச்சு ? ஏன் டல்லாக இருக்கிறே?"
"ஒன்னுமில்லை, மயூ, எனக்கு ஏதோ செய்யுது! நான் சாகப்போகிறேனா? நெஞ்செல்லாம், பிசையுது!" கண்ணீர் வழிய சொன்னவளை அணைத்துக் கொண்டாள்!
"சே,சே, அப்படி ஒன்றும் ஆகாது மானு! வா டாக்டரிடம் காட்டலாம்! முதலில் ஏதாவது சாப்பிடு! ராத்திரியும் நீ ஏதும் சாப்பிடவில்லை!"
என்று சமாதானம் செய்துவிட்டு, தட்டில் சாதம் குழம்பு போட்டு, பிசைந்து எடுத்து வந்து ஊட்ட தொடங்கினாள்! இரண்டு வாய் சாதம் உள்ளே போனதும் , குட்டியூண்டு குளியலறைக்கு ஓடினாள் மான்சி!
மயூரிக்கு ஏதோ புரிவது போல இருந்தது! பதற்றத்துடன், தோழியின் பின்னே சென்று அவளுக்கு உதவினாள்! அவளை அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தாள்!
"மானு, என்ன காரியம் பண்ணி வச்சிருக்கிறே? என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்!
" என்.. என்ன மயூ? நான் என்ன செய்தேன்?"
" ஒரு பொண்ணு எதை இழக்கக்கூடாதோ அதை இழந்துட்டு வந்து நிற்கிறியேடி? இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா, என்னாகும்னு யோசிச்சியா?" என்று படபடத்தாள்!
மான்சியின் விழிகள் விரிந்தது! " நீ .. நீ என்ன சொல்றே மயூ? அப்போ நான் சாகமாட்டேனா? எனக்குள்ள பாப்பா இருக்குதா? " என்றாள் குதூகலமாக!
மயூரி அவளை ஓங்கி அறைந்தாள்! உனக்கு புரியுதா இல்லையா மான்சி? இது முறைப்படி திருமணமாகி வந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்டி! ஆனால் இது தப்புடி! நீ எப்படி ? " கண்கள் கலங்க, மயூரி கேட்க,
" இதோ பார், மயூ, நீ பயப்படறாப்ல ஏதும் ஆகிடலை! என்னோட கேசவ் ரொம்ப நல்லவர்! அன்றைக்கு நாங்க டேட்டிங் போயிருந்தோமே அப்போது மழையில் நனைந்து விட்டோம்! உனக்குத்தான் தெரியுமே எனக்கு மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்று! அன்று மாற்றுத் துணியும் கையில் இல்லை! எனக்கு குளிர் தாங்கமுடியவில்லை! அப்போது வேறு வழியில்லாமல் அந்த சம்பவம் நடந்து விட்டது! கேசவ் எனக்கு அவர் செயினை என் கழுத்தில் போட்டார்! அவரோட பெற்றொர்கிட்டே பேசி, உடனே திருமணத்திற்கு சம்மதம் வாங்கிறதா சொன்னார்! அதன்படி அவங்க வீட்டில் அவர் பேசினாராம், வீட்டில் ஒத்துக் கொண்டார்கள்! ஆனால் அதற்குள்ளாக அவருக்கு வெளிநாட்டு கான்ட்ராக்ட் கிடைத்துவிட்டதால் உடனடியாக போக வேண்டிய நிலை! ஒரு மாதத்தில் வந்து விடுவதாக தெரிவித்து சென்றார்! ஆனால் அங்கே எதிர்பாராதவிதமாக வேற வேலைகளும் சேர்ந்துட்டதால் வர கொஞ்சம் லேட்டாகுதுன்னு சொன்னார்! அவர் வந்ததும் எங்க கல்யாணம் நடக்கும் மயூ! இப்ப அங்கே ராத்திரி நேரம் ! இன்னிக்கு ராத்திரி நான் விஷயத்தை சொன்னதும், உடனே கிளம்பி வந்துடுவார் பாரேன்!" சிறு குழந்தையாக அவள் சொல்ல சொல்ல, அவளை பரிதாபமாக பார்த்தாள் மயூரி!
மான்சி ஏமாந்து விட்டதை கூட உணரவில்லையே ? அந்த மனுஷனுக்கு, ஒரு அப்பாவி பெண்ணை எப்படி ஏமாற்ற மனசு வந்ததோ ? மயூரி அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யாமல் குடிப்பதற்கு கொடுத்து படுக்க வைத்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள்!
ஆனால் அவள் மனம் முழுதும் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தது!
இந்த விபரம் விடுதியில் தெரிந்தால், தொடர்ந்து அங்கே தங்குவது என்பது முடியாத காரியம்! என்ன செய்வது ? தோழியை நிர்க்கதியாக விட்டுவிட அவளுக்கு மனம் இல்லை! நூற்றில் ஒரு வாய்ப்பாக அந்த கேசவ் வந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை! அவனிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்! அவன் வருவானா?
அன்று இரவு மான்சி அவனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவனது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது! அதற்காக மான்சி மனம் தளர்ந்து விடவில்லை! தொடர்ந்து ஒரு வாரம் அவளது உடல் உபாதைகளை கூட பொருட்படுத்தாமல் அவனை தொடர்பு கொள்ள முயன்றாள்! மறுபடியும் அதே பதில் கிடைக்கவும், அவள் சோர்ந்து போனாள்! கண்ணீரும் கம்பலையுமாக அவள் அதஅறைக்குள்ளே அடைந்து கிடந்தாள்!
தன் கைப்பேசியிலும் தொடர்பு கொண்டு பார்த்தாள்! அதே பதில் தான் !
கடைசி முயற்சியாக," மானு, அவர் வீடு எங்கே இருக்கு தெரியுமா? விசிட்டிங் கார்டு ஏதும் கொடுத்திருக்கிறாரா ? அல்லது உன் கம்பெனியில் முக்கியமான நபர் இருப்பார்களே அவர்கள்கிட்டே, அவரைப் பற்றி விசாரிக்கலாமா?"
மான்சியிடம் எதற்குமே பதில் இல்லை! " ஆபீஸ்ல, நான் யார்கூடவும் அதிகமா பேச மாட்டேன்! எனக்கு வேலை கேசவ்கிட்டே தான்!"
" அவர் போட்டோ இருக்கா? அவர்கூட நீ எடுத்துக்கிட்டது?"
" இருக்கு, மயூ! எல்லாம் என் போன்ல இருக்கு!"
"அப்படின்னா, ஒன்னு செய்யலாம் மானு! அவர் கம்பெனியில் கேட்டா, வீட்டு விலாசம் கிடைக்கும்! அங்கே போய் இப்படின்னு விஷயத்தை சொல்லுவோம்!" என்றாள்!
" ம்ஹூம்! வேண்டாம் மயூ! கேசவ்வை நான் நம்பாது போல ஆகிடும்!"
" அப்போ இந்த குழந்தையை என்ன செய்யப் போறே?" தீவிரமான முகத்துடன் கேட்டாள் மயூரி!
" இதென்ன அபத்தமான கேள்வி? பெத்துக்கத்தான் போறேன்!
" மானு, அது சாத்தியமில்லை, பேசாம இதை அழிச்சிடு! நமக்கு வேற வழியில்லை! "
" மயூரி....!" அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்!
" இது, முறையான குழந்தை இல்லை மானு! நீயும் , நான் சொல்வதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறாய்! பிறகென்ன செய்வது மானு?"
" எனக்கு நம்பிக்கை இருக்கு கேசவ் வந்துடுவார் மயூ! அதனால இந்த பேபி எனக்கு கட்டாயம் வேணும்! " கெஞ்சலுடன் மயூரியின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள் மான்சி!
" சரி, சரி அழாதே நான் ஏதாவது செய்கிறேன்! என்ற மயூரிக்கு அவர்களது இல்லத்தின் தலைவி தான் நினைவுக்கு வந்தார்!
தலைவிக்கும் அதிர்ச்சி தான்! அதே சமயம் அந்த இல்லத்தில் மான்சியை வைத்துக்கொள்ள முடியாது என்றார்! அதுவே மற்ற பிள்ளைகளுக்கு உதாரணமாகிவிடும் என்று காரணமும் சொன்னார்! ஆகவே, மான்சியை மதுரையில் இருந்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்!
மான்சி, பேச்சற்றுப் போனாள்! பிரம்மை பிடித்தார்போல கிடந்தாள்!
மயூரிக்கு வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருந்ததால் அவள் கோயம்புத்தூரில் தொடர்ந்து தங்கியிருந்தாள்!