• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

4 மனைவியின்...காதலன் !

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
4..காதல்

‘என்ன பையை எடுக்க இவ்வளவு நேரமா’ தேடிவந்த கண்ணில் கிடைத்தது கன்னத்தை தாங்கிபிடித்திருந்த கிருஷ்ணா தான்.

அனுக்கே பாவமாக இருந்தது கிருஷ்ணாவை பார்க்க.

‘பாஸ் எவ்வளவு கெத்தா இருப்பாரு. இந்த ராதா வச்சி செய்ததில் இப்படி ஆகிட்டார். இனி நாமும் அவரை கிண்டல் எதும் செய்யக்கூடாது’ இவள் வருந்தி என்ன பிரயோஜனம். வருந்த வேண்டியவள் வருந்தினாள் தானே.

“பாஸ் என்னாச்சி?”

“அவன் ஓடிட்டான்”

“பாஸ் என்ன சொல்லுறிங்க”

“என்ன சொல்ல? ஒன்னும் சொல்லுறதுக்கில்லை”


மாதவனன் ராதா பெயருடன் கூடிய புகைப்படத்தை பார்த்து சிட்டாக பறந்துவிட்டான் விமான நிலையத்திலிருந்து.

‘மாதவா.. மயிரிலையில் உயிர் தப்பித்து பல கிலோ மீட்டர் தள்ளி ஓடிவிட்டான். ஓடி கலைத்தவன் லிப்ட் கேட்டு ஊருப்பக்கம் ஓடிடனும், வழியில் சிக்கிய காரின் உதவியோடு.

“என அனு இப்படி ஆகிடுச்சி”

“போங்க சார் நாம பட்ட கஷ்டம் எல்லாம் போய்யிடுச்சி. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் சார், இவன் இப்படி தெரித்து ஓடும் அளவுக்கு இவ என்ன செஞ்சி இருப்பா”

அனுவை முறைத்த, “உன் பிரண்ட் பத்தி உனக்கு தெரியாது பாரு, அவனை வச்சி செஞ்சிருப்பா. கிட்டத்தட்ட அடிமையா வச்சி இருப்பா முதலில் காதல் மோகத்தில் இருந்தவனுக்கு போக போக வெறுத்து போய் வடநாட்டுக்கு ஓடிட்டான்”

“சார் இருங்க அவகிட்ட மாட்டி விடுறேன். தெய்வமே அப்படி எதும் செஞ்சி வச்சிடாத, அவகிட்ட என்னால ஓரியாட முடியாது”

“அந்த பயம் இருக்கட்டும்”

“இப்போ அவனில்லாம வீட்டுக்கு எப்படி போவது, அந்த ராட்சசி என் ரத்தத்தை குடிக்க கூட தயங்க மாட்டா”

“இருங்க அவளுக்கு போன் போடுறேன்”

“லவுட் ஸ்பீக்கர்ஸ் போடு”

கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா…காலர் டியுன் கேட்டதும் கிருஷ்ணாவுக்கு பத்திக்கொண்டு வந்தது.

அனு கிருஷ்ணா முகம் போனதை பார்த்து, “என்ன சார் ஜலஸ்சா”

“ஆமா… வயிறு பத்திக்கிட்டு எறியுது”

“ஹாஹா…” அனு சிரிப்பு சத்தம் கிருஷ்ணன் காதுகளில் நிரம்பியது.

“ஏய் குட்டச்சி வாயை மூடு”

“அவ போன் எடுக்கலை பாஸ்”

“சரி வா வீட்டுக்கே போய் சொல்லலாம்”

இருவரும் ஒரு வித பயமும் கலக்கமும் கலந்தது போல வீட்டை அடைந்தார்கள் ஒரு நாள் கழித்து.

தர்மபுரி உங்களை அன்போடு வரவேற்க்கிறது.

அங்கிருந்து சிறிது நேர பயணத்தில்,

வாசலில் காரை நிறுத்திவிட்டு வரவும்.

“சார் அவ முதல்ல என்னை அடிப்பாலா இல்லை உங்களை அடிப்பாலா”

“இந்த டிஸ்கசன் ரொம்ப தேவையா, வாயை மூடிக்கிட்டு வா”

இருவரும் பதுங்கிக்கொண்டே உள்ளே வர.

ராதா வாசலையும் காரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஹாய் வந்துட்டிங்களா… எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்துட்டு இருக்கறது”

“என்ன அனு இவளுக்கு முன்னவே விஷயம் தெரிஞ்சிடுச்சா? போச்சி” இருவரும் அசட்டு சிரிப்போடு அருகில் வர.

“ஏய் சீக்கரமா வாங்க.. இங்க தடிமாடை உள்ளே தூக்கி போடனும்”

“யாரை தூக்கி போடனும் எதாவது கொலை செஞ்சிட்டியா”

“யோவ் மாமா வளவள’ன்னு பேசிட்டு இருக்காத வந்து தூக்கு, ஒருத்தனை அள்ளிட்டு வர தெரியாம விட்டுட்டு வந்த அறிவாளிங்களுக்கு வாய் மட்டும் நீளம்”

‘அப்பாடா விஷயம் தெரிஞ்சிடுச்சி, எப்படி சொல்லுரது’ன்னு தயங்கிட்டு இருந்தேன். ஒரு வேலை மாதவனை தூக்கிட்டுப்பாளா? இல்லையே வாய்ப்பு இல்லையே’ குழப்பத்தில் காரில் எட்டி பார்க்க.. மாதவகண்ணன் மயங்கிய நிலையில் இருக்கவும்.

“இவனை எங்கே பிடிச்ச”

“எப்படியும் என் கால் பாத்து ஓடுவான்னு தெரியும் அதான் உங்களுக்கு முன்னாடி ஏர்ப்போட்டுக்கு வந்துட்டேன். பாய் கெட்டப்பில் ஏர்ப்போட்டுக்கு கொஞ்சம் தள்ளி நின்னுட்டு இருந்தேன். லூசு பையன் என்கிட்ட தப்பிக்க, என்கிட்டையே ஹெல்ப் கேட்டான்”

“அது சரி என்ன செஞ்ச மயக்கமா இருக்கானா இல்லை போட்டு தள்ளிட்டியா?” கிருஷ்ணன் மூச்சி இருக்கா என்று சோதனை செய்ய.

‘அப்பா உயிர் இருக்கு’ கிருஷ்ணன்க்கு இப்போ தான் உயிரே வந்தது.

“போட்டு எல்லாம் தள்ளலை லைட்டா இந்த ஸ்பிரே அடிச்சேன்”

அனு அந்த ஸ்ப்ரேவை கையில் எடுத்தவள் வியந்து பார்த்தாள்.

“அடியே! இது எல்லாம் நான் படத்தில் தான் பார்த்திருக்கேன். இதை எப்படி யூஸ் செய்யனும்” எடக்கு முடக்காக அனு அவசரப்பட்டு அடிக்க தன் முகத்திலே அடித்துக்கொண்டு.

“என்னடி இதுல பவர் இல்லை… போல” சொல்லிக்கொண்டே ராதா மேல் மயங்கி சரிந்தாள்.

“இவ வேர நேரம்கெட்ட நேரத்திலே, மாமா நீ இவனை அள்ளிப்போட்டு தூக்கிட்டு வா”

ராதா சாதாரணமாக அனுவை தூக்கிக்கொண்டு போக.

“பாக்கத்தான் நோஞ்சான் மாதிரி இருக்கா அசால்ட்டா ஆறுவத்தஞ்சி கிலோ தூக்குறா”

காரில் மயங்கி கிடக்கும் மாதவகண்ணனை பார்த்து.

“யாரு பெத்த புள்ளையோ இங்க வந்து மாட்டிக்கிச்சி. இனி ஒரு மாசத்துக்கு ஒன்னும் செய்ய முடியாது” அவனை தூக்கிவந்து ஹாலில் போட.

ராதா மாதவகண்ணன் கையை கட்ட கயிறு தயாராக இருந்தது.

“ஏய் ராதா என்ன செய்யற?”

“லூசா மாமா இப்படியே விட்டா ஓடிடுவான், நீ கையை கட்டு நான் காலை கட்டுறேன்”

‘இவ கூட சேர்ந்தா நானும் கொள்ளக்கூட்டத்தில் இருப்பவர்கள் செய்வது அனைத்தும் செய்ய வேண்டியதுதான்’

ராதா வேகவேகமாக சமையல் கட்டுக்குள் ஏதோ உருட்டிக்கொண்டிருந்தாள்.

“இத்தனை வருசம் இவ கூட இருக்கோம் ஒரு நாளாவது ஒரு சுடுத்தண்ணீ வச்சி கொடுத்திருப்பாளா? அதுக்கூட வேண்டாம், விக்கிட்டு சாகக்கிடக்கும் போது பச்சைத்தண்ணியாவது எடுத்து கொடுத்திருப்பாளா சரியான ஆளு”

வேகவேகமாக சப்பாத்தியை சுட்டாள், அந்த சுட்ட சப்பாத்தியை உருட்டி நீள நீளமாக நூடுல்ஸ் போல வெட்டி ஒதுக்கி வைத்தவள்.

வெங்காயம்.. தக்காளி பச்சமிளகாய் எல்லாத்தையும் அறிந்து வைத்தவள்.

காலையில் இருந்து சிக்கனுக்கு 65 ஊரிக்கொண்டிருந்த கோழிக் கறியை எடுத்து, சிக்கன் 65 போட்டவள்.

வெங்காயம் தக்காளி வதக்கி, சிறிது தண்ணீரில் வேகவிட்டவள் உப்பு மிளகா பொடி மஞ்சள் தூள், கரம்மசாலா, ஏற்கனவே பலவகை பருப்பை வருத்து அறைத்து வைத்த பருப்புப்பொடி போட்டு ஒரு மசாலா தயாரித்தவள்.

கடைசியாக சிக்கன் 65 போட்டு ஒரு பிரட்டு பிரட்டி சப்பாத்தி நூடுல்ஸ் கொட்டி கிண்டியவள்.. கடைசியாக கொத்தமல்லி புதினா போட்டு இறக்கிவைத்தாள்.

கமகம வாசனை கிருஷ்ணாவை இழுத்தது.

“ராதா… பசிக்குது சாப்பாடு போட்டுட்டு வா”

“உனக்கு யார் செஞ்சது.. எல்லாம் கண்ணனுக்கு செஞ்சது”

“நீ எனக்கு சோறு தரலைனா பரவாயில்லை. அந்த பேர் சொல்லி அவனை கூப்பிடாத”

“சரி சரி டென்ஷன் ஆகாத.. எக்ஸ்’ன்னு கூப்பிட வா?”

கிருஷ்ணன் முறைத்த முறையில் வாயை மூடிக்கொண்டாள்.

“சரி மாதவா’ன்னு கூப்பிடட்டா”

“சரி…” இருவர் பேசிக்கொணாடிருக்கும் போதே மாதவகண்ணன் எழுந்தவன்.

“ஏய் எதுக்கு மூனுப்பேரும் என்னை கடத்தி வச்சி இருக்கிங்க”

“நாங்க இல்லை. இங்க இருக்கலே இந்த பக்கி தான் எங்களை கூட்டு சேர்காதிங்க மாதவன்”

“அப்போ எதுக்கு அனுக்கும் உங்களுக்கும் எங்கேஜிமென்ட் சொல்லி பொய் சொன்னிங்க. இவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” மாதவன் கிட்டத்தட்ட தொண்டை கிழியும் வரை கத்தினான்.

ராதா மாதவனை சலனமற்ற பார்வை பார்த்து வைத்தாள்.

“மாமா இவங்க கூட பேச்சு வளர்க்கவே கொஞ்சி, கொஞ்சி என் காதலை ஏற்றுக் கொள்ளவே இல்லை… எந்த நோக்கமும் இல்லை. ஒருமாசம் நம்ம கூட ஒரு பிரண்டா இருந்தா போதும், இவன் பேசக்கூட தேவையில்லை”

கிருஷ்ணன்க்கு தலையும் புரியலை வாலும் புரியலை.

“மாமா நான் உன் ரூமிர்க்கு சிப்ட் ஆகிடுறேன். என் ரூம் அவங்க உபயோகிக்கட்டும் பைதவே மிஸ்டர் மாதவகண்ணன்.. இவரு என்னோட புருஷன்”

முதலில் மாதவன் அதிர்ந்தாலும், “வாழ்த்துக்கள்… தெரிஞ்சிருந்தா நான் எதாவது கிப்ட் வாங்கி வந்திருப்பேன்”

“எங்களுக்கு கிப்ட் எதும் வேண்டாம். ஒரு மாசம் இங்க கெஸ்ட்டா இருங்க போதும்” ராதா மாதவனை பார்த்து சொல்ல.

“கிருஷ்ணா கட்டை கழட்டி விடுங்க” கிருஷ்ணா பார்த்து மாதவன் கேட்க.

அவனோ தயங்கி ராதாவை பார்க்க.

“அட கழட்டி விடுங்க சார் ஓடிட மாட்டேன்”

கிருஷ்ணா.. ராதா இருவருக்கும் தான் செய்து வைத்த சப்பாத்தி நூடுல்ஸ் போட்டு வந்து கொடுக்க.

மாதவன் அதிர்ச்சியாக ராதாவை பார்த்தான்.

“உங்களுக்கு பிடிச்சது தான் சாப்பிடுங்க” வருத்துவைத்த சிக்கனை இரண்டு பிளேட்டில் எடுத்து வந்து கொடுக்க.

இருவரும் வயிரார சாப்பிட்டார்கள்.

ராதா தனக்கு தேவையான சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கிருஷ்ணன் அறையில் புகுந்துகொண்டாள்.

இடையில் அனு எந்திரிக்கவும், அவளும் ராதாவும் சாப்பிட்டு முடிக்க.

ஒருவர் மூஞ்சி ஒருவர் பார்க்க சங்கடமாகதான் இருந்தது.

“சரி எங்காவது வெளியே போலாமா?” அனு ஆரம்பிக்க.

“நம்ம பக்கத்து ஊரில் திருவிழா போட்டு இருக்காங்க போலாமா.

நான்கு பேரும் வெளியே எங்காவது போலாம் என்று முடிவு எடுத்தவர்கள்.. அவர்களது ஊர் திருவிழாக்கு கிளம்பினார்கள்.

கிருஷ்ணா, மாதவன் பட்டுச்சட்டையிலும் அனு, ராதா பட்டு புடவையில் தேவதையாக வந்தார்கள்.

மாதவன் ராதாவை ஒரு பொருட்டாகவே கண்டுக்காமல்.

“அனு புடவை உனக்கு நல்லா இருக்கு வித்தியாசமா இருக்க”

‘திமிரு இன்னும் குறையில்லை… முன்ன எல்லாம் என்னை தேவதையாக புகழ்ந்தது எல்லாம் மறந்துட்டான். மகனே உன்னை இன்னைக்கு திருவிழாவில் அலரவிடுறேன் இருடா.’


திருவிழாவுக்கு நாள்வரும் தயாராகி வர… அந்த ஊரின் எல்லை போர்ட் அவர்களை அழகாக வரவேற்த்தது.

அதியமான் கோட்டை உங்களை அன்புடன் வரவேற்க்கிறது தகடூர் அதியமான் வாழ்ந்த ஊர்… அவர் வாழ்ந்தர்க்கான அரண்மனையின் தடம் இல்லாவிட்டாளும். அவரால் கட்டப்பட்ட சில அதிசயம் நிறைந்த ஊருக்கு தான் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

திருவிழா முடித்ததும் ஒரு ஒரு சிறப்பு இடத்துக்கும் சுற்றிப்பார்க்க போகும் போதே திட்டம் போட்டார்கள்.

திருவிழாவின் கூட்டம் அலைமோதியது இப்போதுவரை கிருஷ்ணாவை மட்டும் தனியாக வைத்து செய்த ராதா.

இனி மாதவனையும் வைத்து செய்ய பல திட்டம் போட்டாள்.

இருவரின் நிலை என்னவோ? கடவுளே இவர்களை காப்பாத்து என அனுவாள் கடவுளிடம் அப்ளிகேஷன் மட்டும் தான் போட முடியும்.

அங்கிருக்கும் காளியம்மன் கோவிலில் உள்ள சாமியை வணங்கியவர் வெளியே வருவதற்க்குள் அருவியில் குளித்து வந்தது போல நனைந்திருந்தார்கள்.

அப்படி ஒரு கூட்டம் நால்வரும் காற்றாட ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.

அங்கிருந்த ஒரு பாட்டி சொம்பில் கூல் கொண்டுவந்து கொடுக்க.

மூவரும் வாங்கிக்கொண்டார்கள். மாதவன் மட்டும் வேண்டாம் என்று மறுத்தான், மற்றவர்கள் வாங்கிக்கொண்டார்கள்.

‘கழுவனாங்களா என்னன்னு கூட தெரியலை ஆளு வளர்ந்த அளவுக்கு மூனு பேருக்கும் அறிவு வளரலை’ மனதால் தான் சொல்ல முடிந்தது. முன்பிருந்த மாதவனாக இருந்தால் மூவரையும் கலாய்த்து தள்ளி இருப்பான். இப்போது இருப்பவன் முற்றிலும் மாறுபட்டவன்.

என்ன தான் கிராமத்தில் வளர்ந்திருந்தாலும் சரியான ஆச்சாரம் பார்க்கும் ஆசாமி அவன்.

‘ராதா முதல் பிளான் சிக்கிடுச்சி.. ஸ்ரீதிவ்யாவுக்கு விசம் ஊத்துவது போல வாயில் ஊத்திட வேண்டியது தான்’ நினைத்தவள் மாதவனை முறைத்து பார்த்தாள்.
 
Top