• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

40. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"இது உன் வாழ்க்கை மீனிம்மா.. என்ன முடிவெடுத்தாலும் அப்பா அதுக்கு கட்டுப்படுவேன். ஆனா அதுக்கு முன்னாடி அப்பா சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்." என்று அவளுக்கு சில விஷயங்கள் புரியவைப்பதற்காய் வாய்திறக்க,

"வேண்டாப்பா....! நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாமே புரியும்ப்பா.... நான் ஒன்னும் குழந்தை இல்லை. இவனை நம்பி, இனியும் ஏமாற மாட்டன்.


கஷ்டம் தான்ப்பா..... என் காதலை மறக்குறது ரொம்பவே கஷ்டம் தான்.

ஆனா அந்த மைலியளவுக்கு ஒன்னும் எனக்கு கஷ்டமா இருக்காது. கிராமத்தில பிறந்து வளர்ந்த பொண்ணுங்க ஒருத்தனை நினைச்சிட்டா... காலத்துக்கும் அவங்க மனச மாத்துறது கஷ்டம் என்று கேள்வி பட்டிருக்கேன்.. அப்படி கிராமத்து பொண்ணாலையே இவனை மறக்க முடியும் என்கிறப்போ, என்னால முடியாதாப்பா?


இவனை முதல்ல இங்கிருந்து போக சொல்லுங்கப்பா....! எனக்கு இவனை பார்க்கவே பிடிக்கல." என்று சற்றுமுன் அவனுடன் கொஞ்சியதை மறந்து அவன் மேல் எரிந்து விழ,

"சரிடா.... நீ உள்ள போ... நான் இவன் கூட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. பேசிட்டு அனுப்பி வைக்கிறேன்." என்று கூறி அவளை அனுப்பி வைத்தவர்.

"தம்பி இது சரிவராது... என் பொண்ணு எடுத்த முடிவு தான் என் முடிவும். உண்மை தெரியாமல் தப்பு பண்ணிட்டோம்.

என்ன.....? உறவுகளுக்கு இனி ஆயிரம் பதில் சொல்லணும். அதை நாங்க பாத்துக்கிறோம். நீ கிளம்புப்பா" என்று முடிந்தவரை கோபமில்லாமல் பொறுமையாக கூறினாலும், அளவுக்கதிகமான அழுத்தம் நிறையவே இருந்தது.

அவனும் எதுவும் பேசாது தலைகவிழ்ந்தவாறே செல்ல.

" ஒரு நிமிஷம் ரஞ்சித்" என சென்றவனை தடுத்தவர், அவன் முன் சென்று நின்றவாறு,

"நாளையில இருந்து நீ வேற ஏதாவது வேலை தேடிக்க" என்று உன்னை வேலையை விட்டு நிறுத்தியாகி விட்டதென்பதை நாசுக்காக கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

மறு நாள் காலையில் ஊர் வந்து சேர்ந்தவனோ, தனது இந்த ஏமாற்று வேலையால் தான் வேலை போன காரணத்தை கூறாமல்,


மீனா தான் தன்னை ஏமாற்றியதாகவும், அதனால் தன் வேலையை விட்டு நிறுத்த தந்தையிடம் கூறியதனால், அவரும் மகள் சொல்லை கேட்டு வேலையை விட்டு நிறுத்தியதாகவும் தான் பொய் கூறி தாயை சாமாளித்தான்.

அதைத்தான் மீனாட்சி இப்போது ஸ்ரீயிடம் ஒப்பிக்க,
மீனாட்சியின் பேச்சை கேட்டு அதிர்ந்த மைலி.








"என்னது மீனா இவனை ஏமாற்றினாளா?" என நம்பாத பார்வையோடு ரஞ்சித்தை பார்த்தாள்.

ரஞ்சித்தோ மைலியின் பார்வையை கண்டு கொள்ளாமல், ஸ்ரீயை மருண்ட பார்வை பார்ப்பதை கண்டவள்,


'எதுக்காக இவனை பார்த்து முழிக்கிறான்?' என்று ஸ்ரீயை பார்த்தவள் அவனது கண்கள் சிவந்திருப்பதை கண்டு,

ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

"அத்தை நீங்க எப்போ கிளம்புறீங்க?" என அவன் கோபத்துக்கு இரையாகாது விரட்டிவிட கேட்டாள் மைலி.


"இப்போ கிளம்ப போறோம்டா! அதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தோம்." என்றவர்,
ஸ்ரீயிடம்.

"என் பையனுக்கு ஏதாவது வேலையிருந்தா குடுங்க தம்பி... அவன் நல்லா வேலை செய்வான். அவன் வேலைக்கு போனால் தான் தம்பி என் பொண்ணுங்க ரெண்டையும் கரை சேர்க்க முடியும்." என கெஞ்சுவது போல் மீனாட்சி கேட்க.

நிலமை புரியாத மீனாட்சியின் பேச்சில் எங்கு பிரச்சினையாகிவிடுமோ என பயந்தவள்,


"அத்தை அவரு செய்வாரத்தை... நான் அதுக்கு பொறுப்பு. சீக்கிரம் கிளம்பினால் தான் ஊர் போய் சேர முடியும். மாணிக்கம் அங்கிளும் இப்போ தான் கிளம்பினாரு. அவர் காரிலேயே நீங்களும் போகணும்னா சீக்கிரம் போங்க." என்று அவசரப்படுத்த.

"அப்பிடியா? அப்போ நான் வறேன் மைலி. வறேன் மாப்பிள்ளை." என்று இந்திராவிடமும் "வரேன் இந்திரா." என்க.


சந்தோஷமாகவே விடை கொடுத்தாள் அவள் நாத்தனார்.

அவர்கள் மண்டபவாயில் போனதும் தான் மைலிக்கு மூச்சே வந்தது. ஏனென்றால் ஸ்ரீயின் ரஞ்சித் மீதான் கோபப்பார்வையின் உக்கிரம் கூடிக்கொண்டே போனதே தவிர குறையவே இல்லை.


நின்றால் நிச்சயம் ஏதாவது வில்லங்கம் வந்திருக்கும். இதில் அத்தையின் சிபாரிசு வேறு. என்று தனக்குள் நினைத்தவாய் ஸ்ரீயை பார்க்க அவனோ தூரத்தே வெறித்து வேறு ஒரு சிந்தனையில் நின்றவனை நடப்புக்கு கொண்டு வந்தவனே செல்வம் தான்.




ஆம்.. காலையில் இருந்து தன் ஒரே நண்பனின் கல்யாண வேலைகள் அத்தனையும் அவன் ஒருவனாக தலையில் போட்டுக் கொண்டு செய்தவன், இப்போது தான் கொஞ்சம் ஓய்வாக நின்றான்.

"மச்சான் நீ என்கூட ஒரு போட்டோ கூட எடுக்கலையேடா!"


"போட்டோ தானே மச்சான்....? வா எடுத்திடலாம்." என்றவன், மூவரும் நின்று ஒரு படத்தினை கிளிக்கி விட்டு,


"நண்பா உன்கூட கொஞ்சம் பேசணும்" என்றவாறு தனிமையில் அழைத்து சென்றான்,

"மச்சான் நான் சொன்னதை செய்திட்டியாடா!"


"என்ன மச்சா சொன்ன..? எனக்கு நினைவில்லையே!"என்றவனது மண்டைமேல் செல்லமாக தட்டியவன்,


"மடையா!" என்றவாறு சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு,

"மறக்கிற விஷயமாடா எருமை!
உன்னை நான் செய்தே ஆகணும்னு கண்டிஷன் போட்டேன். அந்த மாட்டர் என்னாச்சு?" என்றான்.

"ஓ... அதை கேக்கிறியாடா? எனக்கு சுத்தமா அதில உடன் பாடே இல்ல மச்சா.

பட் உன்கூட ஆட முடியாதுன்னு தான் கடசியில மனமே இல்லாமல் நீ சொன்னதை ரொம்ப கஷ்டப்பட்டு செய்தேன்டா!"


பாவம்டா அந்த பொண்ணு... இது தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படும். பெண் பாவம் பொல்லாதது.. ஏன்டா நீ யாரு மனசையும் புரிஞ்சுக்கிறதே இல்லை.


இதில நானும் உனக்கு உடந்தையா இருக்கிறேன் என்கிறது எனக்கே கஷ்டமா இருக்கு.." என்று இத்தனை நேரமும் மைலியின் நலன் விரும்பியாக பேசியவன்,
சட்டென தன் ட்டோனை மாற்றி.

"ஆனா மச்சான்.... உன்கூட நட்பு வைச்சிக்கிட்ட நாளில இருந்து, என்னை எல்லாருமே ஒரு மாதிரியா பாக்கிறது மட்டும் இல்லடா....

ரெண்டடி தள்ளி நின்னு தான் பேசுறாங்க." என்று கூறியவன் பேச்சோ ஸ்ரீயினது தலை சிறந்த நட்பின் இலக்கணமாக மாறியிருந்தது.

அவனது முன்னைய பேச்சும், இப்போதைய பேச்சும் உள்ள வேறுபாட்டினை உணர்ந்த ஸ்ரீக்கு, அதன் அர்த்தம் புரியாமல் குதர்க்கமாக இருக்க,

"எரும சொல்லுறத தெளிவா
சொல்லு... பைத்தியம் போல உலறிட்டு இருக்க." என்க.


"அதுதான் சரி...! நீ மட்டும் தான் இந்த வார்த்தை சொல்லல... இப்போ நீயும் சொல்லிட்டியா?" என குரலில் வருத்தத்தை காட்ட..

"ஏன்...? வேற யாரு உன்னை விசர்னு சொன்னாங்க?" என்றான்.


"யாரு சொல்லணும்? எல்லாருமே தான்." என்றவன் ஸ்ரீயினது கோபப்பார்வையில்,

"கோவிச்சுக்காதடா! சொல்லிடுறேன். எல்லாம் அந்த சொட்டை மண்டையன் தான்." என்றான் செல்வம் மொட்டையாக,


"டேய்...! ஒழுங்க சொல்லுறியா...? இல்லை காெல்லவா...?
மாடு மாதிரி வளந்திருக்கியே.. கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லத் தெரியுதா?" என கோபப்பட்டவனிடம்.

"டேய் உனக்காக அசிங்கப்பட்டு வந்திருக்கிற... உன் நண்பனை, நீயும் அசிங்கப்படுத்துறது உன்னையே அசிங்கப்படுத்துறதுக்கு சமம்டா!" என வசனம் பேசியவனிடம் பொறுமை இழந்தவனோ..

"நீ இதுவரைக்கும் கொலையை நேரில பாத்திருக்கியாடா?

இப்போ பாப்ப.." என்றான் எரிச்சலாய்..

"எல்லாம் அந்த சொட்டை மண்டையன், பரந்தாமன் தான்டா!"


"பரந்தாமன் சாரா? நீ எதுக்குடா அவர்கிட்டே போன? உனக்கு என்ன பிரச்சினை?" என்றான் ஸ்ரீ புரியாது.


"என்னடா....! அம்னிஷியா வந்த ஆமை மாதிரி கேக்கிற? நீ கேட்டது உன் டிவோர்ஷ் மாட்டர் தானே?"

அவனது கேள்வியில் புருவத்தை சுருங்கியவன் மறு நொடியே,


"சரி விஷயத்துக்கு வா...!" என்றவன் குரல் முன்னைய கம்பீரத்தை இழந்திருந்தது.



"என்ன மச்சான்...! எதாவது தப்பா சொல்லிட்டேனா என்ன...?" என்றான் அவனது மாறுதலைக் கண்டு.

"அப்பிடி எதுவும் இல்லடா! நீ முதல்ல விஷயத்தை சொல்லு"

சுற்றிலும் விழிகளை சுழட்டி விட்டு,


"அது வந்து மச்சான்.. நீ அன்னைக்கு... டிவோர்ஸ் பத்திரம் ரெடி பண்ணுன்னு தீவிரமா சொன்னியா?
உன் குரலில இருந்த கோபத்தில... சொன்னதை செய்யலன்னா, என்னை ஏதாவது பண்ணிடுவியோன்னு நினைச்சு, அது சம்மந்தமா வக்கீல் கிட்ட போனேன் மச்சான்.


அவரு நடக்காத கல்யாணத்துக்கு எப்படி டிவோர்ஸ் தரமுடியும்? நீ என்ன லூசான்னு கேட்டிட்டாரு மச்சான்." அப்பாவியாகச் சொன்னவன்,

"இதை தானேடா நானும் கேட்டேன்..? அதுக்கு நீ என்ன சொன்ன....?

நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது. டிவோர்ஸ் வேணும்ன்னு சொன்னல்ல.. எனக்கு என்ன செய்றதுனே தெரியல மச்சான். அதனால தான் அந்தாள்கிட்ட போய் விஷயத்தை சொன்னேன்.


வீட்டை விட்டு முதல்ல வெளிய போறீயா? இல்லை நாயை அவுத்து விடவானு அந்த பெரிய மனுஷன் கேட்குறாருடா..?


நாய் தானே...! நம்ம பாக்காத நாயானு நினைச்சிட்டு, எனக்கொரு பதில் கிடைக்காமல் போகமுடியாதுனு நின்னேன்.


அவரு வீட்டு வேலைக்காரன், கண்டு குட்டிய நாய்ன்னு... சங்கிளியில கட்டி இழுத்துட்டு வறான்டா!


நல்லா உத்து பத்தேனா.. உண்மையிலும் அது நாய் தான்டா! அங்க புடிச்ச ஓட்டம். காரை பறக்கவிட்டு வீடு வந்திட்டனே!" என தன் குறளி வித்தைகளை பெருமையாக கூறியவனிடம்.

"ஓ... அவ்வளவு தானே! வேற எதுவும் இல்லையே!"


"இருக்கு மச்சான்! அவரு முடியாதுனு சொன்ன நான் விட்டுடுவேனா? இல்லனா என்னைத்தான் நீ விட்டிடுவியா?

அப்புறம் இன்னொரு வக்கீலை பாத்தேன். அவருக்கு கை மறைவில கொஞ்சம் அள்ளி விட்டேன்டா!

நடக்காத கல்யாணம் என்ன? பிறக்கப்போற குழந்தைக்கே டிவோர்ஸ் வாங்கி குடுத்துடுவாரு.. அந்தளவு திறமையான மனுஷன்.

இன்னும் ஒரு வாரத்தில பத்திரம் நம்ம கையில வந்திடும்... நம்ம யாரு? எடுத்த காரியத்தை முடிச்சிட மாட்டோம்." என்று பெருமை பேச,

அந்த பேச்சை விடு! நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே! என்றவன் குரலோ இம்முறை அதிகமாகவே உள்ளே போய் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.


"அது தான் சொல்லிட்டனேடா..?" ஸ்ரீயின் பேச்சில் குழம்பினாலும், அவனது மாற்றம் இம்முறை அவனையும் தாக்க,


"மச்சா....." என்று அவனருகில் இன்னும் ஒட்டி நின்றவன்,

"என்னடா ஒரு மாதிரியாகிட்ட....

எனக்கு புரியுது மச்சான்...! உனக்கு உன் தாரையை ரொம்ப புடிச்சிருக்கு, அவ மேல நீ உயிரையே வைச்சிருக்கிற என்கிறது இந்த அவசர கல்யாணத்திலயே தெரியுது.


ஏதோ முன்னாடி அவ தெரியாமல் பேசிட்டா என்கிற கோபத்தில் அந்த மாதிரி என்கிட்ட செய்ய சொல்லிருக்கே.

இப்போ அது தப்புன்னு புரிஞ்சிடிச்சில்ல..
ப்றீயா விடு மச்சான்! இது எல்லாம் பெரிய மேட்டன்னு பீல் பண்ணிட்டு.



நானும் நீ கேட்டேனு நேரகாலம் தெரியாமல் இதை போய் உங்கிட்ட சொல்லிட்டேன். உனக்கு இந்த மேட்டர் பிடிக்கலனா எதுக்குடா இப்போ அதை பத்தி பேசின.


சரி இப்போவாவது புத்தி வந்திச்சே! அந்த வக்கீல இந்த மேட்டரை இதோட நிறுத்த சொல்லுறேன்.

நீ கவலப்படாத மச்சான்." என அவன் தோள் மீது கை போட்டு சமாதானம் செய்தவன்,
தன் செல்லை எடுத்து வக்கீல் எண்ணை தேடிடவும்,

அவன் செல்லை பறித்து காலினை கட்பண்ணி அவனிடமே தந்தான்.

"உனக்குத்தான் இந்த டிவோர்ஸ்ல இஷ்டம் இல்லல்ல.. அப்புறம் என்னடா!" என்றான்.


இனம்புரியாத புன்னகையினை சிந்தியவவாறே,


"மச்சா... முன் வைச்ச காலை பின்வைக்கிற பழக்கம் எனக்கில்லடா! சரியோ தவறோ.. எடுத்து வைச்ச அடி பாதை சரியில்லனா அதே பாதையினால வர, குறுக்கு பாதையினால போயிடலாம்." என்றவன் பேச்சு செல்வத்தின் மண்டையை குழப்ப,

"ஆக்......" என தன் தலையினை தானே இரு கைகளாலும் கலைத்தவன்.


"மச்சான் உன்கூட சேந்தா அந்த சொட்டையன் சொன்னதைப்போல விசரனாத்தான்டா நான் ஆகப்போறேன்.
சும்மாவே நான் மக்கு மங்குனி. தெளிவா சொல்லி தொலைடா" என்று சினக்க,

அவனின் செயலில் இம்முறை மெய்யாகவே நகைத்தவன்.
அவன் தோள்மீது சாகவாசமாக கை போட்டு,

"நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்னு சொன்னேன். டிவோர்ஸ்கு அப்ளே பண்ணது பண்ணதாவே இருக்கட்டும்."

தன் தோளில் இருந்த ஸ்ரீயின் கையினை கோபமாக தட்டி விட்டவன்,


"நீ இப்போ என்ன சொல்ல வர..? டிவோர்ஸ் வேணும் என்கிறியா? வேணாம் என்கிறியா..? என்னை குழப்பாமல் தெளிவா சொல்லித் தொலை!"

"ஊஷ்..... கத்தாத.... இது கல்யாண மண்டபம். யார் காதிலையாவது விழுக போகுது. அப்புறம் இந்த மேட்டர் தாரைக்கு தெரிஞ்சுதுனா.... தன்னை அடையுறதுக்கு நான் போட்ட நாடகம்னு நினைச்சிடப்போறா..



மச்சா.... முன்னாடி நான் அப்பிடி தான்டா நினைச்சேன். ஆனா மண்டபத்தில அவ அழுதிட்டு போனா பாரு! அந்த நொடி முடிவு பண்ணிட்டேன்டா! இனி யாருக்காகவும் அவ அழக்கூடாது.

அவளை என் நெஞ்சுக்குள்ள வைச்சு பாதுகாக்கணும்னு.
என் முன்னாடி அவ அழுதுட்டு போனது. என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திச்சு தெரியுமா?

அப்போ தான்டா என் மனசே எனக்கு புரிஞ்சிச்சு.
தாரை எனக்காக மட்டும் பிறந்த.... அதனால தான்டா அவளை கடவுள் அவன்கிட்டருந்து பிரிச்சு என்கிட்ட குடுத்திருக்காரு.


அவ என்னை தப்பா பேசினது ஒன்னும் தப்பில்ல மச்சான்.
நான் முன்னாடி பொறுக்கி போல தானேடா நடந்துகிட்டேன்.


அவ கண்ணுக்கு நான் எப்படி தெரிஞ்சேனோ, அப்பிடி தானேடா அவ சொல்லி திட்ட முடியும்?
என் தாரைக்கு என்னை திட்ட உரிமையில்லையா என்ன?" என காதல் வசனம் பேசியவனை,
செல்வம் நம்பமுடியாது பார்க்க.



"மச்சான் டிவோஸ்னா என்ன? தேர்ந்து வாழ்றதில ரெண்டு பேருக்குமே இஷ்டமில்லனு சொல்லி சம்மதிச்சு கையெழுத்து போட்டால் தானே டிவோர்ஸ் கிடைக்கும்.


நீ என் சார்பில அப்ளே பண்ணதனால நான் அதுக்கு சம்மதிக்கிறேன்னு அர்த்தமாகிடிச்சு.
அதே எண்ணம் அவளுக்கும் வந்தா தானே மச்சா.. அவ இதை விரும்புவா..
அந்த எண்ணம் அவளுக்கு வராம, அவளுக்கு பிடிச்சவனா நான் நடந்துக்கிட்டா... அந்த எண்ணமே அவளுக்கு வராதுல்ல." என்க.



"ஆமால்ல மச்சா? சூப்பர்டா.." என சந்தோஷப்பட்ட செல்வம், எதுவோ சிந்தித்தவனாய்,

"ஆனா மச்சா... அவளுக்கு தான் உன்னை சுத்தமாவே பிடிக்காதேடா! அப்படினா சீக்கிரமாவே நீ கேட்டது போல அந்த பேப்பர்ல சைன் போட்டு, உனக்கு டிவோஸ் தந்திடத்தான் போறாளா?" என்க.


அவன் முதுகில் ஒன்று போட்டவன்.
"எரும உன் வாய கழுவு ஆயில் போட்டு அலசுடா நாதாரி! என்ன நேரத்தில என்ன பேச்சு பேசுறே?" என்க.

அடிபட்ட முதுகினை தடவிய வாறு,
"நான் என்னடா பண்ணேன்.? பண்றதெல்லாம் நீ.... என்னை எதுக்குடா சாகடிக்குற?"


"பரதேசி பரதேசி. டிவோர்ஸ்கு நம்ம அப்ளே பண்ணது அவளுக்கு தெரியுமா... இல்லல்ல.. அப்புறம் எப்படிடா அவ அந்த பேப்பர்ஸ்ல சைன் வைப்பா? உன் திருவாய மூடிட்டு இருந்தாலே போதும் ...எல்லாம் நல்லதாவே நடக்கும்.

அப்புறம் அவ மனசில எப்பிடி இடம்பிடிக்கிறது என்கிறத நான் பாத்துக்கிறேன். இதை பத்தி அந்த வக்கீலுக்கிட்ட மறுபடியும் பேசி..... அந்தாள் கிட்டையும் வாங்கிக்கட்டிக்காத...

அந்த பத்திரம் வந்திச்சுனா என்கிட்ட கொண்டு வந்துகொடு! யாருக்கும் தெரியாமல் நானே கிழிச்சு போட்டுர்றேன்." என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்,

"சரி! நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாமல் தேவையில்லாததை எல்லாம் பேசி நேரத்தை மினக்கடுத்திட்டு...



நான் சொன்னதை ஏற்பாடு பண்ணிட்டியா?." என்றான்,

திரும்பவும் முதலில் இருந்தா....? என்பதைப்போல் குழம்பியவன்,


"இன்னும் எதை கேட்கிற...?"


"எரும உன்னை என்னடா செய்ய சொன்னேன்.
நைட்டுக்கு என் பிஸினஸ் ஃப்ரண்ட்ஸ் வருவாங்க, பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ண சொன்னது மறந்திட்டியா?."



"அது தான் நான் ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்ட......" என்றவன் பேச்சினை இடை நிறுத்தி....


"இதை தான் நீ முன்னாடியே கேட்டியா? நான் தான் எல்லாத்தையும் உலறிட்டனா?


முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா, அதுக்கு மாத்திரம் பதில் சொல்லிட்டு, அந்த வக்கீல் மேட்டரை மறைச்சிருப்பனேடா!

என்னோட அவசர புத்தியினால தான் எல்லாம் சொதப்பிடிச்சா?
இதுதான் மேட்டர்ன்னு சொல்லிருந்தா.. அந்த வக்கீலுக்கிட்ட லூசுனு பெயர் வாங்கினாலும் பிரச்சினை இல்லனு அந்த டிவோர்ஸ் மேட்டர நிறுத்தியிறுக்கலாமே" என்றவனை,

"அது உன்னால முடியாது மச்சா..

உன் வாயிருக்கே... அது தான் உனக்கு முதல் எதிரி!
முடிஞ்சளவுக்கு பேச்சை குறைச்சினா நீ இன்னும் முன்னுக்கு வரலாம்" என்றவன்,


"ஓகே மச்சான் என் டார்லு எனக்காக வெய்ட் பண்ற.. நான் வரேன்டா!" என்றவாறு மைலி அருகில் விரைந்தான்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


என்னதான் இவனால் தன் அனுமதியில்லாமல் தன்னை தொடமுடியாது என்று இத்தனை நேரம் தன் மனதினை திடப்படுத்தினாலும், அவன் அறை கதவினை நெருங்க நெருங்க பதட்டம் கூடிக்கொண்டே போனது.

அவள் பதட்டத்தின் மத்தியில், அந்த வீட்டிற்கு வந்து முதல் நாள் இரவு ஸ்விம்மிங் பூல் அருகில் தன் இடையினை வளைத்து, அவன் வைத்த முத்தம் நினைவில் வந்து அவளை இன்னும் பயம் கொள்ள செய்ய,

நடையின் வேகத்தை குறைத்தவளை பற்றியிருந்த தெய்வானையோ,



"என்ன மைலி ஸ்லோவாகிட்ட? ரொம்ப பதட்டமா இருக்க போல? அங்க துடிக்கிற இதயத்தோட சத்தம் எனக்கே கேக்குதே!

பதட்டத்தில கையில இருக்க பால் செம்பை கீழ விட்டிடாத... அப்புறம் அபசகுணம் ஆகுதோ இல்லையோ, ரொம்ப நேரம் முழிக்க முடியாமல் போயி பாதியில தூங்கிடப்போறீங்க." என்றாள் தெய்வானை கேலியாய்.


அவளது கேலியில் ஏற்கனவே வேகத்தை குறைந்திருந்த மைலி, தரையில் கால் வேரோடி நின்று கொள்ள,


கைகளில் இருந்த செம்பு, அவள் கைகளின் நடுக்கத்தில் இதோ விழுந்து விடுகிறேன். என்பது போல் ஆடுவதையும், தன்னையே மிரட்சியுடன் பார்திருப்பவளையும் கண்டவள், மூடிய இதழ்களையும் மீறி புன்னகைத்தவாறே,

"என்னடி...! இப்படி நடுங்குது? ஸ்ரீ என்ன பூச்சாண்டியா?"

"அக்கா உண்மையாலுமே என் இதயத்தோட படபடப்பு உங்களுக்கு கேக்குதா?" என சிறுபிள்ளை போல் கண்களை உறுட்டி கேட்டவளின் பேச்சில் சத்தமாகவே சிரித்தவள்,

"லூசு... நான் சும்மா விளையாடினேன். " என்றவள்,


"சரி பேசினது போதும் வா போகலாம். கீழே ஹாேல்ல இருந்து எல்லாருமே நம்மளத்தான் பாக்கிறாங்க. இன்னைக்கு புல்லா செம்ம வேலை. உன்னை உன் புருஷன்கிட்ட ஒப்படைச்சிட்டு.. நான் போய் நல்லா தூங்க போறேன். நீயும் புருஷன் மனசு கோணாமல் நடந்துக்கோ" என்று விட்டு, சிரித்தவளை முறைத்த மைலி,

"ஏன்க்கா நீங்களும் என்னை இப்படி படுத்துறீங்க?
உங்களுக்கு தான் உண்மை எல்லாம் தெரியுமே! வெக்கப்பட்டிட்டு போற நிலையிலயா நான் இருக்கேன்?" என அழுவது போல் கேட்க.

அவளது நிலை புரிந்தவளாய்,


"சாரிடி..! சும்மா தான் விளையாடினேன். இப்போல்லாம் ஸ்ரீ அப்பிடி இல்ல... அவன் ரொம்பவே மாறிட்டான்.
நீயும் அதையெல்லாம் மறந்திடு" என்றவள். மைலியின் முகம் அருவெருப்பாக மாறுவதை கண்டு,

"இங்க பாரு மைலி! நடந்த எதையும் மாத்த முடியாது.
இங்க யாருமே தப்பு பண்ணாதவங்களும் கிடையாது.
அதுக்காக அவன் பண்ண தப்ப, சரின்னும் சொல்ல வரல்ல..



ஆனா அந்த தப்ப இங்க எத்தனை பேர் திருத்தியிருக்கோம் சொல்லு?


ஸ்ரீ உனக்காக தன்னோட எல்லா தப்பையுமே திருத்தி, சரி பண்ணியிருக்கான் மைலி.
எல்லாமே உன் ஒருத்திக்காக மட்டும் தான்.

உன் காதல் தனக்கு கிடைக்கணும் என்கிறதுக்காக... அதையும் நீ மறந்திடாத." என அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தவள்,

"உன்னை இப்பவே அவன் செய்ததை எல்லாம் மறந்து, அவன்கூட குடும்பம் நடத்துனு நான் சொல்ல மாட்டேன்.
ஆனா அதையே நினைச்சிட்டு உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதனு தான் சொல்லுறேன்.



இது உன்னோட வாழ்க்கை மாத்திரமில்ல.
உன்னை மேல அனுப்பிச்சிட்டு.. பல கனவுகளோட கீழே நம்மளையே பாத்திட்டிருக்காங்க பாரு! அவங்க அத்தனை பேரோட நம்பிக்கை.


நீ படிச்சவ.. புரிஞ்சு நடந்துப்பேனு நினைக்கிறேன்.
நேரமாகுது உள்ள போ...." என ஸ்ரீயின் அறை கதைவை திறந்தவள், மைலியை அனுப்பி விட்டு சென்று விட்டாள்.

தெய்வானையின் பேச்சத்தனையும் கேட்டவள் மனந்தான் அதிக பாரத்தை சுமக்க முடியாதவள் போல், அவன் அறை கதவுடனே சாய்ந்து நின்றவளையே கட்டிலில் பட்டு வேட்டி சட்டையோடு தலையணையை மடியில் வைத்து பார்த்திருந்தவன்,

"என்ன தாரை....! கையில வைச்சிருக்க செம்பு ரொம்ப கனமோ? கொஞ்சத்தூரம் வந்ததுக்கே கதவோட சாய்ஞ்சு நின்டுட்ட?" என்ற ஸ்ரீயின் கேலி பேச்சினால்,
தெய்வானை கூறிய சொற்பொழிவுகள் மறந்து போக,


அதனுடன் சேர்ந்து சற்று தைரியமும் வந்து ஒட்டிக்கொண்டது.
'என் முன்பு தவறு செய்தவனே தைரியாமாக பேசும் போது நான் எதற்கு பயந்து ஓடவேண்டும்?' என நினைத்தவள்,
அவனுக்கு தான் ஒன்றும் சளைத்தவள் இல்லை என்பது போல்,

"ஆமா ஆமா... ரொம்ப கனம் தான். ஆனா என் கையில வைச்சிருக்க செம்பு கிடையாது. காலையில ஏறின புதுத்தாலி.
எப்படா இதை கழட்டி எரிவேன்னு இருக்கு....." என்று கூறியவள்,
தான் கூறியதன் பொருள் புரிய, பின் வார்த்தையை மாற்றி,


"பேசமல் இதை ஓரமா கழட்டி வைச்சிட்டா.. கொஞ்சம் சிரமம் இல்லாமல் இருக்கும். ஒரே கனமா இருக்கிறத சொன்னேன்." என்றவளது பேச்சு, வலியை தந்தாலும்,
அதை பெரிது படுத்தாதவன்.

"இருக்கட்டும் தாரை! தங்கம் கழுத்தில் இருக்கிறதனால உனக்குத்தான் நிறைய நன்மைகள். நீ படிச்சது இல்லையா?


எனக்காக இல்லனாலும் உனக்காகவாவது அந்த கனத்தை பொறுத்துக்கோ" என்றான்.

முதல் முறையாக அவளுடனான அவனது அமைதியுடன் கூடிய நிதானமான பேச்சு, இது மைலிக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதுவே மைலிக்கு ஒரு வித திடத்தினை அளித்தது.


மீதமிருந்த பதட்டமும் விலக.. கையில் இருந்த செம்பினை எங்கு வைப்பதென அந்த இடத்திலேயே நின்றவாறு கண்களால் இடம் தேடியவள் செயலினை புரிந்தவனாய்.

"தாரை அதை இங்க கொண்டு வந்து வை." என ஸ்ரீ தன் கட்டிலின் அருகில் எரியும் மணம் கமழும் ஊதுபத்தியும், கூடையுடன் வைக்கப்பட்ட பழத்திரள்களின் அருகில் இருந்த சிறிய இடத்தை காட்டினான்.



" எங்களுக்கும் கண் நல்லாவே தெரியும். யாரும் சொல்ல தேவையில்லை... அப்புறம் எனக்கு அப்பா மைதிலினு அழகா தான் பேரு வைச்சிருக்காரு. புதுசா எவளோ ஒருத்தியோட பேரெல்லாம் வைச்சு கூப்பிடுற வேலையெல்லாம் வேண்டாம்." என்றவள் உதட்டினை சுழித்துக்காட்டி, விட்டு கட்டிலை நோக்கி நடக்க,

அவள் கோபத்தை பறை சாற்றும் விதமாய், கால்களின் கொழுசொலி கணீர்.., கணீர்.. என பெரிதாக ஒலி எழுப்ப.

கட்டிலருகே நகர்ந்தவள் முணுமுணுப்பு அவனுக்குமே கேட்டது.

" தாரையும், கூரையும் தான்.
பேரா இது? எந்த சிரிக்கி பேரோ? எந்தளவுக்கு அந்த சிரிக்கிமேல மயக்கம் இருந்ததுன்னா... என்னை அந்த பேர் சொல்லி கூப்பிடுவான். நல்லா தான் மயக்கி வைச்சிருக்கா..."

அவள் முணுமுணுப்பை கேட்டவாறு, அவளையே பார்த்திருந்தவன் இதழ்களோ ரசனையில் விரிந்தது.

செம்பினை வைத்து விட்டு திரும்பியவள், அவனது பார்வையும் புன்னகையினையும் கண்டு..

"என்ன லுக்கு?" என்று மிடுக்காக கேட்டாள்.

"ஏன் பார்க்க கூடாதா? இது என் ரூம்.. நீ என் பொண்டாட்டி... இங்க இருக்கிற எல்லாத்தையும் ரசிக்கிற உரிமை எனக்கிருக்கு." என்றவனது பேச்சில் உள்ள அர்த்தம் புரிந்தவள்,


சட்டென தன்னை திருப்பிக்கொண்டு, முன்புறமிருந்த சோபாவில், ஸ்ரீயிற்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.
 

Smiley

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 28, 2022
Messages
14
Haha.choo cute..sri un frnd vaaila thaan sani..ennaiku vaai thavari thaarai kita pottu kodukaporaano. Venumnu seiya maatan aana theriyama sollida porannu thonudhu...sri ippathaan mailiya rasikirar..super ud
 
Top