- Joined
- Jul 23, 2021
- Messages
- 862
நம் காதல் கைகூடுமோ???
"கீதா…. கீதா….." என்ற குரலுக்கு கேட்டது கொலுசொலிச் சத்தம்… ஆம் காலினால் மட்டுமே ஒலி எழுப்ப முடியும் பாவையவளால்….
"என்னடா? எதுக்கு ஓடி வர்ற?? மெதுவாக வந்திருக்கலாமே" என்ற கேட்ட தனது தமையன் வீரவர்மனின் முகத்தை பார்த்து புன்னகை புரிந்தாள் கீதா எனும் கீதாஞ்சலி….
" அக்கா எப்போ அண்ணா நீ கூப்பிட்டா நடந்து வந்திருக்கு…. காத்துல பறந்துதானே வருவா" என்றவாறு கவிதா எனும் வந்தாள் கவிதாஞ்சலி…
அவளை பார்த்து முறைத்தாள் கீதா..
" நீ பார்த்தா பயந்திடுவனா போடி" என்றாள் கவிதா.
"கவி அக்காவை டி போட்டு பேசக்கூடாதுனு சொல்லிருக்கன் தானே"
" மன்னிச்சிடுங்க அண்ணா…. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். "
" பரவாயில்லை அண்ணா நம்ம கவிதானே சொன்னா" என்று தங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டினாள்.. இருவரது பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்தான் வீரா…
வாங்க இவங்க யாரு என்னனு பார்க்கலாம்………
நெற்கள் பொன்னைப் போல விளையும்…. அருவியோ ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்… பறவைகள் மனம் திறந்து பாடும்…. மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்….ஊர் சிறப்பாக இருக்க அருள் புரியும் மாரியம்மன்… இவ்வாறு சிறப்புக்கள் மிக்க ஊரே பொன்னூர்..
இந்த ஊரில நல்லது கெட்டது நடந்தா முதல் ஆளாக வந்து நிற்கும் குடும்பம் தான் வர்மன் குடும்பம்.. அருள்வர்மன் ஊரிலுள்ள அனைவரையும் தன் குடும்பத்தினராய் நினைப்பவர்…. இவர் மனைவி அன்புச்செல்வி பெயருக்கு ஏற்றாற்போல் அன்பானவர்…. கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர்.. அதனால்தான் கணவன் மாரடைப்பால் இறக்க அவரைத் தொடர்ந்து இவரும் அவர் பின்னே சென்றார்…
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பிள்ளை வீரவர்மன்… என்ஜினீயரிங் படித்து விட்டு தனியாக கம்பனி ஆரம்பிப்பதற்கு அனுபவம் தேவை என்பதற்காக ஒரு கம்பனியில் வேலை செய்தவன். தாய் தந்தை இறந்ததனால் ஊரிலே இருந்துவிட்டால்.இரண்டாவது பெண் பிள்ளை கீதாஞ்சலி… மூன்றாவதும் பெண் பிள்ளை கவிதாஞ்சலி..காலேஜ் முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள்… தாய் தந்தை இறந்த பின்னர் இவர்களுக்கு தாயும் தந்தையுமானவன்…
சரி வாங்க கதைக்குள் செல்லலாம்…..
"அண்ணா எப்போ எங்களுக்கு அண்ணிய அறிமுகப்படுத்தப் போற?" என கீதா கேட்டாள்..
"ஏன் அண்ணிய கேக்கறீங்க? அண்ணா வேணாமா?"
"அண்ணாவும் வேணும் அண்ணியும் வேணும். அப்படித்தானே கவி"
"ஆமா அக்கா.. அண்ணா உங்களுக்கு ஏதும் குறை வச்சிட்டனடா… ஏன் திடீர்னு இப்பிடி கேக்கறீங்க? "
" ஐயோ அண்ணா.. என்ன வார்த்தை சொல்லிட்டீங்க.. நீங்க எங்களுக்கு ஒரு குறையும் வைக்கல அண்ணா.. "என கவிதா கூற அதை ஆமோதித்தாள் கீதா.
" அண்ணி எதுக்குடா அதுதான் நான் இருக்கிறனே உங்களுக்கு.. முதல்ல நம்ம கீதாவுக்கு கல்யாணம் பண்ணிடலாம்…அப்புறம் நம்ம கவிக்கு… " கல்யாணம் என்றதும் கீதா முகம் வாடியது..
" எனக்கு கல்யாணம் வேண்டாம் அண்ணா" என்றாள் கீதா..
" ஏன்டா?"
"எல்லாம் தெரிஞ்ச நீயே இப்பிடி சொல்லலாம்?? "
" கீதா அதைப்பற்றி நீ கவலைப்படாத.. சரியா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட கடமை.. "
" அண்ணா அப்போ சீக்கிரமா நம்ம வீட்ல ஒரு விசேஷம் நடக்க போகுதுனு சொல்றீங்க"
" ஆமாடா.. சரி நேரமாச்சு போய் தூங்குங்க. "
இருவரும் தமது அறைக்கு சென்றனர்.. வீராவும் தனது அறைக்குச் சென்றவன்… தனது வாழ்க்கையில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
" சனா… "
" சொல்லு வீர்"
" என்ன விட்டுட்டு போயிடமாட்டீங்களே"
" ஏன் சனா இப்பிடி கேக்கிற? "
"இல்லை வீர்.. நீங்க கிராமத்து ஆளு… நான் சிட்டில இருக்கிற.. நாளைக்கு நம்ம லவ் பண்ற விசயம் எங்க வீட்ல தெரிஞ்சா பிரச்சனை வரும்… அப்போ என்ன விட்டுட்டு போயிட மாட்டீங்களே"
" என்ன பிரச்சினை வந்தாலும் உன்ன விட்டுட மாட்டேன் சனா… "
"வீர் நான் உங்கள ஏன் தெரியுமா நேசிக்கிறன்"
" ஏன்? "
"எனக்கு கிராமம்னா பிடிக்கும்… சின்ன வயசுல தாத்தா பாட்டிகூடதான் இருந்தன்… அவங்க இறந்த பிறகுதான் இங்கயே வந்தன்… அதுமட்டுமல்ல நான் ஒரே பொண்ணு அதனால நிறைய பேரு இருக்கிற குடும்பம் பிடிக்கும்… உங்களோட குடும்பத்தில நானும் ஒருத்தியாக இருக்க ஆசை… அதுதான் உங்கள லவ் பண்ண முதல் காரணம்… "
" அப்போ என்ன பிடிக்காதா? "
" உங்களை பிடிக்காமலா வீர்.. உங்களாலதானே இவங்க எனக்கு கிடைக்கப்போறாங்க"
" லவ் யூ சனா"
" லவ் யூ சோ மச் வீர்…"
" சனா உங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்காட்டி என்ன பண்ணுவ? "
" உன் கூடவே வந்திருவன் வீர்…ஆனால் நீ இல்லைன்னா எனக்கு சத்தியமாக பைத்தியம் பிடிச்சிரும் வீர்… "
" ஏய் லூசு ஏன் இப்படி பேசுற. நம்ம கல்யாணம் இரண்டு வீட்டு சம்மதத்தோட பெரிசா நடக்கும்.. "
" ம்… "
" சரி நேரமாச்சு நீ வீட்டுக்குப் போ"
" முடியாது"
" ஏன் சனா?"
" என்னவோ தெரியல்லை உங்கள விட்டுட்டு போகவே மனசில்லை வீர்.. ஒரு மாதிரி இருக்கு"
" இங்க பாரு எதையும் நினைச்சி பயப்படாத.. என்ன நடந்தாலும் நீதான் என்னோட மனைவி " என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
" சரி வீர் நான் போயிட்டு வர்றன்"
சனாவை சந்தித்து விட்டு வந்த வீராவுக்கு தாய் தந்தை இறந்த செய்தி வர ஊருக்கு வந்தவன் அங்கேயே தங்கிவிட்டான்…
திடீரென ஒரு நாள் அவனுக்கு ஒரு கல்யாண பத்திரிகை வந்தது.. அதில் அவனது சனாவிற்கும் இன்னுமொருவருக்கும் கல்யாணம் என்ற செய்தியை தாங்கி நின்றது.. அதைப் பார்த்த வீராவிற்கு சற்று நேரம் எதுவும் புரியவில்லை. பின் சனாவின் எண்ணுக்கு அழைத்தான். முதலில் அழைப்பு போய் கட்டாகியது. பின் மீண்டும் அழைத்தான்..
"கீதா…. கீதா….." என்ற குரலுக்கு கேட்டது கொலுசொலிச் சத்தம்… ஆம் காலினால் மட்டுமே ஒலி எழுப்ப முடியும் பாவையவளால்….
"என்னடா? எதுக்கு ஓடி வர்ற?? மெதுவாக வந்திருக்கலாமே" என்ற கேட்ட தனது தமையன் வீரவர்மனின் முகத்தை பார்த்து புன்னகை புரிந்தாள் கீதா எனும் கீதாஞ்சலி….
" அக்கா எப்போ அண்ணா நீ கூப்பிட்டா நடந்து வந்திருக்கு…. காத்துல பறந்துதானே வருவா" என்றவாறு கவிதா எனும் வந்தாள் கவிதாஞ்சலி…
அவளை பார்த்து முறைத்தாள் கீதா..
" நீ பார்த்தா பயந்திடுவனா போடி" என்றாள் கவிதா.
"கவி அக்காவை டி போட்டு பேசக்கூடாதுனு சொல்லிருக்கன் தானே"
" மன்னிச்சிடுங்க அண்ணா…. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். "
" பரவாயில்லை அண்ணா நம்ம கவிதானே சொன்னா" என்று தங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டினாள்.. இருவரது பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்தான் வீரா…
வாங்க இவங்க யாரு என்னனு பார்க்கலாம்………
நெற்கள் பொன்னைப் போல விளையும்…. அருவியோ ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்… பறவைகள் மனம் திறந்து பாடும்…. மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்….ஊர் சிறப்பாக இருக்க அருள் புரியும் மாரியம்மன்… இவ்வாறு சிறப்புக்கள் மிக்க ஊரே பொன்னூர்..
இந்த ஊரில நல்லது கெட்டது நடந்தா முதல் ஆளாக வந்து நிற்கும் குடும்பம் தான் வர்மன் குடும்பம்.. அருள்வர்மன் ஊரிலுள்ள அனைவரையும் தன் குடும்பத்தினராய் நினைப்பவர்…. இவர் மனைவி அன்புச்செல்வி பெயருக்கு ஏற்றாற்போல் அன்பானவர்…. கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர்.. அதனால்தான் கணவன் மாரடைப்பால் இறக்க அவரைத் தொடர்ந்து இவரும் அவர் பின்னே சென்றார்…
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பிள்ளை வீரவர்மன்… என்ஜினீயரிங் படித்து விட்டு தனியாக கம்பனி ஆரம்பிப்பதற்கு அனுபவம் தேவை என்பதற்காக ஒரு கம்பனியில் வேலை செய்தவன். தாய் தந்தை இறந்ததனால் ஊரிலே இருந்துவிட்டால்.இரண்டாவது பெண் பிள்ளை கீதாஞ்சலி… மூன்றாவதும் பெண் பிள்ளை கவிதாஞ்சலி..காலேஜ் முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள்… தாய் தந்தை இறந்த பின்னர் இவர்களுக்கு தாயும் தந்தையுமானவன்…
சரி வாங்க கதைக்குள் செல்லலாம்…..
"அண்ணா எப்போ எங்களுக்கு அண்ணிய அறிமுகப்படுத்தப் போற?" என கீதா கேட்டாள்..
"ஏன் அண்ணிய கேக்கறீங்க? அண்ணா வேணாமா?"
"அண்ணாவும் வேணும் அண்ணியும் வேணும். அப்படித்தானே கவி"
"ஆமா அக்கா.. அண்ணா உங்களுக்கு ஏதும் குறை வச்சிட்டனடா… ஏன் திடீர்னு இப்பிடி கேக்கறீங்க? "
" ஐயோ அண்ணா.. என்ன வார்த்தை சொல்லிட்டீங்க.. நீங்க எங்களுக்கு ஒரு குறையும் வைக்கல அண்ணா.. "என கவிதா கூற அதை ஆமோதித்தாள் கீதா.
" அண்ணி எதுக்குடா அதுதான் நான் இருக்கிறனே உங்களுக்கு.. முதல்ல நம்ம கீதாவுக்கு கல்யாணம் பண்ணிடலாம்…அப்புறம் நம்ம கவிக்கு… " கல்யாணம் என்றதும் கீதா முகம் வாடியது..
" எனக்கு கல்யாணம் வேண்டாம் அண்ணா" என்றாள் கீதா..
" ஏன்டா?"
"எல்லாம் தெரிஞ்ச நீயே இப்பிடி சொல்லலாம்?? "
" கீதா அதைப்பற்றி நீ கவலைப்படாத.. சரியா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட கடமை.. "
" அண்ணா அப்போ சீக்கிரமா நம்ம வீட்ல ஒரு விசேஷம் நடக்க போகுதுனு சொல்றீங்க"
" ஆமாடா.. சரி நேரமாச்சு போய் தூங்குங்க. "
இருவரும் தமது அறைக்கு சென்றனர்.. வீராவும் தனது அறைக்குச் சென்றவன்… தனது வாழ்க்கையில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
" சனா… "
" சொல்லு வீர்"
" என்ன விட்டுட்டு போயிடமாட்டீங்களே"
" ஏன் சனா இப்பிடி கேக்கிற? "
"இல்லை வீர்.. நீங்க கிராமத்து ஆளு… நான் சிட்டில இருக்கிற.. நாளைக்கு நம்ம லவ் பண்ற விசயம் எங்க வீட்ல தெரிஞ்சா பிரச்சனை வரும்… அப்போ என்ன விட்டுட்டு போயிட மாட்டீங்களே"
" என்ன பிரச்சினை வந்தாலும் உன்ன விட்டுட மாட்டேன் சனா… "
"வீர் நான் உங்கள ஏன் தெரியுமா நேசிக்கிறன்"
" ஏன்? "
"எனக்கு கிராமம்னா பிடிக்கும்… சின்ன வயசுல தாத்தா பாட்டிகூடதான் இருந்தன்… அவங்க இறந்த பிறகுதான் இங்கயே வந்தன்… அதுமட்டுமல்ல நான் ஒரே பொண்ணு அதனால நிறைய பேரு இருக்கிற குடும்பம் பிடிக்கும்… உங்களோட குடும்பத்தில நானும் ஒருத்தியாக இருக்க ஆசை… அதுதான் உங்கள லவ் பண்ண முதல் காரணம்… "
" அப்போ என்ன பிடிக்காதா? "
" உங்களை பிடிக்காமலா வீர்.. உங்களாலதானே இவங்க எனக்கு கிடைக்கப்போறாங்க"
" லவ் யூ சனா"
" லவ் யூ சோ மச் வீர்…"
" சனா உங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்காட்டி என்ன பண்ணுவ? "
" உன் கூடவே வந்திருவன் வீர்…ஆனால் நீ இல்லைன்னா எனக்கு சத்தியமாக பைத்தியம் பிடிச்சிரும் வீர்… "
" ஏய் லூசு ஏன் இப்படி பேசுற. நம்ம கல்யாணம் இரண்டு வீட்டு சம்மதத்தோட பெரிசா நடக்கும்.. "
" ம்… "
" சரி நேரமாச்சு நீ வீட்டுக்குப் போ"
" முடியாது"
" ஏன் சனா?"
" என்னவோ தெரியல்லை உங்கள விட்டுட்டு போகவே மனசில்லை வீர்.. ஒரு மாதிரி இருக்கு"
" இங்க பாரு எதையும் நினைச்சி பயப்படாத.. என்ன நடந்தாலும் நீதான் என்னோட மனைவி " என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
" சரி வீர் நான் போயிட்டு வர்றன்"
சனாவை சந்தித்து விட்டு வந்த வீராவுக்கு தாய் தந்தை இறந்த செய்தி வர ஊருக்கு வந்தவன் அங்கேயே தங்கிவிட்டான்…
திடீரென ஒரு நாள் அவனுக்கு ஒரு கல்யாண பத்திரிகை வந்தது.. அதில் அவனது சனாவிற்கும் இன்னுமொருவருக்கும் கல்யாணம் என்ற செய்தியை தாங்கி நின்றது.. அதைப் பார்த்த வீராவிற்கு சற்று நேரம் எதுவும் புரியவில்லை. பின் சனாவின் எண்ணுக்கு அழைத்தான். முதலில் அழைப்பு போய் கட்டாகியது. பின் மீண்டும் அழைத்தான்..