கார்முகில், பெற்றவர்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவனது நிறத்தைக் கொண்டு பள்ளி கல்லூரிகளில் நிறைய அவமானங்களை சந்தித்தவன். நண்பர்களே கூட அவனை தேவைக்கு பயன்படுத்தும் நிலை. ஆனால் அவன் கொஞ்சம் கூட தாழ்வு மனப்பான்மை இன்றி இருக்கிறான். அதற்கு காரணம் யார்?
நண்பர்களே அவமானப்படுத்தினால், திருமணம் என வருகையில் அதைவிட பல அவமானனங்களுக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகிறான். எனவே திருமணமே வேண்டாம் என அவன் முடிவெடுக்கையிலா புயல்போல் அவன் வாழ்க்கைக்குள் நுழைகிறாள் நாயகி.
அவளது அழகு அவனை மிரட்ட, அவளை திருமணம் செய்ய தயங்குகிறான்.
சுமித்ரா நாயகி அழகும், அன்பும் ஒருங்கே இணைந்த தேவதை அவள். ஆனால் அவளது ‘ஒரு’ குணம், மற்றவர்களை எல்லாம் கொஞ்சம் அலறவிடும். அது என்ன?
அந்த அவளது குணமே இவர்கள் வாழ்க்கைக்கு நெருப்பை பற்ற வைத்தால்?
அவளால் தன்னை நேசிக்கவே முடியாது என அவனும். உன்னை உயிராக நேசிக்கிறேன் என அவளும்.
இதற்கு என்னதான் முடிவு? கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க😊.