இரண்டு மணிநேரத்திற்கு பிறகு விஷ்வா மயக்கத்தில் இருந்து கொஞ்சம் தெளிந்தான்.
சார்...சார்.... என்றான்.
என்னப்பா தெளிஞ்சிரிச்சா?....
ஸாரி சார்.... என்றான்.
அப்போ நீ என்ன பேசின ன்னு உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல?
ஆமாம் சார்... தெரியாம பேசிட்டேன்...
சரி உங்கப்பா நம்பர் கொடு அவர் கிட்ட பேசறேன்.
அய்யோ வேணாம் சார்...
அப்போ கேஸ் ஃபைல் பண்ணிடவா?
அய்யையோ... வேணாம் சார்...
தன் பாக்கெட்டில் கை விட்டு பார்த்தான் ரூபாய் நோட்டுகளை காணவில்லை. அனைத்தையும் செலவழித்து விட்டேனா? இல்ல கீழ் எங்கயாவது விழுந்திடிச்சா? இல்ல இந்த போலீஸ்காரங்க நான் மயக்கத்தில இருக்கும் போது எடுத்துக்கிட்டாங்களா? என்று யோசித்தான்.
என்ன தேடற தம்பி?
இந்த ஃபோனையா? என்று அவன் ஃபோனை எடுத்து கொடுத்தார்கள்.
ஃபிங்கர் பிரிண்ட் வச்சிருப்பன்னு நினைச்சு உன்னோட விரலெல்லாம் வச்சு பாத்தோம் எதுவும் வரல...
அடப்பாவிங்களா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே... ஃபோனை வாங்கி நம்பர் பாஸ்வேர்டு போட்டு ஓப்பன் செய்து... அவனின் கம்பனியில் வேலை செய்யும் ராஜசேகருக்கு கால் செய்தான்.
நான் விஷ்வா பேசறேன்...
சொல்லு தம்பி....
நான் பிராட்வே போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கேன். நீங்க கொஞ்சம் வரீங்களா?
அவனிடம் இருந்து ஃபோனை வாங்கிய கான்ஸ்டபிள்...
சார், நான் கேஸ் எதுவும் ஃபைல் பண்ணல.... நீங்க நேரா வந்து பேசிட்டு கூட்டிக்கிட்டு போங்க.... என்றார்.
சரி சார்... நான் வரேன். என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார்.
ராஜசேகர் தன் மகன் ராகவிடம்...
ராகவ், என் முதலாளி மகன் விஷ்வா போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கான். நான் போயிட்டு வரேன்...
அப்பா... இருங்க நான் கூட்டிகிட்டு போறேன்.
வேணாம் பா... நீ இப்போ தான வந்த...
நீங்க மட்டும்.... அதெல்லாம் ஒன்னும் இல்லை வாங்க அப்பா என்று கூறி அவனுடைய பைக்கில் கூட்டிச் சென்றான்.
போலீஸ் ஸ்டேஷனில்...
அப்பா... நான் வெளியே நிக்கறேன்.
நீங்க போய் பேசிட்டு வாங்க...
சரி என்று உள்ளே சென்றவர்.... பேசிவிட்டு (கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு)
சார் கூட்டிக்கிட்டு போலாமா?
பேரண்ட்ஸ் வந்தா தான் அனுப்புவோம். அவங்க வரமுடியல ன்னு நீங்க கேட்டுக்கிட்டதால.... இப்போ அனுப்புறோம்...
சார்...தேங்க் யூ.... என்றார் ராஜசேகர்.
விஷ்வா கான்ஸ்டபிளிடம்... ரியலி சாரி என்றான் இன்னொருமுறை...
மறுபடியும் இப்படி பண்ணாத ப்பா... என்றார் கான்ஸ்டபிள்.
விஷ்வாவை வெளியே கூட்டி வந்தார் ராஜசேகர்.
அங்கிள் தேங்க்ஸ்.... சாரி இந்த டைம் ல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு...
தம்பி... அப்பாவுக்கு தெரிஞ்சா....
அய்யோ வேணாம் அங்கிள் சொல்லிடாதீங்க... பிளீஸ்.... முக்கியமா அக்கா கிட்ட சொல்லாதீங்க....
தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி.... இதுவே ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்டா இருந்தா ஓகே....
கண்டிப்பா அங்கிள்... என்னை பத்தி தெரியாதா உங்களுக்கு?
வாங்க ஆட்டோல போய் பீச் பார்க்கிங் ல இருக்குற என்னோட காரை எடுத்துக்கிட்டு போலாம். நானே உங்கள வீட்ல டிராப் பண்ணிடறேன்.
இல்லப்பா... வேணாம் என் பையன் வெயிட் பண்றான்....
ஓ... அப்படியா... எங்க?
அதோ...
ஹாய்... என்று கையை ஆட்டினான் விஷ்வா.

பார்த்தும் பார்க்காதது போல ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான் ராகவ்.
சரி... அவர் ஃபோன்ல பிஸியா இருக்கார் போல... அவர் கிட்டயும் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க அங்கிள்.
சரிப்பா... நீ பாத்து பத்திரமா போ....
ஓகே அங்கிள்... பை....
ராமகிருஷ்ணன் சாருக்கு இப்படி ஒரு பையன்... என்று நினைத்து கொண்டார்.
ராகவ்... ஃபோன்ல யாரு?
நம்ம ரேஷ்மி தான் பா... எப்போ வருவீங்க? என்னாச்சு ன்னு கேட்டா....
ஓ... சரிப்பா வா போலாம்...
பைக்கில் செல்லும் போது...
இவன் எப்பவுமே இப்படித்தானா அப்பா....
யாரு விஷ்வா வா?
ஆமாம்...
இதுவரைக்கும் இல்ல... இப்போ தான் முதல் முறையா இப்படி நடந்துச்சு.... பணக்கார பையன் ல அதான்.... அவனோட ஒரே நல்ல குணம் என்னன்னா.... பெரியவங்க கிட்ட மரியாதையா பேசுவான். மத்தபடி எந்த ஒரு நல்ல விஷயமும் அவன் கிட்ட இருக்குற மாதிரி எனக்கு தெரியல .... என்றார் ராஜசேகர்.
பாவம் அவனை கட்டிக்க போற பொண்ணு... என்றான் ராகவ்.
(பாவம் அவனுக்கு தெரியாது அது அவன் தங்கை ரேஷ்மி தான் என்று)
அதற்கு மேல் எதுவும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தனர்.
ரேஷ்மி அப்பாவிற்காகவும் அண்ணனிற்காகவும் சாப்பிடாமல் வெயிட் பண்ணி கொண்டிருந்தாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்து மூவரும் சாப்பிட கனகவள்ளி பரிமாறிக் கொண்டிருந்தார்.
ஏம்மா... நீ சாப்பிடல என்றான் ராகவ்.

அதெல்லாம் மொதல்லையே ஆயிடுச்சு...என்றாள் ரேஷ்மி.
ஏய்... என்று அவளின் தோளில் லேசாக தட்டிவிட்டு... கண்ணா ஷுகர் மாத்திரை போட்டுகிட்டு சாப்பிட்டுட்டேன் பா....
ஓ... சரிம்மா...
ராஜசேகரிடம் கனகவள்ளி
ஏங்க... என்னாச்சு... ஏன் டல்லா இருக்கீங்க...

இல்ல ராமகிருஷ்ணன் சாரோட பையன குடிச்சிட்டு கலாட்டா பண்ணான் போலீஸ் ஸ்டேஷன் வச்சிருந்தாங்க... அவர் எவ்ளோ நல்லவர் தெரியுமா... அவருக்கு இப்படி ஒரு பையன்.... அதை அவர் கிட்ட சொல்ல வேண்டாம் ன்னு சொன்னான். ஆனா சொல்லாம இருக்க எனக்கு மனசு கேக்கல... அவர் கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிடுவேன்... அதான் ஒரே யோசனையா இருக்கு.
அப்பா.... இதுக்கு நீங்க ஏன் டென்ஷனா இருக்கீங்க... உங்களுக்கு சொன்னா நல்லதுன்னு தோணுச்சு ன்னா சொல்லுங்க... இல்லைன்னா விடுங்க.... அவன் பணக்கார திமிர் ல ஆடுவான்... அவன் பேச்சை நீங்க கேட்டு நடக்கனுமா? என்றான் ராகவ்.

அண்ணா.... நான் சொல்ல மறந்திட்டேன்... அன்னைக்கு நான் பஸ்ல போனேனே அன்னைக்கு ஒருத்தன் பிரெண்ட்ஸ் கிட்ட பெட்டு கட்டி வெளி பக்க ஜன்னல் கம்பியை பிடிச்சிக்கிட்டே பஸ் ஃபிரண்ட் டோர் வரைக்கும் போறதுக்கு டிரைவர் அப்புறம் கன்டெக்டருக்கு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டை கொடுத்தான்.... அப்புறம் பஸ்ஸில் இருந்த எல்லாருக்குமே இரண்டாயிரம் ருபாய் நோட்டு ஒன்றை கொடுத்தான். நீ பணக்கார பையன் ன்னு சொன்னதும் அவன் ஞாபகம் வந்துச்சு...
ஏய்... நீ ரூபாய் நோட்டை வாங்கினியா டீ? என்றார் அம்மா.
ஒருத்தன் என் கைல திணிச்சிட்டு போனான்....
அப்புறம்... என்று ஆர்வமாக கேட்டாள் கனகவள்ளி.
அந்த ஜன்னலை புடிச்சி கிட்டு அவன் வரும்போது ஸ்லிப் ஆயிட்டான்.... நல்லவேளை நான் அவன புடிச்சேன் இல்லன்னா... பஸ் வீல்ல மாட்டி செத்திருப்பான்...
அய்யோ... அப்புறம்... என்றாள் அம்மா.

பஸ் நின்றதும்... நான் கீழே இறங்கி அவனை நல்லா திட்டி தீர்த்து விட்டேன். உனக்கு அறிவில்லையா ன்னு?...அவன் கொடுத்த காசை அவன் கையிலே வச்சிட்டு வந்திட்டேன்...
ஏய், நீ ஏன் தேவையில்லாமல் முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட பேசின? என்றான் ராகவ்.
பேசினாளா? திட்டி இருக்கா.... அவன் வேற பணக்கார பையன் ன்னு சொல்றா... எனக்கு பயமா இருக்கு டா ராகவ்... இவள எதாவது பண்ணப் போறான் ன்னு...என்றாள் கனகவள்ளி.
அம்மா... சும்மா இருமா... அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ தேவையில்லாம பயந்து அவளையும் பயமுறுத்தாதே... என்றான் ராகவ்.
சரி சாப்பிட்டு விட்டு சீக்கிரம் போய் படு.... என்று சொல்லி ராகவ் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு எழுந்து சென்றான்.
ராஜசேகரும் சாப்பிட்டு விட்டு சென்றுவிட்டார்....
அம்மா சொன்ன பிறகு அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நான் ஓவரா தான் பேசிட்டேனோ.... ஏதாவது பிரச்சனை பண்ணுவானா? அவன் நல்லதுக்கு தானே நம்ம சொன்னோம்.... மருந்து எல்லாம் போட்டு விட்டோமே... என்று பலவாறு யோசித்துக் கொண்டு இருந்தவளை உளுக்கிய கனகவள்ளி...
என்னடி?...
ஒண்ணுமில்ல மா... அவன் என்னை எதாவது செஞ்சிடுவானா? என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.
ஏய்... இதெல்லாம் பேசறதுக்கு முன்னாடி யோசிக்கனும்....
அம்மா.... முடிஞ்சத பத்தி பேசாத....
சரி... போய் படு... இன்னும் ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு அண்ணனோட காலேஜூக்கு போ...பஸ்ல போகாத.... உன்னால எனக்கு தான் கஷ்டம்....
ஏம்மா...
நான் இப்போ பஸ்ல போகனுமே....
அம்மா... என்று அழுத்தி கூறினாள்.
கட்டிலில் படுத்த பிறகும் வெகு நேரம் தூக்கம் வரவில்லை ரேஷ்மிக்கு.
ஒரு பத்து நாள் அண்ணன் கூட போயிட்டு... அப்புறம் என் பிறந்தநாளுக்கு அப்பாவும் அண்ணாவும் வாங்கி தரும் பைக்கை எடுத்துக்கிட்டு போகனும்... அதுவும் பஸ் ரூட்ல போகக் கூடாது. ஒரு அஞ்சு இல்ல பத்து நிமிஷம் தான என்னை பார்த்தான்....ஒரு மாசத்துக்கு அப்புறம் நானே அவன் முன்னாடி போய் நின்னாலும் அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டாள்.
பாவம் அவளுக்கு தெரியவில்லை அவளின் முகம் அவன் கண்களில் அல்ல அவன் இதயத்தில் அச்சிடப் பட்டிருக்கிறதென்று.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்
சார்...சார்.... என்றான்.
என்னப்பா தெளிஞ்சிரிச்சா?....
ஸாரி சார்.... என்றான்.
அப்போ நீ என்ன பேசின ன்னு உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல?
ஆமாம் சார்... தெரியாம பேசிட்டேன்...
சரி உங்கப்பா நம்பர் கொடு அவர் கிட்ட பேசறேன்.
அய்யோ வேணாம் சார்...
அப்போ கேஸ் ஃபைல் பண்ணிடவா?
அய்யையோ... வேணாம் சார்...
தன் பாக்கெட்டில் கை விட்டு பார்த்தான் ரூபாய் நோட்டுகளை காணவில்லை. அனைத்தையும் செலவழித்து விட்டேனா? இல்ல கீழ் எங்கயாவது விழுந்திடிச்சா? இல்ல இந்த போலீஸ்காரங்க நான் மயக்கத்தில இருக்கும் போது எடுத்துக்கிட்டாங்களா? என்று யோசித்தான்.
என்ன தேடற தம்பி?
இந்த ஃபோனையா? என்று அவன் ஃபோனை எடுத்து கொடுத்தார்கள்.
ஃபிங்கர் பிரிண்ட் வச்சிருப்பன்னு நினைச்சு உன்னோட விரலெல்லாம் வச்சு பாத்தோம் எதுவும் வரல...
அடப்பாவிங்களா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே... ஃபோனை வாங்கி நம்பர் பாஸ்வேர்டு போட்டு ஓப்பன் செய்து... அவனின் கம்பனியில் வேலை செய்யும் ராஜசேகருக்கு கால் செய்தான்.
நான் விஷ்வா பேசறேன்...
சொல்லு தம்பி....
நான் பிராட்வே போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கேன். நீங்க கொஞ்சம் வரீங்களா?
அவனிடம் இருந்து ஃபோனை வாங்கிய கான்ஸ்டபிள்...
சார், நான் கேஸ் எதுவும் ஃபைல் பண்ணல.... நீங்க நேரா வந்து பேசிட்டு கூட்டிக்கிட்டு போங்க.... என்றார்.
சரி சார்... நான் வரேன். என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார்.
ராஜசேகர் தன் மகன் ராகவிடம்...
ராகவ், என் முதலாளி மகன் விஷ்வா போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கான். நான் போயிட்டு வரேன்...
அப்பா... இருங்க நான் கூட்டிகிட்டு போறேன்.
வேணாம் பா... நீ இப்போ தான வந்த...
நீங்க மட்டும்.... அதெல்லாம் ஒன்னும் இல்லை வாங்க அப்பா என்று கூறி அவனுடைய பைக்கில் கூட்டிச் சென்றான்.
போலீஸ் ஸ்டேஷனில்...
அப்பா... நான் வெளியே நிக்கறேன்.
நீங்க போய் பேசிட்டு வாங்க...
சரி என்று உள்ளே சென்றவர்.... பேசிவிட்டு (கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு)
சார் கூட்டிக்கிட்டு போலாமா?
பேரண்ட்ஸ் வந்தா தான் அனுப்புவோம். அவங்க வரமுடியல ன்னு நீங்க கேட்டுக்கிட்டதால.... இப்போ அனுப்புறோம்...
சார்...தேங்க் யூ.... என்றார் ராஜசேகர்.
விஷ்வா கான்ஸ்டபிளிடம்... ரியலி சாரி என்றான் இன்னொருமுறை...
மறுபடியும் இப்படி பண்ணாத ப்பா... என்றார் கான்ஸ்டபிள்.
விஷ்வாவை வெளியே கூட்டி வந்தார் ராஜசேகர்.
அங்கிள் தேங்க்ஸ்.... சாரி இந்த டைம் ல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு...
தம்பி... அப்பாவுக்கு தெரிஞ்சா....
அய்யோ வேணாம் அங்கிள் சொல்லிடாதீங்க... பிளீஸ்.... முக்கியமா அக்கா கிட்ட சொல்லாதீங்க....
தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி.... இதுவே ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்டா இருந்தா ஓகே....
கண்டிப்பா அங்கிள்... என்னை பத்தி தெரியாதா உங்களுக்கு?
வாங்க ஆட்டோல போய் பீச் பார்க்கிங் ல இருக்குற என்னோட காரை எடுத்துக்கிட்டு போலாம். நானே உங்கள வீட்ல டிராப் பண்ணிடறேன்.
இல்லப்பா... வேணாம் என் பையன் வெயிட் பண்றான்....
ஓ... அப்படியா... எங்க?
அதோ...
ஹாய்... என்று கையை ஆட்டினான் விஷ்வா.

பார்த்தும் பார்க்காதது போல ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான் ராகவ்.
சரி... அவர் ஃபோன்ல பிஸியா இருக்கார் போல... அவர் கிட்டயும் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க அங்கிள்.
சரிப்பா... நீ பாத்து பத்திரமா போ....
ஓகே அங்கிள்... பை....
ராமகிருஷ்ணன் சாருக்கு இப்படி ஒரு பையன்... என்று நினைத்து கொண்டார்.
ராகவ்... ஃபோன்ல யாரு?
நம்ம ரேஷ்மி தான் பா... எப்போ வருவீங்க? என்னாச்சு ன்னு கேட்டா....
ஓ... சரிப்பா வா போலாம்...
பைக்கில் செல்லும் போது...
இவன் எப்பவுமே இப்படித்தானா அப்பா....
யாரு விஷ்வா வா?
ஆமாம்...
இதுவரைக்கும் இல்ல... இப்போ தான் முதல் முறையா இப்படி நடந்துச்சு.... பணக்கார பையன் ல அதான்.... அவனோட ஒரே நல்ல குணம் என்னன்னா.... பெரியவங்க கிட்ட மரியாதையா பேசுவான். மத்தபடி எந்த ஒரு நல்ல விஷயமும் அவன் கிட்ட இருக்குற மாதிரி எனக்கு தெரியல .... என்றார் ராஜசேகர்.
பாவம் அவனை கட்டிக்க போற பொண்ணு... என்றான் ராகவ்.
(பாவம் அவனுக்கு தெரியாது அது அவன் தங்கை ரேஷ்மி தான் என்று)
அதற்கு மேல் எதுவும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தனர்.
ரேஷ்மி அப்பாவிற்காகவும் அண்ணனிற்காகவும் சாப்பிடாமல் வெயிட் பண்ணி கொண்டிருந்தாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்து மூவரும் சாப்பிட கனகவள்ளி பரிமாறிக் கொண்டிருந்தார்.
ஏம்மா... நீ சாப்பிடல என்றான் ராகவ்.

அதெல்லாம் மொதல்லையே ஆயிடுச்சு...என்றாள் ரேஷ்மி.
ஏய்... என்று அவளின் தோளில் லேசாக தட்டிவிட்டு... கண்ணா ஷுகர் மாத்திரை போட்டுகிட்டு சாப்பிட்டுட்டேன் பா....
ஓ... சரிம்மா...
ராஜசேகரிடம் கனகவள்ளி
ஏங்க... என்னாச்சு... ஏன் டல்லா இருக்கீங்க...

இல்ல ராமகிருஷ்ணன் சாரோட பையன குடிச்சிட்டு கலாட்டா பண்ணான் போலீஸ் ஸ்டேஷன் வச்சிருந்தாங்க... அவர் எவ்ளோ நல்லவர் தெரியுமா... அவருக்கு இப்படி ஒரு பையன்.... அதை அவர் கிட்ட சொல்ல வேண்டாம் ன்னு சொன்னான். ஆனா சொல்லாம இருக்க எனக்கு மனசு கேக்கல... அவர் கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிடுவேன்... அதான் ஒரே யோசனையா இருக்கு.
அப்பா.... இதுக்கு நீங்க ஏன் டென்ஷனா இருக்கீங்க... உங்களுக்கு சொன்னா நல்லதுன்னு தோணுச்சு ன்னா சொல்லுங்க... இல்லைன்னா விடுங்க.... அவன் பணக்கார திமிர் ல ஆடுவான்... அவன் பேச்சை நீங்க கேட்டு நடக்கனுமா? என்றான் ராகவ்.

அண்ணா.... நான் சொல்ல மறந்திட்டேன்... அன்னைக்கு நான் பஸ்ல போனேனே அன்னைக்கு ஒருத்தன் பிரெண்ட்ஸ் கிட்ட பெட்டு கட்டி வெளி பக்க ஜன்னல் கம்பியை பிடிச்சிக்கிட்டே பஸ் ஃபிரண்ட் டோர் வரைக்கும் போறதுக்கு டிரைவர் அப்புறம் கன்டெக்டருக்கு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டை கொடுத்தான்.... அப்புறம் பஸ்ஸில் இருந்த எல்லாருக்குமே இரண்டாயிரம் ருபாய் நோட்டு ஒன்றை கொடுத்தான். நீ பணக்கார பையன் ன்னு சொன்னதும் அவன் ஞாபகம் வந்துச்சு...
ஏய்... நீ ரூபாய் நோட்டை வாங்கினியா டீ? என்றார் அம்மா.
ஒருத்தன் என் கைல திணிச்சிட்டு போனான்....
அப்புறம்... என்று ஆர்வமாக கேட்டாள் கனகவள்ளி.
அந்த ஜன்னலை புடிச்சி கிட்டு அவன் வரும்போது ஸ்லிப் ஆயிட்டான்.... நல்லவேளை நான் அவன புடிச்சேன் இல்லன்னா... பஸ் வீல்ல மாட்டி செத்திருப்பான்...
அய்யோ... அப்புறம்... என்றாள் அம்மா.

பஸ் நின்றதும்... நான் கீழே இறங்கி அவனை நல்லா திட்டி தீர்த்து விட்டேன். உனக்கு அறிவில்லையா ன்னு?...அவன் கொடுத்த காசை அவன் கையிலே வச்சிட்டு வந்திட்டேன்...
ஏய், நீ ஏன் தேவையில்லாமல் முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட பேசின? என்றான் ராகவ்.
பேசினாளா? திட்டி இருக்கா.... அவன் வேற பணக்கார பையன் ன்னு சொல்றா... எனக்கு பயமா இருக்கு டா ராகவ்... இவள எதாவது பண்ணப் போறான் ன்னு...என்றாள் கனகவள்ளி.
அம்மா... சும்மா இருமா... அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ தேவையில்லாம பயந்து அவளையும் பயமுறுத்தாதே... என்றான் ராகவ்.
சரி சாப்பிட்டு விட்டு சீக்கிரம் போய் படு.... என்று சொல்லி ராகவ் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு எழுந்து சென்றான்.
ராஜசேகரும் சாப்பிட்டு விட்டு சென்றுவிட்டார்....
அம்மா சொன்ன பிறகு அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நான் ஓவரா தான் பேசிட்டேனோ.... ஏதாவது பிரச்சனை பண்ணுவானா? அவன் நல்லதுக்கு தானே நம்ம சொன்னோம்.... மருந்து எல்லாம் போட்டு விட்டோமே... என்று பலவாறு யோசித்துக் கொண்டு இருந்தவளை உளுக்கிய கனகவள்ளி...
என்னடி?...
ஒண்ணுமில்ல மா... அவன் என்னை எதாவது செஞ்சிடுவானா? என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.
ஏய்... இதெல்லாம் பேசறதுக்கு முன்னாடி யோசிக்கனும்....
அம்மா.... முடிஞ்சத பத்தி பேசாத....
சரி... போய் படு... இன்னும் ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு அண்ணனோட காலேஜூக்கு போ...பஸ்ல போகாத.... உன்னால எனக்கு தான் கஷ்டம்....
ஏம்மா...
நான் இப்போ பஸ்ல போகனுமே....
அம்மா... என்று அழுத்தி கூறினாள்.
கட்டிலில் படுத்த பிறகும் வெகு நேரம் தூக்கம் வரவில்லை ரேஷ்மிக்கு.
ஒரு பத்து நாள் அண்ணன் கூட போயிட்டு... அப்புறம் என் பிறந்தநாளுக்கு அப்பாவும் அண்ணாவும் வாங்கி தரும் பைக்கை எடுத்துக்கிட்டு போகனும்... அதுவும் பஸ் ரூட்ல போகக் கூடாது. ஒரு அஞ்சு இல்ல பத்து நிமிஷம் தான என்னை பார்த்தான்....ஒரு மாசத்துக்கு அப்புறம் நானே அவன் முன்னாடி போய் நின்னாலும் அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டாள்.
பாவம் அவளுக்கு தெரியவில்லை அவளின் முகம் அவன் கண்களில் அல்ல அவன் இதயத்தில் அச்சிடப் பட்டிருக்கிறதென்று.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்