20.நவிலனின் கோதையானவள்
என்னக்கா கிளம்பிட்ட…அவ்வா எப்படி டா பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டி விடுற…
அக்கா என்றான் நவிலன்..
அதான் உன் பொண்டாட்டி போனை போட்டு கூப்பிட்டா இல்ல எதுவும் தெரியாத மாதிரி தான்..
அம்மு போன் பண்ணாலா?
டேய் ரொம்ப ஓவரா போற வந்து பேசிக்கிறேன் என்றவள் எழுந்து சென்றுவிட ,என்ன அம்மு?, அக்காவுக்கு போன் பண்ண போல வீட்டுக்கு வந்துட்டீங்களா நீயும் அம்மாவும் என்றான் நவிலன் பனியிடம்..
நாங்க எப்பவோ வீட்டுக்கு வந்துட்டோம் அண்ணி இன்னைக்கு ஸ்கூல் பொறுப்பு எடுத்துக்கிட்டா நான் ஆபிஸ் வருவேன் இல்ல, அதான் அந்த வேலையை பார்க்கிறேன்.
அம்மு என்று அதிர்வாய் குரல் வர..
ஷாக் க குறைங்க நவிலன்..
என்னடி பண்ணலாம் ன்னு இருக்க எங்க அக்காவை…
நான் என்ன பண்ண போறேன் இந்தாங்க உங்க ஸ்கூல் ன்னு குடுத்துட்டு வரப் போறேன் அவ்வளவு தான்..
அடியேய் புரிஞ்சு தான் பேசுறியா இல்ல இதுக்கு பின்னாடி எதுவும் என்று நிறுத்த.
என்ன என்ன கேட்டீங்க?
ஒன்னு இல்லடி நீ பாரு என்று வைத்தவன் அடுத்த போனை தன் மாமனுக்கு போட..
சொல்லு மாப்ள..
மாமா அக்கா போன் பண்ணாலா?
பண்ணா பண்ணா நான் தான் எடுக்கல..
ப்ச் என்ன மாமா அவளை எதுவும் கேட்க மாட்டீங்களா..?
என்னத்த கேட்கனும் நவி அவதான் இருக்கிறவங்க உயிரை எல்லாம் எடுக்கலாம் ன்னு இருக்கா அப்புறம் என்னத்த பேச…
நவி, “அதுக்காக அப்படியே விட்டுடறதா?
டேய் எப்ப பாரு இந்த ஒரு டயலாக் தானா தயவு செஞ்சு என்னைய விடு நான் மஞ்சளுக்கு தேவையானதை பார்க்கனும் இல்லன்னா எல்லாரையும் அவகிட்ட கையேந்த விடுவா போல என்னால அவ வாழ்க்கை கேள்வி குறி ஆகிய கூடாது..
மாமா என்று விக்கித்து போனான் நவிலன் வசந்த் சாதாரணமாக தான் சொன்னது ஆனால் அதில் எவ்வளவு பெரிய உண்மையும் அடிமனதில் தாக்கமும் இருக்கும் என்பதை அறியாதவன் அல்லவே அவனும் மருத்துவன் தானே…
அவன் மாமா என்று அழைத்ததுமே என்ன நவிலா நான் மஞ்சுவை இன்னும் இரண்டு நாள்ல அனுப்ப போறேன் அவளை பெட்டில் பண்ணிட்டு அம்மாவையும் அவளோட அனுப்பிடலாம் ன்னு
ம்ம் என்று குரலே எழுப்பாமல்…
நவி…ப்ச் டேய் விடுடா நீ ஏன் வருத்தப்படுற நீ மட்டும் என்ன செய்ய முடியும் அவ குணம் தான் தெரியுமே
சாரி மாமா தப்பு எங்களது தான்…
அப்படி சொல்லாதே நவி தப்பே இருந்தாலும் இத்தனை வருஷம் அதை வளர விட்டது என்ன தப்பு நானாவது அவளை மாத்த முயற்சி பண்ணியிருக்கனும் அவளுக்கு ஏத்த மாதிரி நானும் தலையாட்டினது தப்பு தானே விடு பார்த்துக்கலாம். நான் முதல்ல மஞ்சுவை பேக் பண்ணிட்டு சில விஷயங்களை அவங்களுக்கு பண்ணி முடிச்சிடுறேன் அப்புறம் இவளை கவனிக்குறேன்.
மாமா..
சொல்லு நவி..
பனி அக்காவை ஸ்கூல் பார்த்துக்க வரச் சொல்லிட்டா இப்ப அக்கா அங்க தான் போய்ட்டு இருக்கா..
வாட்.. என்ன நவி பனி எதுக்கு இப்படி பண்ணுறா அவ எல்லாத்துலையும் தலையிட நீயில்லாம இப்ப இந்த பொண்ணும் என்று தடுமாற..
மாமா நான் அக்காவை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்கேன்..
என்ன சொல்லுற நவி..
மாமா உங்களுக்கு பனியை திமு திபி மட்டும் தானே தெரியும்..
என்னடா சொல்லுற புரியுற மாதிரி சொல்லு…
பனியை பத்தி தெரிஞ்சது அந்த விஷயத்துக்கு அப்புறம் அவள் மனநிலை மட்டும் தானே ஆனா அவளை காலேஜ் டேஸ் ல பார்த்தது இல்லையே…அவ அடாவடியான ஆள் பந்தாடிடுவா ஏதோ சூழ்நிலை தப்பி இப்படி ஆகிட்டு இப்ப என்ன பண்ண போறான்னு தெரியல அக்காவை அதான் என்று நிறுத்த சத்தமாக சிரித்து இருந்தான் வசந்த்..
மாமா என்ன என்னாச்சு?
இப்ப தான்டா சந்தோஷமா இருக்கு நான் கிளம்புறேன்
எங்க மாமா…
ஸ்கூலுக்கு தான் அந்த கண்கொள்ளா காட்சியை நான் பார்க்கனும்.
……
என்ன நவி சத்தமே இல்ல சரி நான் கிளம்புறேன் என்று வசந்த் போனை வைத்து விட ,நவிலன் தான் திரும்ப திரும்ப பூம்பனி க்கு அழைத்து கொண்டே இருந்தான். எடு அம்மு எடு… அச்சோ அடியேன் அக்கா ஏதோ அவ பாட்டுக்கு ஒன்னும் புரியாம பண்ணிட்டு இருக்கா இவளும் அவளோட சேர்ந்துட்டு எதையாவது பண்ண போறோளோ என்று புலம்பலுடன் நவிலனும் கிளம்பி இருந்தான்.
இங்கே பனி கவிதாவிற்காக காத்திருந்தவள் வாசலை பார்க்க,கார் உள்ளே நுழைந்து வர,மீனா க்கா வாங்க …
மீனா, “என்ன பனி ஆள் வந்தாச்சா…?
ஆமா ஆமா வாங்க என்றவள் வாசலுக்கு வர…காரிலிருந்து வெளியே வந்த கவிதா பள்ளியை பார்த்துவிட்டு ம்ஹூம் எவ்வளவு பெரிய ஸ்கூல் இதை யாருக்கும் தெரியாம எப்படி இவன் இப்படி பண்ணலாம் என்று பொறுமிக் கொண்டு உள்ளே வர..
வாங்க அண்ணி ..
ம்ம்ம
உள்ள போகலாம் அண்ணி என்றவள் கரஸ்பாண்டன்ட் அறைக்கு அழைத்து சென்றவள் அமர வைத்ததும் அந்த பள்ளியின் மற்றொரு உரிமையாளரும் அங்கே தான் இருந்தார்..
சார் இவங்க தான் இனி இங்க எல்லா பொறுப்பும் பார்க்க போறாங்க ..
ஓஓஓ அப்படியா ஏன் பனி நீங்க..
நான் ஆபிஸ் போகலாம் ன்னு இருக்கேன் சார் இவங்க எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் அந்த டிபார்ட்மெண்ட் இவங்க டேக் ஓவர் பண்ணிப்பாங்க..
வாட் அந்த டிபார்ட்மெண்ட் ஆ..
ஆமா சார்..
இது சரி வருமா பனி..
கண்டிப்பா சார்..
இல்ல இவங்க பீமெயிலா இருக்காங்க..
வாட் யூ மீன் சாரங்கன் என்று நேம் போர்டை பார்த்து கவிதா கேட்க..
திரும்பி கவிதாவை ஒரு பார்வை பார்த்த சாரங்கன் என்ன பனி இது என்று உறும..
சாரி சார் அவங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது நீங்க எதுவும் என்று முடிக்கும் முன்பே ஹலோ சாரங்கன் சார் என்று அறைக்குள் நுழைந்து இருந்தான் நவிலன்..
ஹே.. நவிலன் வா வா என்ன சொல்லாம கொள்ளாம வந்து இருக்க..
சும்மா தான் சார் என்றவன் பூம்பனியை முறைக்கு..
சாரங்கன், “உட்காரு நவிலன்
பரவாயில்ல சார் என்றவன் கவிதாவை பார்த்து நீ இங்க என்னக்கா பண்ணுற…
சாரங்கன், “உன்னோட சிஸ்டரா நவிலன்
ஆமாங்க சார்..
ஓஓஓ
உங்க மிஸஸ் இனி இவங்க தான் இங்க பொறுப்பை எடுத்துக்க போறாங்கன்னு சொல்லுறாங்க. எனக்கு எதுவும் ப்ராபரா இன்பார்ம் பண்ணவே இல்லையே ..
இல்ல சார் பனி தான் ஆபிஸ் பார்க்கலாம் ன்னு முடிவு பண்ணி இருந்தாங்க ஆனா இவ்வளவு சீக்கிரம் பண்ணுவாங்கன்னு நினைக்கல சாரி சார் உங்களுக்கு சிரமத்தை தந்துட்டோம் என்றதும்..,சார் நான் சில விஷயங்கள் பேசலாமா சார் என்றாள் பூம்பனி..
சொல்லுமா?
அண்ணி நல்லா பார்த்துப் பாங்க் அவங்க எகனாமிக்ஸ் ல கோல்ட் மெடலிஸ்ட் மாமாவோட கம்பெனி கூட அவங்க தான் ரன் பண்ணிட்டு இருந்தாங்க அவங்களால் இங்க இந்த டிபார்ட்மெண்ட் ஐ மேனேஜ் பண்ண முடியும் சில டாக்குமெண்ட் ரெடி பண்ணி இருக்கேன் சார் நீங்க பாருங்க உங்களுக்கு ஓகே னா இன்னைக்கு சைன் பண்ணி, அவங்க சார்ஜ் எடுத்துக்கட்டும் சார் நான் என்னோட டிபார்ட்மெண்ட் வேலை பார்க்கலாம் ன்னு இருக்கேன் என்றதும் …
சாரங்கன் யோசனையோடு அமர்ந்து இருந்தவர் சரி பனி நீ டாக்குமெண்ட் குடு நான் பார்க்கிறேன் ஆனா இன்னைக்கே சைன் பண்ண மாட்டேன் என்று முடிவாக சொல்ல ..
ஓகே சார் என்றாள் புன்னகையுடன்..
நவிலன் வாங்க நாம கொஞ்சம் பேசலாம் என்றவர் கவிதாவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கிளம்பிவிட..
நவிலன், “ அக்கா நீ அம்மு கூட கிளம்பு நாம வீட்டில் பார்க்கலாம் என்றவன் சென்றுவிட…
என்ன இது இங்க இவர் யார் இவ்வளவு கேள்வி கேட்க என்று சாரங்கனை பார்த்து கைநீட்டி கவிதா பனியிடம் கேட்க
அவங்க தான் இந்த ஸ்கூல் ரன் பண்ணுறாங்க அண்ணி
கவிதா, “அதுக்கு அந்த ஆள் என்ன இப்படி புடி குடுக்கலாம் பேசுறார்?
அண்ணி..
என்னவோ எனக்கு சரியா படல இந்த பார்ட்னர் சிப் எடுத்துட வேண்டியது தான் என்று குண்டை தூக்கி போட…
மீனா வாய் மூடி சிரித்தவள் பனியின் காதில் நீ ஒரு ப்ளான் பண்ணா இவங்க பயங்கரமான ஆமா இருப்பாங்க போல…
அமைதியாக மீனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிரித்தவள் அண்ணி அப்படி உடனே எதுவும் பண்ண முடியாது உங்க தம்பி இதை கை விட்டு போகாதே மாதிரி நிறைய விஷயங்களை பண்ணி வைத்து இருக்கார்.
அவன் வரட்டும் இன்னைக்கு என்னனு பேசிடுறேன் என்றவள் அமைதியாக அமர்ந்து விட..
அண்ணி..
என்ன…
கிளம்பலாம் அவர் பேசிட்டு வரட்டும் என்றதும் விறுவிறுவென வெளியே வர அங்கே கையை கட்டிகொண்டு வசந்த் நிற்க,இங்க என்ன பண்ணுறீங்க ?
கவி இங்க என்ன பண்ணுற?
நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க
நவி தான் வரச் சொன்னான்..
ஓஓஓ….இருக்கிற வேலையை விட்டுட்டு இங்க என்ன உங்களுக்கு கிளம்பி ஆபிஸ் போங்க சொன்னது எதாவது செஞ்சுங்கீளா இல்லையா?
எல்லாம் ரெடி பண்ண சொல்லி இருக்கேன் கவி.
சரி என்றவள் வாங்க போகலாம் என்றதும் நீ கிளம்புடா நான் நவி கூட வரேன்.
ஏன் என்ன விஷயம் என்றாள் கவிதா.. ஒன்னு இல்லம்மா அவனோட வந்தேன் அப்ப அவனோடவே வந்துடறேன் வெயிட் பண்ண சொன்னான் எதுவோ பேசனும் ன்னு..ஓஓ சரி நான் அம்மா வீட்டுக்கு தான் போறேன் அங்க வந்துடுங்க அப்புறம் இந்த வாரம் பையனுக்கு காலேஜ் பத்தி பேசனும் இல்ல.,பேசிடலாம் கவி நீ அங்க இரு நானும் நவியோட வந்துடறேன் சேர்த்தே பேசிடலாம் .
சரிங்க என்று கவிதா கிளம்பியதும்,என்ன பனிம்மா எதுவும் உன் வேலை சுலபமாச்சா…? என்று வசந்த் கேட்க… சீக்கிரம் நடக்கும் அண்ணா அதுக்கு அப்புறம் நீங்க நிம்மதியா இருக்கலாம்.
என்னடா சொல்லுற…
ஆமா அண்ணா பொறுத்து இருந்து பாருங்க என்றவள் நவிலனுக்காக காத்து இருக்க பள்ளி முடிந்து மீனாவும் சொல்லி கொண்டு கிளம்பிவிட நவின் வந்தவன் சாரங்கன் சொன்னதை கேட்டவுடன் பனி யோசனையில் இருந்தாள்.
என்ன அம்மு..
சார் சொல்லுறது சரி தான் ஆனா அண்ணிக்கு தெரிய வேண்டாம் அண்ணா உங்களுக்கு இதுல எதுவும் வருத்தம்..
அட நீ ஏன் மா அவ தான் தேவையில்லாத வேலை பண்ணுறா அதுக்கான பலனை அனுபவிக்கனும் இல்ல.
ஆனா அண்ணா…
விடு பனி இப்ப வீட்டில் என்னென்ன அவ ஆரம்பிக்க போறாளோ வாங்க போகலாம் என்று கிளம்பி இருந்தனர் மூவரும்.
தொடரும்