நீண்டு வளைந்த அந்த புகையிரத தண்டவாளத்தையே இமைக்காது பார்த்திருந்தவளுக்கு என்ன கோபமோ! முதுகிலிருந்த மூட்டையினை இறக்கி ஓரமாக வைத்து விட்டு, கையினை பரபரவென தேய்த்து தன் கோபத்தை தணிக்க எத்தணித்தாள் போல,
"இவயல் என்னை வீட்ட விட்டு போ எண்டு சொன்னா, எனக்கென்ன போக்கிடம் இல்லையாே.. இந்த ஊரை இல்லை... உலகத்தின்ர எல்லை வரைக்கும், தனியாவே போய் வாழுற தைரியம் எனக்கிருக்கு.." என்று முனுமுனுத்தவள் உண்மையில் ஊர் எல்லையினையே தாண்டியதில்லை.
ஆம் அவளை பொறுத்தவரை அவளது குடும்பம் தான் எல்லாமே! அவர்கள் நிழலில் வாழ்ந்தவளது உடமை நிறைந்த பையினை தூக்கி எறிந்து,
இப்பவே இந்த வீட்டை விட்டு வெளிக்கிடு! என்று இரக்கமே இல்லாது தந்தை கூறினால் பாவம் அவளும் என்ன செய்வாள்.
"அந்த முண்டை கண்ணனாவது நான் தான் எல்லாத்துக்கும் காரணம். அவள்ல பிழையில்ல எண்டு ஒரு வார்த்தை சொன்னானா? சுயநலம் புடிச்சவன், தான் தப்பினா காணும் எண்டு, முட்டை கண்ண உறுட்டிக் கொண்டு, ஓரமா ஒழிஞ்சி இருந்து வேடிக்கை மட்டும் பார்க்குறான்..
இப்ப என்ர அருமை ஆருக்கும் தெரியேல.. தெரியேக்க தேடி வாங்கோ... அப்ப வைக்கிறன் உங்கள் எல்லாருக்கும்" தனக்குள் சொல்லிக் காெண்டவள் மனதோ,
"அவயல் வாரது இருக்கட்டும்.. இப்ப நீ எங்க போக போற?" டைமிங்கில் அது பஞ் அடிக்க,
"ஓம்.. ஏதாே ஒரு வேகத்தில பையை தூக்கிக் கொண்டு வந்துட்டன்.. எங்க போவன்? திரும்பி போனாலும் ஆளாளுக்கு பக்கம் பக்கமா டயலாகா எடுத்து விடுவாங்கள். சரி அப்பிடி சாக்காட்டினாலும் பரவாயில்ல எண்டு போகலாம் தான்.. ஆனா பிச்சைக்காரனை துரத்துறா மாதிரி நாயை எல்லோ அவுத்து விடுங்கள்.. இப்ப என்ன செய்வன்" என அப்பாவியாய் நகம் கடித்தவள்,
"சரி துணிஞ்சு இறங்கியாச்சு.. நடக்கிறத கண்டு கொள்ளுவம்." என தன்னை திடப்படுத்திக் கொண்ட அதே நேரம், அவள் பையிலிருந்த செல்போனும் சிணுங்கியது.
"இந்த நேரத்தில ஆரு...? ஒரு வேளை வீட்டுக்காறர் மனசு மாறி, கூப்பிட காேல் பண்ணினமோ..!" எங்கோ ஓர் மூளையில் ஆசுவாசம் தோன்ற, அவசரமாய் பையை திறந்து செல்லினை எடுத்துப்பார்த்தவள் முகமானது சுருங்கிப் போனது.
ஆம் அவள் எதிர் பார்த்தது போல், அவளது வீட்டினர் இல்லை.
"இந்த நேரம் இவ ஏன் கூப்பிடுறா...?" என்றவாறு ஆன் செய்து காதில் பொருத்தியவள்,
"ஹலோ..." என்றாள் சோர்வாக.
"என்னடி போனுக்கு காய்ச்சலா..? ஏன் இவ்வளவு டல்லா குரல் கேட்குது." எதிர் திசையில் இருந்து வந்த கேலியினை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
"சொல்லுடி... என்ன?" என்றாள் மீண்டும் அதே தொணியில்.
"ஏன்டி உனக்கு என்னாச்சு.. காெமடி எண்டு சொன்னாலே, நாலு நாளைக்கு உக்காந்து விழுந்து விழுந்து சிரிப்பியே! இவ்ளே பெரிய காெமடி பண்ணியிருக்கிறன், இண்டைக்கே சாகப் போறவள் போல இழுக்கிற!"
"அது தான் அந்த காெமடி குழந்தை கழுத்தில மிதிச்சே சாக்காட்டிட்டனே! பேந்தும் ஏன் செத்த குழந்தையை, பார் எண்டு தூக்கி காட்டுற...?"
"ஓ... நீ தான் சாக்காட்டினியா...? அது தெரியாம என்ர பிள்ளைய பார் எண்டு முகத்துக்கு நேர ஏந்திக் கொண்டு நிண்டிருக்கிறன். நான் ஒரு லூசு. சரி விடு! இந்த குழந்தை என்னமோ உனக்கு பிடிக்கேல.. அடுத்த தடவை நல்ல குழந்தையோட வாரன். சரி இப்ப சொல்லு... ஏன் ஒரு மாதிரி இருக்கிற?"
"அத ஏன்டி கேக்கிற...?" என நடந்தவற்றை கூறியவள் பேச்சை கேட்டு அதிர்ந்தாள் எதிர் அழைப்பில் இருந்தவள்.
"ஆத்தாடி...! இப்ப எங்கடி போகப்போற..?"
"அதான் தெரியேலடி.. பேசாம உங்கட வீட்ட வரட்டாடி!" என்றாள் தக்க தருணத்தில் தெய்வமாக வந்து தோழியை நினைத்து சந்தோஷ பட்டவளாக.
"எங்கட வீட்டயா..? ஆனா உனக்குத்தான் எங்கட வீட்டு நிலமை தெரியுமே! அண்ணா குடிச்சிட்டு வந்து ஏதாவது சொல்லிடுவான். அது உனக்குத்தான் கஷ்டம். நீ வேணும் எண்ட ஒண்டு செய்யேன். நீ வெளிக்கிட்டு ஊருக்கு வா! நான் வேற எங்கயாவது தங்குறதுக்கு ஏற்பாடு செய்யிறன்." என்றாள் தோழியின் நிலமை உணர்ந்து.
"நம்பி வரலாமாடி! வந்தாப்பிறகு ஏமாத்த மாட்டியே!" என்றாள் முன் எச்சரிக்கையாக.
"ஏய் ச்சீ வா...! இவ பெரிய இவ... அந்த முட்டை கண்ணனிட்ட இந்த கேள்விய கேட்டிருந்தா, இப்ப இப்பிடி என்னட்ட கொஞ்சி இருப்பியா...? கேட்க வேண்டியவன விட்டுட்டு என்னைட்ட கேட்டுக் கொண்டு" என திட்டியவள், தன் ஊருக்கான ரயில் எதுவென கூறி, செல்போனினை வைக்க, அவளை நம்பி அவள் ஊருக்கான ரயிலில் ஏறிக் கொண்டாள் தாரா.
"இவயல் என்னை வீட்ட விட்டு போ எண்டு சொன்னா, எனக்கென்ன போக்கிடம் இல்லையாே.. இந்த ஊரை இல்லை... உலகத்தின்ர எல்லை வரைக்கும், தனியாவே போய் வாழுற தைரியம் எனக்கிருக்கு.." என்று முனுமுனுத்தவள் உண்மையில் ஊர் எல்லையினையே தாண்டியதில்லை.
ஆம் அவளை பொறுத்தவரை அவளது குடும்பம் தான் எல்லாமே! அவர்கள் நிழலில் வாழ்ந்தவளது உடமை நிறைந்த பையினை தூக்கி எறிந்து,
இப்பவே இந்த வீட்டை விட்டு வெளிக்கிடு! என்று இரக்கமே இல்லாது தந்தை கூறினால் பாவம் அவளும் என்ன செய்வாள்.
"அந்த முண்டை கண்ணனாவது நான் தான் எல்லாத்துக்கும் காரணம். அவள்ல பிழையில்ல எண்டு ஒரு வார்த்தை சொன்னானா? சுயநலம் புடிச்சவன், தான் தப்பினா காணும் எண்டு, முட்டை கண்ண உறுட்டிக் கொண்டு, ஓரமா ஒழிஞ்சி இருந்து வேடிக்கை மட்டும் பார்க்குறான்..
இப்ப என்ர அருமை ஆருக்கும் தெரியேல.. தெரியேக்க தேடி வாங்கோ... அப்ப வைக்கிறன் உங்கள் எல்லாருக்கும்" தனக்குள் சொல்லிக் காெண்டவள் மனதோ,
"அவயல் வாரது இருக்கட்டும்.. இப்ப நீ எங்க போக போற?" டைமிங்கில் அது பஞ் அடிக்க,
"ஓம்.. ஏதாே ஒரு வேகத்தில பையை தூக்கிக் கொண்டு வந்துட்டன்.. எங்க போவன்? திரும்பி போனாலும் ஆளாளுக்கு பக்கம் பக்கமா டயலாகா எடுத்து விடுவாங்கள். சரி அப்பிடி சாக்காட்டினாலும் பரவாயில்ல எண்டு போகலாம் தான்.. ஆனா பிச்சைக்காரனை துரத்துறா மாதிரி நாயை எல்லோ அவுத்து விடுங்கள்.. இப்ப என்ன செய்வன்" என அப்பாவியாய் நகம் கடித்தவள்,
"சரி துணிஞ்சு இறங்கியாச்சு.. நடக்கிறத கண்டு கொள்ளுவம்." என தன்னை திடப்படுத்திக் கொண்ட அதே நேரம், அவள் பையிலிருந்த செல்போனும் சிணுங்கியது.
"இந்த நேரத்தில ஆரு...? ஒரு வேளை வீட்டுக்காறர் மனசு மாறி, கூப்பிட காேல் பண்ணினமோ..!" எங்கோ ஓர் மூளையில் ஆசுவாசம் தோன்ற, அவசரமாய் பையை திறந்து செல்லினை எடுத்துப்பார்த்தவள் முகமானது சுருங்கிப் போனது.
ஆம் அவள் எதிர் பார்த்தது போல், அவளது வீட்டினர் இல்லை.
"இந்த நேரம் இவ ஏன் கூப்பிடுறா...?" என்றவாறு ஆன் செய்து காதில் பொருத்தியவள்,
"ஹலோ..." என்றாள் சோர்வாக.
"என்னடி போனுக்கு காய்ச்சலா..? ஏன் இவ்வளவு டல்லா குரல் கேட்குது." எதிர் திசையில் இருந்து வந்த கேலியினை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
"சொல்லுடி... என்ன?" என்றாள் மீண்டும் அதே தொணியில்.
"ஏன்டி உனக்கு என்னாச்சு.. காெமடி எண்டு சொன்னாலே, நாலு நாளைக்கு உக்காந்து விழுந்து விழுந்து சிரிப்பியே! இவ்ளே பெரிய காெமடி பண்ணியிருக்கிறன், இண்டைக்கே சாகப் போறவள் போல இழுக்கிற!"
"அது தான் அந்த காெமடி குழந்தை கழுத்தில மிதிச்சே சாக்காட்டிட்டனே! பேந்தும் ஏன் செத்த குழந்தையை, பார் எண்டு தூக்கி காட்டுற...?"
"ஓ... நீ தான் சாக்காட்டினியா...? அது தெரியாம என்ர பிள்ளைய பார் எண்டு முகத்துக்கு நேர ஏந்திக் கொண்டு நிண்டிருக்கிறன். நான் ஒரு லூசு. சரி விடு! இந்த குழந்தை என்னமோ உனக்கு பிடிக்கேல.. அடுத்த தடவை நல்ல குழந்தையோட வாரன். சரி இப்ப சொல்லு... ஏன் ஒரு மாதிரி இருக்கிற?"
"அத ஏன்டி கேக்கிற...?" என நடந்தவற்றை கூறியவள் பேச்சை கேட்டு அதிர்ந்தாள் எதிர் அழைப்பில் இருந்தவள்.
"ஆத்தாடி...! இப்ப எங்கடி போகப்போற..?"
"அதான் தெரியேலடி.. பேசாம உங்கட வீட்ட வரட்டாடி!" என்றாள் தக்க தருணத்தில் தெய்வமாக வந்து தோழியை நினைத்து சந்தோஷ பட்டவளாக.
"எங்கட வீட்டயா..? ஆனா உனக்குத்தான் எங்கட வீட்டு நிலமை தெரியுமே! அண்ணா குடிச்சிட்டு வந்து ஏதாவது சொல்லிடுவான். அது உனக்குத்தான் கஷ்டம். நீ வேணும் எண்ட ஒண்டு செய்யேன். நீ வெளிக்கிட்டு ஊருக்கு வா! நான் வேற எங்கயாவது தங்குறதுக்கு ஏற்பாடு செய்யிறன்." என்றாள் தோழியின் நிலமை உணர்ந்து.
"நம்பி வரலாமாடி! வந்தாப்பிறகு ஏமாத்த மாட்டியே!" என்றாள் முன் எச்சரிக்கையாக.
"ஏய் ச்சீ வா...! இவ பெரிய இவ... அந்த முட்டை கண்ணனிட்ட இந்த கேள்விய கேட்டிருந்தா, இப்ப இப்பிடி என்னட்ட கொஞ்சி இருப்பியா...? கேட்க வேண்டியவன விட்டுட்டு என்னைட்ட கேட்டுக் கொண்டு" என திட்டியவள், தன் ஊருக்கான ரயில் எதுவென கூறி, செல்போனினை வைக்க, அவளை நம்பி அவள் ஊருக்கான ரயிலில் ஏறிக் கொண்டாள் தாரா.