• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 20

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
தன் அலுவலகத்தில் வேலையாய் இருந்த தேவநந்தனின் சிந்தனை என்னவோ அவனவளை பற்றி மட்டுமே இருந்தது.

எப்படி அவள் என்னை விட்டு பிரியும் முடிவை எடுத்தாள்.. இல்லை என்னை விட்டு அவள் போக கூடாது.. அதற்கு நான் கொஞ்சமும் அனுமதிக்க மாட்டேன்.. அவளை பற்றிய நினைவிலே முழ்கியவனுக்கு அவளை காதலித்த காலங்கள் மனதில் வந்து போனது.

அந்த ஆசிரமத்தில் பார்த்த பிறகு அவளை தேடி நாடி வந்தான் தேவா. அவள் எங்கே சென்றாலும் அங்கே அவன் இருப்பான்.. ஆனால் அதில் சில நேரம் ஏதேர்ச்சியாய் நடந்ததாகவே இருக்கும்.. சில நேரங்களில் அவனே அவளை தேடி வருவான்.

முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கன்யாவும் அவன் தன்னை கண்கானிக்கிறான் என்ற நினைவில் கோபம் வர அதை நேரடியாக அவனிடம் ஒரு நாள் காட்டிவிட்டாள்.

"மிஸ்டர் நீங்க யாரு எதுக்காக என் பின்னாடி சுத்திட்டு இருக்கீங்க.. நான் எங்கே போனாலும் நீங்க வர்றீங்க.." என்றாள் கோபமாய்.

"சாரி மிஸ் என்னோட பேரு தேவநந்தன்.. நான் நந்தா குரூப்ஸ் ஓனர்.. எனக்கு சுத்தி வளைச்சி பேச தெரியாது.. ஆக்சுவலா நிறைய முறை உங்ககிட்ட நேர்ல பேசணும்னு வருவேன்.. ஆனா என்னால பேச முடியாத எதாவது இடைஞ்சல் வந்துட்டே இருக்கும்.. இப்போ நீயே வந்து பேசிட்ட.. இனிமே சொல்றதுக்கு என்ன.. ஐ லவ் யூ பேபி.." என்றான் புன்னகையுடன்.

ஏனோ ஒரு நிமிடம் அவனின் புன்னகையிலும் அவன் வார்த்தையிலும் தன்னை தொலைத்தவள் அவனையே சற்று நேரம் பார்த்திருந்தாள்.

தூய்மையான கருப்பும் இல்லை பளிங்கு போன்ற வென்மையும் இல்லைமால் திராவிட நிறத்தில் இருந்தவன் ஜீம் சென்று உடம்பை பிட்டாக வைத்திருப்பான் போல இளங்காளையாய் நின்றிருந்தான் ஆடவன்.

அவள் வாழ்வில் எத்தனையோ ஆண்களை அறிந்திருக்கிறாள்.. அப்பாவின் செல்ல மகள் அவள்.. ஆனால் ஏனோ இவன் புதிதாய் தெரிந்தான்.

எதையும் மறைக்காத அவனின் குணம் அவளுக்கு அவனை மிகவும் பிடித்தது.. ஆனால் அவன் காதல் சொன்ன உடனே அவன் பின்னே செல்ல வேண்டுமா என்ன..? என்ன தான் அவனை பிடித்திருந்தாலும் கூட அவன் சொல்வது முழுவதும் எப்படி உண்மையாக இருக்கும்.

அப்படியே உண்மையாக இருக்கும் பட்சத்தில் அத்தனை பெரிய கோடீஸ்வரன் ஏன் தன்னை காதலிக்க வேண்டும்.

இப்படிபட்ட கம்பீரமான ஆணமகனை வளைக்கவென்று நிறைய பணக்காரர்கள் இருக்கிறார்களே.. ஏன் அவர்களின் கருத்தில் இவன் பதியவில்லையோ என்ற பலவித எண்ணங்கள் அவளின் மனதில் வந்து போயின.

அவளின் முகபாவத்திலே அவளின் எண்ண ஓட்டங்களை தெரிந்து கொண்டவன்,

"எக்ஸ்க்யூஸ் மீ மேம்.. என்ன அப்படியே பீரிஸாயி நின்னுட்டீங்க.. ஏதோ கனவுலகத்துல இருக்கிறீங்க போல.." என்றான் சிரித்தபடி.

ஏனோ அவனின் புன்னகை பெண்ணவளின் மனதில் அனுமதி இல்லாமல் அடி ஆழத்தில் நுழைந்து விட்டான்.

ஆனால் அவனின் உயரம் கண்டு பயந்த பெண்மனம்,

"சாரி சார் எனக்கு காதல் மேல நம்பிக்கை இல்லை.. நீங்க தப்பான ஆளை சூஸ் பண்ணிருக்கீங்க.. உங்க தகுதிக்கு உயரமான இடத்துல பொண்ணு பாருங்க சார்.. மன்னிச்சிடுங்க தயவு செஞ்சு இனி என்னை தொடராதீங்க.." என்றவள் அவனை திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் முதலில் கோபப்பட்டவன் அடுத்த நொடியே அவளின் நிலை அவனுக்கு புரிந்தது.. ஆனாலும் அதை தாண்டியும் அவளின் மனதில் தான் இறங்கவிட்டோம் என்று அவன் நம்பினான்.. அவனை அப்படி நம்ப வைத்தது வஞ்சியவளின் வசிய கண்கள் தான்.

"சாரி பேபி உன்னை விட்டு போன ஐடியா எனக்கு இல்லை.. ஆனா கூடிய சீக்கிரமே நீயே என்னை தேடி வருவே பேபி.. வரவைப்பேன் உன்னை.." என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

அது போலே தான் தங்கியிருந்த அறையின் விடுதிக்கு வந்தவளின் மனமெங்கும் ஆடவனின் வாசனை தான்.

ஏனோ பார்த்த முதல் பார்வையிலே உயிர் வரை ஊடுருவினான் அவன்.


முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன்
உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்....

முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன்
உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்....

இமையே சுமையாகும் உனைப்பார்க்கும் நேரம்
இமையாய் இமை வேண்டும் எனக் கேட்கத் தோனும்...
மழையா..
வெயிலா.. மனதில் இப்போது...

அறை தோழியின் அலைபேசியில் ஒலித்த பாடல் பெண்ணவளுக்கு ஆடவனின் நினைவை தான் கொண்டு வந்தது.

' ச்சீய் என்ன இது ஏன் இப்படி அவரோட நினைப்பாவே இருக்கு.. இல்லை உனக்கு அவரு வேணாம் கன்யா.. அவங்க பணக்காரங்க அவங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு.. அப்புறம் நீதான் கடைசி வரைக்கும் தனியா கிடந்து அழனும்.. உனக்கு யாரும் வேணாம்.. இந்த காதல் முதல்ல இதை நம்பாத.. இவங்களை பொறுத்தவரைக்கும் காதல் எல்லாம் ஒரு முறை கட்டில் வரைக்கும் மட்டும் தான் தொடரும்.. அப்புறம் அது காதலா இருக்காது..

எத்தனை பெரிய பணக்காரங்களை பாத்துருக்க வேணாம் விட்டுடு கன்யா அவனை நினைக்காத..' என்று நினைத்தவள் அவனின் நினைவை வலுக்கட்டாயமாய் ஒதுக்கி வைத்தாள்.

அதே நேரம் அவளை பற்றிய நினைவில் இருந்தவனுக்கு மெல்ல புன்னகை வந்தது.

' கனி மா ஏன்டி என்னை இப்படி சித்ரவதை பன்ற.. உன்னை மறந்து இருக்கவே முடியலை டி.. எப்படி இருந்தவன் டி நான்.. ஆனா இப்போ உன்னோட நினைவு தவிர வேற எதுவும் என் மனசுல இல்லை.. என் வாழ்க்கையில நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு நீ என்னோட வாழ்ப்போற வாழ்க்கையில தெரிஞ்சிக்கோ டி.. நீ இழந்த உன்னோட எல்லா உறவாகவும் நான் இருப்பேன் டி..' கனவில் அவளோடு கோட்டை கட்டியவன் நிஜத்தில் பொறுமையிழந்த செய்த தவறு இன்று அவளை அவனே வதைக்கும் படி செய்தாகிவிட்டது.

தன்னவள் நினைவில் இருந்து வெளியே வந்தவன்,

"என்னை மன்னிச்சிடு டி.. என்னோட முன் கோபம் நம்மோட சந்தோஷமான வாழ்க்கையை கெடுத்துடுச்சி.. எனக்கு புரியுது ஆனா எப்படி மீட்டு கொண்டு வரதுன்னு எனக்கு தெரியலை.. ஆனா நீ செஞ்ச விஷயம் உன் மேல ஆத்திரத்தை தான் கொடுக்குது.. ஆனாலும் உன்னை முழுசா கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்ட முடியாம உன்னை காதலிச்ச மனசு முட்டு கட்டை போடுது.. நான் என்ன பன்றதுன்னு எனக்கு சுத்தமா தெரியலையே டி.." என்று சுயபச்சாதாபத்தில் தவித்தான்.

கன்யாவும் மிருதுவை தூங்க வைத்து விட்டு பால்கனி பக்கம் செல்ல அங்கே தோட்டத்ததில் வேலை செய்து கொண்டிருந்த மாணிக்கமும் அவன் மனைவியும் புன்னகையுடன் பேசி கொண்டிருந்தார்கள்.

அவர்களின் மனம் நிறைந்த புன்னகையும் அந்நியோன்யமும் அவர்களின் காதலை எடுத்துரைத்தது. அவளின் கணவன் ஏதோ சொல்ல அதற்கு வெட்கப்பட்டு சிரித்தாள் ராசம்மா.

ஏழை தினமும் உழைத்தால் தான் மூனு வேலையும் உணவு உண்ண முடியும்.. இந்த ஏழ்மை நிலையிலும் கூட இருவரின் காதலும் சற்றும் குறைவில்லாமல் இருந்ததை கண்ட பெண் மனம் ஏக்கம் கொண்டது.

அவளின் கணவனும் அவளை காதலித்தான் ஒரு காலத்தில்.. அவள் வேண்டாமென்று சொன்ன பின்பும் அவளை தொடர்ந்து வந்து காதல் செய்தான். அவளுக்கு அவன் காதலை நிருபித்தான்.. ஆனால் ஏன் அந்த காதல் நிலைக்காமல் போனது தன் வாழ்க்கையில் என உள்ளம் நொந்து போனாள் பெண்ணவள்.

என்னையும் என் காதலையும் அவன் கொஞ்சமும் நம்பவில்லை.. ஏன் அப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லி என்னை உயிரோடு கொன்றான் என தினமும் தவித்தது பெண்மனம்.

அவள் பார்த்த அதே காட்சியை மற்ற இருவிழகளும் பார்த்தது.

ஆம் அந்த விழகளுக்கு சொந்தக்காரி விசாலி தான்.. அவளும் தன் பால்கனியில் நின்று இந்த காட்சியை கண்டவளுக்கு ரிஷியை பத்தின நினைவுகள் வந்து மனதை கொன்றது.

அவளுக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டதே ஒழிய இடைப்பட்ட காலத்தில் இருந்த நினைவுகள் மறக்கவில்லை.. அது தான் அவளை ஒவ்வொரு நிமிடமும் அணு அணுவாய் கொன்று வதைக்கிறது.

எப்படி எல்லாம் தாங்கினான்.. நான் கொஞ்சம் மனம் வாடி துடித்தாலும் கூட அவனால் தாங்க முடியாது.. அப்படி அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கியவனின் காதலை தான் உதறிவிட்டு வந்திருக்கிறாள்.

அவன் முன்பு செய்த வைத்த காரியம் அவ்வளவு சுலபமானது இல்லையே மறக்க.

எத்தனை நாள் உயிருடன் வதைத்த நொடிகள் அவை.. மீண்டும் அவனுடன் சென்று வாழ்ந்தாள் பழைய நினைவு தானே உயிருடன் வதைக்கும்..


கல்யாணத்தை பற்றிய எத்தனை கனவுகள் அனைத்தையும் இவனின் ஒரு செயலால் கானல் நீராய் போனதே.. கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே கிடந்து அல்லாடி கொண்டிருக்கிறது மங்கை மனம்.

இனி வரும் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயமே மனதிற்குள் ஊடுருவி தவிக்க வைத்தது.

சுவரில் இருந்த சித்திரத்தை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் ஆடவன்.
அந்த சித்திரத்தில் பெரிதாய் எதுவுமில்லை தான்.. ஆனால் அது சாதரணமாய் பார்ப்பவர்களுக்கு அது பெரிது இல்லை தான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாய் வரைந்தவனுக்கு தெரியுமே அதில் உள்ள சிறப்பு என்ன என்று.

ஆம் அது அவனின் மனதில் பதிந்து போன தன்னவளை தன் கைகள் கொண்டே வரைந்திருந்தான்.

அவனின் தோளில் அவள் சாய்ந்து கண்களை மூடியபடி இருந்த ஏகாந்தத்தை வரைந்திருந்தான்.

"கண்ணம்மா என்னை நினைக்கவே மாட்டியா டி.. நான் பன்றது தப்பு தான்.. ஆனா உன்னை பிரிஞ்சி இருக்கறது கொடுமையா இருக்குடி.. இப்படிலாம் ஒருத்தியை மட்டுமே நேசிச்சி சுவாசிப்பேன்னு முன்னே யாராவது சொல்லியிருந்தா நான் அவனை பைத்தியம்னு சொல்லியிருப்பேன்.. ஆனா இப்போ நான் அந்த பைத்தியக்காரத்தனத்தை தான் பன்னிட்டு இருக்கேன் டி.." என்றவன் அவளின் புடவையை எடுத்து தன்னை சுற்றி கொண்டான்.

அதில் அவளின் வாசத்தை உணர்ந்த ஆணின் கண்களில் கண்ணீர் கரை உடைந்து வந்தது.


கண்ணொடும்.. நெஞ்சோடும்..

உயிரால் உன்னை மூடி கொண்டேனே..
கனவோடும்.. நினைவோடும்..

நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே..

மதி பதிக்கும் மதி முகமே

உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்

எங்கோ நீ சென்றாலும்
அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீதான் நீதானே.. ஒ

ஆம் அவள் அவனருகில் இல்லை தான்.. ஆனால் அவளோடு கனவோடும் நினைவோடும் அவன் அவளுடன் வாழ்ந்து தான் கொண்டிருக்கிறான்.. இந்த காதல் படுத்தும் பாடு இருக்கே.. என்னவென்று சொல்வது காதலின் விந்தையை.

தான் தோன்றி தனமாய் இருந்த ஒருவனை இன்று ஒருத்தியை மட்டுமே நினைக்க வைத்திருக்கிறது காதல்.. அது போல உள்ளத்தில் ஏற்றி வைத்த ஒருத்தியின் செயலோ ஆடவனுக்கு கோபத்தை பரிசளித்திருக்கிறது.

நால்வரின் மனநிலையும் அவரவரின் இணையை நினைத்து கொண்டிருக்க எப்படி இணைவார்கள் என பொறுத்திருந்து தான் பார்ப்போமே அடுத்தடுத்த பாகத்தில்.


இதயம் நுழையும்..
✍️
 
  • Love
Reactions: Joss uby

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
அடுத்த எபி எப்போ வரும் சிஸ்