ராகவ் தன் அம்மாவை ஆஸ்பிட்டலில் விட்டு விட்டு தன் ஆஃபீஸுக்கு சென்றான்.
ஏதோ ஒரு நம்பரிலிருந்து கால் வந்தது.
ஹலோ, ஐ ஆம் வைஷாலி. ஐ ஆம் எ அட்வகேட். ஆம் ஐ ஸ்பீகிங் டூ மிஸ்டர் ராகவ் ராஜசேகர்?(Hello, i am Vaishali. I am a advocate. Am I speaking to Mr. Raghav Rajasekar?)
எஸ் யூ ஆர்...( Yes, you are ..)
திஸ் கால் இஸ் ரிகார்டிங் தி நோட்டீஸ் ஸென்ட் டூ யூ ஆன் பிஹாஃப் ஆஃப் கோபாலகிருஷ்ணன்.... எ சீனியர் எம்ப்லாயி இன் யூவர் கம்பெனி.( This call is regarding the notice sent to you on behalf of Gopalakrishnan... A senior employee in your company)
எக்ஸ்குயூஸ் மி மேம்... ஹீ வாஸ் தி சீனியர் எம்ப்லாயி....ஐ மீன் எக்ஸ் எம்ப்லாயி....( Excuse me Mam, he was the senior employee.... I mean ex-employee)
எஸ் சார், யூ ஆர் ரைட்....( Yes sir, you are right) உங்க நம்பர் தான் கொடுத்தாங்க.... உங்க கிட்ட பேசலாமா? இல்ல வேற யாராவது ஹைய்யர் ஆஃபீஷியல்ஸ்(higher officials) கிட்ட பேசணுமா?
என் கிட்டயே சொல்லுங்க மேடம். பட் பிஃபோர் தட்...( But before that) எங்க ஸைடு இருக்கிறத சொல்லிடவா?
இல்ல சார்... அவர் உங்க கம்பனி மேல் போட்ட சார்ஜஸ் பத்தி சொல்ல தான் கால் பண்ணேன்.
Indian industrial act of 1947 யின் படி ஒரு employee க்கு நோட்டீஸ் பீரியட் இருக்கு... தகுந்த காரணம் இல்லாமல நீங்க அவர வேலையில் இருந்து அனுப்ப இயலாது.
ஓகே.... நாங்க லீகலா(legally) இந்த இஷ்யூ வ ஃபேஸ்(face issues) பண்ணிக்கிறோம்.
ஓகே மிஸ்டர் ராகவ். தேங்க்யூ ஃபார் ஸ்பீக்கிங்... ஹேவ் எ நைஸ் டே... பை...(okay Mr.Raghav, thank you for speaking... Have a nice day... Bye..) என்றாள் வைஷாலி.
யா... யூ டூ... பை(yeah, you too...bye..) என்று கூறி ஃபோனை வைத்தான் ராகவ்.
கோபாலகிருஷ்ணன்.... வயது 48.
சீனியர் எம்ப்லாயி. அவனை வேலையை விட்டு நீக்கி விட்டார் எம்.டி. அதுவும் ராகவ் கூறியதால் மட்டுமே அது நடந்தது. கோபாலகிருஷ்ணன் போல ஒரு எக்ஸ்பீரியன்ஸூடு ஆள் கிடைப்பது கஷ்டம். வேலையில் திறமையானவன் கோபாலகிருஷ்ணன். ஆனால் பெண்கள் விஷயத்தில் மோசமானவன். அங்கே வேலை செய்யும் ஆஃபீஸ் லேடியிடம் தவறாக நடக்க முயன்றதால் இருமுறை வார்னிங் செய்யப்பட்ட பிறகும் அவன் தொடர்ந்து அவ்வாறு நடந்து கொண்டதால் அவனை வேலையிலிருந்து அகற்ற உண்மையை எம்.டியிடம் மட்டும் கூறி இரண்டு மாத சம்பளம் கொடுத்து வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத கோபாலகிருஷ்ணன் கேஸ் ஃபைல் செய்தான். அவனுக்கு நன்றாகவே தெரியும் அந்த ஆஃபீஸ் லேடி அவனுக்கு எதிராக பேச மாட்டாள் என்று.
எம். டி யிடம் பேசினான் ராகவ்.
அவர் ராகவிடம்...
இதோ பாருங்க ராகவ்... நீங்க தான் இதற்கு பொறுப்பு. கம்பனிக்கு இதனால பிரச்சனை வரக்கூடாது. நீங்க அந்தம்மா கிட்ட பேசி சாட்சி சொல்ல சொல்லுங்க...
இல்ல சார்... அவங்க ரொம்ப பயப்படறாங்க... அதற்கு பிறகு அவங்க ஹஸ்பண்டு அவங்கள வேலைக்கு அனுப்பமாட்டார் ன்னு அழறாங்க...
சாரி டூ ஸே திஸ் ராகவ்... யூ ஹேவ் டு ஹேண்டில் திஸ் ஸிச்சுவேஷன்...ஐ ஹேவ் சம் இம்பார்டண்ட் ஒர்க்.... பை... என்றார் எம்.டி.( sorry to say this Raghav. You have to handle this situation... I have some important work... Bye..)
ஒன்றும் புரியவில்லை ராகவிற்கு.
ஃபோனை எடுத்து வைஷாலிற்கு கால் செய்தான்.
ஹலோ மேடம்... நான் ராகவ். பிளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க... உங்க கிட்ட பேசணும்.... இந்த கேஸை பத்தி.
ஸாரி சார்... இது தப்பு... என்னோட கட்சிக்காரருக்கு எதிராக இருக்குற உங்க கிட்ட நான் தனியா பேசறது.
உங்க கட்சி காரர் நல்லவன் இல்லைன்னா கூடவா....
எல்லாருமே அவங்க கிட்ட இருக்குற தப்பை மறைக்க அடுத்தவங்க மேல் தான் குற்றத்தை சுமத்துவாங்க...
மேடம்... உண்மை தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டீங்க...
சார்.... எனக்கு நிறைய வேலை இருக்கு.... ஃபோனை வைக்கிறேன்...
ஹலோ மேடம்..... ஒரு பெண்ணின் குரல் கேட்க... ஃபோனை வைக்க வந்த வைஷாலி மறுபடியும் காதில் வைத்து ஹலோ... என்றாள்.
மேடம்... என் பெயர் வைதேகி.... ராகவ் சாரோட ஆஃபீஸ் ல தான் ஆஃபீஸ் லேடியா வேலை பாக்கறேன்... நானும் வரேன்... உங்க கிட்ட நேராக பேசலாமா? பிளீஸ் மேடம்....
ஏனோ அதற்கு மேல் அவளால் ஒண்ணும் சொல்ல முடியவில்லை.
சரி ஆறு மணிக்கு போரூர்ல இருக்குற A2B க்கு வந்திடுங்க...
மாலை ஆறு மணிக்கு ராகவ் மற்றும் வைதேகி அங்கே சென்றுவிட்டார்கள்.
6.10 உள்ளே வந்தாள் வைஷாலி.அந்த ஒயிட் நிற குர்த்தி மற்றும் டார்க் புளூ ஜீன்ஸில் அழகு தேவதை போல் இருந்தாள்.
நம்ம ஹீரோவ பத்தி சொல்லனுமா என்ன? அவருடைய புன்னகைக்கே பல பெண்கள் விழுந்து விடுவார்கள்.
ஹாய்... ஐ ஆம் ராகவ் என்றான்.
வணக்கம் என்று கைகளை கூப்பி சொல்லி எதிரே அமர்ந்தாள் வைஷாலி.
வைதேகி பார்த்து... சொல்லுங்க... என்ன பிரச்சனை?
எக்ஸ்குயூஸ் மீ என்று சொல்லி ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே போனான் ராகவ்.
வைதேகி கண் கலங்கியவாறே மேடம் அவன் சரியான அயோக்கியன்....
யாரு கோபாலகிருஷ்ணனா?
ஆமாம் மேடம். இரண்டு மாசமா என்னை டார்ச்சர் பண்றான். எல்லாரும் வேலையை முடிச்சிட்டு போன பிறகு நான் ஆஃபீஸ் பூட்டி செக்யூரிட்டி கிட்ட சாவி கொடுத்துட்டு போவேன்.
எல்லாரும் போற வரைக்கும் வெயிட் பண்ணி... பின் நான் இருக்கும் அந்த சின்ன ரூமுக்கு வருவான்.
என்னோட டிபன் பாக்ஸ் கழுவி வச்சிட்டியா? என்றான்.
கழுவி வச்சிட்டேன் சார் என்று எடுத்துக் கொடுத்தேன். என் கையை பிடித்து அவனருகில் இழுத்து என்னை முகர்ந்தான். நான் அவனை தள்ளி விட்டு விட்டு... சார் இதெல்லாம் நல்லா இல்லை தயவு செஞ்சு போங்க என்றேன்.
பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் ஒரு நாள் என் பின்பக்கமாக வந்து என்னை கட்டி பிடித்தான். நான் அலறி கத்திட்டேன். ஆனால் ஆஃபீஸில் யாருமில்லை.
ஏய் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். ஆனா என் ஆசைக்கு எவ்ளோ சீக்கிரம் நீ ஒத்துக்கிறியோ அவ்வளவும் உனக்கு நல்லது என்றான்.
ஒரு நாள் ராகவ் சார் நான் அழறத பாத்துட்டு கேட்டார். முதலில் எனக்கு சொல்ல தயக்கமா இருந்துச்சு... அப்புறமா சொன்னேன்.
எம். டி கிட்ட சொல்லி அவனை கண்டிச்சு விட்டதா ராகவ் சார் சொன்னார்.
ஒரு வாரம் அவன் கிளம்பி போற வரைக்கும் ராகவ் சார் வெயிட் பண்ணி அப்புறமா போவார்.
ஒருநாள் அவர் ஆஃபீஸுக்கு வரலை... இதை எதிர்பார்த்து கிட்ட இருந்த அவன் அன்னைக்கு என் கிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டான்...என் மார்பை பிடித்திட்டான்... என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் வைதேகி.
வைஷாலிக்கு கண் கலங்கியது. வைதேகியை தேற்றி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.
ஓகே... நீங்க பயப்படாதீங்க வைதேகி. நீங்க நடந்த உண்மையை கோர்ட்டில சொல்லுங்க.... நான் பாத்துக்கிறேன்.
அய்யோ மேடம்.... சத்தியமா நான் வரமாட்டேன். என் புருஷன் ஒரு குடிகாரன் மட்டுமில்ல சரியான சந்தேக பேர்வழி.... என்னை இந்த வேலைக்கு அனுப்பறதே பெரிய விஷயம்.... எனக்கு இரண்டு பொண்ணுங்க இருக்காங்க... அவங்களுக்காக தான் இந்த ஆஃபீஸ்ல வேலைக்கு சேர்ந்தேன். இது இல்லாம ரெண்டு வீட்ல வேலை செய்யறேன்....என் பசங்கள படிக்க வச்சு பெரிய ஆளாக்கனும்... என்ன மாதிரி படிக்காம கஷ்ட பட விடமாட்டேன்.
இப்போ என்னை என்ன பண்ண சொல்ற வைதேகி. ஒரு ஆளை வேலையை விட்டு தூக்கினா அதுக்கு தகுந்த காரணமோ இல்ல முன்கூட்டியே சொல்லனும். இது பண்ணலனா கோபாலகிருஷ்ணனுக்கு கேஸ் போட உரிமை இருக்கு.
எனக்கு உதவி பண்ணினதுக்கு பாவம் ராகவ் சார் தான் கஷ்டபடறாரு. கம்பெனில அவரோட பொறுப்பு ன்னு சொல்லிட்டாங்க... அதான் எதாவது பண்ணுங்க மேடம்.
உள்ளே வந்தான் ராகவ். அவர்கள் பேசுவதற்காக தான் அவன் வெளியே சென்றான் என்பதை தெரிந்து கொண்டாள் வைஷாலி.
காஃபி வந்தது. மூவரும் குடித்தனர்.
ராகவ், எனக்கு இரண்டு ஆப்ஷன்ஸ் இருக்கு. ஒண்ணு இந்த கேஸ்ல இருந்து விலகுவது. அப்படி நான் செய்தால் அவன் வேறு ஒரு வக்கீலிடம் செல்வான். நீங்க ரெண்டு பேரும் ஒவ்வொருத்தர் கிட்ட போய் விளக்கம் சொல்லுவீங்களா? அப்படி சொன்னாலும் எத்தனை பேர் நீங்க சொல்றது கேட்டு கேஸை எடுத்துக்காம இருப்பாங்க. இன்னொரு ஆப்ஷன்... நான் இந்த கேஸை விட்டு விலகி உங்களுக்கு ஆதரவா ஆஜர் ஆகனும். உங்க யாருக்கும் பிரச்சனை வரமா இருக்கனும்... அதே நேரத்தில் கம்பெனிக்கும் பிரச்சனை வராம இருக்கனும் ன்னா... என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று வைஷாலி சொல்ல சொல்ல இருவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
சும்மாவா சொன்னாங்க கிரிமினல் வக்கில் ன்னு எப்படி திங்க் பண்றா என்று யோசித்தான் ராகவ்.
சொல்லி முடித்த வைஷாலி ஓகே வா என்று இருவரையும் பார்த்து கேட்டாள். சிரித்து கொண்டே இருவரும் ஓகே என்றனர்.
ஆர்வத்தில் ராகவ் வைஷாலி யின் கையை பிடித்து குளுக்கி வெரி நைஸ் ஐடியா... தேங்க் யூ சோ மச்... என்றான்.
ஸ்மைல் செய்து கொண்டே... ஓகே பை என்று சொல்லி கையை விடுவித்து கொண்டு வெளியே வந்தாள் வைஷாலி.
காரில் ஏறிய வைஷாலி மிடில் மிரரில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
ராகவிடம் கை கொடுத்தது அவளுக்கு பிடித்து இருந்தது. வாழ்நாள் முழுவதும் அவன் கையை பற்றி கொள்ளலாமா என்று தோன்றியது. அவனை பற்றி ஒன்றும் தெரியாது.... ஏன் இவ்வாறு அவள் மனம் நினைக்கிறது என்று யோசித்தாள்.
வைதேகி அவனைப் பற்றி சொல்லும் போதே அவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றிவிட்டது. வைதேகியடம்
பேசும் போது வைஷாலி யின் கண்கள் இருமுறை ராகவ்வை பார்த்துவிட்டு வந்தது.
அதையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ராகவ்.
ராகவிற்கும் வைஷாலியை பார்த்தவுடனே பிடித்திருந்தது. அதான் சான்ஸ் கிடைத்தவுடன் அவளின் கையை பற்றி கொண்டு நன்றி சொன்னான். அவளுக்கும் விருப்பம் இருப்பதை தெரிந்து கொண்டே அவ்வாறு செய்தான்.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.